ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by இரா.பகவதி Today at 9:31 pm

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by கே. பாலா Today at 9:28 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by முத்துராஜ் Today at 9:14 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Today at 9:06 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:59 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 8:51 pm

» விவாகரத்து
by முஹைதீன் Today at 8:39 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Today at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Today at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Today at 8:25 pm

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by Aathira Today at 8:21 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Today at 8:21 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Aathira Today at 8:17 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by முஹைதீன் Today at 8:13 pm

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by பிஜிராமன் Today at 8:10 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Today at 8:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by முஹைதீன் Today at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Today at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Today at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Today at 7:45 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by balakarthik Today at 7:41 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:31 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Today at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 7:05 pm

» மதுரை மாவட்டம்
by முஹைதீன் Today at 6:48 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Today at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Today at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Today at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Today at 6:27 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 6:24 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Today at 6:22 pm

» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Today at 6:12 pm

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by ஜேன் செல்வகுமார் Today at 6:07 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by ஜேன் செல்வகுமார் Today at 6:04 pm

» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by கேசவன் Today at 6:03 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by முரளிராஜா Today at 6:02 pm

» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by யினியவன் Today at 5:56 pm

» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முஹைதீன் Today at 5:55 pm

» ஈகரையின் கோடிங் ரகசியம் பற்றி அறிய தாருங்கள் !
by வின்சீலன் Today at 5:48 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

உண்மையான நண்பர்கள்

View previous topic View next topic Go down

உண்மையான நண்பர்கள்

Post by Admin on Tue Nov 04, 2008 12:09 pm

பெரிய காடு உண்டு. அந்தக் காட்டிலிருந்த ஒரு மரத்தின் கிளையில் ஆணும் பெண்ணுமான இரண்டு குருவிகள் கூடுகட்டிக் குடும்பம் நடத்தி வாழ்ந்து வந்தன.

பெண் குருவி, கூட்டில் பல முட்டைகளை இட்டு வைத்திருந்தது.

ஒருநாள் பகல்நேரத்தில் அந்தப் பக்கமாக ஒரு பெரிய யானை வந்தது.

நிழலுக்காக மரத்தடியில் நின்ற யானை விளையாட்டாகத் தனது துதிக்கையை உயரே தூக்கி துதிக்கைக்க எட்டக்கூடிய மரக்கிளைகளையெல்லாம் ஒடித்துக் கீழே போட்டுக் கொண்டிருந்தது.

அவ்வாறு ஒடிந்து விழுந்த கிளைகளில் குருவி கூடு கட்டியிருந்த கிளையும் ஒன்று.

கிளை கிழே விழுந்த காரணத்தால் குருவிக் கூட்டில் இருந்த முட்டைகள் அனைத்தும் கீழே விழுந்து நாசமாகி விட்டன.

நல்ல வேளையாக குருவிகள் இரண்டும் தப்பித்துக் கொண்டன.

தான் இட்ட முட்டைகள் அனைத்தும உடைந்து பாழாகி விட்டதைக் கண்டு பெண் குருவி வேதனை தாள மாட்டாது கதறி அழுதது.

பெண் குருவியின் பரிதாப ஓலத்தைக் கேட்டு, அதன் தோழியான மரங்கொத்திக் குருவி ஒன்று விரைந்து வந்து அதற்கு ஆறுதல் கூறலாயிற்று.

தோழி, நடந்துபோன துயர நிகழ்ச்சியை எண்ணியெண்ணி அழுவதனால் என்ன பிரயோசனம்?

அறிவுள்ளவர்கள் இறந்துபோன அன்புக்கு உரியவர்களைப் பற்றியும், காணாமல் போன தங்கள் அரிய பொருட்கள் பற்றியும் கலக்கமடைந்து வருந்த மாட்டார்கள்.

இறந்துபோன நமது அன்பிற்கு உரியவர்களை நினைத்து நாம் வருந்தினால் மேல் உலகில் இருக்கும் அவர்கள் ஆத்மா யானையை எவ்விதமாவது பழி வாங்க முயற்சிப்பதுதான் நல்லது.

இவ்வாறு மரங்கொத்தி பறவை கூறியதைக் கேட்டதும் பெண் குருவி, தோழி நீ சொல்வதும் உண்மைதான். இழந்த முட்டைகளைப் பற்றி அனாவசியமாக எதற்காகச் சிந்திக்க வேண்டும் ? அதற்குப் பதிலாக என் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்ட யானையின் உயிரை வாங்கிப் பழி தீர்க்க வேண்டும். அதற்கு ஏதாவது வழியிருக்கிறதா என்று தான் யோசிக்க வேண்டும் என்று கூறிற்று.

Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 2960
வசிப்பிடம்: தேவகோட்டை
சேர்ந்தது: 23/09/2008
மதிப்பீடு: 42

http://www.eegarai.net

Back to top Go down

Re: உண்மையான நண்பர்கள்

Post by Admin on Tue Nov 04, 2008 12:10 pm

தோழி, உண்மைதான். யானையைக் கொல்லுவதற்கு ஏதாவது ஒரு உபாயம் கண்டு பிடித்துத்தான் ஆக வேண்டும். இந்த மாதிரி விஷயங்களில் ஒத்துழைப்பு தருபவர்கள்தான் உண்மையான நண்பர்களாக இருக்க முடியும்.

துன்பம் நேரும்போது உதவி செய்பவன் தான் உண்மையான நண்பன். செல்வம் இருக்கும்போது தெருவில் செல்வோர் எல்லாம் நம்மிடம் நட்புக் கொள்ள வருவார்கள். அவ்வாறு வரும் நண்பர்களினால் ஒரு பயனும் இல்லை.

பசியினால் பரிதவித்துக் கொண்டிருக்கும்போது வயிறார உணவு கொடுத்து உபசரிப்பவனை தந்தையாகவும், கடவுளாகவும் கூடக் கருதலாம். கணவன் வறுமையினாலும், நோயினாலும் வாழும் சமயத்தில் முகம் சுழிக்காமல் மனப்பூர்வமாக கணவனைப் பேணிக் காப்பவள் - கணவன் மனங் கோணாமல் நடப்பவள் தான் கற்புடைய பத்தினிப் பெண்ணாகும்.

ஆகவே நீ மனத் துயரினால் வருந்தும் இந்தச் சமயத்தில் உனக்கு உதவும் வாய்ப்பு கிடைத்ததை பெரும் பாக்கியமாகவே கருதுகின்றேன்.

யானை ஒரு பெரிய விலங்கு, நீயோ நானோ மட்டுமே முயற்சிப்பதனால் அதனைக் கொன்றுவிட முடியாது. உண்மையான நண்பர்கள் பலரது உதவியினையும் கோரிப் பெற வேண்டும்.

எனக்கு மிகவும் நெருக்கமான நண்பனாக ஓர் ஈ உள்ளது நல்ல கல்வியறிவும், உலக அனுபவமும் உள்ள அந்த ஈயிடம் உன்னை அழைத்துச் செல்லுகின்றேன். அதனுடைய ஆலோசனையும் உதவியும் நமக்குப் பேருதவியாக இருக்கும் எனக் கூறிய மரங்கொத்திப் பறவை குருவியை அழைத்துக் கொண்டு தன்னுடைய நண்பனான ஈயிடம் சென்றது.

மரங்கொத்திப் பறவை ஈயிடம் குருவிக்கு ஏற்பட்டிருக்கும் மனத் துயரத்தைப் பற்றி எடுத்துக் கூறி யானையைக் கொன்றால் தான் பெண் குருவியின் மனம் நிம்மதியடையும் என்றும் மொழிந்தது.

உங்கள் பேச்சையெல்லாம் கேட்டதும் உண்மையாகவே என் மனம் பெரிதும் துயர் உறுகின்றது. எனக்கு மிகவும் உயிர்த் தோழனான ஒரு தவளை இருக்கின்றது. அதனிடம் உங்களை அழைத்துச் செல்லுகிறேன். என்னைவிட நல்ல அறிவாற்றல் நிறைந்தது அது எனக் கூறி ஈ அனைவரையும் தவளையிடம் அழைத்துச் சென்றது.

தவளை தமது இல்லம் நாடிவந்த அனைவரையும் வரவேற்று அவர்கள் வந்த காரணத்தைக் கேட்டுத் தெரிந்து கொண்டது.

உலகத்தில் சிலர் தான் தங்களுக்கு பலமும், பணமும் செல்வாக்கும் இருக்கின்றது என்பதற்காக எளிய ஜீவன்களை பல வகையிலும் தொல்லை கொடுத்து வதைத்து துன்புறத்துகின்றனர். நம்மைப் போன்ற எளிய - பலவீனமான உயிர்களுக்கும் ஒரு வகையில் வல்லமை உண்டு என்பதை நாம் நிரூபித்துக் காண்பித்து அந்த யானையைக் கொல்ல வேண்டும். யானையைக் கொல்வது நம்மால் சாதிக்கக்கூடிய காரியமே.

Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 2960
வசிப்பிடம்: தேவகோட்டை
சேர்ந்தது: 23/09/2008
மதிப்பீடு: 42

http://www.eegarai.net

Back to top Go down

Re: உண்மையான நண்பர்கள்

Post by Admin on Tue Nov 04, 2008 12:10 pm

நான் சொல்லும் யோசனையைக் காது கொடுத்துக் கேட்டு ஒவ்வொருவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

அன்புடைய ஈயே நீ அந்த யானை இருக்குமிடம் சென்று அதன் காதில் இனிமையாக ரீங்காரம் செய் அந்த இன்னிசையில் மயங்கி யானை தன் கண்களை மூடிக் கொண்டு மெய் மறந்திருக்கும்.

மரங்கொத்தியே அந்தச் சமயத்தில் நீ சென்று வேகமாக யானையின் கண்களின் உறுதியான தோலை நன்றாகக் கொத்தி, அதனைப் பார்வையிழக்கச் செய்து விட வேண்டும்.

பிறகு நான் ஒரு பெரிய பள்ளத்தின் அருகேயிருந்து கத்துகிறேன்.

கண்களைக் கொத்திய மரங்கொத்தி தான் அங்கிருக்கிறது என்று எண்ணி யானை கோபத்துடன் ஓடிவரும். வந்த வேகத்தில் பள்ளத்தில் விழுந்து விடும்.

அவ்வளவுதான், அதன் கதை முடிந்து விடும். அந்த யானை பள்ளத்தினுள் பல நாட்கள் பட்டினியாகக் கிடந்து இறந்து விடும்.

இவ்வாறு தவளை திட்டத்தை விவரித்துக் கூறியது.

தவளை கூறிய யோசனைப்படி எல்லோரும் கூட்டாக இருந்து செயற்பட்டு அந்த யானையைக் கொன்று பழி தீர்த்துக் கொண்டார்கள்.

Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 2960
வசிப்பிடம்: தேவகோட்டை
சேர்ந்தது: 23/09/2008
மதிப்பீடு: 42

http://www.eegarai.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum