|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» ஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே!by கே. பாலா Today at 10:25 pm
» அறிமுகம் ...
by யினியவன் Today at 10:25 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by கேசவன் Today at 10:03 pm
» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by வை.பாலாஜி Today at 9:50 pm
» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ
by புரட்சி Today at 8:58 pm
» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm
» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm
» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm
» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm
» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm
» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm
» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm
» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm
» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm
» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm
» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm
» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.
Page 2 of 4 • Share •
Page 2 of 4 •
1, 2, 3, 4 
நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.
First topic message reminder :
தமிழ் மொழி நீதி நூல்களுக்கு பெயர் பெற்றது. பதினென்கீழ் கணக்கு நூல்கள் மட்டுமல்லாது நீதி கூறும் நூல்கள் ஏராளம் இங்கு உள்ளது.
மனிதன் மனிதனாக வாழ ஒழுக்கம் அவசியம், ஒழுக்கம் தவறி பிறருக்கு துன்பம் விளைவிக்கும் போது மக்களாகிய மனிதன் மாக்களில் கலந்து விடுகிறான். இன்று உயர் நிலையில் இருக்கும் பல நாடுகள் நாகரீகம் என்றால் என்ன என்று தெரியாத காட்டுமனிதர்களாக வாழ்ந்த காலத்தில் நாம் நாகரீகத்தின் உச்சத்தில் இருந்திருக்கிறோம் என்பதற்கு இப்படி உள்ள தமிழ் நூல்களே சான்று.
இப்படி நீதி கூறும் பல நூல்களில் மக்களிடம் பிரபலம் ஆகாத ஒரு சில நூல்களில் அதிவீர ராம பாண்டியர் எழுதிய நறுந்தொகையும் ஒன்று. இதில் இடம் பெற்ற வரிகள் மூலம் இது வெற்றிவேற்கை என்றும் அழைக்கப்படுகிறது.
நறுந்தொகை என்பது நறுமை + தொகை, அதாவது நன்மை + தொகை, வாழ்விற்கு நன்மை பயக்கும் பல நல்ல செய்திகளை, ஒழுக்கங்களை, வாழ்வியல் உண்மைகளை அழகாகக் எடுத்துக் கூறுவது இந்த நூலின் சிறப்பு. இந்த நூலில் இடம் பெறும் நூல் பயன் மூலம் இதை எழுதியவர் கொற்கையாண்ட அதிவீர ராம பாண்டியர் என்பது புலனாகிறது. இவர் 10 -11 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கொற்கையாண்ட பாண்டிய மன்னர். சிலர் இவர் வாழ்ந்த காலம் 15 ஆம் நூற்றாண்டு என்றும் கூறுகின்றனர். கொற்கை என்பது பாண்டிய நாட்டில் இருந்த கடற்கரை நகரம். கொற்கை முத்துகள் குறித்த செய்தி சிலம்பில் இடம் பெற்றுள்ளது. இது இன்றைக்கு அழைக்கப்படும் தூத்துக்குடி, தென்காசி பகுதியை குறிக்கிறது.
இவர் தமிழில் மேலும் பல நூல்களை இயற்றியுள்ளார், அவையாவன நைடதம், கூர்மபுராணம், இலிங்கபுராணம், காசிக்காண்டம், வாயு சங்கிதை, திருக்கருவை அந்தாதிகள் ஆகியவை, இன்னூல்கள் பெரும்பான்மை வடமொழி நூல்களின் சாயலில் பாடப்பெற்றவையாக இருப்பதினால் இவர் அம்மொழியிலும் தேர்ச்சி பேற்றிருந்தார் எனக் கொள்ளலாம். இவர் சிறந்த சிவபக்தர் என்பது இவர் எழுதிய நூல்கள் வாயிலாக அறிய முடிகிறது. இவரியற்றிய நூல்களுள்ளே நைடதமானது இலக்கியப் பயிற்சிக்குச் சிறந்த நூலாகக்கொண்டு தமிழ்மக்கள் பல்லோரானும் பாராட்டிப் படிக்கப்படுகின்றது.
நறுந்தொகை மொத்தம் 82 செய்யுள்கள் கொண்ட தொகுப்பு நூலாகும். இதில் ஒரு சில செய்யுள்கள் தனிச் செய்யுளாகவும், ஒரு சில செய்யுள்கள் அதற்கு அடுத்து வரும் செய்யுள் வரிகளோடு தொடர்ப்பு கொண்டு பொருள் கொள்ளுமாறு அமைக்கப்பட்டுள்ளது. புறநானூறு, நாலடியார் நூல்களில் வரும் பாடல் வரிகளும் , பொருளும் சில பாடல்களில் பொருந்தி வருகிறது. பல நேரங்களில் ஔவையார் எழுதியதாக கோடிடப்படும் செய்யுள் வரிகள் உண்மையில் இந்த நூலில் இருந்து எடுக்கப்பட்டவை.
நல்ல தமிழ் அறிவோம் தொடரில், இனி இந்த நறுந்தொகைப் பாடல்களைப் பயில்வோம்.
தமிழ் மொழி நீதி நூல்களுக்கு பெயர் பெற்றது. பதினென்கீழ் கணக்கு நூல்கள் மட்டுமல்லாது நீதி கூறும் நூல்கள் ஏராளம் இங்கு உள்ளது.
மனிதன் மனிதனாக வாழ ஒழுக்கம் அவசியம், ஒழுக்கம் தவறி பிறருக்கு துன்பம் விளைவிக்கும் போது மக்களாகிய மனிதன் மாக்களில் கலந்து விடுகிறான். இன்று உயர் நிலையில் இருக்கும் பல நாடுகள் நாகரீகம் என்றால் என்ன என்று தெரியாத காட்டுமனிதர்களாக வாழ்ந்த காலத்தில் நாம் நாகரீகத்தின் உச்சத்தில் இருந்திருக்கிறோம் என்பதற்கு இப்படி உள்ள தமிழ் நூல்களே சான்று.
இப்படி நீதி கூறும் பல நூல்களில் மக்களிடம் பிரபலம் ஆகாத ஒரு சில நூல்களில் அதிவீர ராம பாண்டியர் எழுதிய நறுந்தொகையும் ஒன்று. இதில் இடம் பெற்ற வரிகள் மூலம் இது வெற்றிவேற்கை என்றும் அழைக்கப்படுகிறது.
நறுந்தொகை என்பது நறுமை + தொகை, அதாவது நன்மை + தொகை, வாழ்விற்கு நன்மை பயக்கும் பல நல்ல செய்திகளை, ஒழுக்கங்களை, வாழ்வியல் உண்மைகளை அழகாகக் எடுத்துக் கூறுவது இந்த நூலின் சிறப்பு. இந்த நூலில் இடம் பெறும் நூல் பயன் மூலம் இதை எழுதியவர் கொற்கையாண்ட அதிவீர ராம பாண்டியர் என்பது புலனாகிறது. இவர் 10 -11 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கொற்கையாண்ட பாண்டிய மன்னர். சிலர் இவர் வாழ்ந்த காலம் 15 ஆம் நூற்றாண்டு என்றும் கூறுகின்றனர். கொற்கை என்பது பாண்டிய நாட்டில் இருந்த கடற்கரை நகரம். கொற்கை முத்துகள் குறித்த செய்தி சிலம்பில் இடம் பெற்றுள்ளது. இது இன்றைக்கு அழைக்கப்படும் தூத்துக்குடி, தென்காசி பகுதியை குறிக்கிறது.
இவர் தமிழில் மேலும் பல நூல்களை இயற்றியுள்ளார், அவையாவன நைடதம், கூர்மபுராணம், இலிங்கபுராணம், காசிக்காண்டம், வாயு சங்கிதை, திருக்கருவை அந்தாதிகள் ஆகியவை, இன்னூல்கள் பெரும்பான்மை வடமொழி நூல்களின் சாயலில் பாடப்பெற்றவையாக இருப்பதினால் இவர் அம்மொழியிலும் தேர்ச்சி பேற்றிருந்தார் எனக் கொள்ளலாம். இவர் சிறந்த சிவபக்தர் என்பது இவர் எழுதிய நூல்கள் வாயிலாக அறிய முடிகிறது. இவரியற்றிய நூல்களுள்ளே நைடதமானது இலக்கியப் பயிற்சிக்குச் சிறந்த நூலாகக்கொண்டு தமிழ்மக்கள் பல்லோரானும் பாராட்டிப் படிக்கப்படுகின்றது.
நறுந்தொகை மொத்தம் 82 செய்யுள்கள் கொண்ட தொகுப்பு நூலாகும். இதில் ஒரு சில செய்யுள்கள் தனிச் செய்யுளாகவும், ஒரு சில செய்யுள்கள் அதற்கு அடுத்து வரும் செய்யுள் வரிகளோடு தொடர்ப்பு கொண்டு பொருள் கொள்ளுமாறு அமைக்கப்பட்டுள்ளது. புறநானூறு, நாலடியார் நூல்களில் வரும் பாடல் வரிகளும் , பொருளும் சில பாடல்களில் பொருந்தி வருகிறது. பல நேரங்களில் ஔவையார் எழுதியதாக கோடிடப்படும் செய்யுள் வரிகள் உண்மையில் இந்த நூலில் இருந்து எடுக்கப்பட்டவை.
நல்ல தமிழ் அறிவோம் தொடரில், இனி இந்த நறுந்தொகைப் பாடல்களைப் பயில்வோம்.
Last edited by சதாசிவம் on Tue Feb 28, 2012 6:20 pm; edited 1 time in total

சதாசிவம்- தளபதி

- பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671
Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.
16. தேம்படு பனையின் திரள்பழத் தொருவிதை
வானுற வோங்கி வளம்பெற வளரினும்
ஒருவர்க் கிருக்க நிழலா காதே
17. தெள்ளிய ஆலின் சிறுபழத தொருவிதை
தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும்
நுண்ணிதே யாயினும் அண்ணல் யானை
அணிதேர் புரவி யாட்பெரும் படையொடு
மன்னர்க் கிருக்க நிழலா கும்மே.
18. பெரியோ ரெல்லாம் பெரியரு மல்லர்.
19. சிறியோ ரெல்லாம் சிறியரு மல்லர்.
20. பெற்றோ ரெல்லாம் பிள்ளைக ளல்லர்.
21. உற்றோ ரெல்லாம் உறவின ரல்லர்.
22. கொண்டோ ரெல்லாம் பெண்டிரு மல்லர்.
பொருள் விளக்கம்
16. நீண்டு நெடிந்து உயர்ந்து இருக்கும் பனைமரத்தில் பழமும், அதில் இருந்து வரும் விதையும் கை கொள்ளும் அளவிற்கு பெரிதாக இருக்கும். அது வானுற வளர்ந்து இருந்தாலும் அந்த மரத்தில் இருந்து வரும் நிழல் ஒருவருக்கும் நிழல் ஆகாது.
17. பசுமையான வளமான ஆலமரத்தின் சிறிய விதை, ஒரு சிறு ஓடையில் வாழும் சிறிய மீனின் முட்டையை விட சிறிதாக இருக்கும். ஆனால் அதில் இருந்து வரும் சிறிய செடி, பெரிதாக வளர்ந்து ஆயிரம் விழுதுகளுடன் பெருகி படர்திருக்கும் போது பெரிய மன்னனின் யானைப் படை, தேர்ப்படை, குதிரைப்படை, காலாட்படை ஆகிய அனைவருக்கும் நிழல் தரும்.
18. உருவத்தால் பெரியவர் என்று நாம் நினைப்பவர் அனைவரும் பெரியவரும் இல்லை.
19. உருவத்தால் சிறியவர் என்று நினைக்கும் சிறியவர் எல்லாம் சிறியவர் அல்ல.
20. நமக்கு பிறந்த அனைவரும் பிள்ளைகளாக மாட்டார்கள். நல்ல குணத்தோடு, குலம் வளர இருக்கும் பிள்ளைகளே பிள்ளைகளாவர்.
21. உறவினர் என்று இருக்கும் அனைவரும் உறவினர் ஆகாது. இன்பத்தில் பங்கு கொள்ளவது மட்டுமல்லாமல் துன்பத்திலும் பங்கு கொள்பவரே உறவினர் ஆவார்கள்.
22. மனைவியாக கட்டிக்கொண்டவர் அனைவரும் மனைவி ஆக மாட்டார்கள். கொண்டவன் குறிப்பு அறிந்து, நல்ல குணத்துடன் நடப்பவளே சிறந்த மனைவி.
16 முதல் 22 வரை உள்ள பாடல்களை தனியாக படிக்கலாம். பொருள் வரும். ஒன்றாக வாசித்து படித்தால் தொடர்புடைய வார்த்தைகளால் அழகிய நீளமான பாடலும், ஆழமான பொருளும் வரும்.
இது நறுந்தொகையின் சிறப்பு.
பாடல் 19 உடன் தொடர்புடைய மூதுரை
மடல்பெரிது தாழை மகிழினிது கந்தம்
உடல்சிறியர் என்று இருக்க வேண்டா -கடல்பெரிது
மண்ணீரும் ஆகாது அதனருகே சிற்றூறல்
உண்ணீ ருமாகி விடும்.
பாடல் 21 உடன் தொடர்புடைய மூதுரை
உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா
உடன்பிறந்தே கொல்லும் வியாதி - உடன் பிறவா
மாமலையில் உள்ள மருந்தே பிணிதீர்க்கும்
அம்மருந்து போல்வாரும் உண்டு.
இங்கு உள்ள ஒரு பாடலுக்கு வேறு ஒரு பார்வையில் அமைந்த பொருளை இங்கே காணவும். மரபுப் பாடல்களின் சிறப்பு இதன் மூலம் அறியலாம்.
[You must be registered and logged in to see this link.]
தொடரும்
வானுற வோங்கி வளம்பெற வளரினும்
ஒருவர்க் கிருக்க நிழலா காதே
17. தெள்ளிய ஆலின் சிறுபழத தொருவிதை
தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும்
நுண்ணிதே யாயினும் அண்ணல் யானை
அணிதேர் புரவி யாட்பெரும் படையொடு
மன்னர்க் கிருக்க நிழலா கும்மே.
18. பெரியோ ரெல்லாம் பெரியரு மல்லர்.
19. சிறியோ ரெல்லாம் சிறியரு மல்லர்.
20. பெற்றோ ரெல்லாம் பிள்ளைக ளல்லர்.
21. உற்றோ ரெல்லாம் உறவின ரல்லர்.
22. கொண்டோ ரெல்லாம் பெண்டிரு மல்லர்.
பொருள் விளக்கம்
16. நீண்டு நெடிந்து உயர்ந்து இருக்கும் பனைமரத்தில் பழமும், அதில் இருந்து வரும் விதையும் கை கொள்ளும் அளவிற்கு பெரிதாக இருக்கும். அது வானுற வளர்ந்து இருந்தாலும் அந்த மரத்தில் இருந்து வரும் நிழல் ஒருவருக்கும் நிழல் ஆகாது.
17. பசுமையான வளமான ஆலமரத்தின் சிறிய விதை, ஒரு சிறு ஓடையில் வாழும் சிறிய மீனின் முட்டையை விட சிறிதாக இருக்கும். ஆனால் அதில் இருந்து வரும் சிறிய செடி, பெரிதாக வளர்ந்து ஆயிரம் விழுதுகளுடன் பெருகி படர்திருக்கும் போது பெரிய மன்னனின் யானைப் படை, தேர்ப்படை, குதிரைப்படை, காலாட்படை ஆகிய அனைவருக்கும் நிழல் தரும்.
18. உருவத்தால் பெரியவர் என்று நாம் நினைப்பவர் அனைவரும் பெரியவரும் இல்லை.
19. உருவத்தால் சிறியவர் என்று நினைக்கும் சிறியவர் எல்லாம் சிறியவர் அல்ல.
20. நமக்கு பிறந்த அனைவரும் பிள்ளைகளாக மாட்டார்கள். நல்ல குணத்தோடு, குலம் வளர இருக்கும் பிள்ளைகளே பிள்ளைகளாவர்.
21. உறவினர் என்று இருக்கும் அனைவரும் உறவினர் ஆகாது. இன்பத்தில் பங்கு கொள்ளவது மட்டுமல்லாமல் துன்பத்திலும் பங்கு கொள்பவரே உறவினர் ஆவார்கள்.
22. மனைவியாக கட்டிக்கொண்டவர் அனைவரும் மனைவி ஆக மாட்டார்கள். கொண்டவன் குறிப்பு அறிந்து, நல்ல குணத்துடன் நடப்பவளே சிறந்த மனைவி.
16 முதல் 22 வரை உள்ள பாடல்களை தனியாக படிக்கலாம். பொருள் வரும். ஒன்றாக வாசித்து படித்தால் தொடர்புடைய வார்த்தைகளால் அழகிய நீளமான பாடலும், ஆழமான பொருளும் வரும்.
இது நறுந்தொகையின் சிறப்பு.
பாடல் 19 உடன் தொடர்புடைய மூதுரை
மடல்பெரிது தாழை மகிழினிது கந்தம்
உடல்சிறியர் என்று இருக்க வேண்டா -கடல்பெரிது
மண்ணீரும் ஆகாது அதனருகே சிற்றூறல்
உண்ணீ ருமாகி விடும்.
பாடல் 21 உடன் தொடர்புடைய மூதுரை
உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா
உடன்பிறந்தே கொல்லும் வியாதி - உடன் பிறவா
மாமலையில் உள்ள மருந்தே பிணிதீர்க்கும்
அம்மருந்து போல்வாரும் உண்டு.
இங்கு உள்ள ஒரு பாடலுக்கு வேறு ஒரு பார்வையில் அமைந்த பொருளை இங்கே காணவும். மரபுப் பாடல்களின் சிறப்பு இதன் மூலம் அறியலாம்.
[You must be registered and logged in to see this link.]
தொடரும்

சதாசிவம்- தளபதி

- பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671
Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.
உண்மையானது எது என்பதற்கு நறுந்தொகையில் தரப்படும் விளக்கம் மிகவும் அருமை

[You must be registered and logged in to see this link.]
அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 4578
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042
Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.
அசுரன் wrote:உண்மையானது எது என்பதற்கு நறுந்தொகையில் தரப்படும் விளக்கம் மிகவும் அருமை![]()
நன்றி அசுரன்.

சதாசிவம்- தளபதி

- பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671
Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.
மிக மிக அருமை ஐயா..........கூடுதலாய், நறுந்தொகையை ஒட்டி எழுதப்பட்ட பாடல்களையும் தருவது, மிகவும் சிறப்பு ஐயா.......மிக்க நன்றிகள்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.
[color=green]23. அடினுமா வின்பால் தன்சுவை குன்றாது.
24. சுடினுஞ் செம்பொன் தன்னொளி கெடாது.
25. அரைக்கினுஞ் சந்தனந் தன்மண மறாது
26. புகைக்கினும் காரகில் பொல்லாங்கு கமழாது.
27. கலக்கினும் தண்கடல் சேறா காது.
28. அடினும்பால் பெய்துகைப் பறாதுபேய்ச் சுரைக்காய் .
29. ஊட்டினும் பல்விரை யுள்ளிகம ழாதே.
30. பெருமையும் சிறுமையுந் தான்தர வருமே.
பொருள் விளக்கம்
23. நன்றாக பலமுறை காய்சினாலும் பசுவின் பால் சுவை குறையாது
24. நன்றாக நெருப்பில் இட்டாலும் தங்கத்தின் ஒளி குறையாது.
அடுதல் என்றால், நேரடியாக நெருப்பில் இடாமல் சமைத்தல் என்று பொருள் வரும். அடுதல் என்றால் அழித்தல் என்று பொருள் கொள்ளலாம். ஒரு பொருளின் இயற்கை தன்மையை அழித்து அதை வடிவம் மாறாமல் இருப்பதை அடுதல் என்று கூறலாம். அடுப்பு என்று சொல்லும் இதில் இருந்து பிறந்து இருக்கலாம். பொருளை வடிவம் மாறாமல் சமைக்கும் இடத்தை அடுமனை (பேக்கரி) என்று கூறுவதும் இப்படி ஒரு பொருளில் இருந்து வந்ததது தான்.
சுடுதல் என்றால் நேரடியாக நெருப்பில் இடுதல். நெருப்பில் இடும் போது பொருள் முற்றிலும் மாறி சாம்பல் ஆக மாறி விடும், ஒரு சில பொருள்கள் தவிர, உதாரணம் சங்கு, தங்கம். வைரம் கூட கரியாகிவிடும். தமிழில் புதைக்கும் இடத்தை இடுகாடு என்றும், சுடும் இடத்தை சுடுகாடு என்று அழைப்பதற்க்கு இது தான் காரணம்,
இதைத்தான் மூதுரையில் அட்டாலும் பால் சுவை மாறாது, சுட்டாலும் சங்கு வெண்மை தரும் என்று ஔவை கூறுகிறார். ஒரு கருத்து உதாரணம் சொல்லும் போது கூட எவ்வளவு யோசித்து எழுதி இருக்கிறார்கள் என்று நினைத்தால் வியப்பாக இருக்கிறது.
25. சந்தனம் தேய்த்து தேய்த்து சிறிய துண்டாக மாறினாலும் தன் மணம் குன்றாது.
சந்தன மென்குறடு தான்தேய்ந்த காலத்தும்
கந்தம் குறைபடாது - மூதுரை
26. புகையை கொடுத்தாலும் அகில் கட்டை மணம் வீசும் (அறியாதவர்கள் சாம்பிரானியை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.)
27. எத்தனை கப்பல் போல் கலக்கினும், எத்தனை நதி போல் இணைந்தாலும் கடல் சேறாகாது.
28. நன்றாக சுவையான பாலை ஊற்றி சமைத்தாலும் பேய் சுரைக்காயின் கசப்பு மாறாது.
29. பல வாசனை பொருளுடன் கலந்து ஊட்டினும் பல துண்டுகளை உடைய பூண்டு மணக்காது.
30. மேல சொன்ன பொருள்கள் எப்படி அதன் இயற்க்கை குணத்தில் இருந்து மாறாமல் இருக்கிறதோ, அது போல் தான் நமது வாழ்க்கையும், நாம் செய்யும் பாவம் புண்ணியம் என்ற செயல்களுக்கு ஏற்ப அமையும். இல்லாத ஒன்று வராது, இருக்கின்ற ஒன்று போகாது. இதன் படி ஒருவருக்கும் வரும் பெருமையும் சிறுமையும் அவர் அவர் செயல்கள் பொறுத்தே அமையும். பெருமை வேண்டின் நல்ல செயல் செய்ய வேண்டும்.
24. சுடினுஞ் செம்பொன் தன்னொளி கெடாது.
25. அரைக்கினுஞ் சந்தனந் தன்மண மறாது
26. புகைக்கினும் காரகில் பொல்லாங்கு கமழாது.
27. கலக்கினும் தண்கடல் சேறா காது.
28. அடினும்பால் பெய்துகைப் பறாதுபேய்ச் சுரைக்காய் .
29. ஊட்டினும் பல்விரை யுள்ளிகம ழாதே.
30. பெருமையும் சிறுமையுந் தான்தர வருமே.
பொருள் விளக்கம்
23. நன்றாக பலமுறை காய்சினாலும் பசுவின் பால் சுவை குறையாது
24. நன்றாக நெருப்பில் இட்டாலும் தங்கத்தின் ஒளி குறையாது.
அடுதல் என்றால், நேரடியாக நெருப்பில் இடாமல் சமைத்தல் என்று பொருள் வரும். அடுதல் என்றால் அழித்தல் என்று பொருள் கொள்ளலாம். ஒரு பொருளின் இயற்கை தன்மையை அழித்து அதை வடிவம் மாறாமல் இருப்பதை அடுதல் என்று கூறலாம். அடுப்பு என்று சொல்லும் இதில் இருந்து பிறந்து இருக்கலாம். பொருளை வடிவம் மாறாமல் சமைக்கும் இடத்தை அடுமனை (பேக்கரி) என்று கூறுவதும் இப்படி ஒரு பொருளில் இருந்து வந்ததது தான்.
சுடுதல் என்றால் நேரடியாக நெருப்பில் இடுதல். நெருப்பில் இடும் போது பொருள் முற்றிலும் மாறி சாம்பல் ஆக மாறி விடும், ஒரு சில பொருள்கள் தவிர, உதாரணம் சங்கு, தங்கம். வைரம் கூட கரியாகிவிடும். தமிழில் புதைக்கும் இடத்தை இடுகாடு என்றும், சுடும் இடத்தை சுடுகாடு என்று அழைப்பதற்க்கு இது தான் காரணம்,
இதைத்தான் மூதுரையில் அட்டாலும் பால் சுவை மாறாது, சுட்டாலும் சங்கு வெண்மை தரும் என்று ஔவை கூறுகிறார். ஒரு கருத்து உதாரணம் சொல்லும் போது கூட எவ்வளவு யோசித்து எழுதி இருக்கிறார்கள் என்று நினைத்தால் வியப்பாக இருக்கிறது.
25. சந்தனம் தேய்த்து தேய்த்து சிறிய துண்டாக மாறினாலும் தன் மணம் குன்றாது.
சந்தன மென்குறடு தான்தேய்ந்த காலத்தும்
கந்தம் குறைபடாது - மூதுரை
26. புகையை கொடுத்தாலும் அகில் கட்டை மணம் வீசும் (அறியாதவர்கள் சாம்பிரானியை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.)
27. எத்தனை கப்பல் போல் கலக்கினும், எத்தனை நதி போல் இணைந்தாலும் கடல் சேறாகாது.
28. நன்றாக சுவையான பாலை ஊற்றி சமைத்தாலும் பேய் சுரைக்காயின் கசப்பு மாறாது.
29. பல வாசனை பொருளுடன் கலந்து ஊட்டினும் பல துண்டுகளை உடைய பூண்டு மணக்காது.
30. மேல சொன்ன பொருள்கள் எப்படி அதன் இயற்க்கை குணத்தில் இருந்து மாறாமல் இருக்கிறதோ, அது போல் தான் நமது வாழ்க்கையும், நாம் செய்யும் பாவம் புண்ணியம் என்ற செயல்களுக்கு ஏற்ப அமையும். இல்லாத ஒன்று வராது, இருக்கின்ற ஒன்று போகாது. இதன் படி ஒருவருக்கும் வரும் பெருமையும் சிறுமையும் அவர் அவர் செயல்கள் பொறுத்தே அமையும். பெருமை வேண்டின் நல்ல செயல் செய்ய வேண்டும்.
Last edited by சதாசிவம் on Fri Feb 03, 2012 6:47 pm; edited 1 time in total

சதாசிவம்- தளபதி

- பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671
Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.
இத்தனை உதாரங்களை நம் புலவர்கள் எப்படி கடைந்து எடுத்தார்களோ.......மிக மிக அருமை..........
அடுதலுக்கு தாங்கள் அளித்த விளக்கம் மிகச் சிறப்பு ஐயா.....
மிக்க நன்றிகள் ஐயா..........
அடுதலுக்கு தாங்கள் அளித்த விளக்கம் மிகச் சிறப்பு ஐயா.....
மிக்க நன்றிகள் ஐயா..........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.
31. சிறியோர் செய்த சிறுபிழை யெல்லாம்
பெரியோ ராயிற் பொறுப்பது கடனே
32. சிறியோர் பெரும்பிழை செய்தன ராயிற்
பெரியோ ரப்பிழை பொறுத்தலு மரிதே.
33. நூறாண்டு பழகினும் மூர்க்கர் கேண்மை
நீர்க்குட் பாசிபோல் வேர்க்கொள் ளாதே.
34. ஒருநாட் பழகினும் பெரியோர் கேண்மை
இருநிலம் பிளக்க வேர்வீழ்க் கும்மே. [/color]
பொருள் விளக்கம்
31.சிறிய புத்தி உடையவர்கள் செய்யும் சிறிய தவறுகளை பொறுப்பது பெரியவர்களின் கடமை.
32. சிறிய புத்தி உடையவர்கள் அடுத்தவருக்கு துன்பம் வரும் வகையில் பெரிய குற்றம் செய்தால் அதை பெரியவர்கள் பொறுத்து மன்னித்து விடுதல் மிகவும் அரிதானது. அவர்கள் மன்னிக்க மாட்டார்கள்.
33. நூறு வருடம் இணைந்து பழகினாலும் சிறிய புத்தி உடையவருடன் இருக்கும் நட்பு நீருக்குள் இருக்கும் பாசி போல் வேர் கொள்ளாமல் விலகி விடும். இருக்கும் நீர் இருக்கும் வரை வளரும், வளர்ந்து நீரின் தூய்மையை கெடுத்து விடும். நீரில் மாசு உண்டாக்கி அந்த நீரில் துர்நாற்றம் வீசச் செய்யும். சின்ன குணம் உடையவர்களில் நட்பு இது போல் தான்.
34. நல்ல குணம் உடையவரின் நட்பு ஒரு நாள் பழகினாலும் ஆழமான நிலத்தை வெடித்து பிளந்து செல்லும் வேர் போல் உறுதியாக இருக்கும். நிலத்தை வெடித்து பிளந்து சென்றாலும் வேர் மண்ணின் ஈரத்தை தக்க வைத்து கொள்ளும். நிலம் வளம் பெற்ற மரம் தந்து மழை தந்து நாட்டுக்கு பயன்படும். பெரியவர்கள் நட்பு இது போல் தான்.
தொடரும்
பெரியோ ராயிற் பொறுப்பது கடனே
32. சிறியோர் பெரும்பிழை செய்தன ராயிற்
பெரியோ ரப்பிழை பொறுத்தலு மரிதே.
33. நூறாண்டு பழகினும் மூர்க்கர் கேண்மை
நீர்க்குட் பாசிபோல் வேர்க்கொள் ளாதே.
34. ஒருநாட் பழகினும் பெரியோர் கேண்மை
இருநிலம் பிளக்க வேர்வீழ்க் கும்மே. [/color]
பொருள் விளக்கம்
31.சிறிய புத்தி உடையவர்கள் செய்யும் சிறிய தவறுகளை பொறுப்பது பெரியவர்களின் கடமை.
32. சிறிய புத்தி உடையவர்கள் அடுத்தவருக்கு துன்பம் வரும் வகையில் பெரிய குற்றம் செய்தால் அதை பெரியவர்கள் பொறுத்து மன்னித்து விடுதல் மிகவும் அரிதானது. அவர்கள் மன்னிக்க மாட்டார்கள்.
33. நூறு வருடம் இணைந்து பழகினாலும் சிறிய புத்தி உடையவருடன் இருக்கும் நட்பு நீருக்குள் இருக்கும் பாசி போல் வேர் கொள்ளாமல் விலகி விடும். இருக்கும் நீர் இருக்கும் வரை வளரும், வளர்ந்து நீரின் தூய்மையை கெடுத்து விடும். நீரில் மாசு உண்டாக்கி அந்த நீரில் துர்நாற்றம் வீசச் செய்யும். சின்ன குணம் உடையவர்களில் நட்பு இது போல் தான்.
34. நல்ல குணம் உடையவரின் நட்பு ஒரு நாள் பழகினாலும் ஆழமான நிலத்தை வெடித்து பிளந்து செல்லும் வேர் போல் உறுதியாக இருக்கும். நிலத்தை வெடித்து பிளந்து சென்றாலும் வேர் மண்ணின் ஈரத்தை தக்க வைத்து கொள்ளும். நிலம் வளம் பெற்ற மரம் தந்து மழை தந்து நாட்டுக்கு பயன்படும். பெரியவர்கள் நட்பு இது போல் தான்.
தொடரும்

சதாசிவம்- தளபதி

- பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671
Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.
பிஜிராமன் wrote:இத்தனை உதாரங்களை நம் புலவர்கள் எப்படி கடைந்து எடுத்தார்களோ.......மிக மிக அருமை..........
அடுதலுக்கு தாங்கள் அளித்த விளக்கம் மிகச் சிறப்பு ஐயா.....![]()
![]()
மிக்க நன்றிகள் ஐயா..........![]()
![]()
பிஜிராமன் wrote:இத்தனை உதாரங்களை நம் புலவர்கள் எப்படி கடைந்து எடுத்தார்களோ.......மிக மிக அருமை..........
அடுதலுக்கு தாங்கள் அளித்த விளக்கம் மிகச் சிறப்பு ஐயா.....![]()
![]()
மிக்க நன்றிகள் ஐயா..........![]()
![]()
நன்றி ராமன்

சதாசிவம்- தளபதி

- பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671
Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.
35.
கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே.
36.
கல்லா ஒருவன் குலநலம் பேசுதல்
நெல்லினுட் பிறந்த பதரா கும்மே.
37.
நாற்பாற் குலத்தின் மேற்பா லொருவன்
கற்றில னாயிற் கீழிருப் பவனே.
38.
எக்குடிப் பிறப்பினும் யாவரே யாயினும்
அக்குடியிற் கற்றோரை மேல்வரு கென்பர்.
39.
அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்.
அச்சம் உள் அடக்கி அறிவு அகத்து இல்லாக்
40.
கொச்சை மக்களைப் பெறுதலின் அக்குடி
எச்சம் அற்று ஏமாந்து இருக்கை நன்று
பொருள் விளக்கம்
35.
கல்வி கற்பது சிறந்தது, கல்வி கற்பது சிறந்தது வறுமை வந்து தாழ்ந்து போனாலும் கல்வியை நிறுத்தாமல் கல்வி கற்பது என்றும் நன்று (கல்வியை வலியுறுத்த இரண்டு முறை கூறப்பட்டுள்ளது)
36.
கல்வி கற்காத ஒருவன் தன் குலத்தின் பெருமையை பேசுதல் நன்றாக விளைந்த நெல் இடையே இருக்கும் பதரைப் போன்றது. பதர் என்பது அரிசி மணி இல்லாமல் காலியாக இருக்கும் நெல் மணி. பார்ப்பதற்கு நெல் போன்று தோற்றம் அளித்தாலும் அரிசியாக்கும் இடத்தில் இதன் குணம் தெரிந்துவிடும். அது போல் நல்ல குலத்தில் பிறந்து ஊரார் இவர் சிறந்தவர் என்று எண்ணி இருந்தாலும் கல்வி கேள்வி விஷயங்கள் வரும் போது படிக்காதவரின் அறியாமை வெளியில் தெரிந்து விடும். ஊரார் மதிக்கும் மிக உயர்ந்து குலத்தில் பிறந்து இருந்தாலும் அவனுக்கும் கல்வி அவசியம்.
37.
நான்கு வர்ணத்தாரின் மேல் வர்ணம் என்று சொல்லப்படும் வர்ணத்தில் பிறந்தவன் கல்வி கற்கவில்லை என்றால் கீழானவன் ஆவான்.
38.
எந்த குடியில் பிறந்தவன் ஆனாலும், எந்த இடத்தில் இருந்து வந்தவன் ஆனாலும் அக்குடியில் கற்றோறை உலகத்தார் மேல் வருக என்பர்.
39.
அறிவுள்ள ஒருவனை அரசனும் ஆபத்து காலத்தில் உதவுவான் என்று, தன்னருகே வைத்து கொள்வான்.
40.
கல்வி கற்று வாழ்க்கை உணர்ந்து தவறு செய்ய அச்சமும், அறிவு அகத்துள்ளே இல்லாத ஒன்றுக்கும் உதவாத மக்களைப் பெறுவதை விட வாரிசு இல்லாமல் ஒரு குடி அழிவதே மேல்.
இந்த பாடலுக்கு மூலமாக இருந்து இதே கருத்தை வலியுறுத்தும் புறநானூறுப் பாடல்.
உற்றுழி உதவியும், உறு பொருள் கொடுத்தும்,
பிற்றைநிலை முனியாது, கற்றல் நன்றே!
பிறப்பு ஓர் அன்ன உடன் வயிற்று உள்ளும்,
சிறப்பின் பாலால், தாயும் மனம் திரியும்;
ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்,
"மூத்தோன் வருக" என்னாது, அவருள்
"அறிவுடையோன் வருக" ஆறு அரசு செல்லும்;
வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்,
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே
பொருள் விளக்கம்
கல்வி கற்பிக்கும் ஆசிரியருக்கு உற்ற உதவிகள் செய்தும், தேவையான பொருள் கொடுத்தும், அவர் சொல் சொன்னபடி, அவர் மனம் கோணாத படி கல்வி கற்பது சிறந்தது. ஒரே வயிற்றில் பிறந்தாலும் சிறப்பாக உள்ள மகனின் பால் தாயின் மனம் சாயும் , கல்வி கற்காத மகனை தாயும் மதிக்க மாட்டாள். ஒரே குடும்பத்தில் பிறந்தாலும் ஒரு விழா நடக்கும் பொது, அந்த குடும்பத்தில் இளையவன் ஆனாலும், அறிவுள்ளவனுக்கே முதல் மரியாதை கிடைக்கும், அவன் பின்னர் அரசனும் செல்வர் . கல்வி கற்காதவன் வயது முதிர்ந்தாலும் அவனுக்கு தக்க மரியாதை கிடைக்காது. அந்தணன், சத்ரியன், வைசியன், சூத்திரன் என்ற நான்கு வர்ணத்தாரில் கீழ் உள்ளவன் கல்வி கற்றால் அவனுக்கு மேல் உள்ளவன் கட்டுப்பட வேண்டும். கல்வி ஒருவனை உயர்த்தும்.
ஆதலால் கற்பதில் சிரமங்கள் இருந்தாலும் கல்வியை விடாது கற்க வேண்டும்.
பாடலில் சிறப்பு :
குலப்பாகுபாடு ஒழிய, நான்கு நபர்கள் கூடும் சபையில் மரியாதை கிடைக்க கல்வி ஒன்றே சிறந்த வழி என்று இந்த பாடல் வலியுறுத்துகிறது.
தொடரும்
கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே.
36.
கல்லா ஒருவன் குலநலம் பேசுதல்
நெல்லினுட் பிறந்த பதரா கும்மே.
37.
நாற்பாற் குலத்தின் மேற்பா லொருவன்
கற்றில னாயிற் கீழிருப் பவனே.
38.
எக்குடிப் பிறப்பினும் யாவரே யாயினும்
அக்குடியிற் கற்றோரை மேல்வரு கென்பர்.
39.
அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்.
அச்சம் உள் அடக்கி அறிவு அகத்து இல்லாக்
40.
கொச்சை மக்களைப் பெறுதலின் அக்குடி
எச்சம் அற்று ஏமாந்து இருக்கை நன்று
பொருள் விளக்கம்
35.
கல்வி கற்பது சிறந்தது, கல்வி கற்பது சிறந்தது வறுமை வந்து தாழ்ந்து போனாலும் கல்வியை நிறுத்தாமல் கல்வி கற்பது என்றும் நன்று (கல்வியை வலியுறுத்த இரண்டு முறை கூறப்பட்டுள்ளது)
36.
கல்வி கற்காத ஒருவன் தன் குலத்தின் பெருமையை பேசுதல் நன்றாக விளைந்த நெல் இடையே இருக்கும் பதரைப் போன்றது. பதர் என்பது அரிசி மணி இல்லாமல் காலியாக இருக்கும் நெல் மணி. பார்ப்பதற்கு நெல் போன்று தோற்றம் அளித்தாலும் அரிசியாக்கும் இடத்தில் இதன் குணம் தெரிந்துவிடும். அது போல் நல்ல குலத்தில் பிறந்து ஊரார் இவர் சிறந்தவர் என்று எண்ணி இருந்தாலும் கல்வி கேள்வி விஷயங்கள் வரும் போது படிக்காதவரின் அறியாமை வெளியில் தெரிந்து விடும். ஊரார் மதிக்கும் மிக உயர்ந்து குலத்தில் பிறந்து இருந்தாலும் அவனுக்கும் கல்வி அவசியம்.
37.
நான்கு வர்ணத்தாரின் மேல் வர்ணம் என்று சொல்லப்படும் வர்ணத்தில் பிறந்தவன் கல்வி கற்கவில்லை என்றால் கீழானவன் ஆவான்.
38.
எந்த குடியில் பிறந்தவன் ஆனாலும், எந்த இடத்தில் இருந்து வந்தவன் ஆனாலும் அக்குடியில் கற்றோறை உலகத்தார் மேல் வருக என்பர்.
39.
அறிவுள்ள ஒருவனை அரசனும் ஆபத்து காலத்தில் உதவுவான் என்று, தன்னருகே வைத்து கொள்வான்.
40.
கல்வி கற்று வாழ்க்கை உணர்ந்து தவறு செய்ய அச்சமும், அறிவு அகத்துள்ளே இல்லாத ஒன்றுக்கும் உதவாத மக்களைப் பெறுவதை விட வாரிசு இல்லாமல் ஒரு குடி அழிவதே மேல்.
இந்த பாடலுக்கு மூலமாக இருந்து இதே கருத்தை வலியுறுத்தும் புறநானூறுப் பாடல்.
உற்றுழி உதவியும், உறு பொருள் கொடுத்தும்,
பிற்றைநிலை முனியாது, கற்றல் நன்றே!
பிறப்பு ஓர் அன்ன உடன் வயிற்று உள்ளும்,
சிறப்பின் பாலால், தாயும் மனம் திரியும்;
ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்,
"மூத்தோன் வருக" என்னாது, அவருள்
"அறிவுடையோன் வருக" ஆறு அரசு செல்லும்;
வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்,
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே
பொருள் விளக்கம்
கல்வி கற்பிக்கும் ஆசிரியருக்கு உற்ற உதவிகள் செய்தும், தேவையான பொருள் கொடுத்தும், அவர் சொல் சொன்னபடி, அவர் மனம் கோணாத படி கல்வி கற்பது சிறந்தது. ஒரே வயிற்றில் பிறந்தாலும் சிறப்பாக உள்ள மகனின் பால் தாயின் மனம் சாயும் , கல்வி கற்காத மகனை தாயும் மதிக்க மாட்டாள். ஒரே குடும்பத்தில் பிறந்தாலும் ஒரு விழா நடக்கும் பொது, அந்த குடும்பத்தில் இளையவன் ஆனாலும், அறிவுள்ளவனுக்கே முதல் மரியாதை கிடைக்கும், அவன் பின்னர் அரசனும் செல்வர் . கல்வி கற்காதவன் வயது முதிர்ந்தாலும் அவனுக்கு தக்க மரியாதை கிடைக்காது. அந்தணன், சத்ரியன், வைசியன், சூத்திரன் என்ற நான்கு வர்ணத்தாரில் கீழ் உள்ளவன் கல்வி கற்றால் அவனுக்கு மேல் உள்ளவன் கட்டுப்பட வேண்டும். கல்வி ஒருவனை உயர்த்தும்.
ஆதலால் கற்பதில் சிரமங்கள் இருந்தாலும் கல்வியை விடாது கற்க வேண்டும்.
பாடலில் சிறப்பு :
குலப்பாகுபாடு ஒழிய, நான்கு நபர்கள் கூடும் சபையில் மரியாதை கிடைக்க கல்வி ஒன்றே சிறந்த வழி என்று இந்த பாடல் வலியுறுத்துகிறது.
தொடரும்
Last edited by சதாசிவம் on Mon Feb 06, 2012 5:43 pm; edited 2 times in total

சதாசிவம்- தளபதி

- பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671
Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.
குலப்பாகுபாடு ஒழிய, நான்கு நபர்கள் கூடும் சபையில் மரியாதை கிடைக்க கல்வி ஒன்றே சிறந்த வழி என்று இந்த பாடல் வலியுறுத்துகிற
மிக மிக அருமையான விளக்கமும், பாடலின் மூலமாய் திகழ்ந்த புறநானூற்றுப் பாடலும் அதன் விளக்கமும், பாடலின் சிறப்பும். மிகச் சிறப்பு ஐயா.
மிக்க நன்றிகள் ஐயா

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.
பிஜிராமன் wrote:குலப்பாகுபாடு ஒழிய, நான்கு நபர்கள் கூடும் சபையில் மரியாதை கிடைக்க கல்வி ஒன்றே சிறந்த வழி என்று இந்த பாடல் வலியுறுத்துகிற
மிக மிக அருமையான விளக்கமும், பாடலின் மூலமாய் திகழ்ந்த புறநானூற்றுப் பாடலும் அதன் விளக்கமும், பாடலின் சிறப்பும். மிகச் சிறப்பு ஐயா.
மிக்க நன்றிகள் ஐயா![]()
![]()
![]()
நன்றி ராமன்

சதாசிவம்- தளபதி

- பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671
Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.
41. யானைக் கில்லை தானமுந் தருமமும்.
42. பூனைக் கில்லை தவமுந் தயையும்.
43. ஞானிக் கில்லை யின்பமுந் துன்பமும்.
44. சிதலைக் கில்லை செல்வமுஞ் செருக்கும்.
45. முதலைக் கில்லை நீத்தும் நிலையும்.
46. அச்சமு நாணமும் அறிவிலோர்க் கில்லை.
47. நாளுங் கிழமையும் நலிந்தோர்க் கில்லை.
48. கேளுங் கிளையுங் கெட்டோர்க் கில்லை.
.
பொருள் விளக்கம்
41. யானைக்கு தும்பிக்கை என்ற கை இருந்தாலும் அது தானமும் தருமமும் செய்வதில்லை. கைகளுக்கு அழகு பலம் இல்லை, பிறருக்கு செய்யும் தானமும், தருமமும் தான். ஆதலால் நம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும்.
42. பூனை கண்களை மூடிக்கொண்டு இருந்தாலும் அது தவம் செய்வதில்லை. அது போல் கருணையுடன் இருப்பதில்லை. இது போல் கபட வேடமணிந்த மனிதர்களுக்கு வெளித்தோற்றம் அழகாக இருந்தாலும் அவர்களிடத்தில் உயிர்களை துன்புறுத்தாத தவமும், கருணையும் இருக்காது.
43. உலகைத்துறந்து பற்றற்று இருக்கும் ஞானிகளுக்கு இன்பமும் துன்பமும் இல்லை. ஒரு பொருளில் இருந்து இன்பம் வருமானால் அந்த பொருளில் இருந்து துன்பம் வரும். இன்பத்தை எதிர்பார்க்காமல் இருந்தால் துன்பம் வராது.
44. மரத்தை அரித்து தின்னும் செல்லுக்கு, பணம், காகிதற்கு வித்தியாசம் தெரியாது, செருக்கும் வராது. அது அனைத்தையும் தின்றுவிடும். அது போல் அறிவீலிகளுக்கு நல்லது எது, கெட்டது எது என்பது தெரியாது, தான் என்ன செய்கிறோம் என்ற உணர்வும் இருக்காது. அவர்களிடம் பொறுப்புகளை ஒப்படைக்கக்கூடாது.
45. முதலைக்கு நீரென்றும், நிலமென்றும் வித்தியாசம் தெரியாது. அது இரண்டு இடங்களிலும் வசிக்கும். அது போல் வாழத்தெறிந்த அறிவாளி எந்த சூழ்நிலையிலும் வாழ்வான். அரச பதிவியில் இருப்பவர், உயர்நிலையில் இருப்பவருக்கு எந்த நேரத்திலும் தன் நிலை மாறலாம். இப்படி மாறும் போது நிலைமைக்கு தகுந்தது போல் தன் பலத்தை உபயோகித்து வாழவேண்டும்.
46. தவறு செய்ய அச்சமும், செய்த தவறு வெளியில் தெரிந்து நான்கு பேர் முன்பு தலை வணங்க நாணமும் அறிவில்லாத மூடர்களுக்கு இல்லை.
47. உடல் நோய்யால் துன்பத்தில் இருப்பவருக்கு நல்ல நாள், கிழமை விரதம் என்பது அவசியம் இல்லை.
48. நட்பும், சுற்றத்தாரும் வறுமை வந்தவருக்கு இல்லை. பணம் இருக்கும் வரை தான் நட்பு , உறவு எல்லாம். பணம் இழந்தால் பழகிய நட்பும், உடன் இருந்த சுற்றத்தாரும் விலகி விடுவார்.
தொடரும் ..
42. பூனைக் கில்லை தவமுந் தயையும்.
43. ஞானிக் கில்லை யின்பமுந் துன்பமும்.
44. சிதலைக் கில்லை செல்வமுஞ் செருக்கும்.
45. முதலைக் கில்லை நீத்தும் நிலையும்.
46. அச்சமு நாணமும் அறிவிலோர்க் கில்லை.
47. நாளுங் கிழமையும் நலிந்தோர்க் கில்லை.
48. கேளுங் கிளையுங் கெட்டோர்க் கில்லை.
.
பொருள் விளக்கம்
41. யானைக்கு தும்பிக்கை என்ற கை இருந்தாலும் அது தானமும் தருமமும் செய்வதில்லை. கைகளுக்கு அழகு பலம் இல்லை, பிறருக்கு செய்யும் தானமும், தருமமும் தான். ஆதலால் நம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும்.
42. பூனை கண்களை மூடிக்கொண்டு இருந்தாலும் அது தவம் செய்வதில்லை. அது போல் கருணையுடன் இருப்பதில்லை. இது போல் கபட வேடமணிந்த மனிதர்களுக்கு வெளித்தோற்றம் அழகாக இருந்தாலும் அவர்களிடத்தில் உயிர்களை துன்புறுத்தாத தவமும், கருணையும் இருக்காது.
43. உலகைத்துறந்து பற்றற்று இருக்கும் ஞானிகளுக்கு இன்பமும் துன்பமும் இல்லை. ஒரு பொருளில் இருந்து இன்பம் வருமானால் அந்த பொருளில் இருந்து துன்பம் வரும். இன்பத்தை எதிர்பார்க்காமல் இருந்தால் துன்பம் வராது.
44. மரத்தை அரித்து தின்னும் செல்லுக்கு, பணம், காகிதற்கு வித்தியாசம் தெரியாது, செருக்கும் வராது. அது அனைத்தையும் தின்றுவிடும். அது போல் அறிவீலிகளுக்கு நல்லது எது, கெட்டது எது என்பது தெரியாது, தான் என்ன செய்கிறோம் என்ற உணர்வும் இருக்காது. அவர்களிடம் பொறுப்புகளை ஒப்படைக்கக்கூடாது.
45. முதலைக்கு நீரென்றும், நிலமென்றும் வித்தியாசம் தெரியாது. அது இரண்டு இடங்களிலும் வசிக்கும். அது போல் வாழத்தெறிந்த அறிவாளி எந்த சூழ்நிலையிலும் வாழ்வான். அரச பதிவியில் இருப்பவர், உயர்நிலையில் இருப்பவருக்கு எந்த நேரத்திலும் தன் நிலை மாறலாம். இப்படி மாறும் போது நிலைமைக்கு தகுந்தது போல் தன் பலத்தை உபயோகித்து வாழவேண்டும்.
46. தவறு செய்ய அச்சமும், செய்த தவறு வெளியில் தெரிந்து நான்கு பேர் முன்பு தலை வணங்க நாணமும் அறிவில்லாத மூடர்களுக்கு இல்லை.
47. உடல் நோய்யால் துன்பத்தில் இருப்பவருக்கு நல்ல நாள், கிழமை விரதம் என்பது அவசியம் இல்லை.
48. நட்பும், சுற்றத்தாரும் வறுமை வந்தவருக்கு இல்லை. பணம் இருக்கும் வரை தான் நட்பு , உறவு எல்லாம். பணம் இழந்தால் பழகிய நட்பும், உடன் இருந்த சுற்றத்தாரும் விலகி விடுவார்.
தொடரும் ..

சதாசிவம்- தளபதி

- பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671
Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.
நட்பும், சுற்றத்தாரும் வறுமை வந்தவருக்கு இல்லை. பணம் இருக்கும் வரை தான் நட்பு , உறவு எல்லாம். பணம் இழந்தால் பழகிய நட்பும், உடன் இருந்த சுற்றத்தாரும் விலகி விடுவார்.
அந்த காலத்துலயும் இப்டி தான் இருந்திருகாங்களா ஐயா....கொடுமை.......
மிக அருமையாக இருந்தது ஐயா விளக்கம்,
ஒருவரிக்குள் இருக்கும் உன்னத ஓவியத்தை வெளியில் கொணர்ந்து தருவது அருமை ஐயா
மிக்க நன்றிகள் ஐயா

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.
நன்றி ராமன்,
நன்றி பிரபு.
நன்றி பிரபு.

சதாசிவம்- தளபதி

- பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671
Page 2 of 4 •
1, 2, 3, 4 
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum






