புதிய இடுகைகள்
வணக்கம் நண்பர்களேஅம்புலிமாமா
‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
M.Jagadeesan
அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
ayyasamy ram
சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
ayyasamy ram
38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
ayyasamy ram
என்ன படம், யார் யார் நடிச்சது
heezulia
சிந்திக்க சில நொடிகள்
ayyasamy ram
என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
ayyasamy ram
கீரையின் பயன்கள்
danadjeane
மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
பழ.முத்துராமலிங்கம்
அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
பழ.முத்துராமலிங்கம்
மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
பழ.முத்துராமலிங்கம்
கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
பழ.முத்துராமலிங்கம்
அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
T.N.Balasubramanian
ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
SK
வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
SK
நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
SK
ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
ஜாஹீதாபானு
அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
SK
தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
SK
மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
SK
உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
SK
அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
SK
முகநூல் நகைச்சுவை படங்கள்
T.N.Balasubramanian
நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
SK
திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
SK
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
SK
ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
SK
பயனுள்ள மருத்துவ நூல்கள்
மாணிக்கம் நடேசன்
அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
krishnaamma
முருங்கைக்கீரை கூட்டு
krishnaamma
பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
krishnaamma
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்
krishnaamma
இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்
பழ.முத்துராமலிங்கம்
துளிப்பாக்கள் - தொடர் பதிவு
ayyasamy ram
காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
ayyasamy ram
ஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி
ayyasamy ram
சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
ayyasamy ram
ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
ayyasamy ram
சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்
heezulia
வரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு!
சிவனாசான்
அழியாத பாட்டு
ayyasamy ram
கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி
ayyasamy ram
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் !
krishnaamma
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் !
krishnaamma
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு !
krishnaamma
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் !
krishnaamma
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் !
krishnaamma
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் !
krishnaamma
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி
krishnaamma
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.
krishnaamma
சாப்பாட்டுப் புராணம் சமஸ்
ajaydreams
மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
ayyasamy ram
பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
SK
சுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*
Meeran
சிரிப்பின் பயன்கள்
ஜாஹீதாபானு
முடங்கியது டுவிட்டர்- பத்து நிமிடங்கள் பரிதவித்த பயனர்கள்
SK
தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
SK
இன்றைய மருத்துவ சிந்தனை: ஜாதிக்காய்
SK
மான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி
SK

மின்னூல்கள் தரவிறக்கம்
Top posting users this week
SK |
| |||
ayyasamy ram |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
ராஜா |
| |||
ஜாஹீதாபானு |
| |||
heezulia |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
Meeran |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
SK |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
ராஜா |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
M.Jagadeesan |
| |||
மூர்த்தி |
| |||
heezulia |
|
Admins Online
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை
"தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, அரசு வேலை வாய்ப்பில் 20 சதவீதம் முன்னுரிமை,' என்ற, தமிழக அரசின் உத்தரவு, முதன் முறையாக உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் முதுநிலை விரிவுரையாளர் நியமனத்தில் அமலுக்கு வருகிறது.
ஆசிரியர் தேர்வு வாரியம், போட்டித் தேர்வு மூலம், தொடக்க கல்வித்துறைக்காக, 34 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களை தேர்வு செய்ய உள்ளது. இதற்கான அறிவிப்பு, நேற்று வெளியானது.நவ., 4 முதல், 19ம் தேதி வரை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில், விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. ஜன., 8ம் தேதி, போட்டித் தேர்வு நடக்கிறது. மொத்தம் உள்ள 34 பணியிடங்களில், ஏழு பணியிடங்கள் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, முதன் முறையாக ஒதுக்க உள்ளது.
முன்னுரிமை அளிக்காதது ஏன்?இதுகுறித்து, ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:இந்த அரசாணை வெளியானதற்குப் பின், பல்வேறு பணி நியமனங்கள் நடந்திருந்தாலும், அவை அனைத்தும், அரசாணை தேதிக்கு முன் அறிவிக்கப்பட்ட பணியிடங்கள் என்பதால், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கவில்லை.
முதன் முறையாக, உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் முதுநிலை விரிவுரையாளர்கள் நியமனத்தில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க உள்ளது. தலா ஏழு இடங்கள், இவர்களுக்கு கிடைக்கும்.கல்வி அதிகாரிகள் பணியிடத்தை பொறுத்தவரை, இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் பி.எட்., ஆகிய இரு படிப்புகளையும், தமிழ் வழியில் படித்திருந்தால், அவர்கள் இந்த ஒதுக்கீட்டின் கீழ் எடுத்துக் கொள்ளப்படுவர். முதுநிலை விரிவுரையாளர் பணிக்கு, இதேபோன்ற விதிமுறைகள் பொருந்தும். தமிழ் வழியில் தகுதியானவர்கள் இல்லாதபட்சத்தில், அடுத்த விண்ணப்பதாரர்கள் பரிசீலிக்கப்படுவர்.இவ்வாறு அவர் கூறினார்.
கோவையில் அறிவிப்பு :முந்தைய தி.மு.க., அரசு, கடந்த ஆண்டு ஜூன் மாதம் கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்தியது. அப்போது, தமிழ் மொழியை வளர்க்கும் வகையிலும், இளைய தலைமுறையினர் தமிழ் மொழியில் படிப்பதை ஊக்கப்படுத்தும் வகையிலும், "தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு, அரசு வேலை வாய்ப்பில் 20 சதவீதம் முன்னுரிமை அளிக்கப்படும்,' என, அப்போதைய முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.இதற்கான அரசாணை, கடந்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி வெளியானது.
இரண்டே பேர் நியமனம்இதன்பின், தமிழ் வழியில் படித்ததாக கூறி, சென்னை ஐகோர்ட்டில், "ஜெராக்ஸ் ஆபரேட்டர்' ஒருவரும், தலைமைச்செயலகத்தில், "லிப்ட் ஆபரேட்டர்' ஒருவரும் நியமிக்கப்பட்டனர்.முக்கிய பதவிகளுக்கு, தமிழ் வழியில் படித்தவர்களுக்கான முன்னுரிமை, முதன் முறையாக கல்வி அலுவலர்கள் நியமனத்தில் அமல்படுத்தப்படுகிறது. இதேபோல், டி.என்.பி.எஸ்.சி., இனிமேல் தேர்வு செய்யவுள்ள பணிகளிலும், இந்த அரசாணை அமலுக்கு வரும்.
தெளிவான விதிமுறைகள் இல்லை:தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அரசாணை தொடர்பாக, முந்தைய அரசு தெளிவான வழிகாட்டுதல்களையோ, விதிமுறைகளையோ வெளியிடவில்லை. இதனால், அரசுத் துறைகளுக்கு ஆட்களை தேர்வு செய்யும் அமைப்புகளிடம், ஒருவித குழப்பம் தொடர்ந்து இருக்கிறது.
"பள்ளிப்படிப்பு முதல், பணிக்குரிய கல்வித்தகுதி வரை, அனைத்து படிப்புகளையும் தமிழ் வழியில் படித்திருந்தால், அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும்,' என, முந்தைய அரசு தெரிவித்தது.
தற்போது, கல்வி அலுவலர் நியமனத்தில், இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் பி.எட்., மட்டும் தமிழ் வழியில் படித்திருந்தால் போதுமானது என்கின்றனர். பள்ளிப்படிப்பு குறித்து, எவ்வித கேள்வியும் கேட்கவில்லை. எனவே, தற்போதைய அரசு தெளிவான விதிமுறைகளை வகுத்து அறிவித்தால் தான், குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும்.- ஏ.சங்கரன் - தினமலர்
ஆசிரியர் தேர்வு வாரியம், போட்டித் தேர்வு மூலம், தொடக்க கல்வித்துறைக்காக, 34 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களை தேர்வு செய்ய உள்ளது. இதற்கான அறிவிப்பு, நேற்று வெளியானது.நவ., 4 முதல், 19ம் தேதி வரை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில், விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. ஜன., 8ம் தேதி, போட்டித் தேர்வு நடக்கிறது. மொத்தம் உள்ள 34 பணியிடங்களில், ஏழு பணியிடங்கள் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, முதன் முறையாக ஒதுக்க உள்ளது.
முன்னுரிமை அளிக்காதது ஏன்?இதுகுறித்து, ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:இந்த அரசாணை வெளியானதற்குப் பின், பல்வேறு பணி நியமனங்கள் நடந்திருந்தாலும், அவை அனைத்தும், அரசாணை தேதிக்கு முன் அறிவிக்கப்பட்ட பணியிடங்கள் என்பதால், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கவில்லை.
முதன் முறையாக, உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் முதுநிலை விரிவுரையாளர்கள் நியமனத்தில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க உள்ளது. தலா ஏழு இடங்கள், இவர்களுக்கு கிடைக்கும்.கல்வி அதிகாரிகள் பணியிடத்தை பொறுத்தவரை, இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் பி.எட்., ஆகிய இரு படிப்புகளையும், தமிழ் வழியில் படித்திருந்தால், அவர்கள் இந்த ஒதுக்கீட்டின் கீழ் எடுத்துக் கொள்ளப்படுவர். முதுநிலை விரிவுரையாளர் பணிக்கு, இதேபோன்ற விதிமுறைகள் பொருந்தும். தமிழ் வழியில் தகுதியானவர்கள் இல்லாதபட்சத்தில், அடுத்த விண்ணப்பதாரர்கள் பரிசீலிக்கப்படுவர்.இவ்வாறு அவர் கூறினார்.
கோவையில் அறிவிப்பு :முந்தைய தி.மு.க., அரசு, கடந்த ஆண்டு ஜூன் மாதம் கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்தியது. அப்போது, தமிழ் மொழியை வளர்க்கும் வகையிலும், இளைய தலைமுறையினர் தமிழ் மொழியில் படிப்பதை ஊக்கப்படுத்தும் வகையிலும், "தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு, அரசு வேலை வாய்ப்பில் 20 சதவீதம் முன்னுரிமை அளிக்கப்படும்,' என, அப்போதைய முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.இதற்கான அரசாணை, கடந்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி வெளியானது.
இரண்டே பேர் நியமனம்இதன்பின், தமிழ் வழியில் படித்ததாக கூறி, சென்னை ஐகோர்ட்டில், "ஜெராக்ஸ் ஆபரேட்டர்' ஒருவரும், தலைமைச்செயலகத்தில், "லிப்ட் ஆபரேட்டர்' ஒருவரும் நியமிக்கப்பட்டனர்.முக்கிய பதவிகளுக்கு, தமிழ் வழியில் படித்தவர்களுக்கான முன்னுரிமை, முதன் முறையாக கல்வி அலுவலர்கள் நியமனத்தில் அமல்படுத்தப்படுகிறது. இதேபோல், டி.என்.பி.எஸ்.சி., இனிமேல் தேர்வு செய்யவுள்ள பணிகளிலும், இந்த அரசாணை அமலுக்கு வரும்.
தெளிவான விதிமுறைகள் இல்லை:தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அரசாணை தொடர்பாக, முந்தைய அரசு தெளிவான வழிகாட்டுதல்களையோ, விதிமுறைகளையோ வெளியிடவில்லை. இதனால், அரசுத் துறைகளுக்கு ஆட்களை தேர்வு செய்யும் அமைப்புகளிடம், ஒருவித குழப்பம் தொடர்ந்து இருக்கிறது.
"பள்ளிப்படிப்பு முதல், பணிக்குரிய கல்வித்தகுதி வரை, அனைத்து படிப்புகளையும் தமிழ் வழியில் படித்திருந்தால், அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும்,' என, முந்தைய அரசு தெரிவித்தது.
தற்போது, கல்வி அலுவலர் நியமனத்தில், இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் பி.எட்., மட்டும் தமிழ் வழியில் படித்திருந்தால் போதுமானது என்கின்றனர். பள்ளிப்படிப்பு குறித்து, எவ்வித கேள்வியும் கேட்கவில்லை. எனவே, தற்போதைய அரசு தெளிவான விதிமுறைகளை வகுத்து அறிவித்தால் தான், குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும்.- ஏ.சங்கரன் - தினமலர்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559
Re: தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை
அப்படியே அரசியல்வாதிகளின் வாரிசுகளும் தமிழ் குடிதாங்கிகளின் வாரிசுகளும் தமிழ்வழியில் தான் படிக்க வேண்டும் என்று சட்டம் கொண்டுவந்தாள் நன்றாக இருக்கும்
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 3429
மதிப்பீடுகள் : 516
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum