புதிய பதிவுகள்
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலைஞரின் விஞ்ஞானப்பூர்வமான கொள்ளைக்கு சாட்சி..!  Poll_c10கலைஞரின் விஞ்ஞானப்பூர்வமான கொள்ளைக்கு சாட்சி..!  Poll_m10கலைஞரின் விஞ்ஞானப்பூர்வமான கொள்ளைக்கு சாட்சி..!  Poll_c10 
30 Posts - 58%
heezulia
கலைஞரின் விஞ்ஞானப்பூர்வமான கொள்ளைக்கு சாட்சி..!  Poll_c10கலைஞரின் விஞ்ஞானப்பூர்வமான கொள்ளைக்கு சாட்சி..!  Poll_m10கலைஞரின் விஞ்ஞானப்பூர்வமான கொள்ளைக்கு சாட்சி..!  Poll_c10 
20 Posts - 38%
Manimegala
கலைஞரின் விஞ்ஞானப்பூர்வமான கொள்ளைக்கு சாட்சி..!  Poll_c10கலைஞரின் விஞ்ஞானப்பூர்வமான கொள்ளைக்கு சாட்சி..!  Poll_m10கலைஞரின் விஞ்ஞானப்பூர்வமான கொள்ளைக்கு சாட்சி..!  Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
கலைஞரின் விஞ்ஞானப்பூர்வமான கொள்ளைக்கு சாட்சி..!  Poll_c10கலைஞரின் விஞ்ஞானப்பூர்வமான கொள்ளைக்கு சாட்சி..!  Poll_m10கலைஞரின் விஞ்ஞானப்பூர்வமான கொள்ளைக்கு சாட்சி..!  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கலைஞரின் விஞ்ஞானப்பூர்வமான கொள்ளைக்கு சாட்சி..!  Poll_c10கலைஞரின் விஞ்ஞானப்பூர்வமான கொள்ளைக்கு சாட்சி..!  Poll_m10கலைஞரின் விஞ்ஞானப்பூர்வமான கொள்ளைக்கு சாட்சி..!  Poll_c10 
150 Posts - 50%
ayyasamy ram
கலைஞரின் விஞ்ஞானப்பூர்வமான கொள்ளைக்கு சாட்சி..!  Poll_c10கலைஞரின் விஞ்ஞானப்பூர்வமான கொள்ளைக்கு சாட்சி..!  Poll_m10கலைஞரின் விஞ்ஞானப்பூர்வமான கொள்ளைக்கு சாட்சி..!  Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
கலைஞரின் விஞ்ஞானப்பூர்வமான கொள்ளைக்கு சாட்சி..!  Poll_c10கலைஞரின் விஞ்ஞானப்பூர்வமான கொள்ளைக்கு சாட்சி..!  Poll_m10கலைஞரின் விஞ்ஞானப்பூர்வமான கொள்ளைக்கு சாட்சி..!  Poll_c10 
11 Posts - 4%
prajai
கலைஞரின் விஞ்ஞானப்பூர்வமான கொள்ளைக்கு சாட்சி..!  Poll_c10கலைஞரின் விஞ்ஞானப்பூர்வமான கொள்ளைக்கு சாட்சி..!  Poll_m10கலைஞரின் விஞ்ஞானப்பூர்வமான கொள்ளைக்கு சாட்சி..!  Poll_c10 
9 Posts - 3%
Jenila
கலைஞரின் விஞ்ஞானப்பூர்வமான கொள்ளைக்கு சாட்சி..!  Poll_c10கலைஞரின் விஞ்ஞானப்பூர்வமான கொள்ளைக்கு சாட்சி..!  Poll_m10கலைஞரின் விஞ்ஞானப்பூர்வமான கொள்ளைக்கு சாட்சி..!  Poll_c10 
4 Posts - 1%
Rutu
கலைஞரின் விஞ்ஞானப்பூர்வமான கொள்ளைக்கு சாட்சி..!  Poll_c10கலைஞரின் விஞ்ஞானப்பூர்வமான கொள்ளைக்கு சாட்சி..!  Poll_m10கலைஞரின் விஞ்ஞானப்பூர்வமான கொள்ளைக்கு சாட்சி..!  Poll_c10 
3 Posts - 1%
Guna.D
கலைஞரின் விஞ்ஞானப்பூர்வமான கொள்ளைக்கு சாட்சி..!  Poll_c10கலைஞரின் விஞ்ஞானப்பூர்வமான கொள்ளைக்கு சாட்சி..!  Poll_m10கலைஞரின் விஞ்ஞானப்பூர்வமான கொள்ளைக்கு சாட்சி..!  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கலைஞரின் விஞ்ஞானப்பூர்வமான கொள்ளைக்கு சாட்சி..!  Poll_c10கலைஞரின் விஞ்ஞானப்பூர்வமான கொள்ளைக்கு சாட்சி..!  Poll_m10கலைஞரின் விஞ்ஞானப்பூர்வமான கொள்ளைக்கு சாட்சி..!  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
கலைஞரின் விஞ்ஞானப்பூர்வமான கொள்ளைக்கு சாட்சி..!  Poll_c10கலைஞரின் விஞ்ஞானப்பூர்வமான கொள்ளைக்கு சாட்சி..!  Poll_m10கலைஞரின் விஞ்ஞானப்பூர்வமான கொள்ளைக்கு சாட்சி..!  Poll_c10 
2 Posts - 1%
Barushree
கலைஞரின் விஞ்ஞானப்பூர்வமான கொள்ளைக்கு சாட்சி..!  Poll_c10கலைஞரின் விஞ்ஞானப்பூர்வமான கொள்ளைக்கு சாட்சி..!  Poll_m10கலைஞரின் விஞ்ஞானப்பூர்வமான கொள்ளைக்கு சாட்சி..!  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலைஞரின் விஞ்ஞானப்பூர்வமான கொள்ளைக்கு சாட்சி..!


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Apr 11, 2011 5:58 am

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்தப் பதிவைப் படிக்கும் முன்னர்
கருணாநிதியின் வீராணம் ஊழல்-1 : சர்க்காரியா கமிஷனின் அறிக்கை! என்ற இதன் முதல் பாகத்தைக் கொஞ்சம் சோம்பேறித்தனப்படாமல் படித்துவிடுங்கள். ஏற்கெனவே படித்துவிட்டவர்கள் நேரடியாகக் களத்தில் குதிக்கலாம்..!

வீராணம் ஊழலில் சத்தியநாராயணா நிறுவனத்திற்கு அப்போதைய முதல்வர் கருணாநிதியும், பொதுப்பணித் துறை அமைச்சரும் எப்படியெல்லாம் ஆதரவாக இருந்தார்கள் என்பதை கடந்த இதழில் பார்த்தோம். இவர்கள் இருவரும் இவ்வளவு தீவிரமாக ஆதரிக்கக் காரணமென்ன..?

முரசொலி மாறனுக்கு சென்னை பச்சையப்பன் கல்லூரியை நடத்தும், பச்சையப்பன் அறக்கட்டளையில் உறுப்பினராக வேண்டுமென விருப்பம் இருந்தது. அதனால் பச்சையப்பன் அறக்கட்டளையில் உறுப்பினராக இருந்த சத்தியநாராயணா பிரதர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சத்தியநாராயணாவின் மருமகன் புருஷோத்தம் என்பவரோடு மாறன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார்.

கலைஞரின் விஞ்ஞானப்பூர்வமான கொள்ளைக்கு சாட்சி..!  Murasolimaran


முரசொலி மாறன், முதலமைச்சரி்ன் மருமகன் என்பதால், புருஷோத்தமும் அவருடன் நெருங்கிப் பழகுகிறார். 1970 ஜனவரி மாதம் பச்சையப்பன் டிரஸ்ட் அறங்காவலராக இருந்த எம்.ஏ.எம்.முத்தையா செட்டியார் இறக்கிறார். அந்தக் காலியிடம் தனக்கு வேண்டும் என்று புருஷோத்தமிடம் மாறன் தெரிவிக்கிறார். முதலமைச்சரின் மருமகனை எதிர்த்து வேறு யாரும் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட முடியுமா என்ன..? மாறனின் பெயரை புருஷோத்தம் முன் மொழிய மாறன் ஆசைப்படி அவர் பச்சையப்பன் அறக்கட்டளையின் உறுப்பினராகிறார். சில நாட்களிலேயே அந்த அறக்கட்டளையின் தலைவர் பதவியையும் மாறன் கைப்பற்றுகிறார்.

தலைவர் பதவியை மாறனுக்கு விட்டுக் கொடுத்த புருஷோத்தம் பதிலுக்கு வீராணம் குழாய்கள் அமைக்கும் பணியை தனக்கு பெற்றுத் தருமாறு கேட்கிறார். "நான் கான்ட்ராக்ட் வாங்கித் தருகிறேன். எனக்கு இரண்டரை சதவிகிதத்தை கமிஷனாகத் தர வேண்டும்.." என்று மாறன் கேட்கிறார். உடனே கணக்குப் போட்டு வீராணம் திட்டத்தின் மொத்தத் திட்டச் செலவான 16 கோடியில் இரண்டரை சதவிகிதமான 40 லட்சம் ரூபாயை தனக்குக் கொடுத்து விடுமாறு கேட்கிறார். புருஷோத்தமும் அதற்கு ஒப்புக் கொள்கிறார்.

பேச்சுவார்த்தை முடிந்ததும் சத்தியநாராயணா பிரதர்ஸ் நிறுவனத்திற்கு பூர்வாங்கமாக ஒப்பந்தம் வழங்கி ஒரு உத்தரவு வேண்டுமென்று கேட்கிறார்கள். மாறன் மட்டும் சளைத்தவரா என்ன..? "உங்களுக்கு அதுபோல உத்தரவு வழங்கப்படும். அதற்கு முன்னால் பேசிய தொகை 40 லட்சம் ரூபாய் வேண்டும்" என்கிறார்.

புருஷோத்தம் தன் மாமனார் சத்தியநாராயணா ரெட்டியிடம் இந்தத் தகவலைத் தெரிவிக்கிறார். அவர், “இவ்வளவு பெரிய தொகையை மொத்தமாகத் தர முடியாது. அதனால் கொஞ்சம் குறைத்துக் கொள்ளச் சொல்லிப் பேசு” என்கிறார்.

மாறனிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது. "மொத்தமாகத் தர முடியாது. முதலில் 10 அல்லது 15 லட்சம் ரூபாய் வாங்கிக் கொள்ளுங்கள்" என்று புருஷோத்தம் கேட்கிறார். மாறனோ, “நான் ஒன்றும் பெரிய தொகையைக் கேட்கவில்லை. 40 லட்சத்தைத்தான் கேட்டுள்ளேன். தராவிட்டால், வேறு யாருக்காவது ஒப்பந்தத்தைக் கொடுத்துவிடுவேன் என்று கூறுகிறார். (இந்தச் சமயத்தில்தான் சென்னை அண்ணா சாலையில், வீட்டோடு சேர்த்து 1240 சதுர அடி இடத்தை மாறன் 45 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கினார் என்பதில் இருந்து அப்போதைய பண மதிப்பைப் புரிந்து கொள்ளலாம்)

ஒரு வழியாக மீதித் தொகையை பின்னால் தருவது என்றும் முதல் தவணையாக ஒரு தொகை தரப்பட வேண்டும் என்றும் முடிவெடுக்கப்படுகிறது. ஒப்பந்தப் புள்ளிகள் முடிவடைவதற்கு முன்பாக பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும்போதே, புருஷோத்தமும், அவர் மாமனார் சத்தியநாராயணா ரெட்டியும் மாறனோடு சேர்ந்து கருணாநிதியின் வீட்டிற்குச் சென்று 5 லட்சம் ரூபாயை அவரிடம் வழங்குகிறார்கள்.


கலைஞரின் விஞ்ஞானப்பூர்வமான கொள்ளைக்கு சாட்சி..!  Mk-minor


இதையடுத்து, குழாய் அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக அரசிடமிருந்து சத்தியநாராயணா பிரதர்ஸுக்கு 39 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. பதிலுக்கு புருஷோத்தம் 32 லட்சம் ரூபாயை நேரடியாகவும், மாறன் மூலமாகவும் கருணாநிதியிடம் கொடுக்கிறார்.

சர்க்காரியா கமிஷன் இந்த வழக்கை விசாரித்தபோது, 32 லட்சம் ரூபாய் கறுப்புப் பணத்தில் இருந்து கருணாநிதிக்கு வழங்கப்பட்டது என்பதால், கருணாநிதியும் இக்குற்றத்திற்கு உடந்தையானவர் என்கிற வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்றெல்லாம் கருணாநிதி தரப்பில் வாதாடப்பட்டது.

ஆனால் புருஷோத்தம் தேதிவாரியாக எந்தெந்த நாட்களில் வங்கியிலிருந்து எவ்வளவு தொகை எடுக்கப்பட்டு கருணாநிதியிடம் கொடுக்கப்பட்டது என்ற விவரங்களை கமிஷன் முன் தாக்கல் செய்தார்.

ஒரு முறை கருணாநிதியிடம் நேரடியாக பணத்தை எடுத்துச் சென்று கொடுத்ததை கமிஷனிடம், “கரன்ஸி நோட்டுக்களாக 6 லட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டு மாறன் வீட்டுக்குச் சென்றோம். மாறன் கருணாநிதி வீட்டுக்கு எங்களைக் கூட்டிச் சென்றார். பணம் அடங்கிய தோல் பெட்டியை கருணாநிதி முன்னிலையில் மேசை மீது வைத்தேன். கருணாநிதி பெட்டியை எடுத்துக் கொண்டு காலி பெட்டியை திருப்பிக் கொடுத்தார்..” என்று புருஷோத்தம் விரிவாக சாட்சியம் அளித்துள்ளார்.

இந்த ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்தபோது சிவராமன் என்ற பொதுப்பணித்துறை அதிகாரி, தாராப்பூர் மற்றும் சத்தியநாராயணா பிரதர்ஸ் ஆகிய இரு நிறுவனங்களின் ஒப்பந்தப் புள்ளிகளையும் ஒப்பிட்டுப் பார்த்து முக்கியமான ஒரு விஷயத்தைச் சொன்னார்.

குழாய்கள் அமைக்கும்போது அவற்றை சோதனை செய்து பார்க்க.. 12 கோடி காலன் தண்ணீர் தேவைப்படும் என்றும், அந்தத் தண்ணீருக்கு ஆகும் செலவாக அரசு தங்களுக்கு 96 லட்சம் ரூபாய் தர வேண்டுமென்றும் சத்தியநாராயணா பிரதர்ஸ் கேட்டிருந்தனர். ஆனால் தாராப்பூர் நிறுவனமோ, இது போன்ற ஏற்பாட்டிற்கு ஆகும் செலவை தாங்களே ஏற்றுக் கொள்வதாக தெரிவித்திருந்தனர் என்பதுதான் அந்தச் செய்தி..

இந்த எதிர்ப்புகளையும், கருத்துக்களையும் மீறித்தான் சத்தியநாராயணா நிறுவனத்துக்கு வேலை ஆணை வழங்கப்பட்டது. பணத்தைத் தண்ணீராக செலவு செய்வது என்பது இதுதானா..?

வீராணம் திட்டத்தில் எவ்வளவு பணம் வீணாக செலவழிக்கப்பட்டது என மாநில கணக்காயர் குழு ஆய்வு செய்து அறிக்கையைத் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையின்படி கூடுதல் நிதிச் சலுகைகள், தவிர்க்கத்தக்க செலவு, தரக்குறைவான குழாய்கள் ஏற்பட்ட நஷ்டம், தரக்குறைவான சிமெண்ட், மேற்பார்வை பணிக்கான கூடுதல் செலவு என்று மொத்தத்தில் 7 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

கருணாநிதிக்கு மட்டும்தான் லாபமா.. இல்லையென்றால் மாறனுக்குமா என்ற கேள்வி வருகிறதே..? பதில் இதோ..! முரசொலி கட்டிடம் கட்டும் பணி சத்தியநாராயணா பிரதர்ஸின் துணை நிறுவனமான மஹாலட்சுமி கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படுகிறது. வேலையையும், கட்டுமானப் பொருட்களையும் இலவசமாகவே மாறன் பெற்றார்.

இது குறித்து கமிஷனிடம் பதிலளித்த மாறன், "மஹாலட்சுமி கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனம், சத்தியநாராயணா நிறுவனத்தின் துணை நிறுவனம் என்ற விவரம் தனக்குத் தெரியாது.." என்று பல்டியடித்தார். தன்னிடம் சிக்கியவர்களை தி.மு.க.வினர் எப்படியெல்லாம் பயன்படுத்தி கொள்ளையடித்திருக்கிறார்கள் என்பதைப் பாருங்கள்.


கலைஞரின் விஞ்ஞானப்பூர்வமான கொள்ளைக்கு சாட்சி..!  Veeranaam-3


லஞ்சம் கொடுத்து வாங்கிய வேலையை சத்தியநாராயணா நிறுவனம் சரியாகச் செய்யவில்லை. அரைகுறையாகச் செய்யப்பட்ட பணிகளால் சாலையெங்கும் குழாய்கள் கிடந்தன. இது குறித்து, கருணாநிதியின் முதன்மைச் செயலாளராக இருந்த ஆர்.நாகராஜன் கமிஷன் முன்பு அளித்த சாட்சியத்தில், “என்னைத் தனியாகச் சந்தித்த புருஷோத்தமிடம் வேலைகளை முடிக்க முடியாத அளவுக்கு நிதி நெருக்கடி எப்படி ஏற்பட்டது என்று கேட்டேன். வீராணம் திட்டத்தை எங்கள் நிறுவனத்திற்கு வழங்குவதற்காக முதலமைச்சர் கருணாநிதிக்கு 29 லட்சம் என பெருந்தொகையை லஞ்சமாகக் கொடுத்ததால் எங்கள் தொழில் புழக்கத்துக்கான பணம் தீர்ந்துபோய்விட்டது” என்று அவர் சொன்னார்..” என்று சாட்சியமளித்துள்ளார்.

ஆக்கவும், அழிக்கவும் வல்லதுதானே அரசு..?

போட்ட திட்டம் நிறைவேறவில்லை. சத்தியநாராயணா நிறுவனம் ஏறக்குறைய நொடித்துப் போய்விட்டது. ஒரு நபர் இறந்துவிட்டால், பிரேதப் பரிசோதனை செய்து, இரங்கல் கூட்டம் போட வேண்டாமா..?

5.6.1974 அன்று சத்தியநாராயணா பிரதர்ஸ் நிறுவனம் இத்திட்டத்தை நிறைவேற்றும் பணியில் ஆற்றிய சாதனைகள் குறித்து கருணாநிதி தலைமையில் ஒரு கூட்டம் கூட்டப்படுகிறது. அக்கூட்டத்தில் சத்தியநாராயணா நிறுவனம் குறித்து கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

“சத்தியநாராயணா பிரதர்ஸ் நிறுவனத்துக்குத் தேவைப்படுகின்ற நிர்வாகம் மற்றும் வல்லுநர் அமைப்பு இல்லை. கால அட்டவணைப்படி தொழிற்சாலையை நடத்துவதற்கு போதுமான நிதி வசதிகளும் இல்லை. இப்படிப்பட்ட மாபெரும் திட்டத்தை நிறைவேற்றுவதற்குரிய திறமை சத்தியநாராயணா நிறுவனத்திடம் இல்லை. அவர்கள் திறமை மீது அதிக அளவில் நம்பிக்கை வைத்து இந்தத் திட்டம் கொடுக்கப்பட்டுள்ளது..”

பிரேதப் பரிசோதனை அறிக்கை நன்றாக இருக்கிறதா..?

நிறைவேறாத திட்டத்துக்காக எப்படி ஒரு நிறுவனம் காலியானது. பார்த்தீர்களா..? இதுதான் விஞ்ஞானப்பூர்வமான மோசடி..!


நன்றி : குமுதம் ரிப்போர்ட்டர்-10-04-2011




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக