ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by இரா.பகவதி Today at 9:21 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by முத்துராஜ் Today at 9:14 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Today at 9:06 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:59 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 8:51 pm

» விவாகரத்து
by முஹைதீன் Today at 8:39 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Today at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Today at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Today at 8:25 pm

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by Aathira Today at 8:21 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Today at 8:21 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Aathira Today at 8:17 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by முஹைதீன் Today at 8:13 pm

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by பிஜிராமன் Today at 8:10 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Today at 8:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by முஹைதீன் Today at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Today at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Today at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Today at 7:45 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by balakarthik Today at 7:41 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:31 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Today at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 7:05 pm

» மதுரை மாவட்டம்
by முஹைதீன் Today at 6:48 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Today at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Today at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Today at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Today at 6:27 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 6:24 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Today at 6:22 pm

» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Today at 6:12 pm

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by ஜேன் செல்வகுமார் Today at 6:07 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by ஜேன் செல்வகுமார் Today at 6:04 pm

» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by கேசவன் Today at 6:03 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by முரளிராஜா Today at 6:02 pm

» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by யினியவன் Today at 5:56 pm

» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முஹைதீன் Today at 5:55 pm

» ஈகரையின் கோடிங் ரகசியம் பற்றி அறிய தாருங்கள் !
by வின்சீலன் Today at 5:48 pm

» முருங்கை
by vvraman2008 Today at 5:40 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

அறிவுகெட்ட சிங்கமும் அறிவுள்ள முயலும்

View previous topic View next topic Go down

அறிவுகெட்ட சிங்கமும் அறிவுள்ள முயலும்

Post by Admin on Tue Nov 04, 2008 11:51 am

ஒரு காட்டில் உடல் கொழுத்து பலம் மிகுந்த சிங்கம் ஒன்று வசித்த வந்தது.

அந்தச் சிங்கம் ஒரு வரைமுறையின்றி நாள்தோறும் கண்முன் தென்படும் விலங்குகளையெல்லாம் அடித்துக் கொன்ற தின்று வந்தது.

பசியாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் கண்முன் தென்படும் விலங்குகளைக் கொன்று அழிப்பது அதன் பொழுது போக்காக இருந்தது.

சிங்கத்தின் அந்த அக்கிரமச் செயலால் பீதியும், கவலையும் அடைந்த வனவிலங்குகள் ஒருநாள் ஒன்று திரண்டு சிங்கத்திடம் சென்றன.

அனைத்து விலங்குகளும் சிங்கத்திடம் மண்டியிட்டு வணங்கி அரசப் பெருமானே. தங்கள் குடிமக்களாகிய எங்களைக் காத்து ரட்சிக்க வேண்டிய தாங்கள் எங்கள் இனத்தவர்களைக் கண்டபடி அழித்து நிர்மூலப் படுத்துவது நியாயமாகுமா ?

மன்னராகிய தாங்கள் பசி நீங்கப் பெற்றவராக உடல் வலிமை மிக்கவராக இருந்தால்தான் எங்களுக்கு நிச்சயமான பாதுகாப்பு கிட்டும் என்பதை ஒப்புக் கொள்கிறோம். எங்களைப் போன்ற விலங்குகள் தான் உங்களுக்கு உணவாக முடியும் என்பதையும் மறுக்கவில்லை. ஆனால் எதற்கும் ஓர் எல்லை உண்டு அல்லவா ? தங்களுக்குத் தேவையாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், எங்களைக் கொன்றழிப்பது தங்களின் விளையாட்டு என்று ஆகிவிட்டால் நாங்கள அனைவரும் பூண்டற்றுப் போய் விடுவோம், அப்போது தாங்கள் பசி நீங்க வழியில்லாமல் பட்டினி கிடக்க வேண்டி நேரிடும் அல்லவா!

இவ்வாறெல்லாம் வன விலங்குகள் மிகவும் பணிவுடன் கூறின.

சரி நான் என்ன செய்ய வேண்டுமென்ற எதிர்பார்க்கிறீர்கள் ? என்று சிங்கம் கேட்டது.

மகிமை மிக்க மன்னவா, நமக்குள் ஓர் ஏற்பாடு செய்துக் கொள்வோம். இன்று முதல் தங்களுடைய உணவு நேரத்தில் நாஙகள் முறை வைத்துக் கொண்டு எங்களில் ஒருவரை உணவாக அனுப்புகிறோம். தாங்கள் அதோடு அன்றைய தினம் திருப்தியடைந்து விட வேண்டும். தாங்கள் இந்த ஏற்பாட்டுக்கு ஒப்புக்கொண்டால் எங்கள் குலமும் படு நாசத்திலிருந்து தப்பிப் பிழைக்கும், தங்களுக்கும் தட்டின்றி வாழ்நாள் முழுவதும் உணவு கிடைத்துக் கொண்டே இருக்கும்.

இவ்வாறு வன விலங்குகள் ஒருமித்த மனத்துடன் ஒரு திட்டத்தைச் சிங்கத்திடம் சமர்ப்பித்தன.

சிங்கம் யோசித்துப் பார்த்தது.

காட்டில் வன விலங்குகள் எல்லாம் ஒரு குறுகிய காலத்தில் பூண்டற்று போனால் அப்புறம் பசிக்கு விலங்குகள் கிடைக்காமலேயே போய்விடும். ஆகவே விலங்குகளின் கோரிக்கையை ஏற்பதுதான் நல்லது என்ற முடிவுக்குச் சிங்கம் வந்தது.

Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 2960
வசிப்பிடம்: தேவகோட்டை
சேர்ந்தது: 23/09/2008
மதிப்பீடு: 42

http://www.eegarai.net

Back to top Go down

Re: அறிவுகெட்ட சிங்கமும் அறிவுள்ள முயலும்

Post by Admin on Tue Nov 04, 2008 11:52 am

பிறகு வன விலங்குகளை நோக்கி, நீங்கள் இத்தனை பேர் திரண்டு வந்து முறையிடும்போது உங்கள் திட்டத்தை மறுதலிக்க மனம் வரவில்லை. நீங்கள் கூறியவாறு என் பசி நேரத்திற்கு கொஞ்சம்கூட காலம் தாழ்த்தாமல் உங்களில் ஒருவர் வந்தாக வேண்டும். இந்த ஏற்பாட்டில் ஒருநாள் குழப்பம் ஏற்பட்டால் கூட, உங்கள் அனைவரையும் கொன்று தீர்த்து விடுவேன் என்று சிங்கம் கூறிற்று.

சொன்னதை நிச்சயம் நிறைவேற்றுவதாக விலங்குகள் வாக்குறுதி அளித்துவிட்டுத் தத்தம் இருப்பிடம் நோக்கிச் சென்றன.

பிறகு விலங்குகள் தனியாக ஒன்று கூடிப் பேசி ஒவ்வொருநாளும் இனவாரியாக ஒரு விலங்கை அனுப்புவது என்றும், எந்த நாள் எந்த இன விலங்கு சிங்கத்துக்கு இரையாகப் போக வேண்டுமென்றும் ஒருமித்த கருத்துடன் தீர்மானம் செய்தன.

அந்த தீர்மான வழி ஒவ்வொரு நாளும் இன வாரியாக ஒரு விலங்கு சென்று சிங்கத்துக்கு இரையாகி வந்தது.

கிராமப்படி ஒருநாள் முயல் இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு சிங்கத்திற்கு இரையாகச் செல்ல வேண்டும்.

ஒரு முயலைத் தேர்ந்தெடுத்து பிற விலங்குகள் சிங்கத்திடம் அனுப்பி வைத்தன.

அந்த முயல் உருவத்தில் சிறியதாகவும் வயதில் இளைதாகவும் இருந்தாலும் நல்ல அறிவாற்றலும் - தந்திர புத்தி கொண்டதாகவும் விளங்கியது.

அன்று தான் சிங்கத்திற்கு இரையாகச் செல்ல வேண்டும்.

இன்று நான் சிங்கத்துக்கு இரையாகாமல் தப்பித்துக் கொள்வதோடு ஏதாவது தந்திரம் செய்து சிங்கத்தையும் கொன்றழிக்க வேண்டுமென்று முயல் தீர்மானித்தது.

மிகவும் தீர்க்கமாக யோசித்த தந்திரத்துடன் கூடிய ஒரு திட்டத்தை வகுத்தது.

வேண்டுமென்றே சிங்கத்தின் உணவு வேலை தவறி நேரங்கழித்து முயல் மிகவும் சோர்வுற்றிருப்பது போல பாவனை செய்தவாறு சிங்கத்தின் முன்னிலையில் சென்று நின்றது.

ஏற்கனவே கடும் பசியினால் அவதியுற்றிருந்த சிங்கம் முயலைக் கண்டதும் கோபாவேசம் கொண்டது.

Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 2960
வசிப்பிடம்: தேவகோட்டை
சேர்ந்தது: 23/09/2008
மதிப்பீடு: 42

http://www.eegarai.net

Back to top Go down

Re: அறிவுகெட்ட சிங்கமும் அறிவுள்ள முயலும்

Post by Admin on Tue Nov 04, 2008 11:53 am

அற்பப் பிராணியே உனக்கு எவ்வளவு நெ்சழுத்தம் ? என் பசியைப் பொருட்படுத்தாத அளவுக்கு அவ்வளவு ஆணவமா உனக்கு இனி. விலங்குகள் சமர்ப்பித்த திட்டத்துக்கு மதிப்பு கொடுக்க மாட்டேன். முதலில் உன்னைக் கொல்லப் போகிறேன். இன்று மாலைக்குள் இந்த காட்டிலுள்ள அத்தனை விலங்குகளையும் கொன்று அழித்து நிர்மூலமாக்குகிறேன். என்று கூறிக் காடே அதிரும் வண்ணம் கர்ஜனை புரிந்தது.

முயல் நடுநடுங்குவது போல பாவனை செய்து என் மீது சிறு தவறும் இல்லை. வழியில் என்னை மடக்கி மிரட்டிய ஒரு சிங்கந்தான் நான் நேரங்கழித்து வந்ததற்குக் காரணம் என்று கூறிற்று.

இந்தக் காட்டின் மற்றொரு சிங்கமா ? என்ன உளறுகின்றாய். இந்தக் காட்டுக்கு நான் மட்டுமே அல்லவா ஏக சக்ராதிபதி என்று சிங்கம் இரைச்சல் போட்டது.

மன்னர் பெருமானே, நான் கூறுவது முற்றிலும் உண்மை. வழியில் ஒரு சிங்கம் வழி மறைத்து என்னைக் கொன்று தின்ன வந்தது. நான் சிங்கத்தைத் தடுத்து தங்கள் பெருமையும் புகழையும் எடுத்துக் கூறி காட்டு விலங்குகளுக்கும் தங்களுகட்கும் இடையே உள்ள ஒப்பந்தத்தைப்பற்றித் தெரிவித்தேன். அந்தச் சிஙகம் அட்டகாசமாகச் சிரித்து, இந்த காட்டின் ஏக சர்ராதிபதியாக நான் இருக்க எந்த அறிவு கெட்டவன் உங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டான் என்ற ஆத்திரத்துடன் கேட்டது. நான் பயந்து போய் அந்தச்சிங்கத்தை வணங்கி உங்கள் விவகாரம் எனக்குத் தெரியாது. தாங்கள் விரும்பினால் எங்களக்கு மன்னராக இருக்கும் சிங்கத்தை அழைத்து வருகிறேன். நீங்கள் இருவரும் நேருக்குநேராகப் பேசிக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டுத்தப்பித்தோம் - பிழைத்தோம் என்று ஓடி வந்தேன் என்று முயல் மிகவும் சாதுரியமாக - சாமர்த்தியமாக ஒரு கதையைக் கூறிற்று.

அதைக் கேட்ட சிங்கம் கோபாவேசம் அடைந்து, வா, அந்த அடிமுட்டாள் இருக்குமிடத்திற்குச் செல்வோம். அவனை எனக்குக் காண்பி. ஒரே நொடியில் அவனைத் துவம்சம் செய்து நார் நாராகக் கிழித்துப் போடுகிறேன் என்றது.

முயல் சிங்கத்தை அழைத்துக்கொண்டு ஒரு பாழ்கிணற்றருகே சென்றது.

அந்தக் கிணற்றில் அழுகி முடை நாற்றமெடுத்துக் கிடந்த நீர் நிறைய இருந்தது.

முயல் சிங்கத்தை நோக்கி, மகாராஜா, நான் சொன்ன சிங்கம் இந்தக் கிணற்றுக்குள் தான் அமர்ந்திருக்கின்றது என்று கூறியது.

அப்படியா! அவனை நான் கவனித்துக் கொள்கிறேன் என்று கூறியவாறு சிங்கம் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தது.

கிணற்றினுள் அதன் நீரில் சிங்கத்தின் பிரதி பிம்பம் தெரிந்தது.

அதன் பிரதி பிம்ப உருவந்தான் தனக்கு வந்து வாய்த்த எதிரி என்று எண்ணிக் கொண்ட சிங்கம் ஆவேசத்துடன் கர்ஜனை செய்தவாறு கிணற்றுக்குள் பாய்ந்தது.

அடுத்த கணம் சிங்கம் நீரில் மூழ்கிவிட அதன் கால்கள் சேற்றில் சிக்கிக் கொண்டன.

மூச்சுவிட முடியாமல் திணறி சிங்கம் சற்று நேரத்திற்கெல்லாம் இறந்து போய் விட்டது.

உடனே முயல் விரைந்து சென்ற மற்ற விலங்குகளிடம் தான் தந்திரமாக சிங்கத்தைக் கொன்ற அழித்த செய்தியைக் கூறியது.

வன விலங்குகள் அனைத்தும் பேரானந்தம் அடைந்து முயலுக்கு நன்றி கூறி வாழ்த்தின.

அறிவாற்றலும் விடா முயற்சியும் இருந்தால் உலகத்தில் சாதிக்க முடியாத காரியங்களே இல்லை.

Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 2960
வசிப்பிடம்: தேவகோட்டை
சேர்ந்தது: 23/09/2008
மதிப்பீடு: 42

http://www.eegarai.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum