புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒசாமா புண்ணியத்தால் அமெரிக்கர்களிடையே ஒபாமா செல்வாக்கு உயர்வு
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
இஸ்லாமாபாத்: பெரும் கோடீஸ்வரக் குடும்பம் ஒன்றில், சவூதி அரேபியாவில் மகனாகப் பிறந்தார் ஒசாமா பின் லேடன். அவரது தந்தைக்கு மொத்தம் 52 குழந்தைகள். அதில் 17வது குழந்தைதான், அமெரிக்காவை நடுநடுங்க வைத்த பின்லேடன்.
கடந்த 1988-ம் ஆண்டு அவர் அல் கொய்தா என்னும் தீவிரவாத அமைப்பைத் தொடங்கினார் ஒபாமா.
2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ம் தேதி அமெரிக்காவின் வர்த்தக மையம் மற்றும் பென்டகனைத் தாக்கியதன் மூலம் உலகத்தையே உலுக்கினார். அன்று முதல் அமெரிக்கர்கள் உலகின் மிக மோசமான தீவிரவாதியாக பார்க்கத் துவங்கினர். அவர் அமெரிக்காவின் எதிரி ஆனார். அனைத்து செய்தித்தாள்களிலும், வீடியோக்களிலும் ஒசாமா பின் லேடனின் வான்டட் போஸ்டர்ஸ் தான்.
இரட்டைத் தாக்குதல்கள் நடந்த 6-வது நாள் ஒரு நிருபர் அதிபர் புஷ்ஷிடம் நீங்கள் ஒசாமா இறக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா என்று கேட்டார். அதற்கு புஷ் எனக்கு அவர் வேண்டும், நீதி வேண்டும் என்றார்.
ஒசாமாவைக் கொல்ல அமெரிக்கப் படைகளுக்கு கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகியுள்ளது. இறுதியாக பாகிஸ்தானில் வைத்து லேடன் கொல்லப்பட்டார். பின் லேடனும், அவரது கூட்டாளிகளும் இத்தனை நாட்களாக பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள டோரா-போரா மலையில் பதுங்கியிருந்தனர். அமெரிக்கப் படைகள் அந்த மலையில் குண்டு மழை பொழிந்தும் லேடன் தப்பித்து விட்டார். கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக பின் லேடன் தனது ஆதரவாளர்களின் பாதுகாப்பில் பாகிஸ்தானில் பதுங்கி இருந்து புதிய தாக்குதல்களுக்கு திட்டம் தீட்டி வந்துள்ளார்.
இஸ்லாமிய உலகத்தில் மாபெரும் ஹீரோவாக பார்க்கப்பட்ட போதிலும், இஸ்லாமியர்களின் வெறுப்பையும் பின் லேடன் சம்பாதிக்கத் தவறவில்லை. உலக தீவிரவாதத்தின் வட நட்சத்திரம் என்று அவரை அமெரிக்க மத்திய புலனாய்வுத் துறை தெரிவித்தது. ஆங்காங்கே இருந்த தீவிவாத அமைப்புகளை எல்லாம் அல் கொய்தாவுடன் இணைத்தார் ஒசாமா. எகிப்து-செசன்யா, ஏமன்-பிலிப்பைன்ஸ் ஆகிய இடங்களில் இருந்த தீவிரவாத அமைப்புகளை அல் கொய்தா அமைப்பின் கீழ் கொண்டு வந்தார்.
1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை தாலிபான்களையும், அப்போது ஆப்கானிஸ்தானை ஆண்டவர்களையும் பாதுகாக்க பின் லேடன் பணம் கொடுத்தார். அல் கொய்தா மூலம் உலகம் முழுவதும் தீவிரவாதத்தை பரப்ப எண்ணினார்.
செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு சில ஆண்டுகள் அல் கொய்தா மற்றும் அதன் தலைவர் பின் லேடனின் புகழ் உலகமெல்லாம் காட்டுத் தீ போன்று பரவியது. சில அமைப்புகள் தங்களை அல் கொய்தா என்று கூறிக் கொண்டு ஈராக்கில் இருந்த அமெரிக்கப் படைகளை தாக்கியது, பாலியில் உள்ள சுற்றுலாத் தலங்களை குண்டு வைத்து தகர்த்தது, ஸ்பெயினில் பயணிகள் ரயில்களுக்கு குண்டு வைத்தது.
பின் லேடனின் உண்மையான அதிகாரம் எவ்வளவு என்றே தெரியவில்லை. அல் கொய்தாவில் எத்தனை பேர் உள்ளனர், எத்தனை நாடுகளில் அது ஊடுருவியிருக்கிறது, பின் லேடன் கூறியதுபோல அவர்களிடம் ரசாயண, உயிரியல் மற்றும் அணு ஆயுதங்கள் உள்ளனவா என்று தெரியவில்லை.
லேடன் புது முறையில் போர் நடத்தினார். அவர் பேக்ஸ் மூலம் பத்வா அனுப்பினார். அவரிடம் அமெரிக்காவை விட அதி நவீன தொலை தொடர்பு சாதனங்கள் இருந்தது என்று ஒரு மூத்த அமெரிக்க அதிகாரியே தெரிவித்தார்.
கோடீஸ்வரருக்கு மகனாக பிறந்த அவர் ராஜ வாழ்க்கை வாழாமல் அமெரிக்க எதிர்ப்பு, அமெரிக்க அழிப்பு என்ற கொள்கையுடன் தீவிரவாத களத்தில் குதித்தார். அவர் இஸ்லாமை தீவிரமாக பின்பற்றுவதாக தெரிவித்தாலும், அப்பாவி பொதுமக்களைக் கொன்று குவிப்பதன் மூலம் அவர் மார்க்கத்திற்கு எதிராக செயல்படுவதாக சில அறிஞர்கள் தெரிவித்தனர். மேலும் அல் கொய்தாவின் தாக்குதல்களில் இஸ்லாமியர்களும் பெருமளவில் பலியாகியுள்ளனர். எனவே இஸ்லாமியர்களின் வெறுப்பையும் பின்லேடன் சம்பாதித்தார்.
இஸ்லாம் எங்கு, எதற்காக புனிதப் போர் துவங்கலாம் என்று வரையறை வகுத்துள்ளது. ஆனால் அதை லேடன் கண்டுகொள்ளவில்லை. ஒசாமாவின் முக்கிய குறியாக அமெரிக்கா இருந்து வந்தது.
லேடன் கடந்த 1997-ம் ஆண்டு சிஎன்என்-க்கு கொடுத்த பேட்டின்போது கூறுகையில்,
அமெரிக்கா நம் நாடுகளை ஆக்கிரமித்துக் கொள்ள நினைக்கிறது, நமது வளங்களை கொள்ளையடிக்க நினைக்கிறது, அதன் ஏஜெண்டுகள் தான் நம்மை ஆள வேண்டும் என்று திட்டமிடுகிறது. இத்தனைக்கும் நம்மை சம்மதிக்க வைக்கப் பார்க்கிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்தால், உடனே நம்மை தீவிரவாதிகள் என்று கூறுகிறது.
பாலஸ்தீனிய குழந்தைகள் இஸ்ரேல் குடியிருப்பு பகுதியில் கல் எறிந்தால் அவர்களை அமெரிக்கா தீவிரவாதிகள் என்கிறது. லெபனானில் உள்ள ஐ.நா கட்டிடத்தில் குழந்தைகளும், பெண்களும் இருக்கையில் இஸ்ரேல் அதை குண்டு வைத்து தகர்த்தால் அதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவிக்கவில்லை. அதே சமயம் உரிமைக்காக குரல் கொடுக்கும் எந்த முஸ்லீமிற்கும் கண்டனம் தெரிவிக்கிறது. எங்கு பார்த்தாலும் அமெரிக்கா தான் தீவரவாதம் மற்றும் உலக குற்றங்களின் தலைவனாக இருக்கிறது என்றார்.
எப்படியோ, உலகையே ஆட்டிப் படைத்த மிகப் பெரிய நபராக மாறிப் போய் விட்டார் பின்லேடன். அவரது சகாப்தமும் இன்று முடிவுக்கு வந்துள்ளது.
-- தட்ஸ்தமிழ்
கடந்த 1988-ம் ஆண்டு அவர் அல் கொய்தா என்னும் தீவிரவாத அமைப்பைத் தொடங்கினார் ஒபாமா.
2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ம் தேதி அமெரிக்காவின் வர்த்தக மையம் மற்றும் பென்டகனைத் தாக்கியதன் மூலம் உலகத்தையே உலுக்கினார். அன்று முதல் அமெரிக்கர்கள் உலகின் மிக மோசமான தீவிரவாதியாக பார்க்கத் துவங்கினர். அவர் அமெரிக்காவின் எதிரி ஆனார். அனைத்து செய்தித்தாள்களிலும், வீடியோக்களிலும் ஒசாமா பின் லேடனின் வான்டட் போஸ்டர்ஸ் தான்.
இரட்டைத் தாக்குதல்கள் நடந்த 6-வது நாள் ஒரு நிருபர் அதிபர் புஷ்ஷிடம் நீங்கள் ஒசாமா இறக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா என்று கேட்டார். அதற்கு புஷ் எனக்கு அவர் வேண்டும், நீதி வேண்டும் என்றார்.
ஒசாமாவைக் கொல்ல அமெரிக்கப் படைகளுக்கு கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகியுள்ளது. இறுதியாக பாகிஸ்தானில் வைத்து லேடன் கொல்லப்பட்டார். பின் லேடனும், அவரது கூட்டாளிகளும் இத்தனை நாட்களாக பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள டோரா-போரா மலையில் பதுங்கியிருந்தனர். அமெரிக்கப் படைகள் அந்த மலையில் குண்டு மழை பொழிந்தும் லேடன் தப்பித்து விட்டார். கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக பின் லேடன் தனது ஆதரவாளர்களின் பாதுகாப்பில் பாகிஸ்தானில் பதுங்கி இருந்து புதிய தாக்குதல்களுக்கு திட்டம் தீட்டி வந்துள்ளார்.
இஸ்லாமிய உலகத்தில் மாபெரும் ஹீரோவாக பார்க்கப்பட்ட போதிலும், இஸ்லாமியர்களின் வெறுப்பையும் பின் லேடன் சம்பாதிக்கத் தவறவில்லை. உலக தீவிரவாதத்தின் வட நட்சத்திரம் என்று அவரை அமெரிக்க மத்திய புலனாய்வுத் துறை தெரிவித்தது. ஆங்காங்கே இருந்த தீவிவாத அமைப்புகளை எல்லாம் அல் கொய்தாவுடன் இணைத்தார் ஒசாமா. எகிப்து-செசன்யா, ஏமன்-பிலிப்பைன்ஸ் ஆகிய இடங்களில் இருந்த தீவிரவாத அமைப்புகளை அல் கொய்தா அமைப்பின் கீழ் கொண்டு வந்தார்.
1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை தாலிபான்களையும், அப்போது ஆப்கானிஸ்தானை ஆண்டவர்களையும் பாதுகாக்க பின் லேடன் பணம் கொடுத்தார். அல் கொய்தா மூலம் உலகம் முழுவதும் தீவிரவாதத்தை பரப்ப எண்ணினார்.
செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு சில ஆண்டுகள் அல் கொய்தா மற்றும் அதன் தலைவர் பின் லேடனின் புகழ் உலகமெல்லாம் காட்டுத் தீ போன்று பரவியது. சில அமைப்புகள் தங்களை அல் கொய்தா என்று கூறிக் கொண்டு ஈராக்கில் இருந்த அமெரிக்கப் படைகளை தாக்கியது, பாலியில் உள்ள சுற்றுலாத் தலங்களை குண்டு வைத்து தகர்த்தது, ஸ்பெயினில் பயணிகள் ரயில்களுக்கு குண்டு வைத்தது.
பின் லேடனின் உண்மையான அதிகாரம் எவ்வளவு என்றே தெரியவில்லை. அல் கொய்தாவில் எத்தனை பேர் உள்ளனர், எத்தனை நாடுகளில் அது ஊடுருவியிருக்கிறது, பின் லேடன் கூறியதுபோல அவர்களிடம் ரசாயண, உயிரியல் மற்றும் அணு ஆயுதங்கள் உள்ளனவா என்று தெரியவில்லை.
லேடன் புது முறையில் போர் நடத்தினார். அவர் பேக்ஸ் மூலம் பத்வா அனுப்பினார். அவரிடம் அமெரிக்காவை விட அதி நவீன தொலை தொடர்பு சாதனங்கள் இருந்தது என்று ஒரு மூத்த அமெரிக்க அதிகாரியே தெரிவித்தார்.
கோடீஸ்வரருக்கு மகனாக பிறந்த அவர் ராஜ வாழ்க்கை வாழாமல் அமெரிக்க எதிர்ப்பு, அமெரிக்க அழிப்பு என்ற கொள்கையுடன் தீவிரவாத களத்தில் குதித்தார். அவர் இஸ்லாமை தீவிரமாக பின்பற்றுவதாக தெரிவித்தாலும், அப்பாவி பொதுமக்களைக் கொன்று குவிப்பதன் மூலம் அவர் மார்க்கத்திற்கு எதிராக செயல்படுவதாக சில அறிஞர்கள் தெரிவித்தனர். மேலும் அல் கொய்தாவின் தாக்குதல்களில் இஸ்லாமியர்களும் பெருமளவில் பலியாகியுள்ளனர். எனவே இஸ்லாமியர்களின் வெறுப்பையும் பின்லேடன் சம்பாதித்தார்.
இஸ்லாம் எங்கு, எதற்காக புனிதப் போர் துவங்கலாம் என்று வரையறை வகுத்துள்ளது. ஆனால் அதை லேடன் கண்டுகொள்ளவில்லை. ஒசாமாவின் முக்கிய குறியாக அமெரிக்கா இருந்து வந்தது.
லேடன் கடந்த 1997-ம் ஆண்டு சிஎன்என்-க்கு கொடுத்த பேட்டின்போது கூறுகையில்,
அமெரிக்கா நம் நாடுகளை ஆக்கிரமித்துக் கொள்ள நினைக்கிறது, நமது வளங்களை கொள்ளையடிக்க நினைக்கிறது, அதன் ஏஜெண்டுகள் தான் நம்மை ஆள வேண்டும் என்று திட்டமிடுகிறது. இத்தனைக்கும் நம்மை சம்மதிக்க வைக்கப் பார்க்கிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்தால், உடனே நம்மை தீவிரவாதிகள் என்று கூறுகிறது.
பாலஸ்தீனிய குழந்தைகள் இஸ்ரேல் குடியிருப்பு பகுதியில் கல் எறிந்தால் அவர்களை அமெரிக்கா தீவிரவாதிகள் என்கிறது. லெபனானில் உள்ள ஐ.நா கட்டிடத்தில் குழந்தைகளும், பெண்களும் இருக்கையில் இஸ்ரேல் அதை குண்டு வைத்து தகர்த்தால் அதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவிக்கவில்லை. அதே சமயம் உரிமைக்காக குரல் கொடுக்கும் எந்த முஸ்லீமிற்கும் கண்டனம் தெரிவிக்கிறது. எங்கு பார்த்தாலும் அமெரிக்கா தான் தீவரவாதம் மற்றும் உலக குற்றங்களின் தலைவனாக இருக்கிறது என்றார்.
எப்படியோ, உலகையே ஆட்டிப் படைத்த மிகப் பெரிய நபராக மாறிப் போய் விட்டார் பின்லேடன். அவரது சகாப்தமும் இன்று முடிவுக்கு வந்துள்ளது.
-- தட்ஸ்தமிழ்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
அறியா தகவல் அறிய வைத்தமைக்கு நன்றி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மகா பிரபு
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
நல்ல தகவல்
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- thanes_mபண்பாளர்
- பதிவுகள் : 76
இணைந்தது : 13/01/2010
தகவலுக்கு நன்றி...
- GuestGuest
ஒசாமா = ஒபாமா
வாஷிங்டன்: பத்து வருடங்களாக கடுக்காய் கொடுத்து வந்த அல் கொய்தா நிறுவனர், ஒசாமா பின்லேடனை அமெரிக்கப் படையினர் முக்கால் மணி நேரத்தில் வீழ்த்தியதன் மூலம் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு அமெரிக்கர்களிடையே பெரும் செல்வாக்கு ஏற்பட்டுள்ளது. மீண்டும் ஒபாமா அதிபராக வேண்டும் என்று வெள்ளை மாளிகை முன்பு கூடிய அமெரிக்கர்கள் கோஷமிட்டனர்.
அதிபரான போது ஒபாமாவுக்கு பெரும் செல்வாக்கு இருந்தது. அவரது பதவி ஏற்பு விழாவின்போது திரண்ட மக்கள் கூட்டமே அதற்கு சாட்சி. அமெரிக்காவின் முதல் கருப்பர் இன அதிபர் என்ற பெருமையைப் பெற்ற ஒபாமாவுக்கு நாளடைவில் செல்வாக்கு மங்கத் தொடங்கியது. அதிலும் சமீப காலமாக அவருக்கு பெரும் சரிவு ஏற்பட்டது.
ஆனால் பின்லேடன் வேட்டை அப்படியே ஒபாமாவை தூக்கி உச்சாணியில் நிறுத்தி வைத்து விட்டது. அமெரிக்கர்களிடையே ஒபாமாவுக்கு பெரும் செல்வாக்கு ஏற்பட்டுள்ளது. மிகப் பெரிய சாதனையை ஒபாமாவின் நிர்வாகம் செய்து விட்டதாக அமெரிக்கர்கள் பூரிப்படைந்துள்ளனர்.
நேற்று வெள்ளை மாளிகையில் அதிபர் ஒபாமா, பின்லேடன் கொல்லப்பட்ட தகவலை வெளியிட்டுக் கொண்டிருந்த சமயத்தில், வெள்ளை மாளிகைக்கு வெளியே பெரும் திரளான அமெரிக்கர்கள் கூடி உற்சாகமாக கோஷமிட்டனர். அப்போது அவர்கள் மீண்டும் ஒபாமாவே அதிபர் என்றும் குரல் எழுப்பினர்.
அமெரிக்காவுக்கு பெரும் சவாலை ஏற்படுத்திய மிகப் பயங்கரமான தீவிரவாத தலைவர் வீழ்த்தப்பட்ட விதம் அமெரிக்கர்களிடையே பெரும் உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது.
ஒபாமாவின் நிர்வாகத் திறமையே இந்த சாதனைக்குக் காரணம் என அமெரிக்கர்கள் கருதுகிறார்கள்.
ஜார்ஜ் புஷ்ஷால் சாதிக்க முடியாததை ஒபாமா சாதித்தது அமெரிக்கர்களிடையே, ஒபாமா மீதான நம்பிக்கையை பல மடங்கு அதிகரித்துள்ளது.
தீவிரவாதத்திற்கு எதிரான போரில் ஒபாமா பெரும் வெற்றி அடைந்திருப்பதாக அமெரிக்கர்கள் கருதுகிறார்கள்.
ஒபாமா நிர்வாகத்திற்கு பின்லேடன் மரணம் பெரும் பூஸ்டராக வந்து அமைந்துள்ளது. ஒபாமா அரசு மீது இருந்த அதிருப்திகளை அப்படியே இது துடைத்துப் போட்டு விட்டதாக அவர்கள் கருதுகிறார்கள்.
பொருளாதார சரிவு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களில் மாட்டி்யிருந்த அமெரிக்கர்கள், ஒபாமாவின் நிர்வாகம் மீது கடும் அதிருப்தி இருந்து வந்தது. தற்போது அத்தனையையும் அமெரிக்கர்கள் மறக்கடிக்கும் வகையில் பின்லேடனின் மரணச் செய்தி வந்து சேர்ந்துள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் ஒபாமா போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாகி விட்டன. மேலும் அவர் அடுத்த அதிபர் தேர்தலில் பெரும் வெற்றி பெறக் கூடிய வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன. அதேசமயம், ஒபாமாவுக்கு பெரும் சவாலாக விளங்குவார் எனக் கருதப்படும் ஹில்லாரி கிளிண்டன், பின்லேடன் தூசியில் மறைந்து போய் விட்டார்.
கடந்த மாதம் நியூயார்க் டைம்ஸும், சிபிஎஸ்ஸும் இணைந்து எடுத்த சர்வேயில் ஒபாமாவுக்கு 46 சதவீத ஆதரவே கிடைத்தது. தற்போது இது கிடுகிடுவென உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எப்படியோ, அமெரிக்க வரலாற்றில் ஒபாமா மீண்டும் ஒரு பக்கத்தை தனது பெயரால் நிரப்பி விட்டார் என்று நிச்சயமாக கூறலாம்.
-- தட்ஸ்தமிழ்
அதிபரான போது ஒபாமாவுக்கு பெரும் செல்வாக்கு இருந்தது. அவரது பதவி ஏற்பு விழாவின்போது திரண்ட மக்கள் கூட்டமே அதற்கு சாட்சி. அமெரிக்காவின் முதல் கருப்பர் இன அதிபர் என்ற பெருமையைப் பெற்ற ஒபாமாவுக்கு நாளடைவில் செல்வாக்கு மங்கத் தொடங்கியது. அதிலும் சமீப காலமாக அவருக்கு பெரும் சரிவு ஏற்பட்டது.
ஆனால் பின்லேடன் வேட்டை அப்படியே ஒபாமாவை தூக்கி உச்சாணியில் நிறுத்தி வைத்து விட்டது. அமெரிக்கர்களிடையே ஒபாமாவுக்கு பெரும் செல்வாக்கு ஏற்பட்டுள்ளது. மிகப் பெரிய சாதனையை ஒபாமாவின் நிர்வாகம் செய்து விட்டதாக அமெரிக்கர்கள் பூரிப்படைந்துள்ளனர்.
நேற்று வெள்ளை மாளிகையில் அதிபர் ஒபாமா, பின்லேடன் கொல்லப்பட்ட தகவலை வெளியிட்டுக் கொண்டிருந்த சமயத்தில், வெள்ளை மாளிகைக்கு வெளியே பெரும் திரளான அமெரிக்கர்கள் கூடி உற்சாகமாக கோஷமிட்டனர். அப்போது அவர்கள் மீண்டும் ஒபாமாவே அதிபர் என்றும் குரல் எழுப்பினர்.
அமெரிக்காவுக்கு பெரும் சவாலை ஏற்படுத்திய மிகப் பயங்கரமான தீவிரவாத தலைவர் வீழ்த்தப்பட்ட விதம் அமெரிக்கர்களிடையே பெரும் உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது.
ஒபாமாவின் நிர்வாகத் திறமையே இந்த சாதனைக்குக் காரணம் என அமெரிக்கர்கள் கருதுகிறார்கள்.
ஜார்ஜ் புஷ்ஷால் சாதிக்க முடியாததை ஒபாமா சாதித்தது அமெரிக்கர்களிடையே, ஒபாமா மீதான நம்பிக்கையை பல மடங்கு அதிகரித்துள்ளது.
தீவிரவாதத்திற்கு எதிரான போரில் ஒபாமா பெரும் வெற்றி அடைந்திருப்பதாக அமெரிக்கர்கள் கருதுகிறார்கள்.
ஒபாமா நிர்வாகத்திற்கு பின்லேடன் மரணம் பெரும் பூஸ்டராக வந்து அமைந்துள்ளது. ஒபாமா அரசு மீது இருந்த அதிருப்திகளை அப்படியே இது துடைத்துப் போட்டு விட்டதாக அவர்கள் கருதுகிறார்கள்.
பொருளாதார சரிவு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களில் மாட்டி்யிருந்த அமெரிக்கர்கள், ஒபாமாவின் நிர்வாகம் மீது கடும் அதிருப்தி இருந்து வந்தது. தற்போது அத்தனையையும் அமெரிக்கர்கள் மறக்கடிக்கும் வகையில் பின்லேடனின் மரணச் செய்தி வந்து சேர்ந்துள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் ஒபாமா போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாகி விட்டன. மேலும் அவர் அடுத்த அதிபர் தேர்தலில் பெரும் வெற்றி பெறக் கூடிய வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன. அதேசமயம், ஒபாமாவுக்கு பெரும் சவாலாக விளங்குவார் எனக் கருதப்படும் ஹில்லாரி கிளிண்டன், பின்லேடன் தூசியில் மறைந்து போய் விட்டார்.
கடந்த மாதம் நியூயார்க் டைம்ஸும், சிபிஎஸ்ஸும் இணைந்து எடுத்த சர்வேயில் ஒபாமாவுக்கு 46 சதவீத ஆதரவே கிடைத்தது. தற்போது இது கிடுகிடுவென உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எப்படியோ, அமெரிக்க வரலாற்றில் ஒபாமா மீண்டும் ஒரு பக்கத்தை தனது பெயரால் நிரப்பி விட்டார் என்று நிச்சயமாக கூறலாம்.
-- தட்ஸ்தமிழ்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
ஜி
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
ஒசாமா பின்லேடனைக் கொன்ற அமெரிக்கா மற்றும் அதற்கு ஆதரவு கொடுத்த பாகிஸ்தானை தாக்கி நிர்மூலமாக்குவோம் என்று தலிபான் தீவிரவாதிகள் மிரட்டியுள்ளனர்.
இதுகுறித்து தலிபான் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் இஷானுல்லா இஷான் தொலைபேசி மூலம் பிரான்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியின்போது, பின்லேடன் உயிர்த்தியாகம் செய்து விட்டதாக தகவல்கள் கூறுகின்றன. அது உண்மையாக இருக்குமானால் அதை மிகப் பெரிய வெற்றியாக நாங்கள் கருதுகிறோம். எங்களது முக்கிய நோக்கமே தியாகம்தான். அதை பின்லேடன் செய்திருந்தால் அவர் புனிதராகிறார்.
இந்த மரணத்திற்கு நாங்கள் நிச்சயம் பழிவாங்குவோம். அமெரிக்கர்களுக்கு எதிராகவும், பாகிஸ்தான் அரசுக்கும், படையினருக்கும் எதிராகவும் நாங்கள் பெரும் தாக்குதல் நடத்தி அவர்களை நிர்மூலமாக்குவோம்.
இவர்கள் அத்தனை பேரும் இஸ்லாமுக்கு எதிரானவர்கள். அவர்களை பழிவாங்குவோம் என்றார் அவர்.
நன்றி ஒன் இந்தியா
அல் கொய்தா நிறுவனர் ஒசாமா பின்லேடனை சுட்டு வீழ்த்தியதைத் தொடர்ந்து அமெரிக்கர்களிடையே அதிபர் பராக் ஒபாமாவின் செல்வாக்கு கிடுகிடுவெ உயர்ந்துள்ளது.
வெளிநாட்டுக் கொள்கையைக் கையாளுவது, அதிபராகப் பணியாற்றுவது, ஆப்கானிஸ்தான் விவகாரம், தீவிரவாத மிரட்டல் உள்ளிட்டவற்றில் ஒபாமா சிறப்பாக பணியாற்றுவதாக பெரும்பாலான அமெரிக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
நியூயார்க் டைம்ஸ்-சிபிஎஸ் கருத்துக் கணிப்பில் இது தெரிய வந்துள்ளது.
கடந்த மாதம் 46 சதவீதமாக இருந்த ஒபாமாவின் செல்வாக்கு, தற்போது 57 சதவீதமாக எகிறியுள்ளது. ஒபாமா சார்ந்த ஜனநாயகக் கட்சி தவிர குடியரசுக் கட்சியினர் மத்தியிலும் கூட ஒபாமாவுக்கு செல்வாக்கு உயர்ந்துள்ளது.
அச்சுறுத்தல் அதிகரிப்பு-அமெரிக்கர்கள் பீதி
அதேசமயம், ஒசாமாவைக் கொன்றுள்ளதால், அமெரிக்காவுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக பத்து அமெரிக்கர்களில் 7 பேர் கூறியுள்ளனர். பெரும்பாலானவர்கள், பின்லேடன் மறைவால் தங்களுக்கு பாதுகாப்பின்மை அதிகரித்துள்ளதாக உணர்வதாக கூறியுள்ளனர். 16 சதவீதம் பேர் மட்டுமே பின்லேடன் மறைவு தங்களுக்கு பாதுகாப்பு உணர்வைத் தருவதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கையைப் பாதியாக குறைக்கலாம் என்று அமெரிக்கர்களில் பாதிப்பேர் கூறியுள்ளனர். அதேசமயம், பத்தில் ஆறு பேர், இன்னும் அமெரிக்கா தனது ஆப்கானிஸ்தான் பணிகளை முடிக்கவில்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர். எனவே ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேறுவதை அவர்கள் ஆதரிக்கவில்லை என்று தெரிகிறது.
பின்லேடன் ஓய்ந்து விட்டாலும் கூட தலிபான்கள் இன்னும் வலுவாகவே இருப்பதாக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஆல்பிரிச் என்பவர் சுட்டிக் காட்டுகிறார். தலிபான்களையும் ஒழித்தால்தான் ஆப்கானிஸ்தான் பணி முடிவடைந்ததாக அர்த்தம் என்கிறார் அவர்.
அதேசமயம், 2014ம் ஆண்டுக்குள் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினர் முழுமையாக வெளியேறி விடுவார்கள் என அமெரிக்க அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்து.
அமெரிக்க அதிபர்களைப் பொறுத்தவரை, ஏதாவது ஒரு வெளிநாட்டு வெற்றியைத் தொடர்ந்து அவர்களுக்கு உள்ளூரில் செல்வாக்கு அதிகரிக்கும். அதை வைத்து அவர்கள் பெரும் பலனை அடைந்து விடுவார்கள். இதற்காகவே வெளிநாடுகளில் தங்களது வித்தையை அவர்கள் காட்டத் துடிக்கிறார்களோ என்று கூட எண்ணத் தோன்றும்.
இதற்கு முன்பு 2003ம் ஆண்டு சதாம் உசேனை அமெரிக்கப் படையினர் பிடித்தபோது அப்போது அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ்ஷுக்கு 8 சதவீத செல்வாக்கு அதிகரித்து அவருக்குப் புகழைத் தேடித் தந்தது உள்ளூரில். ஆனால் ஒரே மாதத்தில் அந்த செல்வாக்கை அவர் இழந்தார். காரணம், சதாம் உசேன் ரசாயண ஆயுதங்களைக் குவித்து வைத்திருந்தார், அதை வைத்திருந்தார், இதை வைத்திருந்தார் என்று கூறி வந்த புஷ்ஷால், அப்படி எதையும மீட்க முடியாததால் அமெரிக்கர்களிடையே அவருக்கு கெட்ட பெயர்தான் ஏற்பட்டது.
இந்த நிலையில் தற்போது செல்வாக்கு சரிந்து கிடந்த ஒபாமாவுக்கும் பின்லேடன் புண்ணியத்தால் அது அதிகரித்துள்ளது.
ஒபாமாவைப் பொறுத்தவரை ஜனநாயகக் கட்சியினர் மத்தியில் 52 சதவீத செல்வாக்கு காணப்படுகிறது. குடியரசுக் கட்சியினர் மத்தியில் 24 சதவீதமாக இது உள்ளது. கடந்த மாதம் இது 15 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜனநாயகக் கட்சியினரில் 86 சதவீதம் பேர் ஒபாமா சிறப்பாக பணியாற்றுவதாக கூறியுள்ளனர்.
பொருளாதாரக் கொள்கை படு மோசம்
இப்படி ஒசாமாசவால், ஒபாமாவின் செல்வாக்கு உயர்ந்திருந்தாலும் கூட வேலைவாய்ப்பின்மை, காஸ் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளில் ஒபாமாவின் செயல்பாடுகள் அமெரிக்கர்களிடையே தொடர்நது அதிருப்தி அளவிலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது.
அவரது பொருளாதாரக் கொள்கைகள் திருப்தி தரவில்லை என்பதே பெரும்பாலான அமெரிக்கர்களின் கருத்தாக காணப்படுகிறது. கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் ஒபாமாவின் பொருளாதாரக் கொள்கை குறித்து அதிருப்தியே தெரிவித்துள்ளனர்.
இந்தக் கருத்துக் கணிப்பை தொலைபேசி மூலம் மே 2 மற்றும் 3ம் தேதிகளில் எடுத்துள்ளனர்.
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஒசாமா வேட்டையால் ஒபாமாவுக்கு கூடுதல் ஆதாயம் கிடைத்துள்ளதாக கருதப்படுகிறது. இதை வைத்தே அவர் அடுத்த தேர்தலில் மீண்டும் வெல்லலாம் என்றும் கூறப்படுகிறது.
TMT
வெளிநாட்டுக் கொள்கையைக் கையாளுவது, அதிபராகப் பணியாற்றுவது, ஆப்கானிஸ்தான் விவகாரம், தீவிரவாத மிரட்டல் உள்ளிட்டவற்றில் ஒபாமா சிறப்பாக பணியாற்றுவதாக பெரும்பாலான அமெரிக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
நியூயார்க் டைம்ஸ்-சிபிஎஸ் கருத்துக் கணிப்பில் இது தெரிய வந்துள்ளது.
கடந்த மாதம் 46 சதவீதமாக இருந்த ஒபாமாவின் செல்வாக்கு, தற்போது 57 சதவீதமாக எகிறியுள்ளது. ஒபாமா சார்ந்த ஜனநாயகக் கட்சி தவிர குடியரசுக் கட்சியினர் மத்தியிலும் கூட ஒபாமாவுக்கு செல்வாக்கு உயர்ந்துள்ளது.
அச்சுறுத்தல் அதிகரிப்பு-அமெரிக்கர்கள் பீதி
அதேசமயம், ஒசாமாவைக் கொன்றுள்ளதால், அமெரிக்காவுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக பத்து அமெரிக்கர்களில் 7 பேர் கூறியுள்ளனர். பெரும்பாலானவர்கள், பின்லேடன் மறைவால் தங்களுக்கு பாதுகாப்பின்மை அதிகரித்துள்ளதாக உணர்வதாக கூறியுள்ளனர். 16 சதவீதம் பேர் மட்டுமே பின்லேடன் மறைவு தங்களுக்கு பாதுகாப்பு உணர்வைத் தருவதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கையைப் பாதியாக குறைக்கலாம் என்று அமெரிக்கர்களில் பாதிப்பேர் கூறியுள்ளனர். அதேசமயம், பத்தில் ஆறு பேர், இன்னும் அமெரிக்கா தனது ஆப்கானிஸ்தான் பணிகளை முடிக்கவில்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர். எனவே ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேறுவதை அவர்கள் ஆதரிக்கவில்லை என்று தெரிகிறது.
பின்லேடன் ஓய்ந்து விட்டாலும் கூட தலிபான்கள் இன்னும் வலுவாகவே இருப்பதாக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஆல்பிரிச் என்பவர் சுட்டிக் காட்டுகிறார். தலிபான்களையும் ஒழித்தால்தான் ஆப்கானிஸ்தான் பணி முடிவடைந்ததாக அர்த்தம் என்கிறார் அவர்.
அதேசமயம், 2014ம் ஆண்டுக்குள் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினர் முழுமையாக வெளியேறி விடுவார்கள் என அமெரிக்க அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்து.
அமெரிக்க அதிபர்களைப் பொறுத்தவரை, ஏதாவது ஒரு வெளிநாட்டு வெற்றியைத் தொடர்ந்து அவர்களுக்கு உள்ளூரில் செல்வாக்கு அதிகரிக்கும். அதை வைத்து அவர்கள் பெரும் பலனை அடைந்து விடுவார்கள். இதற்காகவே வெளிநாடுகளில் தங்களது வித்தையை அவர்கள் காட்டத் துடிக்கிறார்களோ என்று கூட எண்ணத் தோன்றும்.
இதற்கு முன்பு 2003ம் ஆண்டு சதாம் உசேனை அமெரிக்கப் படையினர் பிடித்தபோது அப்போது அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ்ஷுக்கு 8 சதவீத செல்வாக்கு அதிகரித்து அவருக்குப் புகழைத் தேடித் தந்தது உள்ளூரில். ஆனால் ஒரே மாதத்தில் அந்த செல்வாக்கை அவர் இழந்தார். காரணம், சதாம் உசேன் ரசாயண ஆயுதங்களைக் குவித்து வைத்திருந்தார், அதை வைத்திருந்தார், இதை வைத்திருந்தார் என்று கூறி வந்த புஷ்ஷால், அப்படி எதையும மீட்க முடியாததால் அமெரிக்கர்களிடையே அவருக்கு கெட்ட பெயர்தான் ஏற்பட்டது.
இந்த நிலையில் தற்போது செல்வாக்கு சரிந்து கிடந்த ஒபாமாவுக்கும் பின்லேடன் புண்ணியத்தால் அது அதிகரித்துள்ளது.
ஒபாமாவைப் பொறுத்தவரை ஜனநாயகக் கட்சியினர் மத்தியில் 52 சதவீத செல்வாக்கு காணப்படுகிறது. குடியரசுக் கட்சியினர் மத்தியில் 24 சதவீதமாக இது உள்ளது. கடந்த மாதம் இது 15 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜனநாயகக் கட்சியினரில் 86 சதவீதம் பேர் ஒபாமா சிறப்பாக பணியாற்றுவதாக கூறியுள்ளனர்.
பொருளாதாரக் கொள்கை படு மோசம்
இப்படி ஒசாமாசவால், ஒபாமாவின் செல்வாக்கு உயர்ந்திருந்தாலும் கூட வேலைவாய்ப்பின்மை, காஸ் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளில் ஒபாமாவின் செயல்பாடுகள் அமெரிக்கர்களிடையே தொடர்நது அதிருப்தி அளவிலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது.
அவரது பொருளாதாரக் கொள்கைகள் திருப்தி தரவில்லை என்பதே பெரும்பாலான அமெரிக்கர்களின் கருத்தாக காணப்படுகிறது. கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் ஒபாமாவின் பொருளாதாரக் கொள்கை குறித்து அதிருப்தியே தெரிவித்துள்ளனர்.
இந்தக் கருத்துக் கணிப்பை தொலைபேசி மூலம் மே 2 மற்றும் 3ம் தேதிகளில் எடுத்துள்ளனர்.
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஒசாமா வேட்டையால் ஒபாமாவுக்கு கூடுதல் ஆதாயம் கிடைத்துள்ளதாக கருதப்படுகிறது. இதை வைத்தே அவர் அடுத்த தேர்தலில் மீண்டும் வெல்லலாம் என்றும் கூறப்படுகிறது.
TMT
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|