புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெற்றி நிச்சயம் Poll_c10வெற்றி நிச்சயம் Poll_m10வெற்றி நிச்சயம் Poll_c10 
3 Posts - 60%
Manimegala
வெற்றி நிச்சயம் Poll_c10வெற்றி நிச்சயம் Poll_m10வெற்றி நிச்சயம் Poll_c10 
1 Post - 20%
ஜாஹீதாபானு
வெற்றி நிச்சயம் Poll_c10வெற்றி நிச்சயம் Poll_m10வெற்றி நிச்சயம் Poll_c10 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வெற்றி நிச்சயம் Poll_c10வெற்றி நிச்சயம் Poll_m10வெற்றி நிச்சயம் Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
வெற்றி நிச்சயம் Poll_c10வெற்றி நிச்சயம் Poll_m10வெற்றி நிச்சயம் Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
வெற்றி நிச்சயம் Poll_c10வெற்றி நிச்சயம் Poll_m10வெற்றி நிச்சயம் Poll_c10 
11 Posts - 4%
prajai
வெற்றி நிச்சயம் Poll_c10வெற்றி நிச்சயம் Poll_m10வெற்றி நிச்சயம் Poll_c10 
9 Posts - 4%
Jenila
வெற்றி நிச்சயம் Poll_c10வெற்றி நிச்சயம் Poll_m10வெற்றி நிச்சயம் Poll_c10 
4 Posts - 2%
Rutu
வெற்றி நிச்சயம் Poll_c10வெற்றி நிச்சயம் Poll_m10வெற்றி நிச்சயம் Poll_c10 
3 Posts - 1%
Baarushree
வெற்றி நிச்சயம் Poll_c10வெற்றி நிச்சயம் Poll_m10வெற்றி நிச்சயம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
வெற்றி நிச்சயம் Poll_c10வெற்றி நிச்சயம் Poll_m10வெற்றி நிச்சயம் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
வெற்றி நிச்சயம் Poll_c10வெற்றி நிச்சயம் Poll_m10வெற்றி நிச்சயம் Poll_c10 
2 Posts - 1%
jairam
வெற்றி நிச்சயம் Poll_c10வெற்றி நிச்சயம் Poll_m10வெற்றி நிச்சயம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெற்றி நிச்சயம்


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

avatar
Guest
Guest

PostGuest Fri Jan 16, 2009 2:22 pm

வெற்றி நிச்சயம் - சுகி சிவம்


1. கேள்விகளே சாவிகள்!

வாழ்க்கை என்பது ஒரு சூதாட்டம் என்றே பலர் கருதுகிறார்கள். இதன் வெற்றி, தோல்விகள் அதிருஷ்டத்தின் மூலமாகவே நிர்ணயிக்கப்படுகின்றன என்றும் நிறைய பேர் நினைக்கிறார்கள். வாழ்க்கையின் வெற்றி, தோல்விகள் தேர்தல் முடிவுகள் போல் குழப்பமானவை அல்ல. தேர்வின் முடிவுபோல் தீர்க்கமானவை.

வாழ்க்கையில் வெற்றிபெற நினைப்பவர்களுக்கு என் நல்வாழ்த்துகள். உங்களுக்கு நன்மை உண்டாகட்டும். உங்களால் வீடும் நாடும் விரிந்த உலகமும் நன்மை பெறட்டும். வெற்றிக்கு வழி என்ன? வெற்றி உலகின் மொழி என்ன? சொல்கிறேன்.

என்னிடத்தில் உதவிகள் கேட்டுச் சில இளைஞர்கள் வருவதுண்டு. அதில் அதிகமான பேர் வேலை வாங்கித் தரும்படித்தான் கேட்பார்கள். ""என்ன வேலை?'' என்றால், ""ஏதாவது வேலை'' என்பார்கள். வருத்தப்படாதீர்கள். இவர்கள் வெற்றி பெறுவது கடினம். என்ன வேலை என்கிற தெளிவு இல்லாமல் ஏதாவது ஒரு வேலை என்றால் நான் அவருக்கு எந்த வேலைக்கு முயற்சி செய்வது? என்னுடைய வேலையைத்தான் அவருக்குத் தரமுடியும்!

இது மிக முக்கியமான விஷயம். எதை அடைய வேண்டும் என்கிற தெளிவு உங்களுக்கு இருந்தால்தான் அதை நீங்கள் அடைய முடியும். அடைய வேண்டியது எது என்கிற முடிவே இல்லை என்றால் எதை அடைய முடியும்? நமக்கு எது வேண்டும் என்கிற தெளிவு இருந்தால்தான் அது கிடைக்கும். கிடைத்தாலும் ருசிக்கும். இல்லையென்றால் கிடைக்காது. கிடைத்தாலும் ருசிக்காது. காரணம், கிடைத்ததே தெரியாது.

ஹோட்டலில்கூட பல பேர் என்ன சாப்பிடுவது என்ற தெளிவேயின்றி மெனுகார்டை, பட்சணப் பட்டியலை வெறித்து வெறித்துப் பார்ப்பார்கள். எதையும் முடிவு செய்யமாட்டார்கள். இந்தக் குழப்பவாதிகள் முறையாக வெற்றிக் கனியைப் பறிப்பது கடினம். எனவே, வாழ்க்கையில் உங்களுக்கு என்ன வேண்டும் என்கிற தெளிவு கண்டிப்பாக இருக்க வேண்டும்.

இப்போது நாம் இருக்கும் நிலை என்ன? இனி அடைய வேண்டிய நிலை என்ன? அதற்கு நாம் செய்ய வேண்டிய முயற்சிகள் எவை? எவை என்கிற விழிப்பு நம்முள் தோன்றிவிட்டால் நமக்கு வெற்றி நிச்சயம். எங்கே இருக்கிறோம்? எங்கே போகவேண்டும்? எப்படிப் போகப் போகிறோம் என்கிற தெளிவு பிறந்துவிட்டால் வெற்றி நிச்சயம்.
அமெரிக்க ஜனாதிபதியாகப் புகழுடன் விளங்கியவர் ஜான் எஃப். கென்னடி. அவர் வெள்ளை மாளிகையில் தம்மைக் காண வந்திருக்கும் பார்வையாளர்களுடன் நாள்தோறும் சில நிமிடங்கள் செலவிடுவார். தம்மைப் பார்க்க வந்திருந்த இளைஞர்கள், பள்ளி மாணவர்களுடன் சிறிது நேரம் பேசுவார். பார்வையாளர்களில் பளிச்சென்ற புன்னகையுடன் இருந்த மாணவன் கன்னத்தைத் தட்டி, ""உன் எதிர்கால லட்சியம் என்ன?'' என்றார் கென்னடி. பளீரென்று பதில் சொன்னான் அந்த மாணவன். ""இன்று நீங்கள் இருக்கும் இடத்தில் நாளை நான் இருக்க வேண்டும். இதுதான் என் லட்சியம்'' என்றான். விழிகளை உயர்த்திவிட்டு, ""குட்'' என்று வாழ்த்திவிட்டு கென்னடி நகர்ந்தார்.

avatar
Guest
Guest

PostGuest Fri Jan 16, 2009 2:23 pm

அமெரிக்க ஜனாதிபதியாக ஆவதுதான் லட்சியம் என்ற அந்தச் சிறுவன் பிற்காலத்தில் அப்படியே ஆனான். அவன் வேறு யாருமல்ல... புகழ் பெற்ற பில் கிளிண்டன். அவர் எண்ணம் வெறும் ஆசையோ, கற்பனையோ அல்ல. தீர்க்கமான தீர்மானம். அதனால் அது நடந்துவிட்டது. எல்லோருக்கும் இப்படி நடக்குமா? இப்படி நடக்கிறதா என்று என்னை ஏளனமாகப் பார்க்கும் மூடர்களுக்கு ஒன்று சொல்கிறேன். நம்பிக்கைகள் நடக்காமல் போகும் பட்டியலில் நம் பெயர் ஏன் இருக்கவேண்டும்? பலித்தவர் பட்டியலில் நம் பெயர் இருக்க வேண்டும் என்று நினைக்கக் கூடாதா? மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.

இந்த இளைஞனைப் பற்றிச் சொன்னேன். நான் சந்தித்த வேறு ஒரு இளைஞனைப் பற்றிச் சொல்லவா? செழிப்பாக விளைந்திருந்தான் அந்த இளைஞன். ஒரு கூட்டத்தில் என்னிடத்தில் சம்பந்தமில்லாமல் அபத்தமாகக் கேள்விகள் கேட்டான். பொறுமையாக, ""தம்பி... என்ன பண்றீங்க?''என்று நான் கேட்டேன். ""அப்பாவுக்கு உதவி ஒத்தாசையாக இருக்கிறேன்'' என்றான். இந்த நூற்றாண்டில் இப்படி ஓர் இளைஞனா என்ற இன்ப அதிர்ச்சியுடன், ""அப்பா என்ன பண்றார்?'' என்றேன். ""சும்மா வீட்ல இருக்கார்'' என்று வெடிகுண்டு வீசினான் அந்த இளைஞன். தான் காலத்தை வீணாக்குகிறோம் என்ற குற்ற உணர்வே இல்லாத இவன் எப்படி முன்னேற முடியும்?

இப்போது நாம் இருக்கும் நிலை என்ன? நம் குடும்பத்தின் நிலை என்ன? நாம் வளர, முன்னேற என்ன செய்யலாம் என்கிற சின்னச் சின்னக் கேள்விகள் உங்களுக்குள் பிறந்துவிட்டால் கொஞ்சம் கொஞ்சமாக விடைகள் கிடைக்கத் தொடங்கும். ஒன்றை மறந்துவிடாதீர்கள். எவ்வளவு பெரிய கதவுக்கும் தாழ்ப்பாள் சின்னதுதான். பூட்டோ அதை விடச் சின்னது. சாவியோ... பூட்டை விடச் சின்னது. சின்னச் சாவியால் பூட்டைத் திறக்கலாம். பூட்டைத் திறந்தால் தாழ்ப்பாளைத் திறக்கலாம். தாழ்ப்பாளைத் திறந்தால் பெரிய பெரிய கதவுகளையே சுலபமாகத் திறக்கலாம். எனவே சின்னச் சின்னக் கேள்விகள், பெரிய பெரிய கோட்டை வாயில்களைத் திறக்கப் போகும் சாவிகள். இதை நீங்கள் உணர்ந்தால் வெற்றி நிச்சயம்.

avatar
Guest
Guest

PostGuest Fri Jan 16, 2009 2:24 pm

2. ஏழ்மை வெட்கத்திற்குரியது அல்ல!

இந்தியா முழுவதும் இப்போது ஜகஜ்ஜோதியாய் நடப்பது கல்வி வியாபாரம். தனியார் சுய நிதிக் கல்லூரிகள் வந்த பின் மருத்துவம், பொறியியல் படிப்பவர்கள் எண்ணிக்கை பல மடங்காக ஆகிவிட்டது. இதில் பயிலும் எல்லோருமே கல்வி நோக்கோடு படிப்பில் அதிக அக்கறையுடன் படிப்பவர்களா என்பது சந்தேகம்.
நாளை கல்யாணச் சந்தையில் தன் மகளை நல்ல விலைக்கு விற்க விரும்பும் பேராசைக்காகப் பெற்றோர்கள், பணத்துக்குப் பஞ்சமில்லாத பணக்காரப் பெற்றோர்கள் கட்டாயப்படுத்தித் தங்கள் பிள்ளைகளைக் கொண்டு வந்து இந்தத் தொழுவத்தில் கட்டி விடுகிறார்கள்.

முன்பு அரசினர் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகள் நான்கைந்து மட்டுமே இருந்தபோது படிப்பார்வம் மிக்க மாணவர்கள் மட்டுமே மருத்துவம், பொறியியல் சேர முடிந்தது. இப்போது அப்படி இல்லை.

படாதபாடுபட்டுப் பணம் கட்டும் ஏழை, நடுத்தரக் குடும்பத்துப் பிள்ளைகளுக்கு இங்கே ஒரு புதிய சிக்கல் காத்திருக்கிறது. பணக்கார வீட்டுப் பிள்ளைகளும் அதிகமாக இங்கே படிப்பதால் பொருளாதார இடைவெளி பூதாகரமாகத் தெரிகிறது. தினந்தோறும் ஒரு புதிய சுடிதாரில் வரும் பணக்கார மாணவிக்கும் வருடம் முழுமைக்கும் ஆறு சுடிதார் கூட இல்லாத ஏழை மாணவிகளுக்கும் பளிச்சென்று வித்தியாசம் தெரிகிறது. பைக்கிலும் காரிலும் வரும் பணக்கார இளைஞனுக்கும் பஸ்ஸிலும் ரயிலிலும் வரும் ஏழை இளைஞனுக்கும் இடைவெளி கூடிவிட்டது.

சத்தில்லாத கோக்கும் பெப்ஸியும் குடித்துக் கல்லூரியைக் கலக்கும் பணக்காரப் பிள்ளைகளுடன் நடுத்தர ஏழைக் குடும்பத்து இளைஞர்கள் ஈடு கொடுக்க முடியாத தாழ்வு மனப்பான்மை தலை எடுக்கிறது.

எவ்வளவு கெட்டாலும் தாங்கிப் பிடிக்கும் பணவசதி உடைய பிள்ளைகளைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. நடுத்தர ஏழை வீட்டு மாணவ-மாணவியர் தாழ்வு மனப்பான்மை கொள்வது தடுக்கப்பட வேண்டும். விதம்விதமாக அவர்களைப் போல் உடை உடுத்த முடியவில்லையே என்று வருந்த வேண்டாம். நாம் படிக்க வந்தோமா? நடிக்க வந்தோமா என்று முடிவு செய்யுங்கள்.

காசைக் கொட்டி காண்டீனைக் கபளீகரம் செய்ய அவர்கள் போல் முடியவில்லையே என்று அழாதீர்கள். செலவு செய்யும் அவர்கள் பெற்றோருக்கு மோசமான பிள்ளைகள். நீங்கள் வருங்கால உங்கள் பிள்ளைகளுக்கு உயர்வான பெற்றோர்கள். புரிந்து கொள்ளுங்கள்.

பணக்காரப் பிள்ளைகளின் பெப்ஸியும் கோக்கும் பலரது ரத்தம். ஏழைப் பிள்ளைகளின் கல்லூரிக் கட்டணமே பெற்றோரின் ரத்தம்.

avatar
Guest
Guest

PostGuest Fri Jan 16, 2009 2:25 pm

பணத்தை வீசியெறியும் ஒருவன் பின்னால் பத்துப் பேர் நிற்கிறார்களே என்று கூச்சப்படாதீர்கள். படிப்பில் கெட்டிக்காரராய் உங்களை நிரூபித்தால் அதே பத்து பேர் உங்கள் பின்னால் சந்தேகம் கேட்டு வருவார்கள். பணக்காரப் பிள்ளைகள் மகாலட்சுமியால் பலரை ஆளுகிறார்கள். ஏழைப் பிள்ளைகள் சரசுவதியால் பலரை ஆளட்டுமே! இந்தத் தெளிவு பிறந்தால் வெற்றி நிச்சயம்.

ராமேஸ்வரத்தில் வீடு வீடாகப் பேப்பர் போட்டுக் கொண்டிருந்தான் ஒரு சிறுவன். இன்று பேப்பர் பேப்பராக அவன் படத்தைப் போட்டுப் பெருமைப்படுத்துகிறது. அந்த உலகப் புகழ் பெற்ற சிறுவன் யார் தெரியுமா? பாரதப் பிரதமரின் அணு விஞ்ஞான ஆலோசகர் டாக்டர் அப்துல் கலாம்.

எனவே ஏழ்மை குறித்து எப்போதும் வெட்கப்படாதீர்கள். அது குறித்து அவமானப் பட வேண்டியது அரசும், சமூகமுமே.

வயலில் வேலை பார்த்தபடியே மண் வெட்டியில் கரித்துண்டால் எழுதி, எழுதிப் படித்த ஒருவன் பின்னாளில் அமெரிக்காவின் தலையெழுத்தையே மாற்றி எழுதினான் தெரியுமா? அவர்தான் ஆபிரஹாம் லிங்கன். ஆபிரஹாம் லிங்கனின் தாடியைப் பற்றித் தெரிந்தால் போதாது. அவர் தன்னம்பிக்கையைப் பற்றித் தெரிய வேண்டாமா?
ஆபிரஹாம் லிங்கனின் தந்தை ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளி. ஆனால் தமது உழைப்பாலும் முயற்சியாலும் அமெரிக்க ஜனாதிபதியானார் லிங்கன்.
அவரை அவமானப்படுத்தும் எண்ணத்துடன் அமெரிக்கப் பாராளுமன்றத்தில் ஒருவர் பேசினார்...

""மிஸ்டர் லிங்கன், உங்களைப் பல பேர் இங்கே பாராட்டிப் பேசினார்கள். அது குறித்து நீங்கள் மகிந்துவிட வேண்டாம். உங்கள் பழமை, வறுமை குறித்து நான் நினைவூட்டவேண்டும். உங்கள் அப்பா தைத்துக் கொடுத்த ஷூ இன்னும் என் காலில் இருக்கிறது. ஞாபகம் இருக்கட்டும்'' என்று லிங்கன் தந்தை செருப்புத் தைப்பவர் என்று குத்திக் காட்டினார் ஒருவர்.

ஆப்ரஹாம் லிங்கனோ பதட்டப்படாமல் எழுந்து, ""நண்பரே, என் தந்தை மறைந்து பலகாலம் ஆயிற்று. ஆனால் அவர் தைத்துக் கொடுத்த ஷூ இன்னும் உங்களிடம் உழைக்கிறது என்றால் அவர் எவ்வளவு தேர்ந்த, சிறந்த தொழிலாளி என்பது தெரிகிறது அல்லவா? அப்படி ஒரு சிறந்த தொழிலாளியின் மகனாகப் பிறந்தது குறித்து நான் பெருமை அடைகிறேன். அது மட்டுமல்ல. இப்போது உம் ஷூ கிழிந்து போனாலும் என்னிடம் கொடுங்கள். நான் அதைச் சரி செய்து தைத்துத் தருவேன். அந்தத் தொழிலையும் நான் நன்கு அறிவேன். எனக்குச் செருப்புத் தைக்கவும் தெரியும். நாடாளவும் தெரியும். ஒரு முக்கியமான விஷயம், இரண்டுமே நன்றாகத் தெரியும்'' என்று ஒரு போடு போட்டார்.

ஏழ்மையோ வறுமையோ வெட்கத்திற்குரியது அல்ல. தாழ்வு மனப்பான்மையைத் தூரம் தள்ளினால் வெற்றி நிச்சயம்

avatar
Guest
Guest

PostGuest Fri Jan 16, 2009 2:25 pm

3. உங்களுக்குள்ளே ஒரு கொலம்பஸ்!

அவன் ஒரு உறுதியான இளைஞன். நிறைய சாதிக்க வேண்டும் என்கிற வெறி அவனுள் இருந்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவன் அப்பா சாதாரணமான நெசவாளி. ஒரு சராசரி அப்பாவின் மனநிலையில் ஆடைகளை நெய்யும் தனது தொழிலில், தன் மகனையும் சிக்க வைக்க அவர் தீர்மானித்தார். அவனும் சிக்கிக் கொண்டான். ஆனால் அவன் கைகள் ஆடைகளை நெசவு செய்தபோதும் மனமோ கனவுகளை நெசவு செய்தது!

என்றாவது, எப்படியாவது, எதையாவது சாதிக்கப் போவதாகக் கற்பனையாக, திசை தெரியாது பேசித் திரியும் வெற்று இளைஞனாக அவன் இல்லை. அவனது எண்ணம் தெளிவாக இருந்தது. தீர்க்கமான திட்டம் தயாராக இருந்தது. கடல் மார்க்கமாக இந்தியாவை அடைய வேண்டும் என்ற கற்பனை, கடலைவிடப் பெரிதாக அவன் வசம் இருந்தது.

ஆம்... அவனது பூமியில் இருந்து கிழக்குத் திசையில் இருக்கும் இந்தியாவுக்குத் தரை மார்க்கம் தவிர, கடல் மார்க்கம் கண்டுபிடிக்கும் வெறி "கப்பல்' கப்பலாக அவனிடம் குவிந்திருந்தது. அந்த இளைஞன்தான் கிறிஸ்டோபர் கொலம்பஸ்.

உலகம் கடலுக்குள் மீனையும் முத்தையும் தேடியபோது புதிய நாட்டையே தேடும் எண்ணம் அந்த இளைஞனுக்கு இருந்தது. உதவத்தான் ஒருவரும் இல்லை! அவனோ அசரவில்லை!

பல நாட்டு அரசர்களை நாடி உதவி கேட்டும், கப்பலும், கப்பல் கப்பலாக உணவும், இதர பொருளும், கப்பலைச் செலுத்தும் மனிதர்களையும் கொடுக்க எந்த அரசும் துணியவில்லை. அந்தத் தோல்விக்கு அவனது மனமோ பணியவில்லை. பத்து வருடக் காலம் தொடர்ந்து போராடிய பின் ஸ்பெயின் நாட்டு அரசி இஸபெல்லாவுக்குக் கொலம்பஸ் மீது நம்பிக்கை பிறந்தது. மூன்று கப்பல்களையும், பயணத்திற்குத் தேவையான உணவுப் பொருட்களையும் இஸபெல்லா தந்து உதவினாள்.
அடுத்த பிரச்சினை ஆரம்பம் ஆயிற்று. கப்பலைச் செலுத்த, கடல் பயணம் மேற்கொள்ளத் தேர்ந்த மாலுமிகள் வேண்டுமே! கொலம்பஸýக்கு உதவ எந்தத் தேர்ந்த மாலுமியும் தயாராக இல்லை. முன்பின் தெரியாத கடல்வழிப்

பயணத்திற்கு உயிரைப் பணயம் வைக்க ஒருவரும் தயாராக இல்லை. அனுபவம் உள்ள மாலுமிகள் மட்டுமல்ல, தின்று கொழுத்த தண்டச் சோறுகள் கூட அவருடன் வரத் தயாராக இல்லை. ஆனாலும் கொலம்பஸ் நம்பிக்கையை விடவில்லை.

சிறைக் கைதிகளை... மரணத்தின் விளிம்பில் நின்ற குற்றவாளிகளை... கொள்ளைக்காரர்களை... அழைத்துப்போக விரும்பினார்... எதிர்பார்த்த மரணம்... அல்லது எதிர்பாராத பயணம்... என்பதில் மரணத்தைவிடப் பயணம் பரவாயில்லை என்று முடிவு செய்த எண்பத்து ஏழு தண்டனையாளர்களை உடன் அழைத்துக் கொண்டு கொலம்பஸின் கப்பல் பயணித்தது. தண்டனை பெற்றவர்களை அழைத்துப்போவது எத்தனை கொடிய தண்டனை? கொலம்பஸ் அசரவில்லை. காற்றையும் கடலையும் கிழித்துக்கொண்டு அவனது கனவுகளின் நனவான கப்பல் கரையில் இருந்து மறைந்தது.

avatar
Guest
Guest

PostGuest Fri Jan 16, 2009 2:26 pm

அடுத்த குழப்பம் ஆரம்பமானது. கிழக்கே இருக்கும் இந்தியாவை அடையப் புறப்பட்ட பயணம் தவறாக மேற்கே நோக்கி நிகழ்ந்துவிட்டது. அந்தத் தவறுதான் ஒரு புதிய சரித்திரத்தைப் படைத்தது. வீரர்களையும் தீரர்களையும் கடவுள் கைவிடுவதில்லை என்பது உண்மையாயிற்று. நம்பிக்கை உள்ளவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்பது நிரூபணமாயிற்று. மேற்கு நோக்கிய தவறான பயணம்தான் அமெரிக்காவைக் கண்டுபிடிக்கக் காரணம் ஆயிற்று. ஏழை நெசவாளியின் கனவு நெசவு - நினைவு நிஜமாய் அமெரிக்கா அவன் வசப்பட்டது.

அடடா... கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்த மாதிரி இனிக் கண்டுபிடிக்க பூமியில் என்ன இருக்கிறது? ஐந்து கண்டங்களையும் அதன் உள் உறங்கும் எண்ணெய், நிலக்கரி, வைரம் உட்பட அனைத்தையும் அமெரிக்காவின் சாட்டிலைட்டுகள் கண்டுபிடித்துவிட்ட பிறகு நாங்கள் கண்டுபிடிக்க இனி என்ன இருக்கிறது? என்று யோசிக்கிறீர்களா? பொறுங்கள்... பொறுங்கள்...

கொலம்பûஸப் போல நீங்கள் அமெரிக்காவைக் கண்டுபிடியுங்கள் என்று சொல்வது என் நோக்கம் அல்ல! உங்களுக்குள்ளே ஒரு கொலம்பஸ் இருக்கிறாரே! அவரை நீங்கள் கண்டுபிடித்துவிட்டீர்களா?

எதையாவது சாதிக்க வேண்டும் என்கிற வெறி உங்களுக்குள் ஒளிந்திருக்கும்... மறைந்திருக்கும்... அந்தக் கொலம்பûஸ நீங்கள் கண்டுபிடிக்க வேண்டாமா? இனிக் கொலம்பஸ் மாதிரி அமெரிக்காவைக் கண்டுபிடிக்க வேண்டாம்... கொலம்பûஸக் கண்டுபிடியுங்கள்... உங்கள் வாழ்வில் வெற்றி நிச்சயம்!

avatar
Guest
Guest

PostGuest Fri Jan 16, 2009 2:27 pm

4. தூங்காதே தம்பி தூங்காதே!


மீன் கண்ணைத் திறந்து கொண்டே தூங்கும் என்று படித்தேன். 'ஆச்சரியமாக இல்லையா?' என்று ஒரு நண்பர் கேட்டார். ""இல்லை... ஆச்சரியமே இல்லை... மனிதர்களில் பல பேரும் விழித்திருக்கும்போதே தூங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள்'' என்றேன் நான். இதுதான் உண்மை.

நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது? எப்படி எப்படி எல்லாம் நாம் ஏமாற்றப்படுகிறோம்? சுரண்டப்படுகிறோம், கொள்ளையடிக்கப்படுகிறோம்... என்ற விழிப்புணர்வே பல பேருக்கு இருப்பதில்லை. ஒவ்வொரு கணமும் விழிப்பாக இருப்பவர்களே உன்னதமானவர்கள். சரியானவர்கள்.

நீங்கள் அப்படியா? நம் அனுமதியில்லாமல் நம்மைச் சிலர் அத்துமீறி ஆக்கிரமிப்பார்கள். நம்மைத் தங்கள் வசதிக்குப் பயன்படுத்திக் கொள்வார்கள். முட்டாளாக்குவார்கள். நாமும் கண்ணைத் திறந்துகொண்டே இவற்றைக் கண்டு கொள்ளாமல் தூங்கி வழிந்தால் என்ன ஆவது?

"பசித்திரு... தனித்திரு... விழித்திரு' என்றார் இராமலிங்கர். இப்படி மூன்றுமாக இருந்தால் மூன்றின் முதலெழுத்தும் ஆன பதவி நமக்கு உண்டு என்பார்கள். விழித்திரு என்ற சொல்லை "உத்திஷ்ட' என்கிறது பகவத்கீதை. "எழு... விழி' என்பதே இந்த அறைகூவலின் அர்த்தம். நமது அறியாமைகள் யாவும் இருளே. தூக்கமே. மரணத்தின் ஒத்திகையே. தாற்காலிகச் சாவுகளே! விழிப்பு ஒன்றே விடியல். வெற்றியின் பூபாளம்.

நான் சமயச் சொற்பொழிவும் செய்வதாலேயே பல சாமியார்கள் என்னை வளைத்துப் போட விரும்புவார்கள். அவர்களது பிரசார பீரங்கியாக இருந்து அவர்களுக்கு இல்லாத பெருமைகளை நான் முழங்கத் தயாரானால் தங்கமும் வெள்ளியும் தருவதாக ஆசை காட்டுவார்கள்.

அவர்கள் மாயாஜால மந்திர வித்தைகளைத் தமது சிஷ்ய கோடிகள் மூலம் எப்படியாவது எனக்கு விவரித்து என்னை மயக்கி என் வாயை வாடகைக்கு வாங்கி அவர்கள் புகழ் வளர்க்கத் திட்டம் தீட்டுவார்கள். நான் குழம்பியதும் இல்லை. மயங்கியதும் இல்லை.

மணிக்கணக்காக அவர்கள் மத்தியில் இருந்தபடி அவர்களை அணுஅணுவாக அளந்து பார்த்திருக்கிறேன். அதே நேரம் பல நீதிபதிகளும், தொழிலதிபர்களும், அரசியல்வாதிகளும் சாமியார்களின் சாம்ராஜ்யத்தில் ஏமாந்து போவதைக் கண்காணித்திருக்கிறேன். எச்சரித்தும் இருக்கிறேன்.

ஒரு சாமியார் பல பேர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே பஞ்சாமிருதத்தில் இருந்து முருகன், விநாயகர் பொம்மைகளை எடுப்பார்... கொடுப்பார் என்று புகழ்ந்து தள்ளினார்கள். அகன்ற பாத்திரத்தில் பழங்களைப் போட்டார். வெல்லம் சேர்த்தார். தேனும் நெய்யும் ஊற்றினார்.

கொத்தாக இருந்த ஒரு கிலோ பேரீச்சம் பழத்தையும் உள்ளே போட்டுப் பிசைந்தார். "இந்தா... இந்தா' என்று எதிரில் இருக்கிற மாஜிஸ்திரேட் கையில் முருகன் சிலையை எடுத்துக் கொடுத்தார். கண்ணில் நீர் வடியக் கன்னத்தில் போட்டபடி மாஜிஸ்திரேட், "முருகா... முருகா' என்று வாங்கிக் கொண்டார்.

avatar
Guest
Guest

PostGuest Fri Jan 16, 2009 2:28 pm

"முருகா... முருகா' என்று என் கண்ணிலும் நீர் வழிந்தது. கொத்துக் கொத்தாகச் சாமியார் உள்ளே போட்ட பேரீச்சம் பழத்தில் பத்து முருகன் பொம்மைகளை வைக்கலாம். இதற்கு அந்தச் சாமியாரையே மாஜிஸ்திரேட் உள்ளே வைக்கலாம். கண்ணைத் திறந்து கொண்டே கனவான்கள் தூங்கும் தூக்க தேசம் இது.
இதில் நாமும் உறங்கிவிட்டால் என்ன ஆவது? கண்ணைத் திற... தோளை நிமிர்த்து... உன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று எப்போதும் விழிப்பாக இரு. மதத்தின் பெயரால் ஏமாற்று வேலைகள். திருட்டுத் தனமாகக் கோழி பிடிக்கிறவன் துண்டை விரித்துக் கொண்டு காத்திருக்கிற மாதிரிக் கட்சிக் கொடியை விரித்தபடி இளைஞர்களை அமுக்கப் பல அரசியல் கோஷ்டிகள் காத்திருக்கின்றன. சிக்கிவிடாதே இளைஞனே... விழிப்பாக இரு.

தாங்கள் உயர உயரப் பறப்பதற்கு இறகுகள் இன்றித் தத்தளிக்கும் சில ஜாதித் தலைவர்கள் உங்கள் தலைகளைக் கத்தரித்து இறக்கைகளாக்க வெறி பிடித்து அலைகிறார்கள். உஷாராக இரு இளைஞனே... கொஞ்சம் தூங்கினால் உன் தலை கத்தரிக்கப்படும்! இளம்பெண்ணே! சினிமாக் கனவுகளில் உன் சேலை நழுவும்போது உன் இளமையை விலை கூறி விற்க ஒரு கூட்டம் அலைகிறது. இளம்பெண்ணே... உறங்கிவிடாதே! விழிப்பாக இரு.

வெளிநாடுகளில் வேலை என்கிற மணி மகுடங்களைக் காட்டி, பரம்பரைச் சேமிப்பையும் கொள்ளையடித்து அநாதைப் பிச்சைக்காரர்களாய் உங்கள் கையில் ஓர் அலுமினியத் தட்டைத் திணிக்கும் அராஜகம் அரங்கேறப் பார்கிறது.

இளமையே... தூங்கி வழியாதே. விழிப்பாக இரு! காலையில் கண் விழித்தால் மட்டும் போதாது. ஒவ்வொரு விஷயத்திலும் விழிப்பாக இரு. அலர்ட், அவேக், அவேர், அரைஸ், அலார்ம் என்று ஆங்கிலத்தில் அடுக்கடுக்காக விழிப்பை உணர்த்தும் மொழிச் சொற்கள் உள்ளன.

ஒவ்வொரு சொல்லின் அர்த்தமாகவும் வாழ்ந்து பார். குழப்பம்கூட ஒரு தூக்கம்தான். மறதி, சோம்பல், தயக்கம் இவைகூட உறக்கத்தின் விதவிதமான புனைபெயர்களே. குழப்பத்தில் தத்தளித்த அர்ஜுனனை நோக்கி பகவத் கீதையில் கண்ணன் சொன்ன வார்த்தைகள்... "உத்திஷ்ட'.
அதையேதான் நானும் சொல்லுகிறேன். தூங்காதே... தம்பி... தூங்காதே. வெற்றி நிச்சயம்!

avatar
Guest
Guest

PostGuest Fri Jan 16, 2009 2:29 pm

5. நேற்றைய சராசரிகள் இன்றைய சக்ரவர்த்திகள்!

நீங்கள் சராசரியா? சாதாரணமானவாரா? சாமானியனா? பிறக்கும்போதே பேரறிவோடும் பெருந்திறனோடும் பிறக்கவில்லையே என்று வருந்துகிறவரா?
அப்படியானால் நான் சொல்லப்போகும் இந்த மனிதர் உங்கள் கட்சி. உங்கள் உறவு. உங்களை மாதிரி!

யார் அவர்?
ஐன்ஸ்டீன்.

யார் அந்த உலகம் புகழும் விஞ்ஞான மேதையா? ஆம் அவரேதான்!
அவர் வாழ்வில் நடந்ததைச் சொல்கிறேன். கவனமாகக் கேளுங்கள்.

ஜெர்மானியராகப் பிறந்தவர் விஞ்ஞான மேதை ஐன்ஸ்டீன். நாஜிகளால் நாடு கடத்தப்பட்டவர். அமெரிக்காவில் அடைக்கலம் புகுந்தவர்.
அமெரிக்காவில் பிரின்ஸ்டன் நகரில் உள்ள ஆராய்ச்சி சாலை அவருக்காக ஒதுக்கப்பட்டது. முதன் முறையாக அந்த ஆராய்ச்சி சாலைக்கு அவரை அழைத்துச் சென்று சுற்றிக்காட்டி அவருக்குத் திருப்திதானா? ஏதும் வசதிக் குறைவுகள் உள்ளனவா என்று அமெரிக்க விஞ்ஞானிகள் விசாரித்தனர்.
தயங்கித் தயங்கி மெதுவான குரலில் ஐன்ஸ்டீன் சொன்னார்.

""இங்கு எல்லாம் வசதியாகவே இருக்கிறது. ஒரே ஒரு குறை'' என்று இழுத்தார்.

""என்ன என்று சொல்லுங்கள். உடனே சரி செய்யப்படும்'' என்றனர் அமெரிக்க விஞ்ஞானிகள்.
அறை ஓரத்தில் இருந்த குப்பைக் கூடையைச் சுட்டிக்காட்டி, ""இது ரொம்பவும் சிறியதாக இருக்கிறதே. கொஞ்சம் பெரிய குப்பைக்கூடை இருந்தால் நல்லது'' என்றார்.
திகைத்துப் போய் ""பெரிய குப்பைக்கூடையா? எதற்கு?'' என்றார்கள்.

ஐன்ஸ்டீன் சொன்னார், ""நான் என்ன மேதாவியா, எல்லா ஆராய்ச்சிகளையும் முதலிலேயே சரியாகச் செய்ய, தப்புத் தப்பாகச் செய்வேன். எழுதி எழுதிப் பார்த்தால் எல்லாம் தப்புத் தப்பாக இருக்கும். உடனே கிழித்து எறிந்து விட்டு மீண்டும் மீண்டும் எழுதுவேன். இந்த முட்டாளுக்கு ஒரு விஷயத்தைச் சரியாகச் செய்ய நிறைய சந்தர்ப்பம் வேண்டும். தவறுகளைப் புதைக்கக் கொஞ்சம் பெரிய குப்பைக் கூடையும் வேண்டும்'' என்றார்.

அவரே அப்படி என்றால்... கொஞ்சம் நிமிர்ந்து உட்காருங்கள்.

சாதாரணங்களில் இருந்துதான் அசாதாரணங்கள் தோன்றுகிறார்கள். நாம் சாதாரணம் என்று சதா ரணமாகி விடாதீர்கள். நாம் ஜெயிக்கப் பிறவந்தவர்கள். சின்னச் சின்னத் தோல்விகள். சின்னச் சின்னச் சறுக்கல்கள்... வீழ்ச்சிகள் ஒரு பெரிய விஷயமே அல்ல. எதை இழந்தாலும் நம்பிக்கையை இழக்காதீர்கள். ஒரு பொன்னுலகம் நமக்காகக் காத்திருக்கிறது.

அது ஒரு நாலு வயதுக் குழந்தை. ஆசை ஆசையாய் அந்தக் குழந்தையை அலங்காரம் செய்துப் பள்ளிக்கூடம் அனுப்பினாள் அதன் அம்மா. அந்தக் குழந்தைக்குக் கொஞ்சம் காது மந்தம். "டாமி' என்பது அதன் செல்லப் பெயர். மனம் நிறையக் கனவுகளுடன் அந்தக் குழந்தையைப் பள்ளிக்கு அனுப்பிய தாயாருக்கு நெஞ்சு நிறைய சோகங்களைப் பரிசளித்தார் ஒரு ஆசிரியை. மூன்று மாதங்கள் பள்ளிக்கூடம் சென்று வந்த அந்தக் குழந்தையின் சட்டைப் பையில் ஒரு காகிதத்தைத் திணித்து அனுப்பியிருந்தார் ஆசிரியை.

avatar
Guest
Guest

PostGuest Fri Jan 16, 2009 2:30 pm

""படிப்பதற்கு இலாயக்கற்ற முட்டாள் உங்கள் டாமி. இவனை இனிமேல் பள்ளிக்கு அனுப்பித் தொந்தரவு செய்ய வேண்டாம்'' என்று அதில் எழுதியிருந்தது.
குழந்தையை வாரி அணைத்துக் கொண்டு அந்தத் தாய் சொன்னாள், ""என் மகன் அறிவாளி. அவன் ஒன்றும் முட்டாள் அல்ல. அவனை நானே படிக்க வைப்பேன். அறிவாளி ஆக்குவேன்'' என்று ஆவேசமாக அறிவித்தாள்.

""படிக்க லாயக்கில்லை'' என்று முத்திரை குத்தப்பட்ட அந்தப் பையனைப் பற்றி அவன் கண்டுபிடிப்புகள் பற்றி இன்றைக்குக்கூடப் பிள்ளைகள் படித்துக்
கொண்டே இருக்கிறார்கள். அந்த முட்டாள் டாமிதான் பல்பை கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசன்.
பள்ளிக்கூடம் போகாத பையனைப் பற்றிப் பள்ளிக்கூடம் பள்ளிக்கூடமாக இன்று பாடம் நடக்கிறது. போதுமா?

நேற்றைய சராசரிகளே. இன்றைய சக்ரவர்த்திகள்!

இன்னொரு முக்கியமான விஷயம். அதே எடிசன் பத்தாயிரம் தடவை தோற்றுப் போன பின்னர்தான் வெடிக்காத பல்பைக் கண்டுபிடித்தார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

தோல்வி ஒரு பெரிய விஷயமே அல்ல நண்பர்களே.

அந்த எடிசனுடைய அறுபத்தி ஏழாவது வயதில் அவருக்கு நேர்ந்த விபத்து தாங்கக்கூடியதே அல்ல. பாடுபட்டு அவர் உருவாக்கிய பல லட்சம் பெறுமான அவரது ஆய்வுக்கூடம், தொழிற்சாலை பற்றி எரிந்தது. இன்ஷூரன்ஸ் தொகையோ அதிகம் வராது. பற்றி எரியும் தொழிற்கூடத்தைப் பார்த்து எடிசன் சொன்னார்.
""நல்லது. என் தவறுகள் யாவும் எரிந்து போயின. என் பிழைகள் யாவும் கருகி விட்டன. நல்லது. இந்த அழிவிலும் ஒரு நன்மை இருக்கிறது. கடவுளுக்கு நன்றி. இனி ஒரு புதிய தொடக்கம் உண்டு.'' என்றார்.

இந்தத் தீ விபத்து நடந்த மூன்றாவது வாரத்தில் அவர் "போனோகிராப்' என்பதனைக் கண்டறிந்தார்.

இறையன்பு அவர்கள் புத்தகத்தில் நான் படித்த ஒரு செய்தி.

ஒரு ஜென் துறவியின் குடிசை பற்றி எரிந்தது. நெருப்பு தன் பல நாக்குகளைச் சுழற்றிச் சுழற்றித் தன் பசி ஆறியது. பலர் அழுதனர். ஆறுதல் சொல்லினர். எரிந்து முடிந்த சாம்பலுக்குள் நின்று கொண்டு கம்பீரமாக வானத்தைப் பார்த்தபடி துறவி சொன்னார், ""ஆஹா நிலவின் ஒளியை தடுத்து மறைத்த கூரை எரிந்துவிட்டது'' என்று கொண்டாடினார்.

எப்போதும் நம்பிக்கையோடு இருங்கள்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக