புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
by Shivanya Yesterday at 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குரு-சுந்தர்ஜிபிரகாஷ்
Page 1 of 1 •
என் தமிழாசிரியர் ஆரோக்கியசாமியை பற்றி நேற்று என் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்.
எழுபதுகளின்
இறுதி வருடங்களில் என் ஒன்பதாவது பத்தாவது வகுப்புகளின் தமிழ் ஆசிரியராக
என்னை ஆசீர்வதித்தவர் இந்த ஜென்மத்தின் என் பெரும் புண்ணியமான
திரு.ஆரோக்கியசாமி.
அவர் மாதிரித் தமிழாசிரியர்களைப் பார்ப்பதும் அவர்கள் கற்றுத்தர தமிழ் கற்பதும் பெரும் பாக்கியம். அல்லது பூர்வ ஜென்ம புண்ணியம்.
கம்பராமாயணமும் பாஞ்சாலிசபதமும் அவர் வாயால் கேட்க மணக்கும்.
பகுபத
உறுப்பிலக்கணம் அவர் நடத்தி அந்த வகுப்பில் புரியாத மாணவர்கள்
இருக்கவாய்ப்பிலை. ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு இப்போதெல்லாம் பகுபத
உறுப்பிலக்கணம் சொல்லித்தரப்படுகிறதா-சொல்லித் தருமளவில் ஆசிரியர்கள்
இருக்கிறார்களா? சந்தேகம்தான்.
ஒரு கணித வகுப்பின் சுவாரஸ்யம் தமிழ் வகுப்பில் பரவும் ஆச்சர்யமும் நிகழும்.
அசை,
சீர், நேர் நேர்-தேமா, நிறை நேர்-புளிமா என்று தொடங்கி கூவிளம் கருவிளம்
தேமாங்கனி,புளிமாங்கனி என்று அந்த வாய்ப்பாடு எப்போது தமிழ் இலக்கண
வகுப்புத் துவங்கும் என்ற பரபரப்பை விதைக்கும்.
சந்திப்பிழையை அவர் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்.
சீதாப்பிராட்டியாகவும்
சகுந்தலையாகவும் திரௌபதியாகவும் பெண்கள் பாத்திரங்களில் அவர் புகுந்து
வெளிப்படுவதைக் காணாத கண்கள் வெறும் புண்களென்றுதான் சொல்வேன்.
என்
எதிர்காலம் குறித்தும் என் நாளையக் கல்வி குறித்தும் திட்டமிடுதலில் என்
பதிமூன்று வயது மகனின் முதிர்ச்சி எனக்கு அப்போது இருந்திருக்குமானால்
தமிழை நான் இன்னும் அதிகமாய் உணர்ந்திருக்கும் பேறு கிடைத்திருக்கும்.
இப்போது ஆசிரியனாய் நான் ஒரு நாளேனும் வாழவேண்டுமென்கிற என் தாகம் தீர்ந்திருக்கும்.
இரு
ஆண்டுகள் மட்டுமே - மணிக்கணக்கில் அதிகம் போனால் எழுபத்து ஐந்து
மணிநேரங்கள் மட்டுமே நிகழ்ந்த அவரின் உறவால் என்னால் தமிழில் சிந்திக்கவும்
எழுதவும் பிழையின்றிப் பேசவும் என் 45வயது வரை விடாப்பிடியாய்த் தமிழைப்
பிடித்துத் தொங்கவும் முடியுமானால் அவரின் ஆளுமை என்ன என்று நான்
வகுப்பெடுக்கத் தேவையில்லை.
அவரைத் தேடிப்
போய்ப் பார்த்து அவரை ஆரத் தழுவி தமிழின் மேல் எனக்கு இத்தனை ஈடுபாடும்
ஆனந்தமும் ஏற்படக்காரணமாயிருந்த போதிப்பின் பாதங்களில் வீழ்ந்துகிடக்க
விரும்புகிறேன்.
நான் எழுதிய கவிதைகளைக் காட்டி அதில் திக்குமுக்காடி என்னை உச்சிமுகர விழைகிறேன்.
எனக்குத் தெரியும் எப்போதாவது இப்படி வருவாயென்று அலட்சியமும் பெருமையும் ததும்ப என்னைப் பார்க்க தாகம் கொள்கிறேன்.
இந்த வயதில் அவரின் கீழ் அமர்ந்து ஒன்பதாம் வகுப்பு மாணாக்கனின் கூச்சங்களை உதறி மறுபடியும் அவரின் தமிழில் குளிக்க நினைக்கிறேன்.
இதையெல்லாம் கொஞ்சமும் விரும்பாதவராய் என் ஆசான் என்னை விட்டுச் சென்றுவிட்டார்.
எனக்கு மீனைத் தராது மீன் பிடிக்கக் கற்றுக்கொடுத்த-
என்னை காலத்தின் கைகளில் பாறையாய் அல்லாது
கூழாங்கல்லாய் மாற்றக் காரணமாயிருந்த-
அந்த மஹானுபாவனுக்காய்-
இந்த வரிகளில்
நான் கண்ணீரில் கரைந்து கொண்டிருக்கிறேன்.
-சுந்தர்ஜிபிரகாஷ்
எழுபதுகளின்
இறுதி வருடங்களில் என் ஒன்பதாவது பத்தாவது வகுப்புகளின் தமிழ் ஆசிரியராக
என்னை ஆசீர்வதித்தவர் இந்த ஜென்மத்தின் என் பெரும் புண்ணியமான
திரு.ஆரோக்கியசாமி.
அவர் மாதிரித் தமிழாசிரியர்களைப் பார்ப்பதும் அவர்கள் கற்றுத்தர தமிழ் கற்பதும் பெரும் பாக்கியம். அல்லது பூர்வ ஜென்ம புண்ணியம்.
கம்பராமாயணமும் பாஞ்சாலிசபதமும் அவர் வாயால் கேட்க மணக்கும்.
பகுபத
உறுப்பிலக்கணம் அவர் நடத்தி அந்த வகுப்பில் புரியாத மாணவர்கள்
இருக்கவாய்ப்பிலை. ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு இப்போதெல்லாம் பகுபத
உறுப்பிலக்கணம் சொல்லித்தரப்படுகிறதா-சொல்லித் தருமளவில் ஆசிரியர்கள்
இருக்கிறார்களா? சந்தேகம்தான்.
ஒரு கணித வகுப்பின் சுவாரஸ்யம் தமிழ் வகுப்பில் பரவும் ஆச்சர்யமும் நிகழும்.
அசை,
சீர், நேர் நேர்-தேமா, நிறை நேர்-புளிமா என்று தொடங்கி கூவிளம் கருவிளம்
தேமாங்கனி,புளிமாங்கனி என்று அந்த வாய்ப்பாடு எப்போது தமிழ் இலக்கண
வகுப்புத் துவங்கும் என்ற பரபரப்பை விதைக்கும்.
சந்திப்பிழையை அவர் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்.
சீதாப்பிராட்டியாகவும்
சகுந்தலையாகவும் திரௌபதியாகவும் பெண்கள் பாத்திரங்களில் அவர் புகுந்து
வெளிப்படுவதைக் காணாத கண்கள் வெறும் புண்களென்றுதான் சொல்வேன்.
என்
எதிர்காலம் குறித்தும் என் நாளையக் கல்வி குறித்தும் திட்டமிடுதலில் என்
பதிமூன்று வயது மகனின் முதிர்ச்சி எனக்கு அப்போது இருந்திருக்குமானால்
தமிழை நான் இன்னும் அதிகமாய் உணர்ந்திருக்கும் பேறு கிடைத்திருக்கும்.
இப்போது ஆசிரியனாய் நான் ஒரு நாளேனும் வாழவேண்டுமென்கிற என் தாகம் தீர்ந்திருக்கும்.
இரு
ஆண்டுகள் மட்டுமே - மணிக்கணக்கில் அதிகம் போனால் எழுபத்து ஐந்து
மணிநேரங்கள் மட்டுமே நிகழ்ந்த அவரின் உறவால் என்னால் தமிழில் சிந்திக்கவும்
எழுதவும் பிழையின்றிப் பேசவும் என் 45வயது வரை விடாப்பிடியாய்த் தமிழைப்
பிடித்துத் தொங்கவும் முடியுமானால் அவரின் ஆளுமை என்ன என்று நான்
வகுப்பெடுக்கத் தேவையில்லை.
அவரைத் தேடிப்
போய்ப் பார்த்து அவரை ஆரத் தழுவி தமிழின் மேல் எனக்கு இத்தனை ஈடுபாடும்
ஆனந்தமும் ஏற்படக்காரணமாயிருந்த போதிப்பின் பாதங்களில் வீழ்ந்துகிடக்க
விரும்புகிறேன்.
நான் எழுதிய கவிதைகளைக் காட்டி அதில் திக்குமுக்காடி என்னை உச்சிமுகர விழைகிறேன்.
எனக்குத் தெரியும் எப்போதாவது இப்படி வருவாயென்று அலட்சியமும் பெருமையும் ததும்ப என்னைப் பார்க்க தாகம் கொள்கிறேன்.
இந்த வயதில் அவரின் கீழ் அமர்ந்து ஒன்பதாம் வகுப்பு மாணாக்கனின் கூச்சங்களை உதறி மறுபடியும் அவரின் தமிழில் குளிக்க நினைக்கிறேன்.
இதையெல்லாம் கொஞ்சமும் விரும்பாதவராய் என் ஆசான் என்னை விட்டுச் சென்றுவிட்டார்.
எனக்கு மீனைத் தராது மீன் பிடிக்கக் கற்றுக்கொடுத்த-
என்னை காலத்தின் கைகளில் பாறையாய் அல்லாது
கூழாங்கல்லாய் மாற்றக் காரணமாயிருந்த-
அந்த மஹானுபாவனுக்காய்-
இந்த வரிகளில்
நான் கண்ணீரில் கரைந்து கொண்டிருக்கிறேன்.
-சுந்தர்ஜிபிரகாஷ்
கற்றுக்கொடுத்த ஆசிரியரின் நினைவில் எங்களையும் அழைத்துச்சென்று அவரைக்காணாத எங்கள் மனதிலும் அவரைப்பற்றிய உயர்வான எண்ணங்களை பதிக்கவைத்தமைக்கு நான் ரொம்பவே சந்தோஷப்படுகிறேன் மணி....
தமிழை அழகாக சுவாரஸ்யம் கெடாது ஈடுபாடு வரவைத்து தமிழை ரசிக்க வைத்து ருசிக்கவைத்து தன் கடமையை கூட எத்தனை அழகாக செய்திருக்கிறார்... தலை வணங்குகிறேன் அவருக்கு.....
இப்படி ஒரு ஆசிரியர் படிக்கவைத்தால் கண்டிப்பாக எத்தனை மாணாக்கர்கள் உன்னைப்போலவே நலம்பெற்றிருக்கிறார்கள் என்று அறியத்துடிக்கிறது மனம்.....
அருமையான பதிவினைத்தந்து ஆசிரியர்களுக்கு உயர்வை தந்த மணிக்கு என் அன்பு நன்றிகள்....
தமிழை அழகாக சுவாரஸ்யம் கெடாது ஈடுபாடு வரவைத்து தமிழை ரசிக்க வைத்து ருசிக்கவைத்து தன் கடமையை கூட எத்தனை அழகாக செய்திருக்கிறார்... தலை வணங்குகிறேன் அவருக்கு.....
இப்படி ஒரு ஆசிரியர் படிக்கவைத்தால் கண்டிப்பாக எத்தனை மாணாக்கர்கள் உன்னைப்போலவே நலம்பெற்றிருக்கிறார்கள் என்று அறியத்துடிக்கிறது மனம்.....
அருமையான பதிவினைத்தந்து ஆசிரியர்களுக்கு உயர்வை தந்த மணிக்கு என் அன்பு நன்றிகள்....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|