|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:14 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 6:00 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm
» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
இந்த பெண்களே இப்படித்தான்...!!!
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
இந்த பெண்களே இப்படித்தான்...!!!
இந்த பெண்களே இப்படித்தான்...!!!
பெண்கள் எப்போதும் அதிகம்
பேசிக்கொண்டிருப்பார்கள் என்ற பொதுவான ஒரு பேச்சு/எண்ணம் உண்டு.
பெரும்பாலான பேச்சுக்கள் ஆண்களால் பல நேரம் புரிந்துகொள்ள படுவதில்லை. ஏன்
பிற பெண்களுக்கே புரிவதில்லை. ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு விதம்.
பெண்
ஒரு ஆணை புரிந்து கொண்ட அளவு அந்த பெண்ணை ஆணால் புரிந்துக்கொள்ள
முடிவதில்லை. அதற்கு ஆண் முயலுவதில்லை என்பதே உண்மை. பொறுமையும் இல்லை.
பாரதியை செல்லமா புரிந்துகொண்ட அளவு அவர் புரிந்துகொண்டாரா ? இவ்வளவு ஏன்
நம் தாயை நம் தந்தை புரிந்து கொண்டிருப்பாரா ? நிச்சயமாக இல்லை. முழுவதும்
புரிந்து கொள்ள இயலாது பெண் மனதை.
தன்
மனைவிக்கு எது பிடிக்கும் என்றே தெரியாமல் முப்பது வருட தாம்பத்தியத்தை
கடந்துவிடும் ஆண்கள் பல பேர். ஆனால் ஒரு பெண் ஒரு ஆணுடன் பேசும் அரைமணி
நேரத்தில் அவனது முழு குணத்தையும் எடைபோட்டு விடுவாள். தான் என்ன புரிந்து
கொண்டோம் என்பதை அந்த ஆணிடம் கடைசிவரை தெரிவிக்கவும் விரும்பமாட்டாள்.
ஆணுடனான பெண்ணின் பேச்சுக்கள்
அதிகம்
பேசுவாள் ஆனால் அர்த்தமே இருக்காது என்பார்கள். அந்த அர்த்தம் பிறருக்கு
சீக்கிரம் பிடிபடாது அதுதான் நிஜம். ஒரு பெண் பேசிக்கொண்டே இருக்கும் வரை
பிரச்சனை இல்லை. எந்த இடத்தில் மௌனிக்கிறாளோ அங்கே அவள் மனதில் எதிரில்
இருக்கும் நபரை பற்றிய எதிர்மறை எண்ணங்கள் ஓடிகொண்டிருக்கும். இதை ஆண்கள்
புரிந்துகொள்ளாமல் நம்ம பேச்சை ரசிக்கிறாள் போல என்று தொடர்ந்து
பேசிக்கொண்டே இருப்பார்கள் அந்த ஆணை பார்த்து அங்கே பெண்மை நகைக்கவே
செய்யும்...!
*
உன்னை தவிர வேறு எந்த பெண்ணுடனும் பேசுவது இல்லை என்று சொல்லும் எந்த
ஆணையும் பெண் நம்ப மாட்டாள், அவளுக்கு நன்கு தெரியும் இது சுத்த பொய்
என்று.
*
சுய தம்பட்டம் அடிக்கும் ஆணை எந்த பெண்ணுக்கும் பிடிக்காது. அப்படி பட்ட
ஆண்கூட பேசும் போது பெரும்பாலும் அமைதியாகவே இருப்பாள், ஒரு கட்டத்துக்கு
மேல் இவளும் கூட சேர்ந்து கொண்டு 'ஆமாம் நீங்க ஆஹா, ஓஹோ' என்பாள், நம்மள
புகழ்கிறாள் போல என்று அந்த ஆண் இன்னும் அதிகமா உளற அன்றே அந்த ஆணின்
நட்பிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுவாள்.
*
அதே நேரம் அதிகமா தன்னை புகழ்கிற எந்த ஆணையும் பிடிக்காது. இது தெரியாமல்
'உன் குரல் குயில் மாதிரி இருக்கு, நீ அப்படியாக்கும், இப்படியாக்கும்'
என்று கதை விடுகிற ஆணை தவிர்க்க மாட்டாள் , தொடர்ந்து பேசுவாள் ஆனால்
மனதில் அவன் மேல் மரியாதை சுத்தமா இருக்காது...!
மறைமுகமாக பேசுகிறாள் ஏன் ?
பெண்
பல நேரம் சுத்தி வளைத்து பேசுவாள், நேரடியாக எதையும் சொல்ல மாட்டாள்.
எதிரில் இருக்கும் ஆணுக்கு பொருள் புலப்பட அதிக சிரமப்படும் அளவிற்கு
இருக்கும். ஆனால் பெண்கள் தெளிவாகத்தான் இருப்பார்கள், ஆண்கள் ஊகிக்க
வேண்டும் என்று விரும்புவார்கள். இதை கொஞ்சம் யோசித்து பார்த்தால் பல நல்ல
விசயங்கள் அதில் மறைந்திருப்பதை உணரலாம்.
=>
சில சிக்கலான விஷயத்தை நேரடியாக சொல்லும்போது அதை எதிர்கொள்கிற பக்குவம்
எதிரில் இருக்கும் நபருக்கு இல்லாமல் இருக்கும். விசயத்தையும் சொல்லணும்
அதேநேரம் அவங்க மனதும் பாதிக்கக் கூடாது என்பதற்காக சுத்தி வளைத்து
சொல்வாள். இது போல் எல்லோரிடமும் பேச மாட்டாள் பெரும்பாலும் தனக்கு
பிடித்தவர்களிடம் மட்டும். உறவை வளர்பதற்கு இது உதவும்.
=>
தவிரவும் எதிரில் இருப்பவர் அதிக கோபபடுபவராக இருந்தால் அப்படி
பட்டவர்களிடம் எதை ஒன்றையும் சுத்தி வளைத்து தான் பேசுவாள், இதன் மூலம்
அவர்களின் கோபத்தை தவிர்க்க பார்க்கிறாள் என்பது பொருள்.
=>கருத்து
வேறுபாடு ஏற்படாமல் இருக்கவும் அவர் மீது ஆதிக்கம் செலுத்தாமல், இணைந்து
போக விரும்புவதால் இப்படி பேசுவாள். மொத்தத்தில் அவருடனான சண்டையை
தவிர்க்கவே இது போன்ற பேச்சினை கையாளுகிறாள்.
=>
இத்தகை மறைமுக பேச்சை ஒரு பெண் மற்றொரு பெண்ணிடம் பேசினால் அப்பெண்
புரிந்துகொள்கிறாள், ஆனால் ஆண்களால் இது முடிவதில்லை. ஆண்களுக்கு இந்த
மறைமுக பேச்சை புரிந்துகொள்ளும் ஆற்றல் சுத்தமா இல்லை...! தர்மசங்கடம் என்ன
என்றால் ஆணும் தனது மறைமுக பேச்சை புரிந்துகொள்ளணும் என்று எதிர்பார்த்து
ஏமாந்து போய்விடுகிறாள்...!!
இதில் சில நேரம் சிக்கலும் ஏற்பட்டு விடும்
ஆண்களை பொறுத்தவரை நேரடியாக பேசிவிட்டு அடுத்த வேலையை பார்க்க போய்விடுவார்கள்.
=> பெண்களின் இது போன்ற பேச்சு
அவர்களுக்கு குழப்பத்தை கொடுத்து விடுகிறது, இப்பேச்சில் முதிர்ச்சி
இல்லை,நோக்கமும் இல்லை என்று சலிப்புடன் கூடிய வெறுப்பு ஏற்பட்டு
விடுகிறது. சம்பந்தப்பட்ட பெண்ணின் மீது குறையையும் , குற்றத்தையும்
வைத்துவிடுகின்றனர் ஆண்கள். முடிவில் பெண்ணுடன் கருத்துவேறுபாடுகளை
ஏற்படுத்திவிடுகிறது.
=> தவிரவும் வேலை செய்யும்
இடத்தில் இது போன்ற பேச்சுக்கள் அவ்வளவாக வரவேற்க்கபடுவதில்லை. அங்கே
நேரடியான பதில்கள் தான் வேண்டும். அப்போதுதான் சம்பந்தப்பட்டவர்களிடம்
சரியாக போய் சேரும்.
=> வேலை செய்யும் இடத்தில் ஒரு
ஆணிடம் இப்படி பேசி அது புரியவில்லை என்றாலும் புரிந்ததுபோல் ஆமாம் என்று
சொல்லிவிடுவார்கள். இதை வைத்து பெண் முடிவுக்கு வந்துவிட கூடிய விபரீதம்
இருக்கிறது. அதனால் அங்கே இது போன்ற பேச்சுக்களை பெண்கள் தவிர்ப்பது
நல்லது.
சூப்பர் பவர்
*ஒரு
பிரச்சனையின் முடிவு தவறாக போய்விட்டால் அதையே சிந்தித்துக்கொண்டு
சோர்ந்து விட மாட்டார்கள் அடுத்த ஆல்டர்நேடிவ் எதுவென பார்த்துகொண்டு
போய்கொண்டே இருப்பார்கள்...! கைவசம் எப்பவும் பல ஆல்டர்நேடிவ் ஐடியாக்கள்
இருக்கும் !!
* எத்தகைய சிக்கலான விசயத்தையும்
வெகு சுலபமாக தாண்டி சென்று விடுவார்கள். பிறரின் பார்வையில் பெண் அதையே
நினைத்து புலம்பி கொண்டிருப்பது போல் தோன்றும் உண்மையில் அவள் மனது இதில்
இருந்து எப்படி வெளியில் வருவது என்பதை பற்றி சிந்தித்துகொண்டிருக்கும் இதை
ஆண்கள் அறிய மாட்டார்கள்.
* சமாளிப்பதில் வல்லவர்கள். தவறு
செய்திருந்தாலும் அதை அவ்வளவு சீக்கிரம் ஒத்துகொள்ள மாட்டார்கள். ஆனால்
மனசுக்கு பிடித்தவர்களிடத்தில் மட்டும் விரைவில் தவறை ஒப்பு கொண்டு
சராணாகதி அடைந்துவிடுவார்கள்...!!
* பெண்கள் ரகசியத்தை காப்பாற்ற
தெரியாதவர்கள் என்பார்கள். உண்மைதான் சிறு சிறு அல்ப விஷயத்தை மனதில்
வைத்துகொள்ள மாட்டார்கள் வெளியில் சொல்லி விடுவார்கள் ஆனால் முக்கியமான
அல்லது தங்களை பற்றிய ரகசியத்தை உயிர் போனாலும் வெளிவிட மாட்டார்கள்...!
மிக நெருங்கியவர்களிடம் கூட சொல்லமாட்டார்கள்.
* ஒரு விஷயத்தை மறைக்கணும் என்று ஒரு முறை முடிவு செய்துவிட்டால் இறைவனே முயன்றாலும் தெரிந்து கொள்ள முடியாது.
* பெண்களின் மனம் ஒரு சமயத்தில்
பல விஷயங்களை அசை போடும். ஒவ்வொரு விசயத்திற்கும் பல தீர்வுகளை யோசித்து
வைத்து விடுவார்கள். (என்ன ஒன்று சமயத்தில் இதில் எந்த தீர்வு சரியாக வரும்
என்பதை செலக்ட் பண்ண விட்டுவிடுவார்கள். ஆண்கள் தான் பெண்கள் சொல்லும்
தீர்வுகளை கவனம் எடுத்து கேட்டுக்கொள்ளவேண்டும்.)
சில கேள்விகள் வேறு அர்த்தங்கள் !
* ஆணிடம் ஒன்றை எதிர்பார்த்து
வேறு ஒன்றை பேசுவார்கள்...நீ என்னை விரும்புகிறாயா என்ற கேள்வி கேட்டால்
ஆமாம் இல்லை என்ற நேரடி பதிலுக்காக இருக்காது...அன்பு காட்டுவதில் எங்கையோ
தவறி விட்டாய் என்பதை குறிப்பால் உணர்த்தவே இந்த கேள்வி...!
* கோபமாக இல்லை என்று சொன்னால் ரொம்ப கோபமான இருக்கிறேன், சமாதானபடுத்து என்று அர்த்தம்.
* எனக்கு மனசு சரியில்லை வருத்தமாக இருக்கிறது என்றால் நீயும் வருந்து என்று அர்த்தம்.
*
'எந்த அளவிற்கு என்னை பிடிக்கும்' என்று கேட்டால் அவனுக்கு பிடிக்காத
எதையோ செய்திருக்கிறாள், 'என்னை பிடிக்கும் அல்லவா அட்ஜஸ்ட் பண்ணிக்கோ'
என்று அர்த்தம் !
* 'பாக்கெட்டில் எவ்வளவு பணம் இருக்கிறது' என்று கேட்டால் ஏதோ விலை உயர்ந்த பொருள் வாங்க அடி போடுகிறாள் என்று அர்த்தம் !!
* 'அழகாக இருக்கிறேனா' என்று கேட்டால், தான் மட்டும் தான் உன் கண்ணிற்கு அழகாக தெரியவேண்டும் என்று அர்த்தம்.
இப்படி பெண்ணின் பேச்சிற்கு
பின்னால் இருக்கும் உண்மையான அர்த்தம் புரியாமல் அவஸ்தைப்படும் ஆண்களுக்கு
இப்ப முடிஞ்ச அளவிற்கு ஏதோ சிலவற்றை சொல்லி இருக்கிறேன். ஒரு அகராதி
தொகுக்கும் அளவிற்கு உள்ளதால் இனி வரும் காலங்களில் சொல்லலாம் என
நினைக்கிறேன்...!
நடந்துகோங்க...ஏன்னா பெண் ஒரு புதிர் !!
http://kousalya2010.blogspot.com/2011/11/blog-post_03.html

முஹைதீன்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 3239
வசிப்பிடம்: dubai
சேர்ந்தது: 14/01/2010
மதிப்பீடு: 745

ரேவதி- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949

முஹைதீன்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 3239
வசிப்பிடம்: dubai
சேர்ந்தது: 14/01/2010
மதிப்பீடு: 745

dhilipdsp- தளபதி

- பதிவுகள்: 1420
வசிப்பிடம்: Coimbatore
சேர்ந்தது: 13/09/2011
மதிப்பீடு: 175
Re: இந்த பெண்களே இப்படித்தான்...!!!
என்னமோ தனக்கு தெரிஞ்சதை எல்லாம் இங்கே கொட்டி தீர்த்து இருக்கிறார் நண்பர் பாவம் ரேவதி , அவரை அடிக்காதே விட்டுட்டு
அவருக்கு தெரிஞ்சது அவ்வளவுதான்
அவருக்கு தெரிஞ்சது அவ்வளவுதான்

aathma- மகளிர் அணி

- பதிவுகள்: 1481
வசிப்பிடம்: கனவுலகில்
சேர்ந்தது: 16/11/2010
மதிப்பீடு: 121

பூஜிதா- மகளிர் அணி

- பதிவுகள்: 2776
வசிப்பிடம்: CHENNAI
சேர்ந்தது: 14/04/2010
மதிப்பீடு: 370
Re: இந்த பெண்களே இப்படித்தான்...!!!
என் அனுபவத்துல சொல்ரேன், இதுல எழுதி இருக்கிறது எல்லாம்
பொய் இல்லீங்க, எல்லாம் 100 க்கு 100 உண்மை. அடிபட் எனக்குத் தானே தெரியும்.
பொய் இல்லீங்க, எல்லாம் 100 க்கு 100 உண்மை. அடிபட் எனக்குத் தானே தெரியும்.

மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்

- பதிவுகள்: 1088
வசிப்பிடம்: தாப்பா, மலேசியா
சேர்ந்தது: 14/12/2009
மதிப்பீடு: 173
Re: இந்த பெண்களே இப்படித்தான்...!!!
மாணிக்கம் நடேசன் wrote:என் அனுபவத்துல சொல்ரேன், இதுல எழுதி இருக்கிறது எல்லாம்
பொய் இல்லீங்க, எல்லாம் 100 க்கு 100 உண்மை. அடிபட் எனக்குத் தானே தெரியும்.


ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603
Re: இந்த பெண்களே இப்படித்தான்...!!!
இந்த ஆண்களுக்கு பெண்களை பார்த்தால் எப்படி தோன்றுகிறதோ எப்ப பாரு பெண்களை பற்றியே குறை சொல்லிட்டு இருக்காங்க பெண்கள் உங்களுக்கு கிள்ளு கீரையா? இணையத்திலும் சரி, நடைமுறை வாழ்க்கையிலும் சரி எப்ப பாரு பெண்களை பற்றியே பேச்சு..ஒரு பதிவாவது ஆண்களை பற்றி தவறா இருக்கா...
காதலில் ஏமாந்தாலும் சரி, கல்யாணத்திற்கு பிறகும் சரி எப்ப பாரு இவங்களுக்கு பெண்களை குறை சொல்வதே வேலை
காதலில் ஏமாந்தாலும் சரி, கல்யாணத்திற்கு பிறகும் சரி எப்ப பாரு இவங்களுக்கு பெண்களை குறை சொல்வதே வேலை




ரேவதி- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949
Re: இந்த பெண்களே இப்படித்தான்...!!!
ரேவதி wrote:இந்த ஆண்களுக்கு பெண்களை பார்த்தால் எப்படி தோன்றுகிறதோ எப்ப பாரு பெண்களை பற்றியே குறை சொல்லிட்டு இருக்காங்க பெண்கள் உங்களுக்கு கிள்ளு கீரையா? இணையத்திலும் சரி, நடைமுறை வாழ்க்கையிலும் சரி எப்ப பாரு பெண்களை பற்றியே பேச்சு..ஒரு பதிவாவது ஆண்களை பற்றி தவறா இருக்கா...
காதலில் ஏமாந்தாலும் சரி, கல்யாணத்திற்கு பிறகும் சரி எப்ப பாரு இவங்களுக்கு பெண்களை குறை சொல்வதே வேலை
அடடா ! ரேவதிக்கு என்ன இப்படி ஒரு கோபம் ?
ஆவேச புயலா மாறீட்ட ரேவதி ?

aathma- மகளிர் அணி

- பதிவுகள்: 1481
வசிப்பிடம்: கனவுலகில்
சேர்ந்தது: 16/11/2010
மதிப்பீடு: 121
Re: இந்த பெண்களே இப்படித்தான்...!!!
aathma wrote:ரேவதி wrote:இந்த ஆண்களுக்கு பெண்களை பார்த்தால் எப்படி தோன்றுகிறதோ எப்ப பாரு பெண்களை பற்றியே குறை சொல்லிட்டு இருக்காங்க பெண்கள் உங்களுக்கு கிள்ளு கீரையா? இணையத்திலும் சரி, நடைமுறை வாழ்க்கையிலும் சரி எப்ப பாரு பெண்களை பற்றியே பேச்சு..ஒரு பதிவாவது ஆண்களை பற்றி தவறா இருக்கா...
காதலில் ஏமாந்தாலும் சரி, கல்யாணத்திற்கு பிறகும் சரி எப்ப பாரு இவங்களுக்கு பெண்களை குறை சொல்வதே வேலை
அடடா ! ரேவதிக்கு என்ன இப்படி ஒரு கோபம் ?![]()
ஆவேச புயலா மாறீட்ட ரேவதி ?![]()
அட கோபம் எல்லாம் இல்லப்பா...இருந்தாலும் கொஞ்சம் கோபம்



ரேவதி- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949
Re: இந்த பெண்களே இப்படித்தான்...!!!
அக்கா சாரி

dhilipdsp- தளபதி

- பதிவுகள்: 1420
வசிப்பிடம்: Coimbatore
சேர்ந்தது: 13/09/2011
மதிப்பீடு: 175
Re: இந்த பெண்களே இப்படித்தான்...!!!
ஏன் ரேவதி கோவிக்குற? இந்த பதிவுல பெண்களை தாழ்த்தி எதுவும் சொல்லலை, பெண்களை புரிஞ்சுக்கும் மனப்பக்குவமும், திறமையும், பொறுமையும் ஆணுக்கு இல்லை என்று ஆணைத்தான் தாழ்த்தி சொல்லிருக்காங்க...
Re: இந்த பெண்களே இப்படித்தான்...!!!
ரேவதி wrote:
அட கோபம் எல்லாம் இல்லப்பா...இருந்தாலும் கொஞ்சம் கோபம்![]()

aathma- மகளிர் அணி

- பதிவுகள்: 1481
வசிப்பிடம்: கனவுலகில்
சேர்ந்தது: 16/11/2010
மதிப்பீடு: 121
Re: இந்த பெண்களே இப்படித்தான்...!!!
ரேவதி wrote:இந்த ஆண்களுக்கு பெண்களை பார்த்தால் எப்படி தோன்றுகிறதோ எப்ப பாரு பெண்களை பற்றியே குறை சொல்லிட்டு இருக்காங்க பெண்கள் உங்களுக்கு கிள்ளு கீரையா? இணையத்திலும் சரி, நடைமுறை வாழ்க்கையிலும் சரி எப்ப பாரு பெண்களை பற்றியே பேச்சு..ஒரு பதிவாவது ஆண்களை பற்றி தவறா இருக்கா...
காதலில் ஏமாந்தாலும் சரி, கல்யாணத்திற்கு பிறகும் சரி எப்ப பாரு இவங்களுக்கு பெண்களை குறை சொல்வதே வேலை
குற்றமுள்ள நெஞ்சே குறு குறுக்கும்

முகம்மது ஃபரீத்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 1956
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 07/07/2011
மதிப்பீடு: 388
Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum









