புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm

» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm

» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சுருட்டப்பள்ளி கோவில் Poll_c10சுருட்டப்பள்ளி கோவில் Poll_m10சுருட்டப்பள்ளி கோவில் Poll_c10 
55 Posts - 51%
ayyasamy ram
சுருட்டப்பள்ளி கோவில் Poll_c10சுருட்டப்பள்ளி கோவில் Poll_m10சுருட்டப்பள்ளி கோவில் Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
சுருட்டப்பள்ளி கோவில் Poll_c10சுருட்டப்பள்ளி கோவில் Poll_m10சுருட்டப்பள்ளி கோவில் Poll_c10 
4 Posts - 4%
prajai
சுருட்டப்பள்ளி கோவில் Poll_c10சுருட்டப்பள்ளி கோவில் Poll_m10சுருட்டப்பள்ளி கோவில் Poll_c10 
3 Posts - 3%
லதா மெளர்யா
சுருட்டப்பள்ளி கோவில் Poll_c10சுருட்டப்பள்ளி கோவில் Poll_m10சுருட்டப்பள்ளி கோவில் Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
சுருட்டப்பள்ளி கோவில் Poll_c10சுருட்டப்பள்ளி கோவில் Poll_m10சுருட்டப்பள்ளி கோவில் Poll_c10 
3 Posts - 3%
manikavi
சுருட்டப்பள்ளி கோவில் Poll_c10சுருட்டப்பள்ளி கோவில் Poll_m10சுருட்டப்பள்ளி கோவில் Poll_c10 
2 Posts - 2%
Ratha Vetrivel
சுருட்டப்பள்ளி கோவில் Poll_c10சுருட்டப்பள்ளி கோவில் Poll_m10சுருட்டப்பள்ளி கோவில் Poll_c10 
2 Posts - 2%
Baarushree
சுருட்டப்பள்ளி கோவில் Poll_c10சுருட்டப்பள்ளி கோவில் Poll_m10சுருட்டப்பள்ளி கோவில் Poll_c10 
1 Post - 1%
Rutu
சுருட்டப்பள்ளி கோவில் Poll_c10சுருட்டப்பள்ளி கோவில் Poll_m10சுருட்டப்பள்ளி கோவில் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுருட்டப்பள்ளி கோவில் Poll_c10சுருட்டப்பள்ளி கோவில் Poll_m10சுருட்டப்பள்ளி கோவில் Poll_c10 
216 Posts - 42%
heezulia
சுருட்டப்பள்ளி கோவில் Poll_c10சுருட்டப்பள்ளி கோவில் Poll_m10சுருட்டப்பள்ளி கோவில் Poll_c10 
196 Posts - 38%
Dr.S.Soundarapandian
சுருட்டப்பள்ளி கோவில் Poll_c10சுருட்டப்பள்ளி கோவில் Poll_m10சுருட்டப்பள்ளி கோவில் Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
சுருட்டப்பள்ளி கோவில் Poll_c10சுருட்டப்பள்ளி கோவில் Poll_m10சுருட்டப்பள்ளி கோவில் Poll_c10 
18 Posts - 3%
sugumaran
சுருட்டப்பள்ளி கோவில் Poll_c10சுருட்டப்பள்ளி கோவில் Poll_m10சுருட்டப்பள்ளி கோவில் Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
சுருட்டப்பள்ளி கோவில் Poll_c10சுருட்டப்பள்ளி கோவில் Poll_m10சுருட்டப்பள்ளி கோவில் Poll_c10 
6 Posts - 1%
manikavi
சுருட்டப்பள்ளி கோவில் Poll_c10சுருட்டப்பள்ளி கோவில் Poll_m10சுருட்டப்பள்ளி கோவில் Poll_c10 
4 Posts - 1%
prajai
சுருட்டப்பள்ளி கோவில் Poll_c10சுருட்டப்பள்ளி கோவில் Poll_m10சுருட்டப்பள்ளி கோவில் Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
சுருட்டப்பள்ளி கோவில் Poll_c10சுருட்டப்பள்ளி கோவில் Poll_m10சுருட்டப்பள்ளி கோவில் Poll_c10 
3 Posts - 1%
லதா மெளர்யா
சுருட்டப்பள்ளி கோவில் Poll_c10சுருட்டப்பள்ளி கோவில் Poll_m10சுருட்டப்பள்ளி கோவில் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுருட்டப்பள்ளி கோவில்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 18, 2013 10:31 pm

http://mmimages.maalaimalar.com/Articles/2013/Mar/424e9af5-d162-4604-9d40-ceb74c1dbba2_S_secvpf.gif

ஸ்தல வரலாறு

சர்வேஸ்வரன் சயனித்த ஸ்ரீ பள்ளிகொண்டீஸ்வரராக, திருக்கோல காட்சி தரும் புண்ணியம் பெற்ற ஸ்தலம் தான் சுருட்டப்பள்ளி. விஷத்தை சாப்பிட்ட பகவான் சுருண்டு மயக்க நிலையில் படுத்ததால் தான் சுருட்டப்பள்ளி என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது. தேவர்கள் வாசம் செய்யும் ஊர் ஆகையால் சுருளு பள்ளி, சுருளு: தேவர்கள் பள்ளி, ஊர் என பெயர் பெற்றதாக கூறலாம். மகாவிஷ்ணு நிற்பார்-இருப்பார்-கிடப்பார் என்பதை பல தலங்களில் பார்ப்போம்.

அவர் சயன திருக்கோலத்தை இருபத்தி ஏழு புண்ணிய தலங்களில் காணலாம். ஆனால் சயனித்த கோலத்தில், சிவபெருமான் பள்ளி கொண்ட ஈஸ்வரராக காட்சி அளிப்பது உலகத்திலேயே சுருட்டப்பள்ளி ஷேத்திரத்தில்தான். கைலாயத்தில் கூட இக்காட்சியை காண தேவர்கள் பரமனை தரிசிக்க இக்கோவிலுக்கு ஓடோடி வருகின்றனர்.

தர்மத்தின் ரூபமான நத்தி தேவர் அவர்களை எதிர்நோக்கி அவசரப்படாதீர்கள் பரமசிவன் மயக்கத்தில் இருக்கிறார். மயக்கம் தெளிந்ததும் நீங்கள் தரிசிக்கலாம் என்று தடுத்து நிறுத்துகிறார். சிறிது நேரத்திற்குப் பின் மயக்கம் தெளிந்தவுடன் தேவர்களை அழைத்து சிவதரிசனம் செய்ய அனுமதிக்கிறார்.

மகாவிஷ்ணு, பிரம்மதேவர், தேவாதி தேவர்கள், சந்திரன், சூர்யர், நாரதர், தும்புரு, குபேரன், சப்த ரிஷிக்கள் சேர்ந்து தரிசித்து பரமனை வணங்குகிறார்கள். எல்லோரையும் பார்த்த சிவபெருமான் ஆனந்தத்துடன் அன்று மாலை கூத்தாடுகிறார். அதுதான் ஆனந்த தாண்டவம்.

இப்படி தரிசித்த அனைவரையும் ஆசீர்வதித்த நன்நாள் கிருஷ்ணபட்ச திரியோதசி ஸ்திரவாரம் (சனிக்கிழமை) இதுதான் மகாபிரதோஷம். அனைத்து சிவாலயங்களிலும் பிரதோஷம் கொண்டாடுவதற்கு இதுவே காரணம். (ஆதாரம் ஸ்கந்த புராணம் உத்திரகாண்ட ரகசியம்).




சுருட்டப்பள்ளி கோவில் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 18, 2013 10:32 pm


பள்ளிகொண்டீஸ்வரரின் வரலாறு

துர்வாச முனிவரின் சாபத்தால் இந்திரனுக்கு பதவி பறிபோகிறது. அப்பதவியை பெற அமுதத்தை உண்டு பலம் பெற வேண்டும். அதற்கு பாற்கடலை கடைந்து அதைப் பெறுமாறு தேவகுரு பிரகஸ்பதி ஆணையிடுகிறார். தேவர்களும், அசுரர்களும் மந்தரகிரியை மத்தாகவும், வாசுகி என்ற பாம்மை கயிறாகவும், கொண்டு பாற்கடலை கடைந்தனர். பல நாட்கள், கயிறாக விளங்கிய வாசுகி பாம்பு கொடிய வியத்தை கக்க...

அந்த விஷம் கடலோடு கலந்து காலகூட விஷமாக மாறி தேவர்களையும், அசுரர்களையும் பயங்கரமாக துரத்தியது. பயந்து நடுங்கிய தேவர்களும், அசுரர்களும் தங்களை காக்க வேண்டி கைலாச நாதரான ஸ்ரீபரமேஸ்வரனின் திருவடிகளில் வீழ்ந்து பணிந்து தஞ்சம் அடைந்தனர். பரமேஸ்வரரின் ஆணைப்படி நந்தி தேவரும், சுந்தரரரும் எடுத்து வர ஒரு நாவல் பழம் போல அந்த காலகூட விஷத்தை உருட்டி ஈசன் உட்கொண்டார்.

பரமேஸ்வரன் அதை உட்கொண்டால் அவன் உள்ளே இருக்கும் பல கோடி உயிர்களும் அழிந்து விடும் என்பதை உணர்ந்த அன்னை பராசக்தி தன் தளிர்க் கரங்களினால் ஈசனின் கண்டத்தைப் பற்றி விஷத்தை அங்கேயே தங்கச் செய்கிறாள். விஷம் உண்ட கழுத்தை உடைய ஈசன் திருநீலகண்டரானார்.

நீலகண்டரான பரமேஸ்வரன் விஷத்தை உண்டதால் ஏற்பட்ட சிரமத்தைத் தணித்து கொள்வதற்காக, சற்று சயனிக்க விரும்பி அமைதியான இடத்தை தேடி சுருட்டப்பள்ளி என்னும் ஷேத்திரத்தை அடைந்தார். அமைதி சூழ்ந்த, மரங்கள் நிறைந்த, புங்கை மரங்களும், பூஞ்செடிகளும் நிறைந்த சுருட்டப்பள்ளி என்னும் ஷேத்திரத்தை தேர்வு செய்து அன்னை சர்வ மங்களம்பிகையின் மடியில் தலை வைத்து படுத்து களைப்பாடுகிறார்.




சுருட்டப்பள்ளி கோவில் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 18, 2013 10:33 pm


ஆலய அமைப்பு

சுருட்டப்பள்ளி கோவிலில் கிழக்கு நோக்கிய சிறிய கோபுரம் கட்டப்பட்டுள்ளது. மூன்று நிலைகளுடன் ஐந்து கலசங்களுடன் ஆலய நுழைவு வாயில் அமைந்துள்ளது. ஐந்து கலசங்களும் இறைவனின் திருமந்திரமான ஐந்து எழுத்துக்களை நமக்கு நினைவுபடுத்துகின்றன. உள்ளே நுழைந்ததும் எதிரில் முதன் முதலில் நாம் காண்பது அம்பிகையின் சன்னதி.

இங்கு ஈஸ்வரனும், அம்பிகையும், ஒரே கோவிலில் தனித்தனியான சன்னதிகளில் கிழக்கு நோக்கிய வண்ணம் அமைந்துள்ளனர். பள்ளிகொண்டீஸ்வரரின் சன்னதி தனித்த திருக்கோவிலாக அமைந்துள்ளது. அம்பிகையின் சன்னதிக்கு முன் முகப்பு மண்டபத்தில் குபேரனின் செல்வங்களான சங்க நிதியும், பதும நிதியும் துவார பாலகர்களாக, திரு உருவங்களை காணலாம்.

இத்தலத்திற்கு வந்து இறைவன், இறைவியை வணங்குபவர்களுக்கு அம்மையப்பர், அன்னமும், சொர்ணமும் அளித்து வாழ்வை வளமாக்குவார் என்பது இதன் தத்துவம். அம்பிகை இறைவனுக்கு வலது புறத்தில் கோவில் கொண்டுள்ளது தனி சிறப்பு அநேக கோவில்கள் அம்பிகை இறைவனுக்கு இடது புறத்தில் கோவில் கொண்டுள்ளதை காணலாம். வலது புறத்தில் அம்மன் கோவில் கொண்டுள்ளதால் இத்தலத்தை திருக்கல்யாண ஷேத்திரம் என கூறுவர்.

திருமணம் ஆகாத பெண்கள் இங்கு வந்து வணங்கினால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது இதன் பொருள். அம்பிகையின் கருவறைக்குள் கேட்டதை எல்லாம் வாரிக் கொடுக்கக்கூடிய, நினைத்ததை எல்லாம் நடத்தி வைக்க கூடிய காமதேனுவும், கற்பக விருட்சமும் தன்னகத்தே கொண்டு அருள்பாலிக்கிறார்.




சுருட்டப்பள்ளி கோவில் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 18, 2013 10:34 pm


இரண்டாவது ராமேஸ்வரம்

சுருட்டப்பள்ளி கோவிலில் வால்மீகேஸ்வரரின் சன்னதிக்கு நேர் எதிரே அமைந்துள்ளது ஸ்ரீராம லிங்கேஸ்வரரின் சன்னதி. மிகப் பெரிய மூர்த்தம். இந்த சிலை நர்மதையில் இருந்து கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த மூர்த்தி ராமபிரானால், இங்கு தங்கி சீதை, லட்சுமணன், பரதன், சத்ருக்னன், அனுஷன் இவர்களுடன் இந்த ராமலிங்கேஸ்வரை பிரதிஷ்டை செய்து பூஜை செய்ததாக கூறப்படுகிறது. இந்த சன்னதிக்குள் ராமர், லட்சுமணன், சீதை, பரதன், சத்ருக்னன், அனுமன் முதலியவர்கள் இருப்பதை காணலாம். இது இரண்டாவது ராமேஸ்வரம் (அபர ராமேஸ்வரம்) என்று வழங்கப்படுகிறது.

எல்லாம் சக்திமயம்....... சுருட்டப்பள்ளி கோவிலில் அம்பிகை சன்னதிக்கு வலதுபுறத்தில் சிவப்பு கல் கணபதியை காணலாம். உருவம் கிடையாது. சோனபத்திர விநாயகரை சாளக்கிராம விநாயகர் என்றும் கூறுவர். சன்னதிக்கு இடது புறத்தில் வள்ளி தெய்வானை சகிதம் சுப்பிரமணியர் காட்சி அளிக்கிறார்.

கருவறையில் அம்பிகை, ஒயிலாக நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். அம்பிகை மரகதாம்பிகை என்று அழைக்கப்படுகிறாள். மரகதாம்பிகையை வணங்கி விட்டு பிரகாரத்தை வலம் வரலாம். அம்பிகை அங்கு மகா சக்தி வாய்ந்தவள். அன்னை ஸ்ரீசக்திநாயகி என்னும் உண்மைக்கேற்ப கருவறையை சுற்றிலும், மகாலட்சுமி, ஞானசரஸ்வதி, மாதங்கி, அன்னபூரணி ஆகிய சக்திகள் சூழ்ந்து இருக்கின்றனர்.

மரகதாம்பிகையின் தெற்கு சுவர் மாடத்தில் ராஜராஜேஸ்வரியின் நின்ற திருக்கோலம் உள்ளது. இந்த காட்சியைக் காண்பது மிக அரிது. அடுத்து `ஏகபாத திருமூர்த்தியின்' அற்புத சிற்பத்தை காணலாம். இது போன்ற திருஉருவங்கள் திருவொற்றியூர், திருவானைக்கா கோவில்களிலும் உள்ளன. இச்சிற்பம் சிவவிஷ்ணு பேதமற்ற உண்மையை விளக்குகிறது.

மூல கணபதியான சித்தி கணபதியையும், வடமேற்கு பிரகாரத்தில் உள்ள ஜூரஹர மூர்த்தி, கபால ஹஸ்த மகாவிஷ்ணு ஆகியோர்களை காணலாம். வடமேற்கில் சுப்பிரமணியர் சன்னதி உள்ளது. அடுத்துள்ள ராஜா மாதங்கியின் சிலை வெகு அழகாகவும், சிற்ப நுட்பங்களுடனும் உள்ளது. இங்குள்ள சப்த மாதர்களை வணங்கி விட்டு இறைவன் சன்னதிக்கு செல்லலாம். கருவறையில் அற்புதமாக லிங்க மூர்த்தி சேவை செய்கிறார். இந்த லிங்க மூர்த்திக்கு வால்மீகேஸ்வரர் என பெயர்.

வால்மீகி முனிவரால் பூஜை செய்யப்பட்டவர் புற்று உருவில் காட்சியளிக்கிறார். வால்மீகி மகரிஷியின் தவம் கண்டு மகிழ்ந்து இறைவன் மரகதாம்பிகையுடன் ஒன்றாக முனிவருக்கு காட்சி அளித்ததாக கூறப்படுகிறது.




சுருட்டப்பள்ளி கோவில் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 18, 2013 10:34 pm

ஆணவத்தை அழித்த லிங்கோத்பவர்

சுருட்டப்பள்ளி கோவில் கருவறையின் மேற்கு சுவர் மாடத்தில் `லிங்கோத்பவ' மூர்த்தியின் சிற்பம் காணப்படுகிறது. பிரம்மதேவருக்கும், விஷ்ணு பகவானுக்கும் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்டது. இதுகுறித்து சிவபெருமானிடம் கேட்பதற்கு சென்ற போது அவர் எனது தலையையும், பாதத்தையும் யார் ஒருவர் முதலில் பார்த்து விட்டு வருகிறீர்களோ அவர்களே பெரியவர் எனக்கூறினார்.

அதன்படி ஒருவர் முடியைத் தேடியும், ஒருவர் பாதத்தைத் தேடியும் சென்றனர். இருவரும் முடிவைக் காண முடியாமல் திரும்பி வந்தனர். பின்னர் இருவரின் ஆணவமும் அழிந்தது. வடப்புற சுவரில் பிரம்ம தேவர் கைகூப்பிய வண்ணம் காட்சியளிக்கிறார். அடுத்த மாடத்தில் விஷ்ணுதுர்க்கையின் சிற்பம் உள்ளது.

இங்கு லவகுசர்களின் பிஞ்சு கால்கள் பதிந்த பாதை வைக்கப்பட்டுள்ளது. அடுத்து கால பைரவரின் திருஉருவம் உள்ளது. இதன் விசேஷம் பைரவமூர்த்தியை உற்சவ வாகனத்துடன் காணலாம். இங்கு பைரவர் தனியாகவும், அவருக்கு முன் அடுத்த கால பைரவர் பார்த்த வண்ணம் நிற்கும் இந்த சிற்பத்தை இத்தலத்தில் மட்டுமே காணலாம்.

மாலைமலர்



சுருட்டப்பள்ளி கோவில் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Tue Mar 19, 2013 12:43 pm

அருமையான பகிர்வு அண்ணா, முடிந்தால் தரிசிக்கணும், நன்றி அண்ணா நன்றி




அன்புடன்
சின்னவன்

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Mar 19, 2013 1:00 pm

நண்பரே எப்படி போவது என சொல்லவும் ,routemap தரவும்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக