புதிய பதிவுகள்
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by ayyasamy ram Today at 3:34 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by ayyasamy ram Today at 3:33 pm

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:59 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm

» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm

» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm

» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm

» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm

» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm

» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தேநீர் விடுதி - சினிமா விமர்சனம்  Poll_c10தேநீர் விடுதி - சினிமா விமர்சனம்  Poll_m10தேநீர் விடுதி - சினிமா விமர்சனம்  Poll_c10 
47 Posts - 66%
ayyasamy ram
தேநீர் விடுதி - சினிமா விமர்சனம்  Poll_c10தேநீர் விடுதி - சினிமா விமர்சனம்  Poll_m10தேநீர் விடுதி - சினிமா விமர்சனம்  Poll_c10 
8 Posts - 11%
Dr.S.Soundarapandian
தேநீர் விடுதி - சினிமா விமர்சனம்  Poll_c10தேநீர் விடுதி - சினிமா விமர்சனம்  Poll_m10தேநீர் விடுதி - சினிமா விமர்சனம்  Poll_c10 
5 Posts - 7%
mohamed nizamudeen
தேநீர் விடுதி - சினிமா விமர்சனம்  Poll_c10தேநீர் விடுதி - சினிமா விமர்சனம்  Poll_m10தேநீர் விடுதி - சினிமா விமர்சனம்  Poll_c10 
3 Posts - 4%
Abiraj_26
தேநீர் விடுதி - சினிமா விமர்சனம்  Poll_c10தேநீர் விடுதி - சினிமா விமர்சனம்  Poll_m10தேநீர் விடுதி - சினிமா விமர்சனம்  Poll_c10 
2 Posts - 3%
prajai
தேநீர் விடுதி - சினிமா விமர்சனம்  Poll_c10தேநீர் விடுதி - சினிமா விமர்சனம்  Poll_m10தேநீர் விடுதி - சினிமா விமர்சனம்  Poll_c10 
2 Posts - 3%
natayanan@gmail.com
தேநீர் விடுதி - சினிமா விமர்சனம்  Poll_c10தேநீர் விடுதி - சினிமா விமர்சனம்  Poll_m10தேநீர் விடுதி - சினிமா விமர்சனம்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தேநீர் விடுதி - சினிமா விமர்சனம்  Poll_c10தேநீர் விடுதி - சினிமா விமர்சனம்  Poll_m10தேநீர் விடுதி - சினிமா விமர்சனம்  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
தேநீர் விடுதி - சினிமா விமர்சனம்  Poll_c10தேநீர் விடுதி - சினிமா விமர்சனம்  Poll_m10தேநீர் விடுதி - சினிமா விமர்சனம்  Poll_c10 
1 Post - 1%
Rutu
தேநீர் விடுதி - சினிமா விமர்சனம்  Poll_c10தேநீர் விடுதி - சினிமா விமர்சனம்  Poll_m10தேநீர் விடுதி - சினிமா விமர்சனம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தேநீர் விடுதி - சினிமா விமர்சனம்  Poll_c10தேநீர் விடுதி - சினிமா விமர்சனம்  Poll_m10தேநீர் விடுதி - சினிமா விமர்சனம்  Poll_c10 
404 Posts - 39%
ayyasamy ram
தேநீர் விடுதி - சினிமா விமர்சனம்  Poll_c10தேநீர் விடுதி - சினிமா விமர்சனம்  Poll_m10தேநீர் விடுதி - சினிமா விமர்சனம்  Poll_c10 
301 Posts - 29%
Dr.S.Soundarapandian
தேநீர் விடுதி - சினிமா விமர்சனம்  Poll_c10தேநீர் விடுதி - சினிமா விமர்சனம்  Poll_m10தேநீர் விடுதி - சினிமா விமர்சனம்  Poll_c10 
223 Posts - 21%
sugumaran
தேநீர் விடுதி - சினிமா விமர்சனம்  Poll_c10தேநீர் விடுதி - சினிமா விமர்சனம்  Poll_m10தேநீர் விடுதி - சினிமா விமர்சனம்  Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
தேநீர் விடுதி - சினிமா விமர்சனம்  Poll_c10தேநீர் விடுதி - சினிமா விமர்சனம்  Poll_m10தேநீர் விடுதி - சினிமா விமர்சனம்  Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
தேநீர் விடுதி - சினிமா விமர்சனம்  Poll_c10தேநீர் விடுதி - சினிமா விமர்சனம்  Poll_m10தேநீர் விடுதி - சினிமா விமர்சனம்  Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
தேநீர் விடுதி - சினிமா விமர்சனம்  Poll_c10தேநீர் விடுதி - சினிமா விமர்சனம்  Poll_m10தேநீர் விடுதி - சினிமா விமர்சனம்  Poll_c10 
18 Posts - 2%
prajai
தேநீர் விடுதி - சினிமா விமர்சனம்  Poll_c10தேநீர் விடுதி - சினிமா விமர்சனம்  Poll_m10தேநீர் விடுதி - சினிமா விமர்சனம்  Poll_c10 
8 Posts - 1%
Rutu
தேநீர் விடுதி - சினிமா விமர்சனம்  Poll_c10தேநீர் விடுதி - சினிமா விமர்சனம்  Poll_m10தேநீர் விடுதி - சினிமா விமர்சனம்  Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
தேநீர் விடுதி - சினிமா விமர்சனம்  Poll_c10தேநீர் விடுதி - சினிமா விமர்சனம்  Poll_m10தேநீர் விடுதி - சினிமா விமர்சனம்  Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேநீர் விடுதி - சினிமா விமர்சனம்


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jul 05, 2011 9:23 am

தமிழ்ச் சினிமாவின் தற்போதைய மந்த நிலைமைக்கு இது போன்ற திரைப்படங்கள் மிகவும் அவசியம். காவியம் என்றோ, சாதனை படம் என்றோ நிச்சயமாக இல்லை. ஆனால் ஒரு முறை பார்க்கலாம். அதுவும் குடும்பத்துடன் பார்க்கலாம்.. யாரிடமும் துணை இயக்குநராகப் பணியாற்றாத ஒருவர் இயக்கியிருக்கும் முதல் திரைப்படம்.

பூ படத்தின் பாடல்களுக்காகப் பேசப்பட்டவர் அதன் இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன். அதன் பின்னர் களவாணி, விருந்தாளி, நெல்லு ஆகிய படங்களுக்கும் இசையமைத்துவிட்டார். இவரே தயாரித்து, இயக்கியுள்ள படம்தான் இது..!





வழக்கமான காதல் கதைதான்..! அழுக்கு லுங்கி, முகம் முழுக்க தாடி, 5 நிமிடங்களுக்கொரு முறை டாஸ்மாக்கில் உருண்டு புரளும் சகோதரர்கள் பந்தல் பிரதர்ஸ்.. அண்ணன், தம்பிகள்.. ஊரில் காது குத்து, சடங்கு, கல்யாணம், கருமாதி என்று எல்லாவற்றுக்கும் பந்தல் போடுவதில் ஸ்பெஷலிஸ்ட் என்று அவர்களை அவர்களே சொல்லிக் கொள்கிறார்கள். இதில் தம்பிதான் ஹீரோ. அண்ணன் சப்போர்ட்டிங்கு..!

கை சுத்தமான நாச்சியப்ப செட்டியார் சப்-ரிஜிஸ்தரராக பணியாற்றி வருகிறார். அவரது மகள்தான் ஹீரோயின். தனது அண்ணனின் கல்யாணத்திற்காக, நாச்சியப்ப செட்டியாரின் மருமகன் நான் என்று அவரது அலுவலகத்திற்குப் போன ஹீரோ உளறிவிட.. இதில்தான் கதை ஆரம்பம்..!

“அதெப்படி நீயி அப்படி சொல்லப் போச்சு..” என்று தனது ஸ்கூட்டியில் விரட்டிப் பிடித்து ஹீரோவை லெப்ட் அண்ட் ரைட் வாங்குகிறார் ஹீரோயின். பதிலுக்கு ஹீரோவின் பதிலால் ஆள் அவுட்டாகி, வழக்கமான சினிமா பார்முலா படி லவ்வோ லவ்வு..!

விஷயம் நாச்சியப்ப செட்டியாருக்கு பாஸாகி, மகளுக்கு காவல் போடுகிறார். வழக்கம்போல பொண்ணு தப்பித்து டேக்கா கொடுக்க.. அமெரி்க்க மாப்பிள்ளையை பொண்ணு பார்க்க அழைத்து வருகிறார் செட்டியார். அன்றைய தினம் ஹீரோயினின் அண்ணிக்கும் வளைகாப்பு என்பதால் பந்தல் பிரதர்ஸ்தான் அந்த வீட்டில் பந்தல் போட வந்திருக்கிறார்கள்.

ஹீரோவும், ஹீரோயினும் நிகழ்ச்சியின் இடைவேளையில் தங்களுக்குள் இடைவெளியில்லாமல் லவ்விக் கொண்டிருக்க.. இதை வீட்டில் இருக்கும் சின்ன வாண்டு ஒண்ணு, கனகச்சிதமாக செல்பேசியில் படம் பிடித்துக் காட்டிவிட.. விஷயம் வந்த மாப்பிள்ளை வீட்டுக்குத் தெரிந்து வீடு அலங்கோலமாகிறது..!

பாதுகாப்புக்காக சம்பந்தி ஊருக்கு அனுப்பப்பட்ட ஹீரோயினை விரட்டிப் பிடித்து “நாளைக்கே கல்யாணம்.. இதே கோவிலுக்கு காலைல வந்திரு..” என்று சொன்ன ஹீரோவால் மறுநாள் சரியான நேரத்துக்கு அங்கே போக முடியவில்லை.. ஹீரோயின் என்ன செய்தாள்..? என்னதான் செஞ்சாங்க..? கல்யாணம் ஆச்சா? இல்லையா..? இதையெல்லாம் தெரிஞ்சுக்கணும்னா கொஞ்சம் காசு செலவழிக்கத்தான் வேணும்..! தியேட்டர்ல போய் பாருங்க..!

வழக்கமான காதல் கதைதான் என்றாலும் தற்போதைய திரைப்படங்களின் போக்கில் தீவிர நம்பிக்கை வைத்து கேரக்டர்களை செதுக்கியிருக்கிறார் இயக்குநர்.

நாச்சியப்ப செட்டியாரின் குடும்பத்து உறவுகள் அனைவருமே நிஜமான செட்டி முகங்களாக பார்த்து நடிக்க வைத்திருப்பதற்கு முதல் பாராட்டு..! அதிலும் நாச்சியப்ப செட்டியாரின் பண்பட்ட நடிப்பை மறக்க முடியவில்லை. இத்தனைக்கும் அவர் மிக இளம் வயதானவர். பிரியூவில் பார்த்தேன். டிரம்ஸ் வாசிக்க வாய்ப்பு கேட்டு வந்தவரை அப்படியே பிடித்து நடிக்க வைத்துவிட்டாராம் குமரன்.

அவசரத்தில் கட்டிங்கை அடித்துவிட்டு முதல் முறையாக போதையில் புலம்புவது.. நிலத்தை முறைகேடாக பதிவு செய்யச் சொல்லிப் பணத்துடன் வரும் நபரிடம் முறைத்து பேசுவது.. தலையைக் குனிந்தபடியே தனது மகளால் ஏற்பட்ட அவமானத்தை ஏற்றுக் கொள்வது.. மகளுக்காக ஹீரோ அம்மாவின் காலில் விழுவது என்று இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்திலுமே ஸ்கோர் செய்திருக்கிறார்..!





ஹீரோவாக ஆதீத். ஹீரோயினாக ரேஷ்மி மேனன்.. இனிது, இனிதுவில் ஏற்கெனவே நடித்திருந்தாலும் இதுதான் முதல் படம் போல் நடித்துள்ளார்கள். ஹீரோயினின் குழந்தை முகத்தில் கொஞ்சம் அடிக்ட்டாகி இரண்டு நாட்களாக கூகிள் பஸ், பேஸ்புக், டிவிட்டரில் அந்தக் குழந்தையைப் பற்றிப் பிரச்சாரம் செய்ததை கொஞ்சம் அடக்கத்துடன் சொல்லிக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன்..!

இந்தக் குழந்தை நினைச்சால் ஒரு ரவுண்டு வரலாம். நல்ல கைட்னஸ்.. சிறந்த இயக்குநர்கள் கிடைக்க வேண்டும். பெஸ்ட் ஆஃப் லக் சைல்ட்.. ஹீரோவை விரட்டிப் பிடித்துக் கேள்வி கேட்பதில் மிகப் பெரிய லாஜிக் ஓட்டைதான் என்றாலும், இப்படியும் பொண்ணு ஊருக்கு ஒண்ணு இருக்குமே என்பதால் ஏற்றுக் கொள்ளலாம்.. பாடல் காட்சிகளில் ஒளிப்பதிவாளரின் திறமையில் இன்னமும் பிரெஷ்ஷாக ஜொலித்தார் ரேஷ்மி..!

ஹீரோ ஆதித் தேநீர் விடுதியில் அடிக்கும் லூட்டியும், அங்கேயிருந்து சைட் அடிக்கும் காட்சிகளும் பலே பலே.. அந்த டீக்கடைக்காரனையும் சந்தடிச்சாக்கில் பாராட்டிக் கொள்வோம். இது போலவே நாச்சியப்பனிடம் பியூன் வேலை பார்க்கும் ஒருவரும் கலகலப்பாக்கிவிட்டார்..

நாச்சியப்பன் கதவைச் சாத்திக் கொண்டவுடன் ஏற்படும் பதட்டத்தை அவர் அடிக்கின்ற சரக்கைப பார்த்து. “போச்சு.. போச்சு. சாயந்தரம் கட்டிங்குக்காக வைச்சிருந்தேன். அதையும் அடிச்சிட்டீங்களே..” என்று புலம்புவதில் மது பிடிக்காத எனக்கே காட்சி மட்டும் பிடித்திருந்தது.

புதுமுக இயக்குநராக மட்டுமில்லாமல் நேர்த்தியாக திரைக்கதையும் எழுதியிருக்கிறார் குமரன்.. ஹீரோவின் அம்மா செத்ததுபோல் இருக்கும் காட்சியில் நிஜமோ என்று நினைக்க வைத்து, மகனது கல்யாணத்துக்காக செய்திருக்கும் செட்டப் என்று சொல்லும்போது செம கலகலப்பு..!

நாச்சியப்பரின் வீட்டு வாசலில் இரவோடு இரவாக தோரணம் கட்டுவது.. டாஸ்மாக் கடையில் விஸிட்டிங் கார்டை கொடுத்து கேன்வாஸ் செய்வது.. ஹீரோயின் ஹீரோவின் வீட்டுக்குள்ளேயே வந்து மீனை லவட்டிக் கொண்டு செல்வது.. ஹீரோ அண்ணனின் செல்போனை வைத்துக் கொண்டு ஒருவன் சின்னமனூர், தேவாரத்தில் இருந்தெல்லாம் போன் செய்வது.. என்றெல்லாம் இடையிடையே காட்சிகளுக்கிடையிலேயே நகைச்சுவையை வைத்து தனி ஆவர்த்தனம் இல்லாமலேயே கதையை நகர்த்தியிருக்கிறார்..!

இசையும் அவரேதான்.. பாடல்களைவிடவும், டைட்டில் காட்சிகளின்போது இசைக்கும் பின்னணி இசைதான் எனக்குப் பிடித்திருந்தது. சொந்தப் படம் என்பதால் ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார்போல் தெரிகிறது..!

ரவுடி போன்றவனை காதலிக்கும் அழகு தேவதைகள் கதைதான் தற்போதைய லேட்டஸ்ட் டிரெண்ட்.. இதுவும் அதில் ஒரு வகைதான். ஆனால் காட்சியமைப்புகளில் மட்டும் வித்தியாசத்தைக் கொட்டி தன்னால் முடிந்த அளவுக்கு சுவாரசியத்தைக் காட்டியிருக்கிறார்..!

நாச்சியப்ப செட்டியாரின் வேலை சப்-ரிஜிஸ்தரர் என்றவுடனேயே என்னை மாதிரி சினிமா மூளை உள்ளவர்கள் இடைவேளைக்குள்ளாகவே கிளைமாக்ஸ் எப்படியிருக்கும் என்பதை கண்டறிந்துவிட்டோம்..! மற்றவர்களுக்கு ஊகிப்பது கடினம்தான் என்றாலும், கிளைமாக்ஸ் சுவாரஸ்யமாகத்தான் உள்ளது..!



காதல் கதைதான் என்றாலும் ஒரு அடிதடி இல்லை.. வெட்டுக் குத்து இல்லை.. ரத்தம் சிந்தவில்லை. அரிவாள் இல்லை என்பதெல்லாம் இந்தப் படத்தை ரசித்து பார்த்ததற்கு இன்னுமொரு காரணம்..!

இந்த மாத கோட்டாவில் ஒரு படம்தான் என்றால், இந்தப் படத்திற்கு நிச்சயம் குடும்பத்துடன் செல்லலாம்..!

சென்று வருக..!




உண்மைத்தமிழன்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jul 05, 2011 10:22 am

கங்கை அமரனுக்கு பிறகு இயக்குநரகா மாறிய இசை அமைப்பாளருக்கு வாழ்த்துக்கள் !!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக