புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:51 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நினைவுத் திறன்: ஓர் அறிவியல் பார்வை! Poll_c10நினைவுத் திறன்: ஓர் அறிவியல் பார்வை! Poll_m10நினைவுத் திறன்: ஓர் அறிவியல் பார்வை! Poll_c10 
127 Posts - 54%
heezulia
நினைவுத் திறன்: ஓர் அறிவியல் பார்வை! Poll_c10நினைவுத் திறன்: ஓர் அறிவியல் பார்வை! Poll_m10நினைவுத் திறன்: ஓர் அறிவியல் பார்வை! Poll_c10 
83 Posts - 35%
T.N.Balasubramanian
நினைவுத் திறன்: ஓர் அறிவியல் பார்வை! Poll_c10நினைவுத் திறன்: ஓர் அறிவியல் பார்வை! Poll_m10நினைவுத் திறன்: ஓர் அறிவியல் பார்வை! Poll_c10 
11 Posts - 5%
mohamed nizamudeen
நினைவுத் திறன்: ஓர் அறிவியல் பார்வை! Poll_c10நினைவுத் திறன்: ஓர் அறிவியல் பார்வை! Poll_m10நினைவுத் திறன்: ஓர் அறிவியல் பார்வை! Poll_c10 
9 Posts - 4%
prajai
நினைவுத் திறன்: ஓர் அறிவியல் பார்வை! Poll_c10நினைவுத் திறன்: ஓர் அறிவியல் பார்வை! Poll_m10நினைவுத் திறன்: ஓர் அறிவியல் பார்வை! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
நினைவுத் திறன்: ஓர் அறிவியல் பார்வை! Poll_c10நினைவுத் திறன்: ஓர் அறிவியல் பார்வை! Poll_m10நினைவுத் திறன்: ஓர் அறிவியல் பார்வை! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நினைவுத் திறன்: ஓர் அறிவியல் பார்வை! Poll_c10நினைவுத் திறன்: ஓர் அறிவியல் பார்வை! Poll_m10நினைவுத் திறன்: ஓர் அறிவியல் பார்வை! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நினைவுத் திறன்: ஓர் அறிவியல் பார்வை!


   
   
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Apr 16, 2012 2:36 pm

நினைவுத் திறன்: ஓர் அறிவியல் பார்வை! Tamil-Daily-News-Paper_74764215947


ஞாபகம் சில பல நாட்களுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்வையோ அல்லது செய்த செயலையோ சரியாக நினைவில் வைத்திருந்து சொல்வது மிகவும் கடினமான ஒன்று. இது ஞாபக மறதிக்காரர்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனால், ஒரு சிலர் இருக்கிறார்கள், முப்பது நாப்பது வருடங்களுக்கு முன்பு நடந்த விஷயங்களை இப்போது கேட்டாலும் மிக துல்லியமாக நினைவு கூர்ந்து இம்மி பிசகாமல் அப்படியே விவரிப்பார்கள். இது நமக்கு பிரமிப்பாக இருக்கும். `உண்மையில் எவ்வளவு விஷயங்களை நம்மால் நினைவில் வைத்துக்கொள்ள முடிகிறது என்பதில் பெரிய விசேஷம் ஒன்றுமில்லை. ஆனால், குறிப்பிட்ட ஒரு விஷயத்தை சரியாக நினைவு கூர்ந்து எப்படி சொல்ல முடிகிறது என்பதுதான் எனக்கு மிகவும் பிரமிப்பாக இருக்கிறது’ என்கிறார் அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழக ஆய்வாளர் பிரைஸ் குல்.
பழைய நினைவுகளுக்கும் புதிய நினைவுகளுக்கும் இடையில் நடக்கும் போட்டிதான் `நினைவுத்திறன்’ என்கிறது அறிவியல். நினைவுத்திறன் குறித்த முழு புரிதல் மற்றும் நினைவுத்திறன் குறைபாட்டினால் ஏற்படும் மூளைக் கோளாறுகள் குறித்து ஆய்வுகள் செய்யும் குல், புதிய நினைவுகளுக்கும் பழைய நினைவுகளுக்கும் இடையிலான போட்டியை ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வுக்காக, குல் மற்றும் அவருடைய ஆய்வுக் குழுவினர் 24 இளங்கலை மாணவர்களைத் தேர்வு செய்து, அவர்களிடம் `ஒரு புகைப்படம் மற்றும் ஒரு வார்த்தை’ சேர்ந்த பல இணைகளை கொடுத்து அவற்றை வரிசையாக நினைவில் வைத்துக்கொள்ளச் சொன்னார்கள். அதன் பிறகு, கடைசியாக கொடுக்கப்பட்ட புகைப்படம், வார்த்தை இணை குறித்து விவரிக்கச் சொன்னார்கள். மாணவர் களுக்கு ஒரு நினைவை உருவாக்க, ஒரு முகம் அல்லது ஒரு பொருள் அல்லது ஒரு காட்சி, இவற்றுக்கு மேலே ஒரு சம்பந்தமில்லாத வார்த்தையை காண்பித்து நினைவில் வைத்துக்கொள்ளச் சொன்னார்கள். உதாரணமாக, அமெரிக்க அரசியல்வாதி `அல் கோரே’வின் புகைப்படத்துக்கு மேலே `நீச்சல்’ எனும் ஒரு வார்த்தை காண்பிக்கப்பட்டது (இது பழைய நினைவு).அதன்பிறகு, நீச்சல் எனும் வார்த்தைக்கு கீழே உள்ள அல் கோரேவின் புகைப்படத்தை நீக்கிவிட்டு அங்கு `க்ராண்ட் கேன்யான்’ எனும் பிரபல இடத்தின் புகைப்படம்/காட்சியை வைத்து நினைவு வைத்துக்கொள்ளச் சொன்னார்கள் (இது புதிய நினைவு). அதன்பிறகு, மூளையை ஸ்கேன் செய்யும் ஒரு ஸ்கேனருடன் மாணவர்களை இணைத்துவிட்டு, நீச்சல் எனும் வார்த்தையை அவர் களுக்கு காண்பித்து அதற்கு கீழே புதிய நினைவில் என்ன புகைப்படம் இருந்தது என்று கேட்டார்கள். மூளையின் குறிப்பிட்ட பாகங்கள் வெவ்வேறு வகையான புகைப்படங்களுக்கு (முகம்/காட்சி/பொருள்) ஏற்றவாறு எதிர்வினை செய்யக் கூடியவை. மூளை ஸ்கேன் தகவல்களை அடிப்படையாக வைத்து, ஒருவர் ஒரு முகத்தை அல்லது ஒரு காட்சியை அல்லது ஒரு பொருளை பார்க்கிறாரா என்பதை அறிய முடியும். மேலும் இந்த விவரத்திலிருந்து ஒருவருடைய புதிய மற்றும் பழைய நினைவுகளின் உறுதியை வரையறுத்துச் சொல்ல முடியும் என்கிறார் குல்.

இந்தப் பரிசோதனையில், ஒருவருடைய பழைய நினைவு தொடர்பான மூளைச் செயல்பாடு அதிகரித்தபோது அவரால் புதிய நினைவை சரியாக நினைவில் வைத்துக்கொள்ள இயலவில்லை என்பது தெரியவந்தது. மேலும், ஒருவர் புதிய நினைவை சரியாக ஞாபகம் வைத்துச் சொன்னபோதும் அவருடைய பழைய நினைவு இடையில் வந்து குறுக்கிட்டது கண்டறியப்பட்டது. ஒருவருடைய பழைய மற்றும் புதிய நினைவு ஆகிய இரண்டின் உறுதியும் சமமாக இருந்தபோது, அவர்கள் ஞாபகம் குறித்த கேள்விக்கான பதிலைச் சொல்ல நிறைய நேரம் எடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஒருவர் தேவையில்லாத ஒரு விஷயத்தை மறக்க முயற்சி செய்கிறார்கள். புதிய நினைவுகளை ஞாபகம் வைத்துக்கொள்ள முயற்சிக்கும்போது, தேவையில்லாத பழைய நினைவுகள் குறுக்கீடு செய்து நினைவுத் திறன் குறைபாடுகளை உருவாக்குகின்றனவா என்கிற சந்தேகம் விஞ்ஞானிகளுக்கு நீண்டகாலமாக இருந்து வருகிறது என்கிறார் பிரவுன் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் ஆய்வாளர் டேவிட் பாத்ரே. ஆனால், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த புதிய ஆய்வு முறையின் மூலம் இந்த நினைவுத் திறன் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண முடியும் என்கிறார் பாத்ரே. நினைவுத் திறன் குறைபாடுகள் இல்லாத, ஆரோக்கியமான இளங்கலை மாணவர்கள் மீதான இந்த ஆய்வு முறையை பயன்படுத்தி, நினைவுத் திறன் குறைபாடுள்ளவர்களின் மூளையில் என்ன நடக்கிறது என்பதை ஆய்வு செய்து அறிந்துகொள்ள முடியும். அதன்மூலம் நினைவுத் திறன் குறைபாடுகளுக்கான ஒரு தீர்வை கண்டறிந்துவிட முடியும் என்பது ஆய்வாளர் குல்லின் நம்பிக்கை. நம்பிக்கைதானே வாழ்க்கை? குல்லின் ஆய்வு முயற்சிகள் விரைவில் வெற்றி பெறட்டும்.

தினகரன்

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Apr 16, 2012 3:52 pm

மறதி என்பது இறைவனின் வரம். பல விஷயங்களுக்கு மறதி இல்லையென்றால் நிம்மதியும் இல்லாமல் போய்விடும்.
முஹைதீன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் முஹைதீன்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Apr 16, 2012 3:53 pm

மறதி என்பது இறைவனின் வரம். பல விஷயங்களுக்கு மறதி இல்லையென்றால் நிம்மதியும் இல்லாமல் போய்விடும்.
ஆமோதித்தல்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Apr 16, 2012 4:21 pm

பகிர்விர்க்கு நன்றி பஹா... அருமையிருக்கு
முஹைதீன் wrote:மறதி என்பது இறைவனின் வரம். பல விஷயங்களுக்கு மறதி இல்லையென்றால் நிம்மதியும் இல்லாமல் போய்விடும்.
ஆமோதித்தல்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக