|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரைby சார்லஸ் mc Today at 5:09 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm
» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
Page 15 of 15 • Share •
Page 15 of 15 •
1 ... 9 ... 13, 14, 15
Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
T.N.Balasubramanian wrote:
ஆழ்கடலின் ஆழத்தையும்
அகல,நீளத்தையும்
அளந்திடுவேன் அம்சமாய்.
இமய உச்சியில்,நின்று,இம்மி பிசகின்றி,
இயம்பிடுவேன் காற்றின் வேகத்தையும்.
தோற்றிடுவேன் உன்மன என்ணத்தை,
எழுத்தில் வடித்திட,
வேள்வித் தாயே!
கேள்வித் தாயானாயே!!
கேள்விக்குறிக்கு சித்திரக்குறியாவது ,
நீதானே பெண்ணே!!
ரமணியன். , ,
ஒரு கேள்விக்குறியை விசித்திரக் குறியாக்கிக் கவிதை தந்துள்ளீர்கள் ரமணீயன் ஐயா. எதனைக் கண்டறிந்தாலும் பெண்ணின் மன ஆழத்தை கண்டறிய இயலாது என்பதைச் சொல்லாமல் சொல்லில் வடித்துள்ளீர்கள். அருமையான கவிதை. கவைதைகள் தந்தும், பிறரை ஊக்குவித்தும் . தொடர்ந்து இந்த திரியை நகர்த்திச் செல்வதற்கு நன்றியும் அன்பும்.

Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
kirikasan wrote:
ஏன்? விதியே ஏன்?
(என்ன? ஏது? எவன்? எப்போது? இவளை கண்டனன்
சொன்னதேது? சொல்லில் நல்ல அன்பைத் தந்தவன்
மின்னலேது? மழைகளேது? இடியைத் தந்துமே
தன்னை விட்டுப் பிரிந்தபோது ஏங்கி அழுகிறாள்!)
ஏன் சிரித்தாய் ???
இவளைப் பார்த்து - அபலையாயினள்
ஏன் பிரித்தாய் ???
இமைகள்மீது - ஈரம்கொண்டனள்
ஏன் விரித்தாய் ???
வலைகள் என்னும் - சதிகள்கண்டனள்
ஏன் உரித்தாய் ???
இவளின்வாழ்வு - இருளைக்கொண்டனள்
ஏன் வரித்தாய் ??
தனிமையொன்றே - முடிவென்றாயினள்
ஏன் தரித்தாய் ???
கொடிய நாமம் - துயரில் மூழ்கினள்
ஏன் சரித்தாய் ???
இவளின் வாழ்வை - பதுமையாயினள்
ஏன் பெரிதாய் ???
வாழ்வு கேள்விக்குறியென்றாயினள்
-கிரிகாசன்
கேள்விக்குறிப் பெண்ணுக்கு கேள்விகாளாலே கவி புனைந்துள்ளீர்கள். நல்ல சிந்தனைக்கு முதலில் பாராட்டு. பாராட்டும் அள்விற்கு நான் பெரிய ஆள் இல்லை என்றாலும் இந்த சிந்தனைக்குப் பாராட்டத் தோன்றியது.
ஏங்கி அழும் பெண்ணுக்கான வக்காளத்துக் கவிதை இது. அழகாக வடிவமைத்துள்ளீர்கள். நன்றி கிரிஹாசன்.

Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
prlakshmi wrote:உயர உயர படித்தாலும் பெண்ணே!
உனக்கு இரண்டாம் இடம் தானே!
அறிவைத் தானே வளர்க்கச் சொன்னான் பாரதி!
ஆடையுமா குறைத்து நிற்கச் சொன்னான்?
பண்பாடு கானல் நீராய் தெரிய
பட்டங்கள் பணமாய் மாற
பாசங்கள் அரிதாரம் பூசி நிற்க
பெண்ணே!
வீட்டுக்குள் மட்டும் ஒளி விளக்காய்
இருந்திருக்கலாம்!
பட்டறிவு வேண்டுமென பட்டறிஞர் பலரும்
பறை சாற்றியதால்
நான்கு முனை கண்ணாடி வாழ்க்கையில்
இன்று நீ கேள்விக்குறியாய்?
நிஜங்கள் மின்மினிப் பூச்சிகளாய்
சடுகுடு ஆட்டம் ஆட
பெண்ணே!
நீ ஏன் வெளிச்சத்திற்கு வந்தாய்?
யார் ஆளப் போகும் உலகிற்கு
மெழுகாய் உருகி நிற்கின்றாய்?
தப்பித்திருக்கலாமோ!
சிபியும் மனுவும் வாழ்ந்த காலத்தில்
நீ படித்திருந்தால் ஒரு வேளை
வினாக் குறியாய் மாறாமல்
ஆச்சரியக் குறியாய் இருந்திருப்பாயோ?
அன்பு லக்ஷ்மி,
ஒவ்வொரு வரியும் சாட்டையடியாய் வலி பாய்ச்சுகிறது. யார் ஆளப்போகும் உலகுக்கோ உருகி உருகியே பெண்ணினம் நலிந்துபோன கதை இன்றல்ல நேற்றல்ல. என்றென்றும் தொடரும் கதையே. பெண்ணியம் கண்ணியம் என்று நாம் பேசுவதெல்லாம் வெற்றுச் சூனியமே. இன்று என்ன படித்து என்ன? நிலை மாறாத இரண்டுக்குச் சொந்தமானவள். உண்மையை வெகு நேர்த்தியாகச் சொன்ன கவிதை. அருமையான ஒரு கவிதைக்கு நன்றி லக்ஷ்மி.

Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
அ.இராஜ்திலக் wrote:வெண்ணிலா மயங்குகிறது
வெளிச்சத்திலே மது கண்டு
பெண்ணிணமும் ஆணினினமும்
பேசுவது இனி என்னவாகும் ?
வெண்ணிலாவைக்கண்டு மக்கள் மயங்குவர் மது உண்டது போல. வேண்ணிலாவே மது உண்டது போல மயங்கும் முரண் அழகு. பேசுவது இனி என்ன ஆகும். ஊமையாகும். விடை தொக்கிய அழகான வினா? அழகிய கவிதைக்கு நன்றி திலக்.

Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
Tamizhmuhil wrote:Aathira wrote:
இந்த அன்பு உறவுகளுக்கு/ உள்ளங்களுக்கு கவிதை எழுதலாமா உறவுகளே...
ஆடி ஓடி விளையாடி
அசந்து போய் வருகையிலே
அலுப்பால் உடல் வாட
சோர்வது உடல் தழுவ
உறக்கம் கண் தழுவ
விளையாட்டுக்கு தோழனாம்
காவலுக்கு உற்றவனாம்
பைரவனவன்
பஞ்சணை ஆகிட
உலகம் மறந்து
கண் துயிலுகிறான்-
அழகுச் சிறுவனவன்......
களைத்தவனுக்கு கவிதையில் ஒரு சாமரம். அழகான கவிதை.வாழ்த்துகள்.

Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
Aathira wrote:அடுத்த கவிதைக்குப் படம் இதோ,
இறையின் படைப்பில் இருக்கிறேன்நான் மாறி
குறையற்ற பெண்ணும் இருக்கிறாள் மாறி
மறைக்காது பெண்ணவள் மானத்தைக் காட்ட
நிறையாய் குறையை நிறையவே பெற்றாள்
குறையை உடலினில் கொஞ்சமே கொண்டு
நிறையவுடை யால்சிறுவன் நன்றாய் இருக்க
மறைந்து சிரித்தான்பெண் பார்த்து
எனக்கேற்ற நல்லிருக்கை என்னிடம் நீதா
உனக்கேற்ற ஆடைநான்ஈ வேன்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1302
Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
அனைவரின் கவிதைகளும் படத்தை விட அதிகம் ரசிக்கும் வகையில் உள்ளது!

பதிவுகள்: 790524 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81957 | புதிய உறுப்பினர்: malinimohan
Contact Administrator
Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
[quote="Aathira"][quote="Tamizhmuhil"]
ஊக்கதிற்க்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி சகோதரி...
Aathira wrote:
இந்த அன்பு உறவுகளுக்கு/ உள்ளங்களுக்கு கவிதை எழுதலாமா உறவுகளே...
களைத்தவனுக்கு கவிதையில் ஒரு சாமரம். அழகான கவிதை.வாழ்த்துகள்.![]()
ஊக்கதிற்க்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி சகோதரி...

பி.தமிழ்முகில்- பண்பாளர்

- பதிவுகள்: 239
வசிப்பிடம்: Georgia
சேர்ந்தது: 10/11/2010
மதிப்பீடு: 135
Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
Aathira wrote:Tamizhmuhil wrote:
தனிமையிலே நாமிருக்க
விளக்கொளி நம்மைச்
சூழ்ந்திருக்க -
அந்தியின் மடியதனில்
உலகம் சாய்ந்திடுகையில்
மலையதன் காதருகில்
காற்றும் கிசுகிசுக்க
மேகமது வானைத்
தழுவி நின்று
நிலவைப் பார்த்திருக்க
உன் முகமதில் என்னையும்
என் முகமதில் உன்னையும்
அழியாக் காதலில்
நம்மையும் கண்டு
வாழ்ந்திடுவோம் காலமெல்லாம்
என்றும் இளமை மாறாக் காதலுடன்!
இளமை மாறா முகத்தில் முகம் பார்க்கும் காதல் அழகிய ஓவியமாக மின்னுகிறது. அழகான கவிதைக்கு வாழ்த்துகளும் நன்றியும் தாமதமான கருத்துரைக்கு மன்னிக்கவும்.![]()
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி.....உங்களது கருத்துக்களும் , ஊக்கமும் உற்சாகமூட்டுவதாய் உள்ளன.இந்தத் திரியை ஆரம்பித்தமைக்கு மிக்க நன்றி.

பி.தமிழ்முகில்- பண்பாளர்

- பதிவுகள்: 239
வசிப்பிடம்: Georgia
சேர்ந்தது: 10/11/2010
மதிப்பீடு: 135
Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
Tamizhmuhil wrote:Aathira wrote:
தனிமையிலே நாமிருக்க
விளக்கொளி நம்மைச்
சூழ்ந்திருக்க -
அந்தியின் மடியதனில்
உலகம் சாய்ந்திடுகையில்
மலையதன் காதருகில்
காற்றும் கிசுகிசுக்க
மேகமது வானைத்
தழுவி நின்று
நிலவைப் பார்த்திருக்க
உன் முகமதில் என்னையும்
என் முகமதில் உன்னையும்
அழியாக் காதலில்
நம்மையும் கண்டு
வாழ்ந்திடுவோம் காலமெல்லாம்
என்றும் இளமை மாறாக் காதலுடன்!
இந்த கவிதையை " ஆயிரம் நிலவே வா, ஓராயிரம் நிலவே வா " என்று எஸ்.பி பாலசுப்ரமணியன் பாடிய மெட்டில், படித்தால் (பாடினால்) நன்றாக ரசிக்க முடிகிறது. முயற்சி பண்ணிப் பார்க்கலாம். தமிழ்முகிலுக்கு வாழ்த்துக்கள்
.ரமணியன்.

T.N.Balasubramanian- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 1402
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 03/02/2010
மதிப்பீடு: 199
Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
T.N.Balasubramanian wrote:Tamizhmuhil wrote:Aathira wrote:
தனிமையிலே நாமிருக்க
விளக்கொளி நம்மைச்
சூழ்ந்திருக்க -
அந்தியின் மடியதனில்
உலகம் சாய்ந்திடுகையில்
மலையதன் காதருகில்
காற்றும் கிசுகிசுக்க
மேகமது வானைத்
தழுவி நின்று
நிலவைப் பார்த்திருக்க
உன் முகமதில் என்னையும்
என் முகமதில் உன்னையும்
அழியாக் காதலில்
நம்மையும் கண்டு
வாழ்ந்திடுவோம் காலமெல்லாம்
என்றும் இளமை மாறாக் காதலுடன்!
இந்த கவிதையை " ஆயிரம் நிலவே வா, ஓராயிரம் நிலவே வா " என்று எஸ்.பி பாலசுப்ரமணியன் பாடிய மெட்டில், படித்தால் (பாடினால்) நன்றாக ரசிக்க முடிகிறது. முயற்சி பண்ணிப் பார்க்கலாம். தமிழ்முகிலுக்கு வாழ்த்துக்கள்.
ரமணியன்.
உங்களது வாழ்த்துக்களுக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி அய்யா.நீங்கள் கூறியபடி அந்தப் பாடலின் மெட்டில் முயற்சித்துப் பார்க்கிறேன்.

பி.தமிழ்முகில்- பண்பாளர்

- பதிவுகள்: 239
வசிப்பிடம்: Georgia
சேர்ந்தது: 10/11/2010
மதிப்பீடு: 135
Page 15 of 15 •
1 ... 9 ... 13, 14, 15
Page 15 of 15
Permissions in this forum:
You cannot reply to topics in this forum











