|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» முடிவு பெறாத கதை .... by rameshnaga Today at 8:21 pm
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by புரட்சி Today at 8:19 pm
» திருமண அறிவிப்பு
by அதி Today at 8:15 pm
» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 8:14 pm
» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Today at 8:06 pm
» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Today at 7:56 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by அதி Today at 7:56 pm
» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by கேசவன் Today at 7:55 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Aathira Today at 7:50 pm
» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Today at 7:49 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 7:43 pm
» கிழவியுடனும் கிளியுடனும்-5
by Aathira Today at 7:34 pm
» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by அதி Today at 7:29 pm
» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by புரட்சி Today at 6:59 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by positivekarthick Today at 6:58 pm
» வாழ்க தமிழ்
by SajeevJino Today at 6:48 pm
» ஓஹோ ... அப்படியா?!!!
by முரளிராஜா Today at 6:47 pm
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 6:13 pm
» ராஜா வீட்டு இரண்டாவது இளவரசியின் வரவை வாழ்த்தலாம் வாங்க...
by இரா.பகவதி Today at 5:41 pm
» புதிய தலைமை நடத்துனர் - நிர்வாக அறிவிப்பு
by வின்சீலன் Today at 5:40 pm
» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by வின்சீலன் Today at 5:35 pm
» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by ரா.ரா3275 Today at 5:16 pm
» சோனியா ……. காந்தியா?
by ரா.ரா3275 Today at 5:10 pm
» அடடா...இதுதான் காதலா?...
by ரா.ரா3275 Today at 5:06 pm
» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by சாமி Today at 5:03 pm
» இந்த பழங்கள் உண்பதற்கு அல்ல
by sshanthi Today at 4:56 pm
» தோழியாக நீ வேண்டும்...
by ரா.ரா3275 Today at 4:42 pm
» நல்ல மனம் வாழ்க - நாடு பொற்ற வாழ்க
by sshanthi Today at 4:39 pm
» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by kirikasan Today at 4:15 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 4:14 pm
» +2 தேர்வு: முதலிடத்தில் ஒரு மாணவரும் இல்லை - என்னாச்சுப்பா சென்னைக்கு?
by மாணிக்கம் நடேசன் Today at 3:56 pm
» Phone WLAN Connection உதவி
by ரமீஸ் Today at 3:50 pm
» அரிய புகைப்படக் காட்சிகள்
by ஜாஹீதாபானு Today at 3:48 pm
» சூரியபுயல் --ஒரு விரிவான பார்வை
by hega Today at 3:35 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by Aathira Today at 3:06 pm
» மே மாதம் 18 ம் திகதி - மறக்க முடியுமா??
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 2:50 pm
» கூகிள் கணக்கீடுகள் (Google Analytics)
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:14 pm
» ஆந்திர ரயில் விபத்து பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு
by சார்லஸ் mc Today at 2:05 pm
» வணக்கம்!
by ஜாஹீதாபானு Today at 2:05 pm
» Show Desktop icon- ஐ திரும்ப உருவாக்க ..,
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:03 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
கர்ப்ப கால நோய்கள்
Page 1 of 1 • Share •
கர்ப்ப கால நோய்கள்
கர்ப்பக்காலத்தில் மிகை ரத்த அழுத்தம், ரத்தசோகை, மூலநோய், ரத்த நாளச்சிதைவு, மலச்சிக்கல், முதுகுவலி போன்ற நோய்கள் வருகின்றன. இவற்றில் சில நோய்கள் கர்ப்பிணியின் உயிருக்கு அச்சுறுத்தலாகவும் விளங்குகின்றன.
மிகை ரத்த அழுத்தம்
கர்ப்பிணிகளில் 15 விழுக்காட்டினர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார் கள். இந்தியாவில் ஆறு சுகப் பிரசவங்களுக்கு மத்தியில் ரத்த அழுத்ததால் ஒரு கர்ப்பிணி கர்ப்பக் காலம் அல்லதுபிரசவ காலத்தில் உயிரை இழக்கிறாள்.
ஆண்டுதோறும் 51 விழுக்காடு பெண்கள் மிகை ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.
கருக்காலத்தில் ஏற்படும் மன அழுத்தம், மனத்தளர்ச்சி போன்றவை மிகை ரத்த அழுத்தத்தை உண்டாக்குகிறது. துவக்கத்தில் ரத்த அழுத்தம் இயல்பாக இருக்கும். நாட்கள் செல்லச் செல்ல அழுத்தம் அதிகரிக்கும்.
கிராமப்புறங்களில் இருக்கும் பெண்கள் கர்ப்பக் காலத்தில் கை கால்கள் வீங்கினால் எந்தப் பொருளின் மீதோ ஆசைப்பட்டதால்தான் இவ்வாறு நேர்ந்தது என்று கண்டுகொள்ளாமல் விடும் போக்கு இருக்கிறது.
கர்ப்பக்காலத்தைப் பொறுத்தவரை 20 முதல் முப்பது வயதுள்ள பெண்களுக்கு மிகை ரத்த அழுத்தம் உண்டாகிறது. கால் பாதங்களில் வீக்கம், கண்களின் கீழ் ரப்பைகளில் வீக்கம் ஆகியவை தூங்கி எழுந்ததும் அதிகமாக இருக்கும். சிறுநீரில் புரதம் அதிகமாகக் காணப்படும்போதும். பிரசவ நேரத்தில் வலிப்பும்,மயக்கமும் உண்டாவதால் ரத்த அழுத்தப் பரிசோதனையும் சிகிச்சையும் மேற்கொள்ள வேண்டியது அவசியம்
மிகை ரத்த அழுத்தம்
கர்ப்பிணிகளில் 15 விழுக்காட்டினர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார் கள். இந்தியாவில் ஆறு சுகப் பிரசவங்களுக்கு மத்தியில் ரத்த அழுத்ததால் ஒரு கர்ப்பிணி கர்ப்பக் காலம் அல்லதுபிரசவ காலத்தில் உயிரை இழக்கிறாள்.
ஆண்டுதோறும் 51 விழுக்காடு பெண்கள் மிகை ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.
கருக்காலத்தில் ஏற்படும் மன அழுத்தம், மனத்தளர்ச்சி போன்றவை மிகை ரத்த அழுத்தத்தை உண்டாக்குகிறது. துவக்கத்தில் ரத்த அழுத்தம் இயல்பாக இருக்கும். நாட்கள் செல்லச் செல்ல அழுத்தம் அதிகரிக்கும்.
கிராமப்புறங்களில் இருக்கும் பெண்கள் கர்ப்பக் காலத்தில் கை கால்கள் வீங்கினால் எந்தப் பொருளின் மீதோ ஆசைப்பட்டதால்தான் இவ்வாறு நேர்ந்தது என்று கண்டுகொள்ளாமல் விடும் போக்கு இருக்கிறது.
கர்ப்பக்காலத்தைப் பொறுத்தவரை 20 முதல் முப்பது வயதுள்ள பெண்களுக்கு மிகை ரத்த அழுத்தம் உண்டாகிறது. கால் பாதங்களில் வீக்கம், கண்களின் கீழ் ரப்பைகளில் வீக்கம் ஆகியவை தூங்கி எழுந்ததும் அதிகமாக இருக்கும். சிறுநீரில் புரதம் அதிகமாகக் காணப்படும்போதும். பிரசவ நேரத்தில் வலிப்பும்,மயக்கமும் உண்டாவதால் ரத்த அழுத்தப் பரிசோதனையும் சிகிச்சையும் மேற்கொள்ள வேண்டியது அவசியம்
Guest- Guest
Re: கர்ப்ப கால நோய்கள்
ரத்தசோகை
கர்ப்பிணிகளில் பெரும்பாலானவர்களை பாதிக்கும் முக்கிய நோய் ரத்த சோகை.
இந்த நோய் வர முக்கியக்காரணம் போதுமான ஊட்டச்சத்தை உண்ணாதது மற்றும் இரும்புச்சத்து குறைந்த உணவை உண்பது ஆகியவை.
இரும்புச்சத்து குறைவாக கிரகிக்கப் படுதல், கிரகிக்கப்படாமல் வீணாதல், சரியான முறையில் சேமிக்கப்படாமை,குடலில் புழுக்கள், நேர்யகள், வயிற்றுப் போக்கு ஆகியவை காரணமாக ரத்த சோகை வரும்.
கர்ப்பக்காலத்தில் ரத்த சோகை ஏற்பட்டால் குறைபிரசவம் நிகழவோ, குழந்தை கர்ப்பப் பையிலேயே இறந்துபோகவோ வாய்ப்பு உண்டு. குழந்தை இறக்கா விட்டாலும் நோய்வாய்ப்படும்.
ரத்தசோகையால் கர்ப்பிணியின் இதயத் துடிப்பில் மாற்றம் ஏற்படும். எளிதில் சோர்வு, படபடப்பு போன்றவை ஏற்படும்.
சரியான ஊட்டச்சத்தை சாப்பிட்டு இந்தப் பிரச்சினையை தீர்த்துக்கொள்ள வேண்டும்.
கர்ப்பிணிகளில் பெரும்பாலானவர்களை பாதிக்கும் முக்கிய நோய் ரத்த சோகை.
இந்த நோய் வர முக்கியக்காரணம் போதுமான ஊட்டச்சத்தை உண்ணாதது மற்றும் இரும்புச்சத்து குறைந்த உணவை உண்பது ஆகியவை.
இரும்புச்சத்து குறைவாக கிரகிக்கப் படுதல், கிரகிக்கப்படாமல் வீணாதல், சரியான முறையில் சேமிக்கப்படாமை,குடலில் புழுக்கள், நேர்யகள், வயிற்றுப் போக்கு ஆகியவை காரணமாக ரத்த சோகை வரும்.
கர்ப்பக்காலத்தில் ரத்த சோகை ஏற்பட்டால் குறைபிரசவம் நிகழவோ, குழந்தை கர்ப்பப் பையிலேயே இறந்துபோகவோ வாய்ப்பு உண்டு. குழந்தை இறக்கா விட்டாலும் நோய்வாய்ப்படும்.
ரத்தசோகையால் கர்ப்பிணியின் இதயத் துடிப்பில் மாற்றம் ஏற்படும். எளிதில் சோர்வு, படபடப்பு போன்றவை ஏற்படும்.
சரியான ஊட்டச்சத்தை சாப்பிட்டு இந்தப் பிரச்சினையை தீர்த்துக்கொள்ள வேண்டும்.
Guest- Guest
Re: கர்ப்ப கால நோய்கள்
ஜீரண மண்ட நோய்கள்
வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வாந்தி, குமட்டல், பசியின்மை, வித்தியாசமான உணவுகளின் மீது ஆசை, சீதளபேதி விக்கல் போன்ற பல தொல்லைகள் கர்ப்பக் காலத்தின்போது ஏற்படுகிறது.
மலச்சிக்கல் இருந்தால் அதை உடனடியாகத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நாளடைவில் மூலநோய் உண்டாகும்.
இதனால்தான் கர்ப்பிணிகளில் பலர் மூலநோயால் பாதிக்கப்படுகிறார்கள்.
இதற்கு மலச்சிக்கல் மட்டுமின்றி, கருப்பை இடுப்புக்கூட்டுப் பகுதியை அழுத்துவதும் காரணம்.
பெரும்பாலான வேளைகளில் கர்ப்பிணிகளின் மூலநோய் குழந்தை பிறந்ததும் சரியாகிவிடுகிறது அவ்வாறு சரியாகாத பட்சத்தில் மருத்துவ சிகிச்சை அவசியம்.
வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வாந்தி, குமட்டல், பசியின்மை, வித்தியாசமான உணவுகளின் மீது ஆசை, சீதளபேதி விக்கல் போன்ற பல தொல்லைகள் கர்ப்பக் காலத்தின்போது ஏற்படுகிறது.
மலச்சிக்கல் இருந்தால் அதை உடனடியாகத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நாளடைவில் மூலநோய் உண்டாகும்.
இதனால்தான் கர்ப்பிணிகளில் பலர் மூலநோயால் பாதிக்கப்படுகிறார்கள்.
இதற்கு மலச்சிக்கல் மட்டுமின்றி, கருப்பை இடுப்புக்கூட்டுப் பகுதியை அழுத்துவதும் காரணம்.
பெரும்பாலான வேளைகளில் கர்ப்பிணிகளின் மூலநோய் குழந்தை பிறந்ததும் சரியாகிவிடுகிறது அவ்வாறு சரியாகாத பட்சத்தில் மருத்துவ சிகிச்சை அவசியம்.
Guest- Guest
Re: கர்ப்ப கால நோய்கள்
உதிரப்போக்கு
கர்ப்பக் காலத்தில் சில பெண்களுக்கு கருச்சிதைவின் காரணமாக உதிரப்போக்கு ஏற்படும். கருச்சிதைவுஏற்படாமல் அச்சுறுத்தும் கருச்சிதைவு ஏற்பட்டு ரத்த ஒழுக்கு உண்டாவதும் உண்டு. சிலருக்கு மூக்கு,நுரையீரல், வயிறு அல்லது கருப்பை போன்றவற்றிலிருந்தும் ரத்தப் போக்கு ஏற்படுகிறது.
ரத்தப்போக்கை உடனடியாக தடுத்து நிறுத்தவேண்டும். இல்லாவிட்டால் கர்ப்பிணியின் உயிருக்கே ஆபத்தாக முடியும்.
ரத்தநாளச் சிதைவுகள்
தொடைகள் மற்றும் பிறப்புறுப்பு பகுதியில் ரத்த நாளங்கள் பருத்து நீல நிறமாகத் தெரியும். இந்தப் பகுதியில் ஏற்படும் அழுத்தம் காரணமாக ரத்த ஓட்டம் அதிகரித்து சிலவேளைகளில் ரத்த நாளச் சிதைவு ஏற்படுகிறது. இதனால் தாங்கமுடியாத வலியும், வேதனையும் இருக்கும்.
இதயப் படபடப்பு
மிகை ரத்த அழுத்தத்தால் மட்டுமின்றி, உடலுக்கு போதுமான ஆக்சிஜன் செல்லாவிட்டாலும் இதயப் படபடப்பு தோன்றும். இயல்பை விட இதயம் அதிகமாகத் துடிப்பதால் களைப்பு, மயக்கம் அல்லது மரணம் கூட நேர்ந்து விடுகிறது.
கர்ப்பக் காலத்தில் சில பெண்களுக்கு கருச்சிதைவின் காரணமாக உதிரப்போக்கு ஏற்படும். கருச்சிதைவுஏற்படாமல் அச்சுறுத்தும் கருச்சிதைவு ஏற்பட்டு ரத்த ஒழுக்கு உண்டாவதும் உண்டு. சிலருக்கு மூக்கு,நுரையீரல், வயிறு அல்லது கருப்பை போன்றவற்றிலிருந்தும் ரத்தப் போக்கு ஏற்படுகிறது.
ரத்தப்போக்கை உடனடியாக தடுத்து நிறுத்தவேண்டும். இல்லாவிட்டால் கர்ப்பிணியின் உயிருக்கே ஆபத்தாக முடியும்.
ரத்தநாளச் சிதைவுகள்
தொடைகள் மற்றும் பிறப்புறுப்பு பகுதியில் ரத்த நாளங்கள் பருத்து நீல நிறமாகத் தெரியும். இந்தப் பகுதியில் ஏற்படும் அழுத்தம் காரணமாக ரத்த ஓட்டம் அதிகரித்து சிலவேளைகளில் ரத்த நாளச் சிதைவு ஏற்படுகிறது. இதனால் தாங்கமுடியாத வலியும், வேதனையும் இருக்கும்.
இதயப் படபடப்பு
மிகை ரத்த அழுத்தத்தால் மட்டுமின்றி, உடலுக்கு போதுமான ஆக்சிஜன் செல்லாவிட்டாலும் இதயப் படபடப்பு தோன்றும். இயல்பை விட இதயம் அதிகமாகத் துடிப்பதால் களைப்பு, மயக்கம் அல்லது மரணம் கூட நேர்ந்து விடுகிறது.
Guest- Guest
Re: கர்ப்ப கால நோய்கள்
சுவாசக் குழல் நோய்கள்
வளரும் கரு உதரவிதானத்தை அழுத்துவதால் மூச்சுவிட சிரமம் இருக்கும். பெருமூச்சு வாங்கும். சிலருக்கு ஆஸ்துமா போன்ற அறிகுறிகள் தோன்றக் கூடும். பனியில் நனைதல் அல்லது ஈரமான இடத்தில் இருத்தல் போன்ற நிலைகளில் இருமல் போன்றவை எடுக்கும். கோடைக் காலத்தில் வறட்டு இருமல் வரும். தொண்டையில் மாவுப் பொருட்கள் படிந்து காணப்படுவதும் உண்டு.
சிறுநீரக பாதிப்புகள்
கரு வளரும்போது கருப்பையானது சிறுநீரகத்தை அழுத்துவதன் காரணமாக தடையற்ற சிறுநீர் பிரிதல், சிறுநீரக அழற்சி, சிறுநீரில் ரத்தம் கலந்து வருதல், நோய்த் தொற்று, வெள்ளைப்படுதல் போன்றவை ஏற்படுகிறது.
சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உந்துதல் இருக்கும். ஆனால் சொட்டு சொட்டு சொட்டாக சிறுநீர் பிரியும். இப்படிப்பட்ட நிலையில் தொடையிலும், பிறப்புறுப்பிலும் எரிச்சல் உண்டாகும்.
சிறுநீர்த்தடை கூட கர்ப்பக்காலத்தில் ஏற்படும். சிறுநீர் சிறுநீர்ப் பையிலேயே தேங்கிவிடுவதால் வீக்கம், வலி, நோய்த் தொற்று போன்றவை ஏற்படுகின்றன. சிறுநீரை முற்றிலும் வெளியேற்ற இயலாத நிலை வருகிறது.
பிறநோய்கள்
கர்ப்பக் காலத்தில் மார்பகங்களில் மாற்றம் ஏற்படுவதால் மார்பக வலிகள், பல்வலிகள், முதுகு வலி, தசை வலிகள், பொய்யான வலிநிலைகள் போன்றவை ஏற்படும்.
இதை தவிர மனநிலை மாற்றங்கள், மனநிலை பாதிப்புகள் போன்ற பிரச்சினைகளும் கர்ப்பக்காலத்தில் வருகின்றன.
ஆகவே, கர்ப்பிணிகள் கர்ப்பக் காலம் ஆரம்பித்தது முதல் பிரசவித்து குழந்தை இயல்பாகும் வரை தொடர்ந்து மருத்துவரின் நேரடிப் பார்வையில் இருப்பது நல்லது.
வளரும் கரு உதரவிதானத்தை அழுத்துவதால் மூச்சுவிட சிரமம் இருக்கும். பெருமூச்சு வாங்கும். சிலருக்கு ஆஸ்துமா போன்ற அறிகுறிகள் தோன்றக் கூடும். பனியில் நனைதல் அல்லது ஈரமான இடத்தில் இருத்தல் போன்ற நிலைகளில் இருமல் போன்றவை எடுக்கும். கோடைக் காலத்தில் வறட்டு இருமல் வரும். தொண்டையில் மாவுப் பொருட்கள் படிந்து காணப்படுவதும் உண்டு.
சிறுநீரக பாதிப்புகள்
கரு வளரும்போது கருப்பையானது சிறுநீரகத்தை அழுத்துவதன் காரணமாக தடையற்ற சிறுநீர் பிரிதல், சிறுநீரக அழற்சி, சிறுநீரில் ரத்தம் கலந்து வருதல், நோய்த் தொற்று, வெள்ளைப்படுதல் போன்றவை ஏற்படுகிறது.
சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உந்துதல் இருக்கும். ஆனால் சொட்டு சொட்டு சொட்டாக சிறுநீர் பிரியும். இப்படிப்பட்ட நிலையில் தொடையிலும், பிறப்புறுப்பிலும் எரிச்சல் உண்டாகும்.
சிறுநீர்த்தடை கூட கர்ப்பக்காலத்தில் ஏற்படும். சிறுநீர் சிறுநீர்ப் பையிலேயே தேங்கிவிடுவதால் வீக்கம், வலி, நோய்த் தொற்று போன்றவை ஏற்படுகின்றன. சிறுநீரை முற்றிலும் வெளியேற்ற இயலாத நிலை வருகிறது.
பிறநோய்கள்
கர்ப்பக் காலத்தில் மார்பகங்களில் மாற்றம் ஏற்படுவதால் மார்பக வலிகள், பல்வலிகள், முதுகு வலி, தசை வலிகள், பொய்யான வலிநிலைகள் போன்றவை ஏற்படும்.
இதை தவிர மனநிலை மாற்றங்கள், மனநிலை பாதிப்புகள் போன்ற பிரச்சினைகளும் கர்ப்பக்காலத்தில் வருகின்றன.
ஆகவே, கர்ப்பிணிகள் கர்ப்பக் காலம் ஆரம்பித்தது முதல் பிரசவித்து குழந்தை இயல்பாகும் வரை தொடர்ந்து மருத்துவரின் நேரடிப் பார்வையில் இருப்பது நல்லது.
Guest- Guest
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum








