புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
by ayyasamy ram Today at 6:50 am
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நானும் நடிகன்தான்; எனக்கும் வரிவிலக்கு அளிக்க வேண்டும்: சச்சின் டெண்டுல்கார்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
நானும் நடிகன்தான்; விளம்பர படத்தில் நடித்ததன் மூலம் கிடைத்த பணத்திற்கு எனக்கும் வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்று கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வருமான வரித்துறைக்கு அளித்த கோரிக்கையில், நடிப்பதன் மூலம் தான் சம்பாதித்த பணத்துக்கு வருமான வரியில் சலுகை வழங்க வேண்டுமென்றும், தன்னை நடிகராகவும் கருத வேண்டுமென்றும், 2001 -02 முதல் 2004-05 வரை விளம்பரத்தில் நடித்து பெற்ற பணத்துக்கு வருமான வரிச்சட்டம் பிரிவு 80 ஆர்ஆரின் கீழ் வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதனை வருமான வரித்துறையின் இரு நபர் தீர்ப்பாயம் விசாரித்தது. நான் தொழில்முறையில் கிரிக்கெட் விளையாடி வருகிறேன் என்றாலும், விளம்பரத்தில் நடித்து சம்பாதித்த பணத்துக்கு மட்டும்தான் வரிச்சலுகை கோருகிறேன். இதற்கு முன்பு இதேபோன்ற சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது என்று சச்சின் தரப்பில் கூறப்பட்டிருந்தது. தான் நடித்த விளம்பரங்களையும் அவர் சமர்ப்பித்திருந்தார். சச்சின் தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்ட தீர்ப்பாயம் அவர் வருமான வரியில் சலுகை பெற அனுமதி அளித்தது.
சச்சின் வரிச் சலுகை கோரும் காலகட்டத்தில் அவர் மொத்தம் 20 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார். இதில் அன்னியச் செலாவணி மூலம் கிடைத்தது சுமார் 6 கோடி என்று தீர்ப்பாயம் கூறியுள்ளது. இதற்காக அவருக்கு சுமார் ரூ.6 கோடி வருமான வரி பிடிக்கப்பட வேண்டும். ஆனால் சச்சின் போராடிப் பெற்ற சலுகையால் சுமார் ரூ.2 கோடி மட்டுமே வரிப்பிடித்தம் செய்யப்படும். 4 கோடி ரூபாய் அவருக்கு மிச்சமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ts
இதனை வருமான வரித்துறையின் இரு நபர் தீர்ப்பாயம் விசாரித்தது. நான் தொழில்முறையில் கிரிக்கெட் விளையாடி வருகிறேன் என்றாலும், விளம்பரத்தில் நடித்து சம்பாதித்த பணத்துக்கு மட்டும்தான் வரிச்சலுகை கோருகிறேன். இதற்கு முன்பு இதேபோன்ற சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது என்று சச்சின் தரப்பில் கூறப்பட்டிருந்தது. தான் நடித்த விளம்பரங்களையும் அவர் சமர்ப்பித்திருந்தார். சச்சின் தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்ட தீர்ப்பாயம் அவர் வருமான வரியில் சலுகை பெற அனுமதி அளித்தது.
சச்சின் வரிச் சலுகை கோரும் காலகட்டத்தில் அவர் மொத்தம் 20 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார். இதில் அன்னியச் செலாவணி மூலம் கிடைத்தது சுமார் 6 கோடி என்று தீர்ப்பாயம் கூறியுள்ளது. இதற்காக அவருக்கு சுமார் ரூ.6 கோடி வருமான வரி பிடிக்கப்பட வேண்டும். ஆனால் சச்சின் போராடிப் பெற்ற சலுகையால் சுமார் ரூ.2 கோடி மட்டுமே வரிப்பிடித்தம் செய்யப்படும். 4 கோடி ரூபாய் அவருக்கு மிச்சமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ts
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
கடைசியில் ஏழை மட்டும் கஷ்டப்பட வேண்டும்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- vcnsethumadhavபுதியவர்
- பதிவுகள் : 41
இணைந்தது : 21/04/2011
பாவம்பா ! காசில்லாமல் ரொம்ப கழ்டப்படுகிறார்.
கொஞ்சம் விட்டுக் கொடுப்போம். அந்த வருமான
வரி இழப்பை அப்பாவி மாத சம்பளம் வாங்கும்
அப்பாவிகள் தலையில் கட்டி விடுவோம்.
வாழ்க இந்தியா.
-சேதுமாதவன்
கொஞ்சம் விட்டுக் கொடுப்போம். அந்த வருமான
வரி இழப்பை அப்பாவி மாத சம்பளம் வாங்கும்
அப்பாவிகள் தலையில் கட்டி விடுவோம்.
வாழ்க இந்தியா.
-சேதுமாதவன்
சேதுமாதவன்.நா
அப்ப கிரிக்கெட்லிருந்து ஓய்வு பெற்றுவிடுங்கள், முழு நடிகனாக மாறிவிடுங்கள்.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
நம் இந்திய நாடே சச்சின் டெண்டுல்கரை ஒரு மகான் கிரிக்கெட் வீரராக, கிரிக்கெட் கடவுளாக அபத்த வழிபாடு செய்துவருகிறது. ஆனால் சச்சின் டெண்டுல்கரோ தான் ஒரு கிரிக்கெட் வீரர் மட்டுமல்ல ஒரு நடிகர் அல்லது கலைஞர் என்று கூறி வரிச்சலுகை பெற்றுள்ளார். எதற்கு? தான் கோடி கோடியாக பணம் ஈட்டும் விளம்பர வருவாய்க்குத்தான் அவர் வரிச்சலுகை பெற்றுள்ளார்.
இந்தச் சலுகை மூலம் நாட்டிற்கு வருவாய் இழப்பு சுமார் ரூ.5 கோடி!
நாளை ஊழல்வாதிகளுக்கெல்லாம் அவர் ஊழல் செய்த பணத்திலிருந்து 50% வரிச்சலுகை அளிக்கப்படும் என்று ஒரு அபத்த அறிவிப்பை நம் அரசு செய்தால், பலர் தானும் ஊழல் செய்பவர்கள்தான் என்று கூறி வரிச்சலுகை பெறுவார்கள் போலும்! நம் நாட்டில் இப்படியெல்லாம் நடக்காது என்று நாம் எந்த ஒரு அக்கிரமத்தையும் ஒதுக்கி விட முடியாது.
இதற்கு நம் நாட்டின் வருமான வரித்துறையின் இருநபர் ஆணையம் வரிச்சலுகை அளிக்க ஒப்புக் கொண்டுள்ளது ஒன்றும் நமக்கு ஆச்சரியமில்லை. ஆனால் அதற்கு அவர்கள் கொடுக்கும் விளக்கம் ஒரு சிறந்த நகைச்சுவை.
அதாவது சச்சின் டெண்டுல்கர் விளம்பரங்களில் தோன்றும்போது கேமரா முன்னாலும் லைட் வெளிச்சம் முன்னாலும் நிற்க வேண்டியிருக்கிறது. அதாவது ஒரு 'மாடல்' என்ற விதத்தில் அவர் தன் தொழிலுக்கு ஒரு படைப்பு பூர்வமான கற்பனையையும் செலவழிக்கிறாராம், மேலும் கலாபூர்வமான கூறுகளை ஒன்றிணைத்து மானுட புலன்களிலும், உணர்வுகளிலும் தாக்கம் செலுத்தும் அழகியல் மதிப்பு விளம்பர நடிப்புக்கு உள்ளதாம்! இதுதான் அந்தத் தீர்ப்பாயத்தின் வரிச்சலுகைக்கான நகைச்சுவை நியாயம்!
பெப்சி கோலா குடியுங்கள் என்று சச்சின் டெண்டுல்கர் விளம்பரத்தில் கூறும்போது இந்தியர்களின் புலன்களும், உணர்ச்சிகளும் தாக்கம் பெற்று மக்கள் அழகியல் உணர்வில் தத்தளிக்கிறார்கள் போலும்! நம் வருமான வரித்துறையினருக்கு என்னே ஒரு கலை, அழகியல் உணர்வு!
மேலும் ஒவ்வொரு மனிதனுக்கும் அல்லது இந்த விஷயத்தில் ஒவ்வொரு விளையாட்டு வீரனுக்கும் கூட இந்த அளவுக்கு படைப்பூக்கம் இருக்குமா என்பது சந்தேகமே. அதாவது கேமராவையும் லைட் வெளிச்சத்தையும் எதிர்கொள்ளும் திறமை, இருப்பதில்லையாம்! இவ்வாறும் கூறியுள்ளது அந்தத் தீர்ப்பாயம்.
எனவே ஒரு கலைஞராக சச்சின் டெண்டுல்கரை ஏற்றுக் கொண்டு அவருக்கு ஒரு நடிகருக்கான வரிச் சலுகை அளிக்கப்படுகிறது. முத்தாய்ப்பாக அந்தத் தீர்ப்பாயம் இவ்வாறு கூறியுள்ளது.
இப்போது இந்தியாவில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலக் கட்டம், 2ஜி ஸ்பெக்ட்ரம் மகா ஊழல், காமன்வெல்த் கல்மாடி கூட்டணி ஊழல், ஆதர்ஷ் ஊழல், சுவிஸ் வங்கியில் கோடிகோடியாக கொட்டிக் கிடக்கும் கறுப்புப் பணம், ஊழல் பணம் இன்னும் என்னென்னவோ ஊழல், கொள்ளை என்ற காலக்கட்டத்தில் நாம் இருக்கிறோம்.
இதில் பிடிபட்டவர்கள் அனைவரும் கேமரா முன் கொண்டு வரப்படுகிறார்கள். அவர்களும் அபாரமாக சிரித்துக் கொண்டே தங்களது சொந்த நடிப்புத் திறமையை பயன்படுத்தி 'மானுட புலன்கள்' மற்றும் 'உணர்வுகளில்' தாக்கம் செலுத்துகிறார்கள், இதே அடிப்படையில் அவர்களையும் நடிகர்களாக பாவித்து வரிச்சலுகை வழங்கலாமே. தண்டனை என்றைக்குக் கிடைக்கப்போகிறது? வரிச்சலுகையையாவது இவர்களுக்கெல்லாம் அளித்து நம் நாடே ஒரு அழகியல், கலை மதிப்பை வளர்த்தெடுக்கும் நாடு என்ற பெயர் எடுக்கலாமே!
நாம் உடனே ஒரு வாதம் செய்வோம். நாட்டில் அவனவன் மக்களுக்கு ஒன்றுமே செய்யாமல் கோடி கோடியாக கொள்ளை அடிக்கிறார்கள். இதில் சச்சின் டெண்டுல்கருக்கோ, தோனிக்கோ விளம்பர வருவாய்க்கு வரிச்சலுகை அளிப்பதில் என்ன சார் குடி மூழ்கிவிடப்போகிறது? இவர்கள் நாட்டிற்காக கிரிக்கெட் விளையாடுபவர்கள், இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பவர்கள் என்றெல்லாம் நம் மத்திய தர வர்க்க அசட்டு உணர்ச்சிகளை பெரிய அறிவு ரீதியான பார்வையாக நாம் முன்வைப்போம்.
இந்த படித்த மத்திய தர வர்க்க ஜீவிகள் எத்தனை பேருக்கு பொருளாதார ஆய்வாளர் பி.சாய்நாத் எழுதிய கட்டுரை தெரியவந்திருக்கும்? தெரியவந்தாலும் 'இந்தாளுங்களுக்கெல்லாம் இதுதான் வேலை' ஆக்கபூர்வமாக எதையும் இவர்கள் செய்ய முடியாது, எப்போதும் குறை கண்டே வாழ்பவர்கள்' என்று கூறி முற்றிலும் ஒதுக்கி விடும் ஒரு அராஜக மனப்போக்கையும் நாம் பார்த்து வருகிறோம்.
இந்திய நிதிநிலை அறிக்கையின் படி நாளொன்றுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து அரசுக்கு வரவேண்டிய வருமான வரி பாக்கி ரூ.240 கோடி. ஆனால் இதுவரை வசூலிக்க முடியாதவை என்று கூறி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
2005- 06ஆம் ஆண்டு முதல் கடந்த 6 ஆண்டுகளில் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து அரசுக்கு வரவேண்டிய ரூ.3,74,937 கோடி வருமான வரி அடுத்தடுத்த நிதிநிலை அறிக்கைகளில் வராதா வரியாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது ஸ்பெக்ட்ரம் ஊழலினால் ஏற்பட்ட வருவாய் இழப்பை விட இரு மடங்கு அதிகம் என்று குறிப்பிடுகிறார் சாய்நாத்.
இது தவிர ஆயத்தீர்வை, சுங்கவரிகளில் அரசு விட்டுக் கொடுக்கும் சலுகைகள் சொல்லி மாளாத வகையில் உள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் வைரம், தங்கம், தங்க நகைகளுக்கான சுங்கவரி வராக்கடன் என்ற வகையில் தள்ளுபடி மாத்திரம் ரூ.95,765 கோடி.
இது தவிர இயந்திரங்கள் இறக்குமதி என்ற தலைப்பிலும் ஏகப்பட்ட சுங்கவரிச்சலுகைகள் வழங்கப்பட்டு வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளது மத்திய அரசு.
சுங்கவரி வராக்கடன் வருவாய் இழப்பு மட்டும் ரூ.1,98,291 கோடி என்று அந்தக் கட்டுரையில் சாய்நாத் குறிப்பிட்டுள்ளார். மொத்தமாக வராத வரி, வரிச்சலுகை ஆகியவற்றினால் வருவாய் இழப்பு மட்டும் ரூ. 22 லட்சம் கோடி! ஆஹா! ஏழைகளின் நலன்களுக்காக நம் அரசு என்னமாய் உழைத்து வருகிறது!
இந்த வரிச்சலுகையெல்லாம் விலைக்குறைப்பு என்ற அளவில் மக்களுக்காகச் செய்யப்படுவதே என்று பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம், மன்மோகன் சிங், கபில் சிபல் ஆகியோர் கூறலாம்.
ஆனால் சச்சின் டெண்டுல்கரை ஒரு 'கலைஞராக' அங்கீகரித்து வழங்கப்பட்டுள்ள விளம்பர வருவாய் வரிச்சலுகைக்கு வருவாய்த்துறை புதிய 'அழகியல்' 'கலை' மதிப்பையே வழங்கி விட்டது போங்கள். கமல்ஹாசனுக்கு ஆஸ்கார் விருது கிடைக்கிறதோ இல்லையோ சச்சின் டெண்டுல்கர் தோன்றும் விளம்பர நடிப்பிற்காக நம் வருவாய்த்துறையே சச்சினை ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்தாலும் செய்வார்கள்.
இதே போல் நாளை அம்பானி, டாடா, மிட்டல் போன்ற உயர்தர தொழிலதிபர்களும் விளம்பரங்களில் நடித்து கலையை வளர்க்கலாம் அதற்காக அவர்களது தொழிலில் ஈட்டும் லாபத்தின் மீதான வரியையும் கூட ரத்து செய்யலாம்!
இது போன்ற வரிச்சலுகைகளினால் விளையாட்டு எந்த விதத்தில் வளரும் என்பதை அரசுகள் தெரிவிக்கவேண்டும்.
கால்பந்து, ஹாக்கி போன்ற துறைகள் ஊழலிலும், அதிகாரப் போட்டிகளிலும் தனிநபர் அராஜகத்திலும் நசிவுற்று சின்னாபின்னமாகி வரும் சூழ்நிலையில் ஒரு விளையாட்டில் அதிக வருவாய் ஈட்டி பெரும் பணக்காரராக இருந்து வரும் ஒரு சில வீரர்களை பெரிய நாயகர்களாகவும், கடவுளாகவும் உருவாக்கி, வழிபாட்டு மனோநிலையில் சலுகைகளை வழங்கி அதனை ஏதோ கலை வெளிப்பாடு என்று வேறு கூறிக்கொள்ளும் கேவலம் இந்த நாட்டைத் தவிர வேறு எங்காவது நடந்தால் அதனைத் தெரிந்து கொள்ள நாங்களும் ஆர்வமாக உள்ளோம்.
சச்சின் டெண்டுல்கரின் நடிப்புக் கலைத்திறமையை நம் வருமான வரி துறையினர் அறுதியிட்டது போல் நாளை ஐ.பி.எல். கிரிக்கெட்டின் அணி உரிமையாளர்களான ஷாரூக்கான், விஜய் மல்லையா, இந்தியா சிமென்ட்ஸ் ஸ்ரீனிவாசன் போன்றோரின் 'கலா பூர்வமான' கிரிக்கெட் ரசனைக்காக கிரிக்கெட் சலுகைகளையும் வழங்கலாமே. கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கும் பிற சலுகைகள், ஊதியம், வரிச்சலுகைகளை வழங்கலாமே! என்ன கெட்டுவிடப்போகிறது!. இவர்கள் கிரிக்கெட்டை ரசிக்கும் விதம் அது பற்றி பேசும் விதம், கொடுக்கும் பேட்டிகள் அவர்களை ஒரு கிரிக்கெட் அழகியல், கலை ரசிகர்களாகவே உருவக்கியுள்ளது. எனவே இவர்களும் கிரிக்கெட் வீரர்களுக்கான சலுகைகளுக்குத் தகுதியானவர்களே என்று கூறவேண்டியதுதானே பாக்கி!
உலக இலக்கிய மேதை ஷேக்ஸ்பியர் 'உலகமே ஒரு நாடக மேடை அதில் நாமெல்லோரும் நடிகர்கள்' என்று அன்றே கூறிவிட்டுச் சென்றுள்ளார்.
எனவே நாம் அனைவருமே நடிகர்களே, வரிச்சலுகைக்கு தகுதியானவர்களே! பரிசீலிக்குமா அரசு! நாம் கூறவில்லை ஷேக்ஸ்பிய்ரே கூறிவிட்டார் நாமெல்லோரும் இனி வரி செலுத்தவேண்டியதில்லை.
தடகளம், துப்பாக்கி சுடுதல், குத்துச் சண்டை, கால்பந்து, ஹாக்கி உள்ளிட்ட எண்ணற்ற விளையாட்டுகளில் ஒரு தனி நபர் சாதனைக்கோ, அணியின் சாதனைக்கோ பரிசுகள் வழங்குவதும், அந்த சாதனையாளர்களுக்கு ஓரிரு முறை வரிச்சலுகை வழங்குவதும் நியாயமானதே. அது அந்த விளையாட்டில் மேலும் பல இளம் வீரர்கள் நுழைய உதவிபுரியும்.
சச்சின் டெண்டுல்கர், தோனி, யுவ்ராஜ் சிங், உள்ளிட்ட பணம் கொழிக்கும் வீரர்களுக்கு உலகக் கோப்பை வென்றதற்காக ரூ.5கோடி பரிசு அறிவிப்பது, மாநில அரசுகள் அவர்களுக்கு எண்ணற்ற சலுகைகளை வழங்குவது என்பதெல்லாம் தேவையற்ற ஆடம்பர நடவடிக்கைகளே என்பதுதான் நமது கண்டனம்.
- வெப்துனியா
இந்தச் சலுகை மூலம் நாட்டிற்கு வருவாய் இழப்பு சுமார் ரூ.5 கோடி!
நாளை ஊழல்வாதிகளுக்கெல்லாம் அவர் ஊழல் செய்த பணத்திலிருந்து 50% வரிச்சலுகை அளிக்கப்படும் என்று ஒரு அபத்த அறிவிப்பை நம் அரசு செய்தால், பலர் தானும் ஊழல் செய்பவர்கள்தான் என்று கூறி வரிச்சலுகை பெறுவார்கள் போலும்! நம் நாட்டில் இப்படியெல்லாம் நடக்காது என்று நாம் எந்த ஒரு அக்கிரமத்தையும் ஒதுக்கி விட முடியாது.
இதற்கு நம் நாட்டின் வருமான வரித்துறையின் இருநபர் ஆணையம் வரிச்சலுகை அளிக்க ஒப்புக் கொண்டுள்ளது ஒன்றும் நமக்கு ஆச்சரியமில்லை. ஆனால் அதற்கு அவர்கள் கொடுக்கும் விளக்கம் ஒரு சிறந்த நகைச்சுவை.
அதாவது சச்சின் டெண்டுல்கர் விளம்பரங்களில் தோன்றும்போது கேமரா முன்னாலும் லைட் வெளிச்சம் முன்னாலும் நிற்க வேண்டியிருக்கிறது. அதாவது ஒரு 'மாடல்' என்ற விதத்தில் அவர் தன் தொழிலுக்கு ஒரு படைப்பு பூர்வமான கற்பனையையும் செலவழிக்கிறாராம், மேலும் கலாபூர்வமான கூறுகளை ஒன்றிணைத்து மானுட புலன்களிலும், உணர்வுகளிலும் தாக்கம் செலுத்தும் அழகியல் மதிப்பு விளம்பர நடிப்புக்கு உள்ளதாம்! இதுதான் அந்தத் தீர்ப்பாயத்தின் வரிச்சலுகைக்கான நகைச்சுவை நியாயம்!
பெப்சி கோலா குடியுங்கள் என்று சச்சின் டெண்டுல்கர் விளம்பரத்தில் கூறும்போது இந்தியர்களின் புலன்களும், உணர்ச்சிகளும் தாக்கம் பெற்று மக்கள் அழகியல் உணர்வில் தத்தளிக்கிறார்கள் போலும்! நம் வருமான வரித்துறையினருக்கு என்னே ஒரு கலை, அழகியல் உணர்வு!
மேலும் ஒவ்வொரு மனிதனுக்கும் அல்லது இந்த விஷயத்தில் ஒவ்வொரு விளையாட்டு வீரனுக்கும் கூட இந்த அளவுக்கு படைப்பூக்கம் இருக்குமா என்பது சந்தேகமே. அதாவது கேமராவையும் லைட் வெளிச்சத்தையும் எதிர்கொள்ளும் திறமை, இருப்பதில்லையாம்! இவ்வாறும் கூறியுள்ளது அந்தத் தீர்ப்பாயம்.
எனவே ஒரு கலைஞராக சச்சின் டெண்டுல்கரை ஏற்றுக் கொண்டு அவருக்கு ஒரு நடிகருக்கான வரிச் சலுகை அளிக்கப்படுகிறது. முத்தாய்ப்பாக அந்தத் தீர்ப்பாயம் இவ்வாறு கூறியுள்ளது.
இப்போது இந்தியாவில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலக் கட்டம், 2ஜி ஸ்பெக்ட்ரம் மகா ஊழல், காமன்வெல்த் கல்மாடி கூட்டணி ஊழல், ஆதர்ஷ் ஊழல், சுவிஸ் வங்கியில் கோடிகோடியாக கொட்டிக் கிடக்கும் கறுப்புப் பணம், ஊழல் பணம் இன்னும் என்னென்னவோ ஊழல், கொள்ளை என்ற காலக்கட்டத்தில் நாம் இருக்கிறோம்.
இதில் பிடிபட்டவர்கள் அனைவரும் கேமரா முன் கொண்டு வரப்படுகிறார்கள். அவர்களும் அபாரமாக சிரித்துக் கொண்டே தங்களது சொந்த நடிப்புத் திறமையை பயன்படுத்தி 'மானுட புலன்கள்' மற்றும் 'உணர்வுகளில்' தாக்கம் செலுத்துகிறார்கள், இதே அடிப்படையில் அவர்களையும் நடிகர்களாக பாவித்து வரிச்சலுகை வழங்கலாமே. தண்டனை என்றைக்குக் கிடைக்கப்போகிறது? வரிச்சலுகையையாவது இவர்களுக்கெல்லாம் அளித்து நம் நாடே ஒரு அழகியல், கலை மதிப்பை வளர்த்தெடுக்கும் நாடு என்ற பெயர் எடுக்கலாமே!
நாம் உடனே ஒரு வாதம் செய்வோம். நாட்டில் அவனவன் மக்களுக்கு ஒன்றுமே செய்யாமல் கோடி கோடியாக கொள்ளை அடிக்கிறார்கள். இதில் சச்சின் டெண்டுல்கருக்கோ, தோனிக்கோ விளம்பர வருவாய்க்கு வரிச்சலுகை அளிப்பதில் என்ன சார் குடி மூழ்கிவிடப்போகிறது? இவர்கள் நாட்டிற்காக கிரிக்கெட் விளையாடுபவர்கள், இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பவர்கள் என்றெல்லாம் நம் மத்திய தர வர்க்க அசட்டு உணர்ச்சிகளை பெரிய அறிவு ரீதியான பார்வையாக நாம் முன்வைப்போம்.
இந்த படித்த மத்திய தர வர்க்க ஜீவிகள் எத்தனை பேருக்கு பொருளாதார ஆய்வாளர் பி.சாய்நாத் எழுதிய கட்டுரை தெரியவந்திருக்கும்? தெரியவந்தாலும் 'இந்தாளுங்களுக்கெல்லாம் இதுதான் வேலை' ஆக்கபூர்வமாக எதையும் இவர்கள் செய்ய முடியாது, எப்போதும் குறை கண்டே வாழ்பவர்கள்' என்று கூறி முற்றிலும் ஒதுக்கி விடும் ஒரு அராஜக மனப்போக்கையும் நாம் பார்த்து வருகிறோம்.
இந்திய நிதிநிலை அறிக்கையின் படி நாளொன்றுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து அரசுக்கு வரவேண்டிய வருமான வரி பாக்கி ரூ.240 கோடி. ஆனால் இதுவரை வசூலிக்க முடியாதவை என்று கூறி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
2005- 06ஆம் ஆண்டு முதல் கடந்த 6 ஆண்டுகளில் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து அரசுக்கு வரவேண்டிய ரூ.3,74,937 கோடி வருமான வரி அடுத்தடுத்த நிதிநிலை அறிக்கைகளில் வராதா வரியாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது ஸ்பெக்ட்ரம் ஊழலினால் ஏற்பட்ட வருவாய் இழப்பை விட இரு மடங்கு அதிகம் என்று குறிப்பிடுகிறார் சாய்நாத்.
இது தவிர ஆயத்தீர்வை, சுங்கவரிகளில் அரசு விட்டுக் கொடுக்கும் சலுகைகள் சொல்லி மாளாத வகையில் உள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் வைரம், தங்கம், தங்க நகைகளுக்கான சுங்கவரி வராக்கடன் என்ற வகையில் தள்ளுபடி மாத்திரம் ரூ.95,765 கோடி.
இது தவிர இயந்திரங்கள் இறக்குமதி என்ற தலைப்பிலும் ஏகப்பட்ட சுங்கவரிச்சலுகைகள் வழங்கப்பட்டு வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளது மத்திய அரசு.
சுங்கவரி வராக்கடன் வருவாய் இழப்பு மட்டும் ரூ.1,98,291 கோடி என்று அந்தக் கட்டுரையில் சாய்நாத் குறிப்பிட்டுள்ளார். மொத்தமாக வராத வரி, வரிச்சலுகை ஆகியவற்றினால் வருவாய் இழப்பு மட்டும் ரூ. 22 லட்சம் கோடி! ஆஹா! ஏழைகளின் நலன்களுக்காக நம் அரசு என்னமாய் உழைத்து வருகிறது!
இந்த வரிச்சலுகையெல்லாம் விலைக்குறைப்பு என்ற அளவில் மக்களுக்காகச் செய்யப்படுவதே என்று பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம், மன்மோகன் சிங், கபில் சிபல் ஆகியோர் கூறலாம்.
ஆனால் சச்சின் டெண்டுல்கரை ஒரு 'கலைஞராக' அங்கீகரித்து வழங்கப்பட்டுள்ள விளம்பர வருவாய் வரிச்சலுகைக்கு வருவாய்த்துறை புதிய 'அழகியல்' 'கலை' மதிப்பையே வழங்கி விட்டது போங்கள். கமல்ஹாசனுக்கு ஆஸ்கார் விருது கிடைக்கிறதோ இல்லையோ சச்சின் டெண்டுல்கர் தோன்றும் விளம்பர நடிப்பிற்காக நம் வருவாய்த்துறையே சச்சினை ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்தாலும் செய்வார்கள்.
இதே போல் நாளை அம்பானி, டாடா, மிட்டல் போன்ற உயர்தர தொழிலதிபர்களும் விளம்பரங்களில் நடித்து கலையை வளர்க்கலாம் அதற்காக அவர்களது தொழிலில் ஈட்டும் லாபத்தின் மீதான வரியையும் கூட ரத்து செய்யலாம்!
இது போன்ற வரிச்சலுகைகளினால் விளையாட்டு எந்த விதத்தில் வளரும் என்பதை அரசுகள் தெரிவிக்கவேண்டும்.
கால்பந்து, ஹாக்கி போன்ற துறைகள் ஊழலிலும், அதிகாரப் போட்டிகளிலும் தனிநபர் அராஜகத்திலும் நசிவுற்று சின்னாபின்னமாகி வரும் சூழ்நிலையில் ஒரு விளையாட்டில் அதிக வருவாய் ஈட்டி பெரும் பணக்காரராக இருந்து வரும் ஒரு சில வீரர்களை பெரிய நாயகர்களாகவும், கடவுளாகவும் உருவாக்கி, வழிபாட்டு மனோநிலையில் சலுகைகளை வழங்கி அதனை ஏதோ கலை வெளிப்பாடு என்று வேறு கூறிக்கொள்ளும் கேவலம் இந்த நாட்டைத் தவிர வேறு எங்காவது நடந்தால் அதனைத் தெரிந்து கொள்ள நாங்களும் ஆர்வமாக உள்ளோம்.
சச்சின் டெண்டுல்கரின் நடிப்புக் கலைத்திறமையை நம் வருமான வரி துறையினர் அறுதியிட்டது போல் நாளை ஐ.பி.எல். கிரிக்கெட்டின் அணி உரிமையாளர்களான ஷாரூக்கான், விஜய் மல்லையா, இந்தியா சிமென்ட்ஸ் ஸ்ரீனிவாசன் போன்றோரின் 'கலா பூர்வமான' கிரிக்கெட் ரசனைக்காக கிரிக்கெட் சலுகைகளையும் வழங்கலாமே. கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கும் பிற சலுகைகள், ஊதியம், வரிச்சலுகைகளை வழங்கலாமே! என்ன கெட்டுவிடப்போகிறது!. இவர்கள் கிரிக்கெட்டை ரசிக்கும் விதம் அது பற்றி பேசும் விதம், கொடுக்கும் பேட்டிகள் அவர்களை ஒரு கிரிக்கெட் அழகியல், கலை ரசிகர்களாகவே உருவக்கியுள்ளது. எனவே இவர்களும் கிரிக்கெட் வீரர்களுக்கான சலுகைகளுக்குத் தகுதியானவர்களே என்று கூறவேண்டியதுதானே பாக்கி!
உலக இலக்கிய மேதை ஷேக்ஸ்பியர் 'உலகமே ஒரு நாடக மேடை அதில் நாமெல்லோரும் நடிகர்கள்' என்று அன்றே கூறிவிட்டுச் சென்றுள்ளார்.
எனவே நாம் அனைவருமே நடிகர்களே, வரிச்சலுகைக்கு தகுதியானவர்களே! பரிசீலிக்குமா அரசு! நாம் கூறவில்லை ஷேக்ஸ்பிய்ரே கூறிவிட்டார் நாமெல்லோரும் இனி வரி செலுத்தவேண்டியதில்லை.
தடகளம், துப்பாக்கி சுடுதல், குத்துச் சண்டை, கால்பந்து, ஹாக்கி உள்ளிட்ட எண்ணற்ற விளையாட்டுகளில் ஒரு தனி நபர் சாதனைக்கோ, அணியின் சாதனைக்கோ பரிசுகள் வழங்குவதும், அந்த சாதனையாளர்களுக்கு ஓரிரு முறை வரிச்சலுகை வழங்குவதும் நியாயமானதே. அது அந்த விளையாட்டில் மேலும் பல இளம் வீரர்கள் நுழைய உதவிபுரியும்.
சச்சின் டெண்டுல்கர், தோனி, யுவ்ராஜ் சிங், உள்ளிட்ட பணம் கொழிக்கும் வீரர்களுக்கு உலகக் கோப்பை வென்றதற்காக ரூ.5கோடி பரிசு அறிவிப்பது, மாநில அரசுகள் அவர்களுக்கு எண்ணற்ற சலுகைகளை வழங்குவது என்பதெல்லாம் தேவையற்ற ஆடம்பர நடவடிக்கைகளே என்பதுதான் நமது கண்டனம்.
- வெப்துனியா
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
பணம் விளையாடுகிறது ...
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
என்ன கொடும சார் இது .டெண்டுல்கள் அவ்ர் திறமையால் விளையாடி பயிற்சி பெற்று ,புள்ள குட்டி எலாம் விட்டு விட்டு ,ஊர் உராய் போயி விளையாடி ,நினைத்ததை கூட சாப்பிட முடியாமல் நினைத்த இடத்துக்கு போக முடியாமல் கழ்டப்பட்டதால் அவருக்கு இந்த பெருமை ,இந்த அளவு பணம் வருகிறது ,அவருடைய சொந்த பணத்தில் வாரியாக அவ்ர் அரசுக்கு பணம் தருகிறார் ,அதில் சிறிது வரி சலுகை கேட்கிறார் அதில் என்ன தப்பு ,இந்தியாவில் யாருமே ஒழுங்காக வரி செலுத்துவதில்லை ,வரி சலுகைக்காக மட்டுமே எல்.ஐ.சி.பாலிசி எடுக்கும் மக்கள் வாழும் நாடு இந்தியா .இதில் அவரை குறை சொல்லி என்ன பயன் .நாம் எத்தனை பேர் எல்லா பொருட்களுக்கும் பில் போட்டு வாங்கி வரி செலுத்துகிறோம் ?மக்கள் சுய சிந்தனை சேயும் நேரம் இது . டெண்டுலுக்கரை நினத்து பெருமை படுங்கள்
ராம்
ராம்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
rarara wrote:என்ன கொடும சார் இது .டெண்டுல்கள் அவ்ர் திறமையால் விளையாடி பயிற்சி பெற்று ,புள்ள குட்டி எலாம் விட்டு விட்டு ,ஊர் உராய் போயி விளையாடி ,நினைத்ததை கூட சாப்பிட முடியாமல் நினைத்த இடத்துக்கு போக முடியாமல் கழ்டப்பட்டதால் அவருக்கு இந்த பெருமை ,இந்த அளவு பணம் வருகிறது ,அவருடைய சொந்த பணத்தில் வாரியாக அவ்ர் அரசுக்கு பணம் தருகிறார் ,அதில் சிறிது வரி சலுகை கேட்கிறார் அதில் என்ன தப்பு ,இந்தியாவில் யாருமே ஒழுங்காக வரி செலுத்துவதில்லை ,வரி சலுகைக்காக மட்டுமே எல்.ஐ.சி.பாலிசி எடுக்கும் மக்கள் வாழும் நாடு இந்தியா .இதில் அவரை குறை சொல்லி என்ன பயன் .நாம் எத்தனை பேர் எல்லா பொருட்களுக்கும் பில் போட்டு வாங்கி வரி செலுத்துகிறோம் ?மக்கள் சுய சிந்தனை சேயும் நேரம் இது . டெண்டுலுக்கரை நினத்து பெருமை படுங்கள்
ராம்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» தனி நபர் வருமான வரிவிலக்கு உண்மையில் அதிகரிக்கப்பட்டதா? 10 லட்ச ரூபாய் வரை சம்பாதிப்பவர்கள் எப்படி வரிவிலக்கு பெறலாம்?
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
» ஓய்வூதியர்கள் ஜூனுக்குள் சான்றுகள் அளிக்க வேண்டும்
» மருந்து விற்பனை பிரதிநிதிகளுக்குபதவி உயர்வு அளிக்க வேண்டும் ஆக.17ம் தேதி "ஸ்டிரைக்'
» பிரதமரை சாட்சி அளிக்க அழைக்க வேண்டும் ஆ.ராசா
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
» ஓய்வூதியர்கள் ஜூனுக்குள் சான்றுகள் அளிக்க வேண்டும்
» மருந்து விற்பனை பிரதிநிதிகளுக்குபதவி உயர்வு அளிக்க வேண்டும் ஆக.17ம் தேதி "ஸ்டிரைக்'
» பிரதமரை சாட்சி அளிக்க அழைக்க வேண்டும் ஆ.ராசா
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|