புதிய பதிவுகள்
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by ayyasamy ram Today at 3:34 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by ayyasamy ram Today at 3:33 pm

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:59 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm

» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm

» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm

» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm

» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm

» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm

» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பொன் விழா காணும் உலக நாயகன் Poll_c10பொன் விழா காணும் உலக நாயகன் Poll_m10பொன் விழா காணும் உலக நாயகன் Poll_c10 
47 Posts - 66%
ayyasamy ram
பொன் விழா காணும் உலக நாயகன் Poll_c10பொன் விழா காணும் உலக நாயகன் Poll_m10பொன் விழா காணும் உலக நாயகன் Poll_c10 
8 Posts - 11%
Dr.S.Soundarapandian
பொன் விழா காணும் உலக நாயகன் Poll_c10பொன் விழா காணும் உலக நாயகன் Poll_m10பொன் விழா காணும் உலக நாயகன் Poll_c10 
5 Posts - 7%
mohamed nizamudeen
பொன் விழா காணும் உலக நாயகன் Poll_c10பொன் விழா காணும் உலக நாயகன் Poll_m10பொன் விழா காணும் உலக நாயகன் Poll_c10 
3 Posts - 4%
Abiraj_26
பொன் விழா காணும் உலக நாயகன் Poll_c10பொன் விழா காணும் உலக நாயகன் Poll_m10பொன் விழா காணும் உலக நாயகன் Poll_c10 
2 Posts - 3%
prajai
பொன் விழா காணும் உலக நாயகன் Poll_c10பொன் விழா காணும் உலக நாயகன் Poll_m10பொன் விழா காணும் உலக நாயகன் Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
பொன் விழா காணும் உலக நாயகன் Poll_c10பொன் விழா காணும் உலக நாயகன் Poll_m10பொன் விழா காணும் உலக நாயகன் Poll_c10 
1 Post - 1%
Rutu
பொன் விழா காணும் உலக நாயகன் Poll_c10பொன் விழா காணும் உலக நாயகன் Poll_m10பொன் விழா காணும் உலக நாயகன் Poll_c10 
1 Post - 1%
Pradepa
பொன் விழா காணும் உலக நாயகன் Poll_c10பொன் விழா காணும் உலக நாயகன் Poll_m10பொன் விழா காணும் உலக நாயகன் Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
பொன் விழா காணும் உலக நாயகன் Poll_c10பொன் விழா காணும் உலக நாயகன் Poll_m10பொன் விழா காணும் உலக நாயகன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பொன் விழா காணும் உலக நாயகன் Poll_c10பொன் விழா காணும் உலக நாயகன் Poll_m10பொன் விழா காணும் உலக நாயகன் Poll_c10 
404 Posts - 39%
ayyasamy ram
பொன் விழா காணும் உலக நாயகன் Poll_c10பொன் விழா காணும் உலக நாயகன் Poll_m10பொன் விழா காணும் உலக நாயகன் Poll_c10 
301 Posts - 29%
Dr.S.Soundarapandian
பொன் விழா காணும் உலக நாயகன் Poll_c10பொன் விழா காணும் உலக நாயகன் Poll_m10பொன் விழா காணும் உலக நாயகன் Poll_c10 
223 Posts - 21%
sugumaran
பொன் விழா காணும் உலக நாயகன் Poll_c10பொன் விழா காணும் உலக நாயகன் Poll_m10பொன் விழா காணும் உலக நாயகன் Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
பொன் விழா காணும் உலக நாயகன் Poll_c10பொன் விழா காணும் உலக நாயகன் Poll_m10பொன் விழா காணும் உலக நாயகன் Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
பொன் விழா காணும் உலக நாயகன் Poll_c10பொன் விழா காணும் உலக நாயகன் Poll_m10பொன் விழா காணும் உலக நாயகன் Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
பொன் விழா காணும் உலக நாயகன் Poll_c10பொன் விழா காணும் உலக நாயகன் Poll_m10பொன் விழா காணும் உலக நாயகன் Poll_c10 
18 Posts - 2%
prajai
பொன் விழா காணும் உலக நாயகன் Poll_c10பொன் விழா காணும் உலக நாயகன் Poll_m10பொன் விழா காணும் உலக நாயகன் Poll_c10 
8 Posts - 1%
Rutu
பொன் விழா காணும் உலக நாயகன் Poll_c10பொன் விழா காணும் உலக நாயகன் Poll_m10பொன் விழா காணும் உலக நாயகன் Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
பொன் விழா காணும் உலக நாயகன் Poll_c10பொன் விழா காணும் உலக நாயகன் Poll_m10பொன் விழா காணும் உலக நாயகன் Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொன் விழா காணும் உலக நாயகன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 13, 2009 2:00 pm



பொன் விழா காணும் உலக நாயகன் 11kamal1

தமிழ் சினிமாவின் அடையாளமாகத் திகழும் நடிகர் கமல்ஹாசன், 'இந்திய சினிமாவில் பொன் விழா' கண்ட நாயகனாக வலம் வருகிறார்..!

வெவ்வேறு மொழிகளிலும் 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள கமல்ஹாசன், இந்த ஆண்டுடன் இந்திய சினிமாவில் 50 ஆண்டுகளைப் பூர்த்தி செய்கிறார்.

நம் நாட்டின் சினிமா கலைத் திறமையை உலக அரங்கில் கொண்டுச் செல்வதற்கு தொடர்ந்து முனைந்து வரும் இந்த நாயகன் நடித்த முதல் திரைப்படம் வெளியானது, 1960-ம் ஆண்டு ஆகஸ்ட் 12-ல்!

கமல்ஹாசன் 1959-ம் ஆண்டில் நடந்த படப்பிடிப்புகளில், தனது 5வது வயதில் கலந்து கொண்ட 'களத்தூர் கண்ணம்மா', 1960-ம் ஆண்டு ஆகஸ்ட் 12-ல் வெளியானது.

ரசிகர்கள் மட்டுமின்றி, தமிழ் திரையுலகமே கமல்ஹாசனின் கலையுலக பொன் விழாவைக் கொண்டாடத் தொடங்கும் இவ்வேளையில், அந்த அசாத்திய கலைஞனது சினிமா வாழ்க்கையின் சாரம் 50 முக்கியக் குறிப்புகளாக இங்கே...

1. ஏ.வி.எம் தயாரிப்பில் பீம் சிங் இயக்கிய படம் 'களத்தூர் கண்ணம்மா'. ஜெமினி கணேசன் - சாவித்திரி நடித்த இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமல்ஹாசன், 1960-ல் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதைப் பெற்றார்.

2. மழலைக் கமலின் உதட்டசைவில் உருவான களத்தூர் கண்ணம்மாவில் இடம்பெற்ற 'அம்மாவும் நீயே அப்பாவும் நீயே' இன்றைக்கும் ரசிகர்கள் மனத்தில் இருந்து நீங்கா இடம் பெற்றுள்ளது.

3. நடிகர் திலகம் என்று போற்றப்பட்ட சிவாஜி கணேசனுடன் 'பார்த்தால் பசிதீரும்', மக்கள் திலகம் என்றழைக்கப்பட்ட எம்.ஜி.ஆருடன் 'ஆனந்த ஜோதி' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

4. சென்னை புரசைவாக்கத்திலுள்ள எம்.டி.சி. முத்தையா செட்டி பள்ளியில் தான் படித்தார் கமல்ஹாசன். படிப்பின் மீது கொஞ்சமும் மனம் ஒட்டாத கமலுக்கு கலை மீது மட்டுமே ஆர்வம் இருந்தது.

5. கமல்ஹாசன் நாயகனாக நடித்த 'அபூர்வ ராகங்கள்' படத்தில் அறிமுகமானார், ரஜினிகாந்த். இப்படம் 1975-ம் ஆண்டில் சிறந்த மாநில மொழி திரைப்படத்துக்கான தேசிய விருதைப் பெற்றது. அன்று முதல் இருவரது நட்பு தொடர்கிறது.

6. 16 வயதினிலே படத்தில் சப்பாணியாக நடித்து ஹீரோயிஸத்துக்கான பிம்பத்தை தகர்த்தவர். அந்தப் படத்துக்குப் பிறகு வெற்றி நாயகனாக வலம்வரத் தொடங்கினார்.

7. 70 மற்றும் 80களில் கமல் - ஸ்ரீதேவி ஜோடி வெற்றிக் கொடி கட்டியது. இந்த இணை மொத்தம் 23 படங்களில் நீடித்தது.

8. கமல்ஹாசனும் ரஜினியும் இணைந்து நடித்து பல வெற்றிப் படங்களைத் தந்துள்ளனர். அவற்றில் அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சி, அவர்கள், இளமை ஊஞ்சலாடுகிறது, அவள் அப்படித்தான், நினைத்தாலே இனிக்கும், அலாவுதீனும் அற்புத விளக்கும் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

9. கமல்ஹாசனிடம் இருந்து ரஜினிக்கு மிகவும் பிடித்த விஷயம் பஞ்சுவாலிட்டி.

10. இளம் வயதில் மலையாள சினிமாவில் தன்னை வெகுவாக ஈடுபடுத்திக் கொண்ட கமல்ஹாசனால் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் சரளமாக பேச முடியும். அதோடு இந்தி, ஆங்கிலம் மற்றும் மராத்தி ஆகிய மொழிகளையும் ஆர்வத்துடன் கற்றுக் கொண்டார்.

11. உலக சினிமா மீது அப்போது அவருக்கு மோகமுண்டு. கமலுக்குப் பிடித்த படம், விட்டோரியா டேசிகாவின் 'பைசைக்கிள் தீவ்ஸ்.

12. ஷர்ட் இல்லாமல் உடம்பை காட்டிக் கொண்டு நடிப்பது இப்போதையை ஹீரோக்களிடையே ஒரு வழக்கமாகவே ஆகிவிட்டது. இதற்கு முன்னோடியாக இருந்து, கே.பாலச்சந்தர் படத்தில் ஷர்ட் இல்லாமல் நடித்தவர் கமல்!

13. இலக்கியம் மீது ஆர்வம் கொண்ட கமல்ஹாசனுக்கு பிடித்த நாவல்கள் தி.ஜானகிராமனின் 'அம்மா வந்தாள்' மற்றும் 'மரப்பசு'.

14. சிவாஜி கணேசன் மீது பற்றுகொண்ட கமல்ஹாசன், எப்போதும் அவரை 'அப்பா' என்றே அன்புடன் அழைப்பார். சிவாஜியின் தாக்கம் இல்லாமல் தமிழ் திரையுலகில் எவரும் நடிக்க முடியாது என்பது கமலின் எண்ணம்!

15. பெரியாரின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டுள்ள கமல்ஹாசன் எப்போதும் தன்னை நாத்திகர் என்று அடையாளப்படுத்திக் கொள்ளவே விரும்புவார்.

16. தான் நடிக்கும் கதாப்பாத்திரமாகவே மாறிவிடும் கமல்ஹாசன் அதன் மூலம் நிறைய கலைகளை கற்றுள்ளார். அபூர்வ ராகங்களுக்காக மிருதங்கம் கற்றார்; அவள் ஒரு தொடர் கதைக்காக மிமிக்ரி கற்றார்; தேவர் மகனுக்காக சிலம்பாட்டம் கற்றார்... இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

17. கமல்ஹாசன் தயாரித்த முதல் திரைப்படம் 'ராஜபார்வை'.

18. கமல்ஹாசன் இளம் ஹீரோவாக வலம் வந்த காலத்தில் அவரது 'சட்டம் என் கையில்' படத்தில் வில்லனாக அறிமுகமானார், நடிகர் சத்யராஜ். பிற்காலத்தில் கமலின் தயாரிப்பில் வெளியான 'கடமை கண்ணியம் கட்டுப்பாடு' படத்தின் ஹீரோ சத்யராஜ்!

19. சோதனை முயற்சிகளில் ஈடுபடும் தமிழ் திரைக் கலைஞர்களில் தன்னிகரற்ற கமல்ஹாசன், சிங்கீதம் சீனிவாச ராவ் உடன் இணைந்து 'புஷ்பக்' என்ற வசனமற்ற படம் (தமிழில் 'பேசும் படம்') உருவாக காரணமாக இருந்தார். இப்படம் சிறந்த படத்துக்கான் ஃபிலிம் ஃபேர் விருது பெற்றது.

20. இந்தியில் 'சாகர்', 'ஏக் தூஜே கேலியே' போன்ற படங்கள் இந்திய அளவில் கவனத்தை ஈர்த்தன.

21. கமலைக் கவர்ந்த இந்தித் திரைப்படங்கள் 'மோஹால் இ ஆஸாம்' மற்றும் 'ஷோலே'.

22. அபூர்வ சகோதரர்கள் படத்தில் குள்ள கமல் இன்றளவும் பேசப்படுபவர். தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத முயற்சி அது.

23. மைக்கேல் மதன காமராஜன் படத்தில் நான்கு வேடங்களில் அசத்தியது குறிப்பிடத்தக்க முயற்சி.

24. மகாத்மா காந்தியை கொல்ல முனைந்த ஒருவனது வாழ்க்கையைச் சொல்லும் 'ஹேராம்' படம் வர்த்தக ரீதியில் வெற்றி பெறாமல் போனாலும் கமலுக்கு நிறைவையே தந்தது.

25. பழைய நட்புகளைத் தொடர்வதில் மிகுந்த கவனம் செலுத்துவார். சந்தான பாரதி, பி.வாசு, மணி ரத்னம், பி.சி.ஸ்ரீராம் என இந்தப் பட்டியல் மிகவும் நீளமானது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 13, 2009 2:01 pm

26. குருநாதர் கே.பாலச்சந்தர் மீது அளவு கடந்த பற்று நிறைந்தவர், கமல்ஹாசன்.

27, தனது ரசிகர்களை நல்வழிப்படுத்தும் வகையில், ரசிகர் மன்றத்தை நற்பணி மன்றங்களாக மாற்றி பல்வேறு சமூக சேவைகள் புரிய வழிவகை செய்தார்.

28. தமிழ் இலக்கியவாதிகளை சினிமாவுக்கு அழைத்து வருவதில் ஆர்வம் கொண்டவர். கமலுடன் அதிகம் பணியாற்றியவர் மறைந்த எழுத்தாளர் சுஜாதா.

29. கமல்ஹாசன் நடித்த நாயகன் திரைப்படத்தை ஆல் டைம் பெஸ்ட் ஃபிலிம்ஸ் 100 பட்டியலில் ஒன்றாக சேர்த்து கெளரவம் தந்தது, டைம்ஸ் பத்திரிகை.

30. 'நாயகன்' படத்தைப் பார்த்த ரஜினிகாந்த் உடனடியாக கமல்ஹாசனுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் அவர் குறிப்பிட்டுள்ள சிறப்பம்சம், "நீ நடிகனின் நடிகன்".

31. 'நாயகன்' படத்தைப் பார்த்த சிவாஜி கணேசன் படம் முடிந்தும் நீண்ட நேரம் அமைதியாக இருந்தார். பிறகு, கண்ணீர்த் துளியுடன் கமலைக் கட்டிப் பிடித்த சிவாஜி, "படம் நல்லா வரும்," என்றார்.

32. சட்டம் என் கையில் படத்துக்காக சென்னை மொழியை லூஸ் மோகனிடம் கற்றார். 'சதிலீலாவதி'க்காக கோயம்புத்தூர் பாஷையை கோவை சரளாவிடம் இருந்து கற்றுக் கொண்டார். தெனாலி படத்துக்காக பிரபல வானொலி வர்ணனையாளர் அப்துல் ஹமீத்திடம் இருந்து இலங்கைத் தமிழை எப்படி பேசுவது என்பதைக் கற்றுக் கொண்டார்.

33. தமிழ் சினிமாவில் என்றென்றும் வாழும் கலைஞர் நாகேஷ். அவரை மிகச் சிறப்பாக பயன்படுத்தியவர்களில் கமல்ஹாசனுக்கும் பங்குண்டு. கமல்ஹாசனின் 'நம்மவர்' படத்தில் நடித்ததற்காக நாகேஷ் என்ற உன்னத நடிகருக்கு தேசிய விருது வழங்கி தனது விருதுக்கு பெருமை சேர்த்துக் கொண்டது இந்திய அரசு.

34. திட்டமிட்டு இயக்குனராக களமிறங்க இருந்த கமல்ஹாசன், நியமிக்கப்பட்ட இயக்குனர் செய்த குளறுபடியால் எதிர்பாராத விதமாக இயக்குனராக வேண்டியாகிவிட்டது. அவ்வைசண்முகியின் இந்தி பதிப்பான 'சேச்சி 420' தான் அவர் இயக்கிய முதல் திரைப்படம்.

35. மூன்றாம் பிறை (1982), நாயகன் (1987) மற்றும் இந்தியன் (1996) ஆகிய படங்களுக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதுகளைப் பெற்றார்.

36. ஆஸ்கார் விருதுக்கு சிறந்த வெளிநாட்டு திரைப்படங்களுக்கான விருது பிரிவுக்கு இந்தியாவின் சார்பில் பரிந்துரைக்கப்பட்ட படங்களில், இதுவரை அதிக எண்ணிக்கையில் கமல்ஹாசன் நடித்த படங்களே தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

37. இந்திய சினிமாவிலேயே 'மேக்கப்புக்கு முக்கியத்துவம்' அளிப்பதன் அவசியத்தை உணர்த்தியதில் கமலுக்கு பெரும் பங்குண்டு. இதற்காக ஹாலிவுட்டில் இருந்து கலைஞர்களை வரவழைத்தவர். இந்தியன், அவ்வைசண்முகி, தசாவதாரம் ஆகியவை இதற்கு நல்ல உதாரணம்.

38. எழுத்தாளர், திரைக்கதையாசிரியர், வசனகர்த்தா, நடன இயக்குனர், இயக்குனர் என கலையுலகில் பல அவதாரங்களைத் தன்னகத்தே கொண்டுள்ள கமல்ஹாசனுக்கு பாடல் திறன் சற்று மிகுதியாகவே இருக்கிறது. ஒரு முறை பால முரளிகிருஷ்ணா தனது பேட்டியில், தன்னிடம் சங்கீதம் கற்க வந்த கமலின் திறமையை சில நாட்களிலேயே கண்டு வியந்ததாக குறிப்பிட்டிருக்கிறார்!

39. 1990-ல் இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதைப் பெற்றார்.

40. 2005-ல் சத்யபாமா பல்கலைக்கழகத்தால் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 13, 2009 2:01 pm

41. 2009-ல் 'வாழும் வரலாறு' விருதை வழங்கியது FICCI அமைப்பு.

42. கமல்ஹாசன் இயக்கிய படங்கள்... சாச்சி 420 (1997), ஹே ராம் (2000) மற்றும் விருமாண்டி (2004).

43. கதை எழுதிய படங்கள்... தேவர்மகன் (1992), வீராசட் (1997), பிவி நேம்பர் 1 (1999), ஹெராம் (2000), ஆளவந்தான் (2001), நளதமயந்தி (2003), விருமாண்டி (2004), மும்பை எக்ஸ்பிரஸ் (2005), ராம்ஜி லண்டன்வாலா (2005), தசாவதாரம் (2008).

44. திரைக்கதை எழுதிய படங்கள்... தேவர்மகன் (1992), சேச்சி 420 (1998), ஹேராம் (2000), அன்பே சிவம் ( 2003), நளதமயந்தி (2003), தசாவதாரம் (2008)

45. இந்தியன் (1996), வேட்டையாடு விளையாடு (2006) படங்களுக்காக சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருதுகள் பெற்றார்.

46. ஆகிலி ராஜ்யம், சுவாதி முத்யம் மற்றும் இந்துருடு சந்துருடு ஆகிய மூன்று படங்களுக்காக ஆந்திர அரசின் சிறந்த நடிகருக்கான நந்தி விருதைப் பெற்றார்.

47. கமல்ஹாசன் பெற்ற ஃபிலிம் ஃபேர் விருதுகளின் எண்ணிக்கை 18.

48. 'தசாவதாரி'யாக கமல் எடுத்த கமர்ஷியல் அவதாரம், இந்திய பாக்ஸ் ஆபீஸின் டாப்களில் ஒன்று. கலைத் தந்தையின் 'நவராத்திரி'க்குப் போட்டியாக, மகன் போட்ட 10 கெட்டப்புகளைப் பரவச எக்ஸிபிஷனாகப் பார்த்துக் களித்தனர் உலகத் தமிழர்கள்.

49. இந்தியத் திரையுலகிலேயே 50 ஆண்டுகாலம் பல்துறை கலைஞனாக வலம் வரும் ஒரே கலைஞனும் இவரே.

50. சினிமாவை மூச்சாக அர்ப்பணிப்புடன் அணுகி வரும் கலைஞனுக்கு இருக்கும் ஒரே நீண்டகால வருத்தம்... 'மருதநாயகம்' என்ற கனவுப் படத்தை உருவாக்கிவிட வேண்டும் என்பதே!

காலத்துக்கு ஏற்றாற் போல் தன்னை மாற்றிக் கொள்ளும் கலைஞர்களில் கமல்ஹாசன் முதன்மையானவர். ரீமேக் கலாசாரம் மிகுதியாகத் தொடங்கிய இந்தக் காலக்கட்டத்தில், வேறு மொழிகளில் வெளிவரும் தரமான படங்களை தமிழுக்குக் கொண்டு வரும் முயற்சியாக, இந்தியில் சிறப்பிடம் பெற்ற 'தி' வெட்னஸ்டே' படத்தை தமிழில் 'உன்னைப் போல் ஒருவன்' ஆக உருவாக்கி வருகிறார், கமல்ஹாசன்.

ஆனால், திரையுலகில் 'உன்னைப் போல் ஒருவன்' யார்? என்பதே கமல்ஹாசனை 'உலக நாயகன்' எனப் பாசத்துடன் அழைக்கும் ரசிகர்கள் கேட்கும் கேள்வி!

நன்றி - விகடன்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Aug 13, 2009 2:07 pm

பொன் விழா காணும் உலக நாயகனுக்கு , வாழ்த்துக்கள் மகிழ்ச்சி

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Aug 13, 2009 2:10 pm

நன்றி பாடகன்



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Aug 13, 2009 2:10 pm

"ஆனால், திரையுலகில் 'உன்னைப் போல் ஒருவன்' யார்? என்பதே கமல்ஹாசனை 'உலக நாயகன்' எனப் பாசத்துடன் அழைக்கும் ரசிகர்கள் கேட்கும் கேள்வி! "

மிக மிக சரி

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Thu Aug 13, 2009 2:15 pm

புன்னகை

avatar
Anandh
பண்பாளர்

பதிவுகள் : 148
இணைந்தது : 16/07/2009

PostAnandh Thu Aug 13, 2009 2:24 pm

வாழ்த்துகள் உலக நாயகன் அன்பு மலர்

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Aug 13, 2009 2:33 pm

அன்பு மலர்



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக