புதிய பதிவுகள்
» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 9:56 am

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:38 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

» ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மறதி- என்பது பலமா, பலவீனமா? Poll_c10மறதி- என்பது பலமா, பலவீனமா? Poll_m10மறதி- என்பது பலமா, பலவீனமா? Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
மறதி- என்பது பலமா, பலவீனமா? Poll_c10மறதி- என்பது பலமா, பலவீனமா? Poll_m10மறதி- என்பது பலமா, பலவீனமா? Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
மறதி- என்பது பலமா, பலவீனமா? Poll_c10மறதி- என்பது பலமா, பலவீனமா? Poll_m10மறதி- என்பது பலமா, பலவீனமா? Poll_c10 
4 Posts - 4%
லதா மெளர்யா
மறதி- என்பது பலமா, பலவீனமா? Poll_c10மறதி- என்பது பலமா, பலவீனமா? Poll_m10மறதி- என்பது பலமா, பலவீனமா? Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
மறதி- என்பது பலமா, பலவீனமா? Poll_c10மறதி- என்பது பலமா, பலவீனமா? Poll_m10மறதி- என்பது பலமா, பலவீனமா? Poll_c10 
3 Posts - 3%
prajai
மறதி- என்பது பலமா, பலவீனமா? Poll_c10மறதி- என்பது பலமா, பலவீனமா? Poll_m10மறதி- என்பது பலமா, பலவீனமா? Poll_c10 
3 Posts - 3%
Ratha Vetrivel
மறதி- என்பது பலமா, பலவீனமா? Poll_c10மறதி- என்பது பலமா, பலவீனமா? Poll_m10மறதி- என்பது பலமா, பலவீனமா? Poll_c10 
2 Posts - 2%
manikavi
மறதி- என்பது பலமா, பலவீனமா? Poll_c10மறதி- என்பது பலமா, பலவீனமா? Poll_m10மறதி- என்பது பலமா, பலவீனமா? Poll_c10 
2 Posts - 2%
Barushree
மறதி- என்பது பலமா, பலவீனமா? Poll_c10மறதி- என்பது பலமா, பலவீனமா? Poll_m10மறதி- என்பது பலமா, பலவீனமா? Poll_c10 
1 Post - 1%
Pampu
மறதி- என்பது பலமா, பலவீனமா? Poll_c10மறதி- என்பது பலமா, பலவீனமா? Poll_m10மறதி- என்பது பலமா, பலவீனமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறதி- என்பது பலமா, பலவீனமா? Poll_c10மறதி- என்பது பலமா, பலவீனமா? Poll_m10மறதி- என்பது பலமா, பலவீனமா? Poll_c10 
214 Posts - 42%
heezulia
மறதி- என்பது பலமா, பலவீனமா? Poll_c10மறதி- என்பது பலமா, பலவீனமா? Poll_m10மறதி- என்பது பலமா, பலவீனமா? Poll_c10 
187 Posts - 37%
Dr.S.Soundarapandian
மறதி- என்பது பலமா, பலவீனமா? Poll_c10மறதி- என்பது பலமா, பலவீனமா? Poll_m10மறதி- என்பது பலமா, பலவீனமா? Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
மறதி- என்பது பலமா, பலவீனமா? Poll_c10மறதி- என்பது பலமா, பலவீனமா? Poll_m10மறதி- என்பது பலமா, பலவீனமா? Poll_c10 
18 Posts - 4%
sugumaran
மறதி- என்பது பலமா, பலவீனமா? Poll_c10மறதி- என்பது பலமா, பலவீனமா? Poll_m10மறதி- என்பது பலமா, பலவீனமா? Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
மறதி- என்பது பலமா, பலவீனமா? Poll_c10மறதி- என்பது பலமா, பலவீனமா? Poll_m10மறதி- என்பது பலமா, பலவீனமா? Poll_c10 
6 Posts - 1%
manikavi
மறதி- என்பது பலமா, பலவீனமா? Poll_c10மறதி- என்பது பலமா, பலவீனமா? Poll_m10மறதி- என்பது பலமா, பலவீனமா? Poll_c10 
4 Posts - 1%
prajai
மறதி- என்பது பலமா, பலவீனமா? Poll_c10மறதி- என்பது பலமா, பலவீனமா? Poll_m10மறதி- என்பது பலமா, பலவீனமா? Poll_c10 
4 Posts - 1%
Kavithas
மறதி- என்பது பலமா, பலவீனமா? Poll_c10மறதி- என்பது பலமா, பலவீனமா? Poll_m10மறதி- என்பது பலமா, பலவீனமா? Poll_c10 
3 Posts - 1%
Abiraj_26
மறதி- என்பது பலமா, பலவீனமா? Poll_c10மறதி- என்பது பலமா, பலவீனமா? Poll_m10மறதி- என்பது பலமா, பலவீனமா? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறதி- என்பது பலமா, பலவீனமா?


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Mar 15, 2012 12:15 pm


மறதி- என்பது பலமா, பலவீனமா? மறதி பலமாவ தும் உண்டு; பலவீனமாவதும் உண்டு. புறவுலகத்தை மறந்து தனக்குள்ளே இருக்கும் இறைவனைத் தேடுவதில் மறதியே பலம். ஆனால், அவசியமான காரியங்களில் மறதி ஏற்பட்டுவிட்டால், அதுவே நம்மை அழிப்பதாக வும் அமைந்துவிடுகிறது.

"நெடுநீர், மறவி, மடி, துயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்.'

"எதையும் காலம் தாழ்த்திச் செய்தல், மறதி, சோம்பல், தூக்கம் ஆகிய நான்கும் கெட்டு அழிபவர்கள் விரும்பும் அணிகலன்கள்' என்று கூறுகிறது உலகப் பொதுமறையாம் திருக்குறள்.

ஊழ்வினைப் பயன் நன்கு அமையுமானால் தக்க தருணத்தில் மறதி நீங்கிவிடும். நல்நினைவு தோன்றிவிடும். கடுமையான போர்க்களத்தில் ஒரு காட்சி.

அரக்கன் சூரபத்மனின் வீரமகேந்திர புரம். போர்க்களத்தில் நிற்கிறான் சூரன். சுற்றிலும் ஆயிரம் ஆயிரம் வெள்ளம் அசுரர் சேனைகள். எதிரே லட்சத்து ஒன்பது வீரர்களுடன் தேவசேனா பதியாக பாலமுருகன் நிற்கி றான். அவனது அழகுத் திருமுகம் காண்கிறான் சூரன். பாலனென்று பரிகாசம் செய்தவனிடம் பாசம் பொங்குகிறது. முகத்தைப் பார்த்தவன் அந்த அழகில் மயங்கி அப்படியே கீழே பார்க்கிறான். இரு செம்மலர்த் திருவடிகள். அந்தத் திருவடிகளில் உள்ள சிலம்புகளில் ஓங்கார ஒலி கேட்கிறது.

அப்படியே நிமிர்ந்து ஆறு திருமுகங்களின் பேரழகைக் காண்கிறான்.

"ஆஹா, என்ன தெய்வீகக் களை!' என்று வியக்கிறான். கணநேரம் தன்னை மறந்து வணங்குவதற்கு கைகளைத் தூக்கு கிறான். அவ்வளவுதான்! அடுத்த கணம், "சீ, இச்சிறு பாலனுடனா நான் போரிடுவது?' என்ற ஆணவம் தலை உச்சிக்கு ஏறிவிட்டது. ""ஏ, சிறுவனே! நான் கையில் ஆயுதம் எடுக்குமுன் ஓடிவிடு!'' என்று உறுமுகிறான்.

அருகேயிருந்த தம்பி சிங்க முகன் மெதுவாகக் கூறுகிறான்: ""அண்ணா, அது சிறுபாலன் அல்ல; சிவபாலன். அவனை எதிர்ப்பது சிவனையே எதிர்ப்பதாகும்.''

""ஏய் சிங்கமுகா, என்ன பிதற்றுகிறாய்? சிவனாம் பாலனாம். சிவனும் சக்தியும் எப்பொழுதடா கூடிக்குலவினார்கள்? குழந்தை பெற்றார்கள்? என்னிடமே புதுக்கதை கூறுகி றாயா?''

""மன்னிக்க வேண்டும் அண்ணா. புதுக்கதை இல்லை; பழங்கதைதான். நாம் சிவனாரிடம் வரம் பெற்றபோது அவர் சொன்னதை மறந்து விட்டீர்கள் அண்ணா.''

"சிங்கமுகா, சூரியப்பகைஞனான எனது மகன் பானுகோபன் இறந்ததும் உனக்கும் பயம் வந்துவிட்டது! அன்று சொன்னதை நான் ஒன்றும் மறக்கவில்லை. சிவனார்தான்

எனக்கு "யாவராலும் வெலப்படாய்' என்று வரம் தந்திருக்கிறார்.''

""நீங்கள் சொன்னது சிவன் தந்த வரத்தின் பிற்பகுதி. முற்பகுதியில் அவர் சொன் னது "எமது சக்தி ஒன்றின் அல்லால் யாவராலும் வெலப்படாய்' என்பதுதான்.''

""நீ என்னதான் சொல்ல வருகிறாய்?''

""எமது சக்தி என்று சிவனார் அன்று சொன்னதை நான் மறக்க வில்லை. நீங்கள் மறந்துவிட்டீர்கள். சிவனது சக்தியாக- சிவனிடமிருந்து மட்டுமே தோன்றியவன்தான் இந்த சிவபாலன். நீங்கள் எண்ணியிருப்பதுபோல் ஆணுக்கும் பெண்ணுக்கும் பிறந்தவனல்ல! முழுக்க முழுக்க ஓர் ஆணின் சக்தியில் மட்டுமே தோன்றிய ஆண் மகன்! எனவே அவர் அன்று சொன்ன "எமது சக்தி' என்பது இச்சிறு பாலனே.''

அப்போதும் அதன் உண்மையை சூரன் உணரவில்லை. ""எவரானாலும் சரி; இதற்கெல் லாம் அஞ்சி நான் தேவர்களை சிறையிலிருந்து விடுவிக்க மாட்டேன். முன்வைத்த காலைப் பின்வைப்பவன் இந்த சூரனல்ல. சிங்கமுகா, அந்த சிறுவனை நீயே தொழுதுகொண்டிரு!'' என்றான்.

இவ்வாறு சூரபத்மன் வாங்கிய வரத்தை மறந் தது இயல்புதான். அந்த மறதிக்குக் காரண மாயிருந்தது மனதில் குடிகொண்டுவிட்ட ஆணவம்! எனவேதான் கருணை வள்ளலாகிய முருகனும் சூரனை அழிக்காமல் அவனது ஆணவத்தை மட்டுமே அழித்தான்.

பொதுவாக அசுரர்கள் கடுந்தவம் புரிவதில் வல்லவர்கள். அதன்பின் தந்திரமாக சாகாவரம் கேட்பதும் அவர்களது வழக்கம். வரம் கொடுப்பதில் எளியவர்கள் சிவனும் பிரம்மனும். இவர்கள் கேட்டபடி வரத்தைக் கொடுத்து விடுவர். பின்னர் அசுரர்கள் ஆணவத்தில் அழிவுகளைச் செய்யும்போது இவர்களாகவோ அல்லது சக்திதேவியின் துணைகொண்டோ அல்லது திருமாலின் துணையினாலோ அந்த அரக்கர்களை அழிப்பதும் புராணங்கள் காட்டும் உண்மை.

இவர்கள் கொடுக்கும் வரத்தில் எங்காவது சிறு விஷயம் அசுரர்களின் அழிவுக்கு ஆதார மாய் அமைந்துவிடும். சூரன் விஷயத்திலும் அதுதான் நடந்தது. அவன் வரம் வாங்கும் பொழுது, "தாங்கள் அன்னை சக்திதேவியுடன் கூடாமல் பிறக்கும் ஒரு பிள்ளையால்தான் எனக்கு மரணம் வரவேண்டும்' என்று சாமர்த் தியமாகக் கேட்டான். ஆண்- பெண் சேர்க்கை இன்றி பிள்ளை பிறக்காது என்ற அவன் எண் ணம் தவறாகிப் போனது. இரணியன் பெற்ற வரமும் இப்படித்தான் அமைந்துவிட்டது.

இராவணன் சிவபெருமானுக்கு விருப்ப மான சாமகானம் இசைத்தான். கலை வல்லா னாகிய அவன் எப்படியும் சிவனின் பெரும் பாராட்டைப் பெற்றுவிட வேண்டும் என்று பேராசை கொண்டான். தனது உடல் நரம்பையே எடுத்து யாழில் பூட்டி இசைத்தான். அந்த தேவகானத்தில் மகாதேவன் மனம் மகிழ்ச்சியில் மிதந்தது.

இராவணன் கேட்கும் முன்னாலேயே, ""முப்பத்து முக்கோடி வாழ்நாள் பெறுவாய்; எத்திக்கிலும் யாவராலும் வெலப்படாய். இதோ இந்த சந்திர ஹாசம் என்ற வாளையும் பெற்றுக்கொள். ஆனால் ஒன்று- எக்காரணம் கொண்டும் நீ இதனை நிராயுதபாணிமேல் பயன்படுத்தக் கூடாது. அப்படிச் செய்தால் அப்பொழுதே அது எம்மிடம் திரும்பி வந்துவிடும்'' என்றார்.

இந்த வரத்தை இராவணன் எப்படி- எப்பொழுது மறந்தான்?

சீதையைக் கவர்ந்து வந்து அசோக வனத் தில் சிறை வைத்துவிட்டான். அவளை தன் விருப்பத்துக்கு இசைவிக்கும்படி அரக்கியர்க்கு உத்தரவிட்டான். கலக்கத்துடன் மண்டோதரி யின் அந்தப்புரத்துள் நுழைகிறான்.

வருகிற கணவனின் நடை தளர்ந்திருக்கிறது. தலை குனிந்திருக்கிறது. முகம் வாடியிருக்கிறது.

""சுவாமி, தங்கள் முகம் ஏன் வாட்டமுற்றுள் ளது? வந்ததும் நேரே பூஜை அறைக்குச் சென்று சந்திரஹாச வாளை வைத்துவிட்டு வருவீர்களே. அது எங்கே?'' என்று பதட்டத் துடன் கேட்டாள் பத்தினி.

இராவணன், ""அந்த வாள் எங்கே போயிற்று என்று தெரியவில்லை தேவி'' என்றான்.

""என்ன சுவாமி இது? நிராயுதபாணி யார் மீதாவது பயன்படுத்தினால் அதைக் கொடுத்த சிவனிடமே திரும்பிவிடும் என்று சிவனார் அன்று சொன்னதை என்னிடம் சொல்லி இருக்கிறீர்களே. இப்பொழுது எந்த நிராயுத பாணிமீதாவது பயன்படுத்தினீர்களா?'' என்று கவலையுடன் கேட்டாள் மண்டோதரி.

இராவணன் மண்டோதரி முகத்தைப் பார்க்காமலே சொன்னான். ""ஆம் தேவி. இப்பொழுதுதான் நினைவு வருகிறது. சீதையை புஷ்பக விமானத்தில் கொண்டு வரும்பொழுது ஒரு பெருங்கழுகு என்னைத் தடுத்தது. அதன் அலகால் என்னை பயங்கரமாய் தாக்கியது.

அப்பொழுது ஆத்திரமடைந்த நான் அந்தக் கழுகின் சிறகுகளை அந்த வாளால் வெட்டி கழுகை வீழ்த்தினேன்.''

""அந்தக் கழுகிடம் ஆயுதம் ஏதும் இல்லையா?''

""அதன் அலகுதான் ஆயுதமாகப் பயன் பட்டது. வேறெதுவும் இல்லை.''

""சுவாமி, அலகு ஓர் உறுப்பல்லவா? அது எப்படி ஆயுதமாகும்? அப்படியானால் அந்தக் கழுகு நிராயுதபாணிதான். வாள் சிவனிடம் திரும்பிச் சென்றிருக்கும். பெற்ற வரத்தை மறந்துவிட்டீர்களே சுவாமி!''

""ஆத்திரத்தில் அறிவிழந்துவிட்டேன் தேவி.''

ஆத்திரம் மட்டுமல்ல; மாற்றான் மனைவி யாகிய சீதைமீது கொண்ட காமம்தான் அறிவு மயங்கச் செய்துள்ளது என்பதை மண்டோதரி தன் மனத்துக்குள் நினைத்து வருத்தினாள்.

இராவணனின் மறதிக்கு காமமே காரணமானது. காமமே துன்பங்களுக்குக் காரணம் என்கிறார் திருவள்ளுவர்.

"காமம், வெகுளி, மயக்கம் இம்மூன்றன்
நாமம்கெடக் கெடும் நோய்.'

தகவல் பகிர்வு - http://aanmikam.blogspot.com/

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Mar 15, 2012 12:23 pm

எனக்கு பலம் தான் ஏன்னா மறதி எனக்கில்லை என் உயர் அதிகாரிக்கு....... ஜாலி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக