புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 11:35 am

» கருத்துப்படம் 25/05/2024
by mohamed nizamudeen Today at 11:02 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Today at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Today at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Today at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Today at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Today at 9:03 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:01 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Yesterday at 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:41 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:11 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:04 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:24 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Yesterday at 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Yesterday at 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Yesterday at 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Yesterday at 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Yesterday at 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Yesterday at 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Yesterday at 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Yesterday at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Yesterday at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Yesterday at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Yesterday at 12:30 am

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_c10கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_m10கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_c10 
119 Posts - 56%
heezulia
கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_c10கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_m10கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_c10 
71 Posts - 33%
T.N.Balasubramanian
கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_c10கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_m10கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_c10கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_m10கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_c10கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_m10கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_c10 
4 Posts - 2%
bhaarath123
கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_c10கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_m10கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_c10 
2 Posts - 1%
Shivanya
கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_c10கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_m10கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_c10 
1 Post - 0%
eraeravi
கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_c10கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_m10கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_c10 
1 Post - 0%
D. sivatharan
கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_c10கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_m10கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_c10 
1 Post - 0%
PriyadharsiniP
கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_c10கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_m10கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_c10கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_m10கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_c10 
273 Posts - 45%
ayyasamy ram
கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_c10கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_m10கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_c10 
261 Posts - 43%
mohamed nizamudeen
கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_c10கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_m10கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_c10 
22 Posts - 4%
T.N.Balasubramanian
கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_c10கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_m10கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_c10 
16 Posts - 3%
prajai
கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_c10கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_m10கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_c10கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_m10கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_c10கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_m10கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_c10 
4 Posts - 1%
jairam
கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_c10கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_m10கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_c10கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_m10கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_c10 
4 Posts - 1%
Jenila
கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_c10கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_m10கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Feb 02, 2012 9:42 pm

செந்தமிழ்க் கல்லிலே அற்புதமண்டபம்
சிந்தையில் கட்டிவைத்தேன் - அதில்
சுந்தர மென்னிழை சந்தங்கள் கொண்டெழில்
சித்திரம் தீட்டி வைத்தேன்
வந்திருந் தின்பமும் கொண்டிட மற்றவர்
வண்ணஒளி அமைத்தேன் - அதில்
எந்தன் மனதெழும் கற்பனைத் தீபங்கள்
எங்கும் எரிய வைத்தேன்

நந்தவனத்திற்சு கந்தமலர் கொய்து
நற்கவிநூல் இழைத்தேன் - நல்ல
சந்தணமும் நறும் பன்னீர் தெளித்தங்கு
சுந்தர வாசமிட்டேன்
செந்தூர வண்ணச்செ றிவெடுக்க அதில்
சிந்தனை தூபமிட்டேன் - ஒரு
தந்திரமுமல்ல தங்கமெனும் தமிழ்
தந்துஅழகு செய்தேன்

மந்தமுறமன தின்பம்பெற அவர்
மன்னவன் போல்மகிழ = இல்லை
மந்திரங்கள்,எது கையொடு மோனையும்
இட்டு அழகு செய்தேன்
சொந்த எழில்வண்ணக் கந்தருவ எழில்
செந்தமிழ் மாந்தருக்கு -அவர்
வந்திடும் வேளை நீராடிக் களித்திடப்
வட்டக் குளமமைத்தேன்

இந்தஎழில் இல்லம்கொஞ்சம் இருண்டதும்
இன்னொளி போய்விடலாம் - எனப்
பந்தங்களும் ஒளி தந்திடவே எங்கும்
பார்த்து எரியவிட்டேன்
அந்தியிலே குளிர்பொய்கையில் நீந்திட
ஆடைஅணிகளுடன் - அகில்
சந்தணமும் உடன் செந்தணலும் வைத்தே
சற்று அமைதிகண்டேன்

வெந்திடும்போல் பசி உண்டுஎன்றால் அவர்
வேண்டிட முன்தரவே - மரப்
பொந்தினிலே நல்ல தேனடை கொண்டதில்
தேன்வடித்தும் எடுத்தேன்
பந்தியுடன் உண வுண்டு களித்திடப்
பாலொடு பண்டங்களும் இன்னும்
முந்திரியும் கூட முக்கனிகள் சேர
முன்னே எடுத்து வைத்தேன்

இத்தனையும் செய்து எத்தனை மனங்கள்
எண்ணிடக் காத்திருந்தேன் - நல்ல
புத்தம்புது வரவெண்ணி துயிலின்றி
பக்கமும் பார்த்து நின்றேன்
சத்தியமும் மன தைரியமும் கொண்டு
முற்றும் விழித்திருந்தேன் -ஆயின்
புத்தொளி வான்சுடர் தோன்றிடக்காலை
பொழுதென்று கண்டறிந்தேன்

செந்தமிழில் கரம் தந்து அன்புகொண்டு
சிந்தையி லொன்றுபட - நல்ல
பைந்தமிழே இனிதென்று படித்தொரு
பாமலர்ப் பூச்சொரிய
நந்தவனம் எனும் விந்தைதமிழினில்
நற்கவி மாலைகட்ட - எந்தன்
சிந்தையில் கட்டிய மண்டபவாசலை
முன்கதவின்றி வைத்தேன்

..

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Thu Feb 02, 2012 10:50 pm

எந்தன்
சிந்தையில் கட்டிய மண்டபவாசலை
முன்கதவின்றி வைத்தேன்
நல்ல முடிவு .............. ஓசை அருமை சூப்பருங்க



கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) 599303
கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) 102564

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Feb 04, 2012 7:19 am

நன்றி கோவிந்தராஜ் ! மிக்க நன்றி!!

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Feb 04, 2012 7:20 am

நீலப் பெருவானில் நிற்கும் வெண்தாரகை
. நின்று சிரித்ததுவோ - நறுஞ்
சோலை நிறைமலர் சுந்தர மென்னிதழ்
. சொல்லும் சிரிப்பிதுவோ
ஓலையிடை தென்னங்கீற்றினூடு நிலா
. ஓடிச் சிரித்ததுவோ-மழை
போலும் இளந்தூறல்காண வண்ண வான
. வில்லும் சிரித்ததுவோ

வாழை மரங்களில் வந்துநீளும் குலை
. வைத்த முன் பூவரிசை -அது
தோழமை கொண்டு சிரித்தனவோ- கனி
. தேனைக் குழைத்தனவோ
கீழை வயற்கரை கோபுரவீதியில்
. கூடும் மந்தியினமும் - வந்து
வீழப் பொலிந்த கனிஉண்டு ஆனந்த
. வேளை என்றாடியதோ

பச்சை வயல்வெளி முற்றும் நிறைகதிர்
. பட்ட இளம் தென்றலில் - கதிர்
சச்சச் சரஎனச் சுற்றிவளைந் தயல்
. சாய்ந்தே சிரித்தனவோ
மிச்ச இரும் பனல் செம்மைகொள்ளப் பெரும்
. பட்டறை பையன் அதை -ஊதி
அச்சென ஆக்க அடிக்க தணல் தெறித்
. தங்கும் சிரித்ததுவோ

கானகத்தே நின்று ஆடும் மரங்களும்
. காணும் பசும் இலைகள் - நெடு
வானமழை விழும்நீர் துளி கொஞ்சிட
. வெட்கிச் சிரித்தனவோ
தானுமாடிக் கிளை தொங்கிடும் பூக்களைத்
. தாங்கிச் சிலுசிலிர்த்து எழி
லான சிறுஓடை மீதுமலர் தூவி
. ஆனந்த மென்கிறதோ

வெள்ளை மணல் மீது வந்துகடலலை
. வீழ்ந்து சிரித்தனவோ -கயல்
துள்ளிக் குளத்திடை தாமரைப்பூ இதழ்
. தொட்டுச்சிரித்ததுவோ
வெள்ளிப் பனி உச்சி ஏறும்கதிர்கண்டு
. வீழ்ந்து சிரித்ததுவோ -சுகம்
அள்ளித்தரும் இளம்தென்றல் சிலிர்ப்பிட
. ஆரத் தழுவியதோ

அத்தனை காணும் சிரிப்பு மியற்கையின்
. அன்புடை வாழ்த்துக்களோ - இவை
முத்து மாலையிடை கோர்த்த மணிகளோ
. இரத்தின ஆரங்களோ
புத்தம் புதிதென பூமியில்வந்தஎன்
. பட்டெழில் பொன்மகளே -நீயும்
கத்தி அழுங்குரல் விட்டுச் சிரித்திடு
. அற்புத பூமியிதே.

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Feb 04, 2012 8:22 pm


பெண்ணெனும் சிலைசெதுக்கும் சிற்பி ஆண்

கருவில் உருவைக்கொண்டே - அன்னை
கையில் தவழ்ந்து வந்தோம்
உருகும் அன்பைக் கண்டோம் - அவளின்
உள்ளத் துறைந் திட்டோம்
பருகும் உணவைத் தந்தவளோ - எமைப்
பாசங் கொண் டருகில்
கருணை வடிவாய் நின்றணைத்தாள் - இரு
கண்கள் எனக்காத்தாள்

அம்மா எனுமோர் தெய்வமகள் - அவள்
ஆண்டவன் மறுவடிவம்
நம்மை ஆக்கவும் உலகினிலே - பின்
நலமாய் காத்திடவும்
வெம்மை கொண்டயல் தீமைவரின் - அதை
வெயிலா யெரித்திடவும்
அம்மை அருளால் முத்தொழிலும் - அவள்
அகிலம் கொள்ள வந்தாள்

பெண்ணாய் முதிர்வில் தாயாவாள் - அவள்
பெருமை கொண்டிடுவாள்
மண்ணில் தாயென ஆகும்வரை - அவள்
மங்கை சிறுவயதாள்
எண்ணிப்பார் எவள் சின்னவளும் - வளர்ந்
தொருநாள் தாயாவாள்
கண்ணை இமையாய் காத்திடுவோம் - எதிர்
காலத் தாய் இவளாம்!

விண்ணில் சுழலும் புவிவாழ்வில் - அவள்
வேட்கைப் பலியிடவும்
பெண்மை இழிமை செய்வதுவும்- அவள்
புனிதம் அழிப்பதுவும்
எண்ணித் தலைமுறை காத்திடுவோம் - அவ்
விம்சைசெயல் நிறுத்த
கண்ணீர் சிந்தாக் காத்திடவும் - இக்
கணமே திடம் கொள்வோம்

எம்மைப் படைத்த போதினிலும் அவள்
உணர்வில் மலராவாள்
வெம்மைச் சூரியன் ஆனவளோஎம்
முன்னே நிலவானாள்
பொம்மை கற்சிலை செய்துவிட - நாம்
பிடிக்கும்உளி வடிவம்
அம்மை இவளது வாழ்வுருவை நாம்
ஆக்கும் சிற்பிகளாம்

மண்ணைப் பிடித்திட வரும்பானை - போல்
மனங் கொள் உருவெடுப்பாள்
திண்ணம் கைகளில் உளிகொண்டே செயல்
தேர்ந்தே கலைவடித்தால்
எண்ணத் திருப்பது உருவாகும்திரு
மகளாய்..! எழிற்சிலையாய்!
வண்ண திருமகள் வாழ்வில் நாம் - பல
வளங்கள் உருவமைப்போம்

.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக