ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by இரா.பகவதி Today at 9:21 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by முத்துராஜ் Today at 9:14 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Today at 9:06 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:59 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 8:51 pm

» விவாகரத்து
by முஹைதீன் Today at 8:39 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Today at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Today at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Today at 8:25 pm

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by Aathira Today at 8:21 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Today at 8:21 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Aathira Today at 8:17 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by முஹைதீன் Today at 8:13 pm

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by பிஜிராமன் Today at 8:10 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Today at 8:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by முஹைதீன் Today at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Today at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Today at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Today at 7:45 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by balakarthik Today at 7:41 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:31 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Today at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 7:05 pm

» மதுரை மாவட்டம்
by முஹைதீன் Today at 6:48 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Today at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Today at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Today at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Today at 6:27 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 6:24 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Today at 6:22 pm

» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Today at 6:12 pm

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by ஜேன் செல்வகுமார் Today at 6:07 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by ஜேன் செல்வகுமார் Today at 6:04 pm

» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by கேசவன் Today at 6:03 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by முரளிராஜா Today at 6:02 pm

» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by யினியவன் Today at 5:56 pm

» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முஹைதீன் Today at 5:55 pm

» ஈகரையின் கோடிங் ரகசியம் பற்றி அறிய தாருங்கள் !
by வின்சீலன் Today at 5:48 pm

» முருங்கை
by vvraman2008 Today at 5:40 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

ஆப்பைப் பிடுங்கியது குரங்கு

Post new topic   Reply to topic

View previous topic View next topic Go down

ஆப்பைப் பிடுங்கியது குரங்கு

Post by Admin on Tue Nov 04, 2008 11:56 am

ஓரிடத்தில் பெரிய கட்டிடம் ஒன்று கட்டும் வேலை நடைபெற்றுக் கொண்டிருந்தது.

மதிய உணவு உண்ணுவதற்காக வேலைக்காரன் வெளியே சென்றிருந்த சமயம், சில குரங்குகள் அந்த இடத்திற்குக் வட்டமாக வந்தன.

கட்டிடத்திற்கான மர வேலை நடைபெற்று வந்த இடத்திற்குக் குரங்குகள் போய்ச் சேர்ந்தன.

அங்கே ஒரு பெரிய மரம் சிறிதளவு பிளக்கப்பட்டு அதில் ஆப்பு நன்று சொருகி அடித்து வைக்கப்பட்டிருந்தது.

அந்தப் பக்கம் பார்த்த ஒரு குரங்கு மற்றொரு குரங்கிடம், அதோ பார், அர்த்தமில்லாமல் ஒரு மரப் பிளவில் யாரோ ஆப்பைச் சொருகி வைத்திருக்கிறார்கள் என்று கூறிற்று.

இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டுமே. அதனால் நமக்கென்ன நஷ்டம் என்று மற்றொரு குரங்கு கூறிற்று.

அனாவசியமான சொருகப்பட்டிருக்கும் அந்த ஆப்பைப் பிடுங்கி எறியப் போகிறேன் என்று கூறியவாறு முதல் குரங்கு அந்த மரத்தின்மீது ஏறி அமர்ந்து ஆப்பை சிறுகச் சிறுக அசைத்துப் பிடுங்கலாயிற்று.

ஆப்பு விடுபட்டதும் பிளவுபட்ட மரப் பலகை சடாரென்று ஒன்று சேர்ந்தது.

அதனுள் குரங்கின் விதைகள் சிக்கிக் கொள்ளவே குரங்கு துடிதுடித்துச் செத்தது.

தனக்குச் சம்பந்தப்படாத விவகாரத்தில் தலையிட்டதால்தான் குரங்கு வீணாக தன் உயிரைவிட நேர்ந்தது.

Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 2960
வசிப்பிடம்: தேவகோட்டை
சேர்ந்தது: 23/09/2008
மதிப்பீடு: 42

http://www.eegarai.net

Back to top Go down

ஆபத்தில் உதவிய எலிகள்

Post by Admin on Tue Nov 04, 2008 11:56 am

ஒரு சிறிய கிராமம் நெடுநாட்களாகப் பாழடைந்து கிடந்தது. அங்கே மனிதர்கள் யாருமே வாசம் செய்ய வில்லை. வீடுகள் எல்லாம் இடிந்தும், பாழடைந்தும் கிடந்தன. எங்கு பார்த்தாலும் சிறுசிறு செடி கொடிகள் முளைத்திருந்தன.

அந்தப் பாழடைந்த கிராமத்தில் ஏராளமான எலிகள் வசித்து வந்தன.

யாராலும், எந்தவித இடையூறும் ஏற்பட வழியில்லாததால் நூற்றுக்கணக்கில் எலிகள் நிம்மதியாகவும் இன்பமாகவும் அங்கே வாழ்ந்து வந்தன. அந்தப் பாழடைந்த கிராமத்தை ஒட்டி பெரிய ஏரி ஒன்று இருந்தது.

ஒரு நாள் நூற்றுக்கணக்கான யானைகள் அந்த பாழடைந்த கிராமத்து இடிபாடுகள் வழியாக உட்புகுந்து ஏரியில் நீர் அருந்தச் சென்றன.

ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான யானைகள் அந்த பக்கமாக நடந்து சென்றதால் அங்கே பரவலாக வசித்து வந்த எலிகள் பாடு பேராபத்துக்கு இலக்காக நேர்ந்தது.

ஏராளமான எலிகள் யானையின் காலடியில் சிக்கி மடிந்து போயின. நீர் அருந்தச் சென்ற யானைகள் திரும்பி வரும்போது நிச்சயம் தங்கள் இனம் முழுவதுமே அழிந்துவிட நேரிடும் என அவை அ்சின.

ஆகவே உயிர் தப்பிய எலிகள் அனைத்தும் ஒன்றுகூடி யோசனை செய்தன. நேரே ஏரிக்குச் சென்று அங்கு நீர் அருந்தும் யானைக் கூட்டத்திடம் தங்கள் நிலையைச் சொல்லலாம் என அவை தீர்மானித்தன. பிறகு அவைகளில் ஒன்று திரண்டு ஏரியை நோக்கிச் சென்றன.

எலிகள் யானைக் கூட்டத்தைச் சந்தித்தன. யானைகளுக்கெல்லாம் அரசனாக இருந்த யானையை நோக்கி, ஐயா நாங்கள் அருகாமையில் இருக்கும் பாழடைந்த கிராமத்தில் வாசம் செய்கின்றோம். சற்றுமுன் உங்கள் கூட்டத்தினர் அந்தப் பக்கமாக வந்தபோது எங்கள் இனத்து எலிகள் நூற்றுக்கணக்கில் உயிரிழந்து விட்டன. இதேபோல நீங்களெல்லாம் திரும்பி வரும்போது மிச்சமிருக்கும் நாங்கள் அனைவருமே அழிந்துபோய் விடுவது நிச்சயம். இவ்வாறு காரணமில்லாமல் நூற்றுக்கணக்கான உயிர்கள் படுநாசமடைவதற்கு உங்கள் யானைக் கூட்டம் காரணமாக இருப்பதால் உங்களுக்கு ஒருபயனும் இல்லை. இதற்குப் பதிலாக நாங்கள் அனைவரும் உயிர் வாழ உதவினால் உங்களுக்கு ஏதாவது ஆபத்து ஏற்படும் சமயம் நாங்கள் அனைவரும் உங்கள் உதவிக்கு வருவோம் எனக் கூறின.

Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 2960
வசிப்பிடம்: தேவகோட்டை
சேர்ந்தது: 23/09/2008
மதிப்பீடு: 42

http://www.eegarai.net

Back to top Go down

Re: ஆப்பைப் பிடுங்கியது குரங்கு

Post by Admin on Tue Nov 04, 2008 11:57 am

யானைகளின் அரசன் எலிகளின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டது. நாங்கள் திரும்பிச் செல்லும் போது வேறு வழி வழியாகப் போய் விடுகிறோம். நீங்கள் எல்லோரும் கவலையை விடுத்து நிம்மதியாகச் செல்லுங்கள் என்று கூறிற்று.

எலிகள் யானைகளுக்கு நன்றி கூறிவிட்டு தங்கள் இருப்பிடம் சென்றன. யானைகளும் எலிகளுக்கு அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றும் விதத்தில் வேறு வழியாகத் திரும்பிச் சென்று விட்டன.

பல நாட்களுக்குப் பிறகு அரசன் ஒருவன் தன் யானைப் படை அணிகளில் சேர்ப்பதற்காக ஏராளமான காட்டு யானைகளைப் பிடித்து வருமாறு தமது அலுவலர்களுக்கு உத்தரவிட்டான்.
அலுவலர்கள் காட்டுக்குச் சென்று, உறுதியான கயிறுகளைக் கொண்டு அமைக்கப்பட்ட கண்ணி வலையை விரித்துக் கட்டிவிட்டு, அந்தப் பக்கமாக யானைக் கூட்டத்தை விரட்டினர்.

திரண்டு ஓடிவந்த யானைகள் கண்ணி வலையில் நன்கு சிக்கிக் கொண்டன. யானைகளை அப்படியே சில நாட்களுக்குப் பட்டினி கிடக்குமாறு விட்டுவைத்தால் அவை அடங்கி கட்டுப்படும் என்று யானைகளை அப்படியே விட்டுவிட்டு அலுவலர்கள் அரண்மனை சென்று விட்டனர்.

யானைகளின் அரசனுக்கு எலிகள் அளித்த வாக்குறுதி நினைவுக்கு வந்தது. கண்ணி வலையில் சிக்காத ஒரு யானையை எலிகள் இருக்குமிடத்திற்கு அனுப்பி யானைகள் கண்ணியில் சிக்கிக் கொண்ட செய்தியை அவைகளிடம் சொல்லி வருமாறு யானை அரசன் பணித்தது.

யானை விரைந்து சென்று எலிகளைச் சந்தித்து யானைகளுக்கு ஏற்பட்ட ஆபத்தை எடுத்துச் சொல்லி யானை அரசனின் வேண்டுகோளையும் தெரிவித்தது. ஏறத்தாழ ஆயிரம் எலிகள் ஒரே சமயத்தில் திரண்டு காட்டை நோக்கி விரைந்தன. யானைகள் சிறைப்பட்டுக் கிடந்த இடத்தை அடைந்ததும் மிகவும் துரிதமாக வலையைக் கடித்து நூற்றுக் கணக்கான யானைகளை விடுவித்தன.

யானை அரசன் எலிகளின் உதவிக்காக அவைகளுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டது.

Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 2960
வசிப்பிடம்: தேவகோட்டை
சேர்ந்தது: 23/09/2008
மதிப்பீடு: 42

http://www.eegarai.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum