புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவலை இல்லாத மனிதன் Poll_c10கவலை இல்லாத மனிதன் Poll_m10கவலை இல்லாத மனிதன் Poll_c10 
35 Posts - 74%
heezulia
கவலை இல்லாத மனிதன் Poll_c10கவலை இல்லாத மனிதன் Poll_m10கவலை இல்லாத மனிதன் Poll_c10 
11 Posts - 23%
mohamed nizamudeen
கவலை இல்லாத மனிதன் Poll_c10கவலை இல்லாத மனிதன் Poll_m10கவலை இல்லாத மனிதன் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவலை இல்லாத மனிதன் Poll_c10கவலை இல்லாத மனிதன் Poll_m10கவலை இல்லாத மனிதன் Poll_c10 
72 Posts - 66%
heezulia
கவலை இல்லாத மனிதன் Poll_c10கவலை இல்லாத மனிதன் Poll_m10கவலை இல்லாத மனிதன் Poll_c10 
32 Posts - 29%
mohamed nizamudeen
கவலை இல்லாத மனிதன் Poll_c10கவலை இல்லாத மனிதன் Poll_m10கவலை இல்லாத மனிதன் Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
கவலை இல்லாத மனிதன் Poll_c10கவலை இல்லாத மனிதன் Poll_m10கவலை இல்லாத மனிதன் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவலை இல்லாத மனிதன்


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Oct 05, 2011 7:30 pm

கவலை இல்லாத மனிதன்





உலகில் கவலை இல்லாத மனிதர்கள் என்று யாரேனும் இருக்கிறார்கள்.
அவரவர்களின் வயதுக்கு தகுந்து, அவரவர்களின் வசதி, வாய்ப்புக்கு தகுந்து சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ கவலைகள் உள்ளன. கவலைகளின் இன்னொரு பக்கத்தை பிரச்சனைகள் என்று சொல்லலாமா... அல்லது எல்லா கவலைகளும், பிரச்சனை என்கிற
விதையில் இருந்து தான் முளைக்கிறது என்று சொல்லலாம்மா...

எது எப்படி என்றாலும்- கவலைகள் இன்றி மனிதர்கள் இல்லை. கவலைகள் அல்லது பிரச்சனைகள் இரண்டு வகை படுகின்றன. ஒன்று அவரவர்களுக்கு இயற்கையாக ஏற்படுவது. இதை நாம் ஏற்று கொண்டு தான், சகித்து கொண்டு தான் ஆக வேண்டும். மற்றொன்று பிறரால் நமக்கு ஏற்படுவது அல்லது ஏற்படுத்தப்படுவது. "பிறரின் வம்பு தும்புக்கு போகாதவனுக்கும்" பிரச்சனைகள் ஏற்படுகின்றன. முற்றும்
துறந்தவனுக்கும் கவலைகள் இருக்கவே செய்கின்றன.

மனித நாகரீகம் வளர வளர கவலைகளுக்கான அளவுகளும் அதிகரித்து கொண்டு இருப்பதாகவே தோன்றுகிறது. பயம், சில நேரம் கவலையாக வடிவம் எடுக்கிறது. தாயின் வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையும், பூமியின் வயிற்றுக்குள் இருக்கும் பிணமும் தான் கவலையற்றவர்கள் என்று சொல்லலாம் என்று நினைத்தேன். ஆனால் அதுவும் தவறாக
படுகிறது. வயிற்றுக்குள் இருக்கும் குழந்தைக்காக தாய் கவலைப்படுகிறாள். குழந்தைக்கும் சேர்த்து தாய் கவலைப்படுகிறாள். இறந்து போனவர், இறந்து போய் தன் கவலைகளை மறந்தாலும், பிரச்சனை இல்லாமல் அவர் போய் இருந்தால் தான், இருப்பவர்களுக்கு கவலை இல்லை... இல்லையேல் இல்லாதவர்க்கும் சேர்த்து இருப்பவர்கள் கவலைப்பட வேண்டியது தான்.

பள்ளிக்கு செல்ல துவங்கும் நாட்களிலேயே, கவலை பட துவங்கும் காலமும் துவங்குகிறது. மிக மிக இயல்பாக, சிக்கலின்றி இருக்க வேண்டிய வாழ்க்கையை, நமது ஆசைகள் தான் கவலைக்குரியதாக்கி விடுகிறதோ... எது தேவை... எது தேவையில்லை என்பதை முடிவு செய்யாமலே ஒன்றின் மீது ஆசைப்படுகிறோம். அதுவே கவலைக்கு
காரணமாகிறது.

கூட்ட வேண்டிய இடத்தில் கழிப்பதாலும், பெருக்க வேண்டிய இடத்தில் வகுப்பதாலும் பிரச்சனையாகிறது. அதுவே கவலைக்கு காரணமாகிறது.
அறிவாளியாக இல்லையே என்பது முட்டாளின் கவலை. அறிவாளிகள் எல்லாம் கவலையற்றவர்களாக இருக்கிறார்களா... ஏழைக்கு பணக்காரனாக நாம் இல்லையே என்று கவலை. பணம் படைத்தவர்கள் எல்லாம் கவலையற்றவர்களாக இருக்கிறார்களா... சொந்த வீடு வேண்டும் என்பதே வாடகை வீட்டுகாரனின் கவலையாக உள்ளது. சொந்த வீடு வைத்துள்ளவர்கள் எல்லாம் கவலையற்றவர்களா.
ஒன்று கிடைத்தால் நம் கவலை தீரும் என்று நினைக்கிறோம். அந்த ஒன்று கிடைத்த பின்னால், வேறொன்றுக்காக கவலைப் படுகிறோம். அதிகமாய் சிந்திப்பவர்கள் தான் அதிகமாய் கவலைப்படுபவர்கள்.

நம் சிந்தனைகள்- நம் கவலைகள் தீருவதற்கு தான் இருக்க வேண்டுமே ஒழிய - நம் கவலைகளை அதிகப் படுத்த இருக்கக் கூடாது. கவலைகள் தீர வழி உள்ளதா... உள்ளது. தலைவரு படம் தீபாவளிக்கு வரலையே என்பது சிலர் கவலை... அவள் என்ன விரும்பலயே என்பது சிலர் கவலை,.. இந்தியா கிரிக்கெட்ல தோத்துட்டே இருக்கே என்பது சிலர் கவலை... யோசிக்கையில் நாம் கவலைகளாக நினைக்கிற பல விஷயங்கள் கவலைகளே கிடையாது.

பலவீனமான மனம் படைத்தவர்க்கு காற்றுல மரம் அசைந்தா கூட பயம்
தான். ஆனால் சிலருக்கோ மரமே சாயஞ்சு விழுந்தாலும் பயம் ஏற்படுறதில்லை. ஏன் இந்த வித்தியாசம். எல்லா கவலைகளுக்குமே முடிவு என்பது ஒன்று உண்டு. அந்த முடிவை யார் வேணுமானாலும் ஊகிக்கலாம். நல்லா யோசிங்க. எந்த கவலைக்கும், எந்த பிரச்சனைக்கும் மூணே மூணு முடிவு தான். ஒரு விளையாட்டு போட்டிய எடுங்க. அதற்கும் மூணு முடிவு தான். வெற்றி, தோல்வி அல்லது ஆட்டம் கைவிடப்பட்டது(டிரா ன்னு கூட வைச்சுக்கலாம்).

இதே போல் தான் ஒரு கவலைக்கும் மூன்று முடிவு. கவலை தீரும் அல்லது கவலை தீராது அல்லது அந்த கவலை பற்றின ப்ரக்ஜை நம்மை விட்டு போய் விடும். ஒரு அடிதடில இறங்க வேண்டிய சூழல் வருது. அதற்கும் மூணு முடிவு இருக்கு. ஒண்ணு அடிப்போம் இல்ல அடி வாங்குவோம் இல்ல யாராவது சண்டைய விலக்கி விடுவாங்க. அவ்வளவு தான்.

ஒரு மனிதரிடம் உதவி கேட்டு போறோம். செய்வாரா, மாட்டாரா என்பது நம் கவலை. மூணாவதா அங்கயும் ஒரு விஷயம் இருக்கு."பார்ப்போம்" என்றோ"யோசிச்சு சொல்றேன் " என்றோ சொல்லலாம் இல்லையா. இவ்வளவு தான் எல்லாமே. ஆக கவலைகளின் கடைசி பக்கத்தை உங்களால் யூகிக்க முடிந்தால், உங்களால் எந்த விஷயத்திற்குமே கவலைப்பட தோன்றாது. கவலை என்கிற வார்த்தை உங்கள் அகராதியில் இருக்காது. இருந்தால் கூட நீக்கி விடலாம்

நன்றி : http://tamiluthayam.blogspot.com/2009/12/blog-post_21.html



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Oct 05, 2011 9:39 pm

ஒரு மன்னன் பந்தயம் வைத்தாராம் .யார் உலகத்திலேயே மிகப்பெரிய பொய் சொல்கிறார்களோ அவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் தருவதாக கூறினாராம் .அதனால் நிறைய பேர் வந்து நிறைய பொய் சொன்னார்களாம் .ஆனால் அதெல்லாம் மன்னனுக்கு திருப்தி அளிக்கவில்லை .கடைசியாக ஒருவன் பொய் சொன்னதும் மன்னன் திருப்தியடைந்து அவனுக்கு பரிசுக்கொடுத்தாராம் .அவன் சொன்ன பொய் இதுதான் "நான் கவலையே இல்லாத மனிதனை பார்த்தேன் " என்று சொன்னாராம்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
கவலை இல்லாத மனிதன் 1357389கவலை இல்லாத மனிதன் 59010615கவலை இல்லாத மனிதன் Images3ijfகவலை இல்லாத மனிதன் Images4px
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon Oct 10, 2011 12:26 am

"நான் கவலையே இல்லாத மனிதனை பார்த்தேன் "
அருமை
நன்றி



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Oct 10, 2011 4:09 am

கவலை என்றால் என்ன? சற்று விளக்கமாக எழுதுங்கள்.
எனக்கு எதுவுமே புரியவில்லை.
பிறகு எனது கேள்விக் கணைகளை தொகுக்குகிறேன்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக