புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அண்ணலின் அழகு - பாடல் சொல்லும் பாடம் -  Poll_c10அண்ணலின் அழகு - பாடல் சொல்லும் பாடம் -  Poll_m10அண்ணலின் அழகு - பாடல் சொல்லும் பாடம் -  Poll_c10 
56 Posts - 50%
heezulia
அண்ணலின் அழகு - பாடல் சொல்லும் பாடம் -  Poll_c10அண்ணலின் அழகு - பாடல் சொல்லும் பாடம் -  Poll_m10அண்ணலின் அழகு - பாடல் சொல்லும் பாடம் -  Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
அண்ணலின் அழகு - பாடல் சொல்லும் பாடம் -  Poll_c10அண்ணலின் அழகு - பாடல் சொல்லும் பாடம் -  Poll_m10அண்ணலின் அழகு - பாடல் சொல்லும் பாடம் -  Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
அண்ணலின் அழகு - பாடல் சொல்லும் பாடம் -  Poll_c10அண்ணலின் அழகு - பாடல் சொல்லும் பாடம் -  Poll_m10அண்ணலின் அழகு - பாடல் சொல்லும் பாடம் -  Poll_c10 
3 Posts - 3%
Guna.D
அண்ணலின் அழகு - பாடல் சொல்லும் பாடம் -  Poll_c10அண்ணலின் அழகு - பாடல் சொல்லும் பாடம் -  Poll_m10அண்ணலின் அழகு - பாடல் சொல்லும் பாடம் -  Poll_c10 
1 Post - 1%
Shivanya
அண்ணலின் அழகு - பாடல் சொல்லும் பாடம் -  Poll_c10அண்ணலின் அழகு - பாடல் சொல்லும் பாடம் -  Poll_m10அண்ணலின் அழகு - பாடல் சொல்லும் பாடம் -  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அண்ணலின் அழகு - பாடல் சொல்லும் பாடம் -  Poll_c10அண்ணலின் அழகு - பாடல் சொல்லும் பாடம் -  Poll_m10அண்ணலின் அழகு - பாடல் சொல்லும் பாடம் -  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அண்ணலின் அழகு - பாடல் சொல்லும் பாடம் -  Poll_c10அண்ணலின் அழகு - பாடல் சொல்லும் பாடம் -  Poll_m10அண்ணலின் அழகு - பாடல் சொல்லும் பாடம் -  Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
அண்ணலின் அழகு - பாடல் சொல்லும் பாடம் -  Poll_c10அண்ணலின் அழகு - பாடல் சொல்லும் பாடம் -  Poll_m10அண்ணலின் அழகு - பாடல் சொல்லும் பாடம் -  Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
அண்ணலின் அழகு - பாடல் சொல்லும் பாடம் -  Poll_c10அண்ணலின் அழகு - பாடல் சொல்லும் பாடம் -  Poll_m10அண்ணலின் அழகு - பாடல் சொல்லும் பாடம் -  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
அண்ணலின் அழகு - பாடல் சொல்லும் பாடம் -  Poll_c10அண்ணலின் அழகு - பாடல் சொல்லும் பாடம் -  Poll_m10அண்ணலின் அழகு - பாடல் சொல்லும் பாடம் -  Poll_c10 
12 Posts - 2%
prajai
அண்ணலின் அழகு - பாடல் சொல்லும் பாடம் -  Poll_c10அண்ணலின் அழகு - பாடல் சொல்லும் பாடம் -  Poll_m10அண்ணலின் அழகு - பாடல் சொல்லும் பாடம் -  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அண்ணலின் அழகு - பாடல் சொல்லும் பாடம் -  Poll_c10அண்ணலின் அழகு - பாடல் சொல்லும் பாடம் -  Poll_m10அண்ணலின் அழகு - பாடல் சொல்லும் பாடம் -  Poll_c10 
9 Posts - 2%
Jenila
அண்ணலின் அழகு - பாடல் சொல்லும் பாடம் -  Poll_c10அண்ணலின் அழகு - பாடல் சொல்லும் பாடம் -  Poll_m10அண்ணலின் அழகு - பாடல் சொல்லும் பாடம் -  Poll_c10 
4 Posts - 1%
jairam
அண்ணலின் அழகு - பாடல் சொல்லும் பாடம் -  Poll_c10அண்ணலின் அழகு - பாடல் சொல்லும் பாடம் -  Poll_m10அண்ணலின் அழகு - பாடல் சொல்லும் பாடம் -  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அண்ணலின் அழகு - பாடல் சொல்லும் பாடம் -  Poll_c10அண்ணலின் அழகு - பாடல் சொல்லும் பாடம் -  Poll_m10அண்ணலின் அழகு - பாடல் சொல்லும் பாடம் -  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
அண்ணலின் அழகு - பாடல் சொல்லும் பாடம் -  Poll_c10அண்ணலின் அழகு - பாடல் சொல்லும் பாடம் -  Poll_m10அண்ணலின் அழகு - பாடல் சொல்லும் பாடம் -  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அண்ணலின் அழகு - பாடல் சொல்லும் பாடம் -


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82185
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 12, 2014 5:24 pm

இறைவனை அறிவதும் அடைவதும் ஒரு சிலராலேயே முடியும். அப்படி அறிந்தவர்களில், எல்லோராலும் இறைவனைப் பற்றிச் சொல்லிவிட முடியாது. ஒரு சிலரால் மட்டுமே சொல்ல முடியும். அப்படியே சொன்னாலும் இறைவன் குறித்து முழுமையாகச் சொல்லுதல் என்பது அரிதான ஒன்று!
-
மிகுந்த அனுபவமும், பக்குவமும், தெளிவும், பாண்டித்தியமும், கவித்துவமும், ஞானமும் பெற்றவர்களால் மட்டுமே, தாங்கள் அனுபவித்த தெய்விகத்தை, நமக்குத் தெரிந்த சிலவற்றின் மூலம் கோடிட்டுக் காட்ட முடியும். அதை உணர்ந்து, புரிந்துகொள்ள வேண் டியது நமது பொறுப்பு.
-
அப்படித்தான்... ஆசார்ய புருஷர்களாலும், சித்தர்களாலும் துதிக்கப்பட்ட ஸ்ரீராமனை, மாகவி ஒருவர் துதித்திருக் கிறார். அவரும், ஸ்ரீராமனை முழுவதுமாக துதிக்கமுடியாத தன்னுடைய இயலாமையையே வெளிப்படுத்தி இருக்கிறார்!
முதலில் பாடலைப் பார்ப்போம்.
-
வெய்யோன் ஒளிதன் மேனியின்
விரி சோதியில் மறைய
பொய்யோ எனும் இடையாளொடும்
இளையானொடும் போனான்
மையோ மரகதமோ மறி
கடலோ மழைமுகிலோ
ஐயோ! இவன் வடிவென்பதோர்
அழியா அழகுடையான்.

-
உண்மைதான்! அழியா அழகுடையான் என ராமரை வர்ணித்த இந்தப் பாடலும் அழியா அழகுடையதாகத் திகழ்கிறது. இதை எழுதியவர் கம்பர். ராமர், சீதை, லட்சுமணன் ஆகிய மூவரும் வனவாசத்துக்காக சென்ற காட்சியைத் தன் அகக் கண்களால் தரிசித்து, அப்படியே பாடலாகப் பதிவு செய்திருக்கிறார் கம்பர்.
-
அடிக்கரும்பின் சுவை போல, இந்தப் பாடலும் நிறைவு பெறும் போது, அளவிடமுடியாத பொருட்சுவை கொண்டதாக உள்ளது. அப்படியே நாமும் அனுபவிக்கலாம்.
-
ராமர், சீதை, லட்சுமணன் மூவரும் மரவுறி தரித்துச் செல்கிறார்கள். அப்போது, சூரியன் தன் கதிர்களை விரித்து ஒளிமயமாக உலா வரத் தொடங்குகிறான். ஆனால், ராமரின் திருமேனியில் இருந்து வெளிப் பட்ட ஒளி வெள்ளத்தின் முன்னால், அந்தச் சூரியனே ஒளி மங்கிக் காணப்படுகின்றானாம். ராமரின் பின்னால் மெலிந்த இடை கொண்டவளாக இருக்கிறதா, இல்லையா எனும்படியான இடைகொண்டவளாக, சீதாதேவி செல்கிறாள். அடுத்து, தொண்டு செய்வதில் இளைக்காதவரான இளையவர் லட்சுமணன் செல்கிறார்.
-
இவ்வாறு, பாடலின் முற்பகுதியில் ராமரைப் பற்றி விரிவாக வர்ணித்து, கூடவே ஒருசில வார்த்தைகளால் மட்டுமே சீதையையும் லட்சு மணனையும் வர்ணித்த கம்பர், பாடலின் பிற்பகுதியில் மறுபடியும் ராமதரிசனம் செய்து வைக்கப் புறப்பட்டுவிட்டார்.

-அண்ணலின் அழகு - பாடல் சொல்லும் பாடம் -  VWFSpBvgSxa52KjOzI1i+p72
-
மேனியின் விரிசோதி என்றவர்... மேலும், மையோ, மரகதமோ, மறிகடலோ, மழை முகிலோ என நான்கு விதமாகச் சொல்லிப் பூரிக்கிறார். அபூர்வமான சொற்பிரயோகங்கள் இவை.
முதலில், மையோ...
-
தன் தேஜஸால் சூரியனையே ஒளி மங்கச் செய்த, அப்படிப்பட்ட ராமரை எளியவர்களால் நெருங்க முடியுமா?
ஏன் முடியாது? 'அஞ்சன வண்ணன் என் ஆருயிர் நாயகன்’ என்று குகன் நெருங்க வில்லையா?’ ராமர், கண்ணுக்குக் குளுமை (மை) போன்றவர்; யாரும் நெருங்கலாம், ராமரின் அருளைப் பெறலாம்.
-
இவ்வாறு 'மையோ’ என்று வர்ணித்த கம்பருக்கு சந்தேகம் வந்தது. மை, சில தருணங்களில் கண்களை உறுத்தும்; எரிச்சல் உண்டாக்கும். ஆனால், ராமர் அப்படி இல்லையே! உறுத்தாத, எரிச்சலை உண்டாக்காத, குளுமையான ஒளியை வீசும் மரகதமாயிற்றே! ஆகவே, 'மரகதமோ?’ என்கிறார்.
-
அப்போதும் கம்பருக்குத் திருப்தி ஏற்படவில்லை. சந்தேகம் வந்துவிட்டது
-.
'ஆஹா! மரகதம் என்பது... பணக்காரர்கள் மட்டுமே நெருங்கக்கூடியது. ராமர் அப்படி இல்லையே! படகோட்டி முதல் வானரங்கள் வரை ராமரை நெருங்கினார் களே! மேலும், மரகதம் என்பது வெறும் கல்தான். ஆனால் ராமரோ, கல்லையே பெண்ணாக்கியவர் ஆயிற்றே! ஊஹும்! இது சரிப்பட்டு வராது. கல் எங்கே? கருணைக் கடலான ராமர் எங்கே?’ என்று கருதியவர், 'ராமரின் கருணையை அளவிடவும் முடியாது, ஆழங்காணவும் முடியாது’ என்பதை விளக்க, 'மறிகடலோ’ என, ராமரைக் கடலாகக் கூறிக் கம்பர் ஆனந்தப்பட்டார்.
அதற்கும் ஒரு தடை வந்தது!
-
கடல் உப்பு நீரால் நிறைந்தது. ஸ்ரீராமர் இனிமையானவர் ஆயிற்றே! கடல், தேடிப்போய் உதவி செய்யாது; ராமரோ நாடிப் போய் நலம் செய்பவர். ஆகவே, கடலையும் ராமருக்கு இணையாகச் சொல்லக்கூடாது. 'ராமன், அடியார்கள் தன்னைத் தேடி வர வேண்டும் என்று இல்லாமல், அவர்கள் இருக்கும் இடம் நாடிப் போய் அருள்மழை பொழிபவன். கருணை மழை பொழியும் கார்மேகம்...’ என்பதை
விளக்க, 'மழை முகிலோ...’ என்கிறார் கம்பர்.
அப்படியும் கம்பருக்குப் பிரச்னை வருகிறது.
-
'அடடா! மழைமேகம் என்று ராமரைச் சொல்லிவிட்டேனே! மழை மேகம் என்பது உண்மைதான். அது மழை பொழிவதும் உண்மைதான். ஆனால், கார்மேகம் மழை பொழிந்ததும் வெளுத்துப் போய்க் களை இழந்துவிடு்ம். ராமன் அப்படி இல்லையே! ராமனின் கருணை மழைக்கு அளவேது? அவர், என்றுமே கருணை மழை பொழியும் கார் மேகமாயிற்றே! ஆகையால் ராமரை, மழை முகிலாகவும் சொல்ல முடியாது’ என்று கம்பர் திகைத்துப்போய் விடுகிறார்
-
எனவேதான், 'இந்த ராமனின் வடிவழகு அழியா அழகுடையது. அதை நான் எவ்வாறு வர்ணிப்பேன்’ என்று கருதியவர், 'ஐயோ! இவன் வடிவென்பதோர் அழியா அழகுடையான்’ எனப் பாடலை முடிக்கிறார். அவர் சொல்லும் 'ஐயோ’ வை 'அய்... யோ!’ எனச் சொல்லி உச்சரிக்கவேண்டும்.
-
அப்போதுதான் கம்பரின் உள்ளமும் கவித்துவமும் புரியும்.
-
தெய்வ அருளும், கவித்துவமும், பக்குவமும் பெற்ற கம்பரே,
தெய்வத்தை வர்ணிக்க முயன்று தோற்றுப் போயிருக்கிறார் என்றால்... ஏதோ ஓரிரு நூல்களைப் படித்துவிட்டு, 'எனக்குத்தான் தெய்வம் சொந்தம். மற்ற யாரையும் நான் ஒப்புக்கொள்ள முடியாது. எனக்கு மட்டும்தான் எல்லாம் தெரியும்...’ என்பவர்களை என்ன சொல்வது?
-
>பி.என்.பரசுராமன்
நன்றி: சக்தி விகடன்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக