புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீதிமன்றங்களிடமிருந்து சான்றிதழ் பெற்ற கருணாநிதிக்கு விருதுகள் எதற்காக? Poll_c10நீதிமன்றங்களிடமிருந்து சான்றிதழ் பெற்ற கருணாநிதிக்கு விருதுகள் எதற்காக? Poll_m10நீதிமன்றங்களிடமிருந்து சான்றிதழ் பெற்ற கருணாநிதிக்கு விருதுகள் எதற்காக? Poll_c10 
21 Posts - 66%
heezulia
நீதிமன்றங்களிடமிருந்து சான்றிதழ் பெற்ற கருணாநிதிக்கு விருதுகள் எதற்காக? Poll_c10நீதிமன்றங்களிடமிருந்து சான்றிதழ் பெற்ற கருணாநிதிக்கு விருதுகள் எதற்காக? Poll_m10நீதிமன்றங்களிடமிருந்து சான்றிதழ் பெற்ற கருணாநிதிக்கு விருதுகள் எதற்காக? Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீதிமன்றங்களிடமிருந்து சான்றிதழ் பெற்ற கருணாநிதிக்கு விருதுகள் எதற்காக? Poll_c10நீதிமன்றங்களிடமிருந்து சான்றிதழ் பெற்ற கருணாநிதிக்கு விருதுகள் எதற்காக? Poll_m10நீதிமன்றங்களிடமிருந்து சான்றிதழ் பெற்ற கருணாநிதிக்கு விருதுகள் எதற்காக? Poll_c10 
63 Posts - 64%
heezulia
நீதிமன்றங்களிடமிருந்து சான்றிதழ் பெற்ற கருணாநிதிக்கு விருதுகள் எதற்காக? Poll_c10நீதிமன்றங்களிடமிருந்து சான்றிதழ் பெற்ற கருணாநிதிக்கு விருதுகள் எதற்காக? Poll_m10நீதிமன்றங்களிடமிருந்து சான்றிதழ் பெற்ற கருணாநிதிக்கு விருதுகள் எதற்காக? Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
நீதிமன்றங்களிடமிருந்து சான்றிதழ் பெற்ற கருணாநிதிக்கு விருதுகள் எதற்காக? Poll_c10நீதிமன்றங்களிடமிருந்து சான்றிதழ் பெற்ற கருணாநிதிக்கு விருதுகள் எதற்காக? Poll_m10நீதிமன்றங்களிடமிருந்து சான்றிதழ் பெற்ற கருணாநிதிக்கு விருதுகள் எதற்காக? Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
நீதிமன்றங்களிடமிருந்து சான்றிதழ் பெற்ற கருணாநிதிக்கு விருதுகள் எதற்காக? Poll_c10நீதிமன்றங்களிடமிருந்து சான்றிதழ் பெற்ற கருணாநிதிக்கு விருதுகள் எதற்காக? Poll_m10நீதிமன்றங்களிடமிருந்து சான்றிதழ் பெற்ற கருணாநிதிக்கு விருதுகள் எதற்காக? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீதிமன்றங்களிடமிருந்து சான்றிதழ் பெற்ற கருணாநிதிக்கு விருதுகள் எதற்காக?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 04, 2009 8:35 pm

நீதிமன்றங்களிடமிருந்து சான்றிதழ் பெற்ற கருணாநிதிக்கு விருதுகள் எதற்காக? ஜெயலலித சரமாரி குற்றச்சாட்டு


நீதிமன்றங்களிடம் இருந்து சான்றிதழ் பெற்ற கருணாநிதிக்கு விருதுகள் எதற்காக என்றும், சினிமா விருதுகள் வழங்கியதில் அரசியல் தலையீடுகள் இருப்பதாகவும் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா சரமாரி குற்றம்சாட்டியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:_


பிறரை வற்புறுத்தி தனக்குப் பாராட்டு விழா எடுக்கச் சொல்லுவது துதிபாடிகள் மத்தியில் உலா வருவது, தன்னையும், தன் குடும்ப உறுப்பினர்களையும் புகழ் பாடுபடுபவர்களை வைத்து பட்டிமன்றம் நடத்தச்சொல்லி புளகாங்கிதம் அடைவது, தனக்குத்தானே விருதுகளை அளித்துக்கொள்வது ஆகியவற்றை வாடிக்கையாகக் கொண்டிருப்பவர் மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதி. இதை தன்னுடைய பல நடவடிக்கைகளின் மூலம் நிரூபித்திருக்கிறார்.

பேரறிஞர் பெருந்தகை அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவினையொட்டி, அண்ணாவின் உருவம் பொறித்த 500 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்ட போதுகூட, அண்ணாவின் படத்தைவிட கருணாநிதி, மு.க.ஸ்டாலின், கனிமொழி, தயாநிதிமாறன் ஆகியோரின் பதாகைகள் தான் வழிநெடுகிலும் காணப்பட்டன.

அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவினையொட்டி நடைபெற்ற பட்டிமன்றத்திலும் சரி, காஞ்சிபுரத்தில் நடைபெற்ற விழாவிலும் சரி, அண்ணாவின் கொள்கைகளையும், பெருமைகளையும், புகழையும் போற்றுவதற்கு பதிலாக, கருணாநிதியையும், அவரது குடும்பத்தினரையும் மனம் குளிர வைக்கும் பேச்சுக்கள் தான் ஓங்கி ஒளித்தன. அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவா? அல்லது கருணாநிதியையும், அவரது குடும்பத்தினரையும் குளிர வைக்கும் விழாவா? என்று மக்கள் சந்தேகிக்கும் அளவுக்கு நிகழ்ச்சிகள் அமைந்திருந்தன.

இது போதாது என்று தி.மு.க. சார்பில் வழங்கப்படும் 2009_ம் ஆண்டுக்கான அண்ணா விருதுகளையும் தனக்குத்தானே கருணாநிதி பெற்றுக்கொண்டார். ஏற்கனவே 2008_ம் ஆண்டுக்கான பெரியார் விருதை கருணாநிதி பெற்றுக்கொண்டதும், தன் பெயரிலான விருதை தனது மகனுக்குக் கொடுத்து மகிழ்ந்ததையும் அனைவரும் நன்கு அறிவர். கருணாநிதி குடும்பம் தான் தி.மு.க. என்று ஆகிவிட்ட நிலையில், விருதுகள் அவருக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும் அளிக்கப்படுவதில் வியப்பு ஏதுமில்லை.

கட்சி சார்பில் வழங்கப்பட்ட விருதுகள் போதாது என்று தமிழக அரசின் விருதையும் தனக்குத்தானே பெற்றுக்கொண்டிருக்கிறார் கருணாநிதி. அதாவது, தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் திரைப்பட விருதும் இந்த ஆண்டு முதலமைச்சர் கருணாநிதிக்கே வழங்கப்பட்டிருக்கிறது. யாருமே கேட்டிராத, ஓசையற்ற உளியின் ஓசை படத்திற்கு உரையாடல் எழுதியதற்காக சிறந்த உரையாடல் ஆசிரியர் விருது கருணாநிதிக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

பொதுவாக ஒவ்வொரு துறையிலும் சிறப்பாக பணியாற்றுபவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு மத்திய, மாநில அரசுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் விருதுகளை வழங்கி அவர்களை கவுரவிக்கின்றன. அந்த வகையில் கலைத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு திரைப்பட விருதுகள், வீர தீர செயல்களில் சிறந்த விளங்குபவர்களுக்கு கல்பனா சாவ்லா விருது ஆகியவை மாநில அரசால் வழங்கப்படுகிறது. அதேபோல் பாரத் ரத்னா, பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண் போன்ற விருதுகளை மத்திய அரசு வழங்குகிறது. நோபல் பரிசு, ஆஸ்கார் விருதுகள் சர்வதேச அளவில் வழங்கப்படுகின்றன. விருதை வழங்கும் இடத்தில் இருக்கும் ஒரு மாநில முதலமைச்சரே, தனது தலைமையிலான மாநில அரசு வழங்கும் விருதைப் பெற்றுக்கொள்வது மரபு மீறிய செயல் உலகத்திலேயே இதுவரை யாரும் கடைபிடித்திராத நடைமுறை முறையற்ற செயல் இதை விட வெட்கக்கேடான செயல் எதுவும் இருக்க முடியாது.. இந்த ஆண்டு தமிழக அரசின் சிறந்த உரையாடல் ஆசிரியர் விருதை தனக்குப் பெற்றுக்கொண்டிருக்கிறார் முதலமைச்சர் கருணாநிதி.

அடுத்த ஆண்டு தன்னுடைய ஆட்சியின் கடைசி ஆண்டு என்பதால், தனது மகன், மகள், பேரன், பேத்திகள் என குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் திரைப்படங்களில் ஏதாவது ஒரு துறையில் நுழைத்து அவர்கள் பெரிய சாதனை புரிந்ததாக விளம்பரப்படுத்தி, கருணாநிதி குடும்பத்திற்குத்தான் விருதுகள் வழங்குவதில் கூட அரசியல் தலையீடு இருக்கிறது என்பதை கருணாநிதி தன்னுடைய நடவடிக்கையின் மூலம் நிரூபித்து இருக்கிறார்.

கடுமையான மின்வெட்டு, விண்ணை முட்டும் விலைவாசி, உயர்வு, தினம் கொலை, கொள்ளை, மணல் கொள்ளை, அரிசி கடத்தல் ஆகியவற்றை நிகழ்த்திக் கொண்டிருப்பதற்காக கருணாநிதிக்கு உலகச் சாதனையாளர் விருது வேறு.

உயர் நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தை விட ஒரு நடுநிலையான அமைப்பு இந்தியாவில் எதுவும் கிடையாது. அப்படிப்பட்ட நீதிமன்றங்களிடம் இருந்தே பல சான்றிதழ்களை பெற்றவர் கருணாநிதி. உள்ளாட்சித் தேர்தலை நடத்தி சாதனை புரிந்ததற்கு சான்றிதழ், சட்டக்கல்லூரி மாணவர்கள் மோதலை வேடிக்கைப் பார்த்து சாதனை புரிந்ததற்கு சான்றிதழ் நீதிமன்றத்திற்குள் புகுந்து நீதிபதிகளையும், வழக்கறிஞர்களையும், பொதுமக்களையும் தாக்கியதற்கு சான்றிதழ், பந்த் நடத்தியதற்காக சான்றிதழ் என பல சான்றிதழ்களை அடுக்கிக் கொண்டே போகலாம். எந்த முதலமைச்சரும் நிகழ்த்திக் காட்டியிராத சாதனைகளை நிகழ்த்திக் காட்டியதற்காகத் தானே நீதிமன்றங்கள் கருணாநிதிக்கு சான்றிதழ்கள் வழங்கியுள்ளன. இப்படி நீதிமன்றங்களிடம் இருந்தே சான்றிதழ்களை பெற்ற கருணாநிதிக்கு விருதுகள் எதற்காக? எனவே தமிழக அவசின் சார்பில் அளிக்கப்படும் விருதை பெறாமல் இருப்பதுதான் கருணாநிதிக்கு அழகு.

ஆட்சி அதிகாரத்தை தனக்கும், தன் குடும்ப உறுப்பினர்களுக்கும் சாதகமாக பயன்படுத்திக்கொள்வதற்கென்றே ஓர் ஆட்சி இந்தியாவில் நடைபெறுகிறது என்றால் அது தமிழகத்தில் நடைபெறும் மைனாரிட்டி தி.மு.க. ஆட்சிதான். கருணாநிதியும், அவரது குடும்பத்தினரும் அனைவரது உரிமைகளையும் அபகரித்துக்கொண்டிருக்கிறார்கள். தமிழர்களோ அனைத்து உரிமைகளையும் இழந்துகொண்டிருக்கிறார்கள் இதுதான் இன்றைய தமிழகத்தின் நிலைமை.

எல்லாவற்றிலும் தனக்கும், தன் குடும்பத்தினருக்கும் பங்கு வேண்டும் என்ற சுயநலப் போக்கை கடைபிடிக்காமல், நதிநீர்ப் பிரச்சினைகள், விஷம் போல் ஏறிக்கொண்டிருக்கும் விலைவாசி உயர்வு, கடுமையான மின்சார வெட்டு, தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தினசரி தாக்குதல் ஆகியவற்றில் தன்னுடைய கவனத்தை செலுத்தி, தமிழர்களின் துயர்களை துடைக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பில் மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதியே வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.



நீதிமன்றங்களிடமிருந்து சான்றிதழ் பெற்ற கருணாநிதிக்கு விருதுகள் எதற்காக? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மகாமுனி
மகாமுனி
பண்பாளர்

பதிவுகள் : 174
இணைந்தது : 02/10/2009
http://environews.blogspot.com

Postமகாமுனி Sun Oct 04, 2009 8:41 pm

அண்ணா 'இருவர்' படம் பார்த்தீர்களா அதிலே கருணாநிதி பாத்திரத்திலே ஓரிடத்தில், பொது மேடையில் அண்ணாவிடம் மோதிரம் கொடுத்து பொது மக்கள் முன்னிலையில் தனக்கு அணிவிக்குமாறு கேட்டுக் கொள்வர். அந்தப் பழக்கம் ஒரு போதும் விட்டு விடாது. சரிதானே அண்ணா?

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக