குழந்தைகளை அழைத்து வராதீர்கள் : எஸ்.பி.பி. Images?q=tbn:ANd9GcTEVDmBb2oCfxA8PlIbFuwCwfz3FsQgC0ospYTdIzpkDQxRJrvf



பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியனின் மகன் எஸ்.பி.பி.சரண், தன்
கேப்பிட்டல் சினிமா கம்பெனியின் 6வது படம் ஆரண்ய காண்டம். புதுமுக
இயக்குநர் குமாரராஜா இயக்கத்தில், ரவிகிருஷ்ணா புதுமுகம் யாஸ்மின்
நடிக்கின்றனர். இந்தியில் 170 படங்களில் நடித்த ஜாக்கி ஷெராவத் ஆரண்யா
காண்டம் படத்தில் சிங்க பெருமாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

படம் முடிந்து ஏற்கனவே பல திரைப்பட விழாக்களிலும் பரிசு பெற்றுள்ளது.
ஆனாலும் தமிழக திரைப்பட தணிக்கை அதிகாரிகள் சென்சாரில் 52 கட்
செய்யுமாறும், இந்தபடம் நம் கலாச்சாரம் மீறிய சில காட்சிகள் இருப்பதாலும்,
மக்கள் ஏற்றுக் கொள்ள முடியாத சென்சிட்டிவான விஷயம் என்றும்
மறுத்துள்ளனர். படக்காட்சிகளை கட் செய்ய ஒத்துக்கொள்ளாத படக்குழுவினர்,
டிரிபியூலுக்கு அனுப்பி வைத்து, ஒரு கட்டும் செய்யாமல் ஏ சான்றிதழ்
பெற்றுள்ளனர். ஆனாலும் இவர்களாகவே முன்வந்து அபத்தமான சில வசனங்களை மட்டும்
நீக்கியுள்ளனர்.

படத்தை பற்றி சொல்லும் போது நாட்டில் மிருகத்தனமாக சில மனுஷன்கள் பற்றிய
படமாக இருக்கும் என்கிறார் தயாரிப்பாளர் சரண். கூடவே இந்தபடம், காதல்,
உணர்ச்சி, ஆக்ஷன் இப்படி எல்லாம் உண்டு. இது ஒரு மெச்சூர் ஆடியன்ஸ்காக உள்ள
படமாக இருக்கும். ஓட்டு போடும் தகுதி உள்ள இளைஞர்களே பார்க்க வேண்டும்.
தயவு செய்து உங்கள் குழந்தைகளை அழைத்து வராதீர்கள் என்று வேண்டுகோள்
விடுக்கிறார்.

இதனிடையே இப்படத்தை பற்றி கேள்விப்பட்ட வரை, சென்னையில் உள்ள பிரபலமான ஒரு
ஏரியாவில் வசிக்கும் ரவுடிகளின் கதையை படமாக்கியிருக்கலாம் என்ற சந்தேகம்
உள்ளது.
TMT