புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கேரளாவில் கம்யூனிஸ்டு மந்திரிசபை: இந்தியாவின் முதல் எதிர்க்கட்சி அரசாங்கம்  Poll_c10கேரளாவில் கம்யூனிஸ்டு மந்திரிசபை: இந்தியாவின் முதல் எதிர்க்கட்சி அரசாங்கம்  Poll_m10கேரளாவில் கம்யூனிஸ்டு மந்திரிசபை: இந்தியாவின் முதல் எதிர்க்கட்சி அரசாங்கம்  Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
கேரளாவில் கம்யூனிஸ்டு மந்திரிசபை: இந்தியாவின் முதல் எதிர்க்கட்சி அரசாங்கம்  Poll_c10கேரளாவில் கம்யூனிஸ்டு மந்திரிசபை: இந்தியாவின் முதல் எதிர்க்கட்சி அரசாங்கம்  Poll_m10கேரளாவில் கம்யூனிஸ்டு மந்திரிசபை: இந்தியாவின் முதல் எதிர்க்கட்சி அரசாங்கம்  Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
கேரளாவில் கம்யூனிஸ்டு மந்திரிசபை: இந்தியாவின் முதல் எதிர்க்கட்சி அரசாங்கம்  Poll_c10கேரளாவில் கம்யூனிஸ்டு மந்திரிசபை: இந்தியாவின் முதல் எதிர்க்கட்சி அரசாங்கம்  Poll_m10கேரளாவில் கம்யூனிஸ்டு மந்திரிசபை: இந்தியாவின் முதல் எதிர்க்கட்சி அரசாங்கம்  Poll_c10 
11 Posts - 4%
prajai
கேரளாவில் கம்யூனிஸ்டு மந்திரிசபை: இந்தியாவின் முதல் எதிர்க்கட்சி அரசாங்கம்  Poll_c10கேரளாவில் கம்யூனிஸ்டு மந்திரிசபை: இந்தியாவின் முதல் எதிர்க்கட்சி அரசாங்கம்  Poll_m10கேரளாவில் கம்யூனிஸ்டு மந்திரிசபை: இந்தியாவின் முதல் எதிர்க்கட்சி அரசாங்கம்  Poll_c10 
9 Posts - 4%
Jenila
கேரளாவில் கம்யூனிஸ்டு மந்திரிசபை: இந்தியாவின் முதல் எதிர்க்கட்சி அரசாங்கம்  Poll_c10கேரளாவில் கம்யூனிஸ்டு மந்திரிசபை: இந்தியாவின் முதல் எதிர்க்கட்சி அரசாங்கம்  Poll_m10கேரளாவில் கம்யூனிஸ்டு மந்திரிசபை: இந்தியாவின் முதல் எதிர்க்கட்சி அரசாங்கம்  Poll_c10 
4 Posts - 2%
Rutu
கேரளாவில் கம்யூனிஸ்டு மந்திரிசபை: இந்தியாவின் முதல் எதிர்க்கட்சி அரசாங்கம்  Poll_c10கேரளாவில் கம்யூனிஸ்டு மந்திரிசபை: இந்தியாவின் முதல் எதிர்க்கட்சி அரசாங்கம்  Poll_m10கேரளாவில் கம்யூனிஸ்டு மந்திரிசபை: இந்தியாவின் முதல் எதிர்க்கட்சி அரசாங்கம்  Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
கேரளாவில் கம்யூனிஸ்டு மந்திரிசபை: இந்தியாவின் முதல் எதிர்க்கட்சி அரசாங்கம்  Poll_c10கேரளாவில் கம்யூனிஸ்டு மந்திரிசபை: இந்தியாவின் முதல் எதிர்க்கட்சி அரசாங்கம்  Poll_m10கேரளாவில் கம்யூனிஸ்டு மந்திரிசபை: இந்தியாவின் முதல் எதிர்க்கட்சி அரசாங்கம்  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
கேரளாவில் கம்யூனிஸ்டு மந்திரிசபை: இந்தியாவின் முதல் எதிர்க்கட்சி அரசாங்கம்  Poll_c10கேரளாவில் கம்யூனிஸ்டு மந்திரிசபை: இந்தியாவின் முதல் எதிர்க்கட்சி அரசாங்கம்  Poll_m10கேரளாவில் கம்யூனிஸ்டு மந்திரிசபை: இந்தியாவின் முதல் எதிர்க்கட்சி அரசாங்கம்  Poll_c10 
2 Posts - 1%
Barushree
கேரளாவில் கம்யூனிஸ்டு மந்திரிசபை: இந்தியாவின் முதல் எதிர்க்கட்சி அரசாங்கம்  Poll_c10கேரளாவில் கம்யூனிஸ்டு மந்திரிசபை: இந்தியாவின் முதல் எதிர்க்கட்சி அரசாங்கம்  Poll_m10கேரளாவில் கம்யூனிஸ்டு மந்திரிசபை: இந்தியாவின் முதல் எதிர்க்கட்சி அரசாங்கம்  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கேரளாவில் கம்யூனிஸ்டு மந்திரிசபை: இந்தியாவின் முதல் எதிர்க்கட்சி அரசாங்கம்  Poll_c10கேரளாவில் கம்யூனிஸ்டு மந்திரிசபை: இந்தியாவின் முதல் எதிர்க்கட்சி அரசாங்கம்  Poll_m10கேரளாவில் கம்யூனிஸ்டு மந்திரிசபை: இந்தியாவின் முதல் எதிர்க்கட்சி அரசாங்கம்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேரளாவில் கம்யூனிஸ்டு மந்திரிசபை: இந்தியாவின் முதல் எதிர்க்கட்சி அரசாங்கம்


   
   
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Mar 14, 2012 10:24 am

கேரளாவில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் இ.கம்யூனிஸ்டு கட்சி அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தியாவில் சுதந்திரத்துக்கு பிறகு எதிர்க்கட்சியானது முதல் முறையாக ஆட்சிக்கு வரும் வாய்ப்பு ஏற்பட்டது. முதல் மந்திரியாக சங்கரன் நம்பூதிரிபாடு தேர்ந்தெடுக்கப்பட்டார். 5.4.1957 அன்று திருவனந்தபுரத்தில் இருக்கும் கவர்னர் மாளிகையில் பதவி ஏற்பு விழா நடந்தது.

முதல் மந்திரி சங்கரன் நம்பூதிரிபாடு உள்பட 11 மந்திரிகளுக்கு கவர்னர் ராமகிருஷ்ணராவ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். கவுரி அம்மாள் என்ற பெண், மந்திரி சபையில் இடம் பெற்றார். 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களுக்கும் மந்திரி பதவி கொடுக்கப்பட்டது. அச்சுதமேனன், வி.ஆர்.கிருஷ்ண அய்யர் (பிரபல வக்கீல்) டி.வி.தாமஸ், கே.பி.கோபாலன் ஆகிய பிரபல தலைவர்களும் மந்திரி சபையில் இடம் பெற்றார்கள்.

முதல் மந்திரி நம்பூதிரிபாடு 1937 ம் ஆண்டில் கேரளாவில் கம்யூனிஸ்டு இயக்கத்தை ஆரம்பித்த தலைவர்களில் ஒருவராவார். எளிமையான வாழ்க்கையும், கடுமையான உழைப்பும் உடையவர். ஆங்கிலம், மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் சிறந்த எழுத்தாளர். பதவி ஏற்கும் முன்பு முதல் மந்திரி சங்கரன் நம்பூதிரிபாடு ஆலப்புழைக்குச் சென்று மறைந்த கம்யூனிஸ்டு தலைவர் பி.கிருஷ்ணபிள்ளை சமாதியில் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார்.

கேரளாவில் கம்யூனிஸ்டு கட்சியை தொடங்கி அதனை கட்டிக்காத்தவர் கிருஷ்ணபிள்ளை ஆவார். அவர் தலைமறைவு வாழ்க்கை நடத்தியபோது பாம்பு கடித்து இறந்து போனார். அவரது உடல் ஆலப்புழையில் அடக்கம் செய்யப்பட்டது. அவர் உயிர் துறந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு கேரளாவில் கம்யூனிஸ்டு ஆட்சி மலர்ந்தது. பதவி ஏற்ற பிறகு முதல் மந்திரி நம்பூதிரிபாடு அறிக்கை வெளியிட்டார்.

அதில் புதிய அரசின் திட்டங்களை விளக்கி கூறியிருந்தார். அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது:-

(1) கம்யூனிஸ்டு கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் உள்ள உறுதிமொழிகளை நிறைவேற்றுவோம். இப்போது இருக்கிற சூழ்நிலையில் அது கஷ்டமானது. இருந்தாலும் உடனடியாக சில உறுதிமொழிகளை நிறைவேற்ற உத்தரவு போடுவோம்.

(2) இதர சில உறுதி மொழிகளை நிறைவேற்ற சட்டசபையில் புதிய சட்டம் கொண்டு வருவோம். வேறு சிலவற்றை அவசர சட்டம் போட்டு நிறைவேற்றுவோம்.

(3) வெகு விரைவில் நிலச்சட்டங்கள் சிலவற்றை கொண்டு வருவோம். இதன்படி ஒருவர் இவ்வளவு நிலம்தான் வைத்திருக்கலாம் என்று கட்டுப்படுத்தப்படும். அதிகப்படி நிலத்தை பிடுங்கி நிலம் இல்லாதவர்களுக்கு பங்கு போட்டு கொடுப்போம்.

இவ்வாறு நம்பூதிரிபாடு கூறியிருந்தார்.

மக்களை பாதிக்காத வகையில் புதிய வரி போடப்படும் என்றும், வெள்ளையர்கள் ஆதிக்கத்தில் இருக்கும் ரப்பர், காபி எஸ்டேட்டுகளை அரசே கைப்பற்றி நடத்தும் என்றும் அறிவித்தார். வரி விதிப்பு தொடர்பாக மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். நம்பூதிரிபாடு தலைமையிலான அந்த ஆட்சி 2 ஆண்டுகளே நீடித்தது. கம்யூனிஸ்டு ஆட்சிக்கு எதிராக திடீர் கிளர்ச்சி நடந்தது.

சுமார் 48 நாட்கள் அது தொடர்ந்தது. கொல்லம் நகரில் மோதல் ஏற்பட்டு 7 வீடுகள் கொளுத்தப்பட்டன. 4 பேர் கத்தியால் குத்தப்பட்டனர். ஆசிரியர்களும், மாணவர்களும் போராட்டம் நடத்தினார்கள். எர்ணாகுளம் அருகே போலீசார் தடியடி நடத்தியதில் 5 மாணவர்கள் காயம் அடைந்தனர். கேரளாவில் உள்ள தமிழர்கள், தமிழ்நாட்டுடன் தொடர்பு கொள்வதை கேரள கம்யூனிஸ்டு அரசாங்கம் மறைமுகமாக தடை செய்கிறது என்று கேரள சட்டசபை தமிழ் உறுப்பினர் கணபதி (காங்கிரஸ்) குற்றம் சாட்டினார்.

மேலும் கேரள அரசாங்கம் பற்றி மத்திய அரசிடம் காங்கிரசார் புகார் கூறி வந்தனர். ஆனால் அவற்றை கம்யூனிஸ்டு தலைவர்கள் மறுத்து வந்தார்கள். கேரளாவில் மீண்டும் பொதுத்தேர்தல் நடத்தவேண்டும் என்று பிரதமர் நேரு யோசனை தெரிவித்தார். இதனை கம்யூனிஸ்டு கட்சி நிராகரித்தது. இந்த நிலையில் கேரளாவில் நடந்து வரும் கிளர்ச்சி பற்றி ஆலோசிக்க மத்திய மந்திரி சபை கூட்டம் பிரதமர் நேரு தலைமையில் நடந்தது.

சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினார்கள். மந்திரிசபை கூட்டம் முடிந்த பிறகு, ஜனாதிபதி ராஜேந்திரபிரசாத்தை நேரு சந்தித்தார். கேரள அரசாங்கம் மீது காங்கிரசார் சாட்டிய குற்றச்சாட்டுகள் பற்றியும், அதற்கு நம்பூதிரிபாடு கூறிய பதில் பற்றியும், கேரள கவர்னர் அனுப்பிய குறிப்பு பற்றியும் ஆலோசனை நடத்தினார்கள்.

மீண்டும் மறுநாள் (30.7.1959) மந்திரிசபை கூடி விவாதித்தது. கேரளாவில் ஆட்சியை கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை பிரகடனப்படுத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. இதனை அடுத்து 31.7.1959 அன்று கேரள மந்திரிசபையை டிஸ்மிஸ் செய்து ஜனாதிபதி ராஜேந்திரபிரசாத் உத்தர விட்டார். இந்த உத்தரவை மத்திய அரசு அதிகாரி விமானம் மூலம் திருவனந்தபுரத்துக்கு சென்று கவர்னரிடம் வழங்கினார்.

உடனே கவர்னர் அதனை நம்பூதிரிபாடுவுக்கு அனுப்பினார். அன்று மாலை 5.30 மணிக்கு மந்திரி களுக்கு கவர்னர் தேனீர் விருந்து கொடுத்தார். அது முடிந்ததும் ஆட்சி பொறுப்பை கவர்னரிடம் நம்பூதிரிபாடு ஒப்படைத்தார். மாலை 6 மணி முதல் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. கம்யூனிஸ்டு ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி நடத்தியவர்கள் வெற்றி விழா ஊர்வலம் நடத்தினார்கள்.

அந்த ஊர்வலத்தில் கிளர்ச்சி கமிட்டி தலைவர் மன்னத்து பத்மநாபனின் படத்தை எடுத்துச்சென்றார்கள். அவர் படத்துக்கு மாலை அணிவித்து ஆரவாரம் செய்தார்கள். மன்னத்து பத்மநாபன், முன்னாள் முதல் மந்திரி பட்டம் தாணுப்பிள்ளை மற்றும் பல்வேறு கட்சி தலைவர்களை கவர்னர் அழைத்து பேசினார். ஜனாதிபதி ஆட்சி ஏற்பட்டதால் கிளர்ச்சியை நிறுத்தும்படி அவர்களிடம் கேட்டுக் கொண்டார்.

கிளர்ச்சி கைவிடப்பட்டது. கேரளாவில் ஜனாதிபதி ஆட்சி வருவது பற்றி நம்பூதிரிபாடு மந்திரிசபையில் சட்ட மந்திரியாக இருந்த வி.ஆர். கிருஷ்ணய்யர் கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

ஜனாதிபதி ஆட்சியை எதிர்த்து கிளர்ச்சியோ, ஆர்ப்பாட்டமோ செய்யமாட்டோம். கம்யூனிஸ்டுகள் பொறுமையாக இருப்பார்கள். மத்திய அரசு நியாயமான முறையில் நடந்து கொள்ள வில்லை.எங்கள் மீது காங்கிரஸ்காரர்கள் கூறிய குற்றச் சாட்டுகளை `பொய்' என்று நிரூபிக்க சந்தர்ப்பம் கொடுக்கவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக முடிவு செய்து கொண்டார்கள். "துன்ப நாடகம்" முடிந்து விட்டது. `

வில்லன்' வெற்றி பெற்றுவிட்டான். கலகக்காரர்களின் கோரிக்கையை அரசாங்கம் ஒப்புக்கொண்டதாக இதுவரை யாரும் கேள்விப்பட்டது இல்லை. கிளர்ச்சிக்காரர்களை காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கூப்பிட்டு சொல்லியிருந்தால், கிளர்ச்சி அடங்கி இருக்கும். ஆனால் அதற்குப்பதில் தலைவர்கள் கிளர்ச்சிக்காரர்களுக்கு மறைமுகமாக ஊக்கம் கொடுத்தார்கள். அதிகாரம் தவறாக பயன்படுத்தப்படுகிறது.

இதைப்பார்க்க காந்தி கூட உயிரோடு இல்லை. இந்தியாவில் காங்கிரஸ் கட்சி மட்டும்தான் இருக்க வேண்டும் என்று காங்கிரஸ்காரர்கள் நினைக்கிறார்கள். வேறு கட்சி ஆட்சிக்கு வருவதை அவர்கள் பொறுக்க மாட்டார்கள். கேரளாவில் ஜனாதிபதி ஆட்சி ஏற்பட்டு இருப்பது இதைத்தான் நிரூபிக்கிறது.

இவ்வாறு கிருஷ்ணய்யர் கூறினார்.

கேரளாவில் கம்யூனிஸ்டு ஆட்சி `டிஸ்மிஸ்' செய்யப்பட்டதற்கு கம்ïனிஸ்டு தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கேரள மாநிலம் முழுவதும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். முக்கிய நகரங்களில் கண்டன ஊர்வலம் நடந்தது. கடைகள் அடைக்கப்பட்டன.

மாலைமலர்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Mar 14, 2012 1:13 pm

இது ஒரு வரலாற்று பதிவு என்று தலைப்பில் சொல்லி இருக்கலாம்!

நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Postநேரு Wed Mar 14, 2012 1:28 pm

கேரளாவில் கம்யூனிஸ்ட் அரசாங்கம் வந்தாலும் காங்கிரஸ் அரசாங்கம் வந்தாலும் தேசிய நலனுக்கு எதிராக மாநில தன்மையை முன்ன்டுத்து செல்வதில் மற்ற மாநில எதிர்ப்பு நிலையை (முல்லை பெரியாறு ) சம்பாதித்து கொள்வதுதான் கம்யூனிஸ்ட் கொள்கையா ?



பாதையை தேடாதே !..உருவாக்கு......
!

]
மேதகு பிரபாகரன் அவர்கள்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக