புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்ல மனம் தீய மனம் Poll_c10நல்ல மனம் தீய மனம் Poll_m10நல்ல மனம் தீய மனம் Poll_c10 
59 Posts - 50%
heezulia
நல்ல மனம் தீய மனம் Poll_c10நல்ல மனம் தீய மனம் Poll_m10நல்ல மனம் தீய மனம் Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
நல்ல மனம் தீய மனம் Poll_c10நல்ல மனம் தீய மனம் Poll_m10நல்ல மனம் தீய மனம் Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
நல்ல மனம் தீய மனம் Poll_c10நல்ல மனம் தீய மனம் Poll_m10நல்ல மனம் தீய மனம் Poll_c10 
3 Posts - 3%
PriyadharsiniP
நல்ல மனம் தீய மனம் Poll_c10நல்ல மனம் தீய மனம் Poll_m10நல்ல மனம் தீய மனம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
நல்ல மனம் தீய மனம் Poll_c10நல்ல மனம் தீய மனம் Poll_m10நல்ல மனம் தீய மனம் Poll_c10 
1 Post - 1%
Shivanya
நல்ல மனம் தீய மனம் Poll_c10நல்ல மனம் தீய மனம் Poll_m10நல்ல மனம் தீய மனம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நல்ல மனம் தீய மனம் Poll_c10நல்ல மனம் தீய மனம் Poll_m10நல்ல மனம் தீய மனம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நல்ல மனம் தீய மனம் Poll_c10நல்ல மனம் தீய மனம் Poll_m10நல்ல மனம் தீய மனம் Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
நல்ல மனம் தீய மனம் Poll_c10நல்ல மனம் தீய மனம் Poll_m10நல்ல மனம் தீய மனம் Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
நல்ல மனம் தீய மனம் Poll_c10நல்ல மனம் தீய மனம் Poll_m10நல்ல மனம் தீய மனம் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
நல்ல மனம் தீய மனம் Poll_c10நல்ல மனம் தீய மனம் Poll_m10நல்ல மனம் தீய மனம் Poll_c10 
12 Posts - 2%
prajai
நல்ல மனம் தீய மனம் Poll_c10நல்ல மனம் தீய மனம் Poll_m10நல்ல மனம் தீய மனம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
நல்ல மனம் தீய மனம் Poll_c10நல்ல மனம் தீய மனம் Poll_m10நல்ல மனம் தீய மனம் Poll_c10 
9 Posts - 2%
jairam
நல்ல மனம் தீய மனம் Poll_c10நல்ல மனம் தீய மனம் Poll_m10நல்ல மனம் தீய மனம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நல்ல மனம் தீய மனம் Poll_c10நல்ல மனம் தீய மனம் Poll_m10நல்ல மனம் தீய மனம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
நல்ல மனம் தீய மனம் Poll_c10நல்ல மனம் தீய மனம் Poll_m10நல்ல மனம் தீய மனம் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
நல்ல மனம் தீய மனம் Poll_c10நல்ல மனம் தீய மனம் Poll_m10நல்ல மனம் தீய மனம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்ல மனம் தீய மனம்


   
   
மணிகண்டன்
மணிகண்டன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 19/07/2011

Postமணிகண்டன் Thu Jul 21, 2011 1:53 pm

நல்ல மனம் தீய மனம்

மனம் என்பது மரணப் பட்டினம் நோக்கி அழைத்துச் செல்லும் வாகனம். மனதின் போக்கில் வாழ்ந்த யாருமே சாகாக் கல்வியைப் பயில முடியாது. இதையே இடைகாடார் அழகாகக் கூறுவார்,

" சாகாதிருக்க தான்கற்ற கல்வியன்றோ வாகான மெய்க்கல்வி வகுத்தறி நீ கன்மனமே !"
என்கிறார். இங்கு 'கன்மனமே' என்றது தீங்கான மனமே விலகு என்று பொருள்படும்.

உலகின் கொடுமை என்னவென்றால் மனதிற்கு அடிமையான, மனதின் சீற்றத்தில் சிக்கிய சீமான்களை மக்கள் ஆன்மீகம் தேடி அடி பணிகிறார்கள். அந்தோ பரிதாபம் ! மனதின் கேட்டிற்கு அடிமையானதின் அடையாளம் மூன்று:
1 . ஓய்ந்து ஒரு இடத்தில இருக்க முடியாது
2 .மனிதர்களோடு ஊடாடுவதிலும், மகிழ்வதிலும், போதிப்பதிலும், விவாதிப்பதிலும் நாட்டம்.
3 . பணத்தைப் பயன்படுத்தும் பயன்பாட்டிலேயே சிந்திப்பது, பணத்தின் தேவையிலேயே மூழ்கி இறப்பது.

மனதை வென்று மனதிற்கு மரணம் கொடுப்பவர்களின் நிலை:
1 . தனித்து மௌனம் கண்டு வாழ்வார்கள்
2 . மனித சந்தடியை விட்டு ஒதுங்கிச் சிந்திப்பார்கள்.
3 . தனக்கும் இறைவனுக்கும் உள்ள உறவு மட்டுமே அவர்களிடம் இருந்து வெளிப்படும்.

நமது உடலுக்கு ஆயுள் இருப்பது போல நமது மனதிற்கும் ஆயுள் உண்டு. ஆயுள் முடிந்ததும் அடுத்த சந்ததியை உருவாக்கும். மனம் ஒரு மனிதனுக்குள் இல்லறம் நடத்தினால் அவனே பெரும் குடும்பி. சில மனிதர்களுக்குள் ஆயிரக்கணக்கில் மனக் குழந்தைகள் வாழும். ஆனால் ஞானியின் சிந்தையில் ஒரே ஒரு மனமே வாழும். அதுபற்றி விரிவாகக் காண்போம்.

நாம் ஏழு வயதிற்குள் வாழும் வரை எத்தனையோ சம்பவங்கள், உணவு, உடை, உறவுகள், விளையாட்டு இப்படி அனுபவித்து இருப்போம். ஆனால், அவைகள் இன்று ஞாபகம் இல்லை. அவைகள் இறந்த மனமாகும். எவ்வளவு முயன்று ஞாபகப்படுத்தினாலும் இன்று ஞாபகத்திற்கு வராது.
பத்து மாதக் குழந்தையாகத் தவழும் பருவத்தில் நாம் ஒரு செம்பு நிறைய தண்ணீர் கீழே சிந்தாமல் மண்டியிட்டபடி எம் தாத்தாக் கையில் கொடுத்தோம். அவர் வாங்கிக் குடிப்பதற்குள் செம்பு தவறி விழுந்து தண்ணீர் கொட்டியதாம். அன்று இரவே தாத்தா இறந்து விட்டார். இன்று அவரின் முகம் எமக்கு நினைவில் இல்லை. காரணம் அந்த மனம் இறந்து விட்டது. சில மனங்களுக்கு இருபது நிமிடங்கள்தான் ஆயுள். அதாவது அடர்ந்த மக்கள் கூட்டமுள்ள இடங்களுக்குப் போனால் அனைவரது முகத்தையும் பார்ப்போம். ஆனால் அடுத்த கணமே அந்த மனம் இறந்து விடும். பிடித்தமான சில முகங்களைப் பார்த்தால் அந்த மனம் இருபது வருடங்கள் கழிந்தாலும் இறக்காமல் வாழும்.

மனதின் ஆயுளைக் குறைப்பதுதான் தவம். அதற்குச் சில யுக்திகள் உள்ளன.

* பிச்சை எடுத்து வாழ்தல்
* ஓரிடத்தில் நிலையாக தாங்காமல் வாழ்தல்
* தன்னை எப்போதுமே தாழ்வாக விமர்சனம் செய்தபடி சிந்தித்தல்.

இதில் முதலாவதாக உள்ள பயிற்சியைப் பட்டினத்தார் செய்தார். அதாவது பிச்சை எடுத்து வாழ்வது எதற்கு என்றால், ஒரு சம்பவத்தால் நாம் மகிழ்ச்சி அடைந்தாலோ அல்லது துக்கம் அடைந்தாலோ நமது மனதின் ஆயுள் அதிகமாகி விடும். ஒருவன் நமக்கு துரோகம் செய்துவிட்டால் அந்த மனம் நாம் சாவது வரை மறக்காமல் வாழும். இதனை அழிக்கவே ஞானிகள் பிச்சை எடுத்தார்கள். அப்படிச் செய்யும் பொது பலரும் திட்டுவார்கள்; சிலர் பாராட்டுவார்கள். எதிலும் சம்பந்தப்படாமல் வாழும் பக்குவம் உருவாகும்.

அதேபோலத் தன்னைப் பெருமையாகப் பேசுபவர்களின் மனதின் ஆயுள் சாகாமல் நீடிக்கும். ஞானிகள் தன்னையே திட்டிக் கொண்டு, விமர்சனம் செய்து கொண்டு, தவத்தின் போது தமது உடலை, மனத்தைக் கேவலமாகப் புறக்கணித்து மனதின் ஆயுளைக் குறைத்து, மனதை ஆக்கிக் கொன்று விடுவார்கள். மனம் உடம்பை நோயாளி ஆக்கினால் பைத்தியம். உடம்பு மனதை நோயாளி ஆக்கினால் ஞானி.

தெரிந்தோ தெரியாமலோ ஒவ்வொரு மனிதனும் தனக்குள் வாழும் மனதை சாகடிக்கவே முயல்கிறான். மனம் செய்கிற இன்னல்களை உடல் தாங்க முடியாமல் அவதிப்படும் போது மனதின் மீது விரக்தி உண்டாகும். இதை உணரும் மனங்கள் சாணக்கியமாகச் செயல்பட்டு தனது சந்ததிகளை உண்டாக்கிவிடும். ஒரு மனிதன் உலக இன்பத்தை ஆழ்ந்து சுவைக்கின்றான், திடீரென்று அவனது மனைவி நோய் வந்து இறக்கிறாள். உடனே கடவுளைத் தேடி கோவிலுக்குச் செல்லும் சந்ததி மனம் உருவாகிவிடும். காலப்போக்கில் கோவிலும் சலித்துவிடும். அப்புறம் தியான மன்றத்தைத் தேடிய சந்ததி மனம் உண்டாகும். அங்கு விதம் விதமாகப் மனப் பயிற்சி அளித்து சாவது வரை வினோதமான மனதை உண்டாக்கி விடுவார்கள்.

மனதின் ஏஜெண்டுகள்தான் தியான மன்றங்கள். அங்குப் போனால் நிறைய சந்ததி மனங்கள் கிடைக்கும். முன்னூறு வருடங்கள் வாழ்ந்தாலும் மனதை அழிக்க முடியாதபடி கட்டுக்கட்டாகப் புத்தகங்கள், தகவல்கள், பயிற்சிகள், தத்துவங்கள், பாடல்கள், உளறல்கள், இப்படியே சண்டாள மனதின் சந்ததிகளை மூலையில் திணித்து விடுவார்கள். இதுவா ஆன்மீகம்? இது மரணகீதம்.

மனதின் இந்திர ஜாலங்களில் முக்கிய சக்தி நிமிட நேரங்களில் பல்லாயிரம் சந்ததிகளைப் படைத்துவிடும். அனைத்தையும் அழிக்க நமது நூறு வருட ஆயுள் கூட போதாமல் போகலாம். சாகாக் கல்வி பயில்பவர்கள் நூல்களையோ, தத்துவங்களையோ மதிப்பது கிடையாது. மனம் உள்ளவரை கடவுளைக் காணவே முடியாது. எனவே, மனதைச் சாகடிக்கும் முயற்சியில் இறங்குவார்கள் சித்தர்கள். இதையே

"சினம் இறக்கக் கற்றாலும் சித்தி எல்லாம் பெற்றாலும்
மனம் இறக்கக் கல்லார்க்கு வாயேன் பராபரமே "
என்பார் தாயுமானவர்.

சாகாக் கல்வி பயில குருமார்கள் தேவையில்லை. நாம் எந்த குருவிடமும் கற்கவில்லை. "முழு ஆன்ம வலிமை" இருந்தால் தானாகவே வரும். அப்படி வலிமை குறைவாக உள்ளவர்கள் குருவிடம் பாடம் கற்கலாம். அந்த குரு மனதின் மூலம் சொல்லித்தர மாட்டார். வார்த்தைகளோ, சொற்பொழிவோ இருக்காது. மனம் இறந்த மௌன மொழியால் பயிற்சி தொடங்கும், நிறைவு பெறும்.

சாகாக் கல்வியை ஒரு நூல் வடிவில் நாம் கொடுப்பது கூட எமது முட்டாள்தனம் தான். வேறு வழியில்லை, முள்ளை முள்ளால் எடுப்பது போல, மனதினால் காயப்பட்டு மாய்பவர்களை, மனதின் மூலம் எழுத்தாகப் படைத்து மனத்தால் சிந்திக்க வைத்து சாகாக்கல்வி பயில ஆர்வத்தை ஊட்டுகிறோம்.

மனம் உள்ளவரை..... மனப்பாடம் உள்ள வரை........... மனிதனுக்கு விமோசனம் இல்லை. எனவே மனதைக் கொல்லும் ஆயுதத்தைக் கையில் எடுப்போம், மனதைக் கொல்வோம். அதற்கு ஒரே வழி, மனதிற்கு நிறைய துன்பங்கள், வறுமைகள், கஷ்டங்கள் கொடுத்துப் பழக வேண்டும். ஏதாவது ஒரு இன்பத்தை மனம் அடைந்தால் கூட சந்ததியை உருவாக்கி விடும்.

அதுபோல நமக்கு உதவி செய்யும் மனம், கொடுமை செய்யும் மனம் என இரு வகைகள் உள்ளன. தாய், தந்தை மூலம் வந்த மனங்கள் உதவி செய்யும் மனங்கள், நாம் பிறந்த பிறகு சந்ததியைப் பெருக்க விட்ட மனங்கள் தீய மனங்கள். தீய மனங்களின் ஆயுள் குறைவு ஆனால், கொடுமைகள் அதிகம். சாப்பிடத் தூண்டுதல், அனுபவிக்கத் தூண்டுதல் இந்த தீய மனதின் வெளிப்பாடுகள். தீய மனத்தால் குற்றங்கள் பெருகி உடம்புக்குத் தண்டனை கிடைக்கும் போது மனசாட்சி போல வந்து நல்ல மனங்கள் பேசி உதவி செய்யும். நல்ல நூல்களைப் படிப்பது, தியானம் மற்றும் தவம் செய்யத் தூண்டுவது இந்த நல்ல மனங்களே ஆகும். கடவுளைத் தேடுவதும் இந்த நல்ல மனங்கள்தாம். இவற்றில் தீய மனங்களை இனம் கண்டு அழித்து விடலாம். ஆனால் நல்ல மனங்கள் கடுவுளை அடையும்போது இடையுறு செய்து எதிரியாக மாறும். அப்போது நல்ல மனதையும் அழிக்க வேண்டிய நிலை உருவாகும். அதற்குச் சந்ததி மனங்களை உருவாக்கத் தெரியாது. இந்த நல்ல மனமும் அழிந்த பிறகுதான் கடவுள் தரிசனம் உண்டாகும்.

இன்று பலரும் தீய மனதின் தூண்டுதலால் குற்றவாளிகளாக உலவுவதை நேரிடையாகக் காண முடியும். ஆனால், நல்ல மனதின் தாக்கத்தால் பலர் சீரழிவது பலருக்குத் தெரியாது. அதாவது, வள்ளலார் பாடலை மனப்பாடம் செய்தது ஒரு நல்ல மனம், அதன்பிறகு வல்லார் கொள்கையை ஏற்றது அதே நல்ல மனம்.
ஆனால் அருட்பெரும்ஜோதி அனுபவம் அடைய விடாமல் நல்ல மனம் தடையாக நிற்பதைத் தடுக்க முடியாமல் அந்த நல்ல மனம் கள்ள மனமாகி ஜோதியைக் காட்டுவதையும், கனவில் வள்ளலாரைப் பார்த்ததையும் வைத்து வாழ்நாள் முழுக்க அறிவாளி என்கிற போர்வையில் சிக்கிக் கடைசியில் மரணப் படுக்கையில் படுக்கும்போது சன்மார்க்கமும் உதவாது, சாவும் ஒதுங்காது.

இப்படிப் பலரும் செத்துச் செத்துப் பார்த்தும் பலகோடி சன்மார்க்கிகள் திருந்துவதாகத் தெரியவில்லை. நல்ல மனதின் அடிமைகளாக நல்லவர் என்ற பெயரில் வாழ்வைக் கடத்துகிறார்கள். இப்படிதான் பல மன்றங்கள் நெஞ்சுமுட்டும் அளவுக்கு உபதேசங்கள் செய்கின்றன. இதை ஆன்மீகம் என்ற பெயரில் அமோகமாய் விற்பனை செய்து, வயிறு வளர்த்து..... வாயாடி..... வயதாகி...... வாய்க்கரிசி போட வைப்பார்கள். நல்ல மனத்தையும் கெட்ட மனத்தையும் நன்கு புரிந்து கொண்டால் கடைத்தேறலாம்.

--- தவயோகி ஞான தேவ பாரதி சுவாமிகள்.

இந்த பதிவை சற்று சிந்தித்து பாருங்கள்....

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Jul 21, 2011 2:02 pm

மனதை வென்று மனதிற்கு மரணம் கொடுப்பவர்களின் நிலை:
1 . தனித்து மௌனம் கண்டு வாழ்வார்கள்
2 . மனித சந்தடியை விட்டு ஒதுங்கிச் சிந்திப்பார்கள்.
3 . தனக்கும் இறைவனுக்கும் உள்ள உறவு மட்டுமே அவர்களிடம் இருந்து வெளிப்படும்.

அருமையான பதிவு நண்பா. சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நல்ல மனம் தீய மனம் Image010ycm

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக