புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கத்தாரில் வேலை.. இன்றைய தேதியில்! Poll_c10கத்தாரில் வேலை.. இன்றைய தேதியில்! Poll_m10கத்தாரில் வேலை.. இன்றைய தேதியில்! Poll_c10 
83 Posts - 55%
heezulia
கத்தாரில் வேலை.. இன்றைய தேதியில்! Poll_c10கத்தாரில் வேலை.. இன்றைய தேதியில்! Poll_m10கத்தாரில் வேலை.. இன்றைய தேதியில்! Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
கத்தாரில் வேலை.. இன்றைய தேதியில்! Poll_c10கத்தாரில் வேலை.. இன்றைய தேதியில்! Poll_m10கத்தாரில் வேலை.. இன்றைய தேதியில்! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
கத்தாரில் வேலை.. இன்றைய தேதியில்! Poll_c10கத்தாரில் வேலை.. இன்றைய தேதியில்! Poll_m10கத்தாரில் வேலை.. இன்றைய தேதியில்! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
கத்தாரில் வேலை.. இன்றைய தேதியில்! Poll_c10கத்தாரில் வேலை.. இன்றைய தேதியில்! Poll_m10கத்தாரில் வேலை.. இன்றைய தேதியில்! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
கத்தாரில் வேலை.. இன்றைய தேதியில்! Poll_c10கத்தாரில் வேலை.. இன்றைய தேதியில்! Poll_m10கத்தாரில் வேலை.. இன்றைய தேதியில்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கத்தாரில் வேலை.. இன்றைய தேதியில்! Poll_c10கத்தாரில் வேலை.. இன்றைய தேதியில்! Poll_m10கத்தாரில் வேலை.. இன்றைய தேதியில்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கத்தாரில் வேலை.. இன்றைய தேதியில்! Poll_c10கத்தாரில் வேலை.. இன்றைய தேதியில்! Poll_m10கத்தாரில் வேலை.. இன்றைய தேதியில்! Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
கத்தாரில் வேலை.. இன்றைய தேதியில்! Poll_c10கத்தாரில் வேலை.. இன்றைய தேதியில்! Poll_m10கத்தாரில் வேலை.. இன்றைய தேதியில்! Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
கத்தாரில் வேலை.. இன்றைய தேதியில்! Poll_c10கத்தாரில் வேலை.. இன்றைய தேதியில்! Poll_m10கத்தாரில் வேலை.. இன்றைய தேதியில்! Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கத்தாரில் வேலை.. இன்றைய தேதியில்!


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Jun 03, 2011 11:06 am

வெளிநாட்டிலிருந்து வேலைக்காக கத்தார் செல்பவர்கள், இன்றைய தேதியில் எப்படியான சூழ்நிலையில் உள்ளனர்?
கத்தார் நாட்டு குடிமக்கள், விரும்பிய அனைத்தையும் பெறக்கூடிய அதிர்ஷ்டசாலிகளாகவே தென்படுகின்றனர். பெரிய கார்களை ஓட்டிச் செல்கின்றனர். பெரிய வீடுகளில் வசிக்கின்றனர். பெரிய சொத்துக்களை வாங்க பெருமளவு கடன் கொடுக்கத் அந்த நாட்டு தேசிய வங்கிகள் தயாராக இருக்கின்றன. பகட்டான வாழ்க்கை.

நாட்டின் நிலைமை இத்தனை செழிப்பாக இருக்கையில், கத்தார் நாட்டு மக்கள் பலர் எதனால் கோபப்படுவதாக சமீபகாலமாக செய்திகள் வருகின்றன??

“எங்களது சொந்த நாட்டி லேயே நாங்கள் சிறுபான்மை இன மக்களாக நடாத்தப்படுவதுதான் எங்களது கோபத்துக்குக் காரணம்” என்று கத்தார் நாட்டவர்கள் பலர் கூறுகின்றனர்.

“நாட்டின் 1.6 மில்லியன் மக்கள் தொகையில் இந்த நாட்டின் பிரஜைகள் சுமார் 15 சதவீதம் மட்டும்தான். முன்னுரிமை எப்போதும் வெளிநாட்டினருக்கே கிடைக்கிறது” என்று அலி காலித் என்பவர் கூறுகிறார். இவர் அரசு சார்பில் அளிக்கப்பட்ட நிதியுதவியுடன் லண்டனில் சமீபத்தில் படிப்பை முடித்துவிட்டுத் தாயகம் திரும்பியிருக்கிறார்.

அவரது உறவினரான ஓமர் அலி உயர் பாடசாலைப் படிப்பைப் பாதியில் கைவிட்டவர். ஓமர் அலி தற்போது மின்சாதன உற்பத்தி நிறுவனம் ஒன்றில் தொழில்நுட்ப வல்லுனராக வேலை பார்த்து வருகிறார்.

“கத்தார் நாட்டைச் சேர்ந்த நாங்கள் தொழிலில் எவ்வளவு சிறந்தவராக இருந்தாலும், எந்த வேலைக்கும் கத்தார் நாட்டவரைவிட வெளிநாட்டினர் சிறந்தவர்கள் என்ற மனப்பான்மை எமது சொந்த நாட்டிலேயே நிலவுகிறது. கத்தார் நாட்டவர்கள் தங்களுக்குக் கிடைத்துள்ள வேலையைவிட பல வழிகளில் சிறந்தவர்களாகவே தென்படுகின்றனர்” என்று ஓமர் அலி கூறினார்.


தோஹா விமான நிலையம்
நாட்டில் பணம் அதிகம் இருந்த காரணத்தால், எந்த வேலை என்றாலும் வெளிநாடுகளில் இருந்து வேலைக்கு ஆட்களை அழைத்துவந்து பழகிய யாருமே, அதே வேலைகளை உள்நாட்டு ஆட்களாலும் செய்யமுடியும் என்று நினைப்பதில்லை என்பதே பிரச்சினைக்குக் காரணம்.

அரசாங்கமும் இதே மனோநிலையில் இருப்பதே உச்சக்கட்டச் சோகம். எந்தவொரு நாட்டிலும் வேலைகளுக்கு முன்னுரிமை அந்நாட்டின் பிரஜைகளுக்கு கொடுக்கப்படுவது வழமை. இங்கு அது தலைகீழாக இருக்கின்றது.

ஆரம்பத்தில் இந்நாட்டுப் பிரஜைகளிடம் பணம் இருந்தது, படிப்பு இருக்கவில்லை; பணத்தை வீசி வெளிநாட்டில் இருந்து ஆட்களைக் கொண்டுவர முடிந்தது. இப்போது இந்நாட்டுப் பிரஜைகள் தாமும் படித்து மற்றைய வெளிநாட்டவருடன் வேலையில் போட்டியிடத் தயாராக இருக்கிறார்கள்.

ஆனால், அவர்களது சொந்த நாட்டு அரசே அவர்களின் திறமையை நம்பத் தயாராக இல்லை.

“கத்தார் நாட்டவர்கள் வீணடிக்கப்பட்டுவிட்டனர்” என்று முகமது சபரானி கூறுகிறார். இவர் கத்தார் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பூங்காவில் சுகாதார அறிவியல்துறை ஆய்வு இயக்குனராக வேலை செய்துவரும், கத்தார் நாட்டைச் சேராத அரேபியர்.

“கத்தார் நாட்டவர்கள் கலாசாரம் மற்றும் அரசியல் பிரிவுகளில் மட்டுமே மதிக்கப்படுகின்றனர்; வேறு எதிலும் அவர்களுக்குத் திறமை இருப்பதாக இங்கு யாரும் மதிப்பிடுவதில்லை” என்று கூறிய அவர், “ஆனால் ஒரு விஷயத்தை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இயல்பிலேயே செல்வத்தில் மிதக்கும் கத்தார் நாட்டவர் எவ்வளவுதான் விரும்பிப் படித்தாலும் படித்து வேலை செய்துதான் வாழ்க்கையை ஓட்ட வேண்டுமென்ன கட்டாயம் அவர்களுக்கு இல்லை” என்றும் கூறினார்.

பாரசீக வளைகுடாவில் எண்ணெய் வளம்மிக்க கத்தார் தீபகற்பம், சர்வதேச உறவுகள், கலை, உயர் கல்வி என பலமுனைகளில் உலக அளவில் செல்வாக்காக உள்ளது. ஆனால் உள்நாட்டிலோ, கத்தார் நாட்டவர்களுக்கும் வெளி நாட்டவர்களுக்கும் இடையே பதற்றம், கோபம், ஏமாற்றம் ஆகியவை காணப்படுகின்றன.

இந்தப் பதற்றம் கோபம் வெறுப்பு எல்லாமே நிஜமல்ல. வெளிநாட்டவர்களை வெளியே அனுப்பிவிட்டுக் கத்தாரிகளால் நாட்டை ஒருநாள் கூட நடத்தவே முடியாது என்பதாக மற்றொரு கருத்து உண்டு.

“வெளிநாட்டவரின் மீதான வெறுப்பு அனைத்தும் பாசாங்கானவை. அனைத்தும் வெளித்தோற்றம்தான்” என்று டாக்டர் மும்தாஜ் வாசெப் கூறுகிறார். இவர் அமெரிக்க அரசால் தேர்வு செய்யப்பட்டு, கத்தார் சுகாதார உயர்நிலைக் குழுவில் உயிரி மருத்துவ ஆராய்ச்சி இயக்குனராக வேலை செய்து வரும் அமெரிக்கப் பிரஜை.

“வெளிநாட்டவரை வெளியே அனுப்பவேண்டும் என்று சும்மா கூச்சலிடுவதன் மூலம் தாங்கள் தவறு செய்து கொண்டிருக்கிறோம் என்பதை அவர்கள் (கத்தார் பிரஜைகள்) ஒருபோதும் ஒப்புக் கொள்ளப்போவதில்லை. தாங்கள் உலகிலேயே சிறந்தவர்கள் என்று மட்டுமே அவர்கள் கூறிக் கொண்டிருக்கப் போகிறார்கள். ஆனால், ஒரு வேலையைக் கொடுத்துப் பாருங்கள்; கவிழ்ந்து விடுவார்கள். காரணம், உழைத்துத்தான் வாழ வேண்டும் என்ற கட்டாயம் அவர்களில் பெரும்பாலானோருக்கு இல்லை” என்பது அவரது கருத்து.


கத்தார் பிரஜைகள்: வேண்டியது கிடைக்கிறது!
“அவர்கள் மின்சாரம், தண்ணீர், கல்வி அல்லது சுகாதாரம் என எதற்கும் பணம் செலுத்தத் தேவையில்லை. இவை அனைத்துமே கத்தார் பிரஜைகளுக்கு இங்கு இலவசம். அவர்களுக்குத் திருமணம் ஆகும்போது வீடு கட்ட வட்டியில்லாக் கடன் கிடைக்கிறது. தங்களுக்கு வேலை கிடைக்காவிட்டால், இந்தக் கடனைத் திருப்பிக்கொடுக்கத் தேவையில்லை என்பது சட்டம்” என்கிறார் அவர்.

கத்தார் பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல்துறைப் பேராசிரியர் முகமது அல்-மெஸ்பர், “முக்கிய தொழில்களான, நிதி, உயர்கல்வி, ஊடகம் போன்றவற்றின் உயர்நிலை வேலைகள் பெரும்பாலானவற்றில் வெளிநாட்டவர்களே உள்ளனர். வேலைக்கான மொழியாக அராபிக் இல்லை. ஆங்கிலம்தான் இருக்கிறது. இதுதான் கத்தார் நாட்டவர்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.

உள்ளூர் வைத்தியாசாலைகள், உணவகங்கள், சந்தைகள், தெருக்கள் என எங்கு பார்த்தாலும் வெளிநாட்டவர்களே கூட்டம் கூட்டமாகத் தென்படுகின்றனர். இதுதான் இங்குள்ள பிரச்சினை. வெளிநாட்டினர்கள் கூட்டமாக வந்து எங்களை வெளியேற்றி விடுகின்றனர் என்று உள்நாட்டவர்கள் கூறுகின்றனர்” என விளக்குகிறார்.

கத்தாரில் சமீபகாலமாக ஏற்பட்டுள்ள இந்தப் பதற்றம், அதற்கு அருகிலுள்ள மற்றைய நாடுகளிலும் லேசாகத் தலையெடுக்கத் தொடங்குகின்றது. உள்நாட்டவர்களைவிட வெளிநாட்டவர்கள் அதிகமாக வசிக்கும் வேறு சில நாடுகளும், மத்திய கிழக்கில் உள்ளன.

கத்தாருக்கு மேற்கொண்ட மூன்று நாள் பயணத்தின்போது, வெளிநாட்டிலிருந்து வந்து வேலை செய்பவர்கள், மற்றும் கத்தார் நாட்டுக் குடிமக்களிடம் பேசியபோது, உரையாடல் பெரும்பாலும் அவநம்பிக்கையை நோக்கியே நகர்ந்தது.

கனடாவிலிருந்து வந்து இங்கு வேலை செய்யும் ஒருவர், தனது காரை பார்க்கிங் ஒன்றில் நிறுத்த முயன்றபோது நடைபெற்ற சம்பவம் ஒன்றைக் கூறினார். “நான் பார்க் பண்ண முயன்ற அதே இடத்தில், மற்றொரு கார் வந்து எனது காரை இடிப்பதுபோல நிறுத்தப்பட்டது. இது என்னுடைய இடம். நான் கத்தார் நாட்டவன். இந்த நாடு எனக்காகத்தான் என்று கூறியபடி கத்தார் நாட்டு கார் ஓட்டுனர், தான் ஓட்டிவந்த காரை அந்த இடத்தில் நிறுத்திவிட்டுச் சென்றார்”

புகார்கள் எழுந்தால், அதற்காகப் பேசுபவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள் என்று இங்குள்ள மக்கள் கூறுகின்றனர். புகாரில் சம்பந்தப்பட்டவர் வெளிநாட்டவர் என்றால் அவர்கள் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுகின்றனர். உள்ளூர் மக்கள் என்றால் வேலை இழக்கின்றனர்.

கத்தார் பிரஜையான அகமது ஜே.அப்துல்-ரஹ்மான், “எனது நாட்டிலிருந்து ஒளிபரப்பாகும் பிரபல செய்திச் சானலான அல்-ஜசீராவில் செய்தி வாசிப்பாளராக வேலை செய்ய விண்ணப்பித்தேன். ஆனால், நான் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அந்த வேலைக்கு இந்தியாவிலிருந்து ஒருவரைக் அழைத்து வந்திருக்கிறார்கள்” என்று கோபப்படுகிறார்.

“நான் இந்த நாட்டுப் பிரஜை. எனக்கு வேலை கொடுத்த பின்னரே அந்த வேலை வெளிநாட்டவருக்குக் கொடுக்கப்பட வேண்டும். இப்போது பாருங்கள்.. நான் வேலையற்ற நபராக இருக்கிறேன்” என்று, 2011 மாடல் மேர்சிடீஸ் பென்ஸ் செடான் காரின் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தபடி அவர் கூறினார்.

வைரங்கள் பதிக்கப்பட்ட அவரது கைக்கடிகாரமோ, விளக்கொளியில் ஜொலித்தது.


வி.வி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக