புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தில் பெருமளவு குறைப்பு: சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
சென்னை, ஏப்.3: ஏப்ரல் 1-ம் தேதி முதல் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட மின்கட்டணத்தில் பெருமளவு குறைக்கப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சட்டப்பேரவையில் அவர் இன்று வெளியிட்ட அறிவிப்பு:
நாட்டின் பொருளாதாரம் சரியான பாதையில் பயணிக்கும் வகையில், பொது நலன் பாதுகாக்கப்படுவதையும்; சமூக நலன் உச்ச நிலைக்கு கொண்டு செல்லப்படுவதையும்; லாபத்தை குறிக்கோளாகக் கொள்ளாமல், மக்களுக்கான சேவை நியாயமான விலையில் கிடைக்கச் செய்வதையும் நோக்கமாகக் கொண்டு செயலாற்றுபவை தான் பொதுத் துறை நிறுவனங்கள். இந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, தமிழ்நாட்டு மக்களுக்குத் தேவையான மின்சாரத்தை தங்கு தடையின்றி அளிப்பதற்காக உருவாக்கப்பட்ட நிறுவனம் தான் தமிழ்நாடு மின்சார வாரியம்.
எனது முந்தைய ஆட்சிக் காலத்தில், அதாவது 2001 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரையிலான ஆட்சிக் காலத்தில், மின் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமளிக்காத வகையில்; இன்னும் சொல்லப் போனால், உபரி மின்சாரத்தை வெளி மாநிலங்களுக்கு அளிக்கும் வகையில், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் செயல்பாடு நன்றாக இருந்தது. தமிழ்நாட்டில் உள்ள அனல் மின் நிலையங்களான தூத்துக்குடி, மேட்டூர் மற்றும் வட சென்னை அனல் மின் நிலையங்கள் அவற்றின் செம்மையான செயல்பாடுகளுக்காக 2001-2002 முதல் 2005-2006 வரை பல்வேறு விருதுகளை தொடர்ச்சியாக பெற்று வந்தன. காற்றாலை மின் உற்பத்தியிலும் தமிழ்நாடு முன்னிலை வகித்து வந்தது. இது மட்டுமல்லாமல், 2,518 மெகாவாட் அளவுக்கு மின் நிறுவு திறன் அதிகரிக்கப்பட்டது. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நிதி நிர்வாகமும் சீராக இருந்தது.
ஆனால், முந்தைய தி.மு.க. ஆட்சியில், ஆண்டொன்றுக்கு சராசரியாக 8,000 கோடி ரூபாய்க்கு மேல், வருவாய்க்கும் செலவினங்களுக்கும் இடையே நிகர இடைவெளி ஏற்பட்டது. இதன் விளைவாக, 31.3.2012 நிலவரப்படி, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தொடர் இழப்பு 50,000 கோடி ரூபாயையும்; வங்கி மற்றும் இதர நிதி நிறுவனங்களிடமிருந்து பெற்ற கடன் 45,000 கோடி ரூபாயையும் தாண்டியுள்ளது. இது தவிர, தனியார் மின் உற்பத்தியாளர் மற்றும் இதர ஒப்பந்ததாரர்களுக்கான நிலுவைத் தொகை 11,000 கோடி ரூபாய் அளவிற்கு உள்ளது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், தமிழ்நாடு மின்சார வாரியம் அளவுக்கு மீறிய கடன் சுமைக்கு ஆளாகி; வாங்கிய கடனையும் வட்டியையும் திரும்பச் செலுத்துவதற்கே கடன் வாங்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில், அதாவது debt-trap நிலையில் உள்ளது. இந்தச் சூழ்நிலையில், மதிப்பீட்டு நிறுவனங்கள் மின்சார வாரியத்தின் மதிப்பை குறைத்துவிட்டதால், வெளிச்சந்தையில் இருந்தும் கடன் பெற வழியில்லை. தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு கடன் அளிக்கக் கூடாது என பாரத ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக் கொண்ட எனது தலைமையிலான அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக, பல ஆண்டு இடைவெளிக்குப் பின் அனல் மின் நிலையங்கள் புதிய சாதனைகளை ஏற்படுத்தும் விதமாக மிகச் செம்மையாக செயல்பட்டு வருகின்றன. இதே போன்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மின் இழப்பு அதாவது Transmission and Distribution loss விகிதமும், குறைக்கப்பட்டுள்ளது. அகில இந்திய, சராசரி மின் இழப்பான, 27 விழுக்காட்டினை ஒப்பிடுகையில், தமிழ்நாட்டின் மின் இழப்பு, 18 விழுக்காடு, என்ற அளவிலேயே உள்ளது.
நிதி உதவியைப் பொறுத்த வரையில், 2011-12 ஆம் ஆண்டுக்கான மானியத் தொகையாக 2,058.19 கோடி ரூபாயை தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வழங்கியதுடன்; பங்கு மூலதனமாக 4,100 கோடி ரூபாயையும்; ways and means advance ஆக 1,455.16 கோடி ரூபாயையும்; ஆக மொத்தம் ஒரே ஆண்டில் இதுவரை வழங்கப்படாத அளவுக்கு 7913.45 கோடி ரூபாயை எனது தலைமையிலான அரசு வழங்கியுள்ளது. 2012-13 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு மானியமாக 3,068.78 கோடி ரூபாயும்; புதிய மின் திட்டங்களுக்கான பங்கு மூலதன உதவியாக 1,500 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது தவிர, மின்சார சேமிப்பை ஊக்குவிக்கவும்; மின்சாரத்தை கொண்டு செல்வதிலும், விநியோகிப்பதிலும் ஏற்படும் இழப்புகளை மேலும் குறைக்கவும்; மின் பகிர்மான கட்டமைப்பை வலுப்படுத்தவும்; மின் திருட்டைக் கட்டுப்படுத்தவும்; சூரிய ஒளி மின்சக்தி திட்டங்கள்; காற்றலை திட்டங்கள்; பயோமாஸ் மின் திட்டங்கள் ஆகியவற்றை ஊக்குவிக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மாநில அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களை விரைந்து செயல்பாட்டிற்கு கொண்டு வரவும்; புதிய திட்டங்களை மாநில அரசு மூலமாகவோ அல்லது கூட்டு முயற்சிகள் மூலமாகவோ தொடங்க துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பாரத மிகுமின் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்துவதாக இருந்த 1600 மெகாவாட் உடன்குடி உயர் அழுத்த நிலை அனல் மின் திட்டம் நான்கு ஆண்டுகளாக தொடங்கப்படாத நிலையில் இருந்ததால், அத்திட்டத்தை 8000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாநில அரசின் திட்டமாகவே செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதற்கிடையில், உற்பத்தி செலவு மற்றும் விநியோக வருவாய்க்கு இடையே உள்ள இடைவெளியை ஈடு செய்யும் வகையில், 9,741 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் ஏற்படும் வகையில், தற்போதுள்ள மின்சார கட்டணத்தை மாற்றக் கோரி தமிழ்நாடு மின்சார வாரியம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தது. இந்த விண்ணப்பத்தின் மீது நுகர்வோரின் கருத்துகளை கோரி சென்னை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை ஆகிய இடங்களில் ‘கருத்துக் கேட்பு’ கூட்டங்களையும்; மாநில ஆலோசனைக் குழு, அதாவது, ளுவயவந ஹனஎளைடிசல ஊடிஅஅவைவநந கூட்டத்தையும் நடத்தி, பல்வேறு தரப்பினரின் கருத்துகளையும், ஆலோசனைகளையும், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பெற்றது.
இதனையடுத்து, மின் கட்டண, விகித மாற்றம் குறித்த, தனது ஆணையை, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், 30.3.2012 அன்று வெளியிட்டது. இதன்படி, தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு, 7,874 கோடி ரூபாய், கூடுதல் வருவாய் கிடைக்கும்.
இருப்பினும், இந்தக் கட்டண உயர்வில், 1,118.44 கோடி ரூபாயை, தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு மானியமாக வழங்க எனது தலைமையிலான அரசு ஏற்கெனவே ஒப்புதல் அளித்துள்ளது. இதன் அடிப்படையில், தமிழக அரசு தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வழங்க வேண்டிய மொத்த மானியத் தொகை ஆண்டொன்றிற்கு 3554.16 கோடி ரூபாய் ஆகும்.
தமிழக அரசின் இது போன்ற மக்கள் நலம் காக்கும் நடவடிக்கையின் மூலம், ஏழை, எளிய மக்கள் அடையும் பயன்களை நான் இங்கே எடுத்துக் கூற கடமைப்பட்டிருக்கிறேன்.
1. குடிசைகளுக்கான மின் கட்டணத்தை யூனிட் ஒன்றிற்கு 2 ரூபாய் 50 பைசா என்று கணக்கிடப்பட்டு, மாதம் ஒன்றுக்கு கட்டணம் 60 ரூபாய் என்றும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்துள்ளது. இதனை தமிழக அரசே முழுமையாக ஏற்றுக் கொள்கிறது. இதன் மூலம், 14 லட்சம் நுகர்வோர் பயன் பெறுவர்.
2. விவசாயத்திற்கான மின் கட்டணத்தை குதிரைத் திறன் ஒன்றிற்கு ஆண்டொன்றுக்கு 250/- ரூபாயிலிருந்து 1750/- ரூபாயாக மாற்றி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்தக் கட்டணம் முழுவதையும் அரசே ஏற்றுக் கொள்ளும். இதன் மூலம் விவசாயிகள் மின் கட்டணம் ஏதும் செலுத்தாமலேயே மின்சாரத்தை தொடர்ந்து பெற்று வருவார்கள்.
3. இரு மாதங்களில் 100 யூனிட்டுகள் வரை உபயோகப்படுத்தும் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்த விலையான யூனிட் ஒன்றிற்கு 2 ரூபாய் 60 பைசாவில், 1 ரூபாய் 50 பைசாவை தமிழக அரசு மானியமாக அளிக்கும் என ஏற்கெனவே ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. எனவே, பயனீட்டாளர்கள் செலுத்த வேண்டிய தொகை யூனிட் ஒன்றுக்கு 1 ரூபாய் 10 பைசா மட்டுமே.
4. இதே போன்று, இரு மாதங்களில் 200 யூனிட்டுகள் வரை பயன்படுத்தும் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்த விலையான யூனிட் ஒன்றிற்கு 2 ரூபாய் 80 பைசாவில், 1 ரூபாயை தமிழக அரசு மானியமாக வழங்க ஒப்புக் கொண்டுள்ளதால்; பயனீட்டாளர்கள் செலுத்த வேண்டிய தொகை யூனிட் ஒன்றுக்கு 1 ரூபாய் 80 பைசா மட்டுமே.
5. இரு மாதங்களில் 500 யூனிட்டுகள் வரை பயன்படுத்தும் வீட்டு மின் பயனீட்டாளர்களுக்கு, 201 முதல் 500 யூனிட்டுகளுக்கான மின் கட்டணத்தில், யூனிட் ஒன்றுக்கு 50 காசு மானியத்தை தமிழக அரசு வழங்க ஒப்புக் கொண்டுள்ளது.
6. வழிபாட்டுத் தலங்கள், விசைத் தறிகள் ஆகியவற்றிற்கான மானியங்களும் தொடர்ந்து அளிக்கப்படும்.
7. இவையன்றி, 500 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தும் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு அரசு தனியே மானியம் வழங்கவில்லை என்றாலும், மின் உற்பத்தி செலவை விட குறைவான கட்டணமே அவர்களுக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட இந்த கட்டண உயர்விற்கு பின்னரும், வெளி மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழ்நாட்டில் மின் கட்டணம் குறைவாகவே உள்ளது.
உதாரணமாக கர்நாடகாவில் இரண்டு மாதங்களில் 100 யூனிட் வரை உபயோகிப்பவர்கள் யூனிட் ஒன்றிற்கு சராசரியாக 2 ரூபாய் 59 காசும்; ஆந்திராவில் 2 ரூபாய் 3 காசும்; கேரளாவில் 1 ரூபாய் 30 காசும்; மேற்கு வங்காளத்தில் 3 ரூபாய்
55 காசும்; மகாராஷ்டிராவில் 2 ரூபாய் 47 காசும்; குஜராத்தில் 2 ரூபாய் 55 காசும்; உத்தரபிரதேசத்தில் 3 ரூபாய் 45 காசும் செலுத்தி வருகிறார்கள். ஆனால் இந்த கட்டண மாற்றத்திற்குப் பிறகும் தமிழ் நாட்டில் 100 யூனிட்டுகள் வரை பயன்படுத்துவோர் செலுத்த வேண்டிய கட்டணம் யூனிட் ஒன்றிற்கு 1 ரூபாய் 10 காசு மட்டுமே.
இதே போன்று, இரண்டு மாதங்களில் 200 யூனிட்கள் வரை உபயோகிப்பவர்களை ஒப்பிடும் போது; ஆந்திராவில் யூனிட் ஒன்றிற்கு சராசரியாக 2 ரூபாய் 81 காசும்; கர்நாடகாவில் 2 ரூபாய் 92 காசும்; மேற்கு வங்காளத்தில் 4 ரூபாய் 4 காசும்; மகாராஷ்டிராவில் 2 ரூபாய் 47 காசும்; குஜராத்தில் 2 ரூபாய் 85 காசும்; உத்திரபிரதேசத்தில் 3 ரூபாய் 45 காசும் செலுத்தி வருகிறார்கள். ஆனால் தமிழகத்தில் புதிய கட்டண விகிதப்படி, 200 யூனிட்டுகள் வரை பயன்படுத்துவோர் செலுத்த வேண்டிய கட்டணம் யூனிட் ஒன்றிற்கு 1 ரூபாய் 80 காசு மட்டுமே.
எனினும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மின் கட்டணங்கள் ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்துகிறது என்றும்; எனவே கட்டணங்களை குறைக்க வேண்டும் என்றும், பொது மக்களிடமிருந்து கோரிக்கைகள் வரப் பெற்றுள்ளன.
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்துள்ள கட்டணங்களை குறைக்க தமிழக அரசுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என்றாலும், ஏழை, எளிய மக்களின் சுமையை மேலும் குறைக்கும் வண்ணம், வீட்டு மின் பயனீட்டாளர்கள் செலுத்த வேண்டிய கட்டணங்களை குறைக்கவும்; அதற்காக தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு கூடுதல் மானியம் வழங்கி, அந்தச் சுமையை தமிழக அரசே ஏற்றுக் கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி,
1. இரு மாதங்களில் 100 யூனிட்டுகள் வரை உபயோகப்படுத்தும் வீட்டு மின் பயனீட்டாளர்கள் செலுத்த வேண்டிய மின் கட்டணம் யூனிட் ஒன்றிற்கு 1 ரூபாய் 10 பைசாவில் இருந்து 1 ரூபாயாக குறைக்கப்படும்.
2. இரு மாதங்களில் 200 யூனிட்டுகள் வரை உபயோகப்படுத்தும் வீட்டு மின் பயனீட்டாளர்கள் செலுத்த வேண்டிய மின் கட்டணம் யூனிட் ஒன்றிற்கு 1 ரூபாய் 80 பைசாவில் இருந்து 1 ரூபாய் 50 பைசாவாக குறைக்கப்படும்.
3. இரு மாதங்களில் 201 யூனிட் முதல் 500 யூனிட் வரை உபயோகப்படுத்தும் வீட்டு மின் பயனீட்டாளர்கள் செலுத்த வேண்டிய மின் கட்டணம், முதல் 200 யூனிட்டுகளுக்கு 3 ரூபாயிலிருந்து 2 ரூபாய் என்றும்; 201 யூனிட் முதல் 500 யூனிட் வரையிலான கட்டணம் 3 ரூபாய் 50 பைசாவிலிருந்து 3 ரூபாய் என்றும் குறைக்கப்படும்.
எனது தலைமையிலான அரசின் இந்த மக்கள் நலன் காக்கும் நடவடிக்கை மூலம், 740 கோடி ரூபாய் மானியத்தை தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு எனது தலைமையிலான அரசு கூடுதலாக வழங்கும். இதனையடுத்து, இந்த ஆண்டு வழங்கப்பட வேண்டிய மானியத் தொகை மிக உயர் அளவான 4,294.16 கோடி ரூபாயாக இருக்கும் என்பதையும், இதன் மூலம் 1 கோடியே 50 லட்சம் குடும்பங்கள் பயனடையும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
தினமணி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
என்ன சொல்றாங்க இப்ப தர்ற கொஞ்ச கரன்டையும் குறைக்க போறாங்களா?
அப்ப சொல்லுவீங்க - பாத்தீங்களா மக்களே உங்கள் மாத பில்லை எப்படி குறைத்து விட்டேன்னு.
அப்ப சொல்லுவீங்க - பாத்தீங்களா மக்களே உங்கள் மாத பில்லை எப்படி குறைத்து விட்டேன்னு.
- Sponsored content
Similar topics
» தமிழக எம்எல்ஏ.க்கள் சம்பளம் ரூ.1,05,000 ஆக உயர்வு: சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு
» தமிழகத்தில் 25 புதிய துணை மின் நிலையங்கள்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
» 200 யூனிட் வரை மின் கட்டணம் இலவசம்: 201 முதல் 400 வரை 50% மானியம்...டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் அறிவிப்பு
» கணக்கீட்டை சொல்லி அரசு தப்பிக்க முடியாது மின் கட்டணத்தில் நடந்திருப்பது கொள்ளைதான்: கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு
» தமிழகத்தில் காஸ் விலை குறைப்பு: முதல்வர்
» தமிழகத்தில் 25 புதிய துணை மின் நிலையங்கள்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
» 200 யூனிட் வரை மின் கட்டணம் இலவசம்: 201 முதல் 400 வரை 50% மானியம்...டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் அறிவிப்பு
» கணக்கீட்டை சொல்லி அரசு தப்பிக்க முடியாது மின் கட்டணத்தில் நடந்திருப்பது கொள்ளைதான்: கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு
» தமிழகத்தில் காஸ் விலை குறைப்பு: முதல்வர்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|