புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_c10ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_m10ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_c10 
53 Posts - 59%
Dr.S.Soundarapandian
ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_c10ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_m10ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_c10ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_m10ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_c10ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_m10ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_c10 
3 Posts - 3%
prajai
ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_c10ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_m10ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_c10ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_m10ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_c10ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_m10ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_c10 
1 Post - 1%
Rutu
ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_c10ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_m10ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_c10 
1 Post - 1%
Pradepa
ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_c10ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_m10ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_c10ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_m10ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_c10ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_m10ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_c10ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_m10ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_c10ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_m10ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_c10 
231 Posts - 22%
sugumaran
ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_c10ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_m10ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_c10ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_m10ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_c10ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_m10ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_c10ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_m10ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_c10 
18 Posts - 2%
prajai
ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_c10ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_m10ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_c10ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_m10ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_c10 
5 Posts - 0%
Rutu
ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_c10ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_m10ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம்


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Jul 25, 2011 12:01 am

ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம்

பதிவு செய்த நாள் 7/23/2011 10:1:24


ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Tamildailynewspaper2009

மலை மீது நிலை கொண்டிருக்கும் கோயில்களுக்கு எப்போதுமே தனிச் சிறப்புண்டு. அப்படி தனித்த அழகு பெற்ற மலைத் தலங்களுள் பெருமுக்கலும் ஒன்று. முக்தியாசலேஸ்வரர் எனும் திருப்பெயரோடு ஈசன் இங்கு அருள்கிறார். தியானத்தையும் சித்தியையும் பெற விரும்பி பலர் வந்து வணங்கியதால் ஞானமலை என்ற பெயரும் இதற்குண்டு.
சுமார் 1500 அடி உயரம் கொண்ட பெருமுக்கல் மலை மீதுள்ள இந்த ஆலயத்திற்கு ராஜகோபுரம் எதுவும் இல்லை. இடதுபுறம் வெற்றி விநாயகர் காட்சியளிக்கிறார்.

அருகேயே மூலவரின் கருவறை சதுர வடிவில் அமைந்துள்ளது. பழங்காலத்தில் திருவான்மீக ஈஸ்வரம் உடையார், திருமலைமேல் உடையார், திருவான்மீசுவரமுடையான் என்று பல பெயர்கள் இந்த ஈசனுக்குரியதாக கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. முக்கல் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு முக்யா அல்லது முக்தி என்று பொருள். அசலம் என்றால் மலை. கூடவே ஈசனும் சேர, முக்தியாசலேஸ்வரர் என்று தற்போது ஈசன் வழிபடப்படுகிறார்.

கருவறையின் வெளியே தனிச் சந்நதியில் ஞானாம்பிகை அருள்பாலிக்கிறார். சிவபெருமானுக்கு எதிரே நந்தி பகவான் வீற்றிருக்கிறார். அதற்கும் வெளியே தனி மண்டபத்தில் உள்ள பெரிய நந்தியின்
பின்னால் சாளரம் போன்ற துளை அமைக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக சூரியஒளி வருடத்துக்கு இரண்டுமுறை (ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதத்தில்) 3 நாட்கள் தொடர்ந்து சிவபெருமான் மீது விழுவதாக கூறுகின்றனர்.
கருவறையின் சுற்றுச் சுவரில் (தென் திசையில்) காணப்படும் ஒரே தெய்வமாக தட்சிணாமூர்த்தி அழகுற அருள்பாலிக்கிறார். அருகில் சனகாதி முனிவர்கள். தமிழ் நாட்டின் ஏழாவது சிறப்புமிக்க தட்சிணாமூர்த்தியாக இவர் விளங்குகிறார்.

தட்சிணாமூர்த்தி சந்நதியின் தேவகோட்டத்தின் மேல், அசோகவனத்தில் சீதை துயரத்தோடு அமர்ந்துள்ள காட்சி செதுக்கப்பட்டுள்ளது. சீதையை சுற்றி பெருத்த வயிற்றுடன் அரக்கி ஒருத்தி இருப்பதும், மேற்கு திசையில் குரங்கு முகம் கொண்ட வானரப் பெண் குட்டிக் குரங்கை தழுவி நிற்பதும், மற்றொரு பெண், பூதகணம் தழுவ காத்து நிற்பதும் குறிப்பிடத்தக்கவை.
கோயிலின் பின்புறம் உள்ள பழமையான சந்நதியில் வெற்றிவீர ஆஞ்சநேயர்அருள்பாலிக்கிறார். சிறிய அளவில் புடைப்புச் சிற்பமாக அவரது உருவம் அமைக்கப்பட்டுள்ளது. அருகில் திருக்குளம். அடுத்து பெரிய பள்ளம் காணப்படுகிறது. அங்கு குன்றுகளால் ஆன குகைக்குள் கீறல் உருவங்கள் காணப்படுகின்றன. இந்த குகையில்தான் சீதை தங்கியிருந்து லவன், குசனை பெற்றெடுத்ததாக கூறுகின்றனர். அதனால் இதனை சீதை குகை என்று அழைக்கிறார்கள்.
மலைக்கோயிலின் பின்புறம் மலையடிவாரத்தில் கலைநயமிக்க விஜயநகர காலத்து சிவபெருமான் ஆலயம் தாழக் கோயிலாக அமைந்துள்ளது. இது மலையிலிருந்து பார்ப்பதற்கு அழகாக உள்ளது. இந்த ஆலயத்தை காமாட்சி அம்மன் கோயில் என்கின்றனர். சிற்பங்கள் நிறைந்த இந்தக் கோயிலில் புதர்கள் மண்டியுள்ளன. இங்குள்ள மூலவரின் லிங்கம் மும்மூர்த்திகளையும் தன்னகத்தே கொண்டது. எனவே இந்த லிங்கத்தை வழிபட்டால் சிவபெருமான், பெருமாள் மற்றும் பிரம்மாவையும் சேர்த்து வழிபட்ட பலன் கிட்டும்.
முதலாம் குலோத்துங்கச் சோழனால்
கி.பி.1050ல் திருப்பணி துவங்கப்பட்டு, 1118ல் அவரது மகன் விக்கிரம சோழனால் கட்டி முடிக்கப்பட்டதாக கல்வெட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. கற்கால மனிதர்களின் தமிழ் எழுத்து வடிவத்தை இங்கு காணலாம். சோழர், பாண்டியர், காடவ
ராயர், சம்புவராயர், விஜயநகர மன்னர்கள் திருப்பணி செய்துள்ளதாகத் தெரிய வருகிறது. இத்தனை பெரிய கற்கோயில் ஆங்காங்கே சிதைந்து காணப்படுகிறது. ஆங்கிலேயருக்கும், பிரெஞ்சுக்காரர்களுக்கும் நடந்த போரின்போது பீரங்கி குண்டுகள் தாக்குதலால் இந்த சேதம் ஏற்பட்டதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். கற்தூண்கள் அனைத்தும் சோழர்கால கலைநயத்துடன் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் பல கீழே விழுந்து கேட்பாரற்று கிடக்கின்றன. இவற்றை பொருத்தி மிகப்பெரிய கலைநயமிக்க கோயிலை எழுப்பினால் இப்பகுதி மேலும் சிறப்பு பெறும் என்பது நிச்சயம்.

இக்கோயிலில் பிரதோஷ விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பிரதோஷ காலத்தில் மாலை 2 மணிமுதல் இரவு 7 மணிவரையிலும் கோயில்
திறந்திருக்கும். மாத சிவராத்திரி அன்று இரவு 9 மணி முதல் மறுநாள் காலை 7 மணி
வரையிலும் திறந்திருக்கும். மாசி மகத்தன்று இந்த ஊரைச் சுற்றியுள்ள கீழ் சிவிரி, பழ
முக்கல், பெருமுக்கல், நல்லாளம் ஆகிய ஊர்களை சேர்ந்த உற்சவ மூர்த்திகள் மலையேறி முக்தியாசலேஸ்வரரை தரிசித்து பின் மலையிறங்குவது வழக்கம். மகாசிவராத்திரி அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இம்மலை மீதுள்ள கருங்கல் தீபமேடையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. திருவண்ணா
மலைக்கு அடுத்து நெய்யினால் ஏற்றப்படும் (ª)மகாதீபம் இதுதான்.

இங்குள்ள வால்மீகி ஆசிரமம் மிகவும் சிறப்பு மிக்கது. வால்மீகி முனிவர் இங்கு வந்து தியானம் செய்ததாக கூறுகின்றனர். இங்குள்ள வால்மீகி தீர்த்தம் எக்காலத்திலும் வற்றாத மகிமை கொண்டது. மயிலம் பொம்மபுர ஆதீனம் பாலசித்தர், பாலயோகி சுவாமிகள் போன்ற மகான்கள் இந்த மலையில் தவமிருந்து அருள் பெற்றுள்ளனர்.

மலைக்கோயிலை அடைவதற்கு முன்புறமும், பின்புறமும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மிகவும் பழமை வாய்ந்த இந்த கோயிலை முழுமையாக புனரமைப்பு செய்து, முறையாக படிக்கட்டு வசதி, மின்விளக்கு, குடிநீர், தங்கு மண்டபம் உள்ளிட்ட வசதிகளை செய்தால் மிகப்பெரிய ஆன்மிகத் தலமாக இந்த மலை பொலிவுபெறும் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்த மலைக்கோயில் திண்டிவனம்&மரக்
காணம் பாதையில் சுமார் 11 கி.மீ. தொலைவில் உள்ளது. கிழக்கு கடற்கரை சாலை வழியாக வருபவர்கள் மரக்காணம் பேருந்து நிலையத்திலிருந்து பெருமுக்கலை அடையலாம். திண்டிவனம்&மரக்காணம் இடையேயும் அடிக்கடி பேருந்து வசதிகள் உள்ளன.




நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Ila
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Jul 25, 2011 12:53 am

ஒரு மிகச் சிறந்த தலத்தின் வரலாற்றை உங்களுடைய பதிவின் மூலம்
அறிய முடிந்தது. உங்களுக்கு என்னுடைய நன்றிகள். பெருமுக்கல் குறித்தான என்னுடைய நினைவில் பதிந்தது...காஞ்சி மகா ஸ்வாமிகள்
அவருடைய பரமகுருவான கலவைப் பெரியவாளை அங்கேதான்
முதன் முதலாக சந்தித்தார் என்ற செய்திதான்.

உங்களிடம் என்னுடைய பணிவான விண்ணப்பம் என்னவென்றால்..
பெருமுக்கல் குறித்துச் சொன்ன மாதிரியே...எனக்காக..காஞ்சிபுரம்
அருகிலுள்ள "சுருட்டல்" என்ற கிராமத்தின்..கோவில் மற்றும் ஊர்
வரலாற்றை உங்களால் திரட்டித் தர இயலுமா?

அன்புடன் ரமேஷ்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக