|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள் by Aathira Today at 9:10 pm
» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ
by புரட்சி Today at 8:58 pm
» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm
» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm
» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm
» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm
» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm
» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm
» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm
» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm
» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm
» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm
» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm
» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
குறுந்தொகையின் செல்வவளம்..2..!!!
Page 1 of 1 • Share •
குறுந்தொகையின் செல்வவளம்..2..!!!
நண்பர்களே,
குறுந்தொகையில் மற்றுமொரு நயமிகு பாடலைப் பார்க்கும் முன்னர், குறுந்தொகை பற்றிய சில குறிப்புகள்:
எட்டுத்தொகை நூல்களுள், பாடல்களின் அடி வரையறையில் மிகச் சிறிய பாடல்களைக்
கொண்டது குறுந்தொகையே! இப்பாடல்களில் உள்ள வரிகளின் மீச்சிறு எண்ணிக்கை நான்கு ;
மீப்பெருவன எட்டு!கடவுள் வாழ்த்து நீங்கலாக உள்ள மொத்தப் பாடல்கள் 401 ;ஆனால், 400 தான்
இருத்தல் வேண்டும்! 307, 391 - ஆம் பாடல்கள் 9 அடிகள் கொண்டவை ; இவற்றுள் 307 ஐ நீக்கி
400 பாடல்களாகக் கொள்ளலாம் என்பது தமிழுக்கு பெருந்தொண்டாற்றிய பெருமைமிகு உ.வே.சா வின்
நிலைப்பாடு!
குறுந்தொகைதான் முதலில் தொகுக்கப்பட்ட தொகை நூல் எனக் கருதப்படுகிறது; இது மட்டுமே இதன்
சீர்மையை எடுத்துக்காட்டப் போதுமானது ; இதனைத் தொகுத்தவர் பெருந்தேவனார் எனக் கருதப்படுகிறது!
குறுந்தொகையின் மாண்பினையும் அதன் சிறப்பான இடத்தையும் பிறிதொன்றையும் கண்டு அறியலாம் -
ஆம், நண்பர்களே! - தொகை நூற்களுள்ளேயே மிகப் பெரும் அளவில் உரையாசிரியர்களால் எடுத்துக்
காட்டப்பட்டது இந்நூல்தான் ; இருபத்தொன்பது உரையாசிரியர்கள் ஆயிரம் இடங்களில் குறுந்தொகைப்
பாடல்களை மேற்கோளாகச் சுட்டிச் சென்றுள்ளனர்!
விரிக்கின் பெருகும் ஆதலால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்!
பாடலைப் பார்ப்போமா...!
இதனை ஆக்கியோன் கபிலன் எனும் பெரும் புலவன்; இவனைப் பற்றியே பெருமைப்பட பல கூறலாம்!
நக்கீரனின் இக்கூற்றைவிட வேறென்ன வேண்டும் - 'உலகுடன் திரிதரும் பலர் புகழ் நல்லிசை வாய்மொழிக் கபிலன்'
இடம் கருதி எவ்வளவோ தள்ளத் துணியினும் இதைச் சொல்லாமல் இருக்க இயலவில்லை!
தொகைநூல்களுள் மிகுதியும் இடம் பெற்ற பாடல்கள் இவனதே; மொத்தம் இருநூற்று முப்பதைந்து
பாடல்கள்! நமது பாடல் இதோ..!!
யாரும் இல்லைத் தானே கள்வன்
தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ
தினைத்தாள் அன்ன சிறுபசுங் கால
ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே.
தன் உள்ளம் ஈர்த்த தலைவனைக் கண்டு அளவளாவி மகிழ்ந்து வருகிறாள் தலைவி!களவொழுக்கத்தில்
திளைத்த தலைவியோ அவன் உறுதி மொழிகளை மீறிடத்துணிவனோ எனும் நம்பிக்கையில் அவனுடன்
ஒருசேரக் கலந்தும் விடுகிறாள்!ஆனால், அத்தலைவனோ யாது காரணமாகவோ பிரிந்து சென்றவன்
இன்னும் திரும்பிடவில்லை!துடிக்கிறாள் பேதை..!! நீதிக் கேட்களாமெனில் சாட்சியம் கேட்பார்களே ...!
மணந்த நாளினை நினைவு கூர்கிறாள் - அக்கள்வன் தன்னுள் நிறைந்தபோது யாரும் இல்லையே! ஒரு நாரைதான் இருந்தது - திணைப்பயிரின் அடிப்பகுதி போன்று சிறியதாகவும் பசியதாகவும் ஆன கால்களைக் கொண்டிருந்ததைக் கண்டேன்!ஆனால் அது ஓடுகின்ற நீரில் ஆரல் மீன் வராதா என்றல்லவா பார்த்துக் கொண்டிருந்தது!
எனவே, தலைவன் தன் சொல் பொய்ப்பின் என்னால் ஏதும் செய்யா இயலாதே எனத் துயர் மேலிட வாடுகின்றனள்!
அன்பன்,
சுந்தரம்
பி.கு: இதில் ஒரு வியக்கத்தக்க நயம் உள்ளது, நண்பர்களே! தலைவனும் தலைவியும் மணந்த நாளில் - இடத்தில் - நாரை இருப்பினும் இவர்களைக் காணாதிருந்ததனால் அது சாட்சியம் பகராதாம் - பொய் சாட்சியாய் விடுமன்றோ!!
குறுந்தொகையில் மற்றுமொரு நயமிகு பாடலைப் பார்க்கும் முன்னர், குறுந்தொகை பற்றிய சில குறிப்புகள்:
எட்டுத்தொகை நூல்களுள், பாடல்களின் அடி வரையறையில் மிகச் சிறிய பாடல்களைக்
கொண்டது குறுந்தொகையே! இப்பாடல்களில் உள்ள வரிகளின் மீச்சிறு எண்ணிக்கை நான்கு ;
மீப்பெருவன எட்டு!கடவுள் வாழ்த்து நீங்கலாக உள்ள மொத்தப் பாடல்கள் 401 ;ஆனால், 400 தான்
இருத்தல் வேண்டும்! 307, 391 - ஆம் பாடல்கள் 9 அடிகள் கொண்டவை ; இவற்றுள் 307 ஐ நீக்கி
400 பாடல்களாகக் கொள்ளலாம் என்பது தமிழுக்கு பெருந்தொண்டாற்றிய பெருமைமிகு உ.வே.சா வின்
நிலைப்பாடு!
குறுந்தொகைதான் முதலில் தொகுக்கப்பட்ட தொகை நூல் எனக் கருதப்படுகிறது; இது மட்டுமே இதன்
சீர்மையை எடுத்துக்காட்டப் போதுமானது ; இதனைத் தொகுத்தவர் பெருந்தேவனார் எனக் கருதப்படுகிறது!
குறுந்தொகையின் மாண்பினையும் அதன் சிறப்பான இடத்தையும் பிறிதொன்றையும் கண்டு அறியலாம் -
ஆம், நண்பர்களே! - தொகை நூற்களுள்ளேயே மிகப் பெரும் அளவில் உரையாசிரியர்களால் எடுத்துக்
காட்டப்பட்டது இந்நூல்தான் ; இருபத்தொன்பது உரையாசிரியர்கள் ஆயிரம் இடங்களில் குறுந்தொகைப்
பாடல்களை மேற்கோளாகச் சுட்டிச் சென்றுள்ளனர்!
விரிக்கின் பெருகும் ஆதலால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்!
பாடலைப் பார்ப்போமா...!
இதனை ஆக்கியோன் கபிலன் எனும் பெரும் புலவன்; இவனைப் பற்றியே பெருமைப்பட பல கூறலாம்!
நக்கீரனின் இக்கூற்றைவிட வேறென்ன வேண்டும் - 'உலகுடன் திரிதரும் பலர் புகழ் நல்லிசை வாய்மொழிக் கபிலன்'
இடம் கருதி எவ்வளவோ தள்ளத் துணியினும் இதைச் சொல்லாமல் இருக்க இயலவில்லை!
தொகைநூல்களுள் மிகுதியும் இடம் பெற்ற பாடல்கள் இவனதே; மொத்தம் இருநூற்று முப்பதைந்து
பாடல்கள்! நமது பாடல் இதோ..!!
யாரும் இல்லைத் தானே கள்வன்
தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ
தினைத்தாள் அன்ன சிறுபசுங் கால
ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே.
தன் உள்ளம் ஈர்த்த தலைவனைக் கண்டு அளவளாவி மகிழ்ந்து வருகிறாள் தலைவி!களவொழுக்கத்தில்
திளைத்த தலைவியோ அவன் உறுதி மொழிகளை மீறிடத்துணிவனோ எனும் நம்பிக்கையில் அவனுடன்
ஒருசேரக் கலந்தும் விடுகிறாள்!ஆனால், அத்தலைவனோ யாது காரணமாகவோ பிரிந்து சென்றவன்
இன்னும் திரும்பிடவில்லை!துடிக்கிறாள் பேதை..!! நீதிக் கேட்களாமெனில் சாட்சியம் கேட்பார்களே ...!
மணந்த நாளினை நினைவு கூர்கிறாள் - அக்கள்வன் தன்னுள் நிறைந்தபோது யாரும் இல்லையே! ஒரு நாரைதான் இருந்தது - திணைப்பயிரின் அடிப்பகுதி போன்று சிறியதாகவும் பசியதாகவும் ஆன கால்களைக் கொண்டிருந்ததைக் கண்டேன்!ஆனால் அது ஓடுகின்ற நீரில் ஆரல் மீன் வராதா என்றல்லவா பார்த்துக் கொண்டிருந்தது!
எனவே, தலைவன் தன் சொல் பொய்ப்பின் என்னால் ஏதும் செய்யா இயலாதே எனத் துயர் மேலிட வாடுகின்றனள்!
அன்பன்,
சுந்தரம்
பி.கு: இதில் ஒரு வியக்கத்தக்க நயம் உள்ளது, நண்பர்களே! தலைவனும் தலைவியும் மணந்த நாளில் - இடத்தில் - நாரை இருப்பினும் இவர்களைக் காணாதிருந்ததனால் அது சாட்சியம் பகராதாம் - பொய் சாட்சியாய் விடுமன்றோ!!
Last edited by sundaram77 on Mon Jan 23, 2012 9:36 pm; edited 6 times in total

sundaram77- புதியவர்

- பதிவுகள்: 4
வசிப்பிடம்: tiruchy
சேர்ந்தது: 19/01/2012
மதிப்பீடு: 10
Re: குறுந்தொகையின் செல்வவளம்..2..!!!
நயம் மிக்க குறுந்தொகைப் பாடலை நயமாய் நவின்றமைக்கு நன்றி.
தொடருங்கள்
தொடருங்கள்

சதாசிவம்- தளபதி

- பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum








