ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by Aathira Today at 7:53 pm

» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by முரளிராஜா Today at 7:53 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by sathikdm Today at 7:52 pm

» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by Aathira Today at 7:45 pm

» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm

» எத்தனை யானைகள் கொல்லபட்டதோ
by கேசவன் Today at 7:36 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by மகா பிரபு Today at 5:21 pm

» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm

» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm

» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am

» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am

» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

அறிவாலயத்திடம் இருந்து பூங்காவை மீட்போம்

View previous topic View next topic Go down

அறிவாலயத்திடம் இருந்து பூங்காவை மீட்போம்

Post by பிரசன்னா on Thu Feb 02, 2012 12:37 pm

தலைமைச் செயலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம் அதிரடியைத் தொடர்ந்து தி.மு.க-வுக்கு மேலும் ஒரு பிரச்னை. தி.மு.க-வின் தலையிலேயே கை வைப்பது போன்று, அதன் தலைமை அலுவலகமான அறிவாலயத்தின் முகப்புப் பகுதியை கைப்பற்றத் துடிக்கிறது, சென்னை மாநகராட்சி.

அறிவாலயத்தின் முகப்பு பகுதியில் 1,893 சதுர மீட்டர் பரப்பளவில் பூங்கா உள்ளது. இந்தப் பூங்காவை குறி வைத்து மாநகராட்சி மன்றக் கூட்டத் தில் பிரச்னையை எழுப்பிய சின்னய்யனிடம் பேசினோம். ''அறிவாலயத்தின் திறந்தவெளி நிலத் துக்கு சி.எம்.டி.ஏ-வுக்கு தானப்பத்திரம் வழங்கி, பத்திரப் பதிவு செய்து இருக்கிறார்களா? பொது மக்கள் பயன்படுத்த அந்தப் பூங்காவில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளதா? தற்போது அறிவாலயத்தின் இரண்டு வாயில்களை கல்யாண மண்டபத்துக்கும் அறிவாலயத்துக்கும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், பூங்காவுக்கான பாதை எங்கே? உண்மையில் அந்தப் பூங்கா பொது மக்களுக்கானது அல்ல; மக்கள் அங்கு செல்ல அனுமதிக்கப்படுவது இல்லை. தவிர, அந்த இடத்தில் பொழுதுபோக்குக்கான ஊஞ்சல், சறுக்கு தளம் போன்ற எந்த அம்சங்களும் இல்லை. பொது மக்களுக்கான பூங்கா என்ற பெயரில் தி.மு.க. அந்த நிலத்தை ஆக்கிரமித்து உள்ளது.


கடந்த ஆட்சிக் காலத்தில் பல்வேறு நிறுவனங்களி டம் இருந்து மாநகராட்சி நிலங்களை மீட்டதாகப்

பெருமை பேசிக்கொண்டார் அப்போதைய மேயர் மா.சுப்ரமணியன். அறிவாலயத்தை ஒட்டி இருக்கும் ஒரு ஸ்டார் ஹோட்டலின் முகப்புப் பகுதியையும் மீட்டு, 'இது மாநகராட்சிக்குச் சொந்தமான இடம்’ என்று அறிவிப்பு பலகை வைத்தார்கள். பக்கத்துக் கட்டடத்துக்கு ஒரு சட்டம். இவர்களுக்கு ஒரு சட்டமா? கேட்டால், சிறப்பு அனுமதி பெறப்பட்டுள்ளது என்பார்கள். மக்களுக்கு உபயோகமாக ஏதாவது செய்தால்தான் சிறப்பு அனுமதி. எனவே, அந்த அனுமதியை ரத்து செய்து, அந்த இடத்தை அறிவாலயத்திடம் இருந்து மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்காக பூங்காவை திறந்து வைக்க வேண்டும்...'' என்றார்.

இதுகுறித்து மாநகராட்சி மேயர் சைதை துரைசாமியிடம் கேட்டோம். ''கடந்த 1980-ல் எம்.ஜி.ஆர். ஆட்சி கலைக்கப்பட்டு கவர்னர் ஆட்சி நடந்த போது, அறிவாலயம் இருக்கும் இடத்தில் பலமாடி கட்டடம் கட்டிக் கொள்ள சில நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து அரசு ஆணை வெளி யிடப்பட்டது. அந்த ஆணையின்படி மொத்த நிலப்பரப்பில் 10 சதவிகித நிலத்தை தி.மு.க. அறக்கட்டளை, அரசிடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால், ஒப்படைக்கவில்லை.

மீண்டும் 1986-ல் அந்த இடத்தில் மேலும் சில சலுகைகள் கேட்டு, அரசு ஆணையில் திருத்தம் செய்யும்படி மேல் முறையீட்டு மனு அளித்தார்கள். அந்த மனு நிலுவையிலேயே இருந்தது. எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர், 1988-ல் மீண்டும் கவர்னர் ஆட்சி. அப்போது அந்த இடத்தில் தி.மு.க. அறக்கட்டளை அலுவலகக் கட்டடம், திருமண மண்டபம் மற்றும் அனாதை இல்லம் கட்டுவதாகச் சொல்லி, மொத்த பரப்பளவில் 10 சதவிகிதம் நிலத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அண்ணா பூங்காவை அமைப்பதாக தி.மு.க. அறக்கட்டளை அறிவித்தது. அதன்பின்னர், அவர்கள் வசதிக்கு ஏற்ப அனுமதியில் திருத்தம், வரைபடத்தில் திருத்தம், பூங்கா பராமரிப்பில் மாற்றம் என சட்ட விதிகளை மீறியது தி.மு.க. அறக்கட்டளை. அவர்கள் ஆட்சியில் அவர்களின் மேல்முறையீட்டு மனுவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.


ஆனால், அனாதை இல்லம் கட்ட சிறப்பு அனுமதி பெற்று இதுவரை அங்கு அனாதை இல்லம் எதுவும் கட்டப்படவில்லை. அதனால், தி.மு.க. அறக்கட்டளைக்கு மாநகராட்சிக்குச் சொந்தமான நிலத்தை பத்திரப் பதிவு செய்யாமல் பெற்ற சிறப்பு அரசு ஆணையை ரத்து செய்து, அந்த நிலத்தை மீண்டும் மாநகராட்சிக்கு வழங்க அரசிடம் மாநகராட்சி மன்றம் பரிந்துரைத்து உள்ளது. அனுமதி கிடைத்து அரசு ஆணை வெளியிடப்பட்டதும், அந்த இடத்தை கையகப்படுத்தி, பொது மக்களுக்கான பூங்கா அமைக்கப்படும்...'' என்றார்.
இதுகுறித்து, முன்னாள் மேயர் மா.சுப்ரமணி யனிடம் கேட்டோம். ''அந்த இடத்தில் அண்ணா பூங்கா அமைத்து, அதை பராமரிக்கும் உரிமை தி.மு.க. அறக்கட்டளைக்குக் கொடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி இன்று வரை அந்தப் பூங்கா சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. அந்தப் பூங்காவில் புங்கன், பூவரசு, நாவல், தேக்கு உட்பட ஏராளமான மரங்கள் உள்ளன. அறிவாலய வளாகத்தில் வெற்றிச்செல்வி அன் பழகனார் இலவச கண் மருத்துவமனை உள்ளது. அங்கு தினமும் நூற்றுக் கணக்கான நோயாளிகள் வருகின்றனர். அறிவாலயத்தில் ஒரு நூலகம் உள்ளது. அங்கும் ஏராளமான மக்கள் வருகிறார்கள். தங்கள் குறைகளைக் கூற கட்சி அலுவலகத்துக்கு மக்கள் வருகிறார்கள். இவர்கள் எல்லாம் இளைப்பாற அந்தப் பூங்காவைத்தான் பயன்படுத்துகின்றனர்.
கடந்த ஆட்சியில் சென்னையில் 4,000 கோடி ரூபாய் மதிப்புள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான நிலங்களை மீட்டோம். அப்படி கிண்டியில் ஐ.டி.சி. ஹோட்டலிடம் இருந்து மீட்கப்பட்ட 12.5 கிரவுண்டு நிலத்தை கடந்த மாதம் மீண்டும் அவர்களிடம் கொடுத்து விட்டது அ.தி.மு.க. அரசு. இதுகுறித்து, நடுநிலையாளர்கள் சிலர் விமர்சிக்கவே, அதை மூடி மறைக்கவும் யாரையோ சந்தோஷப்படுத்தவும் அறிவாலய பிரச்னையை கையில் எடுத்துள்ளார்கள். அனாதை இல்லம் கட்டுகிறோம் என்று நாங்கள் சொல்லவில்லை. எல்லாவற்றையும் சட்டப்படியே எதிர்கொள்வோம்...'' என்றார் தெளிவாக!
- டி.எல்.சஞ்சீவிகுமார்
படங்கள்: வீ.நாகமணி

தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள் ARRKAY BLOGSPOT - Vikatan.com...

பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 5320
வசிப்பிடம்: Abu Dhabi
சேர்ந்தது: 05/10/2010
மதிப்பீடு: 762

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum