|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» ஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே!by Aathira Today at 11:06 pm
» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by Aathira Today at 11:02 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by முரளிராஜா Today at 11:02 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by வை.பாலாஜி Today at 10:56 pm
» அறிமுகம் ...
by முரளிராஜா Today at 10:27 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by கேசவன் Today at 10:03 pm
» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ
by புரட்சி Today at 8:58 pm
» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm
» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm
» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm
» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm
» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm
» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm
» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm
» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm
» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm
» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm
» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm
» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
அம்மா தாயே ஊழல் பிச்சை போடு...
Page 1 of 1 • Share •
அம்மா தாயே ஊழல் பிச்சை போடு...
பிரதமர் மன்மோகன் சிங் சாப்பாட்டு மேஜையில் சோகமாக அமர்ந்து சப்பாத்தியை ஆள்காட்டி விரலால் கிள்ளி கொண்டிருந்தார் அவர் எதிரே சாம்பார் சாதத்தை ஒரு பிடிபிடித்த திருப்தியோடு அமர்ந்திருந்த உள்துறை அமைச்சர் சிதம்பரம் எதிர்க்கட்சிகாரர்கள் கொடைச்சல் கொடுக்கிறார் என்று வருத்தபட்டால் நியாயம் இருக்கிறது சுப்ரமணிய சாமி ஆதாரத்தை கோர்டில் காட்டிவிடுவாரோ என்று பயப்படுவதில் அர்த்தம் இருக்கிறது ஆனால் அந்த பயம் எல்லாம் கூட எனக்கு சட்டையில் ஒட்டிய தூசி தான் இந்த ராகுல் காந்தி பேசுவதை பார்த்தால் தான் தொடை நடுங்குகிறது என்று பிரதமரிடம் அழாத குறையாக சொல்லிக்கொண்டிருந்தார்
நானும் அவர் பேசியதை பேப்பரில் படித்தேன் இவர் காட்டுகிற பூச்சாண்டியில் நமக்கு குலை நடுங்குகிறது ஊழல் வாதிக்கு காங்கிரசில் இடமில்லை என்கிறாரே ஒருவேளை சோனியாகாந்தியை கட்சியை விட்டு துரத்துவதற்கு சொந்த மகனே சதி செய்கிறாரோ என்றும் எண்ண தோன்றுகிறது அந்த ஆள் பேசியதை படித்த நேரமுதல் நிம்மதியாக மூச்சிவிட முடியவில்லை நிம்மதியாக ஒருகவளம் சாப்பிட முடியவில்லை எல்லாம் நம் தலையெழுத்து என்று பிரதமரும் தன்பாட்டிற்கு புலம்பி கொண்டிருந்தார்
அந்த நேரம் உள்ளே வந்த அதிகாரி ஒருவர் உங்கள் இருவரையும் சோனியா மேடம் அவசர ஆலோசனைக்கு கூப்பிடுகிறார்கள் என்று சொன்னார் அதை கேட்டவுடன் இருவர் முகமும் வியர்த்து விட்டது படபடப்பு அதிகரித்து இருப்பது அவர்கள் கைகள் நடுங்குவதிளிருந்து தெரிந்தது என்ன ஆலோசனையோ என்ன கூட்டமோ ஒன்றும் புரியவில்லை பிரதமர் பதவி விட்டு வீட்டுக்கு போ என்று சொல்லப்போகிறாரோ என்னவோ எதுவாக இருந்தாலும் நான் முன்னால் போகிறேன் நீங்கள் பின்னால் வாருங்கள் என்று சிதம்பரத்திடம் கூறிவிட்டு பிரதமர் அவசர அவசரமாக கிளம்பினார்
சோனியா காந்தி தனது இல்லத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்த ஆரம்பித்தார் பிரதமர் மன்மோகன் சிங் சாப்பிட்ட கையை கழுவாமலே கூட்டத்துக்கு வந்தார் என்ன மிஸ்டர் மன்மோகன் கையை கழுவி விட்டு வரக்கூடாதா என்ற கேட்ட சோனியாவிடம் நீங்கள் கூப்பிட்டதாக சொன்னார்கள் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை அவசர அவசரமாக வந்து விட்டேன் என்று பிரதமர் அசடு வழிந்தார்
அப்போது தான் உள்ளே நுழைந்த உள்துறை மந்திரி சிதம்பரம் மேல்மூச்சி கீழ்மூச்சி வாங்கி நின்றார் அவரை பார்த்து என்ன சிதம்பரம் சார் பதட்டமா இருக்கீங்க என்று சோனியா கேட்கவும் ஒன்றும் இல்லை மேடம் எனக்கும் பிரணாப் முகர்ஜிக்கும் நீங்கள் ஆள் அனுப்பியிருக்கிறீர்கள் என்று கேள்வி பட்டேன் முகர்ஜி வருவதற்குள் நான் வரவில்லை என்றால் அவர் என்னை பற்றி எடாக்கூடமாக எதாவது போட்டு கொடுத்து விடுவார் நீங்களும் நம்பி விட்டீர்கள் என்றால் என்னை காப்பாற்ற யாருமே இல்லாமல் போய்விடுவார்கள் என்று தழுதழுத்த குரலில் சிதம்பரம் பதில் சொன்னார்
கவலை படாதீங்க நான் அவர் சொல்வதை நம்ப மாட்டேன் அவரென்ன வேறு யார் யாரை பற்றி புகார் சொன்னாலும் அதை நம்புவது இல்லை என்று உறுதியோடு இருக்கிறேன் புகார்களை எல்லாம் நம்பி நடவடிக்கை எடுத்தேன் என்று வைத்து கொள்ளுங்கள் நமக்கு நாலு காசு யார் தருவார் என்று சோனியா பதில் சொல்லவும் சிதம்பரம் மனது குளிர்ந்து போய் விட்டது
நீங்கள் சொல்வதை கேட்டால் சந்தோசமாக இருக்கிறது உங்கள் பிள்ளையாண்டான் பேசுகிற பேச்சை பார்த்தால் அடிவயிறு கலங்குகிறது மேடம் ஊழல் செய்தவர்களுக்கு காங்கிரசில் இடம் இல்லை என்கிறார் அவர்களை உண்டு இல்லை என்று ஆக்கி விடுவேன் என மிரட்டுகிறார் மிகவும் பயமாக இருக்கிறது என்று பிரதமர் மன்மோகன் சிங் அழாத குறையாக பேசினார்
ஆமாம் மேடம் நம்ம பிரதமர் சொல்வது நூற்றுக்கு நூறு சரி ராகுல் காந்தி தீடிர் தீடிரென பற்றவைக்கும் அதிர் வேட்டுகள் இதையத்தை பிளந்து விடும் போல் இருக்கிறது ஊழல் செய்தவர்களுக்கு காங்கிரசில் இடம் இல்லை என்றால் நாங்கள் எல்லாம் எங்கே போய் நிற்போம் எங்களுக்கு ஆதரவாக யார் இருக்கிறார்கள் பரம்பரை பரம்பரையாக எங்களை காப்பாற்றுவது உங்கள் குடும்பம் தானே இது உங்கள் மகனுக்கு தெரியாதா? என்று சிதம்பரம் மெல்லிய குரலில் விண்ணப்பித்தார்
உங்கள் மாமியாருக்கு நாங்கள் காட்டிய விசுவாசம் உலகமே பாராட்டக்கூடியது அவர் மாருதி நிறுவனத்தில் கொள்ளையடித்த போது கூட இருந்து ஒத்தாசை புரிந்தது யார் சரி அதை விடுங்கள் உங்கள் வீட்டுக்காரர் பீரங்கி பேர ஊழலில் மாட்டிக்கொண்ட போது விசுவநாத் பிரதாப் சிங் கிழி கிழி என்று கிழித்தாரே அப்போது நாங்கள் இல்லை என்றால் உங்கள் புருஷன் கதி என்னாவாயிருக்கும் அதையெல்லாம் உங்கள் மகன் யோசிக்கவே இல்லையே இது பிரதமரின் புலம்பல்
அதை விடுங்கள் நரசிம்ம ராவ் என்ற கடுவன் பூனை பிரதமராக இருந்தது போது உங்களையே என்ன மிரட்டு மிரட்டினார் உங்கள் சொந்தகாரர் குத்துரோச்சியை விடாக்கண்டன் போல் மாட்டி விட்டாரே அப்போதெல்லாம் உங்கள் கூட இருந்தது யார் நாங்கள் தானே அந்த வரலாறு உங்கள் பிள்ளைக்கு மறந்து போய்விட்டதா இது சிதம்பரத்தின் அங்கலாய்ப்பு
காந்தி குல்லா போட்டுகிட்டு ஹசாரே உழலை ஒழிப்பேன் என்று சொன்னால் ஒரு நியாயம் இருக்கிறது ஹசாரேயிக்கு சொந்தமா கட்சியும் கிடையாது புடலங்காயும் கிடையாது தேர்தலுக்கு செலவு செய்ய ஊர்வலம் போய் கோடி பிடிக்க ஆள் அம்பு ரவடிகள் சேர்க்க பணம் தேவையில்லை நம்ம கதை அப்படியா எத்தனை மாநிலத்தில் தேர்தல் செலவை கவனிக்க வேண்டும் எம்.எல்.ஏ, எம்பிக்களை விலைகொடுத்து வாங்க வேண்டும் அதற்கெல்லாம் பணம் எப்படி வரும் நம்ம சம்பளத்தில் தான் அரசியல் நடத்த வேண்டுமென்றால் கட்சி என்னாவது தொண்டர்கள் என்னாவார்கள் அட நம் கதி தான் என்னவாகும் கொஞ்சம் யோசிங்க மேடம் இது பிரதமர்
சுப்ரமணிய சாமி அலைக்கற்றை உழலில் எனக்கு சம்பந்தம் இருப்பதாக கோர்டில் குதிக்கிறார் ஊழல் செய்தால் கட்சியை விட்டே தூக்கி விடுவேன் என்கிறார் உங்கள் மகன் சுவாமிக்கும் ராகுலுக்கும் வித்தியாசமே எனக்கு தெரியவில்லை இது சிதம்பரம்
கட்சியை விட்டு தூக்கினால் கூட வேறு எதாவது கட்சியில் சேர்ந்தோ புதிய கட்சி துவங்கியோ பிழைப்பு நடத்தி கொள்வோம் ஆனால் ராகுல் ஊழல் புரிந்தவருக்கு அரசியலில் எதிர்காலமே இல்லாமல் செய்து விடுவதாக மிரட்டுகிறார் வெட்கம் மானம் சூடு சுரணை எல்லாவற்றையும் விட்டு விட்டு அரசியல் நடத்துவது எங்களுக்கு பழகி போச்சி இதை விட்டால் வேறு தொழில் எதுவும் தெரியாது ஓட்டலில் பெஞ்சி துடைக்க கூட எங்களை யாரும் சேர்த்தது கொள்ள மாட்டார்கள் இது பிரதமர்
மேடம் நீங்கள் எதுக்கு கூப்பிட்டீர்கள் ஏன் கூப்பிட்டீர்களோ அது தெரியாது காங்கிரஸ் கட்சியை அழித்த பெருமை ராகுல் காந்திக்கு வரவேண்டாம் அவரிடம் சொல்லி வையுங்கள் இப்படி எல்லாம் எங்களை மிரட்டினால் நாங்கள் அனைவரும் வேறு வழி இல்லாமல் செங்கோட்டையின் முன்னால் தூக்கில் தொங்கி விடுவோம் இது சிதம்பரம்
ஊழல்இல்லாமல் அரசியல் நடத்துவது ஒரு அரசியியல் ஆகுமா குருமா இல்லாமல் சப்பாத்தி சாப்பிடலாம் ஊழல் இல்லாமல் ஆட்சி நடத்த முடியுமா? நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது எங்களை எல்லாம் நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் உங்களை விட்டால் எங்களுக்கு கதி ஏது இது பிரதமர்
இத்தனை நேரம் அமைதியாக இருந்த சோனியா நீங்கள் பயப்பட வேண்டிய அவசியமே இல்லை ராகுல் காந்திக்கு இந்த உண்மைகள் எல்லாம் தெரியாதா என்ன விவரம் இல்லாமல் அவன் பேசவில்லை நம்நாட்டில் இது வரை யாருடைய ஊழலாவது நிருபிக்கபட்டுள்ளதா என்ன அப்படியே நிரூபித்தாலும் தண்டனையில் இருந்து தப்பிக்க ஏராளமான வழிகள் இருக்கிறது ஊழல் நிரூபிக்கப்பட்டு தண்டனை உறுதிபடுத்த பட்டவர்களுக்கு மட்டும் தான் நமது கட்சியில் இடம் இல்லை என்று ராகுல் பேச்சுக்கு அர்த்தம் எடுத்துக்கொள்ள வேண்டும் நிரூபிப்பது தண்டனை பெறுவது எல்லாம் நடக்க கூடிய விஷயமா அப்படியே நடந்தாலும் உடனடியாக நடக்குமா? குறைந்த பட்சம் நூறு வருசமாவது ஆகாதா இது புரியாதா உங்களுக்கு நீங்கள் சின்ன பிள்ளைகளா கவலை படாதீர்கள் நான் இருக்கும் வரை உங்களை கைவிட மாட்டேன் என்றார்
சோனியாவின் இந்த பேச்சை கேட்டவுடன் தான் சிதம்பரத்திற்கும் பிரதமருக்கும் போன உயிர் திரும்பி வந்தது பிரதமருக்கு சாப்பிடாமல் விட்டுவந்த பாதி சப்பாத்தி நினைவுக்கு வரவே மேடம் நான் போய் உணவை முடித்து விட்டு கைகழுவி வரலாமா என்று உத்தரவு கேட்டார் சோனியாவும் பெருமையோடு போங்கள் என்று விரல் அசைத்தார்
http://www.ujiladevi.blogspot.in/2012/01/blog-post_29.html

கேசவன்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 2783
வசிப்பிடம்: ராம பக்தர் சிரஞ்சீவியாக வாழும் ஊர்
சேர்ந்தது: 01/08/2011
மதிப்பீடு: 385
Re: அம்மா தாயே ஊழல் பிச்சை போடு...
அதானே கண்ணுக்கு முன்னாடியே லஞ்சம் வாங்கினாலும்,அதை நிரூபிக்க முடியாத அளவுக்கு நமது ஜனநாயகம் பணநாயகமா ஆகிட்டு இருக்கு.
அப்புறம் எங்கே இருந்து தண்டனை வாங்கி தருவது.
படிக்கும்போது இந்த பதிவு காமெடியா இருந்தாலும் அதோட உள் அர்த்தம்
நமது நாட்டின் கேவலமான நிலையை எடுத்து கூறுகிறது.
அப்புறம் எங்கே இருந்து தண்டனை வாங்கி தருவது.
படிக்கும்போது இந்த பதிவு காமெடியா இருந்தாலும் அதோட உள் அர்த்தம்
நமது நாட்டின் கேவலமான நிலையை எடுத்து கூறுகிறது.

உதயசுதா- வி.ஐ.பி

- பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum








