புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மக்களே  Poll_c10மக்களே  Poll_m10மக்களே  Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
மக்களே  Poll_c10மக்களே  Poll_m10மக்களே  Poll_c10 
31 Posts - 44%
jairam
மக்களே  Poll_c10மக்களே  Poll_m10மக்களே  Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
மக்களே  Poll_c10மக்களே  Poll_m10மக்களே  Poll_c10 
2 Posts - 3%
ஜாஹீதாபானு
மக்களே  Poll_c10மக்களே  Poll_m10மக்களே  Poll_c10 
1 Post - 1%
சிவா
மக்களே  Poll_c10மக்களே  Poll_m10மக்களே  Poll_c10 
1 Post - 1%
Manimegala
மக்களே  Poll_c10மக்களே  Poll_m10மக்களே  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மக்களே  Poll_c10மக்களே  Poll_m10மக்களே  Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
மக்களே  Poll_c10மக்களே  Poll_m10மக்களே  Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
மக்களே  Poll_c10மக்களே  Poll_m10மக்களே  Poll_c10 
13 Posts - 4%
prajai
மக்களே  Poll_c10மக்களே  Poll_m10மக்களே  Poll_c10 
9 Posts - 3%
jairam
மக்களே  Poll_c10மக்களே  Poll_m10மக்களே  Poll_c10 
4 Posts - 1%
Jenila
மக்களே  Poll_c10மக்களே  Poll_m10மக்களே  Poll_c10 
4 Posts - 1%
Rutu
மக்களே  Poll_c10மக்களே  Poll_m10மக்களே  Poll_c10 
3 Posts - 1%
Guna.D
மக்களே  Poll_c10மக்களே  Poll_m10மக்களே  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மக்களே  Poll_c10மக்களே  Poll_m10மக்களே  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
மக்களே  Poll_c10மக்களே  Poll_m10மக்களே  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மக்களே


   
   
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Sun Aug 28, 2011 9:21 am

தூக்குத் தண்டனையிலிருந்து காப்பாற்ற முயற்சி
கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 27 ஆகஸ்ட், 2011 - 18:01 ஜிஎம்டி


விசாரணையின் போது நளினி மற்றும் முருகன்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கும் வரும் செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி தூக்கு தண்டனை விதிக்கப்படும் என்று அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை காப்பாற்ற சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக வாதாடி வரும் வழக்கறிஞர் புகழேந்தி, இந்த தண்டனைக்கு எதிரான தடைக் கோரிக்கை மனுவுடன் ஜனாதிபதி கருணை மனுவை நிராகரித்ததை எதிர்த்தும் திங்கட் கிழமையன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று தெரிவித்தார்.
தொடர்புடைய விடயங்கள்
ராகுல் காந்தி, சோனியா காந்தி, மனித உரிமை, காங்கிரஸ், விடுதலைப் புலிகள்
இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி ஆஜராகி வாதிடுவார் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த மூவருக்கு விதிக்கப்பட்ட தண்டனைகளை நிறுத்த வேண்டும் என்று அரசியல் தலைவர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஹரித்ரா முருகன்

மாற்று மீடியா வடிவில் இயக்க
இந்நிலையில், தூக்கு தண்டனையை எதிர்நோக்கியுள்ள முருகன் மற்றும் இந்த வழக்கில் தூக்கு தண்டனை பெற்று பின்னர் தண்டனைக் குறைப்பினால் ஆயுட் தண்டனை பெற்ற நளினி தம்பதிகளுக்கு சிறையில் பிறந்த மகள் ஹரித்ரா முருகன், இந்த தண்டனையை குறைக்க வேண்டும் என்று மனுச் செய்துள்ளார்.
தனது தந்தையை விடுவிக்காவிட்டாலும் அவரின் தண்டனையை ஆயுட் தண்டனையாக குறைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்.
தற்போது லண்டனில் மருத்துவப் படிப்புக்காக தயாராகிக் கொண்டிருக்கும் ஹரித்ரா முருகன், தனது பெற்றோருடன் கடிதம் மூலமாகவே தொடர்புகளை பல ஆண்டுகளாக பேணி வந்துள்ளார்.
கடந்த 2005 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தனது பெற்றோரை பார்க்கவில்லை என்றும் தற்போது இந்தியா செல்ல வீசா அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளதாகவும் அவர் கூறினார்
http://www.bbc.co.uk/tamil/india/2011/08/110827_deathlegalaction.shtml

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Sun Aug 28, 2011 9:40 am

“ராஜிவ் கொலை கேஸ் தடயங்களில், ‘பொட்டு’ வந்தது எப்படி?”

Viruvirupu, Sunday 28 August 2011, 03:58 GMT
சென்னை, இந்தியா: “ராஜிவ் காந்தி கொலைவழக்கில், புலனாய்வாளர்கள் செய்த குளறுபடிகள்தான், தற்போது மூன்றுபேரை தூக்குத் தண்டனைவரை கொண்டு வந்துள்ளது” என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார் திருச்சி வேலுசாமி. நிஜமான குற்றவாளிகளை விட்டுவிட்டு இவர்களைத் தண்டிக்கிறார்கள் என்பது இவரது கோணம்.

ராஜிவ் காந்தி கொலை விவகாரத்தில், நீண்டகாலமாகக் குரல்கொடுத்துவரும் வேலுசாமி, ராஜிவ் கொலை பற்றிய விசாரணை கமிஷனால் 7 தடவைகள் விசாரிக்கப்பட்டவர். ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த ஜெயின் கமிஷன் மேற்கொண்ட சில நடவடிக்கைகளுக்கு, இவரின் வாக்குமூலமே காரணமாக அமைந்திருந்த அளவுக்கு, இவர் முக்கியமானவர்.

ராஜிவ் கொலை விசாரணைகளின்போது, இவர் வழங்கிய சில உறுதியான வாக்குமூலங்கள், உண்மையில் ராஜிவ் கொலை வழக்கையே திசை திருப்பியிருக்க முடியும். ஆனால் ‘ஏதோ காரணங்களுக்காக’ அப்படி நடைபெறவில்லை. அதற்குக் காரணம், இவரது வாக்குமூலங்களில் பல வி.வி.ஐ.பி.களின் பெயர்கள் இருந்தன என்பதாக இருக்கலாம்.

ராஜிவ் கொலை விசாரணைகளின்போது, புலனாய்வாளர்கள் கேஸை தாம் விரும்பிய ஒரு திசையின் செலுத்திச் சென்றார்கள் என்று கூறும், திருச்சி வேலுசாமி, “பேரறிவாளன், திராவிடர் கழகத்தில் இருந்தவர். ராஜிவ் காந்தியைக் கொன்ற பெல்ட் பாம் தயாரிக்க பேட்டரி வாங்கிக் கொடுத்ததாக பேரறிவாளன் கைதுக்குக் காரணம் சொல்கிறார்கள் அதிகாரிகள். பெங்களூரு ரெங்கநாத் என்பவர் கொடுத்த வாக்குமூலத்தில், “அதே பெல்ட் பாமை யாகத்தில் வைத்து சந்திரா சாமி ஆசீர்வதித்தார்” என்று கூறியிருக்கிறார்.

ஆனால், புலனாய்வாளர்கள் சந்திரா சாமியை இதுபற்றி விசாரித்ததில்லை. ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட நேரத்தில் சந்திரா சாமி எங்கே இருந்தார் என்ற கேள்விக்கு, இன்றுவரை யாரிடமும் பதில் இல்லை.

தற்போது தூக்குத் தண்டனை பெற்றுள்ள சாந்தன், ஆள்மாறாட்டத்தில் சிக்கிக் கொண்டுள்ளார். ‘திருச்சி சாந்தன்’ என்பவர் மீதான குற்றச்சாட்டுகளை, இந்த சாந்தன்மீது சுமத்தி, இவரைச் சிக்க வைத்துள்ளார்கள். நளினியின் கணவர் என்ற ஒரே காரணத்தால், முருகன் அகப்பட்டுக் கொண்டார்” என்கிறார்.

(எமது குறிப்பு: வேலுசாமி குறிப்பிடும் ‘திருச்சி சாந்தன்’ என்பவர், 1980களின் மத்தியில் விடுதலைப்புலிகள் வட்டாரங்களில் ‘குண்டு சாந்தன்’ என்று அறியப்பட்டவர். ஸ்ரீலங்காவில் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில், அரசியல் வேலைகள் செய்வதற்காக தமிழகம் அனுப்பப்பட்டவர். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவைச் சேர்ந்த நபர்.

ராஜிவ் கொலை புலனாய்வு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ஸ்பெஷல் டீம் ஒன்று இவரை தமிழகம் முழுவதும் வலை வீசித் தேடியது நிஜம். அவர்களது கையில் சிக்குமுன் இவர் இறந்து போனதும் நிஜம். இந்த சம்பவங்கள் பல பெரிய மர்ம முடிச்சுக்களை உடையவை. விறுவிறுப்பு.காம் தொடராக வெளியிடும் ‘ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை’ தொடரில் இனி வரவுள்ள சில அத்தியாயங்களில், திருச்சி சாந்தன் அல்லது குண்டு சாந்தன் பற்றிய பல விபரங்களைக் காணலாம்)

ராஜிவ் காந்தி கொலைவழக்கில், புலனாய்வாளர்கள் செய்த குளறுபடிகள் பற்றி வேலுசாமி குறிப்பிடும் மற்றொரு விஷயம், ராஜிவ் காந்தியைக் கொலை செய்ததாக விசாரணைகளில் குறிப்பிடப்பட்ட மனித வெடிகுண்டு தனு இறந்த நிலையில் எடுக்கப்பட்ட போட்டோவில், அவரது நெற்றியில் இருந்த பொட்டு பற்றியது.

இதுபற்றி வேலுசாமி, “ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளிகளை அடையாளம் காட்டியதே சில போட்டோக்கள்தான். இந்த போட்டோக்கள், ராஜிவ் காந்தி கொலை செய்யப்படுவதற்கு செய்யப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன், ஹரிபாபு என்ற போட்டோகிராபரால் எடுக்கப்பட்டவை. ராஜிவ் கொல்லப்பட்ட குண்டு வெடிப்பின்போது இந்த ஹரிபாபுவும் கொல்லப்பட்டார். (அதுபற்றிப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்)

இந்த போட்டோக்களை வைத்துதான், சிவராசன், தனு, மற்றும் கொலை நடைபெற்ற நேரத்தில் அங்கிருந்த மற்றையவர்களின் முகங்கள் அடையாளம் காணப்பட்டன. அந்த போட்டோக்களில், தனுவின் நெற்றியில் பொட்டு கிடையாது. ஆனால், குண்டு வெடிப்பின்பின் இறந்த நிலையில் காணப்பட்ட தனுவின் நெற்றியில் குங்குமப் பொட்டு இருந்தது. அது எப்படி?

‘ராஜீவ் காந்தியைக் கொலை செய்தவர் ஒரு இந்து, தமிழ்ப் பெண்’ என்று வெளியே காட்டுவதற்காகவே நடந்த சதிதான் அது. இப்படித்தான் புலனாய்வு செய்வதா? பிணத்தின் நெற்றியில் பொட்டு வைத்த இவர்கள், இன்னும் என்னவெல்லாம் செய்து இருப்பார்களோ?” என்று கூறுகின்றார்.

(மற்றொரு குறிப்பு: எமது தொடரில் இடம்பெறுவதாக நாம் குறிப்பிட்ட குண்டு சாந்தன், புலிகளின் அரசியல் பிரிவு நபர். ஆனால், ராஜிவ் கொலையில் சம்மந்தப்பட்டது புலிகளின் உளவுப் பிரிவு என்கிறது கார்த்திகேயன் தலைமையிலான புலனாய்வு குழுவின் அறிக்கை. பிரதான குற்றவாளிகள் பட்டியலில், புலிகளின் உளவுப் பிரிவின் தலைவர் பொட்டு அம்மானை புலனாய்வுக் குழு இணைத்ததும் அதை வைத்துத்தான்.

குண்டு சாந்தனும், ‘ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை’ அத்தியாயம் 4ல் குறிப்பிடப்பட்ட ஹரிபாபுவும், அரசியல் பிரிவோடு சம்மந்தப்பட்ட ஆட்கள்.

ராஜிவ் கொலை திட்டமிடல் தமிழகத்தில் புலிகளின் உளவுப் பிரிவால் செய்யப்படும் விஷயம், தமிழகத்தில் அப்போது இயங்கிவந்த புலிகளின் அரசியல் பிரிவுக்குகூட தெரியாது என்பதும், கார்த்திகேயனின் புலனாய்வுக் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்படியிருக்கையில், கொலை நடப்பதற்குமுன், திட்டமிடல் பற்றியே தெரியாது என்று குறிப்பிடப்பட்ட குண்டு சாந்தனுடன் ஆள்மாறாட்டத்தில் கிளாஷ் ஆன மற்றைய சாந்தனுக்கு தற்போது, தூக்கு தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது!)

இந்த கொலை விவகாரத்தில், அப்போதைய சட்ட அமைச்சர் சுப்பிரமணியன் சுவாமிக்கும் பங்கு இருப்பதாகக் கூறுகிறார் வேலுசாமி. “மே 21-ம் தேதி இரவு ராஜீவ் கொலை நடந்தது. அடுத்த நாள் காலை 9 மணிக்குத்தான் விசாரணை தொடங்கியது. ஆனால், விசாரணை தொடங்கும் முன்னரே, ‘ராஜீவைக் கொன்றது புலிகள்தான்’ என்று சுப்பிரமணியன் சுவாமி அறிவித்தது எப்படி?” என்றும் கேட்கிறார் வேலுசாமி.

திருச்சி வேலுசாமியின் கேள்விகள் ஒருபுறம் இருக்க, உண்மையில் ராஜிவ் காந்தி கொலை விசாரணை இத்தனை வருடமாகியும், இன்னமும் முடிவடையவில்லை. பல கேள்விகளுக்கு இன்னமும் தெளிவான பதில் கிடையாது. நாளைக்கே இந்த விசாரணையைத் தொடரும் முடிவு எடுக்கப்பட்டால், என்னாகும்? தற்போது தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூவரில் ஒருவரது சாட்சியம் அப்போது தேவைப்பட்டால் என்னாகும்?

இந்த மூவரின் தூக்குத் தண்டனைகளும் செப்டெம்பர் 9ம் தேதி நிறைவேற்றப்பட்டு விட்டால், பிற்காலத்தில் ஒருவேளை அவர்களது சாட்சியம் தேவைப்பட்டால், அவர்களை எப்படிக் கொண்டுவர முடியும்?



sabesan37
sabesan37
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 16/05/2011

Postsabesan37 Sun Aug 28, 2011 10:04 am

“ராஜிவ் கொலை கேஸ் தடயங்களில், ‘பொட்டு’ வந்தது எப்படி?”

------------------------------------------------------------------------------------------------
விறுவிறுப்பு.கொம், Sunday 28 August 2011, 03:58 ஜி‌எம்‌டி
------------------------------------------------------------------------------------------------
சென்னை, இந்தியா: “ராஜிவ் காந்தி கொலைவழக்கில், புலனாய்வாளர்கள் செய்த குளறுபடிகள்தான், தற்போது மூன்றுபேரை தூக்குத் தண்டனைவரை கொண்டு வந்துள்ளது” என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார் திருச்சி வேலுசாமி. நிஜமான குற்றவாளிகளை விட்டுவிட்டு இவர்களைத் தண்டிக்கிறார்கள் என்பது இவரது கோணம்.

ராஜிவ் காந்தி கொலை விவகாரத்தில், நீண்டகாலமாகக் குரல்கொடுத்துவரும் வேலுசாமி, ராஜிவ் கொலை பற்றிய விசாரணை கமிஷனால் 7 தடவைகள் விசாரிக்கப்பட்டவர். ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த ஜெயின் கமிஷன் மேற்கொண்ட சில நடவடிக்கைகளுக்கு, இவரின் வாக்குமூலமே காரணமாக அமைந்திருந்த அளவுக்கு, இவர் முக்கியமானவர்.

ராஜிவ் கொலை விசாரணைகளின்போது, இவர் வழங்கிய சில உறுதியான வாக்குமூலங்கள், உண்மையில் ராஜிவ் கொலை வழக்கையே திசை திருப்பியிருக்க முடியும். ஆனால் ‘ஏதோ காரணங்களுக்காக’ அப்படி நடைபெறவில்லை. அதற்குக் காரணம், இவரது வாக்குமூலங்களில் பல வி.வி.ஐ.பி.களின் பெயர்கள் இருந்தன என்பதாக இருக்கலாம்.

ராஜிவ் கொலை விசாரணைகளின்போது, புலனாய்வாளர்கள் கேஸை தாம் விரும்பிய ஒரு திசையின் செலுத்திச் சென்றார்கள் என்று கூறும், திருச்சி வேலுசாமி, “பேரறிவாளன், திராவிடர் கழகத்தில் இருந்தவர். ராஜிவ் காந்தியைக் கொன்ற பெல்ட் பாம் தயாரிக்க பேட்டரி வாங்கிக் கொடுத்ததாக பேரறிவாளன் கைதுக்குக் காரணம் சொல்கிறார்கள் அதிகாரிகள். பெங்களூரு ரெங்கநாத் என்பவர் கொடுத்த வாக்குமூலத்தில், “அதே பெல்ட் பாமை யாகத்தில் வைத்து சந்திரா சாமி ஆசீர்வதித்தார்” என்று கூறியிருக்கிறார்.

ஆனால், புலனாய்வாளர்கள் சந்திரா சாமியை இதுபற்றி விசாரித்ததில்லை. ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட நேரத்தில் சந்திரா சாமி எங்கே இருந்தார் என்ற கேள்விக்கு, இன்றுவரை யாரிடமும் பதில் இல்லை.

தற்போது தூக்குத் தண்டனை பெற்றுள்ள சாந்தன், ஆள்மாறாட்டத்தில் சிக்கிக் கொண்டுள்ளார். ‘திருச்சி சாந்தன்’ என்பவர் மீதான குற்றச்சாட்டுகளை, இந்த சாந்தன்மீது சுமத்தி, இவரைச் சிக்க வைத்துள்ளார்கள். நளினியின் கணவர் என்ற ஒரே காரணத்தால், முருகன் அகப்பட்டுக் கொண்டார்” என்கிறார்.

(எமது குறிப்பு: வேலுசாமி குறிப்பிடும் ‘திருச்சி சாந்தன்’ என்பவர், 1980களின் மத்தியில் விடுதலைப்புலிகள் வட்டாரங்களில் ‘குண்டு சாந்தன்’ என்று அறியப்பட்டவர். ஸ்ரீலங்காவில் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில், அரசியல் வேலைகள் செய்வதற்காக தமிழகம் அனுப்பப்பட்டவர். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவைச் சேர்ந்த நபர்.

ராஜிவ் கொலை புலனாய்வு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ஸ்பெஷல் டீம் ஒன்று இவரை தமிழகம் முழுவதும் வலை வீசித் தேடியது நிஜம். அவர்களது கையில் சிக்குமுன் இவர் இறந்து போனதும் நிஜம். இந்த சம்பவங்கள் பல பெரிய மர்ம முடிச்சுக்களை உடையவை. விறுவிறுப்பு.காம் தொடராக வெளியிடும் ‘ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை’ தொடரில் இனி வரவுள்ள சில அத்தியாயங்களில், திருச்சி சாந்தன் அல்லது குண்டு சாந்தன் பற்றிய பல விபரங்களைக் காணலாம்)

ராஜிவ் காந்தி கொலைவழக்கில், புலனாய்வாளர்கள் செய்த குளறுபடிகள் பற்றி வேலுசாமி குறிப்பிடும் மற்றொரு விஷயம், ராஜிவ் காந்தியைக் கொலை செய்ததாக விசாரணைகளில் குறிப்பிடப்பட்ட மனித வெடிகுண்டு தனு இறந்த நிலையில் எடுக்கப்பட்ட போட்டோவில், அவரது நெற்றியில் இருந்த பொட்டு பற்றியது.

இதுபற்றி வேலுசாமி, “ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளிகளை அடையாளம் காட்டியதே சில போட்டோக்கள்தான். இந்த போட்டோக்கள், ராஜிவ் காந்தி கொலை செய்யப்படுவதற்கு செய்யப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன், ஹரிபாபு என்ற போட்டோகிராபரால் எடுக்கப்பட்டவை. ராஜிவ் கொல்லப்பட்ட குண்டு வெடிப்பின்போது இந்த ஹரிபாபுவும் கொல்லப்பட்டார். (அதுபற்றிப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்)

இந்த போட்டோக்களை வைத்துதான், சிவராசன், தனு, மற்றும் கொலை நடைபெற்ற நேரத்தில் அங்கிருந்த மற்றையவர்களின் முகங்கள் அடையாளம் காணப்பட்டன. அந்த போட்டோக்களில், தனுவின் நெற்றியில் பொட்டு கிடையாது. ஆனால், குண்டு வெடிப்பின்பின் இறந்த நிலையில் காணப்பட்ட தனுவின் நெற்றியில் குங்குமப் பொட்டு இருந்தது. அது எப்படி?

‘ராஜீவ் காந்தியைக் கொலை செய்தவர் ஒரு இந்து, தமிழ்ப் பெண்’ என்று வெளியே காட்டுவதற்காகவே நடந்த சதிதான் அது. இப்படித்தான் புலனாய்வு செய்வதா? பிணத்தின் நெற்றியில் பொட்டு வைத்த இவர்கள், இன்னும் என்னவெல்லாம் செய்து இருப்பார்களோ?” என்று கூறுகின்றார்.

(மற்றொரு குறிப்பு: எமது தொடரில் இடம்பெறுவதாக நாம் குறிப்பிட்ட குண்டு சாந்தன், புலிகளின் அரசியல் பிரிவு நபர். ஆனால், ராஜிவ் கொலையில் சம்மந்தப்பட்டது புலிகளின் உளவுப் பிரிவு என்கிறது கார்த்திகேயன் தலைமையிலான புலனாய்வு குழுவின் அறிக்கை. பிரதான குற்றவாளிகள் பட்டியலில், புலிகளின் உளவுப் பிரிவின் தலைவர் பொட்டு அம்மானை புலனாய்வுக் குழு இணைத்ததும் அதை வைத்துத்தான்.

குண்டு சாந்தனும், ‘ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை’ அத்தியாயம் 4ல் குறிப்பிடப்பட்ட ஹரிபாபுவும், அரசியல் பிரிவோடு சம்மந்தப்பட்ட ஆட்கள்.

ராஜிவ் கொலை திட்டமிடல் தமிழகத்தில் புலிகளின் உளவுப் பிரிவால் செய்யப்படும் விஷயம், தமிழகத்தில் அப்போது இயங்கிவந்த புலிகளின் அரசியல் பிரிவுக்குகூட தெரியாது என்பதும், கார்த்திகேயனின் புலனாய்வுக் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்படியிருக்கையில், கொலை நடப்பதற்குமுன், திட்டமிடல் பற்றியே தெரியாது என்று குறிப்பிடப்பட்ட குண்டு சாந்தனுடன் ஆள்மாறாட்டத்தில் கிளாஷ் ஆன மற்றைய சாந்தனுக்கு தற்போது, தூக்கு தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது!)

இந்த கொலை விவகாரத்தில், அப்போதைய சட்ட அமைச்சர் சுப்பிரமணியன் சுவாமிக்கும் பங்கு இருப்பதாகக் கூறுகிறார் வேலுசாமி. “மே 21-ம் தேதி இரவு ராஜீவ் கொலை நடந்தது. அடுத்த நாள் காலை 9 மணிக்குத்தான் விசாரணை தொடங்கியது. ஆனால், விசாரணை தொடங்கும் முன்னரே, ‘ராஜீவைக் கொன்றது புலிகள்தான்’ என்று சுப்பிரமணியன் சுவாமி அறிவித்தது எப்படி?” என்றும் கேட்கிறார் வேலுசாமி.

திருச்சி வேலுசாமியின் கேள்விகள் ஒருபுறம் இருக்க, உண்மையில் ராஜிவ் காந்தி கொலை விசாரணை இத்தனை வருடமாகியும், இன்னமும் முடிவடையவில்லை. பல கேள்விகளுக்கு இன்னமும் தெளிவான பதில் கிடையாது. நாளைக்கே இந்த விசாரணையைத் தொடரும் முடிவு எடுக்கப்பட்டால், என்னாகும்? தற்போது தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூவரில் ஒருவரது சாட்சியம் அப்போது தேவைப்பட்டால் என்னாகும்?

இந்த மூவரின் தூக்குத் தண்டனைகளும் செப்டெம்பர் 9ம் தேதி நிறைவேற்றப்பட்டு விட்டால், பிற்காலத்தில் ஒருவேளை அவர்களது சாட்சியம் தேவைப்பட்டால், அவர்களை எப்படிக் கொண்டுவர முடியும்?

• ராஜிவ் கொலை வழக்கில் மூவருக்கு தூக்கு தண்டனை கொடுப்பது நியாயமற்றது என்று நீங்கள் கருதினால், இந்தக் கட்டுரையை இயன்றவரை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி வையுங்கள். இது பற்றிய ஒரு தெளிவு, பலரைச் சென்றடைய உதவுங்கள்.

நன்றி: விறுவிறுப்பு.காம்
http://viruvirupu.com/2011/08/28/8094/


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக