புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  Poll_c10நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  Poll_m10நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  Poll_c10 
49 Posts - 45%
ayyasamy ram
நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  Poll_c10நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  Poll_m10நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  Poll_c10 
46 Posts - 42%
mohamed nizamudeen
நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  Poll_c10நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  Poll_m10நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  Poll_c10 
4 Posts - 4%
prajai
நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  Poll_c10நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  Poll_m10நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  Poll_c10 
4 Posts - 4%
Jenila
நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  Poll_c10நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  Poll_m10நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  Poll_c10 
2 Posts - 2%
jairam
நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  Poll_c10நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  Poll_m10நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  Poll_c10நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  Poll_m10நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  Poll_c10நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  Poll_m10நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  Poll_c10 
1 Post - 1%
M. Priya
நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  Poll_c10நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  Poll_m10நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  Poll_c10 
1 Post - 1%
kargan86
நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  Poll_c10நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  Poll_m10நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  Poll_c10நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  Poll_m10நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  Poll_c10 
92 Posts - 56%
ayyasamy ram
நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  Poll_c10நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  Poll_m10நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  Poll_c10 
46 Posts - 28%
mohamed nizamudeen
நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  Poll_c10நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  Poll_m10நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  Poll_c10 
8 Posts - 5%
prajai
நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  Poll_c10நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  Poll_m10நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  Poll_c10 
6 Posts - 4%
Jenila
நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  Poll_c10நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  Poll_m10நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  Poll_c10 
4 Posts - 2%
Rutu
நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  Poll_c10நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  Poll_m10நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  Poll_c10நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  Poll_m10நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  Poll_c10நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  Poll_m10நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  Poll_c10நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  Poll_m10நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  Poll_c10 
1 Post - 1%
jairam
நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  Poll_c10நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  Poll_m10நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்


   
   

Page 1 of 2 1, 2  Next

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Jun 06, 2011 9:22 pm

நான் ரசித்த கவிதைகளை ஒரு சங்கிலி கண்ணி கொர்ப்பதை தொடர் பதிவுகளாக இடலாம் என எண்ணுகிறேன் பெரும்பாலும் சக வலைப்பூ பதிவர்களின் கவிதைகள் தான் ஆனாலும் என் மனம் கவர்ந்தவை உங்களுக்கு பிடிக்கும் பிடிக்காமலும் போகும் என்ன செய்ய எல்லோரும் ஒரே அச்சில் வார்த்தவர்கள் இல்லை இருப்பினும் குறை இருந்தால் சொல்லுங்கள்

இந்த கவிதையை படித்தவுடன் ஒரு ஏக்கம் இது போல ஒன்றை நாம் எழுத வில்லையே என

கடவுளும், குழந்தையும்


சாமி முன்
படையலை வைத்ததும்
பந்திக்கு சென்றனர் பெரியவர்கள்.

சாமி இன்னும்
சாப்பிடலையேன்னு
பார்த்துக்கொண்டு நின்றது
குழந்தை.

**********

எல்லோரும் நல்லாயிருக்க
வேண்ட சொல்லி
கற்று கொடுத்தாள் தாய்.
கடவுளுக்கும் சேர்த்து
வேண்டிக்கொண்டது
குழந்தை.

***********

குழந்தையாய் இருக்க
பிரியப்பட்டே
மீண்டும் மீண்டும்
பிறக்கும் கடவுள்,
வேண்டா வெறுப்பாய்
வளர்ந்து தொலைக்கிறார்.

**************

இரவு முழுதும்
ஒன்றாய் விளையாடுகிறார்கள்
கடவுளும் குழந்தையும்;

காலையில்
குழந்தை கற்கவும்,
கடவுள் காக்கவும் செல்கிறார்கள்
விருப்பமில்லாமல்.


நன்றி அச்சம் தவிர் வலைப்பூ

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Jun 06, 2011 9:31 pm

நல்லது . தொடர்ந்து பதிவு இடுங்கள் நண்பா! இணையம் ஒரு சமுத்திரம் அதில் உங்கள் உள்ளம் தொட்ட நல்ல முத்துகளை மட்டும் தாருங்கள் .அனைத்து கவிதைகளும் அருமை ! மகிழ்ச்சி

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 06, 2011 9:35 pm

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று... அதான் சாமி சாப்பிடலையேன்னு பார்க்கிறது...

கடவுளையும் தன்னோடு சேர்த்துக்கொண்டதால் தான் கடவுளுக்கும் சேர்த்து வேண்டிக்கொள்கிறது....

எல்லோருமே விரும்புவது எந்த பிரச்சனைகளும் எட்டாத குழந்தைப்பருவமே...

ஹௌ ஸ்வீட். விருப்பமில்லாமல் குழந்தை கற்கவும் கடவுள் காக்கவும் செல்கிறார்களாம்...

நல்முத்து சரம் தொடரட்டும் மணி....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  47
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Jun 06, 2011 9:54 pm

எல்லா கவிதைகளும் அருமை.ஒருகணம் நானும் குழந்தையானேன் கவிதைகளோடு சேர்ந்து நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  224747944 நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  224747944 நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  2825183110 நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  2825183110



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  Image010ycm
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Jun 06, 2011 9:58 pm

தொடருங்கள் மணி.

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon Jun 06, 2011 11:27 pm

இரவு முழுதும்
ஒன்றாய் விளையாடுகிறார்கள்
கடவுளும் குழந்தையும்;

நல்ல வரிகள்
வாழ்த்துக்கள்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jun 07, 2011 8:05 am

அருமையான கவிதைகள்
பகிர்வுக்கு நன்றி மணிஅஜித்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Jul 02, 2011 8:38 pm

கவிஞர் தேவதேவன் கவிதையை பகிர்ந்து கொள்கிறேன் உங்களுடன் தேவதேவன் எனது முன்மாதிரி எனது குரு என் துரோணாச்சரியார் அவரது கவிதைகள் போல இயற்க்கையை எவருடய கவிதையும் கூறியதில்லை சில கவிதைகளை பகிர்ந்து கொள்கின்றேன் படித்து பின் கருத்தை சொல்லுங்கள்

கூழாங்கற்கள் -கவிஞர் தேவதேவன்

இந்தக் கூழாங்கற்கள் கண்டு
வியப்பின் ஆனந்தத்தில் தத்தளிக்கும்
உன்முகம் என
எவ்வளவு பிரியத்துடன் சேகரித்து வந்தேன்
”ஐயோ இதைப் போய்” என
ஏளனம் செய்து ஏமாற்றத்துள்
என்னைச் சரித்துவிட்டாய்
சொல்லொணாத
அந்த மலைவாசஸ்தலத்தின்
அழகையும் ஆனந்தத்தையும்
சொல்லாதோ
இக்கூழாங்கற்கள் உனக்கும்?
என எண்ணினேன்
இவற்றின் அழகு
மலைகளிலிருந்து குதித்து
பாறைகளூடே ஓடும் அருவிகளால்
இயற்றப்பட்டது
இவற்றின் யெளவனம்
மலைப்பிரதேசத்தின்
அத்தனைச் செல்வங்களாலும்
பராமரிக்கப்பட்டது
இவற்றின் மெளனம்
கானகத்தின் பாடலை
உற்றுக் கேட்பது
மலைப்பிரதேசம்
தன் ஜீவன் முழுசும் கொண்டு
தன் ரசனை அத்தனையும் கொண்டு படைத்த
ஒரு உன்னத சிருஷ்டி
நிறத்தில் தன் மாமிசத்தையும்
பார்வைக்கு மென்மையையும்
ஸ்பரிசத்துக்கு கடினத் தன்மையும் காட்டி
தவம் மேற்கொண்ட நோக்கமென்ன? என்றால்
தவம் தான் என்கிறது கூழாங்கற்களின் தவம்


அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Jul 05, 2011 9:36 pm

பிரகாஷின் அழகிய கவிதைகளில் இது புதியது மிக அளவெடுத்த வார்த்தைகளுடன் எழுதும் பிரகாஷின் பல கவிதைகளை ஈகரையில் பதிவிட்டு உள்ளேன் மற்றுமொரு கவிதை

மொழியற்ற நொடி


கவிதையின்
முதல்வரியால்
எழுதமுடிந்ததில்லை
மரணத்திலிருந்து
மீண்டவனின்
வார்த்தைகளற்ற
மறுநொடியை-
கூடு சிதைந்தபின்னும்
மறுகூட்டை நிறுவமுயலும்
பறவையின் நம்பிக்கையை-
தூக்குக்கயிற்றின் நிழலில்
மன்னிப்பு வழங்கப்பட்டவனின்
விசும்பும் கண்ணீரை-

கவிதையின்
இறுதிவரியாலும்
எழுதவாய்த்ததில்லை
பந்தயத்தில் தோற்றவனின்
விரக்திபூத்த வியர்வையை -
பிரார்த்தனைகளில்
மறைந்திருக்கும்
துன்பத்தின் பெருவலியை-
நாடிழந்த இனத்தின்
நெடுங்கனவு
கலைக்கப்பட்டுக்
காய்ந்த பின்னும்
சொட்டும் குருதியை-

கவிதையின்
முதல்
வரியாயும்
இறுதி வரியாயும்
இருக்க
வாய்த்ததில்லை
மொழியைக்
கடந்தவற்றிற்கும்
துறந்தவற்றிற்கும்.

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Jul 11, 2011 10:25 pm

மீண்டும் பிரகாஷின் கவிதை மிகவும் ரசிக்கும் படி இருக்கிறது

குரைப்பின் மொழி

வெளியே கூட்டிப் போக
ஒரு குரல்.
தனியே விட்டு
ஊர் போய்த்திரும்பினால்
தவிப்பாய்
வேறொரு குரல்.
பேப்பர் போட
வருபவருக்கு ஒருவிதம்.
கொய்யா மரத்தில்
அணிலும் காக்கையும்
விரட்டிப்பிடிக்கமுடியாக்
கோபத்தில் ஒருவிதம்.
மேயும் மாடுகளின்
நடமாட்டத்துக்கு
தொடர் குரைப்பு.
மாதமொருமுறை வரும்
சிலிண்டருக்கோ
பயத்தோடு ஓர் குரைப்பு.
ஓரெழுத்துக் கூடினாலும்
பால்காரருக்கும்
தபால்காரருக்கும்
வெவ்வேறுவிதம்.
பாம்புக்கு வன்குரல்.
சிறுநீர் கழிக்கவும்
இனம் பெருக்கவும்
வெவ்வேறு தொனிகளில்.
குட்டிகளுடன்
விளையாடுகையில்
செல்லமாய் ஒரு குரல்.
யாருமற்ற இரவுகளில்
தொலைதூரக்
குரைப்புக்கு
பதில்குரைப்பாய்
சிலநேரம்.
எதுவுமில்லா அலுப்பூட்டும்
பொழுதுகளில்
ஆயாசமாய் ஒரு குரல்.
திடுக்கிடும் கனவுகள்
கலைகையில்
குழப்பமாய் ஒரு குரல்.
எஜமானன்
இறந்துபோனால்
தேற்றமுடியாத
உயிரின் துயரம்
சொட்டும் குரலென
நாயின் குரல்
நாற்பது விதம்.
என் கவிதைக்குக்
கூட இல்லை
இத்தனை விதம்.
- பிரகாஷ்ஜி


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக