ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by வை.பாலாஜி Today at 4:09 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by Manik Today at 4:06 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Manik Today at 4:04 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by Manik Today at 3:49 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» காதலாகிப் போனதடி மனசு
by முரளிராஜா Today at 3:10 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by இரா.பகவதி Today at 3:08 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm

» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am

» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am

» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am

» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

கவிஞர்களே கவனியுங்கள்

View previous topic View next topic Go down

கவிஞர்களே கவனியுங்கள்

Post by சுந்தரபாண்டி on Mon Jan 16, 2012 3:33 pm

இந்த மனிதர்களை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

சென்னை நகரின் மிக உயர்ந்த கட்டிடமொன்றின் மீது ஏறிக்கொண்டு கீழே பார்க்கிறேன்.

எப்படியெல்லாம் பரபரக்கிறார்கள் இந்த மனிதர்கள் குள்ளம் குள்ளமாக இருந்துகொண்டு!

எனக்கு ஒரு நிமிடம் சிரிப்புதான் வருகிறது.
ஆனால் அடுத்த நிமிடமே என்னால் பிரமிக்காமல் இருக்கமுடியவில்லை.

இவ்வளவு உயரமாக வளர்ந்து கம்பீரமாக நிற்கும்
இந்த கட்டிடத்தை எழுப்பியது இந்த குள்ளமான
மனிதர்கள்தானே?

அதோ அந்த பரபரப்பான சாலைகளில் குறுக்கும்
நெடுக்குமாக பறந்து செல்லும் ஆயிரமாயிரம்
வாகனங்களும் இந்த குள்ளமான மனிதர்கள்
உருவாக்கியதுதான்.

ஃபேஸ் நியூட்ரலின் சங்கமத்தில் இந்த மனிதன்
விதவிதமான விளக்குகளை ஜொலிக்க விட்டு
எப்படியெல்லாம் அழகு பார்க்கிறான் பாருங்கள்.

குள்ளம் குள்ளமாக இருந்து கொண்டு இந்த மனிதர்கள் இன்னும் என்னவெல்லாம் செய்திருக்கிறார்கள் தெரியுமா?

நம் உடலைவிட்டு மனசு வெளியேறி மீண்டும் அந்த உடலையே திரும்பிப்பார்த்தால் எப்படி இருக்கும்!

அதுபோல இந்த பூமியைவிட்டு வெளியேறி மீண்டும் இந்த பூமியையே திரும்பி பார்த்தான் ரஷ்ய வீரன் யூரிகாகரின்.

இன்றைக்கு நானிந்த கட்டிடத்தின்மீது ஏறி நிற்பதை போல அன்றைக்கு மேகங்கள் முட்டிமுட்டி விளையாடுமே அந்த எவரெஸ்டின் மீதே ஏறி நின்றான் ஷெர்பா டென்சிங் நார்கே.

இன்னும் கொஞ்சம் தவ்விக் குதித்து ஒரே தாவலில் அந்த நிலவையே எட்டிப் பிடித்தான் நீல் ஆம்ஸ்டிராங்.

துப்பிய எச்சில் கீழே விழுவதற்கு முன்பே
பனிக்கட்டியாகிவிடும் துருவங்களுக்கு. . .

ஆறுமாதம் இரவாகவும் ஆறுமாதம் பகலாகவும்
இருக்கும் பூமிப்பந்தின் ஓரங்களுக்கு... பயணம் சென்று வந்தார்கள் ஆமுன்ட்சென் ராபர்ட் பியரி.

இவர்களெல்லாம் இந்த சின்னமனித கூட்டத்தை சேர்ந்தவர்கள்தானே?

நம் புருவங்களை உயர்த்தவைக்கும் காரியங்கள்
இன்னும் எத்தனை இருக்கிறது இந்த உலகில்?

கலவரம் ஏற்பட்ட வீதிகளை விடுத்து வேறுவீதிகளுக்கு
போக்குவரத்தை திசைதிருப்பிவிடுவதைபோல
ரத்த ஓட்டத்தை திசைதிருப்பிவிட்டு இப்போதெல்லாம்
சர்வசாதாரணமாய் செய்யப்படும் பைபாஸ் சர்ஜரியைபோல.

இன்னும் என்னவெல்லாம் செய்திருக்கிறது இந்த
மனிதகூட்டம்?

ஒரு கிலோமீட்டர்வரை வாலை நீட்டிக் கொண்டெ வரும் ரயில்கள்.

நகர்ந்து செல்லும் தீவைபோல ஒரு நகரத்தையே
உள்ளடக்கி வைத்திருக்கும் மிகப்பெரிய கப்பல்கள்.

காகங்களும் கழுகுகளும் ஆச்சர்யமாய் அன்னார்ந்து
பார்க்கும் விமானங்கள்.

கண்ணால் கண்டவற்றையும் காதால் கேட்டவற்றையும் பதிவு செய்து கடந்த காலங்களை கிட்டத்தட்ட நிகழ்காலங்களாக மாற்றிவிடும் ஒலி-ஒளி நாடாக்கள்

இமைக்கும் பொழுதுக்குள் உலகத்தையே சுடுகாடாக்கி விடும் அணுகுண்டுகள்.

ஒருகோடி தகவல்கள் எழுதிவைக்கபட்ட கையடக்க
டிஸ்குகள்.

இண்டர்நெட்டுகள்

செல்போன்கள்

இன்னும் இன்னும் இத்யாதிகள்.

இவை எல்லாவற்றுக்கும் பின்னால் கோடானுகோடி மக்களின் உழைப்பு நிச்சயமிருக்கும்.

பத்தே பத்து விரல்களை வைத்துக்கொண்டு இந்த
மனிதகூட்டம் இன்னும் என்னவெல்லாம்
செய்திருக்கிறது!

அந்த நிலாவின்மீது ஏறி நின்றாலும்
பூமித்தாய் தன் உச்சிக்கு வகிடெடுத்துக் கொண்டதைப் போல தெரியும் உலகின் மிகப்பெரிய சீனப்பெருஞ்சுவர்.

புதைக்கப்பட்ட பின்பும் விதைக்கப்பட்டதாய் நினைத்து
மீண்டும் கம்பீரமாய் எழுந்து நின்ற ஷிரோஷிமா
நாகஷாகி.

இப்படி எல்லாமும் மனித உழைப்பால் வந்ததுதான்.

வெறும் மணல்மேடுகளாக இருந்த இந்த பூமிக்கோளின்
அமைப்பே கிட்டத்தட்ட மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது.

இப்போது உலகில் நீ எதை தொட்டாலும் அதில்
மனித உழைப்பு நிச்சயம் கலந்திருக்கும்.

அத்தனைக்கும் காரணம் அந்த பத்து விரல்களுக்கிடையே
ஒளிந்திருக்கும் உழைப்பு!
மனித உழைப்பு.

எனில் அந்த உழைப்பைவிட மனித ஆராதனைக்குரிய
பொருள் உலகில் வேறொன்றும் இல்லை.

மனித உழைப்பை பற்றி அல்லாமல் ஒரு கவிஞனின்
போற்றத்தக்க பாடுபொருளாக வேறு எது இருக்க
முடியும்?

வேறு எதுவும் இருக்க முடியாது.

நிலவைப்பாடுதல்,
மலரைப்பாடுதல்,
இயற்கையை
ப்பாடுதல்,
நாணத்தைப்பாடுதல்,
காதலைப்பாடுதல்,
கன்றாவியைப்பாடுதல்,
காறிதுப்பியதைப்பாடுதல்
என விரியும் இன்னும் பிற பாடுதல்களெல்லாம்
ஒரு கட்டத்தில் நிச்சயம் நீர்த்து போய்விடும்.

பெண்ணின் சரீர மேடுபள்ளங்களைப்பற்றியும்

காதலி தனது நுனிநாக்கால் எனது இமைகளை
ஈரமாய் வருடியதைப்பற்றியும்

மழைமுடிந்ததும் இலைகளில் தொற்றிக்கொண்டிருக்கும்
நீர்த்துளிகள் பற்றியும்.

ஒரு பாத்திரகடையின் பளபளப்பைக்கொண்ட
அந்தி வானம் பற்றியும்

மழையில் நனைந்தபின் குடித்த தேநீரைப்பற்றியும்

ஆசூசை மனசோடு கவிதை எழுதி கொண்டிருந்த நான்
இப்போது மனித உழைப்பை பற்றி யோசிக்க
தொடங்கியிருக்கிறேன்.

அப்பப்பா!
உழைப்பு எப்படியொரு அற்புதமான செல்வம்!

சிறிதளவும் சேமித்துவைக்கமுடியாத ஆனால் ஏராளமாக
செலவு செய்யமுடியும் உலகின் ஒரே செல்வம்
உழைப்புதான்.

அந்த உழைப்பை பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

சாதாரண மனிதனின் அசாதாரண உழைப்பை பற்றி மட்டுமே யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

அங்கே பட்டாளி மக்கள் துடித்துக் கொண்டிருக்கையில் இங்கே பட்டாம்பூச்சிகளின் துடிப்பை கணக்கிட்டு கொண்டிருக்க இனிமேல் எனக்கு நேரம் கிடையாது.

இனி எனக்கான திசை மனிதன்தான்.
இனி எனக்கான பாடு பொருள் மனிதன்தான்.
மனித உழைப்புதான்.
மனித நேயம்தான்.
மனிதஅன்புதான்.


Last edited by சுந்தரபாண்டி on Tue Jan 24, 2012 4:02 pm; edited 1 time in total

சுந்தரபாண்டி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 233
வசிப்பிடம்: மனைவியின் மனசு
சேர்ந்தது: 16/01/2012
மதிப்பீடு: 22

Back to top Go down

Re: கவிஞர்களே கவனியுங்கள்

Post by வாசுசெல்வா on Mon Jan 16, 2012 3:40 pm

எனில் அந்த உழைப்பைவிட மனித ஆராதனைக்குரிய
பொருள் உலகில் வேறொன்றும் இல்லை.
மனித உழைப்பை பற்றி அல்லாமல் ஒரு கவிஞனின்
போற்றத்தக்க பாடுபொருளாக வேறு எது இருக்க
முடியும்?

சூப்பருங்க அருமையிருக்கு அன்பு மலர்

வாசுசெல்வா
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 114
வசிப்பிடம்: வாசுதேவநல்லூர், தற்போது பஹ்ரைன்
சேர்ந்தது: 11/04/2010
மதிப்பீடு: 43

http://www.selvaraj.00freehost.com

Back to top Go down

Re: கவிஞர்களே கவனியுங்கள்

Post by பார்த்திபன் on Mon Jan 16, 2012 4:19 pm

sundarapandi சுந்தரபாண்டி wrote:
நிலவைப்பாடுதல், மலரைப்பாடுதல், இயற்கையை
ப்பாடுதல், நாணத்தைப்பாடுதல், காதலைப்பாடுதல்,
கன்றாவியைப்பாடுதல், காறிதுப்பியதைப்பாடுதல்
என விரியும் இன்னும் பிற பாடுதல்களெல்லாம்
ஒரு கட்டத்தில் நிச்சயம் நீர்த்து போய்விடும்.

பெண்ணின் சரீர மேடுபள்ளங்களைப்பற்றியும்

காதலி தனது நுனிநாக்கால் எனது இமைகளை
ஈரமாய் வருடியதைப்பற்றியும்

மழைமுடிந்ததும் இலைகளில் தொற்றிக்கொண்டிருக்கும்
நீர்த்துளிகள் பற்றியும்.

ஒரு பாத்திரகடையின் பளபளப்பைக்கொண்ட
அந்தி வானம் பற்றியும்

மழையில் நனைந்தபின் குடித்த தேநீரைப்பற்றியும்

ஆசூசை மனசோடு கவிதை எழுதி கொண்டிருந்த நான்
இப்போது மனித உழைப்பை பற்றி யோசிக்க
தொடங்கியிருக்கிறேன்.

அப்பப்பா! உழைப்பு எப்படியொரு அற்புதமான செல்வம்!

சிறிதளவும் சேமித்துவைக்கமுடியாத ஆனால் ஏராளமாக
செலவு செய்யமுடியும் உலகில் ஒரே செல்வம்
உழைப்புதான்.



வைர வரிகள்! பாராட்டுக்கள்! இது கவிதை மட்டுமல்ல.
உழைப்பிற்கான ஒரு அழைப்பு! மகிழ்ச்சி

பார்த்திபன்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 283
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 24/07/2011
மதிப்பீடு: 112

Back to top Go down

Re: கவிஞர்களே கவனியுங்கள்

Post by இளமாறன் on Mon Jan 16, 2012 10:21 pm

சூப்பருங்க நல்ல சிந்தனை மகிழ்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: கவிஞர்களே கவனியுங்கள்

Post by சார்லஸ் mc on Mon Jan 16, 2012 10:27 pm

பாராட்டுக்கள்


[flash][/flash]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”



அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 2070
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 556

Back to top Go down

Re: கவிஞர்களே கவனியுங்கள்

Post by வாத்தியார் on Mon Jan 16, 2012 11:44 pm

கடந்துவந்த பாதையை மனிதன் திரும்பி பார்ப்பதைபோன்ற உணர்வு


ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன?? வாங்க பழகலாம்!

அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 4577
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042

Back to top Go down

Re: கவிஞர்களே கவனியுங்கள்

Post by ரா.ரா3275 on Tue Jan 17, 2012 12:41 am

நீண்ட நாள்களுக்குப் பிறகு உரைநடைக் கவிதை...நன்று...
நல்ல உணர்வு...நல்ல முயற்சி...வாழ்த்துகள் சுந்தரபாண்டி...




நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down

கவிஞர்களே கவனியுங்கள்

Post by சுந்தரபாண்டி on Tue Jan 17, 2012 5:13 am

இந்த மனிதர்களை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

சென்னை நகரின் மிக உயர்ந்த கட்டிடமொன்றின் மீது ஏறிக்கொண்டு கீழே பார்க்கிறேன்.

எப்படியெல்லாம் பரபரக்கிறார்கள் இந்த மனிதர்கள் குள்ளம் குள்ளமாக இருந்துகொண்டு!

எனக்கு ஒரு நிமிடம் சிரிப்புதான் வருகிறது.
ஆனால் அடுத்த நிமிடமே என்னால் பிரமிக்காமல் இருக்கமுடியவில்லை.

இவ்வளவு உயரமாக வளர்ந்து கம்பீரமாக நிற்கும்
இந்த கட்டிடத்தை எழுப்பியது இந்த குள்ளமான
மனிதர்கள்தானே?

அதோ அந்த பரபரப்பான சாலைகளில் குறுக்கும்
நெடுக்குமாக பறந்து செல்லும் ஆயிரமாயிரம்
வாகனங்களும் இந்த குள்ளமான மனிதர்கள்
உருவாக்கியதுதான்.

ஃபேஸ் நியூட்ரலின் சங்கமத்தில் இந்த மனிதன்
விதவிதமான விளக்குகளை ஜொலிக்க விட்டு
எப்படியெல்லாம் அழகு பார்க்கிறான் பாருங்கள்.

குள்ளம் குள்ளமாக இருந்து கொண்டு இந்த மனிதர்கள் இன்னும் என்னவெல்லாம் செய்திருக்கிறார்கள் தெரியுமா?

நம் உடலைவிட்டு மனசு வெளியேறி மீண்டும் அந்த உடலையே திரும்பிப்பார்த்தால் எப்படி இருக்கும்!

அதுபோல இந்த பூமியைவிட்டு வெளியேறி மீண்டும் இந்த பூமியையே திரும்பி பார்த்தான் ரஷ்ய வீரன் யூரிகாகரின்.

இன்றைக்கு நானிந்த கட்டிடத்தின்மீது ஏறி நிற்பதை போல அன்றைக்கு மேகங்கள் முட்டிமுட்டி விளையாடுமே அந்த எவரெஸ்டின் மீதே ஏறி நின்றான் ஷெர்பா டென்சிங் நார்கே.

பாட்டிகள் குழந்தைக்கு சோறு ஊட்ட ஒரு விளையாட்டு பொம்மையாக காட்டுவார்களே!
ஆம் அந்த நிலவின் மீதே ஏறி நின்றான் ஆம்ஸ்ட்ராங்க்

துப்பிய எச்சில் கீழே விழுவதற்கு முன்பே
பனிக்கட்டியாகிவிடும் துருவங்களுக்கு. . .

ஆறுமாதம் இரவாகவும் ஆறுமாதம் பகலாகவும்
இருக்கும் பூமிப்பந்தின் ஓரங்களுக்கு...

பயணம் சென்று வந்தார்கள் ஆமுன்ட்சென் ராபர்ட் பியரி. இவர்களெல்லாம் இந்த சின்னமனித கூட்டத்தை சேர்ந்தவர்கள்தானே?

நம் புருவங்களை உயர்த்தவைக்கும் காரியங்கள்
இன்னும் எத்தனை இருக்கிறது இந்த உலகில்?

கலவரம் ஏற்பட்ட வீதிகளை விடுத்து வேறுவீதிகளுக்கு
போக்குவரத்தை திசைதிருப்பிவிடுவதைபோல
ரத்த ஓட்டத்தை திசைதிருப்பிவிட்டு இப்போதெல்லாம்
சர்வசாதாரணமாய் செய்யப்படும் பைபாஸ் சர்ஜரியைபோல.

இன்னும் என்னவெல்லாம் செய்திருக்கிறது இந்த
மனிதகூட்டம்?

ஒரு கிலோமீட்டர்வரை வாலை நீட்டிக் கொண்டெ வரும் ரயில்கள்.

நகர்ந்து செல்லும் தீவைபோல ஒரு நகரத்தையே
உள்ளடக்கி வைத்திருக்கும் மிகப்பெரிய கப்பல்கள்.

காகங்களும் கழுகுகளும் ஆச்சர்யமாய் அன்னார்ந்து
பார்க்கும் விமானங்கள்.

கண்ணால் கண்டவற்றையும் காதால் கேட்டவற்றையும் பதிவு செய்து கடந்த காலங்களை கிட்டத்தட்ட நிகழ்காலங்களாக மாற்றிவிடும் ஒலி-ஒளி நாடாக்கள்

இமைக்கும் பொழுதுக்குள் உலகத்தையே சுடுகாடாக்கி விடும் அணுகுண்டுகள்.

ஒருகோடி தகவல்கள் எழுதிவைக்கபட்ட கையடக்க
டிஸ்குகள்.

இண்டர்நெட்டுகள்

செல்போன்கள்

இன்னும் இன்னும் இத்யாதிகள்.

இவை எல்லாவற்றுக்கும் பின்னால் கோடானுகோடி மக்களின் உழைப்பு நிச்சயமிருக்கும்.

பத்தே பத்து விரல்களை வைத்துக்கொண்டு இந்த
மனிதகூட்டம் இன்னும் என்னவெல்லாம்
செய்திருக்கிறது!

அந்த நிலாவின்மீது ஏறி நின்றாலும்
பூமித்தாய் தன் உச்சிக்கு வகிடெடுத்துக் கொண்டதைப் போல தெரியும் உலகின் மிகப்பெரிய சீனப்பெருஞ்சுவர்.

புதைக்கப்பட்ட பின்பும் விதைக்கப்பட்டதாய் நினைத்து
மீண்டும் கம்பீரமாய் எழுந்து நின்ற ஷிரோஷிமா
நாகஷாகி.

இப்படி எல்லாமும் மனித உழைப்பால் வந்ததுதான்.

வெறும் மணல்மேடுகளாக இருந்த இந்த பூமிக்கோளின்
அமைப்பே கிட்டத்தட்ட மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது.

இப்போது உலகில் நீ எதை தொட்டாலும் அதில்
மனித உழைப்பு நிச்சயம் கலந்திருக்கும்.

அத்தனைக்கும் காரணம் அந்த பத்து விரல்களுக்கிடையே
ஒளிந்திருக்கும் உழைப்பு
மனித உழைப்பு.

எனில் அந்த உழைப்பைவிட மனித ஆராதனைக்குரிய
பொருள் உலகில் வேறொன்றும் இல்லை.
மனித உழைப்பை பற்றி அல்லாமல் ஒரு கவிஞனின்
போற்றத்தக்க பாடுபொருளாக வேறு எது இருக்க
முடியும்?

வேறு எதுவும் இருக்க முடியாது.

நிலவைப்பாடுதல், மலரைப்பாடுதல், இயற்கையை
ப்பாடுதல், நாணத்தைப்பாடுதல், காதலைப்பாடுதல்,
கன்றாவியைப்பாடுதல், காறிதுப்பியதைப்பாடுதல்
என விரியும் இன்னும் பிற பாடுதல்களெல்லாம்
ஒரு கட்டத்தில் நிச்சயம் நீர்த்து போய்விடும்.

பெண்ணின் சரீர மேடுபள்ளங்களைப்பற்றியும்

காதலி தனது நுனிநாக்கால் எனது இமைகளை
ஈரமாய் வருடியதைப்பற்றியும்

மழைமுடிந்ததும் இலைகளில் தொற்றிக்கொண்டிருக்கும்
நீர்த்துளிகள் பற்றியும்.

ஒரு பாத்திரகடையின் பளபளப்பைக்கொண்ட
அந்தி வானம் பற்றியும்

மழையில் நனைந்தபின் குடித்த தேநீரைப்பற்றியும்

ஆசூசை மனசோடு கவிதை எழுதி கொண்டிருந்த நான்
இப்போது மனித உழைப்பை பற்றி யோசிக்க
தொடங்கியிருக்கிறேன்.

அப்பப்பா! உழைப்பு எப்படியொரு அற்புதமான செல்வம்!

சிறிதளவும் சேமித்துவைக்கமுடியாத ஆனால் ஏராளமாக
செலவு செய்யமுடியும் உலகில் ஒரே செல்வம்
உழைப்புதான்.

அந்த உழைப்பை பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

சாதாரண மனிதனின் அசாதாரண உழைப்பை பற்றி மட்டுமே யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

அங்கே பட்டாளி மக்கள் துடித்துக் கொண்டிருக்கையில் இங்கே பட்டாம்பூச்சிகளின் துடிப்பை கணக்கிட்டு கொண்டிருக்க இனிமேல் எனக்கு நேரம் கிடையாது.

இனி எனக்கான திசை மனிதன்தான்.
இனி எனக்கான பாடு பொருள் மனிதன்தான்.
மனித உழைப்புதான்.
மனித நேயம்தான்.
மனிதஅன்புதான்.


சுந்தரபாண்டி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 233
வசிப்பிடம்: மனைவியின் மனசு
சேர்ந்தது: 16/01/2012
மதிப்பீடு: 22

Back to top Go down

Re: கவிஞர்களே கவனியுங்கள்

Post by கோவிந்தராஜ் on Tue Jan 17, 2012 6:36 am

சூப்பருங்க மகிழ்ச்சி

மழைமுடிந்ததும் இலைகளில் தொற்றிக்கொண்டிருக்கும்
நீர்த்துளிகள் பற்றியும்.


ஒரு கவிஞன் நினைத்தால் ஒரு பொருளை ஏற்றவும் செய்யமுடியும் தூற்றவும் செய்யமுடியும் என்பதை நிரூபித்துவிட்டீர்கள் !

மனித உழைப்பே சிறந்தது !!!

கோவிந்தராஜ்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1256
வசிப்பிடம்: விருத்தாசலம்
சேர்ந்தது: 20/02/2011
மதிப்பீடு: 299

http://sugolo.in

Back to top Go down

Re: கவிஞர்களே கவனியுங்கள்

Post by ந.கார்த்தி on Tue Jan 17, 2012 10:49 am

சூப்பருங்க சூப்பருங்க

ந.கார்த்தி
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 5916
வசிப்பிடம்: தாயின் மடியில்
சேர்ந்தது: 06/04/2011
மதிப்பீடு: 866

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: கவிஞர்களே கவனியுங்கள்

Post by சுந்தரபாண்டி on Fri Jan 20, 2012 9:13 pm

கோவிந்தராஜ் wrote: சூப்பருங்க மகிழ்ச்சி

மழைமுடிந்ததும் இலைகளில் தொற்றிக்கொண்டிருக்கும்
நீர்த்துளிகள் பற்றியும்.


ஒரு கவிஞன் நினைத்தால் ஒரு பொருளை ஏற்றவும் செய்யமுடியும் தூற்றவும் செய்யமுடியும் என்பதை நிரூபித்துவிட்டீர்கள் !

மனித உழைப்பே சிறந்தது !!!


நன்றி நண்பரே

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

சுந்தரபாண்டி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 233
வசிப்பிடம்: மனைவியின் மனசு
சேர்ந்தது: 16/01/2012
மதிப்பீடு: 22

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum