புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_c10பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_m10பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_c10 
30 Posts - 50%
heezulia
பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_c10பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_m10பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_c10பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_m10பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_c10பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_m10பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_c10 
72 Posts - 57%
heezulia
பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_c10பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_m10பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_c10பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_m10பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_c10பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_m10பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பட்டீஸ்வரம் - துர்கை கோயில்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 14, 2009 1:06 am

பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Durgai10

பட்டீஸ்வரம் என்பது கும்பகோணத்துக்கு தெற்கே பழையாறை என்கிற ஊருக்கு நடுவே இருக்கிறது. பழையாறை யாருடைய ஊர் தெரியுமா?

அது இராஜராஜசோழன் வாழ்ந்த ஊர். பிறந்த மண். வளர்ந்த பூமி.

பட்டீஸ்வரம் மிக அழகிய ஒரு கிராமம். மிகமிகத் தொன்மையான ஒரு கிராமம். இப்போதும் அங்கு இராஜராஜசோழன் வாழ்ந்த மாளிகை ஒரு மேடு போல இருக்கிறது. அங்கு சூலங்கள் நட்டு வழிபடுகிறார்கள். மிகப் பெரிய ஒரு ஆலமரம் அங்கு விழுதுவிட்டு படர்ந்திருக்கிறது. அந்த இடத்திற்கு போகும்போதே பழமையான, மிகத் தொன்மையான, பலர் வாழ்ந்து மறைந்த ஒரு இடத்திற்கு போகிறோம் என்ற உணர்வு ஏற்படுகிறது.

அந்த சோழன் மாளிகை மேட்டுக்கு அருகேதான் இந்த பட்டீஸ்வரம் துர்க்கை கோயில் இருக்கிறது. பொன்னியின் செல்வனில் வரும் ஆதித்த கரிகாலன் மிகவும் நேசித்த துர்க்கை அந்த பட்டீஸ்வரம் துர்க்கை.. இது சோழர்களின் குலதெய்வம்.

வேறு எங்கோ தனியாக கோயில்கொண்டிருந்த இந்த துர்க்கையை எடுத்து, பட்டீஸ்வரம் கிராமத்தில் உள்ள கோயிலுக்கு முன்பாக பிற்காலத்தில் நிறுத்தி வைத்தார்கள். அந்த தனி சந்நிதி இப்பொழுது மிகப்பெரிய தனிக் கோயிலாக மாடங்களுடனும், அழகிய தரையுடனும், சிற்ப வேலைப்பாடுமிக்க தூண்களோடும் திகழ்கிறது. ஆறுகால பூஜையும் அற்புதமாக நடக்கிறது.

இந்த துர்க்கை பார்ப்பதற்கு மிக வனப்போடு இருக்கிறாள். கீழே உள்ள மிகப் பெரிய எருமை தலையில் கால்வைத்து ஊன்றி, எட்டு கைகளோடும் புன்னகை தவழும் முகத்தோடும் சாந்த சொரூபியாக காட்சியளிக்கிறாள்.

அதென்ன பட்டீஸ்வரம் என்று பெயர்?

காமதேனுவின் மகளான கன்றுக்கு பட்டி என்று பெயர். பட்டி பூஜித்த ஸ்தலமென்பதால் இது பட்டீஸ்வரம் என்று பெயர் பெற்றது.

துர்க்கையால் பிரசித்தி பெற்ற இந்த ஸ்தலத்துக்கு மக்கள் பலபேர் வந்து கூடி, பல்வேறு விதமான நன்மைகள் பெற்றுப் போகிறார்கள். நீங்கள் ஒரு முறை பட்டீஸ்வரம் வந்தால், பட்டீஸ்வர துர்க்கையை தரிசித்தால், அந்த துர்க்கையின் மீது பதிந்த உங்கள் பார்வையை வேறுபக்கம் திசைதிருப்புவது அவ்வளவு எளிதல்ல. அந்த அளவிற்கு ஈர்ப்பு சக்தி உடையவள் இந்தத்தாய்.

இந்த பட்டீஸ்வரம் துர்க்கை கோயிலை ஒட்டியே தேனுபுரிஸ்வரர் கோயில் இருக்கிறது. இந்த தேனுபுரிஸ்வரர் கோயில் மிகமிகப் பழமை வாய்ந்தது.

திருஞானசம்பந்தர் இந்தக் கோவிலின் வாசலில் வெயில் தாளாமல் தவித்தபோது, பூதகணங்கள் முத்துப்பந்தல் ஏந்தி ஞானசம்பந்தருக்கு நிழல் கொடுத்தன என்று சொல்லப் படுவதுண்டு. இறைவன் சம்பந்தர் வரும் காட்சியைக் காண சற்று விலகிய நந்தி, அழகான கோவிலுக்கு நடுவே உள்ள குளம் என்று மிக இதமான ஒரு சூழ்நிலையில் கோயில் அமைந்திருக்கிறது. மக்கள் இந்த தேனுபுரிஸ்வரர் கோவிலுக்கு அதிகம் வருவதில்லை. பட்டீஸ்வரம் துர்க்கையை வணங்கிவிட்டு ஓடிப்போய் விடுகிறார்கள்.

ஆனால் நீங்கள் உள்ளே போய்ப் பார்க்க, அம்மையும் அப்பனும் மிக அற்புதமாய் கொலுவீற்றிருக்கும் காட்சியைக் காணலாம்.

கோவிந்த தீட்சிதர் என்கிற ஒரு மகான் தஞ்சாவூரையும், குடந்தையையும் உயர்த்த பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டார். பாடசாலைகள் நிறுவினார். ஏழைஎளிய மக்களுக்கு பலவகைகளில் உதவினார். இசை ஞானமும், வடமொழிப் புலமையும் கொண்ட அந்த தீட்சிதரை மந்திரியாகப் பெற்ற அரசன் அவருக்கு பல உதவிகள் செய்ய, அவன் அந்த உதவிகளைப் பெற்று, அவற்றையெல்லாம் மக்களுக்கே செலவழித்ததாக ஒரு வரலாறு இருக்கிறது. அவரை மக்கள் அன்போடு "ஐயன்" என்று அழைத்தனர். தஞ்சாவூரிலுள்ள ஐயன்கடை, ஐயன்குளம், ஐயன்தெரு போன்றவைகளெல்லாம் அவர் பெயரால் ஏற்பட்டவை.

அவருடைய சிலையும், அவருடைய மனைவியின் சிலையும், ஞானாம்பிகை என்கிற அம்பாள் சந்நிதியில் நிறுத்தப்பட்டிருக்கிறது. மெல்ல அந்தச் சிலையின் அருகே போய் அவர் விரல்களைப் பற்றிப்பார்த்தால், அந்தச் சிலையின் விரல்கள் ஒரு மனிதனின் விரல்கள் போலவே மிக மென்மையாக அழுந்தும் வண்ணமாக நமக்குப் படுகிறது. இந்த கோயிலுக்கு வந்தால் நீங்கள் நிச்சயம் இந்த அனுபவத்தைப் பெற முடியும்.

பட்டீஸ்வரம் துர்க்கை உங்கள் தொழிலில் மேன்மையும், சிறப்புமடைய வழி செய்பவள். அவளை வணங்கியோர் நல்ல நிலையில் இருக்கிறார்கள். சமீபத்தில் கோவில் குடமுழுக்கு விழா நடந்தேறியது. கோவில் மிக அழகாக பராமரிக்கப்பட்டு வருகிறது. தவறாது ஒரு முறையேனும் பட்டீஸ்வரம் துர்க்கை கோயிலுக்குப் போய் துர்க்கையை தரிசித்துவிட்டு வாருங்கள். தலைகுனிந்து நமஸ்கரித்துவிட்டு வாருங்கள்.



பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக