ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» எத்தனை யானைகள் கொல்லபட்டதோ
by கேசவன் Today at 7:36 pm

» azhugaikkaanadhillai...oru aattin vali.
by rameshnaga Today at 7:34 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by eshu24 Today at 7:32 pm

» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by கே. பாலா Today at 7:19 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by மகா பிரபு Today at 5:21 pm

» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm

» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm

» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am

» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am

» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
அயிரை மீன் குழம்பு 5 5 2

அயிரை மீன் குழம்பு

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

அயிரை மீன் குழம்பு

Post by முஹைதீன் on Wed Feb 01, 2012 6:27 pm

ஆசையா செஞ்சு சாப்பிடுங்க, அயிரை மீன் குழம்பு





மீன் குழம்பு என்றாலே
நினைக்கும் போதே நாவில் நீர் ஊறும். அதுவும் கிராமப் பகுதிகளில் கிடைக்கும்
அயிரை மீன்களில் வைக்கப்படும் குழம்பின் ருசியே அலாதிதான். நகரங்களில் ஒரு
சில உணவகங்களில் மட்டும் அயிரை மீன் குழம்பு ஸ்பெசல் அயிட்டமாக தயார்
செய்யப்படுகிறது.

மிகவும் சிறியதாக இருக்கும் அயிரை மீன்
உயிருடன்தான் விற்பனை செய்யப்படும். இதனை சுத்தம் செய்வதே அலாதியானது.
குழியான பாத்திரத்தில் போட்டு உப்பு போட்டு ஊறவைத்து அலசினாலே அதில்
இறந்துவிடும். பின்னர் நல்லெண்ணெய் ஊற்றி நன்றாக கவிழ்த்து வைத்தால்
மீன்கள் உண்ட கசடுகள் எல்லாம் வெளியேறிவிடும். பின்னர் குழம்பு வைக்கலாம்.

தேவையான பொருட்கள்

அயிரை மீன் – 1/2 கிலோ
சின்ன வெங்காயம் – 200 கிராம்
தக்காளி – 200 கிராம்
புளி – எலுமிச்சம் பழ அளவு
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
தனியாத்தூள் – 4 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
பூண்டு – 6 பல்
உப்பு – தேவையான அளவு
எண்ணை – 1/2 குழிக்கரண்டி
கடுகு,வெந்தையம் – தாளிக்க சிறிதளவு
கறிவேப்பிலை – ஒரு கொத்து
தேங்காய் தேவையெனில் அரை மூடி

அயிரை மீன் குழம்பு செய்முறை

முதலில்
ஒரு பாத்திரத்தில் ஊறவைத்த புளியைக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவேண்டும்.
அதில் மிளகாய்த் தூள், தனியாத் தூள், மஞ்சள் தூள், தேவையான உப்பு சேர்த்து
கரைத்துக் கொள்ளவும்.

அடி கனமான வாணலியில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை வெந்தயம் போட்டுத் தாளிக்கவும்.

நறுக்கிய
சின்ன வெங்காயத்தை போட்டு வதக்கவும் , அத்துடன் தக்காளி சேர்த்து
வதக்கவும். தொடர்ந்து தட்டிய பூண்டைச் சேர்த்து நன்கு கிரேவியாக வரும் வரை
வதங்கிய உடன் கரைத்த புளிக்கரைசல் மசாலாவைச் சேர்த்து ஊற்றி கொதிக்க
விடவும்.

மசாலா கலவை கொதித்ததும், மீனைப்போட்டு மிதமான தீயில்
சிறிது நேரம் வைத்திருந்து இறக்கவும். மணமும் சுவையும் கொண்ட அயிரை மீன்
குழம்பு தயார்.

ஒரு சிலர் சுவைக்காக தேங்காய் சேர்ப்பது வழக்கம்.
தேங்காரை அரைத்து மசாலா கொதி வரும்போதே ஊற்றவும். நன்றாக கொதித்து நுரை போன
பின் அயிரை மீனை போட்டு இறக்கிவிடவும். அந்த சூட்டிலேயே மீன்
வெந்துவிடவும். அப்படியே அள்ளி சாப்பிலாம். அத்தனை ருசி நிறைந்தது அயிரை
மீன்.

thatstamil

முஹைதீன்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 3242
வசிப்பிடம்: dubai
சேர்ந்தது: 14/01/2010
மதிப்பீடு: 754

Back to top Go down

Re: அயிரை மீன் குழம்பு

Post by உமா on Wed Feb 01, 2012 6:43 pm

பிரிண்ட் எடுத்து கொண்டேன்...அடுத்த சண்டே செய்து பார்க்கிறேன்.இறாளையும், இந்த குழம்பையும். சூப்பருங்க சூப்பருங்க



உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: அயிரை மீன் குழம்பு

Post by கேசவன் on Wed Feb 01, 2012 6:51 pm

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.


எந்த உயிரையும் கொல்லாதவறாய், இறைச்சியைத் தின்ன மறுத்தவறாய் வாழ்பவறை எல்லா உயிர்களும் கை குவித்துத் தொழும்.

கேசவன்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 2778
வசிப்பிடம்: ராம பக்தர் சிரஞ்சீவியாக வாழும் ஊர்
சேர்ந்தது: 01/08/2011
மதிப்பீடு: 385

Back to top Go down

Re: அயிரை மீன் குழம்பு

Post by hega on Thu Feb 02, 2012 1:40 am

மீன்குழம்பு சுவையாக இருக்கிறது.

hega
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 235
வசிப்பிடம்: insel
சேர்ந்தது: 29/11/2011
மதிப்பீடு: 119

Back to top Go down

Re: அயிரை மீன் குழம்பு

Post by இளமாறன் on Thu Feb 02, 2012 1:43 am

யாரு யாரு குழம்பு வைத்தீர்களோ எனக்கொரு பார்செல் அனுப்பி விட வேண்டும் ஜாலி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: அயிரை மீன் குழம்பு

Post by சார்லஸ் mc on Thu Feb 02, 2012 1:50 am

கேசவன் wrote:கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.


எந்த உயிரையும் கொல்லாதவறாய், இறைச்சியைத் தின்ன மறுத்தவறாய் வாழ்பவறை எல்லா உயிர்களும் கை குவித்துத் தொழும்.


அசைவ எல்லைக்குள் அத்து மீறி நுழைய யாருப்பா இவருக்கு அனுமதி கொடுத்தது? ... எச்சாிக்கை ஐடியா இது அசைவ பகுதி. சைவபட்சிகளுக்கு அனுமதியில்லை.... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


[flash][/flash]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”



அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 2070
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 556

Back to top Go down

Re: அயிரை மீன் குழம்பு

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Thu Feb 02, 2012 12:30 pm

கேசவன் wrote:கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.


எந்த உயிரையும் கொல்லாதவறாய், இறைச்சியைத் தின்ன மறுத்தவறாய் வாழ்பவறை எல்லா உயிர்களும் கை குவித்துத் தொழும்.

எண்ட அணியன் கேசவன் சாரே....நிங்கள் ஒண்ணு பரயனும்...அதாயது....ஓ...ஓ ...மன்னிக்கனும் கேசவன்...உங்கள் பெயரை எப்போல் பார்த்தாலும் உங்களை ஒரு மலயாளி என்றே நினைத்துக்கொண்டு எழுத ஆரம்பிக்கிறேன். மகிழ்ச்சி
சரி...நான் கேட்க்கும் கேள்விக்கு நீங்கள் மறவாமல் பதிலளிக்க வேண்டும்.
'' சிங்கத்தையும் புலியையும் படைத்த இறைவன் அவைகளுக்கு உணவாக எதைப் படைத்தான்?"
இரண்டாவது...."கிரீன்லாந்து மற்றும் அலாஸ்க்கா போன்ற துந்திரப் பிரதேசத்தில் வாழும் எஸ்கிமோக்களுக்கு உணவாக கடவுள் எதைக் கொடுத்துள்ளார் ?"

Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 2946
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 902

http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: அயிரை மீன் குழம்பு

Post by மகா பிரபு on Thu Feb 02, 2012 12:34 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
கேசவன் wrote:கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.


எந்த உயிரையும் கொல்லாதவறாய், இறைச்சியைத் தின்ன மறுத்தவறாய் வாழ்பவறை எல்லா உயிர்களும் கை குவித்துத் தொழும்.

எண்ட அணியன் கேசவன் சாரே....நிங்கள் ஒண்ணு பரயனும்...அதாயது....ஓ...ஓ ...மன்னிக்கனும் கேசவன்...உங்கள் பெயரை எப்போல் பார்த்தாலும் உங்களை ஒரு மலயாளி என்றே நினைத்துக்கொண்டு எழுத ஆரம்பிக்கிறேன். மகிழ்ச்சி
சரி...நான் கேட்க்கும் கேள்விக்கு நீங்கள் மறவாமல் பதிலளிக்க வேண்டும்.
'' சிங்கத்தையும் புலியையும் படைத்த இறைவன் அவைகளுக்கு உணவாக எதைப் படைத்தான்?"
இரண்டாவது...."கிரீன்லாந்து மற்றும் அலாஸ்க்கா போன்ற துந்திரப் பிரதேசத்தில் வாழும் எஸ்கிமோக்களுக்கு உணவாக கடவுள் எதைக் கொடுத்துள்ளார் ?"
நல்ல கேள்வி ஐயா . அதாவது ஒரு உயிரினம் மற்றொன்றை உண்ணவில்லை என்றால் உணவு சங்கிலி சமநிலை பாதிக்கப்படும். சூப்பருங்க


Last edited by மகா பிரபு on Thu Feb 02, 2012 12:36 pm; edited 1 time in total

மகா பிரபு
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8416
வசிப்பிடம்: செந்தமிழ் நாடு
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1014

http://tharisunilam.blogspot.in/

Back to top Go down

Re: அயிரை மீன் குழம்பு

Post by ஜாஹீதாபானு on Thu Feb 02, 2012 12:35 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
கேசவன் wrote:கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.


எந்த உயிரையும் கொல்லாதவறாய், இறைச்சியைத் தின்ன மறுத்தவறாய் வாழ்பவறை எல்லா உயிர்களும் கை குவித்துத் தொழும்.

எண்ட அணியன் கேசவன் சாரே....நிங்கள் ஒண்ணு பரயனும்...அதாயது....ஓ...ஓ ...மன்னிக்கனும் கேசவன்...உங்கள் பெயரை எப்போல் பார்த்தாலும் உங்களை ஒரு மலயாளி என்றே நினைத்துக்கொண்டு எழுத ஆரம்பிக்கிறேன். மகிழ்ச்சி
சரி...நான் கேட்க்கும் கேள்விக்கு நீங்கள் மறவாமல் பதிலளிக்க வேண்டும்.
'' சிங்கத்தையும் புலியையும் படைத்த இறைவன் அவைகளுக்கு உணவாக எதைப் படைத்தான்?"
இரண்டாவது...."கிரீன்லாந்து மற்றும் அலாஸ்க்கா போன்ற துந்திரப் பிரதேசத்தில் வாழும் எஸ்கிமோக்களுக்கு உணவாக கடவுள் எதைக் கொடுத்துள்ளார் ?"

சரியான கேள்வி அவர் என்ன பதில் சொல்லுறார்னு பார்க்கலாம் சூப்பருங்க

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606

Back to top Go down

Re: அயிரை மீன் குழம்பு

Post by கேசவன் on Thu Feb 02, 2012 1:43 pm

'' சிங்கத்தையும் புலியையும் படைத்த இறைவன் அவைகளுக்கு உணவாக எதைப் படைத்தான்?"
இரண்டாவது...."கிரீன்லாந்து மற்றும் அலாஸ்க்கா போன்ற துந்திரப் பிரதேசத்தில் வாழும் எஸ்கிமோக்களுக்கு உணவாக கடவுள் எதைக் கொடுத்துள்ளார் ?"
1.ஐயா , இறைவன் படைப்பில் சிங்கம் புலி போன்றைவை தான் அசைவஉணவை உண்பவைகளாக படைக்கபட்டவை.அவைகள் இயற்கை சங்கிலிகளை சமன் செய்வதற்காக படைக்கபட்டிருக்கலாம் .ஆனால் நாம் மனிதர்கள் விவசாயத்தின் மூலம் உணவை விளைவித்து உண்ணும் அளவு திறன் பெற்றுள்ளோம்.என்வே நமக்கு அசைவ உணவு தேவை இல்லை .
2.கடல் நீரிலும் மீன்கள் வாழ்கின்றன ,ஆற்று நீரிலும் மீன்கள் வாழ்கின்றன
ஆனால் கடல் நீரில் வாழும் மீன்களுக்கு ஆற்றுநீரில் வாளும் சக்தியை பெறவில்லை ,ஆற்று நீரில் வாழும் மீன்களுக்கும் கடல் உப்பு நீரில் வாழும் சக்தி இல்லை அதேபோல் ஒவ்வொரு பகுதியிலும் வாழும் மக்களுக்கும் ஒவ்வொரு சூழ்நிலைதான் ஒத்துக்கொள்ளும்.

கேசவன்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 2778
வசிப்பிடம்: ராம பக்தர் சிரஞ்சீவியாக வாழும் ஊர்
சேர்ந்தது: 01/08/2011
மதிப்பீடு: 385

Back to top Go down

Re: அயிரை மீன் குழம்பு

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Thu Feb 02, 2012 3:50 pm

கேசவன் wrote:
'' சிங்கத்தையும் புலியையும் படைத்த இறைவன் அவைகளுக்கு உணவாக எதைப் படைத்தான்?"
இரண்டாவது...."கிரீன்லாந்து மற்றும் அலாஸ்க்கா போன்ற துந்திரப் பிரதேசத்தில் வாழும் எஸ்கிமோக்களுக்கு உணவாக கடவுள் எதைக் கொடுத்துள்ளார் ?"
1.ஐயா , இறைவன் படைப்பில் சிங்கம் புலி போன்றைவை தான் அசைவஉணவை உண்பவைகளாக படைக்கபட்டவை.அவைகள் இயற்கை சங்கிலிகளை சமன் செய்வதற்காக படைக்கபட்டிருக்கலாம் .ஆனால் நாம் மனிதர்கள் விவசாயத்தின் மூலம் உணவை விளைவித்து உண்ணும் அளவு திறன் பெற்றுள்ளோம்.என்வே நமக்கு அசைவ உணவு தேவை இல்லை .
2.கடல் நீரிலும் மீன்கள் வாழ்கின்றன ,ஆற்று நீரிலும் மீன்கள் வாழ்கின்றன
ஆனால் கடல் நீரில் வாழும் மீன்களுக்கு ஆற்றுநீரில் வாளும் சக்தியை பெறவில்லை ,ஆற்று நீரில் வாழும் மீன்களுக்கும் கடல் உப்பு நீரில் வாழும் சக்தி இல்லை அதேபோல் ஒவ்வொரு பகுதியிலும் வாழும் மக்களுக்கும் ஒவ்வொரு சூழ்நிலைதான் ஒத்துக்கொள்ளும்.

நான் கேட்ட இரண்டு கேள்விகளுக்கு நீங்கள் நேரிடையாகப் பதில் சொல்லாமல் சுற்றி வளைத்து பதில் சொல்கிறீர்காளே தம்பி கேசவன் ?

மேலே மகாப்பிரபு சொன்னதியே சற்று விரிவு படுத்திச் சொல்லிவிட்டீர்கள் முதல் கேள்வியின் பதிலாக

இரண்டாவது கேள்விக்கு சொதப்பலாக ஒரு பதில் தந்துள்ளீர்கள்.

புலால் உண்ணுவது தவறு என்று கடவுள் நினைத்திருந்தால் எல்லா உயிர்களையும் மரக்கறி உண்பாவராகத்தானே படைத்திருக்க வேன்டும்?
எஸ்கிமோக்களுக்கு உண்பதற்க்கு என்ன உணவு கடவுள் கொடுத்துள்ளார்? நீங்கள் " கொல்லான் புலால் மறுத்தானை... " என்ற குறளை அவர்களுக்குப் போதித்துவிட்டு ..."இந்தாங்கோ ...இது தான் புளியோதரை....இதப் பாருங்கோ ..இது தயிர்சாதம்...இனிமேல் இதைத்தான் சாப்பிடவேண்டும்" என்று சொல்லப் போகிறீரா? தயவு செய்து சுற்றி வளைக்காமல் நேரிடையாகப் பதில் சொல்லுங்கோ . புன்னகை

Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 2946
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 902

http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: அயிரை மீன் குழம்பு

Post by கேசவன் on Thu Feb 02, 2012 4:43 pm

ஐயா , எஸ்கிமோக்கல் எப்பொழுதுமே இறைச்சி உணவை சாப்பிடுகிறார்கள் .ஆனால் நாம் எப்பொழுதுமே இறைச்சி உணவை சாப்பிட்டால் நமக்கு ஒத்து கொள்ளாது .எனவே மனிதரின் உடம்புக்கு இறைச்சி உணவை ஒத்துக்கொள்ளாத உணவு.

கேசவன்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 2778
வசிப்பிடம்: ராம பக்தர் சிரஞ்சீவியாக வாழும் ஊர்
சேர்ந்தது: 01/08/2011
மதிப்பீடு: 385

Back to top Go down

Re: அயிரை மீன் குழம்பு

Post by hega on Thu Feb 02, 2012 5:31 pm

அட


புலால் உண்பது பெரிய பிரச்சனையாகுமா...

உலகத்தின் படைப்பு என்பது சங்கிலித்தொடர்பினாலானது. ஒன்றையொன்று தொடர்பு படுத்திய சுழட்சியிலானானது.

நீங்க சின்ன வயதில் படித்திருப்பீர்கள்....

தாவரம் ....ஆடு... ...மனிதன் .....புலி இப்படி ஒன்றோடொன்று அதனதன் போக்கில் நடப்பது இயற்கை

மற்றுப்படி புலால் உண்பதனாலோ இல்லை மரக்கறி உண்பதனாலோ எதுவுமே இல்லை அவரவர் விருப்பம்.

உயிர் வதை அது இது என்போமானால் மரக்கறியும் சாப்பிடக்கூடாது. மனிதர்கள் மிருகங்களைப்போலவே. தாவரங்களுக்கும் உயிர் இருக்கிறது..அதுமட்டுமல்லாது எமது முதல் ஆகாரமான தாயின் பாலும் குடிக்கக்கூடாது. அதற்கு பதிலாக பசுப்பால் குடிக்கக்கூடாது.

ஆதி கால மனிதன் மிருகங்களைக்கொன்று பச்சையாகவே தின்றான் .
பின்னர் நெருப்புண்டாக்கி சுட்டுத்தின்றான்... அது இயற்கையின் நியதி...
ஆனால் மனிதன் அறிவு வளரத்தொடங்கிய பின் தன் சுயபுத்தியினால் அதை மாற்றபோய் தான் இன்று உலகமே படாத பாடு படுகின்றது.

காய்கறி உண்பதனாலும் எதுவுமில்லை புலால் உண்பதனாலும் எதுவுமில்லை... அவரவருக்கு பிடித்ததை அவரவர் உண்ணலாம்...

பாவம் புண்ணியம்னு பார்ப்போமானால் எல்லாம் பாவம் தான்


hega
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 235
வசிப்பிடம்: insel
சேர்ந்தது: 29/11/2011
மதிப்பீடு: 119

Back to top Go down

Re: அயிரை மீன் குழம்பு

Post by hega on Thu Feb 02, 2012 5:37 pm

எல்லாரும் கறி உண்பவர்களாக ஆனாலும் சிக்கல். யாருமே கறி உண்பவர்களாக இல்லாவிட்டாலும் சிக்கல். ஏனெனில், எல்லோரும் உண்ணும் அளவுக்கு உலகில் மிருகங்கள் கிடையாது. எல்லோரும் தாவர வகை உணவு உண்டாலும், அவர்களுக்கு வேண்டிய அளவு உணவு கிடைக்காது. எனவே, இருக்கிற வகை உணவுகளைப் பகிர்ந்து கொள்வதே சரி. அதற்காக நாம் ஏற்றுக் கொள்கிற வேஷந்தான்,

புலால் உண்பவன், புலால் உண்ணாதவன் என்ற வேறுபாடு. எப்படியோ மனிதன் வாழ உணவு வேண்டும். அதில் வேற்றுமை காட்டி,ச் சச்சரவு கொள்வது புரிந்து கொள்ள முடியாதது. நமக்கு இதில் தேர்ந்தெடுக்கும் உரிமை மெத்த இருப்பதாகத் தெரிந்தாலும், உண்மையில் பூமியில் உள்ளவர்கள் அனைவருக்கும் கறி உண்ணலாமா அல்லது வேண்டாமா என்று தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு,மிகக் குறுகலானதே.

இதில் சரியா தப்பா எனப்பார்த்தால் விரோத பசியினால் மனிதனை மனிதனே அடித்து கொல்வதை விட மிருகங்களை அதாவது உண்ணலாம் எனப்பட்டவைகளை உண்ணலாம் .

இதுக்கு மேல் முட்டை சாப்பிடக்கூடது என்போமானால் நாம் மீண்டும் மீண்டும் பேசியதையே பேச வேண்டி வரும் . கோழிக்கு முட்டை. , பசுவுக்கு, பால் போன்றதே தாயின் பாலும் .

முட்டை உண்பது தப்பு எனச்சொன்னால் குழந்தை பிறந்ததும் தாயின் பால் கொடுக்காமல் ஏதாவது காய்கறிகளை கொடுப்பதிலிருந்து ஆரம்பிக்கணும் .

சின்ன மீனை பெரிய மீன் சாப்பிடும் . பெரிய மீனை மனிதன் சாப்பிடுவான் .மனிதனை மண் சாப்பிடும் .. அந்த மண்ணிலிருந்து தானே தாவரம் விளைகின்றது... தாவரம் விளை வதற்கு மண் புழுக்களைப்போல் பசளை இல்லையென்பார்கள். அதற்காகவே மன்புழுக்களை வளர்த்து சேமித்து பசளையாக்குவதும் தொழிலாக நடத்தப்படுகின்றதே....

அப்ப்டிப்பார்த்தால் எல்லாமே புலால் உண்பவை தானே....

இப்படி பேசினால் பேசிட்டே போகலாம். எல்லாமே அவரவர் பார்வை.

தன் சக மனிதன் அடிபட்டு இரத்த வெள்ள்த்தில் உயிருக்கு போரடிக்கிட்டு இருக்கும் போது அதைப்பற்றி கவலைப்படாமல் தன் பாட்டில் போகும் மனிதன் ஆடு மாடுகளைப்பற்றி கவலைப்பட்டு இரங்குவது எவ்வகையில் நியாயமானது.


அது சரி கண்ணப்ப நாயனார் கதை சொல்லும் கருத்தென்ன....

hega
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 235
வசிப்பிடம்: insel
சேர்ந்தது: 29/11/2011
மதிப்பீடு: 119

Back to top Go down

Re: அயிரை மீன் குழம்பு

Post by முஹைதீன் on Thu Feb 02, 2012 5:57 pm

மனிதரின் உடம்புக்கு இறைச்சி உணவை ஒத்துக்கொள்ளாத உணவு.


அதெப்படி நீங்க சொல்லலாம்
மனித உடம்புக்குன்னு சொல்லாதீங்க உங்க உடம்புக்குன்னு சொல்லுங்க.

முஹைதீன்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 3242
வசிப்பிடம்: dubai
சேர்ந்தது: 14/01/2010
மதிப்பீடு: 754

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum