புதிய பதிவுகள்
» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 9:56 am

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:38 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

» ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மகரிஷியை நேசித்த பிராணிகள் Poll_c10மகரிஷியை நேசித்த பிராணிகள் Poll_m10மகரிஷியை நேசித்த பிராணிகள் Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
மகரிஷியை நேசித்த பிராணிகள் Poll_c10மகரிஷியை நேசித்த பிராணிகள் Poll_m10மகரிஷியை நேசித்த பிராணிகள் Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
மகரிஷியை நேசித்த பிராணிகள் Poll_c10மகரிஷியை நேசித்த பிராணிகள் Poll_m10மகரிஷியை நேசித்த பிராணிகள் Poll_c10 
4 Posts - 4%
லதா மெளர்யா
மகரிஷியை நேசித்த பிராணிகள் Poll_c10மகரிஷியை நேசித்த பிராணிகள் Poll_m10மகரிஷியை நேசித்த பிராணிகள் Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
மகரிஷியை நேசித்த பிராணிகள் Poll_c10மகரிஷியை நேசித்த பிராணிகள் Poll_m10மகரிஷியை நேசித்த பிராணிகள் Poll_c10 
3 Posts - 3%
prajai
மகரிஷியை நேசித்த பிராணிகள் Poll_c10மகரிஷியை நேசித்த பிராணிகள் Poll_m10மகரிஷியை நேசித்த பிராணிகள் Poll_c10 
3 Posts - 3%
Ratha Vetrivel
மகரிஷியை நேசித்த பிராணிகள் Poll_c10மகரிஷியை நேசித்த பிராணிகள் Poll_m10மகரிஷியை நேசித்த பிராணிகள் Poll_c10 
2 Posts - 2%
manikavi
மகரிஷியை நேசித்த பிராணிகள் Poll_c10மகரிஷியை நேசித்த பிராணிகள் Poll_m10மகரிஷியை நேசித்த பிராணிகள் Poll_c10 
2 Posts - 2%
சிவா
மகரிஷியை நேசித்த பிராணிகள் Poll_c10மகரிஷியை நேசித்த பிராணிகள் Poll_m10மகரிஷியை நேசித்த பிராணிகள் Poll_c10 
1 Post - 1%
Barushree
மகரிஷியை நேசித்த பிராணிகள் Poll_c10மகரிஷியை நேசித்த பிராணிகள் Poll_m10மகரிஷியை நேசித்த பிராணிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகரிஷியை நேசித்த பிராணிகள் Poll_c10மகரிஷியை நேசித்த பிராணிகள் Poll_m10மகரிஷியை நேசித்த பிராணிகள் Poll_c10 
214 Posts - 42%
heezulia
மகரிஷியை நேசித்த பிராணிகள் Poll_c10மகரிஷியை நேசித்த பிராணிகள் Poll_m10மகரிஷியை நேசித்த பிராணிகள் Poll_c10 
187 Posts - 37%
Dr.S.Soundarapandian
மகரிஷியை நேசித்த பிராணிகள் Poll_c10மகரிஷியை நேசித்த பிராணிகள் Poll_m10மகரிஷியை நேசித்த பிராணிகள் Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
மகரிஷியை நேசித்த பிராணிகள் Poll_c10மகரிஷியை நேசித்த பிராணிகள் Poll_m10மகரிஷியை நேசித்த பிராணிகள் Poll_c10 
18 Posts - 4%
sugumaran
மகரிஷியை நேசித்த பிராணிகள் Poll_c10மகரிஷியை நேசித்த பிராணிகள் Poll_m10மகரிஷியை நேசித்த பிராணிகள் Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
மகரிஷியை நேசித்த பிராணிகள் Poll_c10மகரிஷியை நேசித்த பிராணிகள் Poll_m10மகரிஷியை நேசித்த பிராணிகள் Poll_c10 
6 Posts - 1%
prajai
மகரிஷியை நேசித்த பிராணிகள் Poll_c10மகரிஷியை நேசித்த பிராணிகள் Poll_m10மகரிஷியை நேசித்த பிராணிகள் Poll_c10 
4 Posts - 1%
manikavi
மகரிஷியை நேசித்த பிராணிகள் Poll_c10மகரிஷியை நேசித்த பிராணிகள் Poll_m10மகரிஷியை நேசித்த பிராணிகள் Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
மகரிஷியை நேசித்த பிராணிகள் Poll_c10மகரிஷியை நேசித்த பிராணிகள் Poll_m10மகரிஷியை நேசித்த பிராணிகள் Poll_c10 
3 Posts - 1%
லதா மெளர்யா
மகரிஷியை நேசித்த பிராணிகள் Poll_c10மகரிஷியை நேசித்த பிராணிகள் Poll_m10மகரிஷியை நேசித்த பிராணிகள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகரிஷியை நேசித்த பிராணிகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 03, 2011 7:49 pm

ஆசிரமத்துச் செல்வங்கள் மகான் ரமண மகரிஷியை பிராணிகளும் நேசித்தன. (அவரது காலத்திலிருந்து)

ரமண மகரிஷி தற்போதுள்ள ஆசிரமத்துக்கு வந்தபின் மகரிஷிகளின் நாய், குரங்கு முதலாகிய நண்பர்களின் கூட்டம் மிகவும் குறைந்து விட்டது. மலைமேல் இருந்தபோது நாய்களும் குரங்குகளும் அவருடன் அளவளாவிப் பழகி வந்தன.

சின்னக் கருப்பன்

இதில் சின்னக் கருப்பன் என்னும் நாயைப் பற்றி மகரிஷிகள் பின்வருமாறு கூறுகிறார்.

''சின்னக் கருப்பன் மிக மேன்மையான குணங்களை உடையவன். விருபாக்ஷ குகையில் இருக்குபோது, ஏதோ ஒரு கருப்பு உருவம் தூரத்தில் போவதை அடிக்கடி பார்த்தோம். சில சமயங்களில் புதருக்கு மேல் தலை மட்டும் நீட்டிக்கொண்டிருப்பது தெரியும். ஆனால் பக்கத்தில் வருவதே இல்லை. சின்னக் கருப்பனின் வைராக்கியம் தீவிரமிக்கது ஒருவரிடமும் அவன் நெருங்குவதில்லை. ஆள் உள்ள இடம் அவனுக்கு ஆகாதுபோலத் தோன்றியது. நாங்களும் அவனுடைய சுயேச்சையையும் வைரக்கியத்தையும் மதித்து, அந்த இடத்தில் உணவை வைத்து விட்டு தூரப் போய்விடுவோம். இப்படி நடந்து கொண்டிருக்கையில் ஒருநாள் எல்லோரும் மலைமேல் ஏறிப் போனபோது, கருப்பன் பாதைமேல் திடீரென்று பாய்ந்து சந்தோஷத்துடன் வாலைக் குழைத்துக்கொண்டு என் மேல் விழுந்து விளையாட ஆரம்பித்தான். மற்றவர்களையெல்லாம் விட்டு என்னை மட்டும் கருப்பன் குறிப்பாகக் கண்டு கொண்டதை யாவரும் வியந்தனர்.

''இதற்குப் பின் கருப்பன் ஓர் ஆசிரமவாசி ஆகிவிட்டான்; அத்தியந்த நண்பன்; உபகாரி; மேன்மையான குணம். இதற்கு முன்னிருந்த கூச்சமெல்லாம் அபார அன்பாக மாறியது. எல்லோரையும் சகோதரராகப் பாவித்த, வருவோர்போவோருடன் அளவளாவிப் பழகி மடிமீது ஏறித் தாவிக் குலாவுவான். எல்லோரும் அனேகமாக அவனிடம் பிரியமாகவே இருந்தனர். ஆனால் சிலர் மட்டும் கருப்பனைக் கண்டால் சற்று விலகிச் சென்றனர். அவர்களையும் அவன் எளிதில் விட்டுவிடுவதில்லை; எந்த வெறுப்பையும் முடிவாக எடுத்துக் கொள்வதில்லை; ஆனால் 'போ' என்று சொல்லிவிட்டால் வேறு பேச்சின்றிச் சாதுவாக வெளியேறிவிடுவான்.

''ஒரு நாள் குகைக்கு அருகிலிருந்த வில்வ மரத்தடியில் ஒரு வைதிகப் பிராம்மணர் ஜபம் செய்தகொண்டிருந்தார். சின்னக் கருப்பன் அவருக்குவெகு சமீபத்தில் சென்றுவிட்டான். நாய் என்றால் 'தீட்டு' என்பது வைதிகரின் நம்பிக்கை. நாயைக் கண்டால்கூடச் சற்று விலகித் தூரத்தில் போவது வழக்கம். ஆனால் கருப்பன் அநுஷ்டிப்பதும் அவனுக்குத் தெரிந்ததும் இயற்கை நியதியான சமத்துவந்தான். ஆகவே துரத்தினால்கூடக் கருப்பன் அந்த இடத்துக்கே திரும்பிச்சென்றுகொண்டிருந்தான். இதைக் கவனித்த ஆசிரமவாசி ஒருவர், பிராம்மணரின் சங்கடத்தைத் தவிர்க்கும் நிமித்தம் அதை மிரட்டி மெதுவாக ஓர் அடி கொடுத்தார். கருப்பன் ஊளையிட்டுக் கொண்டு ஓட்டமெடுத்தான். அதன் பிறகு கருப்பனைக் காணவே இல்லை. ஏதோ ஒரு தடவையாக இருந்தால்கூட, தன்னை அவமதித்து அடித்த இடத்தைக் கண்ணெடுத்தும் பார்க்கமாட்டான் கருப்பன்.''

மற்றோர் சிறு நாயும் இவ்வாறே மிகுந்த ரோஷத்துடன் நடந்துக்கொண்டது. ஆசிரமவாசி ஒருவர் வைதுவிட்டார் என்பதற்காக நேரே சங்க தீர்த்தத்துக்கு ஓடிப் போய் விழுந்த உயிரை மாய்த்துக்கொண்டது.

மற்றோர் ஆச்சர்யமான நாய் கமலா. ''இதோ பார், இவர் புதியவர். இவரைக் கூட்டிக்கொண்டு போய் எல்லாவற்றையும் காட்டி விட்டு வா'' என்பார் மகரிஷி. கமலா உடனே புறப்படுவாள்; மலையைச் சுற்றி எல்லாவற்றையும் புதிதாக வந்தவர்க்குக் காட்டிவிட்டுத்தான் திரும்புவாள்.

ஜாக் என்பவன் வேறு வகை. அவன் பெரிய தபஸ்வி. குறிப்பிட்ட வேளைகளில், அதுவும் அநேகமாகச் சுவாமி பிரசாதங்களைத்தான் அவன் புசிப்பவன். மிகுந்த நேரங்களில் மகரிஷிகளின் அருகில் நிச்சலமாக வீற்றிருப்பான்.

வானர நண்பர்கள்

மலையின்மேல் குரங்குகளுக்குக் குறைவில்லை. மகரிஷிகளுக்கு இவைகளினிடத்தும் மிகுந்த பிரியம்.

குரங்குகளுக்குள்ளே ஒரு கண்டிப்பான திட்டம் உண்டு; மனிதர் தம்மைத் தொடவிடும் வானரங்களைத் தங்களுடன் சேர்த்துக்கொள்வதில்லை. ஆனால் இந்த விதிக்கு மகரிஷிகள் மட்டும் விலக்கு! இதோடு நில்லாமல் மகரிஷிகளுக்கு மற்றோர் உயர்ந்த கெளரவமும் கிடைத்தது. காயமடைந்து கிடந்த நொண்டிக் குரங்கு ஒன்றை மகரிஷிகள் எடுத்து வளர்த்துக் காப்பற்றினார். தங்களுக்குள்ளே பலம் மிகுந்த ஒருவனையே குரங்குகள் ராஜாவாகத் தேர்ந்தெடுப்பது வழக்கம். ஆனாலும் மகரிஷிகளின் அன்பைப் பெற்ற அந்த நொண்டிக் குரங்கையே மற்ற வானரங்கள் ராஜாவாகக் கொண்டன.

இதைத் தவிர வானர யுத்தங்களைத் தடுத்து மத்தியஸ்தம் செய்துவைக்கும் உரிமையும் அவருக்கு உண்டு. காட்டுப்புறங்கள் வெவ்வேறு கூட்டங்களுக்கெனப் பிரித்துவைக்கப்பட்டிருக்கும். ஒரு கூட்டத்தின் எல்லையில் மற்றோர் வானரக்கூட்டம் சென்றால் சண்டை ஏற்பட்டுவிடும். இதைத் தூதர்கள் மூலம் சமரசமாகத் தீர்த்துக்கொள்வதும் உண்டு. சமரசம் ஏற்படாவிட்டால் வெகு கோரமான வாரையுத்தந்தான். மகரிஷிகள் மலைமீதிருந்த வரைக்கும் இந்த யுத்தங்கள் வெகு அபூர்வமாக இருந்தன; தகராறு ஏற்பட்டால் அவர் இரு கட்சியினரையும் அழைத்துச் சமாதானம் செய்து அனுப்பிவிடுவார்.

இந்த வானர நண்பர்களைப் பற்றி மகரிஷிகள் எத்தனையோ கதைகள் சொல்வது உண்டு. ஒரு குரங்குக்கூட்டத்தைச் சேர்ந்த இரண்டு பெரிய குரங்குகளை ராஜா பிரஷ்டம் செய்து தள்ளி வைத்துவிட்டானாம். இதனால் வானரங்களுக்குள் மிகுந்த கிளர்ச்சி ஏற்பட்ட பிரஜைகள் யாவரும் பயந்து பணிந்துவிட்டனர். இரண்டு வாரத் தபசின் பலன் அது என்று கூறுவார் மகரிஷி.

சிறு சேஷ்டை செய்த குரங்குகள் கூட உடனே அதற்காக வருந்தி மகரிஷிகளிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்ளும். பொதுவாக எல்லாக் குரங்குகளும் மகரிஷிகளிடம் மிகவும் அன்பாகவும் நன்றியறிவுடனுந்தான் நடந்து வந்தன.

ஒருநாள் கடும் வெயிலில் மகரிஷிகள் சில பக்தர்களுடன் வெகுதூரம் நடந்து விட்டுத் திரும்பி வந்துக்கொண்டிருந்தார். வெயில் கொடுமையுடன் பசியும் தாகமும் அதிகரித்தன. பக்கத்தில் எங்கும் தண்ணீரே இல்லை.

அந்த வழியே ஒரு குரங்குக் கூட்டம் போய்க் கொண்டிருந்தது. அவை மகரிஷிகளையும் பக்தர்களையும் பார்த்ததும் அவர்கள் நிலையை எப்படியோ ஊகித்து உணர்ந்து கொண்டன போலும்! உடனே பக்கத்தில் உள்ள ஒரு நாவல் மரத்தின்மீது தாவி கிளைகளைக் குலுக்கிப் போதுமான நாவற் பழங்களை உதிரித்துவிட்டுப் பேசாமல் இறங்கிப் போய்விட்டன. அந்தக் கூட்டத்தில் ஒரு குரங்குகூட அந்தப் பழங்களைத் தின்னவில்லை!

அபாயகரமான ஜந்துக்களிடமும் மகரிஷிகள் சினேகமாகவே இருந்திருக்கிறார். மகரிஷிகளின் குகைகளில் எத்தனையோ பாம்புகள் வசித்துவந்தன.

''அவைகளின் வீட்டுக்கல்லவா நாம் வந்திருக்கிறோம்? அவைகளைத் தொந்தரவு செய்யவோ துன்புறுத்தவோ நமக்குச் சிறிதும் உரிமை இல்லை. அவைகள் நம்மை ஒன்றும் செய்யமாட்டா'' என்று மகரிஷிகள் அடிக்கடி கூறுவார்.

ஒரு நாள் மகரிஷிகள் மலைமீது ஒரு காட்டுப் பாதையிற் சென்றுகொண்டிருந்தார். ஒரு குளவிக் கூட்டை இடதுகால் மிதித்துவிட்டது. உடனே குளவிகள் துரத்திக்கொண்டு வந்து அதே காலில் கொட்டின.

''வேணும், வேணும். கூட்டைக் கலைத்தது இந்தக் கால்தானே'' என்று கூறிக்குளவியின் ஆத்திரம் தீரக் கொட்டித் திரும்பும் வரை அசையாமல் அங்கேயே அமர்ந்திருந்தார்.



மகரிஷியை நேசித்த பிராணிகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக