புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சோமாலியா என்னதான் நடக்கிறது Poll_c10சோமாலியா என்னதான் நடக்கிறது Poll_m10சோமாலியா என்னதான் நடக்கிறது Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
சோமாலியா என்னதான் நடக்கிறது Poll_c10சோமாலியா என்னதான் நடக்கிறது Poll_m10சோமாலியா என்னதான் நடக்கிறது Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
சோமாலியா என்னதான் நடக்கிறது Poll_c10சோமாலியா என்னதான் நடக்கிறது Poll_m10சோமாலியா என்னதான் நடக்கிறது Poll_c10 
11 Posts - 4%
prajai
சோமாலியா என்னதான் நடக்கிறது Poll_c10சோமாலியா என்னதான் நடக்கிறது Poll_m10சோமாலியா என்னதான் நடக்கிறது Poll_c10 
9 Posts - 4%
Jenila
சோமாலியா என்னதான் நடக்கிறது Poll_c10சோமாலியா என்னதான் நடக்கிறது Poll_m10சோமாலியா என்னதான் நடக்கிறது Poll_c10 
4 Posts - 2%
Rutu
சோமாலியா என்னதான் நடக்கிறது Poll_c10சோமாலியா என்னதான் நடக்கிறது Poll_m10சோமாலியா என்னதான் நடக்கிறது Poll_c10 
3 Posts - 1%
Baarushree
சோமாலியா என்னதான் நடக்கிறது Poll_c10சோமாலியா என்னதான் நடக்கிறது Poll_m10சோமாலியா என்னதான் நடக்கிறது Poll_c10 
2 Posts - 1%
Barushree
சோமாலியா என்னதான் நடக்கிறது Poll_c10சோமாலியா என்னதான் நடக்கிறது Poll_m10சோமாலியா என்னதான் நடக்கிறது Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சோமாலியா என்னதான் நடக்கிறது Poll_c10சோமாலியா என்னதான் நடக்கிறது Poll_m10சோமாலியா என்னதான் நடக்கிறது Poll_c10 
2 Posts - 1%
jairam
சோமாலியா என்னதான் நடக்கிறது Poll_c10சோமாலியா என்னதான் நடக்கிறது Poll_m10சோமாலியா என்னதான் நடக்கிறது Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோமாலியா என்னதான் நடக்கிறது


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu May 03, 2012 8:06 pm


வறுமை , பட்டினி ,சாவு எனபதற்க்கு என்றைக்கும் உதாரணமாய் திகழும் அம்மனிதர்கள் செய்யத பாவம் தான் என்ன?உப்பிபெருத்த வயிறு , ஈர்க்கு குச்சிகள் போன்ற கை கால் இவைதான் அம் மண்ணின் மைந்தரின் அடையாளம்.ஆபிரிக்க கண்டத்தின் கொம்பு என வர்ணிக்கப்படும் இத்தேசம் கென்யா , எதியொப்பியா ,டிஜிபோரி ஆகிய நாடுகளை அயல் நாடுகளாகவும் இந்து சமுத்திரம் , ஏடன் வளைகுடா ஆகிய வற்றை மறு எல்லைகளாகவும் கொண்டு விளங்குகின்றது.1960 இல் இதன் ஒருபகுதி இத்தாலி தேசத்திடம் இருந்து பிரிந்து ஆங்கிலேய காலனி ஆதிக்கத்தில் இருந்த மறு பகுதி தேசத்துடன் சேர்ந்து கொண்டது. அதன் பின் 26 ஜூன் 1960 இல் முழுமையான் சுதந்திரம் அடைந்து சோமாலிய சோசலிச குடியரசானது.எனினும் 1969 இல் நடந்த இராணுவ புரட்சி மூலம் மக்கள் ஆட்சி கவிழ்க்கப்பட்டு ஜெனரல் ஷெர்மார்க் அதிபரானார். இதன் மூலம் சோமாலியா புரட்சிகர இராணுவம் உருவாக்ககம் பெற்று அவர்களின் சிறந்த திட்டங்கள் மூலம் மக்களின் அடிப்படை பொருளாதார வளர்ச்சியில் ஒரு குறிப்பிட்தக்களவு வெற்றியும் கண்டனர்.


இவ்வேளையில் தான் சோமாலியாவின் தலைவிதி மாறத்தொடங்கியது தனக்கு தானே மண் அள்ளிபோட்டது போல் வல்லரசு போட்டிக்கு தன்னை பலிக்கடா ஆகியது சோமாலியா.குடியேற்ற காலத்தின் போது சோமாலியாவில் இருந்து பிரிக்கப்பட்டு எதியோப்பாவுடன் இணைக்கப்பட்ட தனது பிரதேசமான ஓக்டெனை மீண்டும் சோமாலியாவோடு இணைக்க வேண்டும் எனும் வேண்டுகோள் சோமாலியாவினால் எதியோபியாவுக்கு விடுக்கப்பட்டது.


எதியோப்பா , கென்யா ஆகிய நாடுகளுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிய எதியோப்பியா மீது போர் தொடுத்தது சோமாலியா.1977 இல் ஆரம்பமான இப்போரை பயன்படுத்தி அன்றைய வல்லரசுகள் (அமெரிக்கா ,சோவியத் யூனியன் -ரஷ்யா ) குளிர்காய சோமாலியாவை தளமாக பயன்படுத்ததொடங்கினர். உலக நாடுகளின் ஆலோசனையை பெறாமல் தன்னிச்சையாக போரில் குதித்ததாக சோமலியாவை உலக நாடுகள பலவும் பகைத்துக்கொள்ள எதியோப்பியாவுக்கு ஆதரவாக சோவியத் யூனியனும் , சோமாலியாவிற்க்கு ஆதரவாக அமெரிக்காவும் செயற்ப்பட இரு வல்லரசுகளின் பனிப்போர் போட்டிக்கு இரையானது எதியோப்பியாவும் சோமாலியாவும்.


தொடர்ச்சியான போர் நாட்டின் பொருளாதாரத்தை கெடுக்க, இராணுவ ஆயுதங்கள் மிக எளிதாக கிடைக்க ஆயுதக்குழுக்கள் பலவும் வகை தொகையின்றி உருவாகின. பனிப்போரின் (அமெரிக்கா - சோவியத் யூனியன் இடையான போட்டி ) முடிவு வரை சோமாலியாவில் அரசியல் நிர்வாகம் இயங்காமலே கிடந்தது அல்லது அமெரிக்கா அதனை இயங்காமல் செய்தது என்பதே உண்மை.


அமெரிக்கவால் ஒரு பொம்மை அரசு உருவாகினாலும் அதனால் ஆயுதகுழுக்களை கட்டுப்படுத்த முடியவில்லை . ஆயுதகுழுக்கள் உணவுக்காக , நீருக்காக என அடிப்படை தேவைகளுக்குக்காக தம்மிடையே சண்டை போடவேண்டிய பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.நாட்டின் ஒவ்வொரு மாவட்டங்களும் , ஒவ்வோரு குறிச்சிகளும் என இந்த ஆயுத குழுக்கள் தம் வசப்படுத்திக் கொண்டு சிற்றரசர்கள் ஆகினர் ஆயுத குழு தலைவர்கள்.


பசி , பட்டினி என இலட்சகணக்கானவர் மாண்டுபோயினர்.அனாலும் சோமாலிலாந்து எனும் ஒரு மாகாணம் மட்டும் தன்னை சோமாலியாவில் இருந்து விடுவித்து கொண்டு தன்னை ஒரு சுதந்திர தேசமாக அறிவித்தது. சோமலியா அதனை ஏற்றுக்கொள்ளாத போதும் சோமாலிலாந்து அதிகார பூர்வமன ஒரு அரசகவே உலக நாடுகள் சில நோக்குகின்றன. சில நாடுகள் சோமாலிலாந்தில் தனது அதிகாரபூர்வ தூதுவராலயங்களையும் கொண்டும் உள்ளன. அனாலும் ஐக்கிய நாடுகள் சபையினால் தனி நாட்டிற்கான அங்கீகாரம் இன்றுவரை கிடைக்கவில்லை.


உலகின் கண்களுக்கு இடியப்ப சிக்கலான பிரச்சனைகளை கொண்ட நாடாக மாற்றிய உலக நாடுகள் ஏன் இன்றுவரை சோமாலியாமீது கரிசனை காட்டாது உள்ளன ?இதன் பின்ண்ணியில் உலக நாடுகளின் நயவஞ்சகம் எப்படி உள்ளது.இவற்றிக்கு இப்பொழுது நாம் விடை தேடுவோம் ........


ஆம் இதன் அமைவிடத்தை நன்றாகவே பயன்படுத்திய உலக வல்லரசுகள் தமது இரசாயன (யுரேனிய )கழிவுகளை கொட்டும் இடமாக சோமாலியாவை பயன்படுத்தி கொண்டன என்பதே உறைக்கும் உண்மை.பெரிய கடல் வளத்தை கொண்டிருந்த போதும் அவர்கள் அதன் பலாபலன்களை பெறமுடியாது போய்விட்டனர் சோமாலியர்.



கடற்கரைகளில் தினமும் ஒதுங்கும் இரசாயன கழிவுகளால் கடல் வாழ் உயிரிணங்கள் மட்டுமல்ல சோமாலியா மக்களே வகை தொகையின்றி செத்துக்கொண்டு இருக்கிறனர். உலக நாடுகளுக்கு சோமாலியாவின் கடலில் தமது கழிவுப்பொருட்டகளை கொட்டுவது மிகவும் இலாபகரமாக இருப்பதோடு சோமாலியாவில் ஒரு உறுதியான அரசு இல்லாமை இவர்களுக்கு இன்னும் வாய்ப்பாகிப்போனது.



ஒருபக்கத்தில் ஆயுத கலாச்சாரத்தை ஊக்கிவித்தபடி மறுபக்கத்தில் தமது சுய தேவகளை குறுக்குவழியில் அடையும் இன்நாடுகள் சோமாலியர்களை ஒரு மனித இனமாக மதிப்பதாகவே தெரியவில்லை.ஐக்கிய நாடுகள் சபை வாய்மூடி இருக்க அந்த இனம் வேரோடு சத்தமில்லாமல் அழிக்கப்பட்டு கொண்டு இருக்கிறார்கள்.இன் நிலையில் தான் தங்கள் கடல் எல்லையில் வரும் கப்பல்களை தாக்கத்தொடங்கினர் சோமாலியர்கள் , வழக்கம் போலவே உலகம் அவர்களை கடல் கொள்ளையர் என்கின்ற பட்டத்துடன் அதனை வெறு ஒருதிசையில் அவர்களது பிரச்சனைகளை திசை திருப்பி அவர்களை கொள்ளையாரக்கி , பயங்கரவாதிகள் ஆக்கி அழகு பார்த்தது உலகம்.போராடித்தான் அனைத்தையும் பெற வேண்டும் என்கிற நிலைக்கு தள்ளப்பட்ட அம்மக்கள் , நாகரிக உலகத்தின் சுயநலத்திற்க்கு பலியாகிபோன ஒரு மக்கள் கூட்டம்.



அந்த மெல்லிய கறுத்த உருவங்கள் தம் மண்ணிலேயே பசியாலும் நோயாலும் இறந்து கொண்டிருக்க உலகம் இவர்கள் மீது அரசில் நடாத்திக்கொண்டு இருப்பது இன்றைய நவ நாகரிக உலகத்தின் வெட்ககேடான ஒரு செய்தியே..



.உலகின் குப்பைத் தொட்டியா?,ஐ.நா. அனுமதியுடன் கடற்கொள்ளைக்காரர்களை வேட்டையாட போகும் இந்திய கடற்படையினர், சோமாலிய கடலில் அணு உலை, மற்றும் இரசாயன நச்சுக் கழிவுகளை திருட்டுத்தனமாக கொட்டும் பன்னாட்டு கப்பல்களையும் பிடித்து தண்டிப்பார்களா?சோமாலியா, அரசு இல்லாத தேசம். தட்டிக் கேட்க ஆள் இல்லையென்றால் யாரும் எது வேண்டுமானாலும் செய்யலாம்.



தொன்னூறுகளில் சோமாலிய பிரச்சினையை தீர்க்கப் போகிறேன் சொல்லி விட்டு சென்ற "உலக பொலிஸ்காரனான" அமெரிக்கா கடைசியில் எதுவுமே செய்ய முடியாமல் அவமானத்துடன் வீடு திரும்பியது. அதற்குப் பிறகு ஆயுதக் குழுக்களின் அதிகாரப் போட்டி காரணமாக, இது வரை நிலையான அரசாங்கம் ஏற்பட இல்லை. வடக்கு பகுதி மாநிலம் மட்டும், தமக்குள் இணக்கப்பாடு கண்டு தனியாட்சி நடத்துகின்றது. "சோமாலிலாந்து" என்றழைக்கப்படும் இந்த தனி நாட்டை உலகில் யாரும் அங்கீகரிக்கவில்லை.



பிற சோமாலிய பகுதிகள் தமக்கு தெரிந்த வகையில் தப்பிப் பிழைக்கின்றன. வியாபாரிகள் தமது பாதுகாப்புக்காக சிறு ஆயுதக் குழுவை பராமரிக்க வேண்டியுள்ளது. வெளிநாடுகளில் தொழில் புரியும் சோமாலியர்கள் தங்கள் குடும்பங்களுக்கு அனுப்பும் பணம் தவிர, வேறெந்த உலக நாட்டு உதவியும் இல்லை. சோமாலியா மிக நீண்ட கடற்கரையை கொண்டுள்ளது. இருப்பினும் மீனவர்கள் வேலையின்றி கஷ்டப்படுகின்றனர். மீன்பிடிக்க கடலில் சென்றால், மீன்கள் கிடைப்பதில்லை. எல்லா மீன்களையும் பிறநாட்டு மீன்பிடி கப்பல்கள் வந்து அள்ளிக் கொண்டு போகின்றன. தனக்கென அரசாங்கமே இல்லாத சோமாலிய மீனவர்களால் இந்த அட்டூழியத்தை கைகட்டி பார்த்துக் கொண்டிருக்க தான் முடியும்.



அவ்வாறு தொழில் இழந்த மீனவர்கள் தான், இப்போது கடற்கொள்ளைக்காரர்களாக மாறியுள்ளனர். அப்போது ஏனென்று கேட்க வராத சர்வதேச நாடுகள், இப்போது மட்டும் கடற்கொள்ளையை கண்டிக்கிறார்களாம். இதுவன்றோ சர்வதேச நீதி!சோமாலிய மக்களின் பிரச்சினை கடற்கொள்ளையல்ல.



அவர்களின் கடலில் நடக்கும் சட்டவிரோத மீன்பிடி மட்டும் ஒரேயொரு பிரச்சினையல்ல. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளின் கப்பல்கள், அந்த நாடுகளில் அணு உலைகள் வெளியேற்றும் கழிவுகளையும், பிற இரசாயன நச்சுக் கழிவுகளையும் கொண்டு வந்து திருட்டுத்தனமாக கொட்டிவிட்டுச் செல்கின்றனர்.


இந்த நச்சுக் கழிவுகள் சோமாலிய கடற்கரையை மாசுபடுத்துகின்றன. இதனால் மக்களுக்கு புற்றுநோய் உட்பட, முன்பு ஒருபோதும் வராத புதிய புதிய நோய்கள் தோன்றுகின்றன. இதையெல்லாம் உலகில் யாரும் கண்டுகொள்ளவில்லை. இப்போது பன்னாட்டு நிறுவனங்களுக்கு சொந்தமான கப்பல்கள் கடத்தப்படும் போது மட்டும், முக்கிய செய்தியாக சொல்லும் ஊடகங்கள் எதுவும் சோமாலிய மக்கள் கடந்த பத்தாண்டுகளாக பட்டு வரும் துன்பம் பற்றி எடுத்தச் சொல்லவில்லை.



இதனை வாசிக்கும் உங்களில் பலர் இந்த செய்தியை இப்போது தான் கேள்விப் படுகிறீர்கள்.1998 ம் ஆண்டு வெளிவந்த Famiglia Cristiana என்ற பத்திரிகை இத்தாலி நச்சுக்கழிவுகளை சோமாலியாவில் தொடர்ந்து கொட்டிவரும் நாடுகளில் ஒன்று என்று தெரிவித்துள்ளது. இத்தாலி சோமாலியாவின் முன்னாள் காலனியாதிக்க நாடு என்பது இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.



1992 ம் ஆண்டு இத்தாலியும் ஒரு உறுப்பினராக கைச்சாத்திட்ட "பாசல் ஒப்பந்தம்", அணு, நச்சுக் கழிவுகளை பிறிதொரு உறுப்பு நாடுகளிலோ அல்லது உறுப்பினரல்லாத நாட்டிலோ கொண்டு போய் கொட்டுவதை தடை செய்கின்றது. அணு நச்சுக் கழிவுகளை ஐரோப்பாவில் பாதுகாப்பாக ஒரு இடத்தில் அடக்கம் செய்வதற்கு, தொன் ஒன்றிற்கு ஆயிரம் டாலர் செலவாகின்றது.



ஆனால் அதனை சோமாலியாவில் கொண்டு வந்து கொட்டுவதற்கோ தொன்னிற்கு வெறும் இரண்டரை டாலர்கள் தான் செலவாகின்றது! அண்மையில் கடத்தப்பட்ட உக்ரைனிய ஆயுதக்கப்பலை விடுவிக்க பேரம் பேசி கிடைத்த மில்லியன் கணக்கான பணத்தை, சோமாலியாவின் கடற்கரையை தூய்மைப்படுத்த பயன்படுத்தப் போவதாக கடற்கொள்ளையர் தெரிவித்துள்ளனர்

http://www.panithulishankar.com/2009/08/history-of-somalia.html



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
சோமாலியா என்னதான் நடக்கிறது 1357389சோமாலியா என்னதான் நடக்கிறது 59010615சோமாலியா என்னதான் நடக்கிறது Images3ijfசோமாலியா என்னதான் நடக்கிறது Images4px
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu May 03, 2012 9:10 pm

அந்த மெல்லிய கறுத்த உருவங்கள் தம் மண்ணிலேயே பசியாலும் நோயாலும் இறந்து கொண்டிருக்க உலகம் இவர்கள் மீது அரசில் நடாத்திக்கொண்டு இருப்பது இன்றைய நவ நாகரிக உலகத்தின் வெட்ககேடான ஒரு செய்தியே..

உண்மையில் வெட்கக்கேடான ஒரு செய்திதான்.

அவர்களை நினைக்கும்போதே மனசு கனக்கிறது. அழுகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக