ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by கே. பாலா Today at 8:38 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm

» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm

» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm

» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by முரளிராஜா Today at 8:26 pm

» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by kirikasan Today at 8:21 pm

» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm

» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by rameshnaga Today at 8:06 pm

» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by Aathira Today at 7:45 pm

» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm

» எத்தனை யானைகள் கொல்லபட்டதோ
by கேசவன் Today at 7:36 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by மகா பிரபு Today at 5:21 pm

» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm

» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm

» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! 5 5 7

வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!!

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!!

Post by பிஜிராமன் on Fri Feb 17, 2012 7:36 pm

17 ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில் மொகலாயப் பேரரசிற்கு எதிராக ஏற்பட்ட கிளர்ச்சிகளுக்கு முக்கிய காரணங்களாக திகழ்ந்தவை யாவை? அவை பெரும்பாலும் சமயம் (ரிலீஜியஸ்) சார்ந்ததாக இருந்ததா? அல்லது பொருளியல் (எக்கனாமிக்) சார்ந்தவையாக இருந்தனவா?



மொகலாயப் பேரரசு ஏப்ரல் 21, 1526 ஆம் ஆண்டில் இருந்து துவங்குகிறது. முகலாயர்கள் டிமுரிட்ஸ் வம்ஸாவழியைச் சார்ந்தவர்கள் ஆவார்கள். இவர்களின் ஆட்சி 17 ஆம் நூற்றாண்டில் மிகப் பெரும் வளர்ச்சியை அடைந்தது, ஆனால் 17 ஆம் நூற்றாண்டில் பிற்பாதியில் வீழ்ச்சி பெற துவங்கி 18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை தொடர்ந்தது. இந்திய துணைக்கண்டத்தின் பெரும்பகுதியை, அதாவது கிழக்கே பெங்காலிலிருந்து மேற்கே பலோகிஸ்தான் வரையிலும், வடக்கே காஷ்மீர் முதல் தெற்கே காவேரி வரை அவர்களின் ஆட்சி பரந்து விரிந்து இருந்தது. இந்திய துணைக்கண்டம் முழுமையும் அவர்கள் ஆட்சி அதிகாரம் இருந்தது எனக் கூறலாம்.

மொகலாயப் பேரரசின் முதல் பேரரசர் ஜாகீருதின் முஹம்மத் பாபர் (1526-1530), எளிதாய் பாபர் என்று அனைவராலும் அறியப்படுபவர். இவரை தொடர்ந்து நிறைய பேரரசர்கள் ஆட்சி செய்துள்ளனர். அவர்களில் முக்கியமானவர்கள்

  • ஹூமாயூன் (1530-1539) & (1555 - 1556)

  • அக்பர் (1556 - 1605)

  • ஜஹாங்கீர் (1605 -1627)

  • ஷாஜகான் (1627 - 1658)

  • ஔரங்கஷிப் (1658 - 1707)


ஔரங்கஷிப் இன் ஆட்சிக்காலத்தில் மொகலாயப் பேரரசு பெரும் வீழ்ச்சிகளுக்கு உட்பட்டது, அதற்கு முக்கிய காரணங்களாக இருந்ததவை அவருடைய ஆட்சி காலத்தில் நிகழ்ந்த சத்னமி (Rebellion of Satnami) கிளர்ச்சி , ஜேட்ஸ் (Rebellion of Jats) கிளர்ச்சி மற்றும் சீக்ஸ் (Rebellion of Sikhs) கிளர்ச்சி போன்ற கிளர்ச்சிகளே. இப்படி தொடர்ந்த் கிளர்ச்சிகளாலும், பலகீனமான அரசர்களாலும் மொகலாயப் பேரரசு வீழ்ச்சி கண்டு, இறுதியில் ஆங்கிலேயர்களால் நசுக்கப்பட்டு, மொகலாயர் ஆட்சி ஜூன் 20, 1858 இல் முழுதும் முடிவிற்கு வந்தது. பஹதூர் ஷா ஜாஃபர் மொகலாயப் பேரரசின் கடைசி அரசராக திகழ்ந்தார். இவர் ஆட்சி ஆங்கிலேயரால் கைப்பற்றப் பட்டு பர்மாவிற்கு நாடு கடத்தப் பட்டார்.

இதுவே மொகலாயப் பேரரசின் சிறு குறிப்பு, இனி மொகலாயர் ஆட்சி சம்பந்தப் பட்ட ஒவ்வொரு நிகழ்வுகளையும் ஆராய்ந்து அலசி, சிறப்பாக இருந்து வந்த மொகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்கான காரணத்தை கொணர்வோம்.


குறிக்கோள்:

1. மொகலாயப் பேரரசின் அனைத்து சாராம்ஸங்களையும், அரசர்களின் சிறப்புகளையும் அறிந்து கொள்வது.

2. அரசர்களால் கொண்டு வரப்பட்ட ஆட்சி முறை மாற்றங்களும், கொள்கைகளும் எந்த விட மாற்றங்களை கொண்டு வந்தன என்றும், அந்த மாற்றங்களால் விளைந்த விளைவுகளையும் ஆராய்ந்து தெளிவு பெறுவது.

3. ஆட்சி காலத்தில் நடைபெற்ற கிளர்ச்சிகள் ஒவ்வொன்றையும் தீர ஆராய்ந்து அதற்கு முக்கிய காரணமாக இருந்தவற்றை அறிந்து கொள்வது. .




விதிமுறைகள்

1. அரட்டை கூடாது. அரட்டை பதிவுகள் முன்னறிவிப்புடன் நீக்கப்படும்.

2. யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்டு தெளிவு பெற்றுக் கொள்ளலாம்.

3. கேள்விகளை அடுக்காமல், ஒரு கேள்வியை கேட்டு, அதற்கான விடை பெற்ற பின் அடுத்த கேள்வியை மற்றவர்களோ, அல்லது அவரேவோ கேட்கலாம்.

4. கேள்விக்கான பதில் யாருக்காவது தெரிந்திருந்தாலோ, அல்லது, கேள்விக்கான பதிலை யாராவது கூற விரும்பினாலோ. கேள்விக்கு அடுத்த பதிவில், நான் பதில் கூறுகிறேன் என்று பதிவை தொடங்கி விட்டு, பதிலை அதே பதிவை திருத்தி இணைத்துக் கொள்ளலாம். காரணம், அதே கேள்விக்கு மற்றவரும் விடை தேட வாய்ப்புள்ளது, நேர விரையத்தை தடுப்பதற்காகவே இந்த முறை.

5. அனைவரும் தேடுவதால் தவறில்லை. தேடி பின் மற்றவர் பதில் அளித்திருந்தால், கொஞ்சம் மன சங்கடம் ஏற்படலாம். இதை தவிர்க்கவே இந்த முறை.


அடுத்த ஐந்தாவது நாளில், மொகலாயப் பேரரசைப் பற்றி எந்த கோணத்தில் கேட்டாலும். நாம் பதில் சொல்லும் வகையில் தேரி இருக்க வேண்டும் என்பதே நம் விருப்பம்.

மிக்க நன்றிகள் உறவுகளே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி .


Last edited by பிஜிராமன் on Mon Feb 27, 2012 10:54 pm; edited 1 time in total


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!!

Post by dhilipdsp on Fri Feb 17, 2012 8:25 pm

மொகலாயப் பேரரசு ஆட்சிக்காலத்தில் ஆங்கிலேயன் நம்
நாட்டுக்குள் நூழைந்தான் அது உண்மை என்றால்
முதன் முதல் நூழைந்த ஆங்கிலேயன் பெயர் என்ன ?

dhilipdsp
தளபதி
தளபதி

பதிவுகள்: 1420
வசிப்பிடம்: Coimbatore
சேர்ந்தது: 13/09/2011
மதிப்பீடு: 175

Back to top Go down

Re: வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!!

Post by பிஜிராமன் on Sat Feb 18, 2012 10:55 am

மொகலாயப் பேரரசு ஆட்சிக்காலத்தில் ஆங்கிலேயன் நம்
நாட்டுக்குள் நூழைந்தான் அது உண்மை என்றால்
முதன் முதல் நூழைந்த ஆங்கிலேயன் பெயர் என்ன ?


  • பிரிட்டிஷ் தனது கிழக்கிந்திய கம்பனியை இந்தியாவில் சூரதில் (surat) நிறுவுவதற்காக, ஜஹாங்கீர் இன் ஆட்சிக் காலத்தில், கேப்டன் வில்லியன் ஹக்கின்ஸ் (Captain William Hawkins) என்ற ஆங்கிலேயரை அனுப்பியது. இவர் 1609 முதல் 1611 வரை ஜஹாங்கீர் அவர்களின் அரசவையில் அங்கம் வகித்தார். ஆனால், இவரால் ஆங்கில கிழக்கிந்த்திய கம்பனியை நிறுவ அனுமதி பெற இயலவில்லை.

  • அடுத்ததாக 1611 கேப்டன் மிடில்டன் (Captain Middleton) இதற்கான ஒப்புதலை பெற்றார். ஆக, இந்தியாவில் நுழைந்த முதல் ஆகிலேயர் கேப்டன் வில்லியம் ஹாக்கின்ஸ் (Captain William Hawkins)

கூடுதல் தகவல் என்னவென்றால்,

  • ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் இந்தியாவில் துவங்க ஆரம்பித்தது, பிளாசிப் போரிற்கு (Battle of Plassey) பின் இருந்து. பிளாசிப் போரில், ராபர்ட் க்ளைவ் (Robert Clive) தலைமையிலான ஆங்கில கிழக்கிந்திய கம்பனியும் (British East Indian Company), அதற்கு எதிராக பெங்கால் நவாபின் (Nawab of Bengal) படைகளும், இதனுடன் ஃபிரெஞ்சு கிழக்கிந்திய கம்பனியும் (French East Indian Company) போரிட்டன, ஆனால், இதில் பெரும்பாலான நவாப் படைகள் பங்கேற்காததால், அப்போதைய நவாப்பான சிராஜ் உத் தௌலா (Siraj - ud - டௌலக் தோற்கடிக்கப்பட்டு, பிரிட்டிஷ் இன் கைக்கூலியாக மாறிய மிர் ஜாஃபர் (Mir Jafar) அடுத்த நவாப்பாக நியமிக்கப் பட்டார். இந்த போர், சாதாரண வணிக நோக்கில் உள் நுழைந்த ஆங்கிலேயர்களை, இந்தியாவை ஆளும் அதிகாரத்திற்கு கொண்டு சென்றது.

  • பிளாசிப் போரின் காரணமாக திகழ்ந்தது, பிளாக் ஹோல் ட்ராஜடி (Black Hole Tragedy) ஆகும்.

  • அடுத்த நிகழ்ந்த பக்ஷார் போர் (1764) (Battle of Buxar) மொகலாயப் பேரரசின் பெரும்பான்மையான ஆட்சியை முடிவிற்கு கொண்டுவந்து, தன் அதிகாரத்தை இந்தியாவில் விதைக்க துவங்கியிருந்தது. இந்தப் போரில், மேஜர் மண்ரோ தலைமையிலான பிரிட்டிஷ் படை ஒரு புறமும், முக்கூட்டு உடன்படிக்கை (Triple Alliance) கொண்டிருந்த பெங்கால் நவாப் மிர் ஹாசிம் (Nawab Mir Qasim of Bengal), அவத் நவாப் சுஜா - உத் - தௌலா (Nawab Sujah - Ud - Daulah of Awadh) மற்றும் மொகலாயப் பேரரசர் ஷா ஆலம் (Mughal Emperor Shah Alam), ஆகிய மூவரும் எதிர் பக்கமும் இருந்து போரிட்டனர். இதில் பெங்கால் நவாப் மட்டுமல்லாது, இதியப் பேரரசே தோற்றது.

  • பிளாசிப் போரில் வெற்றி கண்டு, பெங்காலில், ஆதிக்கம் செய்து வந்த ஆங்கிலேயர்கள், பக்ஷார் போரில் வெற்றி கண்டு, வட இந்தியா முழுவதும் ஆதிக்கம் செலுத்தி, பின் ஒட்டு மொத்த இந்தியாவையும் ஆள துவங்கி விட்டனர்.




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!!

Post by வை.பாலாஜி on Sat Feb 18, 2012 11:02 am

சத்னமி (Rebellion of Satnami) கிளர்ச்சி , ஜேட்ஸ் (Rebellion of Jats) கிளர்ச்சி மற்றும் சீக்ஸ் (Rebellion of Sikhs) கிளர்ச்சி இது போன்ற கிளர்ச்சிகள் ஏற்பட்ட என்ன காரணம் அல்லது எந்த சம்பவம் காரணமாக அமைந்தது ?


வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



வை.பாலாஜி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 9246
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1300

Back to top Go down

Re: வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!!

Post by பிஜிராமன் on Sat Feb 18, 2012 11:54 am

நான் பதில் அளிக்கிறேன் அண்ணா......மற்றவர்களும் முயற்சி செய்யலாம்.

இந்த மூன்று கிளர்ச்சிகளையும், அது நடந்த ஆண்டை வைத்து வரிசை படுத்தினால்,

ஜேட்ஸ் கிளர்ச்சி (Rebellion of Jats) 1669

சத்னமீஸ் கிளர்ச்சி (Rebellion of Satnamis) 1672

இவை இரண்டிற்கு இடைப்பட்ட காலத்தில், சீக்ஸ் கிளர்ச்சி (Rebellion of Sikhs) பத்தாவது சீக் குரு, குரு கோபிந்த் சிங் (Guru Gobind Singh, normally know as 10th sikh guru) அவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சரியான வருடம் தெரியவில்லை, தெரிந்தவர்கள் கூறலாம்.

காரணங்கள், கிளர்ச்சியால் விளைந்தவை பற்றி விரிவாக, பவர் கட் முடிந்து 3 மணிக்கு மேல் வந்து கூறுகிறேன் அண்ணா......


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!!

Post by ரேவதி on Sat Feb 18, 2012 12:10 pm

முகலாயர்கள் ஆட்சி காலத்தில்தான் சீக்கியத மதம் வளர்ந்து வந்தது ஆனால் முகலாயர்களுக்கும், சிக்கியர்களுக்கும் சரியான உறவு வளரபடவில்லை என்று சொல்லப்படுகிறது...சீக்கிய குருக்கள் பலரை முகலாயர்கள் அழிததாகவும் , கொன்றதாகவும் வரலாற்றில் சொல்லப்படுகிறது அதனால் சீக்கியர்கள் கிளர்ச்சி ஏற்பட்டு இருக்கலாம்,
ஆனால் ஔரங்கஷின் காலத்திற்கு பின்புதான் முகலாய பேரரசு வீழிச்சி அடைந்ததாக வரலாறு சொல்கிறது...

இன்னும் நன்கு வரலாறு தெரிந்தவர்கள் பதில் சொல்லட்டும் பிஜி






ரேவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949

Back to top Go down

Re: வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!!

Post by இரா.பகவதி on Sat Feb 18, 2012 2:18 pm

முதன் முதலில் நமது நாட்டிருக்கு பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் ஆங்கிலேயர்களா இல்லை போர்திகீசியர்களா ,இல்லை ஃபிரெஞ்சு காரர்களா

இரா.பகவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 5278
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 582

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!!

Post by மகா பிரபு on Sat Feb 18, 2012 2:22 pm

அவர்கள் பஞ்சம் பிழைக்க வரவில்லை பகவதி. வியாபாரத்திர்காகத் தான் வந்தார்கள்.

மகா பிரபு
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8416
வசிப்பிடம்: செந்தமிழ் நாடு
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1014

http://tharisunilam.blogspot.in/

Back to top Go down

Re: வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!!

Post by இரா.பகவதி on Sat Feb 18, 2012 2:32 pm

சரி , மகாபிரபு அண்ணா யார் முதலில் வந்தது

இரா.பகவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 5278
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 582

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!!

Post by பிஜிராமன் on Sat Feb 18, 2012 3:12 pm

ரேவதி wrote:முகலாயர்கள் ஆட்சி காலத்தில்தான் சீக்கியத மதம் வளர்ந்து வந்தது ஆனால் முகலாயர்களுக்கும், சிக்கியர்களுக்கும் சரியான உறவு வளரபடவில்லை என்று சொல்லப்படுகிறது...சீக்கிய குருக்கள் பலரை முகலாயர்கள் அழிததாகவும் , கொன்றதாகவும் வரலாற்றில் சொல்லப்படுகிறது அதனால் சீக்கியர்கள் கிளர்ச்சி ஏற்பட்டு இருக்கலாம்,
ஆனால் ஔரங்கஷின் காலத்திற்கு பின்புதான் முகலாய பேரரசு வீழிச்சி அடைந்ததாக வரலாறு சொல்கிறது...

இன்னும் நன்கு வரலாறு தெரிந்தவர்கள் பதில் சொல்லட்டும் பிஜி



ஆம், ரேவதி ஔரங்கஷிப் கு அடுத்து நிறைய பேரரசர்கள் வந்திருக்கின்றனர், முகலாயப் பேரரசு முழுதும் வீழ்ந்தது ஜூன் 20, 1858 இல் தான், இந்த பெயரசின் கடைசி பேரரசராக இருந்தவர், பஹதூர் ஷா ஜாஃபர் ஆவார். இவருடன் மொகலாயப் பேரரசு முடிவிற்கு வருகிறது. ஆனால், மொகலாயப் பேரரசின் வீழ்ச்சி ஔரங்கஷிபின் ஆட்சி காலத்தில் இருந்து துவங்குகிறது. அவரை தொடர்ந்து வந்த அரசர்கள் பலகீனமாக இருந்தனர், அவருக்கு பின் 14 அரசர்கள் 1707 இல் இருந்து 1858 வரை ஆட்சி புரிந்துள்ளனர்.

ஔரங்கஷிபின் ஆட்சியில் தான் வீழத் துவங்கியது என்று கூறக் காரணம், அவரது ஆட்சியில் ஏற்பட்ட கலகங்கள் தான், இந்த கலகங்கள் பெரும் பாதிப்பை அவரது ஆட்சியில் ஏற்படுத்தவில்லை என்றாலும், மக்கள் மனதில் இவரது ஆட்சியின் நம்பிக்கை அற்ற தன்மையையும், இவருக்கு மக்களிடம் இருந்த எதிர்ப்பையும் இவை எடுத்துக் காட்டுகின்றன.


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!!

Post by பிஜிராமன் on Sat Feb 18, 2012 3:27 pm

இரா.பகவதி wrote:சரி , மகாபிரபு அண்ணா யார் முதலில் வந்தது


இந்தியாவிற்கு முதலில் வந்ததவர்கள் போர்தூகீசியர்கள் தான். இதியாவிற்கு வணிகம் செய்ய வந்த வெளிநாட்டினரை வரிசை படுத்தினால்,

போர்துகீஸ்
டச்
ஆங்கிலேயர்
டேனிஷ்
ஃபிரெஞ்சு


என வரிசை படுத்தலாம், அதே சமயம் கிழக்கிந்திய கமபணியை யார் முதலில் துவங்கினார் என்று வரிசை படுத்தினால்,

டச் (1602)
ஆங்கிலேயர் (1611)
டேனிஷ் (1616)
ஃபிரெஞ்சு (1664)


என வரிசை படுத்தலாம். அதே போல் தொழிற்சாலை துவங்கியவர்களை வரிசைப் படுத்தினால்

போர்ச்சுகீஸ் (1502 ஆம் ஆண்டு வாஸ்கோ ட காமா வால் கொஞ்ச்சினில் அமைக்கப்பட்டது)

டச் (1605 ஆம் ஆண்டு மசூலிப்பட்டணத்தில் அமைக்கப்பட்டது)

ஆங்கிலேயர் (1616 ஆம் ஆண்டு தெற்கில் மசூலிப்பட்டணத்திலும், 1633 இல் கிழக்கிந்தியாவில் ஹரிகர்பூர் மற்றும் பெலசூர் (ஒரிஸ்ஸா) லும் தங்கள் முதல் தொழிற்சாலையை துவங்கினர்)



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!!

Post by அதி on Sat Feb 18, 2012 3:34 pm

சூப்பர் டூப்பர் தகவல்.ஆனால் ஆண்டு இடம் ஆகியவற்றை நினைவில் வைப்பது சற்று சிரமம்

அதி
தளபதி
தளபதி

பதிவுகள்: 1995
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 20/07/2011
மதிப்பீடு: 320

Back to top Go down

Re: வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!!

Post by மகா பிரபு on Sat Feb 18, 2012 3:50 pm

போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த வாச்கோடாகாமா முதன் முதலில் 1498 இல் கேரளாவில் உள்ள கள்ளிகோட்டை எனும் கொழிகோடை அடைந்தார். இதுவே உலக நாடுகள் இந்தியா மீது ஆர்வம கொண்டு வணிகம் செய்ய வர அடிகோலியது.


Last edited by மகா பிரபு on Sat Feb 18, 2012 3:54 pm; edited 1 time in total

மகா பிரபு
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8416
வசிப்பிடம்: செந்தமிழ் நாடு
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1014

http://tharisunilam.blogspot.in/

Back to top Go down

Re: வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!!

Post by பிஜிராமன் on Sat Feb 18, 2012 3:52 pm

இதுவரை, உள்ள தகவல்களில் யாருக்கேனும், சந்தேகம் இருப்பின் கேட்டு தெளிவு பெறலாம், அடுத்து, கலகங்கலைப் பற்றியும் அதன் காரணங்கள் பற்றியும் காண உள்ளோம்.

இந்த கேள்வியின், முக்கியமானப் பகுதியாக இவை இருக்கும்.



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!!

Post by பிஜிராமன் on Sat Feb 18, 2012 4:21 pm

அதிபொண்ணு wrote:சூப்பர் டூப்பர் தகவல்.ஆனால் ஆண்டு இடம் ஆகியவற்றை நினைவில் வைப்பது சற்று சிரமம்


நன்றிகள் தோழி, ஆம், சற்று சிரமம் தான், ஆனால், மறு வாசிப்பிற்கு விடும் பொழுது, ஆண்டுகள், எளிதாய் நினைவில் வந்துவிடும். ஒவ்வொன்றிலுமொரு குறிப்பிட்ட வருடத்தை நினைவில் வைத்திருந்தால், போதும், அனைத்தையும் நினைவில் வைக்க வேண்டியது இல்லை.

போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த வாச்கோடாகாமா முதன் முதலில் 1498 இல் கேரளாவில் உள்ள கள்ளிகோட்டை எனும் கொழிகோடை அடைந்தார். இதுவே உலக நாடுகள் இந்தியா மீது ஆர்வம கொண்டு வணிகம் செய்ய வர அடிகோலியது.


ஆம், அண்ணா, இது தான் முக்கிய காரணம். வாஸ்கோ ட காமாவை பற்றி பேசும் பொழுது, அவர் எந்த வழியாக இந்தியா வந்தார் என்பதையும், என்ன காரந்த்திற்காக வந்தார் என்பதையும் தெரிய வேண்டும்.

அவர் ஐரோப்பாவிற்கும், இந்தியாவிற்கும் இடையே நேரடியாக கடல் வழி வாணிபம் செய்ய, ஒரு சிறந்த கடல் வழியை கண்டறியவே வந்தார். அதன் படி சிறந்த கடல் வழியையும் கண்டறிந்தார். காரணம் அதற்கு முன்பு சில்க் ரோட் கேரவன் ரூட்ஸ் என்ற கடல் வழியை பயன்படுத்தி வந்துள்ளனர், அதில் செல்ல பெரும் பணம் செலவானதாலௌம், அந்த வழி பாதுகாப்பாற்று இருந்ததாலுமே இந்த முயற்சியை வாஸ்கோ ட காமா கையில் எடுத்தார்.

இவர் கோழிக்கோடு வரும்பொழுது அங்கே ஜமோரின் என்பவர் ஆட்சி புரிந்து வந்தார்.



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum