ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by ராஜா Today at 2:16 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by ஜேன் செல்வகுமார் Today at 2:16 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 2:14 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 2:11 pm

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by ஜேன் செல்வகுமார் Today at 1:58 pm

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ஜேன் செல்வகுமார் Today at 1:50 pm

» 2012 மே பதினெட்டில் வட்டுவாகலில் நடந்தது என்ன (படங்கள்)
by eelamaran Today at 1:18 pm

» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முரளிராஜா Today at 1:18 pm

» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by முரளிராஜா Today at 1:16 pm

» முல்லைத்தீவு வட்டுவாகலில் பாரிய புத்தர்விகாரை! (படம்)
by eelamaran Today at 1:08 pm

» வல்வை ஊரி இந்து மயானத்தில் சோசலிச குடியரசின் அரசியல் யாப்ப்பு தீயிட்டுக் கொழுத்தப்பட்டன.
by eelamaran Today at 1:07 pm

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by வை.பாலாஜி Today at 1:05 pm

» வைகோவுடன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் சந்திப்பு !
by eelamaran Today at 1:05 pm

» சரணடைந்த, காணாமற் போன உறவுகளை மீட்டுத்தருமாறு கோரிக்கை
by eelamaran Today at 1:04 pm

» வாங்களேன் ............ஒரு கப் 'டீ' சாப்பிடலாம்
by ராஜா Today at 1:02 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by rameshnaga Today at 12:43 pm

» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by ராஜா Today at 12:36 pm

» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by ராஜா Today at 12:35 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by ராஜா Today at 12:20 pm

» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by ராஜா Today at 12:13 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 11:49 am

» நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?
by யினியவன் Today at 11:41 am

» ( உதகை மலர்க்கண்காட்சி ! )
by eraeravi Today at 11:01 am

» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by ராஜ்அருண் Today at 11:00 am

» முடிவு பெறாத கதை ....
by rameshnaga Today at 10:51 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 10:19 am

» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42 am

» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40 am

» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am

» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am

» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am

» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57 am

» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am

» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am

» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am

» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am

» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am

» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am

» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை

Post by Aathira on Sun Nov 28, 2010 9:11 am

First topic message reminder :

அன்றும் இன்றும் அறுவை






ஒரு மருத்துவமனையில், பலர் அறுவை சிகிச்சைக்காகக் காத்துக் கொண்டிருந்தனர். அவர்கள் அனைவருக்கும் மயக்க ஊசி போட்டு ஆபரேஷன் தியேட்டர் முன்பு அமரவைத்திருந்தனர் அம்மருத்துவ மனையின் மருத்துவர்கள். பெரிய மருத்துவமனைகளில் எல்லாம் சிறு சிறு அறுவை சிகிச்சைகள் இவ்வாறு ஒரே நேரத்தில் அடுத்தடுத்துப் பலருக்குச் செய்வது வழக்கம். முதலில் மயக்க மருந்து கொடுத்து அமரவைத்திருப்பர். உள்ளே அழைத்துச் சென்ற பின்பு அப்பகுதி மட்டும் மறத்துப் போகும் ஊசி போட்டு அறுவை சிகிச்சை செய்து விடுவர்.

அம்மருத்துவ மனையில் அறுவை சிகிச்சைக்கு அமர்ந்தவர்களில் ராமனும் ரஹ்மானும் அடங்குவர். உள்ளிருந்து ஆப்ரேஷனுக்காக ரஹ்மானை அழைக்க, பாதி மயக்க நிலையில் இருந்த ராமன் தன்னைத்தான் அழைக்கிறார்கள் என்று நினைத்து உள்ளெ சென்று விட்டார். அதிவிரைவில் அமோகமாக அறுவை சிகிச்சை முடிந்தது. பின்னர் தான் தெரிந்தது அவர் ராமன் என்று. அறுவை சிகிச்சையில் ஒரு சிறு வித்தியாசமே. ராமன் வந்திருந்தது விரைவீக்க அறுவை சிகிச்சைக்கு. ரஹ்மான் வந்திருந்தது சுன்னத் அறுவை சிகிச்சைக்கு. என்ன நடந்திருக்கும் என்று நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள். இது கட்டுக்கதை அல்ல. உண்மைச் சம்பவம். ஆந்திர மாநிலத்தில் நடந்தது.


ஏன் நடிகை ஷ்ரிதேவியின் தாயாருக்கு நடை பெற்ற அறுவை சிகிச்சைபற்றி பக்கம் பக்கமாக எல்லா இதழ்களூம் கிழித்துத் தள்ளியதை நம்மால் மறக்கத்தான் முடியுமா? இத்தனைக்கும் ஷ்ரிதேவியின் தாயாருக்கு மருத்துவம் அளித்தது அமெரிக்காவின் புகழ் பெற்ற ஒரு பெரிய மருத்துவமனை.


இவற்றையெல்லாம் ஏன் கூறுகிறேன் என்றால், அறுவை சிகிச்சை அத்துனை எளிதாக, விரைவாக, அதிகமாக இக்காலங்களில் நடைபெறுகிறது. யாராவது கிடைப்பார்களா, என்று உடல் உறுப்புகளை வெட்டி எறிய கத்தியுடன் காத்திருக்கும் மருத்துவர்கள் பெருகிவிட்டனர். அதனால் ஒரு சில தவறுகளும் நடைபெறுகின்றன. அதுமட்டுமல்ல போகிற போக்கில் உறுப்புகளைத் திருடிப் பிழைக்கும் சதிகளும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. சரி முந்தய காலங்களில் அறுவை முறை இருந்து இருக்குமா? அவர்கள் இது போன்ற சிகிச்சை முறைகளை மேற்கொண்டு இருந்தார்களா? என்பதை அறிய வேண்டாவா?


பண்டைய காலங்களில் அறுவை சிகிச்சை நடக்காமல் இருக்க வாய்ப்பே இல்லை. ஏனெனில் வீரயுகம் என்று அழைக்கப் பட்ட போர்க்காலங்களில் இது போன்ற சிகிச்சைகள் நிச்சயமாக இருந்து இருக்க வேண்டும்.


கூர்மையான நகங்களை உடைய கழுகின் தாக்குதலால், புண் எய்தி தன்னிடம் தஞ்சம் அடைந்த ஒரு புறாவுக்காகத் தன் தசையைத் தந்தான் ஒரு மன்னன். கானகத்தில் கண்களில் குருதி வழிய அமர்ந்து இருந்த ஒரு தெய்வக் கற்சிலைக்கு, தன் கண்ணை எடுத்து அப்பினான் ஒரு வேடன். இச்செய்திகள் எதனைக் குறிக்கின்றன? இக்காலத்து உடல் உறுப்புக் கொடைக்கு முன்னோடிகளாக இவர்கள் இருந்து உள்ளனரோ என்று என்று எண்ணத் தோன்றுகிறது. சிபி சக்கரவர்த்தி புறாவுக்குத் தன் தசையைத் தந்தது, இன்றைய தோல் மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்னோடியாக இருக்குமோ என்ற ஐயமும் எழுகிறது. ஆய்வு நோக்கில் சிந்தித்துப் பார்த்தால் இதுதான் உண்மையாக இருக்குமோ என்றும் எண்ணத்தோன்றுகிறது. ஏனெனில் புறாவைக்காக்க வேடனுக்கு ஏன் தசையைக் கொடுக்க வேண்டும் சிபி. அங்கு என்ன நடந்து இருக்கும்? ஒரு வேளை அம்புப் பட்டுச் சிதைந்து போன தசைக்குப் பதிலாகத் தன் தசையை வைத்து தைத்திருப்பானோ மன்னன். இதன் உட்பொருளைப் புரிந்து கொள்ளாமல் புறாவுக்குத் தன் உடலின் தசையை அறுத்துக் கொடுத்தான் சிபிச்சக்கரவர்த்தி என்று இன்றும் கூறிக் கொண்டிருக்கிறோமா என்றும் தெரியவில்லை. ஏனெனில் இது கர்ண பரம்பரை கதை.


ஆனால் இரண்டாவதை, மருத்துவ அடிப்படையில் நோக்கினாலும், ஆன்மீக அடிப்படையில் நோக்கினாலும், இன்றைய கண் படல மாற்று அறுவை சிகிச்சைக்கு வழிகாட்டிய பாமரன் கண்ணப்பன் என்பது ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மை.


ப்ண்டைய காலத்தில் அறுவை செய்வதற்கு செம்பினால் ஆன கத்தியைப் பயன் படுத்தினர் என்கிறது அகழ்வாய்வு அறிக்கை. சிந்து வெளி ஆய்வில் கிடைக்கப்பட்ட ஆயுதங்களில் மடுத்துத்துவத்துக்குரிய கத்திகள் கிடைத்துள்ளன். இதன் சிறப்பு என்ன என்றால பக்க விளைவுகளை ஏற்படுத்தாத உலோகம் செம்பு என்பதை அவர்கள் அறிந்து இருந்தனர் என்பதை அறிய முடிகிறது.



அக்காலத்தில் தசையைச் சேர்த்துத் தைப்பதற்கு வெள்ளூசியைப் பயன் படுத்தினர் என்று சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. தையல் போடுவதற்கு செந்தலை எறும்புகள் என்ற ஒரு வகை எறும்புகளையும் பயன்படுத்தினர் என்பர். எப்படி என்று கேட்கிறீர்களா? தையல் போட வேண்டிய தோலில் இவ்வெறும்புகளை விடுவர். அவை சதையை இறுக்கமாகக் கவ்விப் பிடித்துக் கொள்ளும்போது (அதாவது கடிக்கும் போது) அதன் உடல் படுதியை வெட்டி எடுத்து விடுவார்களாம். எத்தனை தையல் போட வேண்டுமோ அத்தனை எறும்புகளை பயன் படுத்துவார்களாம். (இச்செவிவழிச் செய்தியை வழங்கியவர் ஆசிரியர். முனைவர் சி. வெ. சுந்தரம்)

சாதாரனமாகத் திருவள்ளுவர் ஒருவரைப் பாராட்டி விடுவாரா என்பதையும் இங்கு நாம் சிந்திக்க வேண்டும். ‘அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு’ என்று கூறுகிறார், என்றால் யாரோ ஒருவர் பிறருக்கு எலும்பைத் தந்திருக்கிறார் என்றுதானே பொருள். அதுமட்டுமல்ல ‘என்பும்’ என்று கூறும்போது அச்சொல்லுக்கு முன்னாலோ பின்னாலோ மற்றொரு சொல்லையும் இணைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் தமிழ் சொற்கள் பெரும்பாலும் இரட்டைச் சொற்கள். நன்மையும் தீமையும், இரவும் பகலும், கையும் காலும், என்பது போல எலும்புடன் இணையும் மற்றொரு சொல் தோல். எலும்பும் தோலும் என்பது இணைச் சொற்கள். இதற்கும் சான்று திருவள்ளுவரே தருகிறார், ‘என்பு தோல் போர்த்திய உடம்பு’ என்ற மற்றொரு திருக்குறளில். எனவே எலும்பையும் தோலையும் திருவள்ளுவர் காலத்துக்கு முன்பே கொடையாகத் தந்தவர்களோ அல்லது தந்தவரோ இருந்திருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது அல்லவா? யார் அவர் என்பதைத் தெரிந்து கொள்ள பரிமேலழகரின் திருக்குறள் உரையைப் பார்த்தால், சங்கப் பாடல் ஒன்றைச் சான்று காட்டுகிறார். அப்பாடலில் பேசப்படுவது சிபி மன்னனின் கொடைப் பண்பைப் (தசை தானத்தை) பற்றியே. எனவே சிபி தசையைக் கொடுத்தார் என்பது தெளிவு. யாருக்கு என்பதில் தான் ஐயம். இந்த ஆய்வை பிறகு பார்ப்போம். இப்பொழுது அந்த சங்கப் பாடலைப் பார்ப்போமா?



“கால்உணவு ஆகச் சுடரொடு கொட்கும்


அவிர்சடை முனிவரும் மருள, கொடுஞ்சிறைக்


கூர்உகிர்ப் பருந்தின் ஏறுகுறித்து, ஒரீஇ,


தன்அகம் புக்க குறுனடைப் புறவின்


தபுதி அஞ்சிச் சீரை புக்க


வரையா ஈகை உரவோன்”


அறுவை மருத்துவ முறை பற்றி ஒவ்வொரு குறிப்புகள்ஒவ்வொரு நூலில் காணப்படுகின்றன. அறுவை மருத்துவத்தில் என்னென்ன முறைகள்செய்யப்பட்டன என்பதை விளக்கிக் கூறுவதாக அமைகிறது சீவக சிந்தாமணி.


சீவக சிந்தாமணி காப்பிய நூலாக அமைந்ததினால், விரிவான செய்திகளைத் தருவதாக அமைந்து' அறுவை முறை மருத்துவத்தை விவரிக்கிறது.

”முதுமரப் பொந்து போல முழுமெய்யும் புண்க ளுற்றார்க்கு
இதுமருந் தென்ன நல்லார் இழுதுசேர் கவளம் வைத்துப்
பதுமுகன் பரமை மார்பில் நெய்க்கிழி பயிலச் சேர்த்தி
நுதிமயிர்த் துகிற்குப் பாயம் புகுகென நூக்கி னானே''

மரப்பொந்துபோல உடல் முழுவதும் ஏற்பட்ட புண்களுக்கு ஏற்ற மருந்து எது? என்பதை அறிந்தமருத்துவர், அம்மருந்தை வாயில் கவளத்தை வைப்பது போல் வைப்பர்; பின்னர் எலி மயிரால் நெய்யப்பட்ட ஆடையால் போர்த்தி,காற்றுப் புகாதவாறு பாதுகாப்பர் என்று உரைப்பதினால், புண்பட்டார்க்குச்செய்யப்படுகின்ற மருத்துவ முறைகள் தெளிவாக்கப் பட்டுள்ளன.

” நெய்க்கிழி வைக்கப் பட்டார் நெய்ப் பந்தர் கிடத்தப் பட்டார்
புக்குழி யெஃக நாடி யிரும்பினாற் போழப் பட்டார்'

உடலுக்குள் புகுந்த இரும்புத் துண்டுகளை அறுவை முறையால்அறுத்தெடுத்துள்ளனர் என்று இப்பாடலடிகள் விளக்குகின்றன. நெய்யில்தோய்த்த துணியைப் இரும்புத்துண்டு நுழைந்த உடற்பகுதியின் மேல் போர்த்துவர். புண்பட்டாரை நெய்ப்பத்தலில்கிடத்துவர்; உடலுக்குள் புகுந்த இரும்புத் துண்டுகளை அறுவை முறையால்அறுத்தெடுப்பர்;

கால அடிப்படையில் இடைக்காலத்துக்கும் சற்று பின்னோக்கிச் சென்று பார்ப்போம். சோழர்கள் ஆட்சி காலத்தை, இலக்கிய அடிப்படையில் சிற்றிலக்கிய காலம் என குறிப்பர். சோழர்கள் ஆட்சி காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு. இந்த ஒன்பதாம் நூற்றாண்டில் அறுவை சிகிச்சை இருந்திருக்கிறது என்பதற்கு ஊர் பெயருடன் சான்று உள்ளது. கொங்கு மண்டலத்தில், மகப்பேற்று அறுவை சிகிச்சை முறை ஒரு துறையாக வளர்ந்த நிலையில் இருந்திருக்கிறது. அதனைப் பெண் மருத்துவர் (மருத்துவச்சி) செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இச்செய்தி ‘கொங்கு மண்டல சதகம்’ என்ற சிற்றிலக்கியத்தால் அறியலாகிறது. காந்தபுரம் என்ற ஒரு பகுதியை ஆண்ட வேந்தனின் மகள் பிள்ளையைப் பெற்றெடுக்க முடியாமல், பிரசவ வேதனையால் துன்பப்படுகிறாள். அப்பெண்ணின் வயிற்றைக் கிழித்துத் தன் திறமையால் குழந்தையை வெளியில் எடுத்தாளாம் கொங்கு நாட்டைச் செர்ந்த நறையூரில் வாழ்ந்த மருத்துவச்சி ஒருவர்.


“குறைவறு தெண்ணீர் நதியணை காந்த புரத்தொடுநல்


இறைமகளார் மகவீனப் பொறாது உடல் ஏங்க வகிர்


துறைவழி ஏற்று மகிழ்வூட்டும் அங்கலை தோன்றி வளர்


மறைவழி நேர் நறையூர் நாடுசூழ் கொங்கு மண்டலமே”



இப்பாடலில் கூறப்பட்டுள்ள ‘வகிர் துறைவழி’ என்பது வயிற்றை வகிர்ந்து (கிழித்து) குழந்தையை வெளியில் எடுக்கும் மருத்துவமுறையை குறிக்கிறது. ‘துறை’ என்ற சொல் அக்காலத்தில் அறுவை மருத்துவத்துறை பரவலாக இருந்ததைக் காட்டுகிறது. ஏனெனில் ‘வகிர்வழி’ என்று கூறியிருந்தால் சாதாரனமாக வகிர்ந்து எடுத்தாள் என்று கொள்ள இடமிருக்கிறது. ஆனால் ‘வகிர் துறைவழி’ என்ற சொல்லாட்சி அறுவை மருத்துவத்துறை என்ற ஒரு துறை அக்காலத்தில் தோன்றி வளர்ந்து இருந்ததையும், ‘அங்கலை தோன்றி வளர் நேர் நறையூர்’ என்பது அரிய கலையான இம்மருத்துவ முறை, கொங்கு நாட்டின் நறையூரில் வளர்ந்து இருந்தது என்பதையும் குறிக்கிறது.


அறுவை தொடரும்....



ஆதிரா.
நன்றி குமுதம் ஹெல்த்.








Last edited by Aathira on Mon Dec 06, 2010 7:55 pm; edited 2 times in total

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10850
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down


Re: அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை

Post by பூஜிதா on Tue Dec 07, 2010 11:00 am

அருமையான பதிவு நன்றிகள் ஆறுதல்

பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள்: 2776
வசிப்பிடம்: CHENNAI
சேர்ந்தது: 14/04/2010
மதிப்பீடு: 370

Back to top Go down

Re: அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை

Post by Aathira on Tue Dec 07, 2010 11:24 pm

kalaimoon70 wrote:அருமையான பகிர்வு .
அறுவை சிகிச்சை பற்றிய தெளிவு,.
தமிழோடு சொன்ன விதமும் ,தமிழில் இருப்பதை
சொன்னவிதம்
நம் முன்னோகளும் கொண்ட பங்கு
எல்லாம் சொல்லும் உங்கள் கருத்து அழகு .

பாராட்டுக்கள் தோழியே .தொடரட்டும் உங்கள் பணியே .


என்றும் போல தங்கள் வாழ்த்து... அதே போல என் நன்றியும்.. தொடர்வதற்கு மிக்க நன்றி கலைநிலா..

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10850
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum