புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஞாபக சக்தியை அதிகரிக்க எளிய வழி! Poll_c10ஞாபக சக்தியை அதிகரிக்க எளிய வழி! Poll_m10ஞாபக சக்தியை அதிகரிக்க எளிய வழி! Poll_c10 
11 Posts - 50%
heezulia
ஞாபக சக்தியை அதிகரிக்க எளிய வழி! Poll_c10ஞாபக சக்தியை அதிகரிக்க எளிய வழி! Poll_m10ஞாபக சக்தியை அதிகரிக்க எளிய வழி! Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஞாபக சக்தியை அதிகரிக்க எளிய வழி! Poll_c10ஞாபக சக்தியை அதிகரிக்க எளிய வழி! Poll_m10ஞாபக சக்தியை அதிகரிக்க எளிய வழி! Poll_c10 
53 Posts - 60%
heezulia
ஞாபக சக்தியை அதிகரிக்க எளிய வழி! Poll_c10ஞாபக சக்தியை அதிகரிக்க எளிய வழி! Poll_m10ஞாபக சக்தியை அதிகரிக்க எளிய வழி! Poll_c10 
32 Posts - 36%
mohamed nizamudeen
ஞாபக சக்தியை அதிகரிக்க எளிய வழி! Poll_c10ஞாபக சக்தியை அதிகரிக்க எளிய வழி! Poll_m10ஞாபக சக்தியை அதிகரிக்க எளிய வழி! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஞாபக சக்தியை அதிகரிக்க எளிய வழி! Poll_c10ஞாபக சக்தியை அதிகரிக்க எளிய வழி! Poll_m10ஞாபக சக்தியை அதிகரிக்க எளிய வழி! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஞாபக சக்தியை அதிகரிக்க எளிய வழி!


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Nov 25, 2011 5:34 pm


ஞாபக சக்தியை அதிகரிக்க எளிய வழி!



எத்தனையோ
ஞானிகள், மகான்கள் ஞாபக சக்தியின் உச்சமாக விளங்கியிருக்கிறார்கள்.. அதுபோல
சாதாரண மக்களும் ஞாபக சக்தியை அதிகரிக்கலாம்.. முயற்சியும் பயிற்சியும்
இருந்தால் நீங்களும் ஒரு ஞானிதான் என்பதை விளக்கும் கட்டுரை இது..


பாஸ்டன்
நகரத்தில் இருக்கும் அந்தப் பெண்கள் பள்ளிக்கு அன்றைய தினம் மிகப் புகழ்
பெற்ற விஞ்ஞானி ஒருவர் சிறப்பு விருந்தினராக அழைக்கப் பட்டிருந்தார்.
மாணவிகளும், ஆசிரியர்களும், ஏன் பள்ளியின் முதல்வரும்கூட அவருடைய உரையை
கேட்பதற்காக மிக ஆவலாக அவரின் வருகையை எதிர் பார்த்திருந்தனர்.



நேரம் கடந்துகொண்டே இருந்தது.
ஆனால், விஞ்ஞானி வருவதற்கான எந்தத் தடயமும் இல்லை. நிகழ்ச்சியை ஏற்பாடு
செய்த பள்ளி நிர்வாகிகள் கைகளை பிசைந்தபடி மிகவும் பதட்டமாக காணப்பட்டனர்.
என்ன செய்யலாம் என ஆலோசனை செய்தனர். நேரிலேயே போய் அவரை கையோடு அழைத்து
வந்துவிடலாம் என முடிவு செய்து புறப்பட்டு, அவருடைய வீட்டிற்குச் சென்றனர்.


அங்கோ அவர்களுக்கு அதிர்ச்சிதான்
காத்திருந்தது. விஞ்ஞானி வெளியில் எங்கோ சென்று விட்டாராம். அங்கே இங்கே
என்று தேடி கடைசியில் அவருடைய நண்பர் வீட்டிற்கு சென்றுள்ளார் என்ற
தகவலையறிந்து நண்பர் வீட்டை நோக்கி ஓடினர்.


அங்கே மொட்டை மாடியில் ஏதோ
ஆராய்ச்சிப் பணியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டிருந்தார் விஞ்ஞானி. அழுக்கு
உடையோடும், கலைந்த தலையோடும் இருந்தவரிடம் சென்ற பள்ளி நிர்வாகிகள்,
''அய்யா, நீங்கள் இன்றைக்கு எங்கள் பள்ளியின் சிறப்பு விருந்தினராக வந்து
உரையாற்ற ஒப்புக்கொண்டிருக்கிறீர்கள்'' என்று கூறினர்.


''அடடா...! மறந்தே போய் விட்டேனே! சரி, சரி, புறப்படுங்கள் போகலாம்''என்று அவர்களுட னேயே புறப்பட்டு வந்துவிட்டார் அந்த விஞ்ஞானி.
ஆசிரியர்களும்
மாணவிகளும், தனக்காக காத்திருப்பதைக் கண்ட விஞ்ஞானிக்கு உற்சாகம்
தொற்றிக்கொள்ள, மின்னாற்றல் பற்றியும், மின்சாரப் பொருட்களைப் பற்றியும்
நயாகரா அருவி போல், கேட்போர் வியக்கும் வண்ணம் சொற்பொழிவாற்றி முடித்தார்.


''கொஞ்சம் நல்ல உடையாக அணிந்து,
தலை வாரிக்கொண்டு வந்திருக்கக்கூடாதா?'' என்று ஒருவர் கேட்டபோது, ''நான்
இங்கு வரவேண்டும் என்று எனக்கு நினைவுபடுத்தியவர்கள் இதை நினைவுபடுத்தவே
இல்லையே'' என்று சிரித்த படியே பதிலளித்த அந்த விஞ்ஞானி, தாமஸ் ஆல்வா
எடிசன்.
எடிசனுக்கு மற்ற விஷயங்கள் நினைவில்லாமல் போவதற்கு அழுத்தமான காரணங்கள் இருந்தன.


ஆனால், விஞ்ஞான ஆராய்ச்சியில் ஈடுபட்டு மற்றவற்றை மறந்து போகுமளவிற்கு காரணம் எதுவும் இல்லாமலே நமக்கு மறதி ஏற்படுகிறதே ஏன்?


நம்முடைய செயல்கள் வேகமாகவும்,
விவேக மாகவும் நடைபெறுவதற்கு நம் நினைவாற்றல் சிறப்பாக இயங்கிக்
கொண்டிருப்பது அவசியமல்லவா. இன்றைக்கு நம்மில் பலருக்கும் தலையாய
பிரச்னையாய் இருப்பது ஞாபக மறதி தானே!
தலையசைப்போ,
தலையாட்டுதலோ,
தலை கவிழ்தலோ,
தலை நிமிர்தலோ,
அனைத்தும்
நம் தலைக்குள் பாதுகாப்பாய் இருக்கும் மூளையிலும் அதன் சிக்கலான கட்டுப்
பாட்டில் இருக்கும் நிகழ்வுப்பதிவுகளிலும்தான் இருக்கின்றன.


ஒரு நாளில் ஓரிருமுறையாவது நாம்
சொல்கின்ற அல்லது கேட்க நேருகின்ற வார்த்தைகள், ''ஞாபகமே இல்லையே'',
''அய்யோ மறந்துவிட்டேனே'' என்பதைதான். ஞாபகமறதி காரணமாய் மிக முக்கியமான
வேலைகள்கூட நின்று விடுகின்றன.


நமக்கு ஆகவேண்டிய வேலை தொடர்பாக
மற்றவர்கள் ஞாபகமின்மையை காரணம் காட்டினால் நமக்கு அவர்கள்மீது கோபம்
வருகிறது. எரிச்சல் ஏற்படுகின்றது. வேலையின் தன்மையைப் பொறுத்து ஏற்படும்
இழப்புகளைப் பற்றி கணக்குப்போட்டு சம்பந்தப்பட்டவரிடம் சண்டைகூட போட
நேரிடுகிறது.


அதே நேரத்தில் பிறர் வேலை
தொடர்பாகவோ அல்லது நம்முடைய வேலை சார்ந்தோ நாமே செய்ய வேண்டிய பணிகளை நாம்
மறந்துவிடும்போது, அதேயளவிற்கு கோபத்தை சந்திப்பதற்கு நாம் தயாராய்
இருப்பதில்லை. பிறருடைய ஞாபகமறதி காரணமாய் இழப்பு நமக்கு ஏற்படும்போது நாம்
பாதிக்கப்படுவதை எந்த அளவிற்கு உணர்கிறோமோ, அதேயளவு நம்மால் ஏற்படும்
போதும் உணரவேண்டும்தானே!
சரி.


இந்த ஞாபகமறதி தொல்லையிலிருந்து விடுபடுவது எவ்வாறு?


நினைவாற்றல் என்பது என்ன?


நினைவாற்றலை வளர்த்துக்கொள்ளும் நுட்பங்கள் யாவை?


நினைவாற்றலை வளர்க்கும் ஆரோக்கியமான பழக்கங்கள் எவை?


வயது காரணமாய் நினைவாற்றல் குறைவதை தடுப்பதெப்படி? என்பதைப் பார்ப்போம்.


ஞாபகம் அல்லது நினைவாற்றல் என்பது:


ஒவ்வொரு நொடியும் நம் முன்
நிகழ்கின்ற, நாம் பார்க்கின்ற காட்சிகள், நாம் கேட்கின்ற செய்திகள்,
சொற்கள், சத்தங்கள், இசை, நாம் உணரும் வாசம், அனுபவிக்கும் இன்பம்,
துன்பம், பயம், வலி, அதிர்ச்சி, அழுகை, சிரிப்பு, சுவை என ஐம்புலன்களாலும்
நாம் உணரும் ஒவ்வொன் றையும் நம் மூளை அந்தந்த நிலையில் நாம் என்ன
உணர்ந்தோமோ, அவற்றையும் அப்போது நம்முடன் இருந்தவர்கள், அவர்களின்
எதிர்வினை என அனைத்தையும் பதிவு செய்து வைத்துக் கொள்கிறது.
இப்படி
பதிவானவை தொடர்பாக மீண்டும் அதே போன்ற சூழல்கள் ஏற்படும்போது நமக்கு
இதற்கு முன்னர் ஏற்பட்ட அனுபவங்கள் தானாகவே நினைவுக்கு வருவதும், நம்முடைய
அன்றாடப் பணிகள் மற்றும் எதிர்காலப் பணிகள் தொடர்பாக நாம் திட்டமிட்டு
வைத்துள்ள செயல்கள் சரியான நேரத்தில் நினைவுக்கு வருவதையும்தான்,
=நினைவாற்றல்+ என்கிறோம்.


தேவைப்படும் நேரத்தில்
தேவைப்படும் செய்திகள் இயல்பாக நினைவுக்கு வந்துவிட்டால் நம் மூளை
சுறுசுறுப்பாக, ஆரோக்கியமாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதையும் நம்
நினைவாற்றல் சிறப்பாக உள்ளதென்பதையும் தெரிந்து கொள்ளலாம். மாறாக, ஏற்கனவே
உணர்ந்ததும், திட்டமிட்டு வைத்ததும் நினைவுக்கு வராமல் உள்ளதென்றால்,
நம்முடைய மூளைக்கு கடுமையான பணிகளை நாம் ஏற்படுத்துகின்றோம் (அல்லது
சோம்பல்தன்மையிலேயே நாம் இருக்கின்றோம்) என்பதையும் உணரவேண்டும்.


ஞாபகங்கள் என்பது,
ஒவ்வொன்றிற்கும் நாம் தரும் முக்கியத்துவத்தைப்பொறுத்து மிகக் குறுகிய
காலத்திற்கு நினைவில் இருப்பவை, நீண்ட காலம் நினைவில் இருப்பவை என மூளை
வகைப் படுத்தி வைத்துக்கொள்கிறது.


நினைவாற்றலை வளர்த்துக்கொள்ளும் நுட்பங்கள்:


1. உடற்பயிற்சி:


உடற்பயிற்சி என்பது உடல்
வலிமைக்கும், ஆரோக்கியத்திற்கும் மட்டுமல்ல, மூளையை சுறுசுறுப்பாக இயங்க
வைக்கவும், நினைவாற்றல் பெருக்கத்திற்கும் மிக மிக அவசியமாகும். எனவே
தினமும் குறைந்தது 15 முதல் 20 நிமிடங்களை யாவது உடற்பயிற்சிக்கு
கண்டிப்பாக ஒதுக்க வேண்டும்.


ஒன்றை நாம் தெளிவாக அறிந்து
கொள்ளாதபோது நம்மால் அதனை நினைவுக்கு கொண்டு வருதல் இயலாது. மிகச் சிறிய
விஷயம் ஒன்றை பதிவு செய்ய நம்முடைய மூளை குறைந்தது எட்டு நொடிகளை எடுத்துக்
கொள்கிறது. எனவே, வலிந்து நினைவில் செய்திகளை பதிக்கும்போது அமைதியான
இடையூறில்லாத சூழலை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.


2. தையல்காரர் அணுகுமுறை:


மேலோட்டமாய்
தகவலைக் கேட்டுக் கொள்வது, போகின்ற போக்கில் பார்த்து வைப்பது என
நுனிப்புல் மேய்வது போல் இல்லாமல் ஒரு தையல்காரர் எவ்வாறு அளவுகளை சரியாகக்
குறித்துக் கொள்கிறாரோ அவ்வாறு தகவல்களைப் பதிவு செய்து கொள்வது
என்றைக்குமே மறந்துபோகாது.


3. பல்வேறு புலன்களை பயன்படுத்துதல்:


கண்டிப்பாக
நினைவில் வைக்கவேண்டிய விஷயங்களை வாய்விட்டு சொல்லிப்பார்த்தல் நல்லது.
படித்தறியும்போதுகூட பார்வையிலேயே படிப்பதைக் காட்டிலும் வாய்விட்டு
(முடிந்தால் சத்தமாக) படித்தலும், சற்று முயற்சி செய்து ரிதம் போல்
வரிசைப்படுத்திக்கொள்ளுதலும் சிறந்தது. கேட்பதன் மூலமாக அறிந்து
கொள்ளும்போது தொடர்புடைய நிறம், சொற்கள், வாசம், தன்மையோடு பதிவுசெய்து
கொள்வதும் நல்ல பலனைத் தரும்.


4. முன்பே அறிந்தவற்றோடு தொடர்புபடுத்தி வைத்தல்:


புதிய தகவல்கள் முன்பே அறிந்தவற்றோடு தொடர்புடையது எனும்போது அவற்றை நினைவுபடுத்திப் பார்த்து இணைத்து பதிவு செய்யலாம்.


5. படம் வரைந்து வைத்துக்கொள்ளுதல்:


எழுதிவைக்கும் தகவல்களோடு
அதற்குரிய படங்களையும் (கோட்டுப் படம் போல்) சின்னச் சின்னதாய்
பக்கத்திலேயே வரைந்துவைத்து எழுதிக் கொண்டால் நினைவுபடுத்திப் பார்க்கும்
போது தன் கருத்துக்களை தன் நினைவுக்கும், பிறருக்கு தகவலாகவும் மனிதன்
பதிவு செய்துள்ளான். இது இன்றைக்கும் சிறந்த முறையாகும்.

நன்றி: நமதுநம்பிக்கை



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக