|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» ஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே!by Aathira Today at 11:06 pm
» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by Aathira Today at 11:02 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by முரளிராஜா Today at 11:02 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by வை.பாலாஜி Today at 10:56 pm
» அறிமுகம் ...
by முரளிராஜா Today at 10:27 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by கேசவன் Today at 10:03 pm
» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ
by புரட்சி Today at 8:58 pm
» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm
» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm
» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm
» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm
» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm
» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm
» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm
» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm
» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm
» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm
» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm
» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
நான் எழுதிய - இளவம்பஞ்சு -சிறு கதை...-உங்கள் விமர்சனம் வேண்டும்
Page 1 of 1 • Share •
நான் எழுதிய - இளவம்பஞ்சு -சிறு கதை...-உங்கள் விமர்சனம் வேண்டும்
இளவம்பஞ்சு
மாலை நேரம், யாருமில்லாத கடற்கரையோரம். ஜந்தாறு பேர் மட்டும் கடற்கரையில் நின்று கொண்டு காற்று வாங்கிக் கொண்டிருந்தார்கள்.
ரவிக்கு மனபாரம் இன்னும் குறைந்த பாடில்லை.காதலித்த பெண்ணோடு சென்னை வந்தவன்,பதிமூன்று வருசமாச்சு.அம்மா,தங்கச்சியை பார்க்க இதுவரை ஊருக்கு போகவே இல்லை.
‘நான் அப்படி என்ன தப்பு செஞ்சேன்..? காதலிச்சது குத்தமா..? ஏன் என்னை அம்மா ஒதுக்குனாங்க..? சரியா பேசவுமில்லை..ஏதோ மூனாவது மனுசன மாதிரி தானே நினைச்சாங்க..?ஒரு சந்தோசம் இல்லாத வீட்டில் இருக்கிறத விட,தனியா போறதுதான் சரின்னு இங்க வந்தேன்...இருந்தாலும்……” அலைகள் அவ்வப்போது வந்து கால்தடவி ஆறுதல் சொல்லிவிட்டு சென்றன…
“அப்பா இல்லாத வீட்டுல..நான் தானே எல்லாமே முன்னாடி நின்னு செய்யனும்..? பாவம்..அங்க தங்கச்சிக்கு கல்யாணம் ஆச்சேர் என்னவோ..? அம்மாவுக்கு அந்த கழுத்துவலி எப்படி இருக்குதோ?
நினைக்கும் போதே முகத்தோல்கள் சுருங்கின.கண்களில் நீர்த்துறிகள் தேங்கின.தொண்டைக்குழியில் ஏதோ ஒன்று அடைத்துக் கொண்டதால் லொக் கென்று இருமிக்கொண்டான்.
“இல்ல நான் செஞ்சதுதான் தப்பா..? பெத்த புள்ள கல்லுமாதிலி நான் இலக்க,அங்க அம்மா என்ன கஸ்டப்படறாங்களோ..?! அம்மா கோபத்துல ஏதேதோ திட்டினாலும்..கோழி மிதிச்சா குஞ்சு சாகும்..? ஊரு பொண்டாட்டி பேச்ச கேட்டு ஓடியாந்துட்டான்னுதானே பேசும்..?!”
மனசாட்சியோடு,மனம் திறந்து பேசிக் கொண்டிருந்தான் ரவி;. கடல் காற்றும்,அவன் நினைவுகளை ஈரப்படுத்திக் கொண்டே இருந்தன.
அலைகளும்,கரையை தொட பலமுறை முயன்றாலும்,கடலுக்குள் செல்வதிலேயே கண்ணாக இருந்தது.
“சே..! நேத்து வந்தவளுக்காக,பெத்தவள தூக்கி எறிஞ்சிட்டேனே! என்னை வளர்த்து படிக்க வைக்க எவ்வளவு கஸ்டப்பட்டிருப்பா..? கல்லுடைச்சு,மரந்தூக்கி,கட்டிட வேலை செஞ்சு,காய்கறி வித்து…சே…! நான் ஒரு சுயநலவாதி.புத்திகெட்டுப் போச்சே…ஐயோ..”
தேங்கியிருந்த கண்ணீர்,பெருமழையாய் பெருக்கெடுத்தது.கண்கள் இருண்டு சிவந்து போயின.அக்கரையில் சூரியனும் கடலுக்குள் இறங்கத் தொடங்கினான்.நண்டுகள் தன் வளை நோக்கி ஓடிக் கொண்டிருந்தன.உப்புக் காற்றும்,வெதுவெதுப்பான மணலும் அவன் சோகங்களுக்கு ஒத்தடம் கொடுத்தன.
இரவு மெல்ல தன் கரங்களை விரிக்க தொடங்கியது.மெல்ல எழுந்தான்.கால்கள் இரண்டும் பின்னிக் கிடந்தன.தலைமுடி காற்றில் அலைக்கழிக்கப்பட்டிருந்தது.கன்னத்தின் மேடுகளில் கண்ணீர் தான் வந்த சுவடுகளை விட்டு சென்றிருந்தது.எதையோ இழந்தது போலிருந்தது அவன் மனம்.உடைகளில் ஒட்;டிக் கிடந்த மணலை தட்டி விட்டான். சாலையோரத்தில் நின்றிருந்த தன் பைக்கில் ஏறி வீடு நோக்கி புறப்பட்டான் ரவி;.
“அம்மா…அப்பா வந்தாச்சு…” ரவியின் ஒரே மகள் ராணி.
“ஏன் இவ்வளவு நேரம்..?என்ன ஒரு மாதிரி இருக்கீங்க…உடம்புக்கு ஏதும் முடியலயா..?
மனைவி ரேகா பதறினாள்.
ரேகா…ரவிக்கு ஏற்ற சரியான ஜோடி.காதல் மனைவி.கல்யாணம் பண்ணியும் காதலர்களாயவே வாழும் கலியுக காதல் பறவைகள்.ரேகா…படித்தவள்.கல்லூரி காலத்தில் இருவரும் கண்கள் பரிமாறி,இதயங்களை இடமாற்றிக் கொண்டவர்கள்.ஜாதி வேற வேற என்றாலும்,ரவிக்கு ஒரு நல்ல பெண் சாதி.அவன் தளர்ந்துக் கிடக்கும் போதெல்லாம் தைரியமூட்டி முன்னேற வைத்தவள்ஃகொஞ்சம் முன்கோபி.ஆனாலும் கணவனை விட்டுக் கொடுக்காத பதிவிரதை.
“அதெல்லாம் ஒண்ணுமில்ல…நீ போய் காபி போட்டுட்டு வா…”
முகத்தை முழுதாக காட்டாமல் உத்திரவு போட்டான் ரவி.
“ராணி என்ன பண்ற..?”
“படிக்கிறேம்பா…”
“என்ன படிக்கிற..?”
“ம்ம்….தமிழ் பா..”
“எங்க குடு…பாப்போம்…என்ன பாடம்..?”
“உறவுகள் ..2ம் பாடம்..பா”
“ஓ..ஓ…எங்க சொல்லு பாப்போம்..
என் அப்பாவின் அம்மா… பாட்டி…
என் அப்பாவின் சகோதரி…அத்தை..
என் அப்பாவின் அப்பா..தாத்தா…”
“சரிம்மா…நீ போய் தூங்கு…சரியா..?”
அவன் மனசு எதற்காகவோ ஏங்கியது…அது அந்த உறவுகளாகக் கூட இருக்கலாம்.
சாப்பிட்ட பிறகு,படுக்கையில் கிடந்தான்.தூக்கம் மட்டும் வர மறுத்தது.தாயின் ஏக்கம் இமைகளை சாத்த மறுத்தது.தலையில் ஏதோ ஒன்று விழுந்தது போலிருந்தது.தட்டி விட்டான் …பல்லி ஒன்று குதித்தோடியது.
…..ரேகா….
….ம்…..
“காலையிலிருந்தே மனசு சரியில்ல…என்னவோ அம்மாவை பாக்கனும் போலவே இருக்கு…?
“என்னங்க…என்னைக்குமே இல்லாம திடீர்னு..?”ஆச்சர்யப்பட்டாள் ரேகா…
“என் அம்மாவோட முகமே மறந்துடும் போல இருக்கு…அம்மா இப்ப இருக்காங்களோ..என்னவோன்னு பயமா இருக்கு…”
முதன்முதலாக ரவி அழுவதை அப்போதுதான் ரேகா பார்க்கிறாள்.
“சே…என்ன குழந்தையாட்டம் அழுதுகிட்;டு…கண்டதையும் போட்டு நினைக்காதீங்க..அம்மா அங்N;க நல்லாதான் இருப்பாங்க.”
“இல்லையே…நான் அனாதையா விட்டுட்டு வந்துடடேனே…”! மடியிலே முகம் புதைத்து அழுதான்.
“நாளைக்கே புறப்பட்டு,அம்மாவையும்,தங்கச்சியையும் பாத்துட்டு…கூடவே கூட்டிட்டு வந்துருவோம்.நீங்க இப்ப கவலைப்படாம தூங்குங்க..”சமாதானப்படுத்தினாள்.
சாயங்காலம் ஆகியது அவர்கள்; நம்பிய+ர் வந்து சேர்வதற்கு.இன்னும் இங்கயிருந்து இன்னொரு பஸ் பிடிக்கணும் ரவியின் சொந்த ஊர் போவதற்கு.
“ஏங்க இளத்தூருக்கு எத்தனை மணிக்கு பஸ் வரும்?”
“சொல்ல முடியாதுங்க…மழைக்காலம் வேற…இப்பத்தான் ஒரு வண்டிப் போச்சு. அடுத்தாப்ல பத்து,பத்தே காலுக்குத்தான்..”
இந்த நம்பிய+ர் ஒரு கிராமம். கிராமத்தின் மண்வாசனை அவன் மூக்கைத் துளைத்தது.அப்பவெல்லாம் இந்த நம்பிய+ர்லதான் சந்தை.சின்ன வயசுல ரவியும்,அவன் அம்மாவும் சந்தைக்குப் போய்ட்டு வீடு வரும் போது மணி ஒம்பது,பத்தாயிரும். நம்பிய+ர்ல இருந்து இளத்தூருக்கு ஒரு குறுக்கு வழி இருந்தது.
அப்பவெல்லாம் அதுலதான வந்து போகணும். பஸ் வசதியெல்லாம் இப்பதானே வந்தது.!காய் கூடையை அம்மா சுமந்துக்குவாள்.ரவி அம்மா கையை புடிச்சிட்டு,பொரியை தின்னுகிட்டு கதை பேசிகிட்டே வருவான்.சுத்தியும் முள் காடு. பனமரம்,கத்தாழைச் செடின்னு ஒரே இருட்டா இருக்கும்.திருடனுங்க அந்த காட்டுலதான் வந்து திருட்டு பொருட்களை பாகம் பிரிப்பதா ஊர்ல சொல்லுவாங்க. ரவி ..கையில ஒரு கம்பு வச்சுக்குவான்.அவனுங்க வந்து மறிச்சுட்டா..? அதுக்குத்தான் ஒரு தற்காப்பு. ஜான்பிள்ளை ஆனாலும் ஆண் பிள்ளை தானே…! அவன் அம்மாவும் அவன் தைரியத்தை ஊர்;ல ஒரு பெருமையா சொல்லிட்டு திரிவாள்.
“ஏங்க..இங்க ஒரு குறுக்குவழி இருந்துச்சே…”
“அதெல்லாம் அந்த காலம் தம்பி. ஊர் நாட்டாமையும்,அவன் மச்சானும் இடத்தை வளைச்சுப்; போட்டு விவசாயம் பண்ணீட்டு இருக்காங்க…..இப்ப அங்க வழியே இல்ல..தம்பி.”
ஊர் நாட்;டாமை கொஞ்சம் மோசமானவன். ஜாதி வெறி புடிச்சவன்.ரவியோட அப்பா பஞ்சாயத்து தேர்தலுக்கு மனுதாக்கல் பண்ணுனாங்கிருக்காக ரோட்டுல ஓட ஓட வெட்டுனவன்.குடும்பத்தையே ஊர விட்டு ஓதுக்குனாங்க.அப்ப ரவி கைக்குழந்தை..
“ரேகா….பத்து மணிக்குத்தான் பஸ்ஸாம்..நாம ஏதாவது சாப்பிடுட்;டு வந்துரலாம் …வா..”
பனையோலையால் கட்டப்பட்ட ஓட்டல்.இரண்டு அழுக்கேறிப்போன டேபிள்.உள்ளே..முழுக்க அடுப்பு புகை ஆக்ரமித்திருந்தது. உட்காரும் பலகை மேலும் கீழும் சீஸா மாதிரி ஆடியது.
“என்ன சாப்பிடுறீங்க…?”கடைக்காரன் கேட்டான்.
“ஒரு அஞசு தோசை மட்டும் போடுங்க…”
கூட்டமில்லாத ஊர் என்பதால்,வந்தவர்களை நன்றாகவே கவனித்தான் அந்த ஓட்டல் கடைக்காரன்.சாப்பிட்டு முடித்துவிட்டு வெளியே வந்தார்கள்.
“ரேகா…டைம் ஆச்சு. பஸ் வந்துரும்…பஸ் ஸ்டாண்டுல போய் நின்னுக்கலாம்.”
கையில இருந்த பையை சரிபார்த்துக் கொண்டான்.காலையில அம்மாவுக்கும்,தங்கச்சிக்கும் வாங்கிய புடவை. ஒரு வேளை தங்கச்சிக்கு கல்யாணம் ஆயிருந்தா…மச்சானுக்கு பேண்ட்,சட்டை. மருமகனிருந்தா..அவனுக்கு துணி.திண்பண்டம்…..எல்லாமே சரியாகத்தான் இருந்;தது.
பேருந்து நிலையம். ஒரே ஒரு கம்பு மட்டும் ஊன்றப்பட்டிருந்தது.உட்கார ரெண்டு வட்டக்கல் மட்டும் இருந்தது.இரண்டு பேரைத்தவிர வேறு யாரும் அங்கு இல்லை.
பக்கத்துல சாக்கடை. தாய் பன்றியை சுற்றி ஒரு பத்து,பன்னிரெண்டு குட்டிகள்.தாய் மீது ஏறிக்கொண்டு சறுக்கி விளையாடிக் கொண்டிருந்தன.
இளத்தூர் காரங்க…பெரும்பாலும் ஏழே கால் மணி வண்டியிலேயே,வேலையை முடிச்சுட்டு,போயிருவாங்க. அப்புறம் இந்த கழடசி வண்டியில் மீறிப்போனா…ஆறேழு பேர்தான் இருப்பாங்க.
லேசா…தூரலடித்துக் கொண்டிருந்தது ராணியை நெஞ்சோடு சேர்த்து,புடவையால் மூடிக்கொண்டாள் ரேகா.
யாரோ ஒரு ஆள்.அமைதியாய் வந்து பக்கத்தில் நின்றான். வயசு 32க்குள் தான் இருக்கும்.ஆள் உருவமே பார்த்தால் பரிதாபமாய் இருந்தது.ஒரு அழுக்கடைந்த பேண்ட்,சவரஞ் செய்யாத முகம்,உழைத்து உழைத்து களைத்துப்போன தேகம்.
அவன் முகம் ஏதோ ஒரு சோகத்தில் அவன் இருப்பதை உணர்த்தியது.
“என்னங்க…இளத்தூருக்கா?”ரவி மெல்ல அவனிடம் பேச்சுக் கொடுத்தான்.
“ஆமாம்….”
“பஸ்ஸ{ பத்தேகாலுக்குனாங்க…ஒண்ணும் வரலயே…!”
அவன் ஏதும் பேசவில்லை.மற்றவரிடம் பேசும் மனநிலையில் அவன் இல்லை.
ராணிக்கு குளிர் காற்று ஒத்துக்கவில்லை.அவ்வப்போது இருமிக் கொண்டே இருந்தாள்.
“ஏங்க…உங்களுக்கு சொந்த ஊர் இளத்தூரா…? நான் உங்களை பார்த்ததே இல்லையே..?” ரவிதான் அவனிடம் கேட்டான்.
“இல்லைங்க…”
என்னடா இவன் ஒரே வரியில பதிலை சொல்லிட்டு இருக்கான்னு..ரவி சலிச்சுப்போய் இனிமேல் அவன் கூட பேச்சே கொடுக்கக் கூடாதுன்னு முடிவெடுத்துக்கொண்டான்.
தூரத்தில் ரெண்டு பல்பு மட்டும் தெரிந்த வெளிச்சத்தில் பஸ் வருவதை மூவரும் புரிந்துக் கொண்டார்கள்.கம்பத்திற்கருகே வண்டி நின்றது.மூவரும் ஏறினார்கள்.
பஸ்சுக்குள் மீறிப்போனா எட்டுபேர்தான் இருப்;பார்கள்.அதுல ஒருத்தன் நல்லா குடிச்சுட்டு பின்னாடி சீட்டுல மல்லாக்கா கிடந்தான்.வேட்டி அவிழ்ந்து படிக்கட்டுக்கருகே வெளியே போவதற்கு சமயம் பார்த்துக் கொண்டிருந்தது.
‘2! இளத்தூர்”
“15 ரூபாய்”
டிக்கட்டை வாங்கிக் கொண்டான் ரவி.
“இந்தாப்பா டிக்கெட்…”
அந்த சோக ஆசாமி கேட்காமலேயே டிக்கட்டை கிழித்துக் கொடுத்தார் கண்டக்டர்.எப்பவும் இதே வண்டியில் வருவதால் கண்டக்டருக்கு மனப்பாடம் ஆகியிருந்தது.
“ஏம்பா…ஆத்தாளுக்கு இப்ப எப்படி இருக்கு…?” கண்டக்டர் அந்த ஆசாமியிடம் கேட்டார்.
“மோசமாயிட்டு தாங்கண்ணா யிருக்கு..தினமும் இந்த மருந்து தரலேன்னா…இளப்பு வந்து மூச்சு விட முடிய மாட்டீங்குது..” வாங்கய மருந்தைக் காட்டினான். கண்டக்டர் அவன் சோகத்தில் பங்;கெடுத்துக் கொள்வது போல் உச் கொட்டினார்.
கண்டக்டருக்கும் ஆத்தாளை நல்லாவே தெரியும்.வேளை முடிச்சுட்டு இந்த வண்டியிலதான் ஏறி போவா..ம்…அறுபது வயசுவரை அசராம கூலி வேலை செஞ்சவ அந்த ஆத்தா….
“இளத்தூர் இறங்குங்க…”
ரவியும்,ரேகாவும் மெல்ல இறங்கினார்கள்.ராணி தூங்கி போயிருந்தாள்.அந்த ஆசாமியும் இறங்கினான்.
எதிரே..கருப்பராயன் சாமி சிலை.கையிலே கத்தி,கண்ணிலே கோபமுடன் இருந்த சாமிpயை பார்த்து பயந்து போனான்.இவனுடைய குல தெய்வம் அது.
“வந்துட்டியா…வா..வா..”ன்னு சொல்லி மிரட்டுவதுபோல தெரிந்தது அவனுக்கு.
புதுசு புதுசா…சில வீடுகள் அங்கே முளைத்திருந்தன. இவன் வீடு கருவேல முள்செடி தாண்டி.,இருபது அடி நடக்கணும். நல்ல இருட்டு.
அந்த சோக ஆசாமி அவர்களுக்கு முன்னே ஒரு நாலடி தூரத்தில் சென்று கொண்;டிருந்தான்.
“ஓ…இவனும் நம்ம தெருதானா…யார் இவன்..? பார்த்ததே இல்லையே..! ரவிக்கு அப்பவும் குழப்பம் தான்.
ஊரே அடங்கி போயிருந்தது.நாய்கள் ஊளையிட்டுக் கொண்டிருந்தன.ள
வீடு வந்துவிட்டது. ஆனால் அந்த ஆசாமி உள்ளே உரிமையோடு கதவை திறந்து சென்றான்.இதை பார்த்து ரவிக்கு இது நம்ம வீடுதானா என்று சந்தேகமே வந்;து விட்டது.
ரவி வெளியே நின்று….
“என்னங்க….இது பொன்னம்மா வீடுதானே…?’
“ஆமா நீங்க…யாருன்னு….:?”
“நான் அவங்க மகன்…”
அந்த ஆசாமிக்கு என்னவோ போலாகியது.
“வாங்க..வாங்க…உள்ளே வாங்க…”
“நீங்க யாருன்னு…ஃ”ரவி கேட்டான்.
“நான் தான் அவங்க மருமகன்.உங்க தங்கச்சியைக் கட்டுனவன். அறிமுகப்படுத்திக்கொண்டான்.
“தங்கச்சி எங்கே?”
அவன் மச்சானால் பதில் சொல்ல முடியவில்லை.திடீரென்று சோகமானாhன்.
“அது வந்து…பிரசவத்துல பாவி என்னைய விட்டுட்டு போயிட்டா…இறந்து நாலு வருசமாகுது…” அழுதான்.
இவனுக்கு இதயமே வெடித்துவிடும் போல இருந்தது. ரவியின் கண்ணிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக ஓடியது.சமாதான படுத்தினார்கள் இருவரும்.
“என் அம்மா எங்கே….?” என்று கதறினான் ரவி.
இவன் கைத்தாங்கலாக ரவியை உள்ளே கூட்டிச் சென்றான்.கயித்துக் கட்டிலில் மூட்டையாக்கப்பட்ட இழுக்குத்துணி போல் கிடந்தாள் அவன் தாய்.
“அம்மா….” வாயிலிருந்து அவனுக்கு வார்த்தைகள் சரியாக வரவில்லை.13 வருடமாக பார்க்காத சூரியனை அப்போதுதான் பார்க்கிறான்……ஆனால்……………..
அம்மா…என்ற அவன் பாச கூப்பாட்டை அவளால் கேட்க முடியவில்லை.அவள் முகம் வெளிரி போயிருந்தது.கண்கள் சொருகி போயிருந்தது. நாடிகள் நின்றே போயிருந்தன.
ஆம்….அவள் இறந்து சிலமணி நேரம்தான் ஆகியிருக்கும்.
ரவிக்கு மனபாரம் இன்னும் குறைந்த பாடில்லை.காதலித்த பெண்ணோடு சென்னை வந்தவன்,பதிமூன்று வருசமாச்சு.அம்மா,தங்கச்சியை பார்க்க இதுவரை ஊருக்கு போகவே இல்லை.
‘நான் அப்படி என்ன தப்பு செஞ்சேன்..? காதலிச்சது குத்தமா..? ஏன் என்னை அம்மா ஒதுக்குனாங்க..? சரியா பேசவுமில்லை..ஏதோ மூனாவது மனுசன மாதிரி தானே நினைச்சாங்க..?ஒரு சந்தோசம் இல்லாத வீட்டில் இருக்கிறத விட,தனியா போறதுதான் சரின்னு இங்க வந்தேன்...இருந்தாலும்……” அலைகள் அவ்வப்போது வந்து கால்தடவி ஆறுதல் சொல்லிவிட்டு சென்றன…
“அப்பா இல்லாத வீட்டுல..நான் தானே எல்லாமே முன்னாடி நின்னு செய்யனும்..? பாவம்..அங்க தங்கச்சிக்கு கல்யாணம் ஆச்சேர் என்னவோ..? அம்மாவுக்கு அந்த கழுத்துவலி எப்படி இருக்குதோ?
நினைக்கும் போதே முகத்தோல்கள் சுருங்கின.கண்களில் நீர்த்துறிகள் தேங்கின.தொண்டைக்குழியில் ஏதோ ஒன்று அடைத்துக் கொண்டதால் லொக் கென்று இருமிக்கொண்டான்.
“இல்ல நான் செஞ்சதுதான் தப்பா..? பெத்த புள்ள கல்லுமாதிலி நான் இலக்க,அங்க அம்மா என்ன கஸ்டப்படறாங்களோ..?! அம்மா கோபத்துல ஏதேதோ திட்டினாலும்..கோழி மிதிச்சா குஞ்சு சாகும்..? ஊரு பொண்டாட்டி பேச்ச கேட்டு ஓடியாந்துட்டான்னுதானே பேசும்..?!”
மனசாட்சியோடு,மனம் திறந்து பேசிக் கொண்டிருந்தான் ரவி;. கடல் காற்றும்,அவன் நினைவுகளை ஈரப்படுத்திக் கொண்டே இருந்தன.
அலைகளும்,கரையை தொட பலமுறை முயன்றாலும்,கடலுக்குள் செல்வதிலேயே கண்ணாக இருந்தது.
“சே..! நேத்து வந்தவளுக்காக,பெத்தவள தூக்கி எறிஞ்சிட்டேனே! என்னை வளர்த்து படிக்க வைக்க எவ்வளவு கஸ்டப்பட்டிருப்பா..? கல்லுடைச்சு,மரந்தூக்கி,கட்டிட வேலை செஞ்சு,காய்கறி வித்து…சே…! நான் ஒரு சுயநலவாதி.புத்திகெட்டுப் போச்சே…ஐயோ..”
தேங்கியிருந்த கண்ணீர்,பெருமழையாய் பெருக்கெடுத்தது.கண்கள் இருண்டு சிவந்து போயின.அக்கரையில் சூரியனும் கடலுக்குள் இறங்கத் தொடங்கினான்.நண்டுகள் தன் வளை நோக்கி ஓடிக் கொண்டிருந்தன.உப்புக் காற்றும்,வெதுவெதுப்பான மணலும் அவன் சோகங்களுக்கு ஒத்தடம் கொடுத்தன.
இரவு மெல்ல தன் கரங்களை விரிக்க தொடங்கியது.மெல்ல எழுந்தான்.கால்கள் இரண்டும் பின்னிக் கிடந்தன.தலைமுடி காற்றில் அலைக்கழிக்கப்பட்டிருந்தது.கன்னத்தின் மேடுகளில் கண்ணீர் தான் வந்த சுவடுகளை விட்டு சென்றிருந்தது.எதையோ இழந்தது போலிருந்தது அவன் மனம்.உடைகளில் ஒட்;டிக் கிடந்த மணலை தட்டி விட்டான். சாலையோரத்தில் நின்றிருந்த தன் பைக்கில் ஏறி வீடு நோக்கி புறப்பட்டான் ரவி;.
“அம்மா…அப்பா வந்தாச்சு…” ரவியின் ஒரே மகள் ராணி.
“ஏன் இவ்வளவு நேரம்..?என்ன ஒரு மாதிரி இருக்கீங்க…உடம்புக்கு ஏதும் முடியலயா..?
மனைவி ரேகா பதறினாள்.
ரேகா…ரவிக்கு ஏற்ற சரியான ஜோடி.காதல் மனைவி.கல்யாணம் பண்ணியும் காதலர்களாயவே வாழும் கலியுக காதல் பறவைகள்.ரேகா…படித்தவள்.கல்லூரி காலத்தில் இருவரும் கண்கள் பரிமாறி,இதயங்களை இடமாற்றிக் கொண்டவர்கள்.ஜாதி வேற வேற என்றாலும்,ரவிக்கு ஒரு நல்ல பெண் சாதி.அவன் தளர்ந்துக் கிடக்கும் போதெல்லாம் தைரியமூட்டி முன்னேற வைத்தவள்ஃகொஞ்சம் முன்கோபி.ஆனாலும் கணவனை விட்டுக் கொடுக்காத பதிவிரதை.
“அதெல்லாம் ஒண்ணுமில்ல…நீ போய் காபி போட்டுட்டு வா…”
முகத்தை முழுதாக காட்டாமல் உத்திரவு போட்டான் ரவி.
“ராணி என்ன பண்ற..?”
“படிக்கிறேம்பா…”
“என்ன படிக்கிற..?”
“ம்ம்….தமிழ் பா..”
“எங்க குடு…பாப்போம்…என்ன பாடம்..?”
“உறவுகள் ..2ம் பாடம்..பா”
“ஓ..ஓ…எங்க சொல்லு பாப்போம்..
என் அப்பாவின் அம்மா… பாட்டி…
என் அப்பாவின் சகோதரி…அத்தை..
என் அப்பாவின் அப்பா..தாத்தா…”
“சரிம்மா…நீ போய் தூங்கு…சரியா..?”
அவன் மனசு எதற்காகவோ ஏங்கியது…அது அந்த உறவுகளாகக் கூட இருக்கலாம்.
சாப்பிட்ட பிறகு,படுக்கையில் கிடந்தான்.தூக்கம் மட்டும் வர மறுத்தது.தாயின் ஏக்கம் இமைகளை சாத்த மறுத்தது.தலையில் ஏதோ ஒன்று விழுந்தது போலிருந்தது.தட்டி விட்டான் …பல்லி ஒன்று குதித்தோடியது.
…..ரேகா….
….ம்…..
“காலையிலிருந்தே மனசு சரியில்ல…என்னவோ அம்மாவை பாக்கனும் போலவே இருக்கு…?
“என்னங்க…என்னைக்குமே இல்லாம திடீர்னு..?”ஆச்சர்யப்பட்டாள் ரேகா…
“என் அம்மாவோட முகமே மறந்துடும் போல இருக்கு…அம்மா இப்ப இருக்காங்களோ..என்னவோன்னு பயமா இருக்கு…”
முதன்முதலாக ரவி அழுவதை அப்போதுதான் ரேகா பார்க்கிறாள்.
“சே…என்ன குழந்தையாட்டம் அழுதுகிட்;டு…கண்டதையும் போட்டு நினைக்காதீங்க..அம்மா அங்N;க நல்லாதான் இருப்பாங்க.”
“இல்லையே…நான் அனாதையா விட்டுட்டு வந்துடடேனே…”! மடியிலே முகம் புதைத்து அழுதான்.
“நாளைக்கே புறப்பட்டு,அம்மாவையும்,தங்கச்சியையும் பாத்துட்டு…கூடவே கூட்டிட்டு வந்துருவோம்.நீங்க இப்ப கவலைப்படாம தூங்குங்க..”சமாதானப்படுத்தினாள்.
சாயங்காலம் ஆகியது அவர்கள்; நம்பிய+ர் வந்து சேர்வதற்கு.இன்னும் இங்கயிருந்து இன்னொரு பஸ் பிடிக்கணும் ரவியின் சொந்த ஊர் போவதற்கு.
“ஏங்க இளத்தூருக்கு எத்தனை மணிக்கு பஸ் வரும்?”
“சொல்ல முடியாதுங்க…மழைக்காலம் வேற…இப்பத்தான் ஒரு வண்டிப் போச்சு. அடுத்தாப்ல பத்து,பத்தே காலுக்குத்தான்..”
இந்த நம்பிய+ர் ஒரு கிராமம். கிராமத்தின் மண்வாசனை அவன் மூக்கைத் துளைத்தது.அப்பவெல்லாம் இந்த நம்பிய+ர்லதான் சந்தை.சின்ன வயசுல ரவியும்,அவன் அம்மாவும் சந்தைக்குப் போய்ட்டு வீடு வரும் போது மணி ஒம்பது,பத்தாயிரும். நம்பிய+ர்ல இருந்து இளத்தூருக்கு ஒரு குறுக்கு வழி இருந்தது.
அப்பவெல்லாம் அதுலதான வந்து போகணும். பஸ் வசதியெல்லாம் இப்பதானே வந்தது.!காய் கூடையை அம்மா சுமந்துக்குவாள்.ரவி அம்மா கையை புடிச்சிட்டு,பொரியை தின்னுகிட்டு கதை பேசிகிட்டே வருவான்.சுத்தியும் முள் காடு. பனமரம்,கத்தாழைச் செடின்னு ஒரே இருட்டா இருக்கும்.திருடனுங்க அந்த காட்டுலதான் வந்து திருட்டு பொருட்களை பாகம் பிரிப்பதா ஊர்ல சொல்லுவாங்க. ரவி ..கையில ஒரு கம்பு வச்சுக்குவான்.அவனுங்க வந்து மறிச்சுட்டா..? அதுக்குத்தான் ஒரு தற்காப்பு. ஜான்பிள்ளை ஆனாலும் ஆண் பிள்ளை தானே…! அவன் அம்மாவும் அவன் தைரியத்தை ஊர்;ல ஒரு பெருமையா சொல்லிட்டு திரிவாள்.
“ஏங்க..இங்க ஒரு குறுக்குவழி இருந்துச்சே…”
“அதெல்லாம் அந்த காலம் தம்பி. ஊர் நாட்டாமையும்,அவன் மச்சானும் இடத்தை வளைச்சுப்; போட்டு விவசாயம் பண்ணீட்டு இருக்காங்க…..இப்ப அங்க வழியே இல்ல..தம்பி.”
ஊர் நாட்;டாமை கொஞ்சம் மோசமானவன். ஜாதி வெறி புடிச்சவன்.ரவியோட அப்பா பஞ்சாயத்து தேர்தலுக்கு மனுதாக்கல் பண்ணுனாங்கிருக்காக ரோட்டுல ஓட ஓட வெட்டுனவன்.குடும்பத்தையே ஊர விட்டு ஓதுக்குனாங்க.அப்ப ரவி கைக்குழந்தை..
“ரேகா….பத்து மணிக்குத்தான் பஸ்ஸாம்..நாம ஏதாவது சாப்பிடுட்;டு வந்துரலாம் …வா..”
பனையோலையால் கட்டப்பட்ட ஓட்டல்.இரண்டு அழுக்கேறிப்போன டேபிள்.உள்ளே..முழுக்க அடுப்பு புகை ஆக்ரமித்திருந்தது. உட்காரும் பலகை மேலும் கீழும் சீஸா மாதிரி ஆடியது.
“என்ன சாப்பிடுறீங்க…?”கடைக்காரன் கேட்டான்.
“ஒரு அஞசு தோசை மட்டும் போடுங்க…”
கூட்டமில்லாத ஊர் என்பதால்,வந்தவர்களை நன்றாகவே கவனித்தான் அந்த ஓட்டல் கடைக்காரன்.சாப்பிட்டு முடித்துவிட்டு வெளியே வந்தார்கள்.
“ரேகா…டைம் ஆச்சு. பஸ் வந்துரும்…பஸ் ஸ்டாண்டுல போய் நின்னுக்கலாம்.”
கையில இருந்த பையை சரிபார்த்துக் கொண்டான்.காலையில அம்மாவுக்கும்,தங்கச்சிக்கும் வாங்கிய புடவை. ஒரு வேளை தங்கச்சிக்கு கல்யாணம் ஆயிருந்தா…மச்சானுக்கு பேண்ட்,சட்டை. மருமகனிருந்தா..அவனுக்கு துணி.திண்பண்டம்…..எல்லாமே சரியாகத்தான் இருந்;தது.
பேருந்து நிலையம். ஒரே ஒரு கம்பு மட்டும் ஊன்றப்பட்டிருந்தது.உட்கார ரெண்டு வட்டக்கல் மட்டும் இருந்தது.இரண்டு பேரைத்தவிர வேறு யாரும் அங்கு இல்லை.
பக்கத்துல சாக்கடை. தாய் பன்றியை சுற்றி ஒரு பத்து,பன்னிரெண்டு குட்டிகள்.தாய் மீது ஏறிக்கொண்டு சறுக்கி விளையாடிக் கொண்டிருந்தன.
இளத்தூர் காரங்க…பெரும்பாலும் ஏழே கால் மணி வண்டியிலேயே,வேலையை முடிச்சுட்டு,போயிருவாங்க. அப்புறம் இந்த கழடசி வண்டியில் மீறிப்போனா…ஆறேழு பேர்தான் இருப்பாங்க.
லேசா…தூரலடித்துக் கொண்டிருந்தது ராணியை நெஞ்சோடு சேர்த்து,புடவையால் மூடிக்கொண்டாள் ரேகா.
யாரோ ஒரு ஆள்.அமைதியாய் வந்து பக்கத்தில் நின்றான். வயசு 32க்குள் தான் இருக்கும்.ஆள் உருவமே பார்த்தால் பரிதாபமாய் இருந்தது.ஒரு அழுக்கடைந்த பேண்ட்,சவரஞ் செய்யாத முகம்,உழைத்து உழைத்து களைத்துப்போன தேகம்.
அவன் முகம் ஏதோ ஒரு சோகத்தில் அவன் இருப்பதை உணர்த்தியது.
“என்னங்க…இளத்தூருக்கா?”ரவி மெல்ல அவனிடம் பேச்சுக் கொடுத்தான்.
“ஆமாம்….”
“பஸ்ஸ{ பத்தேகாலுக்குனாங்க…ஒண்ணும் வரலயே…!”
அவன் ஏதும் பேசவில்லை.மற்றவரிடம் பேசும் மனநிலையில் அவன் இல்லை.
ராணிக்கு குளிர் காற்று ஒத்துக்கவில்லை.அவ்வப்போது இருமிக் கொண்டே இருந்தாள்.
“ஏங்க…உங்களுக்கு சொந்த ஊர் இளத்தூரா…? நான் உங்களை பார்த்ததே இல்லையே..?” ரவிதான் அவனிடம் கேட்டான்.
“இல்லைங்க…”
என்னடா இவன் ஒரே வரியில பதிலை சொல்லிட்டு இருக்கான்னு..ரவி சலிச்சுப்போய் இனிமேல் அவன் கூட பேச்சே கொடுக்கக் கூடாதுன்னு முடிவெடுத்துக்கொண்டான்.
தூரத்தில் ரெண்டு பல்பு மட்டும் தெரிந்த வெளிச்சத்தில் பஸ் வருவதை மூவரும் புரிந்துக் கொண்டார்கள்.கம்பத்திற்கருகே வண்டி நின்றது.மூவரும் ஏறினார்கள்.
பஸ்சுக்குள் மீறிப்போனா எட்டுபேர்தான் இருப்;பார்கள்.அதுல ஒருத்தன் நல்லா குடிச்சுட்டு பின்னாடி சீட்டுல மல்லாக்கா கிடந்தான்.வேட்டி அவிழ்ந்து படிக்கட்டுக்கருகே வெளியே போவதற்கு சமயம் பார்த்துக் கொண்டிருந்தது.
‘2! இளத்தூர்”
“15 ரூபாய்”
டிக்கட்டை வாங்கிக் கொண்டான் ரவி.
“இந்தாப்பா டிக்கெட்…”
அந்த சோக ஆசாமி கேட்காமலேயே டிக்கட்டை கிழித்துக் கொடுத்தார் கண்டக்டர்.எப்பவும் இதே வண்டியில் வருவதால் கண்டக்டருக்கு மனப்பாடம் ஆகியிருந்தது.
“ஏம்பா…ஆத்தாளுக்கு இப்ப எப்படி இருக்கு…?” கண்டக்டர் அந்த ஆசாமியிடம் கேட்டார்.
“மோசமாயிட்டு தாங்கண்ணா யிருக்கு..தினமும் இந்த மருந்து தரலேன்னா…இளப்பு வந்து மூச்சு விட முடிய மாட்டீங்குது..” வாங்கய மருந்தைக் காட்டினான். கண்டக்டர் அவன் சோகத்தில் பங்;கெடுத்துக் கொள்வது போல் உச் கொட்டினார்.
கண்டக்டருக்கும் ஆத்தாளை நல்லாவே தெரியும்.வேளை முடிச்சுட்டு இந்த வண்டியிலதான் ஏறி போவா..ம்…அறுபது வயசுவரை அசராம கூலி வேலை செஞ்சவ அந்த ஆத்தா….
“இளத்தூர் இறங்குங்க…”
ரவியும்,ரேகாவும் மெல்ல இறங்கினார்கள்.ராணி தூங்கி போயிருந்தாள்.அந்த ஆசாமியும் இறங்கினான்.
எதிரே..கருப்பராயன் சாமி சிலை.கையிலே கத்தி,கண்ணிலே கோபமுடன் இருந்த சாமிpயை பார்த்து பயந்து போனான்.இவனுடைய குல தெய்வம் அது.
“வந்துட்டியா…வா..வா..”ன்னு சொல்லி மிரட்டுவதுபோல தெரிந்தது அவனுக்கு.
புதுசு புதுசா…சில வீடுகள் அங்கே முளைத்திருந்தன. இவன் வீடு கருவேல முள்செடி தாண்டி.,இருபது அடி நடக்கணும். நல்ல இருட்டு.
அந்த சோக ஆசாமி அவர்களுக்கு முன்னே ஒரு நாலடி தூரத்தில் சென்று கொண்;டிருந்தான்.
“ஓ…இவனும் நம்ம தெருதானா…யார் இவன்..? பார்த்ததே இல்லையே..! ரவிக்கு அப்பவும் குழப்பம் தான்.
ஊரே அடங்கி போயிருந்தது.நாய்கள் ஊளையிட்டுக் கொண்டிருந்தன.ள
வீடு வந்துவிட்டது. ஆனால் அந்த ஆசாமி உள்ளே உரிமையோடு கதவை திறந்து சென்றான்.இதை பார்த்து ரவிக்கு இது நம்ம வீடுதானா என்று சந்தேகமே வந்;து விட்டது.
ரவி வெளியே நின்று….
“என்னங்க….இது பொன்னம்மா வீடுதானே…?’
“ஆமா நீங்க…யாருன்னு….:?”
“நான் அவங்க மகன்…”
அந்த ஆசாமிக்கு என்னவோ போலாகியது.
“வாங்க..வாங்க…உள்ளே வாங்க…”
“நீங்க யாருன்னு…ஃ”ரவி கேட்டான்.
“நான் தான் அவங்க மருமகன்.உங்க தங்கச்சியைக் கட்டுனவன். அறிமுகப்படுத்திக்கொண்டான்.
“தங்கச்சி எங்கே?”
அவன் மச்சானால் பதில் சொல்ல முடியவில்லை.திடீரென்று சோகமானாhன்.
“அது வந்து…பிரசவத்துல பாவி என்னைய விட்டுட்டு போயிட்டா…இறந்து நாலு வருசமாகுது…” அழுதான்.
இவனுக்கு இதயமே வெடித்துவிடும் போல இருந்தது. ரவியின் கண்ணிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக ஓடியது.சமாதான படுத்தினார்கள் இருவரும்.
“என் அம்மா எங்கே….?” என்று கதறினான் ரவி.
இவன் கைத்தாங்கலாக ரவியை உள்ளே கூட்டிச் சென்றான்.கயித்துக் கட்டிலில் மூட்டையாக்கப்பட்ட இழுக்குத்துணி போல் கிடந்தாள் அவன் தாய்.
“அம்மா….” வாயிலிருந்து அவனுக்கு வார்த்தைகள் சரியாக வரவில்லை.13 வருடமாக பார்க்காத சூரியனை அப்போதுதான் பார்க்கிறான்……ஆனால்……………..
அம்மா…என்ற அவன் பாச கூப்பாட்டை அவளால் கேட்க முடியவில்லை.அவள் முகம் வெளிரி போயிருந்தது.கண்கள் சொருகி போயிருந்தது. நாடிகள் நின்றே போயிருந்தன.
ஆம்….அவள் இறந்து சிலமணி நேரம்தான் ஆகியிருக்கும்.
Re: நான் எழுதிய - இளவம்பஞ்சு -சிறு கதை...-உங்கள் விமர்சனம் வேண்டும்
உணவு இடைவெளியில் படித்து நிச்சயம் பதில் அனுப்புறேன் ..தற்போது படிக்க இயலாது.



உமா- வழிநடத்துனர்

- பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374
Re: நான் எழுதிய - இளவம்பஞ்சு -சிறு கதை...-உங்கள் விமர்சனம் வேண்டும்
நல்லா இருக்கு உங்க கதை ஒட்ட கூத்தன்.
படிச்சு முடிச்சதும் ஒரு சோகம் வந்து மனதுக்குள் அப்பியது.
வார்த்தைகள் எதுவும் வரவில்லை.
படிச்சு முடிச்சதும் ஒரு சோகம் வந்து மனதுக்குள் அப்பியது.
வார்த்தைகள் எதுவும் வரவில்லை.

உதயசுதா- வி.ஐ.பி

- பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929
Re: நான் எழுதிய - இளவம்பஞ்சு -சிறு கதை...-உங்கள் விமர்சனம் வேண்டும்
கதை ஓகே
1. ஆனாலும் பதிமூன்று வருடமாக ஒரு மகன் அம்மாவை பார்க்காமல் இருப்பான் என்பது நம்ப முடியவில்லை.
2. அம்மாவும் தான் பெற்ற மகனை 13 வருடமாக பார்க்காமல் இருப்பார் என்பது நினைக்கவே முடியவில்லை
3. உங்கள் கதயில் சில இடங்கள்(பஸ் ஸ்டண்ட், கிராமத்து வீடுகள்) இவற்றை வர்ணிதிருபது அழகு
4. எனக்கு என்னவோ இது உண்மை சம்பவத்தை கதயாக சொல்லியிருப்பது போல உள்ளது
நல்ல பதிவு
1. ஆனாலும் பதிமூன்று வருடமாக ஒரு மகன் அம்மாவை பார்க்காமல் இருப்பான் என்பது நம்ப முடியவில்லை.
2. அம்மாவும் தான் பெற்ற மகனை 13 வருடமாக பார்க்காமல் இருப்பார் என்பது நினைக்கவே முடியவில்லை
3. உங்கள் கதயில் சில இடங்கள்(பஸ் ஸ்டண்ட், கிராமத்து வீடுகள்) இவற்றை வர்ணிதிருபது அழகு
4. எனக்கு என்னவோ இது உண்மை சம்பவத்தை கதயாக சொல்லியிருப்பது போல உள்ளது
நல்ல பதிவு

வின்சீலன்- இளையநிலா

- பதிவுகள்: 593
வசிப்பிடம்: கோடம்பாக்கம்
சேர்ந்தது: 03/08/2011
மதிப்பீடு: 57
Re: நான் எழுதிய - இளவம்பஞ்சு -சிறு கதை...-உங்கள் விமர்சனம் வேண்டும்
நண்பர் வின்ஸீல்ம் அவர்களுக்கு என் ஆனமார்ந்த நன்றிகள். 13 வருடங்கள் மகனும் அம்மாவும் சந்திக்காமல் இருப்பது , இன்றைக்கு நடப்பது தானே..
தங்கள் விமர்சனம் என்னை கூர் படுத்த உதவுகிறது.
தங்கள் விமர்சனம் என்னை கூர் படுத்த உதவுகிறது.
Re: நான் எழுதிய - இளவம்பஞ்சு -சிறு கதை...-உங்கள் விமர்சனம் வேண்டும்
மிகவும் அருமையான கதை.அப்படியே உண்மை சம்பவம் போலே இருந்தது.
வின்சீலன் சொல்வதை போலே 13 வருடம் என்பது தான் எனக்கும் சற்று யோசிக்கும்படி இருந்தது...ஆனால், கடைசியிலே சற்று கண்கள் கலங்கி விட்டது...இதில் நிறைய விஷயங்கள் அருமையாக இருந்தன...கடற்கரை, அலைகள், ஐயனார் சிலை....இன்னும்.....
மிகவும் அருமையாக சிந்த்தித்து ஒவ்வொரு வரிகளாக பொரித்து எழுதி இருக்கும் உங்களின் இந்த முயர்ச்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்...இவ்வளவு டைப் செய்ய எவ்வளவு நேரம் ஆகி இருக்குமோ.
தொடர்ந்து எழுதுங்கள்....
நன்றி.
வின்சீலன் சொல்வதை போலே 13 வருடம் என்பது தான் எனக்கும் சற்று யோசிக்கும்படி இருந்தது...ஆனால், கடைசியிலே சற்று கண்கள் கலங்கி விட்டது...இதில் நிறைய விஷயங்கள் அருமையாக இருந்தன...கடற்கரை, அலைகள், ஐயனார் சிலை....இன்னும்.....
மிகவும் அருமையாக சிந்த்தித்து ஒவ்வொரு வரிகளாக பொரித்து எழுதி இருக்கும் உங்களின் இந்த முயர்ச்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்...இவ்வளவு டைப் செய்ய எவ்வளவு நேரம் ஆகி இருக்குமோ.
தொடர்ந்து எழுதுங்கள்....
நன்றி.



உமா- வழிநடத்துனர்

- பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374
Re: நான் எழுதிய - இளவம்பஞ்சு -சிறு கதை...-உங்கள் விமர்சனம் வேண்டும்
இந்த கதையின் சாதக அம்சங்கள்:
1. ஒரு கதாசிாியாின் பாா்வை கண்ேணாட்டம் அருமை. (உ.ம்) பஸ்டாண்டில் பன்றியின் வா்ணனை; ஓட்டல்காரனின் கவனிப்பு: ”கூட்டமில்லாததால் வந்தவா்களை நன்கு கவனித்தான்” ஓட்ல்கானின் மனநிலையை வா்ணித்தல்; நாட்டாமையின் நடத்தை; ...
கதையின் ஆசிாியா் நினைத்திருந்தால் அதை ஒதுக்கியிருக்க முடியும். அப்படி ஒதுக்கியிருந்தால் கதைக்கு பாதிப்பு ஏற்படாது. ஆனால், அப்படி எழுதியிருப்பது படிப்போரை அச்சூழலுக்கே இட்டுச் செல்ல உதவுகிறது. சிறந்த கற்பனை வளம். நன்கு கவனம் செலுத்தியிருக்கிறீா்கள்.
2. தங்கச்சியின் கணவனின் கதாபாத்திரம் வாசிப்போாின் மனதை ஆழமாக பாதிப்படைய செய்யும். காரணம்: பெற்ற மகனின் ஆதரவை இழந்த தாய் ஒரு பக்கம்; பெற்ற மகளை காலனுக்கு இழக்க கொடுத்த நிலை இன்னொரு பக்கம்; தாய்க்கு இருவித இழப்பு அந்திய நாட்களில்... . இருப்பினும் மகன் செய்ய தவறிய கடமையை, கடனை, மகளை கட்டின ஒரே காரணத்திற்காக, இறுதிவரை தன் சொந்த தாயை கவனிப்பதுபோல அக்கறையோடும், கவலை தோய்ந்த முகத்தோடும் சிரத்தையெடுத்த பாா்க்கும் விதம் மிக மிக அருமை. கதைக்கு நல்ல சிறந்த பாத்திர படைப்பு. படைப்பாளிக்கு பாராட்டை தருகிறது.
3. முடிவு சுபமாக முடிக்கப்பட்டிருந்தால் இந்த கதை நிச்சயம் வாசிப்பவாிடம் தோல்வியை சந்தித்திருக்கும். இயல்பாக, நிதா்சனமாக வாசிப்பவா் எதிா்பாராத முடிவை தந்திருப்பது மிக அருமை. அதுவே இந்த கதையின் வெற்றி. இந்த கதைக்கு சோகமான முடிவு சாி. வாசிப்போா் முடிக்கும்போது கனத்த நெஞ்சுடன் சற்று சோகமாக உணர வைப்பது, கண்களில் கண்ணீரை உடனே கொண்டு வரும்படி எழுதியிருப்பது மிக மிக அருமை.
பாதக நிலை: (வருந்த மாட்டீா்கள் என நினைக்கிறேன்)
1. எழுத்துப் பிழைகள்
2. பிாிந்த வந்த மகன் 13 வருடங்கள் கழித்து திடீரென தாயை நினைக்க வேண்டிய அவசியம் என்ன? அதற்கு ஒரு பின்னனியை கூறியிருந்தால் மிக பொருத்தமாக இருந்திருக்கும் என கருதுகிறேன்.
3. மனைவியின் பங்களிப்பு குறைவாக இருப்பது போல தொிகிறது. உடனே சம்மதம் தொிவிக்கும் நல்ல மனைவி 13 ஆண்டுகாலமாக கணவனுக்கு ஊரைப்பற்றியோ, தாயைப்பற்றியோ நினைவுபடுத்தாமலிருப்பாளா?
மொத்தத்தில் கதை மிக அருமை. பாரதிராஜா அவா்கள் பாா்த்திருந்தால் (1980 களில்) நிச்சயம் இதை படம் பண்ணியிருக்க முடியும் என்கிற அளவில் நல்ல கதையாக உள்ளது. மிகைப்படுத்தி கூறவில்லை. மனதில்பட்டதை கூறுகிறேன்.

1. ஒரு கதாசிாியாின் பாா்வை கண்ேணாட்டம் அருமை. (உ.ம்) பஸ்டாண்டில் பன்றியின் வா்ணனை; ஓட்டல்காரனின் கவனிப்பு: ”கூட்டமில்லாததால் வந்தவா்களை நன்கு கவனித்தான்” ஓட்ல்கானின் மனநிலையை வா்ணித்தல்; நாட்டாமையின் நடத்தை; ...
கதையின் ஆசிாியா் நினைத்திருந்தால் அதை ஒதுக்கியிருக்க முடியும். அப்படி ஒதுக்கியிருந்தால் கதைக்கு பாதிப்பு ஏற்படாது. ஆனால், அப்படி எழுதியிருப்பது படிப்போரை அச்சூழலுக்கே இட்டுச் செல்ல உதவுகிறது. சிறந்த கற்பனை வளம். நன்கு கவனம் செலுத்தியிருக்கிறீா்கள்.
2. தங்கச்சியின் கணவனின் கதாபாத்திரம் வாசிப்போாின் மனதை ஆழமாக பாதிப்படைய செய்யும். காரணம்: பெற்ற மகனின் ஆதரவை இழந்த தாய் ஒரு பக்கம்; பெற்ற மகளை காலனுக்கு இழக்க கொடுத்த நிலை இன்னொரு பக்கம்; தாய்க்கு இருவித இழப்பு அந்திய நாட்களில்... . இருப்பினும் மகன் செய்ய தவறிய கடமையை, கடனை, மகளை கட்டின ஒரே காரணத்திற்காக, இறுதிவரை தன் சொந்த தாயை கவனிப்பதுபோல அக்கறையோடும், கவலை தோய்ந்த முகத்தோடும் சிரத்தையெடுத்த பாா்க்கும் விதம் மிக மிக அருமை. கதைக்கு நல்ல சிறந்த பாத்திர படைப்பு. படைப்பாளிக்கு பாராட்டை தருகிறது.
3. முடிவு சுபமாக முடிக்கப்பட்டிருந்தால் இந்த கதை நிச்சயம் வாசிப்பவாிடம் தோல்வியை சந்தித்திருக்கும். இயல்பாக, நிதா்சனமாக வாசிப்பவா் எதிா்பாராத முடிவை தந்திருப்பது மிக அருமை. அதுவே இந்த கதையின் வெற்றி. இந்த கதைக்கு சோகமான முடிவு சாி. வாசிப்போா் முடிக்கும்போது கனத்த நெஞ்சுடன் சற்று சோகமாக உணர வைப்பது, கண்களில் கண்ணீரை உடனே கொண்டு வரும்படி எழுதியிருப்பது மிக மிக அருமை.
பாதக நிலை: (வருந்த மாட்டீா்கள் என நினைக்கிறேன்)
1. எழுத்துப் பிழைகள்
2. பிாிந்த வந்த மகன் 13 வருடங்கள் கழித்து திடீரென தாயை நினைக்க வேண்டிய அவசியம் என்ன? அதற்கு ஒரு பின்னனியை கூறியிருந்தால் மிக பொருத்தமாக இருந்திருக்கும் என கருதுகிறேன்.
3. மனைவியின் பங்களிப்பு குறைவாக இருப்பது போல தொிகிறது. உடனே சம்மதம் தொிவிக்கும் நல்ல மனைவி 13 ஆண்டுகாலமாக கணவனுக்கு ஊரைப்பற்றியோ, தாயைப்பற்றியோ நினைவுபடுத்தாமலிருப்பாளா?
மொத்தத்தில் கதை மிக அருமை. பாரதிராஜா அவா்கள் பாா்த்திருந்தால் (1980 களில்) நிச்சயம் இதை படம் பண்ணியிருக்க முடியும் என்கிற அளவில் நல்ல கதையாக உள்ளது. மிகைப்படுத்தி கூறவில்லை. மனதில்பட்டதை கூறுகிறேன்.


[flash][/flash]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc- கல்வியாளர்

- பதிவுகள்: 2070
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 556
Re: நான் எழுதிய - இளவம்பஞ்சு -சிறு கதை...-உங்கள் விமர்சனம் வேண்டும்
ஈகரையில் நான் படித்த முதல் முழு சிறுகதை இதுதான்.
இயல்பான ஆரம்பம், நெருடலான வார்த்தை நயம், சோகத்தை சாதாரணமாக வெளிப்படுத்தும் வரிகள். அதிலும் இயல்பில் நிகழும் குழந்தை படிப்பதும், பன்றி விளையாடுவதையும் குறிப்பிட்டது அருமை. இயல்பான கிராமத்தின் பேருந்து பயணம் செய்வது போல் இருந்தது. தான் ஆடாவிட்டாலும் தன் தசையாடும் என்பது போல் அம்மா இறக்கும் போது பார்க்கச் சென்ற காட்சி இயல்பு, யதார்த்தம்.
அருமையான கதை. ஒரு சில வரிகள் குறைக்கப்படலாம். சில இடங்களில் வார்த்தை நயங்கள் உள்ளது. இதை கீழே குறிப்பிட்டு உள்ளேன். இதே போல் பல இடங்களில் மெருகு மேலும் ஊட்டலாம். தலைப்பும் சற்று மாறலாம்.
அலைகளும்,கரையை தொட பலமுறை முயன்றாலும்,கடலுக்குள் செல்வதிலேயே கண்ணாக இருந்தது.
கன்னத்தின் மேடுகளில் கண்ணீர் தான் வந்த சுவடுகளை விட்டு சென்றிருந்தது
ஜாதி வேற வேற என்றாலும்,ரவிக்கு ஒரு நல்ல பெண் சாதி.
கிராமத்தில் அடையாளம் காண ஒருவரும் இல்லை என்பது ஒட்டவில்லை. ஒரு பால்ய கால நண்பனை சேர்க்கலாம். அவன் அம்மாவைப் பற்றி வழி நெடுக்க நடந்த கதை கூறலாம். இதில் வரும் ரவியின் பாத்திரத்தை நியாயப் படுத்த வரிகள் குறைவாக இருக்கிறது. அம்மா ஏன் வேண்டாம் என்பதர்க்கும் வலுவான காரணம் கூறப்படவில்லை.
இவை என் விமர்சனம். உங்கள் கதை உண்மையில் என்னை மிகவும் கவர்ந்தது. அது அதன் இயல்பில் இருப்பதும் சரிதான்.
நீங்கள் மேலும் வளர வாழ்த்துகள். வாரமலர் டி வி ஆர் கதைப் போட்டி வந்தால் அனுப்புங்கள். பரிசு வெல்லும்.
இயல்பான ஆரம்பம், நெருடலான வார்த்தை நயம், சோகத்தை சாதாரணமாக வெளிப்படுத்தும் வரிகள். அதிலும் இயல்பில் நிகழும் குழந்தை படிப்பதும், பன்றி விளையாடுவதையும் குறிப்பிட்டது அருமை. இயல்பான கிராமத்தின் பேருந்து பயணம் செய்வது போல் இருந்தது. தான் ஆடாவிட்டாலும் தன் தசையாடும் என்பது போல் அம்மா இறக்கும் போது பார்க்கச் சென்ற காட்சி இயல்பு, யதார்த்தம்.
அருமையான கதை. ஒரு சில வரிகள் குறைக்கப்படலாம். சில இடங்களில் வார்த்தை நயங்கள் உள்ளது. இதை கீழே குறிப்பிட்டு உள்ளேன். இதே போல் பல இடங்களில் மெருகு மேலும் ஊட்டலாம். தலைப்பும் சற்று மாறலாம்.
அலைகளும்,கரையை தொட பலமுறை முயன்றாலும்,கடலுக்குள் செல்வதிலேயே கண்ணாக இருந்தது.
கன்னத்தின் மேடுகளில் கண்ணீர் தான் வந்த சுவடுகளை விட்டு சென்றிருந்தது
ஜாதி வேற வேற என்றாலும்,ரவிக்கு ஒரு நல்ல பெண் சாதி.
கிராமத்தில் அடையாளம் காண ஒருவரும் இல்லை என்பது ஒட்டவில்லை. ஒரு பால்ய கால நண்பனை சேர்க்கலாம். அவன் அம்மாவைப் பற்றி வழி நெடுக்க நடந்த கதை கூறலாம். இதில் வரும் ரவியின் பாத்திரத்தை நியாயப் படுத்த வரிகள் குறைவாக இருக்கிறது. அம்மா ஏன் வேண்டாம் என்பதர்க்கும் வலுவான காரணம் கூறப்படவில்லை.
இவை என் விமர்சனம். உங்கள் கதை உண்மையில் என்னை மிகவும் கவர்ந்தது. அது அதன் இயல்பில் இருப்பதும் சரிதான்.
நீங்கள் மேலும் வளர வாழ்த்துகள். வாரமலர் டி வி ஆர் கதைப் போட்டி வந்தால் அனுப்புங்கள். பரிசு வெல்லும்.

சதாசிவம்- தளபதி

- பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671
Re: நான் எழுதிய - இளவம்பஞ்சு -சிறு கதை...-உங்கள் விமர்சனம் வேண்டும்
அன்பு சொந்தங்களே .....
ஆனந்த கண்ணீருடன் இந்த மடலை நான் விரிக்கிறேன்.
ஈகரையில் நான் பல நாட்களாக இருக்கும் ஒரு உறுப்பினர்.
நேற்றய தினம், ஒரு சிறுகதையை எழுதி, அதற்க்கு விமர்சனம் வேண்டும் என நான் கேட்டிருந்தேன்.
என் முதல் சிறுகதை, கிட்டத்தட்ட என் வாழ்க்கையில் நான் பார்த்த ஒரு உண்மை சம்பவம் , இதை ஒரு குழந்தை, முதன் முதலில் கரிக்கோட்டை பிடித்து எழுதுவது போலத்தான் எழுதினேன். அதிலுள்ள சோகமூட்டும் வர்ணனை உண்மையில் எனக்குள் நான் அனுபவித்த விஷயம்.
இது ஒருபுறமிருக்கட்டும்.
இந்த கதைக்கு என் ஈகரை சொந்தந்தக்கள் கொடுத்த விமர்ர்சனங்கள் தான் என்னை அதை விட சிலிர்க்க செய்து இருக்கிறது.
காரணம், இந்த கதையை பாட்டிபதற்க்கு நேரத்தை ஒதுக்கி, அதை அழகாக , பாசத்தோடு விமர்சனத்தை கொடுத்திருக்கிறார்கள். குறிப்பாக, அண்ணன் சதாசிவம், உமா, சீலன், சார்லஸ், சுதா இன்னும் என் ஈகரை தமிழர்கள்.
இந்த வளரும், எழுத்தாளனுக்கு, நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு வார்த்தையும், என்னை மென்மேலும் எழுத தூண்டிக் கொண்டிருக்கிறது.
என் உடன்பிறவா தமிழ் சொந்தங்களே உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
ஆனந்த கண்ணீருடன் இந்த மடலை நான் விரிக்கிறேன்.
ஈகரையில் நான் பல நாட்களாக இருக்கும் ஒரு உறுப்பினர்.
நேற்றய தினம், ஒரு சிறுகதையை எழுதி, அதற்க்கு விமர்சனம் வேண்டும் என நான் கேட்டிருந்தேன்.
என் முதல் சிறுகதை, கிட்டத்தட்ட என் வாழ்க்கையில் நான் பார்த்த ஒரு உண்மை சம்பவம் , இதை ஒரு குழந்தை, முதன் முதலில் கரிக்கோட்டை பிடித்து எழுதுவது போலத்தான் எழுதினேன். அதிலுள்ள சோகமூட்டும் வர்ணனை உண்மையில் எனக்குள் நான் அனுபவித்த விஷயம்.
இது ஒருபுறமிருக்கட்டும்.
இந்த கதைக்கு என் ஈகரை சொந்தந்தக்கள் கொடுத்த விமர்ர்சனங்கள் தான் என்னை அதை விட சிலிர்க்க செய்து இருக்கிறது.
காரணம், இந்த கதையை பாட்டிபதற்க்கு நேரத்தை ஒதுக்கி, அதை அழகாக , பாசத்தோடு விமர்சனத்தை கொடுத்திருக்கிறார்கள். குறிப்பாக, அண்ணன் சதாசிவம், உமா, சீலன், சார்லஸ், சுதா இன்னும் என் ஈகரை தமிழர்கள்.
இந்த வளரும், எழுத்தாளனுக்கு, நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு வார்த்தையும், என்னை மென்மேலும் எழுத தூண்டிக் கொண்டிருக்கிறது.
என் உடன்பிறவா தமிழ் சொந்தங்களே உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum









