ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 5:09 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm

» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ?

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ?

Post by thillalangadi on Sat Oct 08, 2011 8:08 pm

ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ?
இஸ்லாத்தின் மீது மிக அதிக அளவில் தொடுக்கப்படும் குற்றச்சாட்டுகளில்ஒன்று , முஸ்லிம்கள் அதிக திருமணம் செய்கிறார்கள் ! நான்கு பெண்களை மனமுடிக்கிறார்கள் . ஒருவனுக்கு ஒருத்தி என்பதே சிறந்தது , அதுதான் நமது கலாசாரம் என்றெல்லாம் விமர்சிக்கின்றார்கள் . அதிலும் உச்சகட்டமாக நம்முடைய முந்தைய பதிவிற்கு கருத்திட்ட அன்பர் ,பலதார மனம்,எளிய விவாகரத்து போன்றவற்றால் எயிட்ஸ் அதிக அளவில் முஸ்லிம்களை தான் தாக்கும் அபாயம் இருப்பதாக எழுதியும் இருந்தார் . நமக்கு தெரிந்த சில விசயங்கள் ......
ஒருவனுக்கு ஒருத்தி ...
பொதுவாக உலகில் ஆண்,பெண் பிறப்பு விகிதம் சமமாகத்தான் உள்ளது . எனினும் பிறக்கும் ஆண் குழந்தையை விட பெண் குழந்தைகள்தான் அதிக நோய் எதிர்ப்பு சக்தியுடன் பிறக்கின்றன .
ஆண் குழந்தைகள் இறப்பு விகிதம் பெண் குழந்தைகளை விட அதிகமாகின்றது .ஆண் இனமானது அதிக அளவில் போர்,விபத்து,போன்றவற்றினாலும் பெருமளவு இறப்பை சந்திக்கின்றது .இது உலக சுகாதார அமைப்பின் புள்ளி விபரம். உலகளவில் தற்போது ஆண்களை விட பெண்கள் அதிகமாக உள்ளனர் .
உலக மக்கள் தொகையில் ஆண்களின் எண்ணிக்கையை விடப் பெண்களின் எண்ணிக்கையே மேலோங்கி நிற்கிறது.
அமெரிக்காவில் உள்ள மக்கள் தொகையில் உள்ள பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 78 லட்சம் அதிகமாகும். அமெரிக்கத் தலைநகர் நியூயார்க்கில் மாத்திரம் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 10 லட்சம் அதிகமாகும். அமெரிக்கத் தலைநகர் நியூயார்க்கின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பாகம் ஓரிணச் சேர்க்கையில் நாட்டமுள்ள ஆண்கள். அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் மேற்சொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மாத்திரம் இரண்டரை கோடியாகும். மேற்படி நபர்களுக்குப் பெண்களின் தேவையிருக்காது.
அதே போல் பிரிட்டனில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 40 லட்சம் அதிகமாகும்.
ஜெர்மனியில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 50 லட்சம் அதிகமாகும். ரஷ்யாவில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 90 லட்சம் அதிகமாகும்.

மக்கள் தொகையில் பெண்களின் எண்ணிக்கையை விட ஆண்களின் எண்ணிக்கை அதிகம் கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று . பெண்கருக்கள் என்று கண்டறியப்பட்டால் உடனடியாகக் கலைக்கப்படுவதும் பிறந்து விட்ட குழந்தை பெண் என்று தெரிந்தால் சிசுக்கொலை செய்ய விடுவதுமே இதற்கு க் காரணம் ஆகும். இந்தியாவில் மாத்திரம் ஒரு வருடத்திற்குப் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட கருக்கள் - பெண் என்று அடையாளம் காணப்பட்டப் பிறகு கலைக்கப்படுகின்றன அதாவது அழிக்கப் படுகின்றன. இந்தக் கொடிய செயல் நிறுத்தப்பட்டால் இந்தியாவிலும் ஆண்களின் எண்ணிக்கையைவிட ப் பெண்களின் எண்ணிக்கையே மேலோங்கி இருக்கும்.

ஓர் ஆண் ஒரு பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு இருக்குமானால் அமெரிக்காவில் மாத்திரம் 3 கோடி பெண்களுக்குத் திருமணம் முடித்துக்கொள்ள ஆண்கள் இல்லாத நிலைதான் ஏற்படும். (அமெரிக்காவில் இரண்டரை கோடி ஆண்கள் ஓரினச் சேர்க்கையாளர்களாக இருக்கிறார்கள் என்பதையும் கணக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும்). அதுபோல, பிரிட்டனில் 40 லட்சம் பெண்களுக்கும் ஜெர்மெனியில் 50 லட்சம் பெண்களுக்கும் ரஷ்யாவில் 90 லட்சம் பெண்களுக்கும் திருமணம் முடித்துக்கொள்ள ஆண்கள் இல்லாத நிலைதான் ஏற்படும்.

திருமணமே ஆகாமல் பெண்கள் கர்ப்பமடைவதும் கைவிடப்படுவதும் மலேசிய இந்துச் சமுதாயத்தில் அதிகமாகி வருவதைக் கண்டு அங்குள்ள இந்துக்கள் பலதார மணத்தைத் தங்களுக்கும் அனுமதிக்குமாறு போராடி வருகின்றனர். ( மலேசிய நண்பன் நாளிதழ் - 05.01.2002)

1948ஆம் ஆண்டில் மியூனிச்சில் நடந்த அகில உலக இளைஞர்கள் மாநாட்டில் மிகவும் ஏற்றத்தாழ்வு மிக்க பால்விகிதத்தால் ஏற்படும் பிரச்னை பற்றிப் பலவாறு விவாதிக்கப்பட்டும் இறுதிவரை எந்தத் தீர்விற்கும் வர முடியவில்லை என்பது அவர்களுக்கு தெளிவாகத் தெரிந்தவுடன், மாநாட்டில் கலந்து கொண்ட சிலர் பலதார மணத்தை சிறந்த தீர்வாக முன்வைத்தனர். இதைக்கேட்டதும் ஆரம்பத்தில் மாநாட்டிற்கு வந்தோர் அதிர்ச்சிக்கும் வெறுப்பிற்குமுள்ளாயினர். ஆயினும், இதைக் கவனமாக ஆராய்ந்த மாநாட்டினர், பலதார மணம் ஒன்றுதான் சாத்தியமான தீர்வு என்பதை ஒப்புக்கொண்டனர். இறுதியாக, மாநாட்டின் இறுதித் தீர்மானங்களில் ஒன்றாகப் பலதார மணமும் சேர்க்கப்பட்டது.

திருமணம் செய்யும் பருவத்தை அடைந்த பெண்கள் திருமணம் செய்யும் பருவத்தை அடைந்த ஆண்களை விடப் பல மடங்கு அதிகமாக உள்ளனர். ஏனெனில் பெண்கள் ஆண்களை விட சுமார் 10 வருடங்களுக்கு முன்பே திருமணத்திற்குத் தயாராகி விடுகின்றனர்.

யுத்தங்களில் பெண்களைவிட ஆண்களே அதிகமாக கொல்லப்படுகிறார்கள். விபத்துக்களிலும் , நோய்வாய்ப்பட்டும் இறப்பவர்களில் பெண்களைவிட ஆண்களின் விகிதாச்சாரமே அதிகம். ஆண்களின் வாழ்க்கைக் காலம் பெண்களின் வாழ்க்கை காலத்தைவிடக் குறைவாகவே இருப்பதால் எந்த காலகட்டத்திலும் மனைவியை இழந்த கணவர்களை விட, கணவனை இழந்த மனைவியரே இவ்வுலகில் அதிகம் காணப்படுகின்றனர்.

சராசரியாகப் பெண்ணினத்தின் வாழ்க்கைக் கால அளவு, ஆணிணத்தின் வாழ்க்கைக் கால அளவைவிட அதிகமானது.

பெண்களுக்குத் திருமணம் செய்து கொடுப்பதற்காகப் பெரும் தொகையை வரதட்சணையாகக் கொடுக்கும் அவலமும் அதிகரித்து வருகிறது. பெரும் எண்ணிக்கையிலான பெண்களுக்கு மண வாழ்வு கிடைக்காததால் விபச்சாரம் பெருகி வருகிறது.

திருமண வாழ்வைப் புறக்கணிக்கும் பிரம்மாச்சாரிகளும் ஆண்களின் பற்றாக்குறையை மேலும் அதிகரிக்கிறார்கள்.
ஆக ஆண் பெண் எண்ணிக்கை விகிதம் ஏற்றதாழ்வுடன் இருந்தே வருகின்றது . திருமண வாழ்வு என்பது ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலையில் அமைத்து கொள்வது முடியாதது என்பதற்கு இதுவும் ஒரு காரணம் .



Posted by திருபுவனம் வலை தளம்

thillalangadi
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 158
வசிப்பிடம்: யாரும் இல்லாத இடத்தில்
சேர்ந்தது: 12/02/2011
மதிப்பீடு: 24

Back to top Go down

சாத்தியமா?, சாத்தியமில்லையா?, பிழையான கேள்வி

Post by அகிலன் on Sun Oct 09, 2011 1:42 am

இன்றையகாலத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டில் ஒரு சிறு மாற்றம் நிகழ்ந்து வருகிறது. அதாவது "ஒருநேரத்தில் ஒருவனுடன் ஒருத்தி" தனிமனித சுத்ந்திரம் வலியுறுத்தப்படுவதாலும்,பொருளாதார பிரச்சனைகளாலும்,திருமணங்கள் நடைபெறுவதும் குறைவடைகிறது,நடைபெற்ற திருமணங்களும் இறுதிவரை நிலைப்பதும் குறைவடைகிறது. பலருடைய வாழ்வில் விவாகமும் விவாகரத்தும் பலமுறை நிகழ்கிறது.அதுதான் "ஒருநேரத்தில் ஒருவனுடன் ஒருத்தி"
என்ற நிலைமை உருவாகியிருக்கிறது. எந்தப்பெண்ணும் தன்னுடைய கணவன் வேறுஒருத்தியுடன் இணைவதையோ, எந்த ஆணும் தன்னுடைய மனைவி வேறு ஒருவனுடன் இணைவதையோ, விரும்புவதில்லை.
என்னதான் பிரச்சனைகள் இருந்தாலும் ஒருவனும் ஒருத்தியும் திருமணம் செய்து இறுதிவரை கருத்தொருமித்து வாழ்வதையே எல்லோரும் வரவேற்கிறார்கள். அதுதான் பிறக்கின்ற குழந்தைகளுக்கும் நல்லது.இந்தக்கோட்பாட்டில் எந்தக்கேழ்விக்கும் இடமில்லை.

அகிலன்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 233
வசிப்பிடம்: france
சேர்ந்தது: 01/05/2009
மதிப்பீடு: 50

http://aran586.blogspot.com

Back to top Go down

Re: ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ?

Post by prlakshmi on Sun Oct 09, 2011 5:48 am

ஒருவனுடன் ஒருத்தி-பண்பாடு எங்கள் நாட்டில் இருந்து கொண்டு தான் வருகிறது. பெண்கள் அறிவினை மட்டும் விருத்தி செய்து கொண்டு வாழவேண்டும். திருமணம் என்பது இருமனம் இணையும் ஒரு உன்னத நிகழ்வு .அது வாழ்நாள் முழுவதும் தனக்கு ஒருவனுடன் என்ற மனக்கட்டுப்பாடுடன் வாழவேண்டும். ஒருநேரத்தில் ஒருவனுடன் ஒருத்தி-பண்பாடு இறக்குமதி ஆகிக்கொண்டிருக்கும் இந்நேரத்தில் உலகத்தில் உள்ள பெண்கள் கையில் தான்ஒருவனுக்கு ஒருத்தி பண்பாடு காப்பாற்றப்படவேண்டிய பொறுப்பு இருக்கிறது.

prlakshmi
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 193
வசிப்பிடம்: chennai
சேர்ந்தது: 18/12/2010
மதிப்பீடு: 53

Back to top Go down

Re: ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ?

Post by thillalangadi on Sun Oct 09, 2011 9:10 am

ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடு நல்லது தான்..ஆனால் அதே வேலயில் அதனால் தான் பெண்கள் முதிர் கண்ணிகளாகவே வாளா வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விடுவார்கள்..
சிலருக்கு ஒரு மனைவியால் திருப்தி பெற முடியாது..அந்த நிலயில் அவர்கள் விபசாரம் செய்து நோயை விலைக்கு வாங்கி வீட்டில் தருவார்கள்.அதே வேலயில் இன்னொரு மனம் முடிதால் ,ஒரு பெண்ணுக்கு vaazvum கிடைக்கும்,viyaathiyum வராது.

thillalangadi
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 158
வசிப்பிடம்: யாரும் இல்லாத இடத்தில்
சேர்ந்தது: 12/02/2011
மதிப்பீடு: 24

Back to top Go down

Re: ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ?

Post by kitcha on Sun Oct 09, 2011 10:16 am

தில்லாலங்கடி என்ன சொல்ல வருகிறீர்கள்.என்பதை தெளிவாக சொல்லுங்கள்.நீங்கள் முஸ்லிம் அதிக அளவில் திருமணம் செய்வது தவறு இல்லை என்று வாதாடுகிறீர்களா இல்லை ஆண்கள் அதிக அளவில் திருமணம் செய்யலாம் என்று சொல்ல வருகிறீர்களா.

உங்கள் முடிவை தெளிவாக சொல்லுங்கள் என் பதிலை பிறகு சொல்கிறேன்

kitcha
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 5492
வசிப்பிடம்: இப்போது அபுதாபி
சேர்ந்தது: 11/04/2011
மதிப்பீடு: 1321

Back to top Go down

Re: ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ?

Post by இரா.பகவதி on Sun Oct 09, 2011 11:01 am

ஏன் ஆண்களின் பிறப்புவிகிதம் குறைவாக இருந்து வருகிறது என்பதனை கண்டறிந்நு அதணை அதிகபடுத்துவதற்காண முயற்சியயை கையாளவேண்டும் உதாரணமமாக ஆண்கள் குறைவானநோய் எதிர்ப்புசக்தியுடன் பிறக்கின்றனர் என்றால் அதனை நிவர்த்தி செய்வநற்கான வழிழுறைகளை கையாண்டு அவர்களின் இறப்பு விகிதத்தை குறைக்க வேண்டுமே தவிற வேறு எந்த தவறான பாதைக்கும் வழிவகுக்க கூடாது கூடாது நாம் முனோர்கள் தம் அனுபவங்களின் வாயிலாக பெற்று நமக்கு அளித்த பாரம்பரிய கலாச்சாரரங்களை நாம் நாம் இளைய தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டுமே தவிற அதனை அழித்து விட கூடாது

இரா.பகவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 5242
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 579

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ?

Post by ராஜா on Sun Oct 09, 2011 11:11 am

thillalangadi wrote:ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ?
இஸ்லாத்தின் மீது மிக அதிக அளவில் தொடுக்கப்படும் குற்றச்சாட்டுகளில்ஒன்று , முஸ்லிம்கள் அதிக திருமணம் செய்கிறார்கள் ! நான்கு பெண்களை மனமுடிக்கிறார்கள் . ஒருவனுக்கு ஒருத்தி என்பதே சிறந்தது , அதுதான் நமது கலாசாரம் என்றெல்லாம் விமர்சிக்கின்றார்கள் .


thillalangadi wrote:
அமெரிக்காவில் உள்ள மக்கள் தொகையில் உள்ள பெண்களின் எண்ணிக்கை ஆண்களின்
எண்ணிக்கையை விட 78 லட்சம் அதிகமாகும். அமெரிக்கத் தலைநகர் நியூயார்க்கில்
மாத்திரம் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 10 லட்சம்
அதிகமாகும். அமெரிக்கத் தலைநகர் நியூயார்க்கின் மொத்த மக்கள் தொகையில்
மூன்றில் ஒரு பாகம் ஓரிணச் சேர்க்கையில் நாட்டமுள்ள ஆண்கள். அமெரிக்காவின்
மொத்த மக்கள் தொகையில் மேற்சொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மாத்திரம்
இரண்டரை கோடியாகும். மேற்படி நபர்களுக்குப் பெண்களின் தேவையிருக்காது.
அதே போல் பிரிட்டனில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 40 லட்சம் அதிகமாகும்.
ஜெர்மனியில்
பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 50 லட்சம் அதிகமாகும்.
ரஷ்யாவில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 90 லட்சம்
அதிகமாகும்.

இவர் இந்திய கலாசாரத்தை பற்றி கட்டுரை எழுதியிருக்கிறார் என்று படித்து
கொண்டு வந்தேன், அடுத்து வரும் பத்தியை படித்த பின் தான் தெரிந்தது இது ஏதோ
வெளிநாட்டு ஆள்களுக்காக எழுதப்பட்ட கட்டுரை என்று.

ராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15363
வசிப்பிடம்: Qatar
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 1010

http://www.eegarai.net

Back to top Go down

Re: ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ?

Post by நட்புடன் on Sun Oct 09, 2011 11:54 am

ஏங்க இங்க அவனவன் ஒன்ன கட்டி வாங்கிக் கட்டிக்கறதே பெரும் பாடா இருக்கு

இதுல ரெண்டு மூணு கட்டிட்டாலும் - கிழிஞ்சது கிருஷ்ணகிரி...

நட்புடன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 1399
வசிப்பிடம்: தோஹா - கத்தார்
சேர்ந்தது: 22/06/2011
மதிப்பீடு: 151

Back to top Go down

Re: ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ?

Post by kitcha on Sun Oct 09, 2011 12:53 pm

இவர் பதிவு செய்தது இஸ்லாம் பகுதியில் .ஆகவே இதைவைத்து இவர் என்ன சொல்ல வருகிறார் என்பது புரியாமல் இல்லை.

kitcha
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 5492
வசிப்பிடம்: இப்போது அபுதாபி
சேர்ந்தது: 11/04/2011
மதிப்பீடு: 1321

Back to top Go down

Re: ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ?

Post by இளமாறன் on Sun Oct 09, 2011 1:29 pm

இந்த கட்டுரை பிரித்து ஆராயலாம்
polygamy ஒருவனுக்கு பல மனைவிகள் polyandry ஒரு பெண்ணுக்கு பல கணவர்கள் மற்றும் குருப் மேரேஜ்

ஒருவனுக்கு ஒருத்தி என்பது ராமர் சொன்ன முறை ...அவர் தந்தை தசரதர் ,கிருஷ்ணர் , விஷ்ணு ஆகியவர்கள் polygamy முறை சேர்ந்தவர்கள் ... polyandry முறை என்பது பாண்டவர்கள் 5 பெரும் ஒரு மனைவியை மணந்தது..

ஹிந்து சட்ட முறை படி இது தவறான செயல் இருப்பினும் பலர் நடைமுறை வாழ்க்கையில் மணக்கின்றனர்

இஸ்லாம் திருமண சட்ட படி ஒரே நேரத்தில் 4 மனைவிகள் வரை அனுமதிக்க படுகிறது (4 மனைவிகளையும் ஒரே மாதிரி கவனிக்க வேண்டும் ..உதாரணமாக ஒரு பட்டுப்புடவை வாங்குகிறார் என்றாள் 4 வாங்க வேண்டும் வீடு வாங்கினாலும் 4 வாங்க வேண்டும் ...இப்படி எல்லாரும் சமமாக மதிக்க வேண்டும் ..முதல் மனைவி 4 மனைவி வரை அனுமதிக்க வேண்டும் ..இல்லை என்றால் எந்த நிமிடத்திலும் தலாக் 3 முறை சொல்ல நேரம் ஆகாது .

இந்த 4 மனைவி முறை முகமது நபி காலத்தில் போரில் ஆண்கள் இறந்த நிலையில் பெண்களுக்கு சரியான விகிதத்தில் இல்லை என்பதாலும் உருவாக்க பட்டது ...இது இன்றைய காலத்திற்கு ஒத்து வருமா என்பதே இப்பொழுது கேள்விக்குறி ஆகி நிற்கிறது

கால ஓட்டத்தில் அவனவனுக்கு திருமணமே ஆகாமல் இருக்கும் பொது இதெல்லாம் அவசியமா என்பதும் புரியவில்லை

சோகம்

http://en.wikipedia.org/wiki/Polygamy


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ?

Post by நட்புடன் on Sun Oct 09, 2011 1:50 pm

ஆராய்ச்சியாளர்கள் சொல்வதை உண்மையென எடுத்துக் கொண்டாலும்,
இன்றைய நிலையில் ஒன்றிற்கு மேல் சமாளிப்பது மிகக் கடினம்
நம் நாட்டில் இஸ்லாத்தில் உள்ளவர்களே கூட இதை
முழுவதுமாக பின் பற்றுவதில்லை. ஆங்காங்கே
சிலர் இருக்கலாம். இந்தப் அரபிய நாட்டில் கூட
இந்த முறை அத்துணை பரவலாக இல்லை.

இன்னொன்று இதை செயல்படுத்தினாலும் - மதத்திற்கு அப்பாற்பட்டு
அப்பவும் ஆண்களின் எண்ணிக்கை குறைந்து தான் போகும்
போட்டுத் தள்ளிடுவாங்கையா தள்ளிடுவாங்க...

நட்புடன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 1399
வசிப்பிடம்: தோஹா - கத்தார்
சேர்ந்தது: 22/06/2011
மதிப்பீடு: 151

Back to top Go down

Re: ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ?

Post by முஹைதீன் on Sun Oct 09, 2011 3:53 pm

ஒருவன் 4 திருமணங்கள் கட்டாயம் செய்ய வேண்டும் என்பதில்லை அப்படி செய்தால் தவறு ஒன்றும் இல்லை

முஹைதீன்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 3239
வசிப்பிடம்: dubai
சேர்ந்தது: 14/01/2010
மதிப்பீடு: 745

Back to top Go down

Re: ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ?

Post by kitcha on Sun Oct 09, 2011 4:01 pm

முஹைதீன் wrote:ஒருவன் 4 திருமணங்கள் கட்டாயம் செய்ய வேண்டும் என்பதில்லை அப்படி செய்தால் தவறு ஒன்றும் இல்லை

அதே போல் உங்கள் குர்ஆனில் மற்ற ஒன்று சொல்லப் பட்டு உள்ளதே.
கணவனும் மனைவியும் ஆறு மாதத்திற்கு மேல் பிரிந்து இருந்தால்,அந்தப் பெண்,அந்தக் கணவரை விவாகரத்து செய்யலாம் என்று உள்ளதே. இன்று வெளிநாட்டில் எத்தனையோ இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்கள் வேலை செய்கிறார்கள்,அவர்கள் மனைவி எல்லாம் விவாகரத்து தேடியா செல்கிறார்கள்.

kitcha
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 5492
வசிப்பிடம்: இப்போது அபுதாபி
சேர்ந்தது: 11/04/2011
மதிப்பீடு: 1321

Back to top Go down

Re: ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ?

Post by ranhasan on Sun Oct 09, 2011 4:05 pm

எப்பா மதச் சண்டையா கிளப்பிராதிங்க... எல்லாமே நம்மலா சொல்றதுதான், நாமலே மாத்திக்குறதுதான்... குரான், பைபிள், பகவத் கீதை எல்லாமே மனிதர்கள் உருவாக்குனதுதான்.. அதிலுள்ள குறையும் நிறையும் உருவாக்கிய மனிதர்களையே சாரும்...

ranhasan
தளபதி
தளபதி

பதிவுகள்: 1892
வசிப்பிடம்: world
சேர்ந்தது: 04/08/2010
மதிப்பீடு: 177

http://agangai.blogspot.com

Back to top Go down

Re: ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ?

Post by கே. பாலா on Sun Oct 09, 2011 4:08 pm

ranhasan wrote:எப்பா மதச் சண்டையா கிளப்பிராதிங்க... எல்லாமே நம்மலா சொல்றதுதான், நாமலே மாத்திக்குறதுதான்... குரான், பைபிள், பகவத் கீதை எல்லாமே மனிதர்கள் உருவாக்குனதுதான்.. அதிலுள்ள குறையும் நிறையும் உருவாக்கிய மனிதர்களையே சாரும்...
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

கே. பாலா
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 4700
வசிப்பிடம்: tamil nadu
சேர்ந்தது: 01/01/2011
மதிப்பீடு: 1376

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum