Latest topics
» ரயில் கூரைகளில் பயணித்தால் இரும்பு குண்டு தாக்குதல்!by கொலவெறி Today at 1:22 am
» முதிர்கண்ணன் ...
by சிவா Today at 1:22 am
» கணவன்-மனைவி-காதல்-கவிதை
by கொலவெறி Today at 1:14 am
» பாஞ்சாலிக்குக் கேள்வி
by ரா.ரா3275 Today at 1:11 am
» கழிவுகளாய்....
by ரா.ரா3275 Today at 1:08 am
» உங்கள் இணையத்தள டவுன்லோட் வேகத்தை 600 % வரை அதிகரிக்க
by சிவா Today at 12:59 am
» இத்தாலிய கப்பலை சிறை பிடித்ததால் பல கோடி நஷ்டம்
by கொலவெறி Today at 12:54 am
» முப்பரிமாண மென்பொருட்கள் மூன்று . முற்றிலும் இலவசம்!
by kirikasan Today at 12:52 am
» எனது கையெழுத்தைக் காணோம்..
by அகிலன் Today at 12:43 am
» கொதிக்கும் நெய்யில் கையால்அப்பம் சுட்டு எடுத்த மூதாட்டி: பக்தர்கள் பரவசம்!
by சிவா Today at 12:34 am
» செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள்.
by சிவா Today at 12:24 am
» வெறுங்கையில் விபூதி வரவழைப்பது
by கபாலி Today at 12:20 am
» இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள்
by சிவா Today at 12:05 am
» ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா
by Aathira Today at 12:02 am
» என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்...
by கொலவெறி Yesterday at 11:49 pm
» நண்பனுக்கு அழகு. - ஹைக்கூ கவிதைகள்
by சிவா Yesterday at 11:33 pm
» உள்ளம் ...........
by dhilipdsp Yesterday at 11:00 pm
» அம்மா...
by dhilipdsp Yesterday at 10:57 pm
» ( Infrared )கமெரா மூலம் ATMல் திருடப்படும் கோடிக்கணக்கான பணம்.!!!
by இரா.பகவதி Yesterday at 10:56 pm
» மொக்க பீஸு-1
by ரா.ரா3275 Yesterday at 10:54 pm
» விளங்காமலே நான் ........
by dhilipdsp Yesterday at 10:53 pm
» காதலர் நாள் நினைவு
by dhilipdsp Yesterday at 10:50 pm
» கதை முடிந்ததது
by dhilipdsp Yesterday at 10:37 pm
» என்னவோ...
by dhilipdsp Yesterday at 10:35 pm
» கரித்துண்டு
by dhilipdsp Yesterday at 10:35 pm
» காதல் ...
by ரா.ரா3275 Yesterday at 10:13 pm
» உதட்டோரம் அமுதூற...
by ரா.ரா3275 Yesterday at 10:07 pm
» பகத்சிங் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு
by மகா பிரபு Yesterday at 9:27 pm
» நீங்கள் செய்திதாளில் எந்த செய்தியை அதிகம் விரும்பி படிப்பீர்கள்? கருத்துரையுங்கள் [POLL]
by மகா பிரபு Yesterday at 8:57 pm
» உபயோகமான 100 மருத்துவ குறிப்புகள்!
by மகா பிரபு Yesterday at 8:54 pm
» நமக்கு ஏன் வயதாகிறது?
by ரா.ரமேஷ்குமார் Yesterday at 8:26 pm
» அரசியல்வாதி ஆகிப்பார்..!
by solomon Yesterday at 8:14 pm
» இந்தியாவில் தங்கியிருந்து பாதுகாப்பு ஆவணங்களை பாகிஸ்தானுக்குக் கடத்திய உளவாளி கைது
by இரா.பகவதி Yesterday at 8:01 pm
» ரகசியம் புத்தகம் பிடிஎஃப் வடிவில்...
by என்.எஸ்.Rao Yesterday at 7:28 pm
» நானிருக்கும் மட்டும்தானே..!
by இரா.பகவதி Yesterday at 7:01 pm
» திருப்பூர் நகை கொள்ளை : வட மாநில கும்பல் கைவரிசை அம்பலம்
by இரா.பகவதி Yesterday at 6:56 pm
» ஆடவர் விற்பனை...
by இரா.பகவதி Yesterday at 6:37 pm
» தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?
by அருண் Yesterday at 6:20 pm
» பணம் படுத்தும் பாடு
by dhilipdsp Yesterday at 6:03 pm
» வறுமையின் பெருமையை கருவறையில் கண்ட சிசு
by dhilipdsp Yesterday at 6:03 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
முகநூலில் இணைய:
நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு.
Page 1 of 3 • Share •
Page 1 of 3 • 1, 2, 3 
நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு.
தமிழ் மொழி நீதி நூல்களுக்கு பெயர் பெற்றது. பதினென்கீழ் கணக்கு நூல்கள் மட்டுமல்லாது நீதி கூறும் நூல்கள் ஏராளம் இங்கு உள்ளது.
மனிதன் மனிதனாக வாழ ஒழுக்கம் அவசியம், ஒழுக்கம் தவறி பிறருக்கு துன்பம் விளைவிக்கும் போது மக்களாகிய மனிதன் மாக்களில் கலந்து விடுகிறான். இன்று உயர் நிலையில் இருக்கும் பல நாடுகள் நாகரீகம் என்றால் என்ன என்று தெரியாத காட்டுமனிதர்களாக வாழ்ந்த காலத்தில் நாம் நாகரீகத்தின் உச்சத்தில் இருந்திருக்கிறோம் என்பதற்கு இப்படி உள்ள தமிழ் நூல்களே சான்று.
இப்படி நீதி கூறும் பல நூல்களில் மக்களிடம் பிரபலம் ஆகாத ஒரு சில நூல்களில் அதிவீர ராம பாண்டியர் எழுதிய நறுந்தொகையும் ஒன்று. இதில் இடம் பெற்ற வரிகள் மூலம் இது வெற்றிவேற்கை என்றும் அழைக்கப்படுகிறது.
நறுந்தொகை என்பது நறுமை + தொகை, அதாவது நன்மை + தொகை, வாழ்விற்கு நன்மை பயக்கும் பல நல்ல செய்திகளை, ஒழுக்கங்களை, வாழ்வியல் உண்மைகளை அழகாகக் எடுத்துக் கூறுவது இந்த நூலின் சிறப்பு. இந்த நூலில் இடம் பெறும் நூல் பயன் மூலம் இதை எழுதியவர் கொற்கையாண்ட அதிவீர ராம பாண்டியர் என்பது புலனாகிறது. இவர் 10 -11 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கொற்கையாண்ட பாண்டிய மன்னர். சிலர் இவர் வாழ்ந்த காலம் 15 ஆம் நூற்றாண்டு என்றும் கூறுகின்றனர். கொற்கை என்பது பாண்டிய நாட்டில் இருந்த கடற்கரை நகரம். கொற்கை முத்துகள் குறித்த செய்தி சிலம்பில் இடம் பெற்றுள்ளது. இது இன்றைக்கு அழைக்கப்படும் தூத்துக்குடி, தென்காசி பகுதியை குறிக்கிறது.
இவர் தமிழில் மேலும் பல நூல்களை இயற்றியுள்ளார், அவையாவன நைடதம், கூர்மபுராணம், இலிங்கபுராணம், காசிக்காண்டம், வாயு சங்கிதை, திருக்கருவை அந்தாதிகள் ஆகியவை, இன்னூல்கள் பெரும்பான்மை வடமொழி நூல்களின் சாயலில் பாடப்பெற்றவையாக இருப்பதினால் இவர் அம்மொழியிலும் தேர்ச்சி பேற்றிருந்தார் எனக் கொள்ளலாம். இவர் சிறந்த சிவபக்தர் என்பது இவர் எழுதிய நூல்கள் வாயிலாக அறிய முடிகிறது. இவரியற்றிய நூல்களுள்ளே நைடதமானது இலக்கியப் பயிற்சிக்குச் சிறந்த நூலாகக்கொண்டு தமிழ்மக்கள் பல்லோரானும் பாராட்டிப் படிக்கப்படுகின்றது.
நறுந்தொகை மொத்தம் 82 செய்யுள்கள் கொண்ட தொகுப்பு நூலாகும். இதில் ஒரு சில செய்யுள்கள் தனிச் செய்யுளாகவும், ஒரு சில செய்யுள்கள் அதற்கு அடுத்து வரும் செய்யுள் வரிகளோடு தொடர்ப்பு கொண்டு பொருள் கொள்ளுமாறு அமைக்கப்பட்டுள்ளது. புறநானூறு, நாலடியார் நூல்களில் வரும் பாடல் வரிகளும் , பொருளும் சில பாடல்களில் பொருந்தி வருகிறது. பல நேரங்களில் ஔவையார் எழுதியதாக கோடிடப்படும் செய்யுள் வரிகள் உண்மையில் இந்த நூலில் இருந்து எடுக்கப்பட்டவை.
நல்ல தமிழ் அறிவோம் தொடரில், இனி இந்த நறுந்தொகைப் பாடல்களைப் பயில்வோம்.
மனிதன் மனிதனாக வாழ ஒழுக்கம் அவசியம், ஒழுக்கம் தவறி பிறருக்கு துன்பம் விளைவிக்கும் போது மக்களாகிய மனிதன் மாக்களில் கலந்து விடுகிறான். இன்று உயர் நிலையில் இருக்கும் பல நாடுகள் நாகரீகம் என்றால் என்ன என்று தெரியாத காட்டுமனிதர்களாக வாழ்ந்த காலத்தில் நாம் நாகரீகத்தின் உச்சத்தில் இருந்திருக்கிறோம் என்பதற்கு இப்படி உள்ள தமிழ் நூல்களே சான்று.
இப்படி நீதி கூறும் பல நூல்களில் மக்களிடம் பிரபலம் ஆகாத ஒரு சில நூல்களில் அதிவீர ராம பாண்டியர் எழுதிய நறுந்தொகையும் ஒன்று. இதில் இடம் பெற்ற வரிகள் மூலம் இது வெற்றிவேற்கை என்றும் அழைக்கப்படுகிறது.
நறுந்தொகை என்பது நறுமை + தொகை, அதாவது நன்மை + தொகை, வாழ்விற்கு நன்மை பயக்கும் பல நல்ல செய்திகளை, ஒழுக்கங்களை, வாழ்வியல் உண்மைகளை அழகாகக் எடுத்துக் கூறுவது இந்த நூலின் சிறப்பு. இந்த நூலில் இடம் பெறும் நூல் பயன் மூலம் இதை எழுதியவர் கொற்கையாண்ட அதிவீர ராம பாண்டியர் என்பது புலனாகிறது. இவர் 10 -11 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கொற்கையாண்ட பாண்டிய மன்னர். சிலர் இவர் வாழ்ந்த காலம் 15 ஆம் நூற்றாண்டு என்றும் கூறுகின்றனர். கொற்கை என்பது பாண்டிய நாட்டில் இருந்த கடற்கரை நகரம். கொற்கை முத்துகள் குறித்த செய்தி சிலம்பில் இடம் பெற்றுள்ளது. இது இன்றைக்கு அழைக்கப்படும் தூத்துக்குடி, தென்காசி பகுதியை குறிக்கிறது.
இவர் தமிழில் மேலும் பல நூல்களை இயற்றியுள்ளார், அவையாவன நைடதம், கூர்மபுராணம், இலிங்கபுராணம், காசிக்காண்டம், வாயு சங்கிதை, திருக்கருவை அந்தாதிகள் ஆகியவை, இன்னூல்கள் பெரும்பான்மை வடமொழி நூல்களின் சாயலில் பாடப்பெற்றவையாக இருப்பதினால் இவர் அம்மொழியிலும் தேர்ச்சி பேற்றிருந்தார் எனக் கொள்ளலாம். இவர் சிறந்த சிவபக்தர் என்பது இவர் எழுதிய நூல்கள் வாயிலாக அறிய முடிகிறது. இவரியற்றிய நூல்களுள்ளே நைடதமானது இலக்கியப் பயிற்சிக்குச் சிறந்த நூலாகக்கொண்டு தமிழ்மக்கள் பல்லோரானும் பாராட்டிப் படிக்கப்படுகின்றது.
நறுந்தொகை மொத்தம் 82 செய்யுள்கள் கொண்ட தொகுப்பு நூலாகும். இதில் ஒரு சில செய்யுள்கள் தனிச் செய்யுளாகவும், ஒரு சில செய்யுள்கள் அதற்கு அடுத்து வரும் செய்யுள் வரிகளோடு தொடர்ப்பு கொண்டு பொருள் கொள்ளுமாறு அமைக்கப்பட்டுள்ளது. புறநானூறு, நாலடியார் நூல்களில் வரும் பாடல் வரிகளும் , பொருளும் சில பாடல்களில் பொருந்தி வருகிறது. பல நேரங்களில் ஔவையார் எழுதியதாக கோடிடப்படும் செய்யுள் வரிகள் உண்மையில் இந்த நூலில் இருந்து எடுக்கப்பட்டவை.
நல்ல தமிழ் அறிவோம் தொடரில், இனி இந்த நறுந்தொகைப் பாடல்களைப் பயில்வோம்.

சதாசிவம்- தளபதி

- பதிவுகள்: 1000
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 546
Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு.
கடவுள் வாழ்த்து
பிரணவப் பொருளாம் பெருந்தகை ஐங்கரன்
சரண அற்புத மலர் தலைக்கு அணிவோமே.
பொருள் விளக்கம்
ஓம் என்னும் பிரணவத்தின் பொருளாக விளங்கும் பெருமை பொருத்திய ஐந்து கரங்களை உடைய விநாயகப் பெருமானின் மலர்ப் பாதங்களை தலை வணங்குவோமாக.
நூல் பயன்
வெற்றி வேற்கை வீர ராமன்
கொற்கையாளி குலசேகரன் புகல்
நற்றமிழ் தெரிந்த நறுந்தொகை தன்னால்
குற்றம் களைவோர் குறைவிலாதவரே!
பொருள் விளக்கம்
வெற்றி வேற்கை என்னும் இந்த நூலை கொற்கையாளும் குலசேகரன் புகழ் அதிவீர ராமன் என்னும் நான் நல்ல தமிழில் உள்ள பாடல்களில் சிறந்ததாக இருக்கும் பாடல்களை தேர்ந்தெடுத்து நறுந்தொகையாகத் தொகுத்துள்ளேன். இந்த பாடல்களை குற்றம் இல்லாது உணர்ந்து, படித்து கடைப்பிடிப்பவர்கள் வாழ்வில் குறை ஒன்றும் இல்லாதவர்களாவர்
வாழ்த்து
வாழிய நலனே; வாழிய நலனே!
பொருள் விளக்கம்.
எல்லோரும் நலமுடன் வாழட்டும், எல்லோரும் நலமுடன் வாழட்டும்
தொடரும் ..........
பிரணவப் பொருளாம் பெருந்தகை ஐங்கரன்
சரண அற்புத மலர் தலைக்கு அணிவோமே.
பொருள் விளக்கம்
ஓம் என்னும் பிரணவத்தின் பொருளாக விளங்கும் பெருமை பொருத்திய ஐந்து கரங்களை உடைய விநாயகப் பெருமானின் மலர்ப் பாதங்களை தலை வணங்குவோமாக.
நூல் பயன்
வெற்றி வேற்கை வீர ராமன்
கொற்கையாளி குலசேகரன் புகல்
நற்றமிழ் தெரிந்த நறுந்தொகை தன்னால்
குற்றம் களைவோர் குறைவிலாதவரே!
பொருள் விளக்கம்
வெற்றி வேற்கை என்னும் இந்த நூலை கொற்கையாளும் குலசேகரன் புகழ் அதிவீர ராமன் என்னும் நான் நல்ல தமிழில் உள்ள பாடல்களில் சிறந்ததாக இருக்கும் பாடல்களை தேர்ந்தெடுத்து நறுந்தொகையாகத் தொகுத்துள்ளேன். இந்த பாடல்களை குற்றம் இல்லாது உணர்ந்து, படித்து கடைப்பிடிப்பவர்கள் வாழ்வில் குறை ஒன்றும் இல்லாதவர்களாவர்
வாழ்த்து
வாழிய நலனே; வாழிய நலனே!
பொருள் விளக்கம்.
எல்லோரும் நலமுடன் வாழட்டும், எல்லோரும் நலமுடன் வாழட்டும்
தொடரும் ..........

சதாசிவம்- தளபதி

- பதிவுகள்: 1000
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 546
Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு.
முன்னுரையை முகமலர்ச்சியுடன் படித்தேன், நறுந்தொகை என்ற நீதி நூலை தேர்ந்தெடுத்து கொடுக்கவுள்ள தங்களுக்கு என்னுடைய நன்றிகள் ஐயா.
கடவுள் வாழ்த்தும் நூற்பயனும் அறிந்தேன், அடுத்த செய்யுள் பகுதிக்காக காத்திருக்கிறேன்.......
உங்கள் சேவைக்கு என்றும் நன்றிகுறியவன் ஐயா. மிக்க நன்றிகள்
கடவுள் வாழ்த்தும் நூற்பயனும் அறிந்தேன், அடுத்த செய்யுள் பகுதிக்காக காத்திருக்கிறேன்.......
உங்கள் சேவைக்கு என்றும் நன்றிகுறியவன் ஐயா. மிக்க நன்றிகள்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 4730
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1159
Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு.
பிஜிராமன் wrote:முன்னுரையை முகமலர்ச்சியுடன் படித்தேன், நறுந்தொகை என்ற நீதி நூலை தேர்ந்தெடுத்து கொடுக்கவுள்ள தங்களுக்கு என்னுடைய நன்றிகள் ஐயா.
கடவுள் வாழ்த்தும் நூற்பயனும் அறிந்தேன், அடுத்த செய்யுள் பகுதிக்காக காத்திருக்கிறேன்.......
உங்கள் சேவைக்கு என்றும் நன்றிகுறியவன் ஐயா. மிக்க நன்றிகள்![]()
![]()
![]()
![]()
ஊக்கம் அளித்தமைக்கு நன்றி ராமன்.
விவேக சிந்தாமணியை துவங்கலாம் என்று இருந்தேன்,
நறுந்தொகைப் பாடல்கள் மிக எளிமையானவை. ஆதலால் இந்தத் தேர்வு.

சதாசிவம்- தளபதி

- பதிவுகள்: 1000
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 546
Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு.
விவேக சிந்தாமணியை துவங்கலாம் என்று இருந்தேன்,
நறுந்தொகைப் பாடல்கள் மிக எளிமையானவை. ஆதலால் இந்தத் தேர்வு.
எதைத் தொடங்கினாலும், எனக்கு புதுமையான விருந்தாக தான் இருக்கப் போகிறது ஐயா.
தொடருங்கள்......நன்றிகள் ஐயா

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 4730
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1159
Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு.
தோழமைக்கு,
அட ஈகரையில் மற்றும் ஓர் தொடர் இனிப்பு உள்ளது. உங்கள் தமிழ்ப்பணி தொடரட்டும். தோழமை சதாசிவம் அதை தேன் கலந்து தருவார் என்பதில் ஐயம் இல்லை. வாழ்க!
அட ஈகரையில் மற்றும் ஓர் தொடர் இனிப்பு உள்ளது. உங்கள் தமிழ்ப்பணி தொடரட்டும். தோழமை சதாசிவம் அதை தேன் கலந்து தருவார் என்பதில் ஐயம் இல்லை. வாழ்க!

செல்ல கணேஷ்- இளையநிலா

- பதிவுகள்: 284
வசிப்பிடம்: தேசாந்திரி
சேர்ந்தது: 04/08/2011
மதிப்பீடு: 72
Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு.
செல்ல கணேஷ் wrote:தோழமைக்கு,
அட ஈகரையில் மற்றும் ஓர் தொடர் இனிப்பு உள்ளது. உங்கள் தமிழ்ப்பணி தொடரட்டும். தோழமை சதாசிவம் அதை தேன் கலந்து தருவார் என்பதில் ஐயம் இல்லை. வாழ்க!
உங்கள் நம்பிக்கைக்கு மிக்க நன்றி கணேஷ்.

சதாசிவம்- தளபதி

- பதிவுகள்: 1000
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 546
Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு.
நான் தொடர்ந்து படிக்க விழைகிறேன்.

[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு.
நூல்
1. எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும்
2. கல்விக்கு அழகு கசடு அற மொழிதல்
3. செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்குதல்
4. வேதியர்க்கு அழகு வேதமும் ஒழுக்கமும்
5. மன்னவர்க்கு அழகு செங்கோல் முறைமை
6. வைசியர்க்கு அழகு வளர் பொருள் ஈட்டல்
7. உழவர்க்கு அழகு ஏர்உழுது ஊண் விரும்பல்
8. மந்திரிக்கு அழகு வரும் பொருள் உரைத்தல்
9. தந்திரிக்கு அழகு தறுகண் ஆண்மை
10. உண்டிக்கு அழகு விருந்தோடு உண்டல்
11. பெண்டிர்க்கு அழகு எதிர் பேசாது இருத்தல்
12. குலமகட்கு அழகு தன் கொழுநனைப் பேணுதல்
13. விலை மகட்கு அழகு தன் மேனி மினுக்குதல்
14. அறிஞர்க்கு அழகு கற்று உணர்ந்து அடங்கல்
15. வறிஞர்க்கு அழகு வறுமையில் செம்மை
பொருள் விளக்கம்
1. நாம் உலகை உணர, உலகையாளும் இறைவனை உணர மொழி அவசியம். மொழியின் தொடக்கம் எழுத்து. அந்த எழுத்தை நமக்கு பயிற்றுவிட்ட ஆசிரியர் நமக்கு இறைவன் ஆவார்.
2. நன்கு கற்ற கல்வியுடையவனின் அழகு குற்றம் இல்லாமல் பதில் சொல்லுவது.
3. செல்வம் படைத்தவருக்கு அழகு வறுமையிலுள்ள நல்ல குணம் படைத்த சுற்றத்தாருக்கு வேண்டிய உதவி செய்து துணையாக இருத்தல்.
4. வேதம் ஓதும் வேதியருக்கு அழகு நாள் தவறாமல் வேதம் ஓதுவதும், பிறருக்கு ஒரு துன்பமும் விளைவிக்காமல், அனைத்து ஒழுக்கங்களுடன் சிறந்து விளங்குவது.
5. நாட்டை ஆளும் மன்னனுக்கு அழகு நீதி தவறாமல் அரசாட்சி செய்வது.
6. வணிகருக்கு அழகு நட்டம் வரும் தொழிலில் ஈடுபடாமல், முதல் பெருகும் தொழிலில் ஈடுபட்டு, பணத்தை மேலும் மேலும் பெருக்குதல்.
7. விவசாயம் செய்யும் உழவருக்கு அழகு ஏர் உழுது உணவு உண்ணல்.
8. திறமையான அமைச்சருக்கு அழகு ஒரு செயலைச் செய்தால் என்ன என்ன விளைவுகள் வரும் என்றும், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று அறிவால் ஊகித்து மன்னனுக்கு அறிவுரை சொல்லுதல்.
9. படைத்தளபதிக்கு அழகு போருக்கு அஞ்சாமையும், வெற்றி பெரும் ஆண்மையும்.
10. உண்ணும் உணவுக்கு அழகு தனியே உண்ணாமல், விருந்தினரோடு உண்ணுதல்
11. பெண்களுக்கு அழகு ஒருவர் கோபமாக பேசும் போது, அவரை எதிர்த்து பேசாமல் இருத்தல். (இது வேண்டாத பிரச்சனைகளைத் தவிர்க்கும்)
12. நல்ல குடும்பப் பெண்களுக்கு அழகு கணவனின் தேவைகளை அறிந்து பேணி இருத்தல்.
13. பொது மகளிர்க்கு அழகு ஆண்களை கவர அலங்காரம் செய்து கொள்வதும், உடலை கச்சிதமாக வைத்துக் கொண்டு ஆண்களின் கவனத்தை கவர மேனி மினுக்குவதும்.
14. கல்வி கற்ற அறிவுடையவருக்கு அழகு கற்றதை உணர்ந்து, கர்வம் கொள்ளாமல் தன்னடக்கத்துடன் இருத்தல்.
15. ஏழைகளுக்கு அழகு வறுமை நிலையிலும் சமுதாயத்தில் தவறாகக் கருதும் ஒழுக்கக் கேடுகளில் ஈடுபடாதிருத்தல்.
தொடரும்
1. எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும்
2. கல்விக்கு அழகு கசடு அற மொழிதல்
3. செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்குதல்
4. வேதியர்க்கு அழகு வேதமும் ஒழுக்கமும்
5. மன்னவர்க்கு அழகு செங்கோல் முறைமை
6. வைசியர்க்கு அழகு வளர் பொருள் ஈட்டல்
7. உழவர்க்கு அழகு ஏர்உழுது ஊண் விரும்பல்
8. மந்திரிக்கு அழகு வரும் பொருள் உரைத்தல்
9. தந்திரிக்கு அழகு தறுகண் ஆண்மை
10. உண்டிக்கு அழகு விருந்தோடு உண்டல்
11. பெண்டிர்க்கு அழகு எதிர் பேசாது இருத்தல்
12. குலமகட்கு அழகு தன் கொழுநனைப் பேணுதல்
13. விலை மகட்கு அழகு தன் மேனி மினுக்குதல்
14. அறிஞர்க்கு அழகு கற்று உணர்ந்து அடங்கல்
15. வறிஞர்க்கு அழகு வறுமையில் செம்மை
பொருள் விளக்கம்
1. நாம் உலகை உணர, உலகையாளும் இறைவனை உணர மொழி அவசியம். மொழியின் தொடக்கம் எழுத்து. அந்த எழுத்தை நமக்கு பயிற்றுவிட்ட ஆசிரியர் நமக்கு இறைவன் ஆவார்.
2. நன்கு கற்ற கல்வியுடையவனின் அழகு குற்றம் இல்லாமல் பதில் சொல்லுவது.
3. செல்வம் படைத்தவருக்கு அழகு வறுமையிலுள்ள நல்ல குணம் படைத்த சுற்றத்தாருக்கு வேண்டிய உதவி செய்து துணையாக இருத்தல்.
4. வேதம் ஓதும் வேதியருக்கு அழகு நாள் தவறாமல் வேதம் ஓதுவதும், பிறருக்கு ஒரு துன்பமும் விளைவிக்காமல், அனைத்து ஒழுக்கங்களுடன் சிறந்து விளங்குவது.
5. நாட்டை ஆளும் மன்னனுக்கு அழகு நீதி தவறாமல் அரசாட்சி செய்வது.
6. வணிகருக்கு அழகு நட்டம் வரும் தொழிலில் ஈடுபடாமல், முதல் பெருகும் தொழிலில் ஈடுபட்டு, பணத்தை மேலும் மேலும் பெருக்குதல்.
7. விவசாயம் செய்யும் உழவருக்கு அழகு ஏர் உழுது உணவு உண்ணல்.
8. திறமையான அமைச்சருக்கு அழகு ஒரு செயலைச் செய்தால் என்ன என்ன விளைவுகள் வரும் என்றும், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று அறிவால் ஊகித்து மன்னனுக்கு அறிவுரை சொல்லுதல்.
9. படைத்தளபதிக்கு அழகு போருக்கு அஞ்சாமையும், வெற்றி பெரும் ஆண்மையும்.
10. உண்ணும் உணவுக்கு அழகு தனியே உண்ணாமல், விருந்தினரோடு உண்ணுதல்
11. பெண்களுக்கு அழகு ஒருவர் கோபமாக பேசும் போது, அவரை எதிர்த்து பேசாமல் இருத்தல். (இது வேண்டாத பிரச்சனைகளைத் தவிர்க்கும்)
12. நல்ல குடும்பப் பெண்களுக்கு அழகு கணவனின் தேவைகளை அறிந்து பேணி இருத்தல்.
13. பொது மகளிர்க்கு அழகு ஆண்களை கவர அலங்காரம் செய்து கொள்வதும், உடலை கச்சிதமாக வைத்துக் கொண்டு ஆண்களின் கவனத்தை கவர மேனி மினுக்குவதும்.
14. கல்வி கற்ற அறிவுடையவருக்கு அழகு கற்றதை உணர்ந்து, கர்வம் கொள்ளாமல் தன்னடக்கத்துடன் இருத்தல்.
15. ஏழைகளுக்கு அழகு வறுமை நிலையிலும் சமுதாயத்தில் தவறாகக் கருதும் ஒழுக்கக் கேடுகளில் ஈடுபடாதிருத்தல்.
தொடரும்

சதாசிவம்- தளபதி

- பதிவுகள்: 1000
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 546
Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு.
நல்லதோர் தொடரைத் துவங்கியுள்ளீர்கள்...வாழ்த்துக்கள் தம்பி சதாசிவம்

Dr.சுந்தரராஜ் தயாளன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 2180
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 689
Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு.
பொது மகளிர்க்கு அழகு ஆண்களை கவர அலங்காரம் செய்து கொள்வதும், உடலை கச்சிதமாக வைத்துக் கொண்டு ஆண்களின் கவனத்தை கவர மேனி மினுக்குவதும்.
மிகவும் உள்ளார்ந்த விளக்கங்கள் ஐயா. எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும் என்பதற்கு அளித்த விளக்கம், அருமை ஐயா. அதே போன்று மற்ற நறுந்தொகைக்கும் அருமையாக இருக்கிறது ஐயா.
விலை மகட்கு புதுப் பெயரை தெரிந்து கொண்டேன்.
மிகவும் அருமை ஐயா...........நறுந்தொகை செய்யுள்கள் இது போன்று தனித்தனி வரிகளாக தான் இருக்குமா ஐயா.

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 4730
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1159
Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு.
தொடக்கமே நல்லாயிருக்கு
தொடரட்டும் உங்கள் பணி
உங்களைத் தொடருவோம்
நல்ல தமிழ் அறிய
நாம்!
தொடரட்டும் உங்கள் பணி
உங்களைத் தொடருவோம்
நல்ல தமிழ் அறிய
நாம்!
Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு.
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:நல்லதோர் தொடரைத் துவங்கியுள்ளீர்கள்...வாழ்த்துக்கள் தம்பி சதாசிவம்![]()
![]()
நன்றி ஐயா

சதாசிவம்- தளபதி

- பதிவுகள்: 1000
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 546
Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு.
yarlpavanan wrote:தொடக்கமே நல்லாயிருக்கு
தொடரட்டும் உங்கள் பணி
உங்களைத் தொடருவோம்
நல்ல தமிழ் அறிய
நாம்!
நன்றி யாழ்பாவானன் அவர்களே
தொடருங்கள்,

சதாசிவம்- தளபதி

- பதிவுகள்: 1000
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 546
Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு.
பிஜிராமன் wrote:பொது மகளிர்க்கு அழகு ஆண்களை கவர அலங்காரம் செய்து கொள்வதும், உடலை கச்சிதமாக வைத்துக் கொண்டு ஆண்களின் கவனத்தை கவர மேனி மினுக்குவதும்.
மிகவும் உள்ளார்ந்த விளக்கங்கள் ஐயா. எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும் என்பதற்கு அளித்த விளக்கம், அருமை ஐயா. அதே போன்று மற்ற நறுந்தொகைக்கும் அருமையாக இருக்கிறது ஐயா.![]()
விலை மகட்கு புதுப் பெயரை தெரிந்து கொண்டேன்.
மிகவும் அருமை ஐயா...........நறுந்தொகை செய்யுள்கள் இது போன்று தனித்தனி வரிகளாக தான் இருக்குமா ஐயா.![]()
நன்றி ராமன்.
நான் முன்னுரையில் குறிப்பிட்டது போல் நறுந்தொகைப்பாடல்கள் தனிதனிச் செய்யுள்கள் மட்டுமல்லாது. தொடர் வாக்கியங்கள் உள்ள செய்யுளாகவும். முதல் செய்யுளையும் அடுத்த செய்யுளையும் இணைத்து பொருள் கொள்ளுமாறும் உள்ளது.
அடுத்த செய்யுளை கவனியுங்கள்.

சதாசிவம்- தளபதி

- பதிவுகள்: 1000
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 546
Page 1 of 3 • 1, 2, 3 
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum








