புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 4 I_vote_lcapகர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 4 I_voting_barகர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 4 I_vote_rcap 
56 Posts - 50%
heezulia
கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 4 I_vote_lcapகர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 4 I_voting_barகர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 4 I_vote_rcap 
47 Posts - 42%
T.N.Balasubramanian
கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 4 I_vote_lcapகர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 4 I_voting_barகர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 4 I_vote_rcap 
4 Posts - 4%
mohamed nizamudeen
கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 4 I_vote_lcapகர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 4 I_voting_barகர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 4 I_vote_rcap 
3 Posts - 3%
D. sivatharan
கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 4 I_vote_lcapகர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 4 I_voting_barகர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 4 I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 4 I_vote_lcapகர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 4 I_voting_barகர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 4 I_vote_rcap 
1 Post - 1%
Shivanya
கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 4 I_vote_lcapகர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 4 I_voting_barகர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 4 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 4 I_vote_lcapகர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 4 I_voting_barகர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 4 I_vote_rcap 
249 Posts - 49%
ayyasamy ram
கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 4 I_vote_lcapகர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 4 I_voting_barகர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 4 I_vote_rcap 
198 Posts - 39%
mohamed nizamudeen
கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 4 I_vote_lcapகர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 4 I_voting_barகர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 4 I_vote_rcap 
20 Posts - 4%
T.N.Balasubramanian
கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 4 I_vote_lcapகர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 4 I_voting_barகர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 4 I_vote_rcap 
12 Posts - 2%
prajai
கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 4 I_vote_lcapகர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 4 I_voting_barகர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 4 I_vote_rcap 
10 Posts - 2%
சண்முகம்.ப
கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 4 I_vote_lcapகர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 4 I_voting_barகர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 4 I_vote_rcap 
9 Posts - 2%
jairam
கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 4 I_vote_lcapகர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 4 I_voting_barகர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 4 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 4 I_vote_lcapகர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 4 I_voting_barகர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 4 I_vote_rcap 
4 Posts - 1%
Jenila
கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 4 I_vote_lcapகர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 4 I_voting_barகர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 4 I_vote_rcap 
4 Posts - 1%
Rutu
கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 4 I_vote_lcapகர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 4 I_voting_barகர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 4 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்ணன் என் காதலன் - வேணி மோகன்


   
   

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 18, 2011 10:44 am

First topic message reminder :

கர்ணன் என் காதலன் - முகவுரை

மகாபாரதத்தில் ஈடு இணை அற்ற வீரனாய் நாம் அறிந்த கர்ணனை பற்றிய என் பதிவு இது. ஒன்றா, இரண்டா அவன் சிறப்பு. ஈகைக்கும், நட்புக்கும் அவன் தந்த மதிப்பு.. செய்நன்றி மறவாத அவனது பண்பு, தன்னிலே தான் கொண்ட நம்பிக்கை, பிற உயிரையும் தன் உயிராய் நினைக்கும் பாங்கு.

வாக்கு மாறாமை, அத்துணைக்கும் மேலே, இணையற்ற வீரம், என்னிலைக்கு போயினும் தன்னிலை மறவாத நேர்மை என இன்னும் உண்டு ஆயிரம்.

சிறு வயது முதலே, என்னை கவர்ந்தவன், வீரம், ஈரம், கம்பீரம், கொடை, ஆண்மை எனும் சொற்களுக்கு நான் உருவேற்றி இருந்த உருவம் கர்ணன். அதிலும் நடிகர் திலகம் நடிப்பில் கர்ணன் படம் பார்த்த போது, கச்சிதமாய் கர்ணனுக்குள் அவர் பொருந்திப் போனார்.

அந்தப் படமும் ஒரு காரணம் தான் கர்ணன் மீதான என் காதலுக்கு.

பிறந்தது முதலே விதியால் வஞ்சிக்கப்பட்டு, பல அவமானங்களுக்கு இடையே வளர்ந்தாலும் தன் திறமையை பிறர் புகழ வளர்த்துக் கொண்டவன். என் வாழ்க்கையில் கர்ணனை ஒரு முன் உதாரணமாய் கொண்டு நான் வாழ இன்னும் இருக்கின்றன நிறைய விஷயங்கள்

நிகரற்ற அந்த தூய வீரனைப் பற்றி நான் அறிந்த தகவல்களை உங்களுடன் பகிர விருப்பம். படித்து உங்கள் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள். தவறு இருப்பின் சுட்டிக் காட்டுங்கள்.

ஏற்கனவே நிகழ்ந்தது என சொல்லப்பட்ட நிகழ்வுகளும், கூட ஆங்காங்கே என் கற்பனையும் கலந்து நான் சொல்லப் போகும் கர்ணனின் கதைக்கு, உங்களை அன்புடன் அழைக்கிறேன்.
__________________
நட்புடன்,
வேணி மோகன்




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 18, 2011 11:19 am

பகுதி இருபத்தி ஏழில் ஒன்று – சூதாட்டம் – இறுதிப்பகுதி :

அனைவரும் கூடி இருந்த சபையில், ஆடை இழுத்து அவமானப் படுத்தப்பட்டாள் திரௌபதி. பின்னர் என்ன நேர்ந்தது என்பதைக் காண்போம்.

அவையில் அவளுக்கு நேர்ந்த அவமானத்திற்கு மன்னிப்பு கேட்கிறார் மன்னர் (திருதராஷ்டிரன்)

(அவமானப்பட்டிருக்கும் திரௌபதி நீதி கேட்டு, மன்னர் திருதராஷ்டிரர் முன்னால், மற்றவர்கள் வாய்மூடி மௌனமாய் இருக்கும் போது தன் பக்கத்தைத் தானே எடுத்துச் சொல்லும் நிலையில் நிற்கிறாள்)

மன்னரின் அனுமதியின் பேரில், சகுனியின் சூதை முறியடித்து, தானே சூதாடி, ஐவரையும் சூதில் வெல்வதாயும், அதுவரை ஆடி இழந்த அனைத்தையும், மீண்டும் பாண்டவர்களுக்கே அளித்து, அவர்களை திரும்ப அதே மரியாதையுடன் அனுப்பி வைத்ததாயும் அந்த இணைய தளத்தில் (பிதாவின் கதைகள்) நான் படித்தேன்.

மீண்டும் அடுத்த நாள் அவை கூடுகிறது.

முந்தைய தினத்தின், சூதாட்டத்தில் அரச குமாரர்கள் அத்துமீறல் பலருக்கு பலவாறு பரவி, அவை நிரம்பி வழிகிறது.

சூதாட்டம் என்பது மகிழ்ச்சிக்காய், வெறும் பொழுது போக்காய் மட்டுமே ஆடப் பட வேண்டியது. அதை வினையாக மாற்றியது யார்? என்பன போன்ற ஆராச்சிகளைக் கை விட்டு, மீண்டும் அதே போலே இரு இளவரசர்களும் ஆடட்டும். இதில் தோற்றவர்கள் வனவாசம் போகட்டும் என முடிவு செய்யப்பட்டு, ஆட்டம் மீண்டும் துவங்குகிறது.

இப்போதும் சகுனி, மந்திரம் சொல்லி, துர் தேவதைகளை பகடைக்காயில் கட்டி இருக்கிறான்.

இந்த சூதில் தோற்றால், தன் தலையை தானே கொய்து கொள்வதாக, துரியோதனனுக்கு வாக்கு கொடுத்திருந்தார்.

அந்த தேவதைகளை விடுவிக்கும் பொருட்டும், சகுனியின் உயிரை காக்கும் பொருட்டும், யுதிர்ஷ்டிரர், வெல்லும் வாய்ப்பு இருந்தும் தோற்கிறார் சூதில்.

ஒத்துக்கொண்ட முறைப்படி, பன்னிரு ஆண்டுகள் வனவாசமும், ஒரு வருடம் அஞ்ஞாதவாசமும் செய்ய வேண்டும். அந்த ஒரு வருடத்தில் அவர்கள் வெளிப்பட்டால் மறுபடியும் வனவாசம் என்றும் ஏற்பாடு செய்யப்பட்டது. அதுவரை இந்திர பிரஸ்தம் அஸ்தினாபுரத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும். தருமர் திரும்ப வந்தவுடன் அவரிடம் ஒப்படைக்கப்படும் எனவும் முடிவு செய்யப்படுகிறது.

பகுதி இருபத்தி ஏழில் இரண்டு : வனவாசம் :

பாண்டவர் வனவாச சேதி அறிந்து, அஸ்தினாபுர மக்கள் அழுது..துடித்தனர்..அவர்களுடன் காடு செல்லவும் முயன்றனர். தருமர் அவர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு கிளம்பினார்.

வனத்திலும் அவர்களைக் காண, ரிஷிகளும் மற்றவரும் வந்த வண்ணம் இருந்தனர். அவர்களுக்கு உணவளிக்க முடியாது வருத்தம் மிகக் கொண்ட யுதிஷ்டிரர், மற்றும் பாஞ்சாலி, சூரியனை வேண்ட, அட்சய பாத்திரம் கிடைத்தது.

சகோதரர்களுக்கு போரில் விருப்பம் இருந்தாலும், தருமரின் சொல்லுக்கு பணிந்து வனவாசத்தில் இருந்தனர். அப்போது அங்கு வரும் வியாசர், இந்த பதிமூன்று வருடங்கள் வெறும் தவக்கோலம் பூண்டு இருத்தல் மட்டும் போதாது.

துரியோதனன், தன் பலத்தை பெருக்கிக் கொள்வான். ஏற்கனவே வலிமை வாய்ந்த, பீஷ்மர், துரோணர், கர்ணன் முதலானோர் அவன் பக்கத்தில் உள்ளனர். எனவே நீங்களும் உங்கள் பலத்தை அதிகரிக்க முயற்சி செய்யுங்கள். நான் 'பிரதிஸ்மிருதி' என்னும் மந்திரத்தை சொல்லித் தருகிறேன்.அர்ச்சுனன் இமயம் சென்று..இம் மந்திரத்தை உச்சரித்துச் சிவபெருமானையும்,தேவேந்திரனையும், திக்குப் பாலகர்களையும் வேண்டித் தவம் செய்வானாக.சிவபெருமான் பாசுபதக்கணையை நல்குவார்.அவ்வாறே பிறரும் சக்தி வாய்ந்த கருவிகள் பலவற்றை அளிப்பார்கள்'என்று கூறி மறைந்தார்.

அது போலவே சென்று, அனைத்துக் கலைகளையும் மேலும் நன்கு கற்று நிகரற்ற வீரனாய் அர்ஜூனன் திகழ்ந்தான். அவ்வாறே ஆன்ம பலத்திலும் சிறந்து இருந்தான். அதனாலேயே ஊர்வசியிடம் “பேடியாகப் போவாய்” என சாபம் பெற்றான். இவ்வாறே அவன் தேவலோகத்தில் வசித்து வந்தான்.

பீமனும், திரௌபதியின் விருப்பம் காரணமாக “சௌகந்தம்” எனும் ஆயிரம் இதழ் கொண்ட மலரை எடுத்து வரும் பொருட்டு சென்று அங்கே அனுமனை சந்திக்கிறார். அஞ்சனை மைந்தனால் ஆலிங்கனம் செய்யப்பட்டு புதியதோர் ஆற்றலும், உன், எதிரிகளால் உன்னை எதுவும் செய்ய முடியாது எனும் வரமும் பெறுகிறான் பீமன்.

அர்ச்சுனனை பிரிந்த சகோதரர்கள் அவரை மீண்டும் எப்போது காண்போம் என்றிருந்தனர்.அப்போது ..இந்திர உலகத்திலிருந்து ஒரு தேர் வந்தது.அதில் வந்திறங்கிய அர்ச்சுனன் ...தன் தேவலோக அனுபவங்களை ...சிவபெருமானிடம் பாசுபதக்கணை பெற்றது...நிவாத கவசர்களைக் கொன்றது..காலக்கேயர்களை அழித்தது என எல்லாவற்றையும் சொன்னான்.அனைவரும் மகிழ்ந்தனர்.

இந்நிலையில் வனவாசம் பத்து வருடங்கள் ஓடிவிட்டது..மீதம் இரண்டு ஆண்டுக்காலம் அவர்கள் காம்யகம் முதலிய வனங்களில் சஞ்சரித்தனர்.

பல திருத்தலங்களுக்குச் சென்று திரும்பிய அந்தணன் ஒருவன்...காம்யக வனத்தில் பாண்டவர்களை சந்தித்து அவர்களது நிலைமையை அறிந்தான்.அவன் அஸ்தினாபுரம் சென்று திருதிராட்டினனைக் கண்டு பாண்டவர்களின் மேன்மையைக் கூறினான்

காட்டில் பாண்டவர் நிலை அறிந்த துரியோதனன் கவலையுற்றான்.பதின்மூன்று ஆண்டுகளில் செயலிழந்து போவார்கள் என எண்ணியது தவறு என எண்ணினான்.

சகுனி..துரியோதனனிடம்..'நாமும் காட்டிற்குச் சென்று பாண்டவர் நிலையறிந்து..நம் செல்வச் சிறப்பையும் காட்டி வருவோம்' என்றான்.

கானகம் சென்று, அங்கே பாண்டவர்களின் தங்குமிடம் அருகே கூடாரம் இட்டு தங்கி இருந்தனர்.

அருகில் இருந்த தடாகத்தில்..கூட்டம் கூட்டமாக கந்தர்வர்கள் வந்து நீராடுவது..கௌரவர்களுக்கு இடையூறாக இருக்க..கந்தர்வர்களை உடனடியாக விலகுமாறு..துரியோதனன் கட்டளையிட்டான்.

இருவருக்கும் போர் மூண்டது. இதில், கௌரவர்கள் தோல்வியுற, அவர்களை கைகளைக் கட்டி இழுத்துச் சென்றனர் கந்தர்வர்கள்.

அப்போதும் பகையை மனதில் கொள்ளாது, அவர்களை போராடி விடுவித்தனர் பாண்டவர்கள்.

அங்கே ஒருநாள், பாண்டவர்கள் அனைவரும் வெளியே சென்றிருக்க, அவ்வழியே சென்ற ஜயத்ரதன் திரௌபதியின் அழகில் மயங்கி கண்டவுடன் காதல் கொள்கிறான். பாஞ்சாலி அதை மறுக்க, அவன் விடாது இவளை வற்புறுத்தி, அவளை கவர்ந்து செல்கிறான். திரும்ப வந்த பாண்டவர்கள் இவனுடன் போரிட்டு, பீமன் அவனைக் கொல்லப் போகையில் தருமர் அவனை விட்டு விடச் சொல்கிறார்.

அவமானம் அடைந்த ஜயத்ரதன், சிவனைக் குறித்து கடும் தவம் புரிந்து, பாண்டவர்களை போரில் வெல்ல வேண்டும் எனக் கோருகிறான். கண்ணன் துணை இருப்பதால், அவர்களை வெல்ல முடியாது. வேண்டுமானால், ஒரு நாள் அவர்கள் அனைவரையும் எதிர்த்து நிற்கும் ஆற்றலை அளிக்கிறேன் என வரம் அருளி மறைந்தார். இவன்தான் 13ம் நாள் போரில் வீரன் அபிமன்யுவைக் கொன்றவன்

பன்னிரண்டு கால வனவாசம் முடியும் தருணம் நெருங்கியது. அதற்குள் பாண்டவர்களுக்கு ஒரு சோதனை வந்தது. வேள்விக்கு உதவும், அரணியுடன் கூடிய கடைகோல் ஒன்றை முனிவர் ஒருவர் இழந்தார். அது ஒரு மானின் கொம்பில் ஒட்டிக்கொள்ள, மருண்ட மான்..அதனுடன் ஓட்டம் பிடித்தது. தமது வேள்வி தடைபடாமல் இருக்க..அதை மீட்டுத்தரும்படி, பாண்டவர்களை அம்முனிவர் கேட்டார்.

மானைத் தொடர்ந்து போய், அந்த கடைகோலை கண்டுபிடிக்க இயலாது, நச்சுப் பொய்கையில் நீர் அருந்தி, ஒருவர் பின் ஒருவராக உயிர் துறந்து, பின்னர் தருமர் அந்த யட்சனுக்கு பதில் கூறி, அனைவரையும் உயிருடன் பெற்ற நம் அனைவருக்கும் தெரிந்த கதை தான்.

ஓராண்டுகால அஞ்ஞாத வாசத்தை எப்படி நிறைவேற்றுவது என ஆலோசித்த பாண்டவர்கள், அதற்கு விராட நாடே ஏற்றது என முடிவு செய்தனர்.

இதில் விருப்பம் இல்லாத அர்ஜூனன், நீங்கள் ராஜசூய யாகம் செய்த மன்னர், இன்னொரு மன்னரிடம் அடிமையாய் இருப்பதா என மறுத்தான்.

அப்போது தருமர்..'தம்பி வருந்தாதே..கங்கன் என்னும் பெயருடன் துறவுக் கோலம் பூண்டு..விராட மன்னனுக்கு ஆசி கூறும் உயர் நிலையில் இருப்பேன்' என்றார்.

பின் ஒவ்வொருவரும் எப்படி மாறுவேஷத்தில் இருப்பது எனப் புலப்படுத்தினர்.

தான் சமையல்கலையில் வல்லவன் என்றும், மடைப்பள்ளியைச் சார்ந்து வல்லன் என்னும் பெயருடன் சுவையான உணவு மன்னனுக்கு அளிக்கும் பணியில் ஈடுபடுவேன்...என்றான் பீமன்.

தான் இந்திரலோகத்தில் பெற்ற சாபத்தை பயன்படுத்திக் கொள்ளப் போகதாகவும்..அதன்படி 'பேடி' வேஷம் தாங்கி, பிருகன்னளை என்ற பெயருடன்..அரசகுமாரிக்கு நடனம், இசை ஆகியவை கற்றுத் தரும் பணியில் ஈடுபடப் போவதாக அர்ச்சுனன் கூறினான்.

தான் குதிரை இலக்கணங்களை அறிந்திருப்பதால், தாமக்கிரந்தி என்ற பெயரில், குதிரைகளை பாதுகாப்பாக வளர்க்கும் பணியில் ஈடுபடப் போவதாக நகுலன் கூறினான்.

தான் தந்திரிபாலன் என்ற பெயரில், மாடுகளைப் பார்த்துக் கொள்ளும் பணியில் ஈடுபடப்போவதாக சகாதேவன் உரைத்தான்.

தான் சைரந்தரி என்னும் பெயருடன் மன்னன் மனைவிக்கு ஒப்பனை செய்யும் பணியில் ஈடுபடுவேன் என்றாள் திரௌபதி.

பின், தங்கள் ஆடை, மற்றும் ஆயுதங்களை வைக்க இடம் தேடி, மக்கள் நடமாட்டம் அற்ற ஒரு சுடுகாட்டில், ஓங்கி வளர்ந்த ஒரு வன்னி மரத்தின் உச்சியில் இருந்த பொந்தில் அனைவற்றையும் வைத்தனர்.

பின்னர் தருமர் துர்க்கையை நோக்கி தியானம் செய்ய, துர்க்கையும் காட்சி அளித்து, அஞ்ஞாத வாசம் நல்லபடி நடந்தேறும் என்றும், பின் போரில் வெற்றியும் கிடைக்கும் என்றும் வரம் அளித்து மறைந்தது.

தருமருக்கு, தன் தெய்வீகத் தந்தையின் அருளால் தனக்கு வேண்டிய கோலம் தானாகவே வந்தமைந்தது. அதைப்போலவே..மற்றவர்கள் தோற்றமும்..அவரவர்கள் நினைத்தபடி மாறினர்.

அனைவரும் அவர் அவர் ஏற்றுக் கொண்ட வேலையை திறம்பட செய்தனர். பத்து மாதங்கள் அஞ்ஞாத வாசம் கழிந்தது. பின் ஒரு நாள்:

அரசி சுதேட்சணைக்கு தம்பி ஒருவன் இருந்தான். அவன் பெயர் கீசகன். அவன் அந்த நாட்டு படைத்தளபதியும் ஆவான். அவன் ஒரு நாள்..அரசியைக் காண வந்த போது, சைரந்தரியைக் கண்டான். ஆசைக் கொண்டான். தன் இச்சைக்கு பணியுமாறு கேட்டான்.

வீண் தொல்லை தராதே! என் கந்தர்வக் கணவர்கள் உன்னை கொன்று விடுவார்கள்' என சைரந்தரி எச்சரித்தாள்.

காதல் மயக்கம் தீராத அவன், அரசியிடம் சென்று, அவ்வேலைக்காரியை எனக்கு பணியச் சொல் என்றான். தம்பி, அவள் அடைக்கலமாய் வந்தவள். அவளுக்கு தீங்கு இழைத்தால், அவளின் கந்தர்வக் கணவர்கள் உன்னைக் கொன்றுவிடுவார்கள்' என்றாள்.

ஆனால் அவன் பயப்படவில்லை. காதல் நோயால் மயங்கினான். வேறு வழி தெரியாத அரசி, சைரந்தரியிடம் கீசகன் வீட்டிற்கு உணவு கொண்டு செல்ல பணித்தாள்.

'நீ தான் போக வேண்டும்" என அரசி கடுமையாக ஆணையிட்டாள்.

சைரந்தரியும் சென்றாள். அவள் கையைப் பிடித்து இழுத்து..அவளை கீசகன் அணைக்க முயன்றான். ஓடிய அவளை எட்டி உதைத்தான். அரசமண்டபத்திற்கு வந்துவிட்டார்கள் அவர்கள். "இந்த அநீதியைக் கேட்பார் இல்லையா?' என கதறினாள். விராட மன்னன் உட்பட அனைவரும் மௌனமாய் இருந்தனர்.

பீமன் அவளை தனியாக சந்தித்து ஒரு யோசனைக் கூறினான். அதன்படி சைரந்தரியும், கீசகன் ஆசைக்கு இணங்குவது போல நடித்து, அவனை நடனசாலைக்கு வரச் சொன்னாள்.

அங்கே கீசகனை காலை மிதித்துக் கொன்றான் பீமன். கீசகன் கொல்லப்பட்ட சேதி கேட்ட அவன் சகோதரர்கள் சைரந்தரியைக் கொல்லவர, பீமன் அவர்களையும் கொன்றான்.

விராடன், இதற்கெல்லாம் சைரந்தரிதான் காரணம் என அவளை வெளியேற்றி விடுமாறு அரசியிடம் கூறினான்.

சைரந்தரி, அரசியிடம் இன்னும் ஒரு மாதம் பொறுத்திருக்கக் கூறினாள். 'கந்தர்வர்களால் இனி யாருக்கும் தீங்கு நேராது..நன்மையே நடக்கும்..இது சத்தியம்' என்றாள். அரசியும் சரி என அனுமதித்தாள்.

பதிமூன்று ஆண்டு காலம் முடியும் நேரம் நெருங்குகையில், துரியோதனன், இவர்களை எப்பாடு பட்டாவது கண்டு பிடித்து விட்டால், மேலும் ஒரு பதிமூன்று ஆண்டுகள் இவர்களை வனத்திலே இருக்க வைத்து விடலாம் என நாடு முழுதும் ஒற்றர்களை அனுப்புகிறான். அப்போதுதான் கீசகன் பற்றி அரிய நேருகிறது. நிச்சயம், பீமனால் தான் அவன் இறந்திருப்பான்.

விராட தேசத்தின் மீது நாலா புறமும் இருந்து போர் தொடுத்தால், நிச்சயம் அவர்கள் வெளிப்படுவார் என பேரும் படை திரட்டி, அங்கே போர் தொடுக்கச் செல்கின்றனர்.

அப்போது பிருகன்னளை வேடத்தில் இருக்கும் அர்ஜூனன், தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறான். பீஷ்மர், துரோணர், கர்ணன் போன்ற அனைவரையும் தோற்கடித்து, வெற்றியை உத்திரனுக்கு (விராட தேச இளவரசன்) உரித்தாக்குகிறான்.

அதில் பாண்டவர்கள் வெளிப்பட்டதாக, துரியோதனன் கூற, தருமர் அதை மறுத்து, ஒரு வருடம் முடிந்து பின்னரே தங்களை தாங்கள் வெளிப்படுத்தியதாக மறுக்கிறார். இதை பீஷ்மரும் அறிவார் எனக் கூறுகிறார்.

பின்னர், விடார தேச அரசர், தன் மகள் உத்திரையை அர்ச்சுனனுக்கு மணம்’ செய்ய விழைய, அர்ஜூனன், அவளை தன் மகள் போல ஒரு வருடம் நடத்தியதால், அவளை தான் மணமுடிக்க இயலாது, எனக் கூறி, தன் மகன் அபிமன்யுவுக்கு மணமுடிக்க ஏற்பாடு செய்கின்றனர்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 18, 2011 11:21 am

பகுதி இருபத்தி ஏட்டு : தூதும் அதன் முடிவும்

பாண்டவர்களின் வனவாசம் முடிகிறது. திட்டமிட்ட படி விராட தேச இளவரசி உத்திரைக்கும், அர்ஜுனனின் புத்திரன் அபிமன்யுவுக்கும் திருமணம் கோலாகலமாய் நடக்கிறது. திருமணத்திற்கு அழைக்கப்பட்ட மன்னர்கள் பலர் இருந்தனர்.

அவர்கள் நடுவே, வனவாசம் முடிந்தது. இனி ஆக வேண்டியது என்ன எனும் ஆலோசனை நடக்கிறது. கண்ணன், துரியோதனன் வஞ்சனையால் நாட்டை கவர்ந்து, வனவாசம் போக நிபந்தனை விதித்தான். அதை தவறாது நிறைவேற்றினர் பாண்டவர்கள். இனி ஒப்புக் கொண்ட படி நாட்டின் பாதியை தரக் கோரி யாரையேனும் தூது அனுப்ப வேண்டும் எனக் கூறினார்.

ஆனால், கண்ணனின் இக்கருத்தை பலராமர் ஏற்கவில்லை. சூதாட்டத்தில் தோற்ற நாட்டை திரும்பவும் தருமாறு வற்புறுத்துவது நியாயமில்லை. தூதுவன் நயமாக பேசிப்பார்க்கலாம். கொடுத்தால் பெறலாம். ஆனால் அதற்காக போர் கூடாது' என்றார்.

இந்த முக்கிய பிரச்னையில் பலராமரின் கருத்து ஏற்றத்தக்கதல்ல. பலநாட்டு மன்னர்களின் உதவி பெற வேண்டும். முதலில் கேட்போர்க்கே உதவுதல் மன்னரின் இயல்பாகும். ஆகவே உடன் செயல்பட வேண்டும். துரியோதனனிடம் செல்லும் தூதுவன் திறை வாய்ந்தவனாய் இருக்க வேண்டும் என்றார் துருபதன்.

துருபதனின் கருத்து ஏற்கப்பட்டது.

பிற மன்னர்களின் உதவியைப் பெறுவதில் துரியோதனன் முனைப்புக் காட்டினான்.

கண்ணனைப் பார்க்க துவாரகைக்குச் சென்றான். அதே நேரம் அர்ச்சுனனும் சென்றான். அப்போது கண்ணன் உறங்கிக் கொண்டிருந்தார். கண்ணனின் தலைப்பக்கம் துரியோதனனும், கால் பக்கம் அர்ச்சுனனும் அமர்ந்திருந்தனர். கண்விழித்துப் பார்த்த பரமன் கண்களில் முதலில் அர்ச்சுனனே தென்பட்டான். அர்ச்சுனன் பரமனின் உதவியைக் கேட்டான். துரியோதனனும் அதே சமயம் கேட்டான். நானே முதலில் வந்தேன் என்றான் துரியோதனன்.

ஆனால் நான் பார்த்தனைத்தான் முதலில் பார்த்தேன் என்றார் கண்னன். ஆயினும் என் உதவி இருவருக்கும் உண்டு. என் உதவியை இரண்டாகப் பிரிக்கிறேன். ஆயுதம் இல்லா நான் ஒரு பங்கு, ஆயுதம் ஏந்தி கடும் போர் புரியும் அக்குரோணிப்படைகள் *** ஒரு பங்கு. அர்ச்சுனன் இளையவனாக இருப்பதால், அவன் விரும்பியது போக எஞ்சியது உனக்கு' என்றார் கண்ணன்.

அர்ச்சுனன் கண்ணன் மட்டுமே போதும் என்றான். தனக்குக் கிடைத்த படைப் பெருக்கம் குறித்துப் பெரிதும் மகிழ்ந்தான் துரியோதனன்.

பின், பலராமரிடம் சென்று உதவிக் கோரினான் துரியோதனன். பலராமரோ, கண்ணனுக்கு எதிராக என்னால் செயல் பட முடியாது. அதே சமயம் நான் பாண்டவர் பக்கம் போக மாட்டேன். நடுநிலைமை வகிப்பேன். போர் நடக்கையில் தீர்த்தயாத்திரை செல்வேன்' என்று கூறிவிட்டார்.

மத்ர தேச மன்னன் சல்லியன். பாண்டுவின் மனைவியான மாத்ரியின் சகோதரர். நகுல, சகாதேவர்களின் தாய் மாமன். பாண்டவர்கள் அவனை தங்கள் பக்கம் இருக்க வேண்டினர். அவனும் அதையே விரும்பினான். பெரும் படையுடன், பாண்டவர்கள் இருக்குமிடம் சென்றான்.

அவன் செல்லும் வழியெல்லாம், பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. படைவீரர்களுக்கு சிறந்த உணவு தரப்பட்டது. இவை யாவும், துரியோதனன் ஏற்பாடாகும். இது அறியா சல்லியன், இவை தருமரால் செய்யப்பட்டது என எண்ணினான். இது துரியோதனனுக்கு தெரிய வந்தது. அவன் ஓடோடி வந்து, சல்லியனிடம் எங்கள் வரவேற்பை ஏற்றமைக்கு நன்றி என்றான்.

துரியோதனின் சூழ்ச்சி வேலை செய்தது. சல்லியன் 'இவ்வளவு உபசரிப்பு அளித்தமைக்கு என்ன கைமாறு செய்வேன்' என்றான்.

வரும் போரில் தாங்கள் எங்களுக்கு உதவிட வேண்டும், என்றான் துரியோதனன். சல்லியன் தர்ம சங்கடத்தில் சிக்கிக் கொண்டான். ஆயினும், துரியோதனனுக்கு தன் ஆதரவு உண்டு என்றான்.

பாண்டவர்களை திட்டமிட்டபடி சந்தித்த சல்லியன், இடை வழியில் நடந்தவற்றைக் கூறினான். பாண்டவர்கள் அதிச்சியுற்றனர்.

என்ன செய்வது என அறியாத தருமர், ஒருவாறு மனம் தேறி, சல்லியனிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார். வரவிருக்கும் போரில் கர்ணனுக்கு தேரோட்டும் நிலை ஏற்படின், அர்ச்சுனனின் பெருமையை, அவ்வப்போது அவனுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதே அவ்வேண்டுகோள். பதினேழாம் நாள் போரில் சல்லியன் இதை நிறைவேற்றியதை பின் காண்போம்.

பாண்டவர்களின் தூதுவன், பாஞ்சால நாட்டுத் துருபதனின் புரோகிதன், அஸ்தினாபுரம் அடைந்தான். பாண்டவர்கள் பதின்மூன்று ஆண்டுகள், காட்டிலும், நாட்டிலும், நிபந்தனைப்படி வாழ்ந்து விட்டனர். அவர்களிடம் நாட்டை ஒப்படைப்பதே சரியான நீதியாகும். அப்படி அளிக்காவிடின் யுத்தம் தவிர்க்கமுடியாது என்றான்.

தூதுவன் உரை கேட்டுக் கர்ணன் கோபமுற்றான். பாண்டவர்களை வெற்றிக் கொள்ளத் தன்னால் முடியும் என்றான்.

கர்ணன் சொன்னதை பீஷ்மர் ஏற்கவில்லை. திருதிராட்டிரன் தூதுவனை திரும்பிப் போக பணித்தான்.

பின், திருதிராட்டிரன் கௌரவர்கள் கருத்தை பாண்டவர்களுக்குத் தெரிவிக்க சஞ்சயனை தூதுவனாக பாண்டவர்களிடம் அனுப்பினான். இந்திரப்பிரஸ்தத்தை மட்டுமல்ல, ஒரு கையளவு நிலம் கூட பாண்டவர்க்கு தரமுடியாது. போர் வருமேயாயின்..பாண்டவர் தோல்வியைத் தழுவுவர்.' என்றான் சஞ்சயன் பாண்டவர்களிடம்.

போரில் தருமருக்கு விருப்பமில்லை. ஆனாலும், நாட்டைத் திருப்பித் தராவிடின், போர் தவிர வேறு வழியில்லை என அறிந்துக்கொண்ட சஞ்சயன் அதை திருதிராட்டிரனிடம் வந்து தெரிவித்தான்.

திருதிராட்டிரன், விதுரரை அழைத்து அவர் கருத்தைக் கேட்டான். விதுரர் நீதிகளைக் கூறினார். பாண்டவர்களை வீரம் மட்டும் காக்கவில்லை. அவர்கள் போற்றும் தர்மம்தான் அவர்களின் உன்னத படை என்றார். மேலும், துரியோதனனிடம், அது இல்லை என்றும், அவன் மகத்தான துன்பம் அடையப் போகிறான் என்றும் உரைத்தார்.

திருதிராட்டிரன், விதுரர் கூறியது உண்மை என்பதை அறிந்தாலும், புத்திரப் பாசத்தால் மதி இழந்து தடுமாறினார்.

அடுத்த நாள் சபையில் இது தெரிவிக்கப் பட்டது.

பீஷ்மர், இன்னமும் காலம் கடத்தாமல் பாண்டவர்களின் நாட்டை திருப்பிக் கொடுங்கள். இல்லையேல் யுத்தத்தில் அனைவரும் மாண்டுவிடுவோம் என்றார்.

வழக்கம் போல பீஷ்மர் உரையை கர்ணன் ஏற்கவில்லை. இவர் நம்முடன் இருந்தாலும், இவர் மனம் பாண்டவர் வசமே உள்ளது. யுத்தம் வந்தால் நான் ஒருவனே பகைவர்கள் அனைவரையும் அழிப்பேன்' என்றான்.

கர்ணனைக் கண்டித்தார் பீஷ்மர். உன் வீரம் அனைவருக்கும் தெரியும், தற்பெருமை கொள்ளாதே என்றார்.

துரியோதனனிடம், பிடிவாதத்தை விடுமாறு திருதிராட்டிரன் கூறியும், அவன் கேட்கவில்லை.

தந்தையே! நான் அனைத்து விஷயமும் அறிந்தவன். என்னை தடுக்காதீர்கள். போர் தொடங்கட்டும் பார்ப்போம். என்னிடம் 11 அக்ரோணி படை உள்ளது. அவர்களிடம் 7 மட்டுமே உண்டு. அவர்களுக்கு வெற்றி கிடைக்கும் என நான் எண்ணவில்லை. அதனால்தான் 5 ஊர்கள் போதும் என கெஞ்சிக் கேட்கிறார்கள். ஐந்து ஊசிமுனை அளவு நிலம் கூட அவர்களுக்கு நான் தரமாட்டேன் என்று கூறி அவையை விட்டு வெளியேறினான்.

சஞ்சயன் தூதாக வந்து சென்றபின், தருமர், எதற்கும் துரியோதனனுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்து பார்ப்போம் என்றார். மீண்டும் தூது செல்ல கிருஷ்ணன் தயாரானார்.

ஆனால் பீமன் கொதித்து எழுந்தான். சமாதானம் வேண்டாம். போர்தான் வேண்டும் என்றான். அர்ச்சுனன், நகுலன், சஹாதேவனும் சமாதான முயற்சியை விரும்பவில்லை. திரௌபதியும், அழுதவாறே துரியோதனன் சபையில் தான் பட்ட வேதனையை நினைவூட்டினாள்.

கிருஷ்ணர் அஸ்தினாபுரம் செல்லப் புறப்பட்டார். இதை அறிந்த திருதிராட்டினன், மகிழ்வது போல நடித்தான். விதுரரை அழைத்து தேர், யானை, குதிரை ஆகியவற்றையும் ரத்தினக் குவியல்களையும் பகவானுக்கு பரிசுப் பொருள்களாக வழங்க வேண்டும். என் நூறு புத்திரர்களும் கண்ணனை எதிர்கொண்டு அழைக்க வேண்டும். வரவேற்பு பிரமாதமாக இருக்க வேண்டும் என்றெல்லாம் கூறினான்.

அவன் கருத்தை அறிந்த விதுரர், இத்தகைய ஆடம்பரங்களை கண்ணன் விரும்ப மாட்டார் என்றான்.

அஸ்தினாபுரத்தை அடைந்த கண்ணனும், இவ் வரவேற்புகளை பொருட்படுத்தாது, திருதிராட்டினன் மாளிகைக்கு செல்லாது விதுரரின் வீட்டிற்குச் சென்றார். அங்கிருந்த குந்தி அவரை வரவேற்றாள்.

துரியோதனன் கண்ணனை தன் மாளிகைக்கு விருந்தினராக வந்து மகிழ்விக்குமாறு வேண்டினான். ஆனால் கண்ணன் சம்மதிக்கவில்லை. காரியம் நிறைவேறுவதற்குள், தூதுவர் பகைவர் வீட்டில் உண்பது வழக்கமில்லை என்றார்.

கௌரவர், பாண்டவர் இருவருக்கும் நடுநாயகமாக விளங்கும் தாங்கள் ஏன் எங்களை பகைவராய் எண்ணுகிறீர்கள்? என துரியோதனன் கேட்டான்.

அதற்கு கண்ணன், பாண்டவர்கள் தர்மத்தை போற்றி நடக்கிறார்கள். நீ, அந்த தர்மவான்களை அழிக்க எண்ணுகிறாய். நான் எப்போதும் தர்மத்தின் சார்பில் இருப்பவன். தர்மத்திற்கு எதிரி, எனக்கும் எதிரி. அந்தவகையில், நீயும் எனக்கு பகைவன். ஆகவே உன் விருந்தை நான் ஏற்கமாட்டேன் என்றார்.

துரியோதனனின் விருந்தை கண்ணன் மறுத்தாலும், அவனது அவைக்கு தூதுவராய் சென்றார்.

பரந்தாமன் அவையில் நுழைகிறார். அனைவரும் எழுந்து வரவேற்க, அவரை அவமதிக்க வேண்டி, துரியோதனனும், கர்ணனும் மட்டும் எழாமல் இருக்கின்றனர். பரந்தாமன் பாதத்தை சற்றே அழுத்த, துரியோதனன் அவன் ஆசனத்தில் இருந்து கண்ணன் பாதத்தில் வந்து விழுகிறான்.

இதைக் கண்டு கோபம் கொள்கிறான் கர்ணன்

முறைப்படி அனைவருக்கும் வணக்கம் சொல்லி தன் இருக்கையில் அமர்கிறான் கண்ணன்.

திருதிராட்டினனை நோக்கி, துரியோதனனுக்கு அறிவுரைக் கூறி, அவன் அழிவைத் தடுக்குமாறு கேட்டுக் கொண்டார். ஆனால், திருதிராட்டிரன், தன் இயலாமையைக் கூறினான்.

பின் கண்ணன் துரியோதனனைப் பார்த்து பேச ஆரம்பித்தார்.

உனது தந்தையும், மற்றும் அனைத்து சான்றோரும், நீ பாண்டவர்களுடன் சேருவதையே விரும்புகின்றனர். அதைக் கேளாத நீ பெரும் துன்பமடைவாய். பீமனையும், அர்ச்சுனனையும் வென்றாலே, உனக்கு உண்மையான வெற்றி கிட்டும். ஆனால், அவர்களை வெல்ல உன் பக்கம் யாரும் இல்லை. குலத்தை அழித்த பழி உனக்கு வேண்டாம். பாண்டவர்களுக்கு பாதி நாட்டைக் கொடுத்துவிட்டு, அவர்களுடன் இணைந்து வாழ்வாயாக என்றார்.

துரியோதனன் பழைய பல்லவியையே திரும்ப பாடினான். ஊசி முனை அளவு நிலம் கூட தரமுடியாது என்பதில் உறுதியாய் இருந்தான்.

சான்றோர் உரையையும் நீ மதிக்கவில்லை. சமாதானத்தையும் விரும்பவில்லை. இப்படி இருக்கும் நீ போர்க்களத்தில் அழிவது உறுதி என்றார் மாதவன். அவரை ஒத்துப் பேசினார் விதுரர். துரியோதனன், அவர் பிறப்பைக் கேவலப் படுத்தி பேசி விடுகிறான். துரியோதனன் அவ்வாறு பேசக் கண்ட கர்ணன், சொல்லொணாத் துயரம் கொள்கிறான். கோபம் கொண்ட விதுரர் தன் வில்லை எடுத்துக் கொண்டு அவனைக் கொல்ல வருகிறார். கண்ணன் அவரைத் தடுக்கிறான்.

உலகை அழிக்கும் ஆற்றல் கொண்டது உங்கள் வில். கோபம் கொள்ளாதீர். அமைதி அமைதி என்கிறார்.

உண்மைதான் கண்ணா, என் வில்லுக்கு உலகை அழிக்கும் வலு உண்டு.. அது இவனுக்கு பயன்படக் கூடாது. என கோபத்தில் அவரின் விஷ்ணு தனுசுவை உடைத்து எரிந்து விட்டு அவையை விட்டு வெளியேறுகிறார்.

கண்ணன், துரியோதனனுக்காய், பரிதாபப் படுகிறார். யுத்த சமயத்திலா உனக்கு இவ்வாறு நேர வேண்டும்??? என்று.

அதை அலட்சியம் செய்து, என் நண்பன் கர்ணன் இருக்கையில் எனக்கு என்ன கவலை என்கிறான்.

கண்ணன் : நன்கு யோசனை செய்து உன் முடிவில் ஏதும் மாற்றம் இருந்தால் எனக்கு கூறு

துரியோதனன் : இப்போது சொல்லி இருப்பதே நல்ல முடிவுதான்.

கண்ணன் : சரி அப்போது நான் கிளம்ப வேண்டியதுதானே???

திருதிராஷ்டிரர் : சென்று வா கண்ணா. அடுத்த சந்திப்பு??

கண்ணன் : போர் பூமியில்...

கண்ணனை பீஷ்மர், விதுரர், துரோணர், திருதிராட்டிரன், அசுவத்தாமா, விகர்ணன் ஆகியோர் கரம் குவித்து வணங்கி வழி அனுப்பினர்.

கண்ணன், வெளியேறும் பொழுது, கர்ணனுடன் சற்று தனித்து பேச வேண்டும் என அழைக்கிறார். கர்ணனும் செல்கிறான்.

அப்படி என்னதான் பேசிக் கொண்டார்கள்??? அடுத்த பகுதியில்..

************************************************** ********

அக்குரோணிப்படைகள் ***


ஓர் அக்ரோணி படை என்பது:

21870 - தேர்கள் (ரத)
21870 - யானைகள் (கஜ)
65610 - குதிரைகள் (துரக)
109350 - காலாட்படைகள் (பதாதிகள்)
அடங்கியது ஆகும்.

அப்போ பதினெட்டு அக்ரோனிப் படைகள் சண்டை போட்டாங்கன்னா மொத்தம் எத்தனை பேர் தான் போரில் பங்கு கொண்டார்கள்????



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 18, 2011 12:25 pm

பகுதி இருபத்தி ஒன்பதில் ஒன்று : நீயும் ஒரு சத்ரியன்

கர்ணனுடன் தனித்து பேச வேண்டும் என கண்ணன் அழைக்க, என்னவாக இருக்கும் எனும் யோசனையுடன் கர்ணன் செல்ல, அவர்கள் உரையாடல் இனி...

கிருஷ்ணர், கர்ணனை தன் ரதத்தில், தன் அருகே அமர்த்திக் கொள்கிறார். கர்ணனோ, மனதில் நிறைய குழப்பமும், கூடவே கொஞ்சம் சங்கடமும் கொண்டவனாக முள் மேல் இருப்பது போல அமர்ந்திருக்கிறான். கடவுள் ஆனவன், மகாராணி குந்தியின் மருமகன், பாண்டவர்களுக்கு அனைத்துமானவன்.. இவனருகே நான் அமர்வதா??? என உள்ளத்திலே எண்ணங்கள் ஓடுகிறது.

இதை அறிந்த கண்ணன்,

கர்ணா, சங்கடம் வேண்டாம். தேரோட்டியின் மகன் நான் எனும் எண்ணம் உன்னை என்னிடம் இருந்து விலகி இருக்க வைக்கிறதா?? நீ இதுவரை உண்மை என் எண்ணி இருந்தது உண்மை அல்ல.

அதிரதன் மற்றும் ராதா உனை வளர்த்தவர்கள். பெற்றவர்கள் அல்ல.

கர்ணன் : கண்ணா, நானும் அறிவேன் அதை. (விழிகளில் நீர்) பிறப்பரியாதவன் நான். பிறந்த அன்றே எனைப் பேழையில் வைத்து கங்கையில் விட்டு விட்டாள் என் அன்னை.

கண்ணன் : உன் பெற்றோர் யாரென அரிய வேண்டாமா நீ??

கர்ணன் : தந்தை இவர் என தாய் சொன்னால்தான் தெரியும், அவளே யார் என அறியாதவன் நான். என்ன செய்வேன்???

கண்ணன் : பாண்டவர்களின் அன்னை குந்தி தான் உன் தாய். குந்திக்கும், சூரியக் கடவுளுக்கும் பிறந்தவன் நீ.

கர்ணன் : என்ன?? (ஆனந்தமும், கண்ணீரும் ஒன்றை ஒன்று மிஞ்ச தடுமாறுகிறான் கர்ணன்)

கண்ணன் : உண்மை. குந்தி கன்னியாக இருந்த போது, துர்வாசர் தந்த வரத்தை பரிசோதித்து பார்க்கையில் நீ பிறந்தாய். ஊர் உலகம் என்ன சொல்லுமோ என எண்ணி, ஒரு பேழையில் வைத்து, ஆற்றில் விட்டு விட்டாள்.

கர்ணன் : அம்மா... என் அம்மா... குந்தி தேவி. பாண்டவர்கள் என் சகோதரர்கள்... நான் தனியில்லை. நானும் ஒரு ஷத்ரியன். நானும் ஒரு உயர்ந்த குலத்தில் பிறந்தவன். என் பிறப்பில் எந்தக் களங்கமும் இல்லை. என் பிறப்பும் உயர்ந்ததுதான்.

கண்ணன் : ஆம் கர்ணா. நீ குந்தி அத்தையின் மகன்தான். ஆகவே நானும் உன் உறவினன்.

கர்ணன் : மகிழ்ச்சி.. மிக்க மகிழ்ச்சி எனக்கு... எத்தனையோ ஏற்றங்கள் என் வாழ்வில் வந்த போதும், பிறப்பரியா ஒரே குறை, அத்தனைக்கும் அடியில் இருந்து, கண்ணுக்குள் விழுந்த துரும்பாய் எனை வருத்திக் கொண்டே இருந்தது பரந்தாமா. அந்த வருத்தம் போக கரும்பாய் இந்த விவரம் சொன்ன உனக்கு என் கோடி நன்றிகள் இதயத்தில் ஆழத்தில் இருந்து..

கண்ணன் : பாண்டவர்களில் மூத்தவன் நீ. என்னுடன் வா. உன்னை நான் குந்தி அத்தையிடம் அழைத்துச் செல்கிறேன். நீதான் அனைவருக்கும் மூத்தவன், கௌரவர்கள் மற்றும் பாண்டவர்களில். நீதான் அரசுக்கு உரியவன். அரசாளும் உரிமை உனக்குத்தான். என்னுடன் வந்து விடு உன்னை சக்ரவர்த்தியாக்குகிறேன்.

பாண்டவர்கள் சந்தோசம் மிக அடைவர் உன்னை அவர்களின் மூத்த சகோதரன் என்பதை அரிய நேர்கையில். துரியோதனனும், தருமனும், உன்னை மகிழ்ச்சியாய் மன்னனாக ஏற்றுக் கொள்வர்.

யுத்தம் இல்லாது, ரத்தம் சிந்தாது, பல உயிர்கள் இறந்து போகாது இந்தப் பிரச்சனைக்கு ஒரு முடிவு வந்துவிடும்.

கர்ணன் : ஆனாலும்.....

கண்ணன் : உயர் குலத்தவன் கர்ணா நீ. இத்துணை நாளும் ஒரு தேரோட்டியின் மகனாகவே நடத்தப்பட்டாய். போதும் இந்த அவமானம். நீ ஒரு மாமன்னாக இருக்க வேண்டியவன். பாண்டவர்களும், கௌரவர்களும், யாதவர்களும் உன் தாழ் பணிய பவனி வர வேண்டியவன் நீ.

ஆனால், நீயோ, துரியோதனனிடம் யாசகம் பெறும் நிலையில் இருக்கிறாய். வந்துவிடு என்னுடன்.

கர்ணன் : (கண்ணன் பேசியதை கேட்ட கர்ணனுக்கோ, பேச நா எழவில்லை. ஆச்சரியமும், சந்தோசமும், துக்கமும் போட்டி இட, ஒரு கலவையான உணர்வில் அவன் ஆழ்ந்த குரலில் பேசத் துவங்குகிறான்)

குந்தி மாதா என் அன்னை என்றீர். பெற்றதோடு என்னை ஆற்றில் விட்டவர் அவர்.

கண்ணன் : உண்மை, ஆனாலும், உனைக் கண்டேடுப்போர் உனைக் காக்க வேண்டி, அந்தப் பேழையில் பொன்னும், பொருளும், நிறைய இட்டு வைத்தவள். உன் நினைவிலே இதுவரை உயிரை விட்டு வைத்தவள்.

கர்ணன் : ஆமாம். ஆனால், அந்தப் பொன்னையும், மணியையும், இன்று வரை தீண்டிக் கூட பார்க்காது, தங்கள் அன்பைக் கொட்டி என்னை வளர்த்தவர்கள் என் தந்தையும், அன்னையும்.

பாலூட்டி, சீராட்டி, எனைப் பாராட்டி வளர்த்த அன்னையையும், தன் மகனை விட சிறப்பாய், நல்ல ஒரு ஆசானாய் இருந்து, என் ஒவ்வொரு அசைவிலும், முன்னேற்றத்திலும், எனை ஊக்கப் படுத்திய தந்தையையும், என் நலம் ஒன்றே லட்சியமாய்க் கொண்டு வாழும் அந்த அன்பு உள்ளங்களை விட்டு நான் எப்படி வருவேன்??

அன்பாலும், பாசத்தாலும், எனைக் காத்து வளர்த்த பெற்றோரை, நீங்கள் இந்த உலகையே எனக்குத் தருவதாக இருந்தாலும், நான் எப்படி விட முடியும்??

நான் அவ்வாறு செய்வது நியாயமா?? வயதான காலத்தில் அவர்களை தவிக்க விட்டால் அது தர்மமா??

கண்ணன் : இல்லை கர்ணா. அது...

கர்ணன் : அவர்கள் மட்டுமா??? துரியோதனன்... ஈருடல் ஓருயிராய் இருக்கும் அவனை விட்டு நான் எப்படி வருவேன். மொத்த உலகமும் என்னை ஒரு தேரோட்டியின் மகன் என இழிவு படுத்திய போதும், தன்னைப் போலவே என்னை எண்ணியவன். தன் ராஜ்ஜியத்தில் ஒரு பகுதியை எனைக் கண்ட அன்றே எனக்கு உரியதாக்கியவன். தன் புகழ் பாடுவோரையும் என் புகழ் பாட வைத்தவன். என்னை எனக்காகவே மதித்தவன். என் நெஞ்சில் அன்பை விதைத்தவன்

அளவிட முடியாமல் என் மீது அன்பைப் பொழிந்தவன். அன்னையாய், தந்தையாய், எனை ஆறுதல் படுத்தும் நண்பனாய், என் அனைத்துமாய் ஆனவன் அவன். இத்துணை அன்புக்கும் நான் அவனுக்கு என்ன கைம்மாறு செய்வேன். பாண்டவர்களுடன் போர் என்று அறிவித்த போதும், அவன் என்னையே நம்பி இருக்கிறான்.

இந்த சமயத்தில், தான் பாண்டவர்களோடு சேர்ந்தால் அது அவனுக்கு செய்யும் நம்பிக்கை துரோகம் ஆகாதா?? நான் துயரத்தில் இருந்த போது, தோள், கொடுத்து தாங்கி எனை உயரத்தில் வைத்தவன் அவன். அவனை நான் இந்த நேரத்தில் பிரிந்தால், என் மனமே எனைக் கொன்று விடாதா??

அவனே என் தலைவன். அவனே என் உயிர். அவனே என் எஜமானன்.

நான் அவனுடன், அவன் பக்கம் இருந்து போர் புரிவேன். போரில் வென்றால், என் எஜமானரின் கட்டளையை நிறைவேற்றிய ஆனந்தம் அடைவேன். உயிர் நீத்தாலும், நண்பனுக்காய் இறந்தேன் என்பதில் மகிழ்ச்சி மிக அடைவேன்.

நீங்கள் இத்தனை சொல்லியும் உங்கள் பேச்சை மறுக்கும் நிலையில் நான் இருப்பதை எண்ணி வேதனைப் படுகிறேன். மன்னியுங்கள் என்னை.

துரியோதனனை விட்டு என்னால் வர இயலாது. இந்த உண்மையும் போர் முடியும் வரை யாருக்கும் தெரியாமல் இருந்தால், மகிழ்வேன் கண்ணா.

நாம் பின்னர் சந்திப்போம்.

கிருஷ்ணர் : தன் மனதுக்குள் கர்ணனின் நிலை மாறா பண்பை எண்ணி எண்ணி.. சிலாகிக்கிறான். சபாஷ் கர்ணா.. உண்மைக்கும், விஸ்வாசத்துக்கும் வாழும் உதாரணம் நீ... என அவனுள்ளே எண்ணங்கள் ஓட, வெறும் தலையசைப்பில் விடை பெறுகிறான்.

நானும் ஒரு ஷத்ரியன்
பாண்டவர்களில் மூத்தவன்
குந்தி தேவியின் மைந்தன்

குறை சொல்லி என்னை குறுகச் செய்த போது
நிமிர இயலாது என் உடல் இனி ஒடுங்க வேண்டியது இல்லை

நான் யாரைக் கண்டும் ஒதுங்க வேண்டியது இல்லை.
உள்ளுக்குள் நான் உறைய வேண்டியது இல்லை.

என, ஆனந்தமும், முதல் முறையாய், ஏதோ சுவாசிக்க, தன் முழு உயரத்துக்கு நிமிர்ந்து நிற்க தடையாய் இருந்த ஏதோ ஒன்று விலகினார் போல, புரியாது இருந்த ஏதோ ஒன்று விளங்கினார்போலே நெஞ்சம் நிறைந்த மகிழ்ச்சியில் கர்ணன்.


பொன்னை விரும்பவில்லை.
அன்னை விரும்பவில்லை

தம்பிகளையும் விரும்பவில்லை
ஆள் அம்புகளையும் விரும்பவில்லை

மாமன்னர் ஆகலாம் என்றேன்
அதையும் விரும்பவில்லை

நம்பிக்கைக்கு மறு பெயர் நீ
விஸ்வாசத்தின் மறு பெயர் நீ
நட்பின் விஸ்வரூபத்திலும் நீ..

பெற்றவள் யாரெனத் தெரிந்தும்
வளர்த்தவர்களை மறக்காத மாண்பு

அரசாளும் வாய்ப்பு இருந்த போதும்
நண்பனின் அன்புக்கு அடிமையான பண்பு

என அத்தனை சிறப்புகளை உன்னுள்ளே
கொண்டவனடா நீ... கர்ணா...

என கண்ணனும்.. இரு வேறு மனநிலையில் இருவரும் பிரிகின்றனர்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 18, 2011 12:26 pm

பகுதி இருபத்தி ஒன்பதில் இரண்டு : கண்ணனும், குந்தியும் :

கர்ணனிடம் பேசி விட்டு, அவன் வர மறுத்ததும், விலகி.. குந்தி இருக்கும் இடம் தேடிச் செல்கிறான் கண்ணன். (கர்ணன் திரைப்படமும், என் கற்பனையும் கலந்தவை)

அங்கே... தூது சென்ற கண்ணனுக்கு என்ன பதில் சொன்னனரோ என ஆழ்ந்த சிந்தனையுடன் அமர்ந்து இருந்தார் குந்தி தேவி.

கண்ணன் : அத்தை...

குந்தி : கண்ணா.. வந்துவிட்டாயா?? வா... வா... அங்கே என்ன நடந்தது??? ராஜ்ஜியம் தர ஒப்புக் கொண்டனரா??

கண்ணன் : ராஜ்ஜியமா??? ஐந்து பேருக்கு, ஐந்து ஊரையாவது கொடுங்கள் எனக் கேட்டேன் அத்தை. ஊசி முனை அளவு கூட தர மறுத்து விட்டனர்.

குந்தி : ஐந்து ஊரைக் கூடவா தர முடியாது என்றனர்???

கண்ணன் : நான் என்ன செய்யட்டும் அத்தை. நீதியைச் சொன்னேன். நியாத்தை சொன்னேன். அவர்கள் மறுத்து விட்டனர்.

குந்தி : சரி இனிமேல் என்ன முடிவு???

கண்ணன் : வேறென்ன போர்தான்.

குந்தி : முடிவு???

கண்ணன் : வெற்றிதான்

குந்தி : யாருக்கு ???

கண்ணன் : துரியோதனனுக்கு ...

குந்தி : கண்ணா..... (விழிகளில் நிறைந்த நீருடன்...)

கண்ணன் : துரியோதனனுக்கு அல்ல என்று கூறினேன் அத்தை.

குந்தி : போதும் உன் விளையாட்டு. அரசியாகவே பிறந்து, அரசியாகவே வாழ்ந்து, ஐந்து வீர மக்களைப் பெற்றும், வயிற்றுச் சோற்றுக்கு, பிறர் கையை எதிர்ப்பாக்கும் நிலையில் இருப்பதே கொடுமை. இதில் நீ வேறு என் உள்ளத்தைக் கொல்லாதே கண்ணா.

கண்ணன் : வெற்றி உன் மக்களுக்கு என்பது உன் கையில் உள்ளது அத்தை.

குந்தி : மீண்டும் விளையாட்டா கண்ணா???

கண்ணன் : இல்லை அத்தை விளையாட்டு அல்ல. நான் உன்னை ஒரு கேள்வி கேட்கிறேன். அதற்கு நீ உண்மையைச் சொல்ல வேண்டும்.

குந்தி : கேள்...

கண்ணன் : அத்தை, சிறு வயதில் உனக்கு ஒரு மகன் பிறந்து, அதை நீ ஆற்றில் விட்டது உண்மையா??

குந்தி : கண்ணா, உன் தகப்பனுக்கும் இது தெரியாதே??? இந்த விஷயம் அறிந்தவள் என் தோழி ஒருவள்தான். அவள் கூட இப்போது உயிருடன் இல்லையே... உனக்கு எப்படித் தெரிந்தது??

கண்ணன் : பாவ காரியங்கள் என்றும் மறைந்து விடாது அத்தை. அது எப்படியோ வெளி வந்து விடும்

குந்தி : கண்ணா, என்னை மன்னித்து விடு. உலகம் அறிந்தவன் நீ. நான் செய்த பாவ காரியத்துக்காக நான் இதுவரை அனுபவித்த துன்பம் போதும். என்னைக் காப்பாற்று.

கண்ணன் : அத்தை, உன் முதல் மகன் உயிரோடுதான் இருக்கிறான்.

குந்தி : என்ன???? (ஆனந்தமும், கண்ணீரும்) என் மகன் உயிரோடு இருக்கிறானா?? கிருஷ்ணா, யார் அவன்?? சொல் சீக்கிரம்.

கண்ணன் : உன் மகன் தான் உன் எதிரி..

குந்தி : என்ன எதிரியா???

கண்ணன் : ஆமாம் அத்தை. அர்ஜுனனை அழிக்கவே பிறந்ததாக மார் தட்டிக் கொண்டு இருப்பவன். கர்ணன். கர்ணன்தான் உன் முதல் மகன்

குந்தி : கர்ணன்... கர்ணன் என் மகன்... அவனைக் காணும் போதெல்லாம்... ஏதோ என்னுள்ளே செய்த உணர்வுகள் இதுதானா?? என் தாய்மைதானா அது??

கர்ணா, என் மகனே...

ஐயோ... ஆனால் அவன் சேர்ந்திருக்கும் இடம் சரி இல்லையே...

கண்ணன் : ஆம் அத்தை.

குந்தி : நான் உடனே சென்று அவனை என்னுடன் அழைத்து வந்து விடுகிறேன். எதிரிகள் கொட்டம் உடனே அடங்கி விடும்.

கண்ணன் : நல்ல யோசனை அத்தை. உடனே செய்.

குந்தி : இதோ.. உடனே செல்கிறேன். (என புறப்படுகிறார்)

கண்ணன் : சென்று வா.. ஆனால் அவன் உன்னுடன் வர மறுத்தால்... நான் சொல்வது போலச் செய்.

குந்தி : மறுத்து விடுவானா என்ன?? (கண்ணீர்) சரி என்ன செய்ய வேண்டும் சொல்.

கண்ணன் : அவன் வராவிட்டாலும், இரண்டு வாரமாவது கொடு எனக் கேள்.

குந்தி : வரமா??? என்ன அது???

கண்ணன் : அர்ஜுனனை அழிப்பதாக, கர்ணன் துரியோதனுக்கு வாக்களித்து இருக்கிறான். அர்ஜுனனைக் கொல்ல வல்லது அவனிடம் உள்ள நாகாஸ்திரம். அதனை ஒருமுறை தவிர மறுமுறை உபயோகிப்பது இல்லை என ஒரு வரம்.

குந்தி : ஆனால், அந்த ஒரு முறையிலே, அர்ஜுனனுக்கு ஆபத்து வந்துவிட்டால்???

கண்ணன் : என்ன அத்தை? நான் தான் கூடவே இருக்கப் போகிறேனே. எதையாவது செய்து சமாளிக்கிறேன்.

குந்தி : சரி. மற்றொன்று????

கண்ணன் : அர்ஜுனனைத் தவிர மீதம் உள்ள நால்வரை கொல்வதில்லை எனும் வரம்.

குந்தி : சரி கேட்கிறேன். ஆனால், இதனால் கர்ணன் உயிருக்கு ஒன்றும் ஆபத்து வராதே???

கண்ணன் : என்ன அத்தை நீ?? போரில் உலகே மான்டாலும், உன் பிள்ளைகள் மட்டும் இருக்க வேண்டும் எனும் உன் எண்ணம் நியாயமா??

குந்தி : என்ன செய்வேன் கண்ணா, பெற்ற வயிறு அல்லவா???

கண்ணன் : உண்மைதான். ஆனாலும், அவன் சேர்ந்த இடம் தீயவர்களிடம். என்ன செய்வது அத்தை??

குந்தி : ஐயோ... என் முதல் மகன்.. அவன் உயிருக்கு ஆபத்தா??

கண்ணன் : விதி அது எனில், அதை மாற்றும் வலிமை யாருக்கு உண்டு அத்தை. பிறந்ததுமே உன் கை நழுவிப் போனவன், இதிலிருந்து மீண்டு வந்தால் வரட்டும். இல்லை எனில், விதி விட்ட வழி என்று இருந்துகொள்.

குந்தி : ஐயோ... என்னைப் போல ஒரு பாவியை அன்னையாய் அடைந்ததில் என்னென்ன அவமானம் அடைந்தானோ?? என் செல்வம்??

கண்ணன் : அத்தை... சென்று வா...



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 18, 2011 12:27 pm

பகுதி முப்பது – தாயும், சேயும் :

கண்ணன், குந்தியிடம், கர்ணன் தான் அவரின் மூத்த பிள்ளை எனக் கூறிகிறார். கர்ணனை சந்தித்து, அவனை, தன்னிடம் அழைத்து வரும் ஆவலில் அங்கே செல்கிறார். இனி அங்கே நடப்பவை.

(கர்ணனுக்கு குந்தி தான் அவன் தாய் என்பதை கண்ணன் அறிவிப்பதாக வருகிறது. ஆனால், அதை குந்தி தேவி தன் வாயால் கர்ணனுக்கு சொல்வதைப் போலே கர்ணன் திரைப் படத்திலும், திரு.தாகூர் அவர்களின் வரிகளிலும் வருகிறது. இவர் கவிதையில், குந்தியை கர்ணன் யாரென அறியாதது போலவே வருகிறது. அவை இரண்டும் கூடவே என் கற்பனையும் கலந்து அந்தக் காட்சி இதோ உங்களுக்காக...)

கங்கையின் நதிக்கரையில், சூரிய பகவானுக்கு, தன் பிராத்தனையை செய்து கொண்டு இருக்கிறான் கர்ணன். அவனைக் காண அங்கே காத்திருக்கிறார் குந்தி.

மாலை மயங்கிய பொழுதிலே, மறையும் சூரியனின் ஒளியிலே, கண்கள் மூடி, கூப்பிய கரங்களுடன் கர்ணன் பிராத்தனை செய்து கொண்டிருக்க, ஆசை தீர, தன் மகனை கண் குளிர, நெஞ்சம் விம்ம கண்டு ரசிக்கிறாள் அந்தத் தாய்.

குந்தி : மகனே... கர்ணா...

கர்ணன் : யாரம்மா நீங்கள்?

குந்தி : உன் வாழ்வின் உதயத்தை இந்த உலகறிய வைத்தவள் தானப்பா நான். அதை உலகுக்கு அறிவிப்பதில் இருந்த, தயக்கத்தையும், சங்கடத்தையும் உதறி எறிந்தேன். உன்னை என் மடியில் ஏந்த வந்தேன்.

கர்ணன் : தாயே, உங்கள் கண்களில் வழியும் அன்பு, என் இதயத்தின் கனத்தை, ஆதவனைக் கண்டு பனி உருகுவது போல உருக்குகிறது தாயே. உங்கள் குரல் கேட்கையில், அது எதோ ஜென்ம ஜென்மன்களாக நான் கேட்டுப் பழகிய குரல் போல என் உள்ளத்தை அசைக்கிறது தாயே. சொல்லுங்கள் தாயே.. என் பிறப்பின் மர்மம் எந்த விதத்தில் உங்களோடு தொடர்பு உடையது??

குந்தி : மாவீரனே, நான்தான் குந்தி.

கர்ணன் : குந்தி தேவியா நீங்கள்?? அர்ஜுனனின் தாய்….

குந்தி : ஆம் மகனே. நான் அர்ஜுனனின் தாய்தான். அதற்காய் என்னை நீ வெறுக்க வேண்டியது இல்லை மகனே.

உன்னை முதல் முதலாக, அஸ்தினாபுரத்தின் திறமைகளை வெளிப்படுத்தும் களத்தில், கீழ் வானில் உதயமாகும் கதிரவரின் கதிரைப் போல, அரங்கத்தையே ஒளி பொருந்தியதாய் ஆக்கிய உன் வருகை கண்டு யாரின் தாய்மை நெஞ்சம் குளிர்ந்து போனதோ, யாருடைய உணர்வுகள் உன்னை உயிர்வரை தீண்டியதோ, யாரின் மனம் உன்னை உச்சி முகர்ந்து, உச்சி முதல் பாதம் வரை ஆயிரம் முத்தங்களால் அர்சித்ததோ அந்த மனம் கொண்டவள் அர்ஜுனனின் தாய்தான்.

அதே களத்தில், கிருபாச்சாரியார், யார் நீ?? உன் தந்தை யார் எனக் கேட்டு, ஒரு ஷத்ரியனுடன் இன்னொரு ஷத்ரியன் தான் போரிட வேண்டும் எனக் கூற, தலை கவிழ்ந்து, பேச்சிழந்து, அவமானத்தில் முகம் ரத்தமெனச் சிவக்க, நீ நிற்கையில், எவள் வயிறு பற்றி எறிந்ததோ, அந்த துர்பாக்கியசாலி நான் தான். இதே அர்ஜுனனின் தாய்தான்.

உன் அவமானம் கண்டு நான் கலங்கி நிற்கையிலே, துரியோதனன், அந்த சபையிலே உன்னை அங்க தேச அரசனாக்கினான். அப்போது நிமிர்ந்த உன் சிரம் கண்டு என் நெஞ்சம் பூரித்து, மனதார துரியோதனனின் பாதம் பணிந்தேன் நான். என் மகனின் துயரம் போக்கிய அந்த தூயவன் நெடுங்காலம் வாழ நெஞ்சம் நிறைந்த ஆசிகளை, மனதாலே பொழிந்தேன்.

என் நெஞ்சம் விம்ம, பாசம் பொங்க, நான் இருந்த இடம் விட்டு, உன்னை வழியும் என் கண்ணீரால் அர்ச்சித்து, ஆலிங்கனம் செய்ய உன் பக்கம் வர என்னுகையில், மகனே என உனைத் தேடி அதிரதன் வந்தார். தந்தையே என அவர் பாதம் பணிந்தாய் நீ. அதைக் கண்டும் நகைத்தனர் பாண்டவர்களும், அவர் நண்பர்களும். அப்போது நிமிர்ந்த உன் சிரம் எக்காரணம் கொண்டும் தாழாது இருக்க, இறைவனை ப்ராதித்து, உன்னை மனம் நிறைந்து ஆசீர்வதித்தாளோ, அதே அர்ஜுனனின் தாய் தான் நான்.

எவள் ஒருவள் இன்று வரை உனக்காய், உன் நலனுக்காய், உன்னை பெற்று, அவள் உன்னை இழந்து அன்று வருடம் தவறாது, முழு நாளும், உணவின்றி இருக்கிறாளோ, அதே பாவிதான், இந்த அர்ஜுனனின் தாய்.

கை நழுவிப் போன தன் செல்வம், இருக்கிறதா??? இல்லையா??? இருப்பின் நலமாய் இருக்கிறதா??? என, ஒவ்வொரு நாளும் நினையாத நாள் இல்லை. ஆண்டுகள் பல சுகமாய் இருந்தாலும், சுகவீனப்பட்ட போதும், மாறாத உன் நினைவில் மாண்டு மாண்டு உயிர் பெற்ற உன் அன்னை நான் தானப்பா...

கர்ணன் : உங்கள் வார்த்தைகளில் என் நெஞ்சத்தில் நிறைந்திருந்த கவலைகளும், வருத்தங்களும் கரைந்தே போயின தாயே.

வாருங்கள் தாயே.. (என தன் அரண்மனைக்கு அழைத்துச் செல்கிறான்) தங்கள் வரவில் என் குடில் பெரும் பேறு பெற்றது...

நான் தங்களுக்காய் என்ன செய்ய வேண்டும்??

குந்தி : உன்னிடம் எனக்கு ஒரு வேண்டுகோள் உண்டு. நான் உன்னை என்னோடு அழைத்துப் போக வந்தேன்..

கர்ணன் : எங்கே???

குந்தி : என் மகனாய் நீ இருக்க வேண்டிய இடத்துக்கு...

கர்ணன் : ஐந்து மக்கள் அங்கே இருக்க, எனக்கு அந்த இடம்???

குந்தி : நீதான் என் முதல் மகன். நீயே அனைவருக்கும் மூத்தவன். (பேசிக் கொண்டே அவள் கர்ணனை வைத்து அனுப்பிய பேழையைக் காண்கிறாள்) இதோ... நான் உன்னை வைத்து அனுப்பிய பேழை...

கர்ணன் : -------

குந்தி : (உள்ளே வைத்திருந்த தன் புடவையை எடுத்து) இதோ.. உன்னையும் என்னையும் ஓர் இரவு இணைத்து வைத்திருந்த புடவை.. என அதை தன் மீது எடுத்துப் போட்டுக் கொள்கிறாள். நெஞ்சமும், வயிறும் குளிர்கிறது. முதல் நாள், கர்ணன் பிறந்த போது தான் அடைந்த இன்பத்தை மீண்டும் அடைகிறாள்.

(அந்தப் புடவை அவளை ஒன்றும் செய்யவில்லை. கர்ணன், தன் அன்னையை தேடுவதை அறிந்த, சில பெண்கள், தங்களை தான் அவன் அன்னை என சொல்லிக் கொண்டு அவன் இடம் நாடி வந்தனர். அப்போதெல்லாம் கர்ணன், அவன் அன்னையின் புடவையை அவர்களிடம் தருவான். ஆனால், அந்தப் புடவையை அவர்கள் தீண்டினாலே தீயில் சுட்டது போல காந்தியது அவர்களுக்கு. ஏமாற்ற வந்தவர்கள் எல்லாம் ஏமார்ந்து போயினர்.)

அந்தப் புடவை குந்தியை ஒன்றும் செய்யாதது கண்டு கர்ணனுக்கு அவள்தான் தன் அன்னை என்பது உறுதி ஆகிறது.

கர்ணன் : ஆனந்தத்தின் எல்லையிலே நின்று அவன் அழைக்கிறான்... அம்மா...........

குந்தி : இதோ, அன்று நான் கேட்ட என் மழலைச் செல்வத்தின் குரல்...

கர்ணன் : அம்மா....

குந்தி : அன்று என் செவி சுவைத்த இன்பத்தை இன்று மீண்டும் நான் அடைந்தேன்...

கர்ணன் : அம்மா....

குந்தி : அழை மகனே.. என்னை அழை.... மீண்டும் மீண்டும்... அழை... நான் இன்று வரை இழந்திருந்த இன்பம்... நிறுத்தாதே... அழை..

கர்ணன் : அம்மா... அம்மா... அம்மா....

(வருடக் கணக்கில் தேடி அலைந்த அன்னையை கண்டவுடன்... நினைவு தப்புகிறது கர்ணனுக்கு, அவனை மடியில் அள்ளி வைத்துக் கொண்டு... அவன் மயக்கம் தெளிவிக்கிறாள் அந்தத் தாய்.)

குந்தி : விதி அன்று என்னை பாதகி ஆக்கி விட்டது மகனே. நீயும், நானும் குற்றவாளிகள் அல்ல... இதற்க்கு மேல் எனை விவரம் கேட்காதே.

கர்ணன் : வேண்டாம் அம்மா... வேண்டாம். எனக்கு நீங்கள் போதும். எங்கெல்லாமோ தேடினேன் அம்மா உங்களை. தேடி தேடி களைத்தேன் தாயே... தேடித் தேடி களைத்தேன். எங்கும் காண முடியவில்லை தங்களை. எத்தனை வழிகளைக் கையாண்டேன். என் அன்னையைக் கண்டுபிடிக்க. எதிலும் எனக்கு வெற்றி இல்லை.

பிறப்பறியாது, இறக்கும் வழி அறியாது, என்னை எசுவோரின் சொல்லம்புகள் சல்லடைக் கண்களாய் என் இதயத்தைத் துளைத்த போதும், அந்த அவமானத்தை, நான் ஒதுக்கி வாழ்ந்த வாழ்வுக்கு இன்று ஒரு பொருள் தந்தீர்கள் அம்மா.

உங்கள் வரையில் இறந்து விட்ட என்னை, மீண்டும் தேடி வந்த உங்கள் அன்புக்கு காணிக்கையாக நான் ஏதாவது தர வேண்டும். கேளுங்கள் அம்மா..

குந்தி : மகனே....

கர்ணன் : உங்கள் மகனிடம் ஏதாவது கேளுங்கள் அம்மா...



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 18, 2011 12:27 pm

குந்தி : உன் சகோதரர்கள் ஐவரோடு நீயும் சேர வேண்டும். இனி எதிரிகள் கூட்டம்(துரியோதனன்) கூண்டோடு அழிய வேண்டும்...

கர்ணன் : இது சோதனை அம்மா. சோதனை. உயிரினும் உயர்ந்த நட்பை, நன்றியை கொன்று விடு என்று சொல்வது சோதனை அம்மா.

குந்தி : நம்மை நாம் அறியாத காலத்தில், அவர்கள் நட்பு நமக்கு கிடைத்தது. இப்போது அனைத்தும் அறிந்த பின், நட்பை விட ரத்த பாசம்தான் பெரிதாக இருக்க வேண்டும்???

கர்ணன் : இது சரியான பேச்சா??? அம்மா?? ரத்தபாசம் உடையவர்கள் என்னை மறந்திருந்த போது, நான் யார் என்றே அறியாத ஒருவன், ரத்த பாசம் உடையவனாக என்னை ஆக்கிக் கொண்டானே, அவன் எனக்கு தெய்வம் அல்லவா??

அவமானம்தனைப் போக்கி, என் மானம்தனைக் காத்த, அவனை, நான் நீங்கினால் அது தருமமா???

உறவானவர்கள் எனை உதறிய போதும், உயிரானவன் அவன், என் உயிரின் எஜமானன் அவன்.

அவனை நான் விடலாகுமா தாயே???

குந்தி : என் உயிரைத் திருகும் வலி தருகிரதப்பா உன் பேச்சு...

கர்ணன் : அம்மா... என்னை மன்னியுங்கள், தங்களைப் புண் படுத்தும் எண்ணம் இல்லை...

குந்தி : உன்னோடு நான் இருக்க வேண்டும் எனும் என் எண்ணம் தவறா???

கர்ணன் : அதை இந்த இக்கட்டான சூழலில் கேட்பது சரியா???

குந்தி : நான் உன்னை அரிய நேர்ந்தது இப்போதுதானே....

கர்ணன் : என் உயிர் அவன் வசமானது எப்போதோ தானே..

குந்தி : சரி.. மகனே. ஆனால், எனக்கு இரண்டு வாரமாவது கொடு...

கர்ணன் : வரமா??? என்னிடம் இருந்தா??? உங்களுக்கா???

கேளுங்கள் தாயே...

குந்தி : உன்னால், உன் தம்பிமார்கள் அழிந்தார்கள் என இருக்கக் கூடாது. இந்த வரம் கொடு...

கர்ணன் : அம்மா, அர்ஜுனனை நான் அழிக்கிறேன் என நான் வாக்கு தந்திருக்கிறேன் துரியோதனனுக்கு. அதை என்னால் மீற முடியாது. அர்ஜுனனைத் தவிர மீதம் உள்ள நால்வருக்கும் என்னால் எந்தத் தீங்கும் வராது அம்மா. இது சத்தியம்.

அர்ஜூனன் இறந்தால், என்னோடு உம்மக்கள் ஐவர். நான் இறந்தால், எப்போதும் போல பாண்டவர்கள் ஐவர். எப்படியாயினும் உமக்கு மக்கள் ஐவர் அம்மா.

சரி அடுத்த வரம்???

குந்தி : அர்ஜூனன் மீது, நாகாஸ்திரத்தை ஒரு முறைக்கு மேலே பிரயோகிக்கக் கூடாது.

கர்ணன் : ம்ம்ம்... இறைவன் போல ஒருவன் நடத்தும் நாடகம் இது. தர்மம் வெல்ல வேண்டும். அதற்காய் இது போல எல்லாம் நடக்கத்தான் வேண்டும். சரி தாயே. அந்த வரத்தையும் தந்தேன்.

குந்தி : மகனே... என அவனைத் தழுவுகிறாள்...

கர்ணன் : அம்மா...

குந்தி : சொல் மகனே...

கர்ணன் : அம்மா...

குந்தி : சொல் கண்ணே....

கர்ணன் : எனக்கும் இதுபோல ஒரு இரண்டு வரம் வேண்டும் தாயே.. உங்களிடம் இருந்து...

குந்தி : உனைப் பெற்றதைத் தவிர வேறு எதையுமே நான் செய்யவில்லை... ஒரு குழந்தைக்கு இருந்திருக்க வேண்டிய எந்தச் சுகத்தையும் உனக்கு நான் தரவில்லை... என்ன வேண்டும் கேள் மகனே...

கர்ணன் : போர் வர இருக்கும் இந்தச் சமயத்தில் நான் உங்கள் மகன் எனும் விஷயம் வெளியில் தெரிந்தால்... பெரும் அனர்த்தங்கள் நிகழும். எனவே, நான் தங்கள் மகன் எனும் விஷயத்தை நான் இறக்கும் வரை நீங்கள் யாருக்கும் சொல்லக் கூடாது.

குந்தி : என்ன பாவம் செயதேனப்பா நான்...

கர்ணன் : இந்த வரம் தந்தேன் எனச் சொல்லுங்கள் அம்மா...

குந்தி : சரி மகனே.. தந்தேன்... சரி.. மற்றொரு வரம்???

கர்ணன் : நான் பிறந்த பிறகு, என் நினைவறிந்து நான் இன்றுதான் தாய் மடியின் சுகம் அறிந்தேன். அந்த சுகம் எனக்கு மீண்டும் வேண்டும். நான் இறந்த பிறகு, எனை மடியில் இட்டு மகனே... என நீங்கள் அழ வேண்டும்... (கர்ணனின் விழியில் தாரை தாரையாய் கண்ணீர்...)

குந்தி : ஐயோ... (என கர்ணனின் வாய் பொத்தி) இது என்ன வரமப்பா என்னைக் கொல்லும் வரம்???

கர்ணன் : தயை கூர்ந்து தாங்கள் எனக்கு இந்த வரத்தை தர வேண்டும் அம்மா...

குந்தி : பெருகி வழியும் கண்ணீருடன்... சரி மகனே... தந்தேன்...

(ஆரத் தழுவிக் கொண்ட இருவரும்... பிரியும் வேளை வருகிறது...)

குந்தி : மகனே... நான் வரவா???

கர்ணன் : போங்கள் தாயே....

என் மகன், உத்தமன்,
நட்பிற்கு ஒரு உருவம் என் மகன்
நம்பிக்கையின் மறு உருவம் என் மகன்

பிறப்பரியா சோகம் அவனை சூழ்ந்திருதிருந்த போதும்
அளப்பறிய ஆற்றலுடன் வாழ்ந்திருந்தவன்

கிடைக்காத தாய் பாசம் கிட்டிட்ட போதும்
நட்புக்காய் அதைகூட விட்டவன்

என்னோடு வந்தால் ராஜ்ஜியமே தனதாகும்
என அறிந்திருந்த போதும் மாறாதவன்

வளர்த்த பெற்றோருக்கும், தன்னை நம்பிய
நண்பனுக்கும், தாயைக் கூட தள்ளி வைத்த
தூயோனே... உனைப் பெற்ற அன்றை விட
பெரும் இன்பம் நான் அடைந்தேனப்பா உன்
மாறாத நிலை கண்டு...

என குந்தியும்....

ஆற்றிலே எனை விட்ட அன்றே,
எனை மறந்து போனாள் என் அன்னை
என, எண்ணி எண்ணி இறந்து போனேனே..

அன்று முதல் இன்று வரை
எனை மனதால் சுமந்த மாதரசியே,
அன்பில் நீ ஒரு அரசியே..

உங்கள் வரையில் இறந்தே போன என்னை
தேடி வந்து, தெவிட்டாத அன்பைத் தந்து
எனை மனிதனாக்கி, எனை பிறப்பால்
புனிதனாக்கிய என் தெய்வமே...

உங்கள் அன்புக்காய், இந்த வையத்தையும்
கொடுக்கும் வலு இருந்தாலும் கொடுத்திருப்பேனே..

ஆனால், என் நண்பனை விட்டு வர வேண்டும்
என நீங்கள் கேட்டு அதை நான் மறுக்கும் நிலை
வந்தமைக்கு வருந்துகிறேன் தாயே...

என் கர்ணனும், இரு வேறு மனநிலையில் இருந்தனர்....

அன்றைய இரவு அவர்களுக்கு... துயிலா இரவாய் இருந்ததை நான் சொல்லவும் வேண்டுமா???



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 18, 2011 12:28 pm

பகுதி முப்பத்தி ஒன்று – யுத்ததின் காரணமும், யுத்தமும்

சூதாட்டக் களத்தில் தோல்வி அடைந்த போதும் கூட யுத்தம் பற்றிய சிந்தனை பாண்டவர்களுக்கு இல்லை. பாஞ்சாலியை துகிலுரிந்து அவமானப் படுத்தியதால் வந்த வினை. வினையை விதைத்தவர்கள், அதை அறுக்க, அருவடை வரும் போது தயாராக வேண்டும் இல்லையா??? இதில் பாண்டவர்களின் சபதங்கள் :

பாஞ்சாலி துகிலுரியப்பட, அவள் கண்ணனை வேண்ட, அவள் வஸ்திரம் வளர, அதை இழுத்த துச்சாதனன் மயங்கி விழ.....

பீமன் எழுந்தான். 'விண்ணவர் மேல் ஆணை. பராசக்தி மீது ஆணை. கண்ணன் மேல் ஆணை. எங்கள் மனைவி திரௌபதியை, தொடை மீது உட்கார் என்று கூறிய துரியோதனனை போர்க்களத்தில் தொடையைப் பிளந்து அவன் உயிரை போக்குவேன். சேலை பிடித்து இழுத்த துச்சாதனனின் தோள்களைப் பிளப்பேன்' என்று சபதம் செய்தான்.

அர்ச்சுனன் எழுந்து 'பாஞ்சாலியின் சேலையை அகற்றச் சொன்ன கர்ணனை போரில் மடிப்பேன். இது கண்ணன் மீதும், திரௌபதி மீதும், காண்டீபம் என்னும் என் வில் மீதும் ஆணை' என்று சபதம் செய்தான்.

சகுனியின் தலையை துண்டிப்பேன் என்றான் சகாதேவன்.

பாரதப்போரில் சகுனியின் மகனான உலூகனைக் கொல்வேன் என்றான் நகுலன்.

பாஞ்சாலியோ, எந்தப் பெண்ணுக்கும் இல்லாத அவமானம் எனக்குத் தந்த துச்சாதனன், துரியோதனன் இவர்கள் ரத்தத்தை கூந்தலில் தடவி குளித்து பின்னரே கூந்தல் முடிப்பேன் என்றாள்.

அவளது சூளுரையைக் கேட்டு, விண்ணகம் மலர் மாரி பொழிந்தது. மண்னகம் அதிர்ந்தது. இதுதான் பாண்டவர்களின் சபதங்கள்.

இனி, யுத்த களம் பற்றி சில விவரங்கள் :

இன்றைய கால கட்டத்தில் வாழ்வின் ஒவ்வொரு நாளும் ஒரு போராட்டம் தான் நமக்கு. வெற்றி வேண்டுமாயின் எப்படியும் போராடித்தான் ஆக வேண்டும். கதை நடந்ததாய் சொல்லப்படும் காலத்தில் அப்படி இல்லை. போருக்கு என சில நியமங்கள் இருந்தன.

படைகள் நான்கு வகைதான்.

ரதப்படை(தேர்ப்படை), கஜப்படை(யானைப்படை), துரகப்படை(குதிரைப்படை), பதாதிப்படை(காலாட்படை).

இந்த நான்கு படைகளும், கீழ்காணும் அளவுகளில் இருந்தால் அவை ஒரு அக்குரோனிப் படை எனப்படும்.

ஓர் அக்ரோணி படை என்பது:

21870 : தேர்கள் (ரத)
21870 : யானைகள் (கஜ)
65610 : குதிரைகள் (துரக)
109350 : காலாட்படைகள் (பதாதிகள்) அடங்கியது ஆகும்.

இதில், ரதப்படை தான் இருப்பதில் உயர்ந்தது. ஒரு அக்குரோனிப் படை-க்கு ஒரு ரதர்தான் (ரதப்படையில் சிறந்த வீரர்) தலைமை வகிப்பார். அவரவர் திறம் கொண்டு அவரை கீழ்க்கண்டவாறு பிரிப்பர்.

அதிரதர்:

இவர்கள்தான் இருப்பதிலே திறம் அதிகம் உள்ளவர்கள். எவர் ஒருவர், தனியாளாக ஒரு தேரின் மேல் நின்று தமது ரத, கஜ, துரக, பதாதிகளுக்கு அழிவுவராமல் காத்துக்கொண்டு, ஒரே சமயத்தில், பல்லாயிரம் தேர் வீரர்களோடு போரிடும்/போரிட்டு வெல்லும் வல்லமை உடையவரோ அவரே அதிரதர்

மஹாரதர்:

இவர்கள், அதிரதருக்கும் கீழே, அதாவது, தனி ஒருவராக நின்று, ஒரே சமயத்தில், பதினோராயிரம் தேர்வீரரோடு போரிடும்/போரிட்டு வெற்றி கொள்ளும் வல்லமை பொருந்தியவர்கள்.

சமரதர்:

இவர்கள் திறமை, அதற்கும் கீழே, ஒரு சமயத்தில், ஒரு தேர்வீரரோடு, போரிடும் / போரிட்டு வெற்றி பெரும் வல்லமை கொண்டவர்.

அர்த்தரதர்:

இவர்கள், அப்படி, ஒருவரோடு, ஒரு சமயத்தில், ஒருவர் மட்டும் போரிடும் போதும், தமது, ரதம் மற்றும் உடமைகளை இழந்து விடுபவர்.

யுத்தம் கூட ரெண்டு விதமா இருக்கும்-ன்னு சொல்றாங்க.

சமமான பலமும், சமமான தகுதியும், உடையவர்கள் மோதினால் அது துவந்த யுத்தம். இப்படித்தான் இருக்கனு-ன்னு யுத்த சாஸ்திரங்கள் சொல்லி இருக்கு. சம தகுதி இல்லாத இருவர், மோதினால் அதன் பெயர் சங்குலம். இதை இன்னும் தெளிவா சொல்லணும்-ணா நம்ம பேச்சு வழக்கில் இருக்கும் கச முசா தான் சரியான பொருத்தம்.

கசம், கசத்தோடும், முசம், முசத்தோடும், அல்லாது, கசம் முசத்தோடு சண்டை இடுவதுதான் அது.

கச(ஜ)ம் – யானை, முசம் – முயல். யானையும், முயலும் சண்டை போட்டா, அது நியாயம் இல்லைதானே. அதுதான் சங்குல யுத்தம்.

எதுக்கு, இத்தனை பெரிய விளக்கம்??? இதோ கதைக்கு வந்துட்டேன்...

எல்லாருமா சேர்ந்து கௌரவர்களின் சேனாதிபதியா பீஷ்மரை தேர்ந்தேடுத்தாங்க. இதுல துரியோதனனுக்கு விருப்பம் இல்ல. அவனோட தேர்வு நம்ம கதாநாயகன்தான். ஆனாலும் பெரியவங்க சொன்னதுக்காக ஒத்துக்கறான்.

யுத்தத்திலே யார் யாருக்கு என்னென்ன பொறுப்பு-ன்னு பிரிக்கறாங்க. அதில்தான் மேலே நான் சொன்ன பிரிவுகள் வருகின்றன. பீஷ்மர், கர்ணனை, என்னதான் அதிரதனாய் அவன் திறமை இருந்தாலும், பரசுராமரிடம் பெற்ற சாபத்தாலும், கர்ண, குண்டலங்களை பிரிந்தாலும், கர்ணன், அதிரதன் ஆக முடியாது என்கிறார்.

அங்கே இருந்த துரோணர் அவன் மஹாரதர் கூட அல்ல, அர்த்தரதர் என்கிறார்.

இதனால் வலியும் வேதனையும் கொள்ளும் கர்ணன், பீஷ்மரிடம், “பிதாமகரே, தாங்கள் என்னை இத்துணை தூரம் வெறுக்கக் காரணம் என்ன?? அதை நான் அறியேன். இப்படி கடுமையான வார்த்தைகளை நீங்கள் சொல்லலாமா?? நீங்கள் இந்தப் படையின் தளபதி. கண்ணுக்கு எட்டும் தொலைவு வரை பரவி இருக்கும் சேனைக்கு அதிபதி. வெற்றி ஒன்றே குறிக்கோளாக இருக்க வேண்டிய இடத்தில், இந்த பாகுபாடு பார்க்கலாமா??

பீஷ்மர் : சாபங்கள் உனக்கு இருப்பது உண்மைதானே???

கர்ணன் : அதற்காய் என் திறமையை குறைத்து மதிப்பிடுவது அறிவீனம். தங்களுக்கு வயதின் தளர்ச்சி, எனவேதான் நீங்கள் இப்படி உரைக்கிரீர். என்றவன், துரியோதனன் பக்கம் திரும்பி, நண்பா, இவ்வளவு பேசும் இவர், நான் என்னதான் போராடினாலும், எத்தனை சேனைகளை வென்றாலும், அந்தப் பெருமை எல்லாம் இவருக்கே செல்லும். எனவே இந்த மனிதர் சேனாதிபதியாக இருக்கும் வரை நான் போர்க்களம் புக மாட்டேன். இது சத்தியம்.

பாண்டவர்களின் படையும், அவருக்கு துணையாய் வந்த படையும் சேர்ந்து மொத்தம் ஏழு அக்குரோனிப் படைகள். அதற்கு, முறையே, துருபதன், திஷ்டத்துய்மன், விராடன், சிகண்டி,
சாத்யகி, சேகிதானன், திருஷ்டகேது என்பவர்கள் சேனாதிபதிகள் ஆயினர். இதில், திஷ்டத்துய்மன் பிரதம சேனாதிபதியாக தேர்ந்தெடுக்கப் பட்டார்.

துருபதன் : பாஞ்சால தேசத்து அரசன். திரௌபதி, சிகண்டி மற்றும் திஷ்டத்துய்மன் அவர்களின் தந்தை. துரோனரிடம், அர்ஜூனன் மூலம் அவமானப்பட்டவன்.

திஷ்டத்துய்மன் : துருபதன் புதல்வன். துரோனரைக் கொல்லவே பிறப்பெடுத்தவன். அவரிடமே பயின்றவன்.

விராடன் : பாண்டவர்கள், அஞ்ஞாத வாசம் செய்த தேசத்தின் அரசர். தற்போது, அர்ஜூனன் மைந்தன் அபிமன்யுவின் மாமனார். அர்ஜுனனின் சம்மந்தி.

சிகண்டி : முற்பிறவியில் அம்பா எனும் பெண்ணாக இருந்தபோது இவள் காசி அரசனின் மூத்த மகளாவாள். அம்பிகா, அம்பாலிகா என்போர் இவளது தங்கைகள் ஆவர். இவர்களுக்குச் சுயம்வரம் நடந்தபோது, அங்கிருந்த மன்னர்களையும், இளவரசர்களையும் தோற்கடித்து, இம் மூன்று பெண்களையும், பீஷ்மர் அவர்களது விருப்பத்துக்கு மாறாகக் கூட்டிச் சென்றார். அவர், இப்பெண்களை அஸ்தினாபுரத்து மன்னனான விசித்திரவீரியனுக்கு மணமுடித்துக் கொடுப்பதற்காக சத்யவதியிடம் ஒப்படைத்தார்.

அம்பா வேறொருவனிடம் தனது மனதைப் பறிகொடுத்திருந்ததால் விசித்திரவீரியன் அவளை மணந்துகொள்ளாமல் அவளது தங்கைகள் இருவரையும் மட்டும் மணந்து கொண்டான். அம்பா தான் விரும்பியவனை நாடிச் சென்றாள். அவளைப் பீஷ்மர் கூட்டிச் சென்றதனால் அவன் அவளை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டான். பீஷ்மரிடம் திரும்பி வந்த அம்பா, தன்னை மணந்து கொள்ளூமாறு பீஷ்மரை வற்புறுத்தினாள். மணமுடிப்பதில்லை என விரதம் பூண்டிருந்த பீஷ்மரும் அவளை மணம்செய்ய மறுத்துவிட்டார்.இதனால் மிகவும் அவமதிக்கப்பட்டதாக கருதி அவரை பழி வாங்க விரும்புகிறாள். பீஷ்மர் தன்னால் இறக்க வேண்டும் என கடும் தவம் இருக்கிறாள்.அவளே சிகண்டினி ஆக மறுபிறவி எடுக்கிறாள்.

அவள் பிறக்கையில் அவளை ஒரு மகன் போல வளர்க்க வேண்டும் என மன்னருக்கு அசரீரி கேட்கிறது.அதன்படியே போர்முறைகளில் பயிற்றுவிக்கப்பட்டு ஒரு இளவரசனைப்போல் வளர்கிறாள். ஒரு பெண்ணை திருமணமும் செய்துகொள்கிறாள். ஆனால் உண்மையை அறிந்த மனைவி அவளை அவமதிக்கிறாள். இதனால் மனமுடைந்த சிகண்டி பாஞ்சால நாட்டை விட்டு விலகி காட்டில் தற்கொலை செயதுகொள்ள முயல்கிறாள்.அச்சமயம் ஒரு யக்சன் அவளைக் காப்பாற்றி அவளுடன் பாலின மாற்றம் செய்து கொள்கிறான்.

சிகண்டி என்ற பெயருடன் ஒரு ஆணாக பாஞ்சாலம் திரும்புகிறான். தனது மனைவியுடன் இனிது வாழ்ந்து பிள்ளைகளையும் பெறுகிறான். அவனது மறைவிற்குப் பின்னர் அவனது ஆண்மை யக்சனுக்குத் திரும்புகிறது.

சாத்யகி : இவன், கண்ணனின் குலமான யாதவ குலத்தைச் சேர்ந்த ஒரு வீரனாவான். சாத்யகி, கண்ணனிடமும், அருச்சுனனிடமும் மிகுந்த மதிப்பு வைத்திருந்தான். சாத்யகியும், அருச்சுனனும் துரோணரிடம் ஒன்றாகப் போர்ப் பயிற்சி பெற்றவர்கள். பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட பிணக்கில், சாத்யகி பாண்டவர்களை ஆதரித்தான்

சேகிதானன் : யது குலத்தை சேர்ந்தவர். விற்போரில் வல்லவர்.

திருஷ்டகேது : இவரைப் பற்றிய விவரங்களும் தெரியவில்லை. (தெரிந்தவர் யாரேனும் இருந்தால், பகிர்ந்து கொள்ளுங்கள்)

அதே போல, கௌரவர்களின் பதினோரு அக்குரோனிப் படைக்கும் சேனாதிபதிகள் கீழ்க்காணுமாறு இருந்தனர். பீஷ்மர், கிருபர், துரோணர், ஜயத்ரதன், சல்லியன், சுதட்சிணன், கிருதவர்மா, அசுவத்தாமா, பூரிசிவரசு, சகுனி, பாகுலிகன்

பீஷ்மர் : நாம் அனைவரும் அறிந்தவர்தான். சந்தனு, கங்கை இருவரின் புத்திரர். உள்ளத்தில் அனைவருக்கும் மூத்தவர். பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் தாத்தா. இவர்தான் பிரதம தளபதி கௌரவர்களுக்கு.

கிருபர் : அஸ்தினாபுரம் அரசவையில் ராசகுருவாக இருந்தவர். சரத்வான் மற்றும் ஜனபதி தம்பதியினருக்குப் பிறந்தவர். இவரது இரட்டையரான உடன்பிறப்பு கிருபி அந்நாட்டு தளபதி துரோணரின் மனைவியாவார். குருச்சேத்திரப் போரில் கௌரவர்கள் பக்கம் போரிட்டவர். போரின் முடிவில் பரீட்சித்து மாமன்னரின் அரசகுருவாக பணியாற்றுகிறார். இறவாதவர்கள் எனக் கருதப்படும் எண்மரில் ஒருவர்.

துரோணர்: கௌரவர், பாண்டவர்களுடைய ஆசான் ஆவார். இவர் போர்க்கலைகளில் மிகவும் தேர்ந்தவர் ஆவார். இவர் பாரத்துவாச (பரத்வாஜ) முனிவரின் புதல்வர் ஆவார். இவருடைய மனைவி சதாநந்தரின் மகள் கிரிபி. அசுவத்தாமன் இவர்களுக்குப் பிறந்த மகன் ஆவான்

ஜயத்ரதன்: சிந்து நாட்டு அரசன் மற்றும் கௌரவர்களின் தங்கை துச்சலையின் கணவன். காம்யக வனத்தில் தங்கியிருந்த பாண்டவர்கள் ஒருநாள் வேட்டைக்கு சென்றிருந்தபோது, திரௌபதி தனித்து இருந்தாள். அப்போது அங்கு வந்த ஜயத்ரதன் ஆசிரமத்தின் வெளியே நின்றுக்கொண்டிருந்த திரௌபதியை கண்டதும் காதல் கொண்டான். அதை அவளிடம் வெளிப்படுத்தினான். காமவயப்பட்ட அவன் அவளை தூக்கிச் செல்ல முயன்றான். அவன் செயலை, உடன் இருந்தோர் தடுத்தும் கேட்கவில்லை.
வேட்டைக்குச் சென்ற ஐவரும் ஜயத்ரதன் திரௌபதியை அபகரித்து சென்றுவிட்டதை அறிந்தனர். தேர் சென்ற சுவடை கொண்டு ஜயத்ரதனுடன் போரிட்டனர். அவனை கயிற்றில் கட்டித் தேரில் ஏற்றி தருமரிடம் அழைத்து வந்தான் பீமன். தருமரின் ஆணையால் அவனை மொட்டையடித்து அனுப்புகின்றனர். நாணித்தலைக் குனிந்து திரும்பிய ஜயத்ரதன்,கங்கைக் கரைக்குச் சென்று பரமசிவனை நோக்கி கடும் தவமிருந்து அவரிடம் பாண்டவர்களை கொல்லத்தக்க வலிமையை வேண்டுகிறான். கண்ணனின் துணையிருப்பதால், பாண்டவர்களை வெல்ல முடியாது.ஆனாலும் அவர்களை ஒரு நாள் எதிர்த்து நிற்குமாற்றலை அவனுக்கு அளிக்கிறார். இந்த வரம் குருச்சேத்திரப் போரில் பதின்மூன்றாம் நாள் போரில் பயனாகிறது.

சல்லியன் : மத்ரா நாட்டின் அரசனாவான். இவனது சகோதரி மாத்ரி, பாண்டுவின் இரண்டாவது மனைவி. நகுலன், சகாதேவன் இவனது மருமக்கள் ஆவர்.பாண்டவர்களின் அன்புக்குப் பாத்திரமானவன். வில் வித்தையிலும் போர்முறைகளிலும் தேர்ந்தவன். தேரோட்டத்தில் வல்லவன். கண்ணனுக்கு இணையாக தேர் ஓட்டும் வல்லமை கொண்டவன்.

பாண்டவர்களுடன் சேர வந்த இவனை, வழியில் உபசரித்து, இவரை தன் பக்கம் சூழ்ச்சி மூலம் இழுத்துக் கொண்டவன் துரியோதனன்.

சுதட்சிணன் : விற்போரில் வல்லவர். அதைத் தவிர வேறு விவரங்கள் நான் அறியேன். (தெரிந்தவர் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்)

கிருதவர்மா : இவன், கண்ணனின் குலமான யாதவ குலத்தைச் சேர்ந்த ஒரு மன்னன். குருச்சேத்திரப் போரில் கௌரவர்கள் பக்கம் தனது நாராயணி சேனையுடன் சேர்ந்து போரிட்டவன்.போரின் முடிவில் கௌரவர்கள் பக்கம் எஞ்சியிருந்தவர்கள் மூவரில் ஒருவன். அசுவத்தாமன் பழிக்குப் பழியாக இரவில் தூங்கிக்கொண்டிருந்த திருஷ்டத்யும்னன்,சிகண்டி,பாஞ்சாலியின் ஐந்து சிறுவர்கள் என படுகொலை செய்த அநீதிக்கு துணை நின்றவன். போரின் முடிவில் நாடு திரும்பி ஆண்டுவந்தபோது தனது யாதவ குலத்தைச் சேர்ந்த மற்றொரு மன்னனான சாத்யகியால் கொல்லப்பட்டான்

அசுவத்தாமா : இவன், துரோணாச்சாரியாருடைய மகனாவான். இவன் இந்துக்களின் ஐதீகத்தின்படி, ஏழு சிரஞ்சீவிகளுள் ஒருவன். துரோணாச்சாரியார் இவன்மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தார். மகாபாரதப் போர் நடந்துகொண்டிருந்த போது, அசுவத்தாமன் இறந்துவிட்டதாகக் கூறப்பட்ட வதந்தியை நம்பித் துரோணர் கவலையில் இருந்தபோது இளவரசன் திருஷ்டத்யும்னனின் வாளுக்கு இரையாகித் துரோணர் காலமானார்.

போரின் முடிவில் கவுரவர் பக்கம் உயிர்பிழைத்திருந்த மூவரில் இவனும் ஒருவன். தனது தந்தையை நயவஞ்சகமாக கொன்ற திருஷ்டத்யும்னனை இரவில் தூக்கத்தில் இருக்கும்போது கொன்று பழி தீர்த்தவன். பாண்டவர்களின் ஐந்து குலக்கொழுந்துகளையும் பாண்டவ கடைகளையும் அதே இரவில் கொன்றான்.

பூரிசிவரசு : கண்ணனைப் பெற அவதரித்தவள் தேவகி. அவளுடைய சுயம்வரத்தில், சௌமதத்தனனுக்கும், சினிக்கும், பெரிய யுத்தம் வந்தது. வாசுதேவனுக்காக, சினி, சௌமதத்தனனை, ஜெயித்து, தேவகியை, தன் தேரில் ஏற்று சென்று விட்டானாம். அந்த நாள் முதல் இந்த இரு குலங்களும் ஜென்ம விரோதிகள் ஆகினாறாம். இதில் சினியின் பேரன் சாத்யகி. சௌமதத்தணன் மகன் பூரிசிவரசு. சோமதத்தன் இரண்டாம் புத்திரன்.

சகுனி : காந்தார நாட்டின் மன்னன். திருதிராஷ்டிரரின் மைத்துனன். காந்தாரியின் சகோதரன். கௌரவர்களின் தாய் மாமன்.

பாகுவிகன் : சோமதத்தன் தந்தை. சந்தனு தம்பி. பிரதீபன் குமாரன். சரியான விவரங்கள் தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

அதன் பின்னர், இருசாரரின் படைகளும் அணிவகுத்து போர்க்களம் நோக்கிச் சென்றன.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 18, 2011 12:29 pm

பகுதி முப்பத்தி இரண்டில் ஒன்று : யுத்தகளம்

இலட்சக்கணக்கான வீரர்கள் அழிய பாரதப்போர் தொடங்கும் முன் இரு சாராரும் சில விதிமுறைகளைப் பின்பற்ற ஒப்புக் கொண்டனர்.

அவை வருமாறு

போர் பகலில் மட்டுமே நடைபெறும்.
ஆயுதமின்றி இருப்போரிடம் போரிடக் கூடாது
புறமுதுகிடுவோரை தொடர்ந்து சென்று தாக்கக்கூடாது
இரு வீரர்கள் போரிடுகையில்..மூன்றாமவர் இடையே புகுந்து ஒருவரைத் தாக்கக் கூடாது
அடைக்கலம் அடைந்தவர்களைக் கொல்லக்கூடாது
யானைப் படையுடன் யானைப்படையும், தேர்ப் படையுடன் தேர்ப்படையும், குதிரைப் படையுடன், குதிரைப் படையும், காலாட் படையுடன், காலாட்படையும் மட்டுமே போரிட வேண்டும்.

இப்படி ஒரு நியதியை ஏற்படுத்திக் கொண்டாலும் சில நேரங்களில் அதையும் மீறி போரிட நேர்ந்தது.

ஆர்வமாய் இருந்த அர்ஜூனன், எதிரே நிற்கும் தன் உறவினர்களைப் பார்த்து, இவர்களுடன் போர் புரிவதா?? உலகம் என்னை பழிக்காதா?? என துயரம் கொண்டு, போர் புரிய இயலாமல் அவன் ரதத்திலே அமர்ந்து விட...

பகவான் கண்ணன், தக்கது எது?? தகாதது எது?? என விரிவாய் சொல்கிறார்... அதுவே பகவத் கீதை. அதன் பின்னர் யுத்தம் துவங்கி, பதினெட்டு நாட்கள் நடந்தது. இது நாம் அனைவரும் அறிந்ததே. எனவே விரிவாக இல்லாவிடினும், மிகச் சுருக்கமாய்... என்னால் இயன்ற வரை இலகுவாய்... அங்கே நடந்தவை, நான் அறிந்தவகை உங்களுக்கு சொல்கிறேன்.

கண்ணன், அர்ஜுனனுக்கு சொல்வது போல நம் அனைவருக்கும் சொன்ன விஷயங்கள் இவை.

அர்ச்சுனா, வருந்தாதே. தகுதி இல்லாதவரிடம் இரக்கம் காட்டாதே! ஞானிகள், இறந்தவர்களுக்காகவோ, இருப்பவர்களுக்காகவோ துயரம் கொள்வதில்லை. இங்கு உள்ளவர்களும் உடல் அழிந்தாலும் இருப்பார்கள். அவர்கள் உயிர் அழிவதில்லை. இந்தப்பிறவியில் உயிருடன் கூடிய உடம்புக்கு இருக்கும் இளமை, அழகு, முதுமை மீண்டும் மறுபிறப்பிலும் ஏற்படும். இப்படி தோன்றுவதும், மறைவதும் உயிர்களின் இயல்பு என்பதை உணர். இதுவே உலக இயற்கை என்ற தெளிவு பெற்றால், இன்ப துன்பங்கள் யாரையும் நெருங்காது. இதை உணர்ந்தவர் எதற்கும் கலங்குவதில்லை.

அர்ச்சுனா, நிரந்தரமில்லா உடலின் அழிவுக்கு கலங்காதே. உயிர் அழியாது. தனது புண்ணிய பாவ செயல்களுக்கு ஏற்ப மறுபிறவி அடையும். ஆத்மா கொல்வதும் இல்லை. கொல்லப்படுவதும் இல்லை. ஆகவே கலங்காது எழுந்து போர் செய். கடமையை நிறைவேற்று.

ஆத்மாவிற்கு பிறப்பும் இல்லை. இறப்பும் இல்லை. இது எப்போதோ இல்லாதிருந்து பிறகு திடீரென பிறந்ததன்று. இது என்றும் இறவாதது. என்றும் பிறவாதது. அதாவது உடல் கொல்லப்பட்டாலும், உயிர் கொல்லப்படுவதில்லை.

கிழிந்து போன பழைய ஆடைகளை விடுத்து, புது ஆடைகளை உடுத்துவது போல் உயிர் நைந்து போன உடல்களை விட்டுப் பிரிந்து புதிய உடலைப் பெறுகிறது. எந்த போர்க்கருவியும் உயிரை வெட்டாது. உடலை எரிக்கும் தீ உயிரை எரிப்பதில்லை. வெட்டினாலும், குத்தினாலும் உயிருக்கு ஒரு துன்பமும் இல்லை. ஆகவே மாளப்போகிறவர்களுக்காக நீ ஏன் அழுகிறாய்? அவர்கள் வினைப் பயனை அவர்கள் விதிப்படி அடைவர்.

பிறந்தவர் இறப்பதும், இறந்தவர் பிறப்பதும் இயல்பு. அதற்காக ஏன் வருத்தம். இவ்வுலக நியதியை யாராலும் மாற்ற இயலாது. ஆகவே நீ உன் கடமையை ஆற்று.

இந்த ஆன்மாவின் செயல் விந்தையானதுதான் எனினும் மாற்றமுடியா தன்மையைக் கொண்டது. எல்லார் உடம்பிலும் உள்ள ஆத்மாவை யாராலும் கொல்ல முடியாது. ஆகவே, நீ யாருக்காகவும் வருந்த வேண்டாம். தவிர்க்க இயலா போர் வந்து விட்டது. வீரர்களை வரவேற்க சொர்க்கவாசல் தயாராய் விட்டது. சிறந்த வீரர்கள் அங்கு செல்ல உன் கடமையைச் செய். இது தர்மயுத்தம் என்பதை நினைவில் கொள். இங்கு நீ தயக்கம் காட்டினால், புகழை இழப்பாய். அத்துடன் மட்டுமின்றி, அது உனக்கு பழியும் தரும்.

இரக்கத்தால் நீ போரிடவில்லை என பகைவர்கள் எண்ணமாட்டார்கள். போரிட அஞ்சுகிறாய் என சிறுமைப்படுத்துவர். வீரனான உனக்கு அந்த இழுக்கு வரலாமா? இதைவிடப் பெருந்துன்பம் எதுவுமில்லை. வென்றால் இந்த மண்ணுலகம், வீர மரணம் அடைந்தால் விண்ணுலகம். இதனை மறக்காது துணிந்து போர் செய்.

வெற்றி, தோல்வி பற்றியோ, இன்ப. துன்பம் பற்றியோ, இலாப, நஷ்டம் பற்றியோ கருதாமல் ஊக்கத்துடன் போர் செய். பழி, பாவம் உன்னைச் சாராது. புகழும், புண்ணியமும் உனக்குக் கிடைக்கும்.

என மேலும் பலவாறு கண்ணன், அர்ஜுனனுக்கு சமாதானம் கூறினார்.

கண்ணனின் அறவுரைக் கேட்டதும், பார்த்தனின் மனக்குழப்பம் தீர்ந்தது. அவன் கண்ணனை வணங்கி, கண்ணா, என் மயக்கம் ஒழிந்தது. என் சந்தேகங்கள் தீர்ந்தன. என் தயக்கங்கள் அகன்றன. இனி உன் சொல் படி நடப்பேன் எனக்கூறி போரிடத் தயாரானான்.

போருக்காய் எல்லாரும் தயாராய் களத்தில் இறங்க... திடீரென, தருமர், தன் கவசங்கள், ஆயுதங்கள் அனைத்தையும் களைந்து விட்டு, நிராயுதபாணியாக... தன் ரதத்தை விட்டு இறங்கி, கௌரவர்களின் சென்றார். அங்கே சென்று, பிதாமகர், துரோணர் என அனைத்து பெரியவர்களிடமும், ஆசியும், போரிட அனுமதியும் பெற்று வந்தார்.

அவர் அங்கே வரக்கண்ட துரியோதனன் சமாதானத்துக்கு வருவதாக தவறாக எண்ணினான்.


முப்பத்தி இரண்டில் இரண்டு : தினவாரியான யுத்தம் :

பதினெட்டு நாட்கள் தொடர்ந்து நடந்த யுத்தத்தில், ஏகப்பட்ட இழப்பு இருசாராருக்கும். அதை தினவாரியா, நாம் இங்கே காண்போம்.

மிகவும் விளக்கமாக நான் சொல்லி படிப்பவரை துன்புறுத்தமாட்டேன். முக்கிய நிகழ்வுகளை மட்டும் கோடி காட்டுகிறேன். நான் அறிந்த தகவல்களை இன்னும் மெருகேற்ற உதவிய இணையத்துக்கு என் நன்றிகள்.

அறிந்தவர்கள், அறிந்ததையே நான் திரும்ப சொல்வதற்கு எனை மன்னிக்கவும். முக்கிய தகவல் எதுவும் விட்டுப்போனாலோ, இல்லை நான் சொல்வதில் தவறு இருந்தாலோ, என்னை நேர் செய்யுங்கள். நன்றி.

முதலாம் நாள் யுத்தம்:

முதலாம் நாள் போர் சங்குல யுத்தம் என அழைக்கப் படுகிறது. ஓர் ஒழுங்குக்கு உட்படாமல் முறை கெடப் போரிடல் 'சங்குல யுத்தம்' ஆகும். இருதிறத்துப் படைகளும் மோதின. பதினெட்டு அக்குரோனிப் படைகளும் ஒரே இடத்தில் மோத, எங்கு நோக்கினும் சிங்கம் போல கர்ஜிக்கும் வீரர்கள். யானைப்படையும், குதிரைப்படையும் மூர்க்கத்தனமாக மோதிக் கொண்டன. அதனால் எழுந்த தூசு விண்ணை மறைத்தது. பீஷ்மர் வீராவசத்தோடு போர் புரிந்து எண்ணற்ற வீரர்களைக் கொன்றார். சுவேதனுடன் அவர் போர் பயங்கரமாய் இருந்தது. பீஷ்மரால் அவன் கொல்லப்பட்டான். அவன் மரணம் பாண்டவ வீரர்களை நடுங்க வைத்தது. கௌரவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். உத்திரனும் கொல்லப்பட்டான்.

இரண்டாம் நாள் யுத்தம் :

முதலாம் நாள் போரில் இரு முக்கிய உயிர்கள் கொல்லப்பட்டதால், அதை மனதில் கொண்டு இரண்டாம் நாள் போர் படைகள் திருத்தி அமைக்கப் பட்டன. பாண்டவர்கள் படை கிரௌஞ்ச வியூகத்தில் நிறுத்தப்பட்டன. கிரௌஞ்சப் பறவை வடிவில் படைகளை அமைப்பதால், அதற்கு கிரௌஞ்ச வியூகம் என்று பெயர். துருபத மன்னன் அதற்குத் தலையாக நின்றான். தருமர் பின் புறத்தில் நின்றார். திருஷ்டத்துய்மனும், பீமனும் சிறகுகளாக இருந்தனர்.

வியூகம் என்பது, தங்கள் படைகள் எப்படி தாக்கும், எப்படி காக்கும் என்பது போன்ற யூகத்தை, எதிராளிக்கு கொடுப்பது. அதற்கு ஏற்றார் போல, எதிராளி தன் படையை அமைத்துக் கொள்ள வேண்டும். இதில் யுத்த கலைகளை பலவாறு கற்று, அதிலேயே பயிற்சிகள் மிக உடையவர்கள்தான் சில கடினமான வியூகங்களை உடைக்க இயலும்.

மிக முக்கியமான நபர், அல்லது, யாருக்காக போர் நடைபெறுகிறதோ, அவரை அந்த வியூகத்தின் நடுவே நிற்க வைத்து, அவர்களைக் காத்தபடி சூழ்ந்து நின்று மற்ற வீரர்கள் போரிடுவார்.

அந்த நபரை தாக்க வேண்டுமெனில், வியூகத்தை உடைக்கத் தெரிந்தவர் வேண்டும். அப்படித்தான் பீஷ்மர் இந்த கிரௌஞ்ச வியூகத்தை உடைத்து உள்ளே சென்று போரிட்டார். கண்ணபிரான் தேரை ஓட்ட, அர்ச்சுனன், பாட்டனாரைப் பயங்கரமாக தாக்கினான். பீஷ்மர், அர்ச்சுனன் மீது எழுபத்தேழு அம்புகளை செலுத்தினார். மற்றொரு புறம், துரோணரும், திருஷ்டத்துய்மனும் கடும் போர் புரிந்தனர். திருஷ்டத்த்ய்மனுக்கு உதவியாக பீமன் வந்தான். அவனைத் தடுத்து நிறுத்த துரியோதனன் கலிங்கப் படையை ஏவினான். ஆனால் பீமன் அப்படையைக் கதிகலங்க வைத்தான். அப்படைக்கு உதவ பீஷ்மர் வந்தார். அவரை அபிமன்யூவும், சாத்யகியும் சேர்ந்து தாக்கினார். அவர்களது தாக்குதலால், பீஷ்மரின் தேர்க் குதிரைகள் நிலை குலைந்து தாறுமாறாக ஓடின. இதனால், அர்ச்சுனனை எதிர்ப்பார் இல்லை. அவன் விருப்பம் போல கௌரவ வீரர்களைக் கொன்று குவித்தான். அவன் யாராலும் வெல்ல முடியாதவனாகக் காட்சியளித்தான். அப்போது சூரியன் மறைய, அன்றைய போர் முடிவுற்றது.

மூன்றாம் நாள் யுத்தம் :

இரண்டாம் நாள் போரில் கௌரவர் கை தாழ்ந்திருந்தது. அதனால் மூன்றாம் நாள் போரை மாற்றி அமைக்க பீஷ்மர் விரும்பினார். படைகளை கருட வியூகமாக அமைத்தார். அதன் தலைப்பக்கம் பீஷ்மர், துரோணர், கிருபர், அஸ்வத்தாமா, சல்லியன், பகதத்தன் ஆகியோர் பொருத்தமான இடத்தில் நின்றனர். துரியோதனன், அவ்வியூகத்தின் பின் புறத்தில் நின்றான். அதை முறியடிக்கும் விதத்தில் பாண்டவர்களின் தளபதியான திருஷ்டத்துய்மன் தன் படைகளை பாதி சக்கர வியூகமாக அமைத்தான். அவன் வலப்பக்கமாக நின்றான். அதன் இரண்டு பக்கங்களிலும் பீமனும், அர்ச்சுனனும் நின்றனர். தர்மர் இடையில் நின்றார். மற்றவர்கள் பொருத்தமான இடங்களில் நிறுத்தப்பட்டனர்.

உச்சக்கட்டம் அடைந்தது அன்றைய போர். அர்ச்சுனன் அம்பு மழை பொழிந்து கௌரவர் படையை ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்தான். பீமன், துரியோதனன் மார்பில் அம்பை செலுத்தினான். ரத்தம் பீரிட துரியோதனன் பீஷ்மரிடம் சென்று, உண்மையில் நீங்கள் முழு பலத்தையும் காட்டி போரிடவில்லை. இது நியாயமா? பாண்டவரிடம் நீங்கள் கருணை காட்டினால் என்னிடம் முதலிலேயே தெரிவித்திருக்கலாம் என்றான்.

அது கேட்டு நகைத்த பீஷ்மர், உனக்கு நான் பலமுறை சொல்லியுள்ளேன். பாண்டவர்களை யாராலும் கொல்ல முடியாது. என் ஆற்றல் முழுதும் ஆயினும் உனக்கே தருவேன் என்று கூறி போர்க் களம் சென்று சங்கநாதம் செய்தார். கௌரவர் படை உற்சாகம் அடைந்தது. பாண்டவர் படையில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். அர்ச்சுனன் உள்பட அனைவரும், தளர்ந்து காணப்பட்டனர்.

கண்ணன் அர்ச்சுனனிடம் அர்ச்சுனா, என்னவாயிற்று உனக்கு? பீஷ்மரையும், துரோணரையும் வெல்வேன் என்றாயே?? அதை மறந்து விட்டாயா?

உற்சாகம் அடைந்த அர்ச்சுனன் தனது ஒரு அம்பால் பீஷ்மரின் வில்லை முறித்தான். பீஷ்மர் வேறு வில்லை எடுத்தார். எட்டு திசைகளிலும் அம்புகளைச் செலுத்தி மறைத்தார். பல அம்புகள் அர்ச்சுனன் மேல் பாய்ந்தன. ஆனால், அர்ச்சுனனின் திறமை இயல்பாய் இல்லாததை கண்ணன் உணர்ந்தார்.

பீஷ்மர் மீது கொண்ட அன்பினால் அப்படி இருப்பதாய் எண்ணிய கண்ணன், தானே பீஷ்மரைத் தாக்க எண்ணி தேரை நிறுத்தி, சுதர்சன சக்கரத்தைக் கையில் ஏந்தி பீஷ்மரை நோக்கி போனார். இதைக் கண்ட பீஷ்மர் ஆனந்தம் அடைந்தார். கண்ணன் கையால் மரணமா? அதை வரவேற்கிறேன் என்று மகிழ்ந்தார்.

அர்ச்சுனன், கண்ணனின் செயல் கண்டு மனம் பதறி ஓடோடி கண்ணனிடம் சென்று காலைப் பிடித்துக் கொண்டு நீங்கள் ஏன் ஆயுதம் ஏந்த வேண்டும்? நான் போரிடேன் என்ற உங்கள் சபதம் என்னவாயிற்று? என்னை உற்சாகப் படுத்த இச்செயலா? அப்படியாயின் இதோ புறப்பட்டேன். சினம் வேண்டாம் என வேண்டினான்.

கண்ணனின் ஆவேசம் தணிந்தது. பின் அர்ஜுனனின் காண்டீபம் இடியென முழங்கியது. யானைகள் சாய்ந்தன. குதிரைகள் வீழ்ந்தன. காலாட் படையினர் சரிந்தனர். மாலை நெருங்க அன்றைய போர் முடிவுக்கு வந்தது.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 18, 2011 12:30 pm

பகுதி முப்பத்தி மூன்று : தினவாரியான யுத்தம் தொடர்ச்சி :

நான்காம் நாள் யுத்தம் :

பீஷ்மர் வியாளம் என்ற வியூகத்தை அமைத்தார். ஐந்து பனைகளை அடையாளமாக உடைய கொடியுடன் போர் புரிந்தார். அனுமானைச் சின்னமாகக் கொண்ட கொடியுடன், அனுமானின் பேராற்றலுடன் போரிட்டான் அர்ஜூனன். அபிமன்யு போர் முனைக்கு வந்தான். அவனைப் பூரிசிரவசு, அஸ்வத்தாமா, சல்லியன் ஆகியோர் எதிர்த்துப் போர் புரிந்தனர். ஒரு புறம் பீமன், துரியோதனின் தம்பியர் எண்மரைக் கொன்றான். தன் கதையால் யானைகளை வீழ்த்தினான். பீமனின் மைந்தன் கடோத்கஜன் வெற்றி மேல் வெற்றி பெற்றான். துரியோதனின் வீரர்கள் சோர்ந்து போயினர். பலர் மாண்டனர்.

தம் மக்கள் மாண்டது குறித்து திருதிராட்டினன் மனம் கலங்கியது.

நான்காம் நாள் போர் நின்றது. பீஷ்மரைக் காணச் சென்ற துரியோதனன், நீங்களும், துரோணரும், கிருபரும் இருந்தும் என் தம்பியர் மாண்டனரே! பல வீரர்கள் உயிர் இழந்தனரே, பாண்டவர்கள் வெற்றியின் ரகசியம் என்ன?

இது குறித்து பலமுறை உன்னிடம் சொல்லி இருக்கிறேன். பாண்டவர்களுடன் சமாதானமாகப் போவதே நன்று என வற்புறுத்தி இருக்கிறேன். எங்கு கண்ணன் உள்ளாரோ, அங்கு தர்மம் இருக்கிறது. எங்கு தர்மம் இருக்கிறதோ அங்கு வெற்றி இருக்கிறது. இப்போதும் காலம் கடந்து விடவில்லை. போரைக் கைவிட்டு அவர்களுடன் இணை. இல்லையேல் மீளாத்துயரில் ஆழ்வாய் என்றார் பீஷ்மர்.

துரியோதனன் இணங்கினான் இல்லை.

ஐந்தாம் நாள் போர்

பீஷ்மர் மகர வியூகம் வகுத்தார். வடிவத்தில் இது முதலைப்போல் இருக்கும். திருஷ்டத்துய்மன் சியேன வியூகம் அமைத்தான். இது பருந்து போன்றது. பல ஆயிரம் பேர் மாண்டனர். துரியோதனன், துரோணரைப் பார்த்து, குருவே நீர் பாண்டவர்களைக் கொல்லும் செயலில் ஈடுபடுங்கள். உம்மையும், பீஷ்மரையுமே நான் நம்பியுள்ளேன் என்றான்.

அதற்கு துரோணர் பாண்டவரிடம் பகை வேண்டாம் என பலமுறை சொல்லியும் ஏற்கவில்லை நீ. ஆயினும் என்னால் இயன்ற அளவு போரிடுவேன் என்றார்.

சாத்யகியும், பீமனும் துரோணருடன் சண்டையிட, அர்ச்சுனன் அஸ்வத்தாமாவுடன் போரிட்டான். அபிமன்யூ துரியோதனனின் மகன் லட்சுமணனுடன் போரிட்டான். சூரியன் மறைய அன்றைய போர் முடிந்தது.

ஆறாம் நாள் யுத்தம் :

போரில் திருஷ்டத்துய்மன் மகர வியூகம் அமைத்தான். பீஷ்மர் கிரௌஞ்ச வியூகம் அமைத்தார். ஒருவருடன் ஒருவர் போர் புரிந்தனர். பீமன் அன்று சிறப்பாக போரிட்டான். பகைவர்களைக் கொன்று குவித்தான். துரியோதனன் பீமனுடன் போர் புரிய நெருங்கினான். அதைக் கண்ட பீமன் துரியோதனா, நீ இங்குத்தான் இருக்கிறாயா? உன்னைப் போர்க் களம் எங்கும் தேடி அலைந்தேன். இன்றுடன் உன் வாழ்வு முடிந்தது என்று கூறி அவன் தேர்க் கொடியை அறுத்துத் தள்ளினான். பெரும் போருக்குப் பின் துரியோதனன் சோர்ந்து வீழ்ந்தான். சூரியன் மறைய அன்றைய போர் நின்றது.

ஏழாம் நாள் யுத்தம் :

ஆறாம் நாள் போரில் மயங்கி விழுந்த துரியோதனன் மயக்கம் தெளிந்து பீஷ்மரிடம் முறையிட்டான். எனது அச்சமும், சோர்வும் என்னைவிட்டு அகவில்லை. உங்கள் உதவி இல்லையேல் எப்படி வெற்றி பெறுவேன் எனக் கெஞ்சிக் கேட்டான். பீஷ்மர், தன்னால் முடிந்த அளவிற்கு போரிடுவதாகக் கூறி பாண்டவர்களை எதிர்த்தார். துரியோதனன், உடலெங்கும் புண்பட்டு வருந்தினான்.

துரோணருக்கும், விராடன் மைந்தனுக்கும் நடந்த போரில் அம் மைந்தன் மாண்டான். ஒரு புறம் நகுலனும், சகாதேவனும் சேர்ந்து சல்லியனை எதிர்த்து போரிட்டனர். அவன் மயக்கம் அடைந்தான். பழைய பகையைத் தீர்த்துக் கொள்ளக் கருதிய சிகண்டி பீஷ்மருடன் போரிட்டான். கடுமையாய் இருந்த போர். சூரியன் மறைய முடிவுக்கு வந்தது. அன்று இரவு கிருஷ்ணருடைய வேணுகானம் புண்பட்ட வீரர்க்கு இதமாக இருந்தது.

எட்டாம் நாள் யுத்தம் :

பீஷ்மர் மகர வியூகம் அமைத்தார். அது கடல் போல் காட்சி அளித்தது. நாற்சந்தி போன்ற சிருங்கடக வியூகத்தை திருஷ்டத்துய்மன் வகுத்தான். இது வலுவானது. பகைவரின் வியூகம் எதுவானாலும் அதைச் சிதறச் செய்யும் ஆற்றல் உடையது. பீமன் துரியோதனன் தம்பியர் எண்மரைக் கொன்றான். அது கண்டு துரியோதனனும், திருதிராட்டிரனும் வருந்தினர். கௌரவர்கள் படை தோல்வி மேல் தோல்வி கண்டது.

அன்று நடந்த போரில் பீமன் யானைப் படையை அழித்தான். கடோத்கஜன் வீரர்கள் பலரைக் கொன்றான். துரியோதனனை எதிர்த்து கடும் போர் செய்து, அவன் தேரை அழித்தான். அவன் மார்பில் அம்புகளைச் செலுத்தினான். ரத்தம் பீரிட்டது. ஆயினும் துரியோதனன் கலங்காது நின்றான். கடோத்கஜன் போர் வலிமைக் கண்டு துரோணர் முதலானோர் கடோத்கஜனைத் தாக்கினர். பீமன் தன் மகனுக்கு உதவிட விரைந்தான். பீமன் மேலும் துரியோதனன் தம்பியர் எண்மரைக் கொன்றான். இதுவரை பீமன் துரியோதனன் தம்பியர் இருபத்தினான்கு பேரைக் கொன்றிருந்தான். இரவு வர அன்றைய போர் நின்றது.

ஒன்பதாம் நாள் யுத்தம் :

பீஷ்மர் சர்வதோபத்ர வியூகம் வகுத்தார். பாண்டவர்களும் அதற்கேற்ப ஒரு வியூகம் வகுத்தனர். பார்த்தனின் சண்டைமுன் கௌரவர் படை பரிதாபமாக காட்சி அளித்தது. அபிமன்யூவும் போரில் பல வீரர்களைக் கொன்றான். திரௌபதியின் புதல்வர்கள் ஐவரும் அபிமன்யூவுடன் சேர்ந்து அவனுக்கு துணை நின்றனர். அனைவரும் அலம்புசன் என்பவனுடன் போர் புரிந்தனர். அவனோ மாயப்போர் புரிந்தான். எங்கும் இருள் சூழும்படி அம்பு மழை பொழிந்தான். அபிமன்யூ மாற்றுப் அம்பால் மாயையை விலக்கி அலம்புசனைத் தாக்கினான். அலம்புசன் போர்க்களம் விட்டு ஓடினான்.

துரோணருக்கும், அர்ச்சுனனுக்கும் போர் மூண்டது. குருவும், தன் சீடன் என எண்ணவில்லை. சீடனும், இவர் எனது குரு என எண்ணவில்லை. பின் பாண்டவர்கள் ஒன்று கூடிப் பாட்டனாராகிய பீஷ்மரை எதிர்த்தனர். ஆயினும் பீஷ்மரை அசைக்க முடியவில்லை.

பாண்டவர்கள் முயற்சி, தளர்ச்சி ஆனதை அறிந்து கண்ணன் சக்கரத்தை கையில் ஏந்தினார். பீஷ்மரை வீழ்த்த எண்ணம் கொண்டார். தம்மை நோக்கி பரந்தாமன் வருவதுக் கண்டு பீஷ்மர், கண்ணா என் உயிருக்கு விடுதலை வேண்டுகிறேன் என வேண்டிக் கொண்டார்.

பரமனைத் தொடர்ந்து ஓடிய பார்த்தன், போர்க்களத்தில் ஆயுதம் ஏந்த மாட்டேன் என்ற கண்ணனின் பிரதிக்ஞையை நினைவூட்டினான்.

சூரியன் சாய அன்றைய போர் முடிந்தது.

அன்று இரவு பாண்டவர்கள் கண்ணனை வணங்கி, இதுவரை நடைபெற்ற போரில் பீஷ்மரை வெல்ல முடியவில்லையே என்ற கவலையை வெளியிட்டனர். நீண்ட யோசனைக்குப் பின், அவரை வெல்வது குறித்து அவரையேக் கேட்க முடிவெடுத்தனர். பின் பீஷ்மர் இருக்குமிடம் சென்று வணங்கினர். பீஷ்மர் அனைவரையும் அன்புடன் தழுவிக் கொண்டார். பின் அர்ச்சுனன், தாத்தா, போர் தொடக்கத்திற்கு முன் உங்களுக்கு வெற்றி கிடைக்கட்டும் என வாழ்த்தினீர்கள். தங்களை வென்றால்தானே எங்களுக்கு வெற்றி? தங்களைத் தோற்கடிப்பது எப்படி?' என்றான்.

அதற்கு பீஷ்மர் நான் போரில் புறமுதுகு காட்டி ஓடுபவரோடோ, ஆயுதம் இல்லாதவரோடோ, பெண்ணோடோ, பேடியினிகளிடனோடோ போரிட மாட்டேன். பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறிய சிகண்டியை முன் நிறுத்தி நாளை என்னுடன் போரிடு. சிகண்டியின் முன் என் ஆயுதம் பலனன்றி போய்விடும். அப்போது நீ என்னை எதிர்த்துப் போர் செய். வெற்றி கிட்டும் என்றார்.

கங்கை மைந்தன் கூற்றைக் கேட்டு பாண்டவர்கள் அமைதியாகப் பாசறைக்குத் திரும்பினர்.

பத்தாம் நாள் யுத்தம் :

பீஷ்மர் வீழ்ச்சி அடையும் நாள் வந்தது. கௌரவர்கள் அசுர வியூகத்தை அமைக்க, பாண்டவர்கள் தேவ வியூகத்தை அமைத்தனர். சிகண்டியை முன் நிறுத்திப் பாண்டவர்களின் படை முன்னேறியது. இதுவரை இல்லாத பாதுகாப்பு இன்று பீஷ்மருக்கு இருந்தது. சிகண்டியின் அம்புகள் பீஷ்மர் மார்பில் பாய்ந்தன. விரதப்படி பீஷ்மர் சிகண்டியைத் தாக்கவில்லை. ஆயுதம் ஏதும் கையில் இல்லை. அர்ச்சுனன் அம்பு செலுத்தி, பீஷ்மரின் கவசத்தைப் பிளந்தான். வில்லை முறித்தான். அவரின் வேலாயுதத்தையும், கதாயுதத்தையும் தகர்த்தான். அர்ச்சுனனின் அம்புகள் பீஷ்மரின் உடலெங்கும் தைத்தன.

தேரிலிருந்து பீஷ்மர் சாய்ந்த போது தேவர்கள் மலர் மழை பொழிந்தனர். இரு தரப்பாரும் பீஷ்மரின் வீழ்ச்சிக் கண்டு திகைத்தனர். கீழே வீழ்ந்தவரின் உடல் தரையில் படவில்லை. உடம்பில் தைத்திருந்த அம்புகள், அவர் உடல் பூமியில் படாது தடுத்தன. அவரைக் கௌரவிக்க, கங்காதேவி, பல ரிஷிகளை அனுப்பினாள். அன்னப் பறவை வடிவம் தாங்கி அவர்கள் பீஷ்மரிடம் வந்து பணிந்து சென்றனர். அவர் உத்தராயண புண்ணிய காலம் வரை உயிருடன் இருக்கத் தீர்மானித்திருந்தார். இப்படி மரணத்தைத் தள்ளிப்போடும் வரத்தை தந்தை சாந்தனுவிடமிருந்து பெற்றிருந்தார்.

அவர் உடல் பூமியில் படவில்லையாயினும், தலை தொங்கி இருந்தது. அருகில் இருந்தோர் தலயணைக் கொணர்ந்தனர். ஆனால் அவற்றை விரும்பாத பீஷ்மர் அர்ச்சுனனைப் பார்த்தார். அர்ச்சுனன் மூன்று அம்புகளை வில்லில் பொருத்தி வானத்தில் செலுத்தினான். அவை, நுனிப்பகுதி மேலாகவும், அடிப்பகுதி தரையில் பொருந்துமாறும் அமைந்து பீஷ்மரின் தலையைத் தாங்கின. பீஷ்மர் புன்னகை பூத்தார்.

பீஷ்மருக்கு தாகம் எடுத்தது. பல மன்னர்கள் தண்ணீர் கொணர்ந்தனர். பீஷ்மர் அர்ச்சுனனை நோக்கினார். குறிப்புணர்ந்த அர்ச்சுனன், அம்பு ஒன்றை பூமியில் செலுத்தினான். கங்கை மேலே பீரிட்டு வந்தது தன் மகனின் தாகம் தீர்க்க.

பீஷ்மர், பின் துரியோதனனைப் பார்த்து, அர்ச்சுனனின் ஆற்றலைப் பார்த்தாயா? தெய்வ பலம் பெற்றவன் இவன். இவனிடம் சிவனின் பாசுபதக் கணையும் உள்ளது. விஷ்ணுவின் நாராயணக் கணையும் உள்ளது. அது மட்டுமின்றி, அனுமனின் ஆற்றலைப் பெற்ற பீமனின் வல்லமையும் உனக்குத் தெரியும். இப்போதேனும் நீ சமாதானமாய் போய் விடு. அவர்கள் நாட்டை அவர்களிடம் ஒப்படைத்து விடு. இப்போர் என்னுடன் முடியட்டும் என்றார். அவரின் அறிவுரையை அவன் ஏற்கவில்லை.

பீஷ்மர் தன்னை அவமதித்தால் கர்ணன் அவர்பால் கோபம் கொண்டிருந்தான். ஆனால், போர்க்களத்தில் அவரது வீரத்தைக் கண்டு அவன் கோபம் மறைந்தது. அதுவே கர்ணனின் பெருந்தன்மையான குணமாக இருந்தது. பீஷ்மரின் வீரம் அவனைக் கவர்ந்தது. விரோதிகளிடம் கூட இருக்கும் நேர்மையை மற்றும் நல்ல குணங்களை அவன் போற்றினான். சாவுப் படுக்கையில் இருந்த பீஷ்மரைக் காணச் சென்றான்.

கர்ணன் : பிதாமகரே, உங்களுக்கு மரியாதை செய்ய கர்ணன் வந்திருக்கிறேன்.

பீஷ்மர் : (கண்களில் கண்ணீர் வழிய, ஒரு தந்தை மகனைத் தழுவுவது போல தழுவிக் கொண்டார்). கர்ணா, நான் உன்னை வெறுப்பதாக நினைக்கிறாய் அல்லவா?? எனக்கு உன்னிடம் சிறிதளவு கூட விரோதம் கிடையாது. நீ சிறந்த வீரன் என்பதை நான் அறிவேன். நீ கடவுளைப் போன்றவன். வீரத்திலும், தீரத்திலும் உனக்கு இணையானவர் கிடையாது. யுத்தக் கலையில் நீ அர்ஜுனனுக்கும், கிருஷ்ணனுக்கும் இணையானவன். ஆனால் நீ உன் வீரத்தின் மீ கர்வம் கொண்டவன். உன் கர்வத்தைப் போக்கவே நான் உன்னை கடிந்து கொண்டேன்.

இதைக் கேட்ட கர்ணன் குரல் அன்பினால் கம்மியது.

கர்ணன் : நான் அறியாமையாலோ, அல்லது அதனால் வந்த கோபத்தாலோ உங்களை கடிந்து பேசியிருந்தால் இந்த தேரோட்டி மகனை மன்னியுங்கள் பிதாமகரே.

பீஷ்மர் : போதும் கர்ணா.. உன் பிறப்பின் ரகசியம் நான் அறிவேன். நீயும் என்னை தாத்தா என்றே அழை. நான் சொல்வதைக் கேள் கர்ணா..

கர்ணன் : பீஷ்மர் உண்மையை அறிந்தவர் என்பதை அறிந்த கர்ணன்.. ஆச்சிர்யப்படுகிறான். சொல்லுங்கள் தாத்தா...

பீஷ்மர் : கௌரவர்களால் யுத்தத்தில் ஜெயிக்க முடியாது. நீ உன் தம்பிமார்களுடன் சேர்ந்துகொள். துரியோதனனை யுத்தம் செய்வதிலிருந்து விலக ஆலோசனை கூறு. அப்படி நீ செய்வாயானால், அனைவரும் அமைதியுடன் இருக்கலாம்.

கர்ணன் : என்னை மன்னியுங்கள் தாத்தா. பதிமூன்று வருடங்கள் நான் துரியோதனனின் அரவணைப்பில், அவனது உப்பைத் தின்று உடல் வளர்த்திருக்கிறேன். இப்போது சண்டை என வரும்போது நான் என் தம்பிகளுடன் சேர்ந்து விட்டால், அது நான் என் நண்பனுக்கு செய்யும் துரோகம் அல்லவா??? இந்த உலகம் என்னை மன்னிக்குமா?? முதலில் என் மனம் என்னை கொன்றுவிடாதா?? என்னால் அது இயலாது தாத்தா.

முடிவை நான் அறிந்தே இருந்தாலும், நான் துரியோதனுக்கு எதிராக யுத்தம் செய்ய மாட்டேன் தாத்தா. நீங்கள் சொல்லி நான் மறுக்க வேண்டிய நிலைக்காக என்னை மன்னியுங்கள்.

பீஷ்மர் : அறம் முடிவில் வெல்லும். நீ விரும்பியபடியே செய் கர்ணா, எனக் கூறி ஓய்வுக்காய் தன் கண்களை மூடினார் பீஷ்மர். கர்ணனும் தன் இருப்பிடம் திரும்பினான்.

(கர்ணன் யுத்த களத்தில் இறங்குவான் நாளை.....)



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 18, 2011 12:30 pm

பகுதி முப்பத்தி நாளில் ஒன்று : தினவாரியான யுத்தத்தின் தொடர்ச்சி :


பதினோராம் நாள் யுத்தம் :


பத்தாம் நாள் போர் கௌரவர்களுக்கு அதிர்ச்சியாய் இருந்தது. பீஷ்மர் வீழ்ச்சிக்குப் பின் யார் தலைமை ஏற்று போர் தொடர்வது என்ற சிந்தனை எழுந்தது. பீஷ்மரின் வீழ்ச்சிக்குப் பின்னர் களம் இறங்குவதாக சொன்னதின்படி கர்ணன் களம் இறங்கினான்.

கர்ணனை பிரதம தளபதியாக்க ஒரு சாரர் கருத்து தெரிவித்தாலும், கர்ணன் குரு துரோணர் தளபதியாக இருக்கட்டும் எனக் கூறினான். எனவே பதிரோனாம் நாளில் இருந்து பதினைந்தாம் நாள் வரை துரோணர் தளபதியாக இருந்தார். துரியோதனன், கர்ணன் மற்றும் துரோனரிடம் எப்படியாவது தருமரை உயிருடன் பிடித்து என்னிடம் ஒப்படையுங்கள் என வேண்டினான்.

தருமரை உயிருடன் பிடித்து விட்டால், அவரை மீண்டும் சூதாட வைத்து, தோற்கடித்து, ஆயுட்காலம் முழுதும் வனவாசம் என்று அனுப்பி விடலாம் என்று திட்டமிட்டான் துரியோதனன்.

இந்த் செய்தி ஒற்றர்கள் மூலம் பாண்டவர்களை எட்டியது. அதனால், தருமருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. துரோணர் சகட வியூகம் வகுத்தார். பாண்டவர்கள் கிரௌஞ்ச வியூகம் வகுத்தனர்.

கர்ணன் களம் இறங்குகிறான் என்றதும், கலக்கத்தில் இருந்தனர் பாண்டவ படையினர். கண்ணனின் ஆலோசைனையின் பேரில், பீமனின் மகனான கடோத்கஜனை போரிட அழைத்தனர்.

கர்ணன் கால பதித்த இடம் எல்லாம் காலனின் ஆட்சியாகவே இருந்தது. அவன் சென்ற வழியில் எல்லாம் ஆயிரக்கணக்கான வீரர்கள் மடிந்தனர்.

அன்றைய போரில் அபிமன்யூவின் கை ஓங்கியது. அவனுக்குத் துணையாக கடோத்கஜன் இறங்கினான். துரியோதனின் லட்சியத்தை நிறைவேற்ற துரோணர் தருமர் மீதே குறியாக இருந்தார். இதை உணர்ந்து அர்ச்சுனன் தருமர் அருகே வந்தான். பீமனும் தருமரை காப்பதில் ஈடுபட்டான்.

அபிமன்யூவின் போர்த்திறன் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அவன் துரியோதனனின் மகன் லட்சுமணனைத் தாக்கி அவனைப் பிடித்துத் தேர்ச் சக்கரத்தில் கட்டிக் கொண்டு திரும்பினான். இதனை அறிந்த சல்லியன் அபிமன்யூவைத் தடுத்து நிறுத்திப் போரிட்டான். சல்லியனின் வில்லையும் தேரையும் முறித்தான் அபிமன்யூ.

இந்நிலையில் சூரியன் மறைந்தான். போர் நின்றது.

பனிரெண்டாம் நாள் யுத்தம்:

தருமரை உயிருடன் பிடிக்க வேண்டுமானால், அர்ஜுனர் அவர் பக்கம் இருக்கக் கூடாது எனவே அவனை திசை திருப்ப வேண்டும் என திட்டம் தீட்டி, திரிகர்த்த வேந்தனாகிய சுசர்மன் மற்றும் அவனது சகோதரர்கள் சத்தியரதன், சத்தியவர்மன், சத்தியகர்மன் ஆகியோர், தென்திசையில் இருந்து அர்ஜுனனுக்கு சவாய் விட்டனர். அர்ஜுனன், பாஞ்சால நாட்டு மன்னன துருபதனின் சகோதரன் சத்தியஜித்திடம் தருமரை பாதுகாக்கும் பொறுப்பை ஒப்படைத்து விட்டு சவால் விட்டவர்களை எதிர்க்கச் சென்றான்.

மும்மரமாக நடைபெற்ற அன்றைய போரில் கண்ணனின் திறமையால், அர்ஜுனனின் ரதம், யுத்தகளத்தின் அனைத்து பகுதிகளிலும் சுழன்றது. கௌரவர்களும் வெற்றி அல்லது வீரமரணம் எனப் போரிட்டனர். திரிகர்த்த வேந்தனை வெல்ல முயற்சித்து, அது பலிக்காததால், வாயு அஸ்திரத்தை ஏவி, அனைவரையும் வீழ்த்தினான் அர்ஜுனன். அதிலே சுசர்மன் மட்டும் தப்பினான்.

அந்தப் போரை முடித்துக் கொண்டு அர்ஜுனன், தருமரைக் காக்கும் பொருட்டு, துரோணரை எதிர்த்தான். துரோணரின் திறமை அன்றைக்கு அனைத்துப் போரையும் கவர்ந்தது. தன்னை எதிர்த்த அனைவரையும் அவர், தன் ஆற்றல் முழுவதும் காட்டி எதிர்த்தார். துரோணரை முறியடிக்க திஷ்டத்துய்மன் வந்தான். தன் மரணம் இவன் கையில் என அறிந்திருந்த துரோணர், அவனைத் தவிர்த்தார்.

அதே நேரத்தில் சத்யஜித் தன் திறமை முழுதும் காட்டி தருமரைக் காக்க முற்பட்டான். அவனுக்கும் துரோணருக்கும் நடந்த போர் தீவிரமாக இருந்தது. முடிவில் சத்தியஜித் மரணத்தை தழுவினான். அதைக் கண்ட விராட மன்னனின் தம்பி சதாணீகன் துரோணரை எதிர்க்க கோபமுற்ற துரோணர், ஒரே அம்பில் அவன் தலையைக் கொய்தார்.


துரோணர், தருமரை சிறை பிடித்து விடுவாரோ என பயந்த பீமன் அங்கே வந்தான். அவன் மீது பல யானைகளை ஏவினான் துரியோதனன். அவைகளைப் பந்தாடினான் பீமன்.

அங்கே பகதத்தன் தன் சுப்ரதீபம் எனும் யானையில் வந்து பீமானுடன் போரிட்டான். அந்த யானை பீமனின் தேரைத் தகர்த்தது. பின்னர் அது பீமனை தன் துதிக்கையால் தூக்கி எரிய முற்பட்டது. அப்போது பீமன் அதன் மர்மஸ்தானத்தில் தாக்கினான். அந்த வலியிலும் அது அவனைக் காலால் மிதித்துக் கொள்ள முற்பட்டது. ஆனாலும் பீமன் அதனிடம் இருந்து தப்பினான். பின்னர் அந்த யானை அபிமன்யுவின் தேரை தூள் தூளாக்கியது. சாத்யகியின் தேறும் அதே நிலைக்கு வந்தது.

யானையின் அட்டகாசம் கண்ட அர்ஜுனன் அங்கே விரைந்து வந்தான். அர்ஜுனன் பகதத்தனுடன் கடும் போர் புரிந்தான். பீமன் அந்த யானையின் மீது பாய்ந்து அதனுடன் சண்டை இட்டான். அர்ஜுனன் தன் ஒரு அம்பால் யானையின் கவசத்தை உடைக்க, அதன் பின்னர் பீமன் அந்த யானையைக் கொன்றான்.

ஒரு கடுமையான போருக்கு பின்னர், அர்ஜுனன் எய்த ஒரு அம்பு மாவீரன் பகதத்தனைக் கொன்றது.

பின்னர் அர்ஜுனன் திருதிராஷ்டிர மன்னனின் மைத்துனர்கலான அசலன், விகுஷன் ஆகியோரைக் கொன்றான். சகோதரர்களின் மரணத்தை அறிந்த சகுனி மாயையால் இருள் பரவச் செய்தான். அது அர்ஜுனனின் ஒரு ஒளிமயக் கணையால் நீங்கியது. சகுனி பயந்து வேறிடம் நோக்கி நகர்ந்தான். தருமரை பிடித்து விடலாம் என்ற துரோணரின் கனவு பலிக்கவில்லை.

கௌரவர்கள் கலங்க, பாண்டவர்கள் மகிழ அன்றைய போர் ஒரு முடிவுக்கு வந்தது.

அன்றைய போர் கண்டு சினம் கொண்ட துரியோதனன், துரோனரிடம் சென்று வாக்கு தவறியதாக கடுமையாகப் பேசினான். இதனால் துரோணர் கோபம அடைந்து, அவர்களுடன் சண்டை வேண்டாம் என ஆயிரம் முறை சொன்னபோது கேட்காத நீ இப்படி பேசாதே எனக் கூறினார். அதைக் கேட்ட துரியோதனன் பணிந்து அவரிடம் எப்படியாவது தருமரைப் பிடித்துத் தாருங்கள் என வேண்டினான்.

அதைரியப்படாதே துரியோதனா.. நாள் ஒரு உன்னதப் போர் முறையக் கையாளப் போகிறேன். நீ எப்படியாவது அர்ஜுனனை இங்கே இல்லாமல் செய்துவிடு. பின்னர் தருமரை நான் உனக்கு பிடித்துத் தருகிறேன் என்றார்.

துரோணரின் பேச்சில் நம்பிக்கை வர துரியோதனன் சென்றான்


பதிமூன்றாம் நாள் யுத்தம் :


துரோணர் தன் படைகளை பத்மவியூகத்தில் அமைத்தார். இருப்பதிலே மிகவும் சிக்கலானது இது. அர்ஜுனனுக்கும், கண்ணனுக்கும் மட்டுமே அதை உடைக்கத் தெரியும், அவர்கள் அங்கே இல்லை. துரோணர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, துரியோதனன் ஆட்கள், தென்திசையில் அர்ஜுனனுக்கு அழைப்பு விடுக்க, அவன் அங்கே செல்கிறான்.

அர்ஜூனனின் மகன் அபிமன்யூ, அவரது தாயின் வயிற்றில் இருந்தபோது அர்ஜூனன் அவரது தாய் சுபத்ராவிற்கு சக்கரவியூகம் ஏற்பாடுகளைப் பற்றிக் கூறியபோது கேட்டதால், அவனுக்கு சக்கரவியூகம் பற்றி பகுதியளவு தெரியும். சுபத்ரா முதல் பகுதிய விளக்கங்களைக் கூறும்போது மட்டுமே விழிப்புடன் இருந்தார் அதன் பின்னர் அவர் தூங்கிவிட்டார். எனவே அபிமன்யூவிற்கு அந்த அமைப்பிற்குள் நுழைவது எவ்வாறு என்பது மட்டுமே தெரியும். ஆனால் அதிலிருந்து தான் எவ்வாறு வெளிவருவது என்பது தெரியாது. எனவே, நான்கு பாண்டவ சகோதரர்களும் அர்ஜூனன் மற்றும் கிருஷ்ணர் இல்லாததால் அபிமன்யூவைத் தலைமையாகக் கொண்டு சக்ரவியூகத்தில் நுழைய முடிவுசெய்தனர்.

வெகுவிரைவில் அபிமன்யூ சக்ரவியூகத்தில் நுழைந்தான். ஆனால் பாண்டவர்களின் திட்டப்படி மற்ற வீரர்கள் உள்ளே நுழையும் முன்னே, வியூகம் உடைபட்ட இடம் அடைக்கப் பட்டது ஜயத்ரதன் மூலம். சிவபெருமானிடம் பெற்ற வரத்தின் படி, ஒரு நாள் முழுதும் பாண்டவர்களை எதிர்க்கும் வலு அவருக்கு உண்டு.

அதனால், அபிமன்யு தனி ஒருவனாய், துரோணர், கிருபர், கர்ணன், அசுவத்தாமா, துரியோதனன் ஆகியோரை எதிர்த்தான். ஆனால் விரைவிலேயே நேர்வழியில் அவனுடன் போராடி வெல்ல முடியாது என்பதை அறிந்த துரோணர், பின்னிருந்து அவனைத் தாக்கினார். அவனது தேர்க் குதிரைகளை வெட்டினார். அதைக் கண்ட அவன், வாளையும், கேடையத்தையும் எடுத்துக் கொண்டு நூற்றுக்கணக்கான வீரர்களை வெட்டி வீழ்த்தினான். துரோணர் பின்னிருந்து அவன் வாளை உடைக்க, கர்ணனும் அவ்வாறே அவன் கேடையத்தை உடைத்தான்.

எல்லாம் இழந்தாலும், நெஞ்சுரம் இழக்காது, ஒரு கதாயுதத்தை கையில் ஏந்தி அசுவத்தாமாவை விரட்டினான். யுத்த விதிகளுக்கு புறம்பாகவே அபிமன்யு அழிக்கப்பட்டான்.

தென்திசையில் எதிரிகளை அழித்துத் திரும்பிய அர்ஜுனன் இதைக் கேட்டு மயங்கி விழுந்தான். இதன் மூல காரணம் ஜயத்ரதன் என அறிந்தான். அடுத்தநாள் அந்தி சாய்வதற்குள், அவனை மடிப்பேன் அல்லது என் உயிர் மாய்ப்பேன் இது சத்தியம் என தன் காண்டீபத்தின் மீது சத்தியம் செய்தான். அப்போது அந்த ஒலியில பூமியே அதிர்ந்ததாய் கூறுவதும் உண்டு.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக