புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வளர் இளம் பருவம்  Poll_c10வளர் இளம் பருவம்  Poll_m10வளர் இளம் பருவம்  Poll_c10 
56 Posts - 50%
heezulia
வளர் இளம் பருவம்  Poll_c10வளர் இளம் பருவம்  Poll_m10வளர் இளம் பருவம்  Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
வளர் இளம் பருவம்  Poll_c10வளர் இளம் பருவம்  Poll_m10வளர் இளம் பருவம்  Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
வளர் இளம் பருவம்  Poll_c10வளர் இளம் பருவம்  Poll_m10வளர் இளம் பருவம்  Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
வளர் இளம் பருவம்  Poll_c10வளர் இளம் பருவம்  Poll_m10வளர் இளம் பருவம்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
வளர் இளம் பருவம்  Poll_c10வளர் இளம் பருவம்  Poll_m10வளர் இளம் பருவம்  Poll_c10 
1 Post - 1%
Shivanya
வளர் இளம் பருவம்  Poll_c10வளர் இளம் பருவம்  Poll_m10வளர் இளம் பருவம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வளர் இளம் பருவம்  Poll_c10வளர் இளம் பருவம்  Poll_m10வளர் இளம் பருவம்  Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
வளர் இளம் பருவம்  Poll_c10வளர் இளம் பருவம்  Poll_m10வளர் இளம் பருவம்  Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
வளர் இளம் பருவம்  Poll_c10வளர் இளம் பருவம்  Poll_m10வளர் இளம் பருவம்  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
வளர் இளம் பருவம்  Poll_c10வளர் இளம் பருவம்  Poll_m10வளர் இளம் பருவம்  Poll_c10 
12 Posts - 2%
prajai
வளர் இளம் பருவம்  Poll_c10வளர் இளம் பருவம்  Poll_m10வளர் இளம் பருவம்  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
வளர் இளம் பருவம்  Poll_c10வளர் இளம் பருவம்  Poll_m10வளர் இளம் பருவம்  Poll_c10 
9 Posts - 2%
jairam
வளர் இளம் பருவம்  Poll_c10வளர் இளம் பருவம்  Poll_m10வளர் இளம் பருவம்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வளர் இளம் பருவம்  Poll_c10வளர் இளம் பருவம்  Poll_m10வளர் இளம் பருவம்  Poll_c10 
4 Posts - 1%
Jenila
வளர் இளம் பருவம்  Poll_c10வளர் இளம் பருவம்  Poll_m10வளர் இளம் பருவம்  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
வளர் இளம் பருவம்  Poll_c10வளர் இளம் பருவம்  Poll_m10வளர் இளம் பருவம்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வளர் இளம் பருவம்


   
   

Page 1 of 2 1, 2  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Apr 09, 2012 9:12 pm

மனித வாழ்க்கையின் பருவ அடுக்குகளில் முக்கியமானது, நுட்பமானது, சிக்கலானது வளர்இளம் பருவம். ஒரு நபர் படைப்பாளியாக, அல்லது நல்ல வாசகராக மாறவும், அரசியல் பார்வை பெறுவது, தன் முன்பான சமூகத்தை விமர்சனம் செய்வது, பாலியல் ஈர்ப்புகளுக்கு ஆளாவதும் என எல்லாமும் இந்த வளர்இளம் பருவத்தில்தான் உருவாகின்றன.

இதைச் சொல்லக் காரணம் இருக்கிறது. அண்மையில் தருமபுரியில் உள்ள சில அரசு மேனிலைப் பள்ளிகளில் நடைபெற்ற சம்பவங்களும், சென்னையில் மாநகராட்சிப் பள்ளியைச் சேர்ந்த ஒரு மாணவி கொலை மற்றும் 5 மாணவர்கள் கைது என்கிற செய்தியும், இன்றைய வளர்இளம் பருவத்தினரை பள்ளிகள் எவ்வாறு கண்காணிக்கவும், வழிநடத்தவும் வேண்டும் என்கிற அவசியத்தை வலியுறுத்துகின்றன.

தருமபுரியில் உள்ள அரசு மேனிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து வந்து படிப்பவர்கள். இந்த மாணவர்களில் சிலர் தொடர்ந்து ஒவ்வொரு மாதத்திலும் நான்கு நாள் விடுப்பில் சென்றபோது, அந்த விடுப்பு நாள்கள் அனைத்தும் முகூர்த்த நாள்களாக இருந்திருக்கின்றன. அதைக் கவனித்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் இந்த மாணவர்களை அழைத்து விசாரித்தபோது உண்மை தெரியவந்தது.

இந்த மாணவர்கள் முகூர்த்த நாள்களில் பள்ளிக்கு வருவதுபோல வீட்டிலிருந்து கிளம்பினாலும், பள்ளிக்கு வராமல் கல்யாண மண்டபங்களில் சாப்பாடு பரிமாறுதல் மற்றும் சமையலுக்கு உதவி செய்யும் வேலைக்குச் செல்வதும் இதன் மூலம் கிடைக்கும் வருவாயைத் தங்கள் விருப்பம் போல செலவிடுவதையும் ஒப்புக் கொண்டனர்.

இந்த மாணவர்கள் அனைவரும் 14 வயதுக்கு மேற்பட்டவர்கள். இவர்களைக் குழந்தைத் தொழில் ஒழிப்பு சட்டத்தின்கீழ் கட்டுப்படுத்த வழியில்லை. தனியார் பள்ளிகளைப் போல, ஒரு நாள் விடுப்பு எடுத்தாலும் "அப்பா-அம்மாவை அழைத்து வா' என்று கண்டிப்புக் காட்டவும் முடியாது. ஏனென்றால், இந்த மாணவர்கள் ஒரேயடியாகப் பள்ளிக்கு வராமல் நின்றுவிடுவார்கள். அரசுப் பள்ளியில் மாணவர் எண்ணிக்கையை குறையாமல் பாதுகாக்க வேண்டிய நிர்பந்தமும் தலைமையாசிரியர்களுக்கு இருக்கிறது.

இந்த மாணவர்கள் உழைப்பது சரிதான். ஆனால், அந்த ஊதியத்தை என்ன செய்கிறார்கள் என்பதுதான் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. ஒவ்வொரு கல்யாணத்திலும் குறைந்தது ரூ. 200 ஊதியமும் நல்ல உணவும் கிடைக்கிறது. சில பெரிய வீட்டுத் திருமணங்கள் என்றால் டிப்ஸ் என்ற பெயரில் மேலும் சில நூறு ரூபாய்கள் கிடைக்கும்.இவை அனைத்தையும் இவர்கள் சினிமா பார்க்கவும், புகை, மற்றும் மதுபானத்துக்குச் செலவழிப்பது பாதி என்றால், பாதிப் பணம் இவர்களது செல்போன்களுக்கு "டாப்-அப்' செய்வதிலும், தங்கள் சக மாணவிகளுடன் உரையாடுவதற்காக அவர்களது செல்போனுக்கு "டாப்-அப்' செய்வதிலும்தான் செலவாகிறது என்பது மாணவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது ஏதோ அரசுப் பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு மட்டுமே உரித்தான பிரச்னை என்றும் கருதிவிட முடியாது. நகர்ப்புறத்தில் உயர்தரக் குடிமக்கள் பயிலும் பள்ளிகளிலும் இதே சிக்கல் வெவ்வேறு பரிமாணத்தில் இருக்கின்றது.

தங்கள் செலவுக்காகத் தாங்களே உழைத்து சம்பாதிக்கும் மனப்போக்கு மிகவும் ஆரோக்கியமானதுதான். ஆனால், அந்த உழைப்பின் வலி தெரியாமல், அதை மதுவுக்கும் வெட்டி பந்தாவுக்கும் செலவழிப்பதென்பது, ஒரு தலைமுறையை வீணடிப்பதாகவும் சமூகவிரோதிகளாக மாற்றுவதாகவும் இருக்குமெனில் அதைத் தடுத்தாக வேண்டும்.

மாணவர்களை வழிநடத்தவும் கண்காணிக்கவும் முடியாதவர்களாகப் பெற்றோர்கள் தங்கள் வேலைப்பளு மற்றும் வாழ்க்கைச் சுமையால், மனஅழுத்தத்தால் தலை சாய்ந்துக்கிடக்கிறார்கள். இந்த நேரத்தில் வளர்இளம் பருவத்து மாணவர்களை வழிநடத்தக்கூடிய இடம் பள்ளியாக மட்டுமே இருக்கின்றது. மேனிலைப் பள்ளிகளில் இந்த வளர்இளம் பருவத்து மாணவர்களைச் சரியாக வழிகாட்டிவிட முடியுமானால், வாழ்க்கை குறித்த புரிதலை ஏற்படுத்திவிட முடியுமானால், அவர்களது வாழ்க்கைப் பயணம் சரியான திசையில் அமைந்துவிடும்.

பள்ளி தலைமையாசிரியர்களும், வகுப்பு ஆசிரியர்களும் இந்த மாணவர்களின் போக்கு, செயல்பாடுகளைக் கண்டுபிடிப்பது கடினமல்ல. சக மாணவர்களுடன் பேசினாலே போதுமானது. இதற்கான நேரம் ஒதுக்கவும், இவர்களது மனப்போக்குகளைக் கண்டறிந்து, அதில் உள்ள ஆபத்துகளைச் சொல்லி எச்சரித்தாலும்கூட போதுமானது. நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் அதை ஆசிரியர்கள் தங்களது கடமையாகக் கருதிய காலம்போய், மதிப்பெண் பெற்றுக் கொடுப்பது மட்டுமே பள்ளியின் கடன் என்று பணியாற்றத் தொடங்கியதுதான் இந்நிலைமைக்கு தலையாய காரணம்.

ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு மனவள ஆலோசகரை நியமிக்க வேண்டும் என்ற திட்டம் அரசிடம் இருக்கிறது. ஆனால், இதுவரை அந்தத் திட்டம் அமலுக்கு வரவேயில்லை. இன்றைய இளம்தலைமுறை காப்பாற்றப்பட வேண்டுமானால், பள்ளிக்கூடங்கள் மாணவர்களைக் கண்காணித்து நல்வழிப்படுத்தும் குருகுலங்களாகவும் மாற்றம் பெற்றாக வேண்டும். கல்வியாளர்களும் அரசும் இதைப்பற்றி சிந்தித்து வழி காண வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.
நன்றி : தினமணி





வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 09, 2012 9:14 pm

விருப்பம் தெரிவித்துள்ளேன், சாப்பிட்டு வந்து படிக்கிறேன். சூப்பருங்க



வளர் இளம் பருவம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Mon Apr 09, 2012 9:17 pm

ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு மனவள ஆலோசகரை நியமிக்க வேண்டும் என்ற திட்டம் அரசிடம் இருக்கிறது.
இப்படி அமைத்தால் பயனுள்ளதாக இருக்கும்.
நினைத்து பார்த்தால் பெற்றவர்களும் பாவம் என்று தோன்றுகிறது.நம் பிள்ளைக்கு இப்படியெல்லாம் கூட எண்ணம் வரும்....வரக்கூடும் என்பதையே அறிய முடியாமல் நிறைய பேர் இருக்கிறார்கள்.
வீட்டைக் கட்டி பார்....கல்யாணத்தைப் பண்ணி பார்......என்பதோடு பிள்ளையை வளர்த்து பார் என்பதையும் சேர்க்க வேண்டும் போல

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Apr 09, 2012 9:21 pm

சிவா wrote:விருப்பம் தெரிவித்துள்ளேன், சாப்பிட்டு வந்து படிக்கிறேன். சூப்பருங்க
சிரி :நல்வரவு:



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Apr 09, 2012 9:39 pm

இன்றைய மாணவர்கள் பலவித யோசனைகளை செய்து எப்படி தவறிழைக்கலாம் என்று சினிமா இணையம் மற்றும் தொலைக்காட்சி வாயிலாக கற்றுக்கொள்கிறார்கள், இதை சரிசெய்தாலே பாதி தலைவலி தீர்ந்துவிடும். இந்தியாவில் தணிக்கை துறை என்ன செய்துக்கொண்டிருக்கிறது என்று கேள்வி எழுகிறது..

இதுகுறித்து நான் எனது மாணவர்களுடன் ஒரு கலந்தாய்வில் ஈடுபட்ட போது மாணவர்கள் பெரும்பாலான பெற்றோர் மற்றும் சமூகம் அருவருக்க தக்க செயல்களை சினிமா வாயிலாக தான் கற்றுக்கொள்கிறார்கள் என்று பல மாணவர்கள் என்னிடம் சொன்னதை இங்கு நம் நண்பர்களுடன் பகிர்ந்துக்கொள்ள ஆசைபடுகிறேன்.

ஒரு மாணவன் எங்கள் பள்ளியில் இணையத்தில் இருந்து எடுத்த தமன்னா படத்தை ஒரு நோட்டு முழுக்க ஒட்டி வைத்து இணைய வசதி இல்லாத மற்றும் கண்டிப்புள்ள பெற்றோர் உள்ள மாணவனுக்கு 50 ரூபாய்க்கு விற்று அந்த காசில் சுற்றுலா பொருட்காட்சி சென்று அங்கு பொறுக்கி திரிந்ததை நான் கண்டுபிடித்தேன். பிறகு அவனுக்கு புத்திமதி சொன்னாலும், அவன் சொன்ன பதில் என்ன தெரியுமா? சார் இந்த தவறுக்கு வேணும்னா அடிச்சிக்கங்க வேறு தண்டனை வேணும்னாலும் தாங்க ஆனா அந்த டைரி மட்டும் தந்திடுங்க, ஏன்னா அவன் அடுத்த தடவை நோட்டு இல்லாம போனா காசு தரமாட்டான் என்றான். பிறகு அவனிடம் பேசி அவன் குடும்ப சூழலை அவனுக்கு எடுத்து சொல்லி அவன் அப்பாவுக்கு பிறகு அவன் தான் குடும்பத்தை தாங்க வேன்டும் என்று அறிவுரை சொல்லி படிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தினேன். இதை அவன் புரிந்துக்கொள்ள 2 ஆண்டுகள் எடுத்தது... 8ஆம் வகுப்பில் ஆரம்பித்தது இப்ப அவன் 9 முடிக்க போகிறான்.... இதுபோல் இன்னும் நிறைய கேஸ்கள் இருக்கு
அசுரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 09, 2012 9:51 pm

ஆசிரியர்களின் பால் இருந்த மரியாதை குறைந்து கொண்டே வருகிறது - முன்பை விட ஓரளவு.

பாலா சார், அசுரன், ஆதிரா, பிரபு மற்றும் இங்குள்ள நாம் ஆசிரியர்களை காண்கையில் இளைஞர்களின் எதிர்காலம் ஒளிமயமாக தெரிகிறது - உங்களைப் போன்றே பொறுப்புடன் ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க முற்பட்டால் நம் இந்தியா அனைத்து துறைகளிலும் முன்னேறி முன்மாதிரியாகி விடும்.

வாழ்த்துகள் நம் ஆசிரிய நண்பர்களுக்கு. சூப்பருங்க




sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Mon Apr 09, 2012 9:57 pm

சூப்பருங்க அருமையிருக்கு

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Apr 10, 2012 8:02 am

அசுரன் wrote:இன்றைய மாணவர்கள் பலவித யோசனைகளை செய்து எப்படி தவறிழைக்கலாம் என்று சினிமா இணையம் மற்றும் தொலைக்காட்சி வாயிலாக கற்றுக்கொள்கிறார்கள், இதை சரிசெய்தாலே பாதி தலைவலி தீர்ந்துவிடும். இந்தியாவில் தணிக்கை துறை என்ன செய்துக்கொண்டிருக்கிறது என்று கேள்வி எழுகிறது..

இதுகுறித்து நான் எனது மாணவர்களுடன் ஒரு கலந்தாய்வில் ஈடுபட்ட போது மாணவர்கள் பெரும்பாலான பெற்றோர் மற்றும் சமூகம் அருவருக்க தக்க செயல்களை சினிமா வாயிலாக தான் கற்றுக்கொள்கிறார்கள் என்று பல மாணவர்கள் என்னிடம் சொன்னதை இங்கு நம் நண்பர்களுடன் பகிர்ந்துக்கொள்ள ஆசைபடுகிறேன்.

ஒரு மாணவன் எங்கள் பள்ளியில் இணையத்தில் இருந்து எடுத்த தமன்னா படத்தை ஒரு நோட்டு முழுக்க ஒட்டி வைத்து இணைய வசதி இல்லாத மற்றும் கண்டிப்புள்ள பெற்றோர் உள்ள மாணவனுக்கு 50 ரூபாய்க்கு விற்று அந்த காசில் சுற்றுலா பொருட்காட்சி சென்று அங்கு பொறுக்கி திரிந்ததை நான் கண்டுபிடித்தேன். பிறகு அவனுக்கு புத்திமதி சொன்னாலும், அவன் சொன்ன பதில் என்ன தெரியுமா? சார் இந்த தவறுக்கு வேணும்னா அடிச்சிக்கங்க வேறு தண்டனை வேணும்னாலும் தாங்க ஆனா அந்த டைரி மட்டும் தந்திடுங்க, ஏன்னா அவன் அடுத்த தடவை நோட்டு இல்லாம போனா காசு தரமாட்டான் என்றான். பிறகு அவனிடம் பேசி அவன் குடும்ப சூழலை அவனுக்கு எடுத்து சொல்லி அவன் அப்பாவுக்கு பிறகு அவன் தான் குடும்பத்தை தாங்க வேன்டும் என்று அறிவுரை சொல்லி படிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தினேன். இதை அவன் புரிந்துக்கொள்ள 2 ஆண்டுகள் எடுத்தது... 8ஆம் வகுப்பில் ஆரம்பித்தது இப்ப அவன் 9 முடிக்க போகிறான்.... இதுபோல் இன்னும் நிறைய கேஸ்கள் இருக்கு
உங்கள் பள்ளி அனுபவங்களை பகிர்ந்துகொண்டாமைக்கு மிக்க நன்றி அசுரன் !



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Apr 10, 2012 7:11 pm

கொலவெறி wrote:ஆசிரியர்களின் பால் இருந்த மரியாதை குறைந்து கொண்டே வருகிறது - முன்பை விட ஓரளவு.

பாலா சார், அசுரன், ஆதிரா, பிரபு மற்றும் இங்குள்ள நாம் ஆசிரியர்களை காண்கையில் இளைஞர்களின் எதிர்காலம் ஒளிமயமாக தெரிகிறது - உங்களைப் போன்றே பொறுப்புடன் ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க முற்பட்டால் நம் இந்தியா அனைத்து துறைகளிலும் முன்னேறி முன்மாதிரியாகி விடும்.

வாழ்த்துகள் நம் ஆசிரிய நண்பர்களுக்கு. சூப்பருங்க
தங்களின் உயரிய கருத்துக்கு ஏற்றவாறு நடக்க முயற்சிக்கிறேன் ....நன்றி அன்பு மலர்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Apr 10, 2012 7:14 pm

கே. பாலா wrote:
கொலவெறி wrote:ஆசிரியர்களின் பால் இருந்த மரியாதை குறைந்து கொண்டே வருகிறது - முன்பை விட ஓரளவு.

பாலா சார், அசுரன், ஆதிரா, பிரபு மற்றும் இங்குள்ள நாம் ஆசிரியர்களை காண்கையில் இளைஞர்களின் எதிர்காலம் ஒளிமயமாக தெரிகிறது - உங்களைப் போன்றே பொறுப்புடன் ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க முற்பட்டால் நம் இந்தியா அனைத்து துறைகளிலும் முன்னேறி முன்மாதிரியாகி விடும்.

வாழ்த்துகள் நம் ஆசிரிய நண்பர்களுக்கு. சூப்பருங்க
தங்களின் உயரிய கருத்துக்கு ஏற்றவாறு நடக்க முயற்சிக்கிறேன் ....நன்றி அன்பு மலர்
நானும் தங்களின் நம்பிக்கைக்கு ஏற்றவாறு நடப்பேன் என்று உறுதி கூறுகின்றேன் கொ.வெ. ஆமோதித்தல்



வளர் இளம் பருவம்  Aவளர் இளம் பருவம்  Aவளர் இளம் பருவம்  Tவளர் இளம் பருவம்  Hவளர் இளம் பருவம்  Iவளர் இளம் பருவம்  Rவளர் இளம் பருவம்  Aவளர் இளம் பருவம்  Empty
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக