ஈகரை தேடுபொறி
Latest topics
» 10 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் 10 அடி உயர 'துர்நாற்ற' மலர் இங்கிலாந்தில் பூத்தது
by யினியவன் Today at 2:18 pm

» கிளாஸ் பெயிண்டிங்
by balakarthik Today at 2:17 pm

» சிவகார்த்திகேயனிடம் 160 மில்லியன் டாலரை ஏமாற்றிய நபர் - விட்டுக்கொடுத்த சிவா !!
by யினியவன் Today at 2:13 pm

» பேப்பர் கிப்ட் பாக்ஸ்
by ஜாஹீதாபானு Today at 2:05 pm

» தமிழா தமிழா...!
by madhukrish Today at 1:49 pm

» என் தனிமை தருணங்கள் .....
by ஜாஹீதாபானு Today at 1:49 pm

» முகநூலில் ரசித்தவை-2
by ஜாஹீதாபானு Today at 1:33 pm

» பிலிப்பைன்ஸ்
by madhukrish Today at 1:25 pm

» விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்!
by madhukrish Today at 1:19 pm

» ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?
by ராஜா Today at 1:12 pm

» அரிசி
by madhukrish Today at 1:11 pm

» பொது அறிவுத் தகவல்கள்!
by madhukrish Today at 1:06 pm

» < < < < < இலக்கண இன்பம் > > > > >
by pon.sellamuththu Today at 1:05 pm

» அலுவலகத்தில், ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்
by பாலாஜி Today at 1:04 pm

» ஏராளமான மருத்துவகுணம் கொண்ட கல்யாண முருங்கை!
by md.thamim Today at 12:54 pm

» 8000 - பதிவுகளைக் கடந்துள்ள முத்துமுகமதுவுக்குப் பாராட்டுக்கள்!
by ஜாஹீதாபானு Today at 12:47 pm

» நம் ஈகரையின் புதிய சிறப்புப் பதிவாளர்கள்
by உமா Today at 12:44 pm

» பதவி! - தெனாலிராமன் கதை
by பூவன் Today at 12:18 pm

» ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம்: போலீசில் ஸ்ரீசாந்தை சிக்க வைத்தது டிராவிட்?!!
by யினியவன் Today at 11:55 am

» பூண்டு ஊறுகாய்
by பாலாஜி Today at 11:46 am

» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -6)
by பாலாஜி Today at 11:45 am

» உதவி மிக அவசரம் !!!!!!!!!!!!!! போன் pattern லாக் - லாக் ஆகி விட்டது
by யினியவன் Today at 11:42 am

» எனது முஸ்லிம் சகோதரனை இன்று காப்பாற்ற முடியவில்லையே !
by பாலாஜி Today at 11:28 am

» கடவுள் எங்கே?
by ராஜா Today at 11:08 am

» பசுஞ்சாணத்திலிருந்து நறுமணப்பொருள்
by ராஜா Today at 11:04 am

» முருகனின் தலைக்குப் பின்னால் பாம்பு!
by ராஜா Today at 11:00 am

» புற்று - முற்றவிடக் கூடாது!
by ராஜா Today at 10:58 am

» சரியான பொருள்!
by பூவன் Today at 10:49 am

» uTorrent மென்பொருளை அன்ரோயிட் சாதனங்களில் பயன்படுத்துவதற்கு...
by Muthumohamed Today at 10:31 am

» கல்வி பற்றி காந்தியடிகள்
by பூவன் Today at 10:07 am

» அம்மாவுக்குக் குடும்பம் இல்லை.. நாம்தான் அவரின் பிள்ளைகள்!
by யினியவன் Today at 10:06 am

» ரமணியின் கதைகள்
by ரமணி Today at 9:33 am

» மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எச்சரிக்கை..!
by முத்துராஜ் Today at 8:58 am

» பி.டி.எப் பைல்கள் பற்றிய சிறு விளக்கம்
by முத்துராஜ் Today at 8:55 am

» தீக்கோழி
by அசுரன் Today at 8:46 am

» அலெக்ஸாண்டர் பிளெமிங் & வின்ஸ்டன் சர்ச்சில்
by அசுரன் Today at 8:45 am

» முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்
by அசுரன் Today at 8:42 am

» கொடியேற்றினால் மட்டும் போதுமா?
by அசுரன் Today at 8:41 am

» ஆண்டவன் உத்தரவு!
by சிவா Today at 2:32 am

» சித்தர் வணங்கிய சிவபாலன்
by சிவா Today at 2:28 am

Eegarai Toolbar
ஈகரை டூல்பாரை இங்கு தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்!
உள்நுழைய இங்கு அழுத்தவும்

























பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 5 5 136

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4

Page 13 of 13 Previous  1, 2, 3 ... 11, 12, 13

View previous topic View next topic Go down

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4

Post by சார்லஸ் mc on Mon May 21, 2012 9:12 pm

First topic message reminder :

“பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை” - என்ற தலைப்பில் வேதத்தின் மகத்துவங்களை அனைவரும் அறிந்திட பல்வேறு சிறுசிறு தலைப்புகளில் அனைவரும் விரும்பி ஆர்வமாக வாசிக்கும்படியாக இப்பகுதியில் ஒரு திரியை திறக்கிறேன். அனைத்து உறவுகளின் ஆதரவையும் அன்புடன் நாடுகிறேன்.

இதில் கேள்வி கேட்பவர்கள் அந்ததந்த தலைப்பில் உள்ள அம்சங்களில் மட்டும் (தாங்கள் அறிந்து கொள்ள மட்டும்) கேட்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். தலைப்பிற்கு சம்பந்தமில்லாத க‌ேள்விகளையும் வாத-விதாண்டாவாதங்களையும் தவிர்க்கும்படி தயவாக க‌ேட்டுக் கொள்கிறேன்.



Last edited by சார்லஸ் mc on Wed Nov 07, 2012 6:48 pm; edited 1 time in total

சார்லஸ் mc
கல்வியாளர்


பதிவுகள்: 4343
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 1721

View user profile

Back to top Go down


பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 13

Post by சார்லஸ் mc on Sat Jun 16, 2012 7:16 am

22. 2ப‌ேதுரு

அ) பின்னணி:


ஆசிரியர்: அப்போஸ்தலனாகிய பேதுரு

எழுதப்பட்ட இடம்: ரோமாபுரி

எழுதப்பட்டகாலம்: ஏறக்குறைய கி.பி.65 - கி.பி.67

சேருமிடம்: ஆசியாவிலுள்ள கிறிஸ்தவர்கள் தவறான போதனையாளர்களினால் கிறிஸ்தவர்கள் துன்பப்பட்டபோது.

ஆ) உள்ளடக்கம்:

தலைப்பு: “உண்மையான மற்றும் பொய்யான அறிவு”

கருப்பொருள்: உண்மையான மற்றும் பொய்யான போதனையாளர்களைப் பகுத்தறிதல்.

நோக்கம்: கர்த்தரை மறுதலித்து, அவருடைய வருகையைக் குறித்து ஏளனம் செய்யும் பொய்யான போதனையாளர்களைக் குறித்து விசுவாசிகளை எச்சரித்தல்.

குறிப்பு விவரம்:

- உண்மையான மற்றும் பொய்யான அறிவு உண்மையான அறிவு (2பேதுரு: 1:3-21)

- பொய்யான போதனையாளர் (2பேதுரு:2:1-22)

- கிறிஸ்துவின் மற்றொரு வருகை (2பேதுரு: 3:1-12)

முக்கியவசனம்:

2பேதுரு: 3:17,18 - “ஆதலால் பிரியமானவர்களே, இவைகளை முன்னமே நீங்கள் அறிந்திருக்கிறபடியால், அக்கிரமக்காரனுடைய வஞ்சகத்தில‌ே நீங்கள் இழுப்புண்டு உங்கள் உறுதியிலிருந்து விலகி விழுந்து போகாதபடிக்கு எச்சரிக்கையாயிருந்து, நம்முடைய கர்த்தரும் இரட்கருமாகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள். அவருக்கு இப்பொழுதும் என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென்”


தொடரும்...


Last edited by சார்லஸ் mc on Thu Nov 08, 2012 2:03 pm; edited 1 time in total

சார்லஸ் mc
கல்வியாளர்


பதிவுகள்: 4343
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 1721

View user profile

Back to top Go down

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 13

Post by சார்லஸ் mc on Sat Jun 16, 2012 7:30 am

23. 1யோவான்

அ) பின்னணி:


ஆசிரியர்: அப்போஸ்தலனாகிய யோவான்

எழுதப்பட்ட இடம்: எபேசு

எழுதப்பட்ட காலம்: ஏறக்குறைய கி.பி.90 - கி.பி.100

சேருமிடம்: எபேசுவைச் சுற்றியுள்ள கிறிஸ்தவர்கள்

எப்போது எழுதப்பட்டது:

கிறிஸ்துவின் மனிதத் தன்மையை மட்டுப்படுத்தி, விசேஷித்த அறிவை வலியுறுத்தும் முரண்பாடான சமரச மறையியில் கருத்துக்களடங்கிய போதனைகளைச் சந்திக்கும் கிறிஸ்தவர்களுக்காக.

ஆ) உள்ளடக்கம்:


தலைப்பு: “ஒரு உண்மைக் கிறிஸ்தவனின் சோதனைகள்”

கருப்பொருள்: தெய்வீக வாழ்க்கையின் நிச்சயமான அடையாளங்கள்.

நோக்கம்:

சமரச மறையியல் அறிவின் (இயேசு கிறிஸ்து மனித உருவில் பிறக்கவில்லை என்று போதிக்கும் முரண்பாடான சமயக் கருத்து) பொய்யான போதனைக்கு விரோதமாக இரட்சிப்பின் உண்மையான அறிவைக் குறித்து விசுவாசிகளுக்கு அறிவுறுத்தல்.

குறிப்பு விவரம்: மூன்று மடங்கான சுழற்சி:

1. ஒளியும் அன்பும் (1யோவான்: 1:5 - 2:28)

2. நீதியும் அன்பும் (1யோவான்: 2:29 - 4:6)

3. ஜீவனும் அன்பும் (1யோவான்: 4:7 - 5:21)

முக்கியவசனம்: 1யோவான்: 5:13 - “ உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவ குமாரனுடைய நாமத்தின்மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிற‌ேன்.”


தொடரும்...


Last edited by சார்லஸ் mc on Thu Nov 08, 2012 2:04 pm; edited 1 time in total

சார்லஸ் mc
கல்வியாளர்


பதிவுகள்: 4343
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 1721

View user profile

Back to top Go down

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 13

Post by சார்லஸ் mc on Sat Jun 16, 2012 8:54 am

24. 2யோவான்

அ) பின்னணி:


ஆசிரியர்: அப்போஸ்தலனாகிய யோவான்

எழுதப்பட்ட இடம்: எப‌ேசு

எழுதப்பட்ட காலம்: ஏறக்குறைய கி.பி.90 - கி.பி.100

சேருமிடம்: எபேசுவைச் சுற்றியுள்ள கிறிஸ்தவர்கள்

காலத்தின் தேவை:

கிறிஸ்துவின் மனிதத் தன்மையை மட்டுப்படுத்தி, விசேஷித்த அறிவை வலியுறுத்தும் முரண்பாடான சமரச மறையியல் கருத்துக்களடங்கிய போதனைகளைச் சந்திக்கும் கிறிஸ்தவா்கள்.

ஆ) உள்ளடக்கம்:


தலைப்பு: “முரண்பாடான கோட்பாடுகளை பின்பற்றுபவர்களை எவ்வாறு கையாளுவது”

கருப்பொருள்: சமரச மறையியல் கோட்பாட்டினால் மக்களை வஞ்சிப்பவர்களை உபசரிக்காதீர்கள்.

நோக்கம்:

சத்தியத்தைப் பின்பற்றும் விசுவாசிகளைக் குறித்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, அந்திக்கிறிஸ்துவின் ஆவியையுடைய சமரச மறையியல் கோட்பாட்டின் வஞ்சகர்களைக் குறித்து அவர்களை எச்சாித்தல்.

முக்கியவசனம்:

2யோவான்: 9,10 வசனம் - “கிறிஸ்துவின் உபத‌ேசத்தில‌ே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல; கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன். ஒருவன் உங்களிடத்தில் வந்து இந்த உபதேசத்தை கொண்டு வராமலிருந்தால், அவனை உங்கள் வீட்டிலே ஏற்றுக் கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள்.”


தொடரும்...


Last edited by சார்லஸ் mc on Thu Nov 08, 2012 2:06 pm; edited 1 time in total

சார்லஸ் mc
கல்வியாளர்


பதிவுகள்: 4343
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 1721

View user profile

Back to top Go down

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 13

Post by சார்லஸ் mc on Sat Jun 16, 2012 11:44 am

25. 3யோவான்

அ) பின்னணி:


ஆசிரியர்: அப்போஸ்தலனாகிய யோவான்

எழுதப்பட்ட இடம்: எபேசு

எழுதப்பட்ட காலம்: ஏறக்குறைய கி.பி.90 - கி.பி.100

சேருமிடம்:

கிறிஸ்துவின் மனிதத்‌ தன்மையை மட்டுப்படுத்தி, விசேஷித்த அறிவை வலியுறுத்தும் முரண்பாடான சமரச மறையியலின் கருத்துக்களடங்கிய போதனைகளைச் சிந்தித்துக் கொண்டிருந்த காயு.

ஆ) உள்ளடக்கம்:

தலைப்பு: “உபசரித்தல்”

கருப்பொருள்: பயணம் செய்யும் போதனையாளர்களை உபசரியுங்கள்

நோக்கம்: அந்நியர்களுக்கும், பல இடங்களுக்குப் பயணம் செய்து சுவிசேஷத்தை அறிவிக்கும் பிரசங்கியார்களுக்கும் முறையாக ஊழியம் செய்வதைக் குறித்துப் போதனையை அளித்தல்.

முக்கிய வசனம்: 3யோவான்: 5 வசனம் - “பிரியமானவளே, நீ சகோதரருக்கும் அந்நியருக்கும் செய்கிற யாவற்றையும் உண்மையாய்ச் செய்கிறாய்.”


தொடரும்...


Last edited by சார்லஸ் mc on Thu Nov 08, 2012 9:33 pm; edited 1 time in total

சார்லஸ் mc
கல்வியாளர்


பதிவுகள்: 4343
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 1721

View user profile

Back to top Go down

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 13

Post by சார்லஸ் mc on Sat Jun 16, 2012 11:56 am

26. யூதா

அ) பின்னணி:


ஆசிரியர்: யூதா

எழுதப்பட்ட இடம்: எருசலேம்

எழுதப்பட்ட காலம்: ஏறக்குறைய கி.பி.67 - கி.பி.80

சேருமிடம்: உலகெங்குமுள்ள கிறிஸ்தவர்கள்

காலத்தின் தேவை: முரண்பாடான கோட்பாடுகளைப் போதிக்கும் போதனையாளர்களைச் சந்திக்கும் கிறிஸ்தவர்கள்.

ஆ) உள்ளடக்கம்:

தலைப்பு: “பொய்யான போதனையாளர்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள்”

கருப்பொருள்: பொய்யான போதனையாளர்களுக்கு விரோதமாக விசுவாசத்திற்காகப் போராடும்படி விசுவாசிகளை ஊக்குவித்தல்.

நோக்கம்: பொய்யான போதனையாளர்களுக்கு விரோதமாக விசுவாசத்திற்காகப் போராடும்படி விசுவாசிகளை ஊக்குவித்தல்.

குறிப்பு விவரம்: பிரச்சினையும், பதிலும்

பிரச்சினை: தீமை நிறைந்த பொய்யான போதனையாளர்கள் (யூதா: 3 - 6 வசனம்)

பதில்: விசுவாசத்திற்காக போராடுதல் (யூதா: 17 - 23 வசனம்)

முக்கியவசனம்: யூதா: 3 வசனம் - “... பரிசுத்தவான்களுக்கு ஒரு விசை ஒப்புவிக்கப்பட்ட விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாய் போராட வேண்டுமென்று உங்களுக்கு எழுதி உணர்த்துவது எனக்கு அவசியமாய்க் கண்டது.”


தொடரும்...


Last edited by சார்லஸ் mc on Thu Nov 08, 2012 9:34 pm; edited 1 time in total

சார்லஸ் mc
கல்வியாளர்


பதிவுகள்: 4343
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 1721

View user profile

Back to top Go down

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 13

Post by சார்லஸ் mc on Sat Jun 16, 2012 12:42 pm

27. வெளிப்படுத்தின விசேஷம்

அ) பின்னணி:


ஆசிரியர்: யோவான் (வெளிப்படுத்தல்: 1:1,4,9; 22:8)

எழுதப்பட்ட இடம்: ஆசியாவிலிருந்து 35 மைல்கள் தூரத்திலுள்ள பத்மு தீவு.

எழுதப்பட்ட காலம்:

பேரரசன் டொமிசியினுடைய ஆட்சியின் போது ஏறக்குறைய கி.பி.90 - கி.பி.100.

சேருமிடம்:

மாகாணத்தின் முதன்மையான பட்டணமாகிய எப‌ேசுவைச் சுற்றியுள்ள ஒரு வளைவான வழியில் அமைந்துள்ள ஆசியாவின் 7 சபைகள்.

எப்போது த‌ேவைப்பட்டது:

பேரரசன் டொமிசியன் ஆட்சியில் கிறிஸ்தவர்கள் அனுபவித்த உபத்திரவத்தின் காரணமாக, யோவான் (கிறிஸ்துவிடம் தனக்கிருந்த சாட்சியினால், இவரும் நாடு கடத்தப்பட்டார்) எதிர்காலத்தில் நடக்கவிருக்கின்ற காரியங்களைக் குறித்து தேவன் தனக்களித்த தரிசனங்களை ஆசியாவின் 7 சபைகளுக்கும் எழுதுகிறார். கிறிஸ்துவினுடைய இரண்டாம் வருகையில், பரிசுத்தவான்களுக்கு உபத்திரவம், துன்மார்க்கருக்குக் கோபாக்கினை மற்றும் தேவனுடைய மக்களுக்கு இறுதியான ஜெயமும், பலனும் கிடைப்பதைப் பற்றி அறிவிக்குமாறு எழுதப்பட்டது.

ஆ) உள்ளடக்கம்:

தலைப்பு: “முடிவு”

கருப்பொருள்: “போராட்டமும் முடிவும்” .

தீமையான இந்த யுகத்தின் முடிவையும், புதிய பரலோகம் மற்றும் புதிய பூமியின் மீது கர்த்தர் அரசாளும் ஒரு புதிய யுகத்தின் பிறப்பையும் எடுத்துரைப்பது.

நோக்கம்:

சாத்தானுடைய தீய வல்லமைகளை முறியடித்து, தேவனோடு ஜெயங்கொள்ளும் கிறிஸ்தவர்களுக்கு அவர் பலனளிக்கும் ஒரு முடிவு காலம் சமீபமாயிருக்கிறதென்பதை அவர்களுக்கு எடுத்துக் காட்டுவதன் மூலம், தங்களுக்கு நேரிடும் உபத்திரவங்களைப் பொறுமையோடு சகிக்கும்படி அவர்களை ஊக்குவித்தல்.

குறிப்பு விவரம்: இயேசு கிறிஸ்துவினுடைய அதிகதிகமான கர்த்தத்துவத்தைக் குறித்து நான்கு மடங்கான தரிசனம்; ஒவ்வொரு தரிசனத்திலும் “ஆவிக்குள்ளான‌ேன்” என்ற சொற்றொடர் இடம் பெறுகிறது. (வெளிப்படுத்தல்: 1:10; 4:2; 17:3; 21:10).

1. முதலாம் தரிசனம்: கிறிஸ்து - சபையின் கர்த்தர் (வெளிப்படுத்தல்: 1:9 - 3:22).

2. இரண்டாம் தரிசனம்: கிறிஸ்து - சரித்திரத்தின் கர்த்தர் (வெளிப்படுத்தல்: 4:1 - 16:21).

3. மூன்றாம் தரிசனம்: கிறிஸ்து - கர்த்தாதி கர்த்தர் (வெளிப்படுத்தல்: 17:1 - 21:10).

4. நான்காம் தரிசனம்: கிறிஸ்து - சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் ( வெளிப்படுத்தல்: 21:11 - 22:5).

முடிவுரை: வெளிப்படுத்தல்: 22:6 - 21.

சிறப்பு:

இப் புத்தகத்தில் விரைவான நிகழ்ச்சிகளே பதிவு செய்யப்பட்டுள்ளன. (சீக்கிரத்தில் சம்பவிக்கிறவைகளை...).
சரித்திர ஆகமங்களிலும் நிகழ்ச்சிகளே உள்ளன. என்றாலும், அவை நடந்த பின்பு எழுதப்பட்டவை. வெளிப்படுத்தின விசேஷமோ நடைபெற உள்ள நிகழ்ச்சிகளை முன்னறிவிக்கும் புத்தகம்.

நிகழ்ச்சிகள் உருவகமாகவும், எண்களின் மூலமாகவும் விவரிக்கப்பட்டுள்ளது. உதாரணம்: முத்திரை, கோபகலசம், கலியாணம், ஆட்டுக்குட்டி; 7 என்ற எண் சுமார் 54 முறை குறிப்பிடப்பட்டுள்ளது. 6, 12, 24, 666, 1260, 1,44,000 ஆகிய எண்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

முக்கிய வசனம்: வெளிப்படுத்தல்: 11:15 - “உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்குரிய ராஜ்யங்களாயின; அவர் சதா காலங்களிலும் ராஜ்யபாரம் பண்ணுவார்.”


தொடரும்...


Last edited by சார்லஸ் mc on Thu Nov 08, 2012 9:41 pm; edited 1 time in total

சார்லஸ் mc
கல்வியாளர்


பதிவுகள்: 4343
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 1721

View user profile

Back to top Go down

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 13

Post by சார்லஸ் mc on Sun Jun 17, 2012 7:42 am

வ‌ெளிப்படுத்தின விசேஷம் - தொடர்ச்சி...

“வெளிப்படுத்தல்” என்றால் கிரேக்க பதத்தில் “அப்போகாலுப்ஸிஸ்” (Apocalupsis) என்பதாகும். திரைச்சீலை நீக்கப்படும்போது, திரைக்குப் பின்பு உள்ள உருவம் எப்படி வெளிப்படுகிறதோ, அப்படியே “அப்போகாலுப்ஸிஸ்” என்றால் “திரை நீக்கப்படுதல்” என்று பொருள்.

இப்புத்தகத்தை மூன்று பகுதியாக பகுத்து படிக்கலாம்: அவை:

1. நீ கண்டவை

2. இருப்பவை

3. இனி சம்பவிப்பவை.


1. நீ கண்டவை:

உயிர்த்தெழுந்த கிறிஸ்து (வெளிப்படுத்தல்: 1:9 - 20)

2. இருப்பவை:

ஏழு சபைகளின் நிலை (வெளிப்படுத்தல்: 2:1 - 3:22)

3. இனி சம்பவிப்பவை: (இதில் 3 வகை) (வெளிப்படுத்தல்: 4:1 - 22 அதிகாரம் வரை)

அ) சபைக்கு சம்பவிப்பவை:

- பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்படல் (4:1-5)

- பரலோக ஆராதனை (4:1 - 5:14)

- ஆட்டுக்குட்டியானவரின் கலியாணம் (19:9)

ஆ) யூதருக்கு சம்பவிப்பது:

- உபத்திரவம் (12:1-17)

- செய்தி பெறுதல்: இரு சாட்சிகள் (11:1 - 12)

- முத்திரையிடப்பட்டு பாதுகாப்பு (7,14)

இ) உலகத்திற்கு சம்பவிப்பது:

- அந்திக்கிறிஸ்துவின் ஆட்சி (6:1-13)

- ஏழு முத்திரைகள்:

1. ஆறு முத்திரைகள் உடைக்கப்படல் (6:1-17)

2. இடைவெளி: இரு ஜனத்திரள் (7:1-17)

3. ஏழாம் முத்திரை (8:1-6)

4. ஏழு எக்காளங்கள்:

- ஆறு எக்காளம் ஊதப்படல் (8:7 - 9:21)

- 2ம் இடைவெளி சிறு புத்தகம் (10:1-11)

5. ஏழாம் எக்காளம்: (11:15-19)

- 3ம் இடைவெளி 7 கோப கலசங்களையுடைய தூதர்கள் (15:1-8)

- 7 கோப கலசங்கள் (16:1-21)

6. மார்க்க அமைப்பு வீழ்ச்சி: (17:1-18)

7. உலக பாபிலோன் வீழ்ச்சி: (18:1-24)

- அர்மகதோன் யுத்தம் (19:11-20; 14:17-20)

- ஆயிர வருட அரசாட்சி (20:1-6)

- இறுதி யுத்தம் (20:7-10)

- வெள்ளை சிங்காசன நியாயத் தீர்ப்பு (20:11-15)

- புதிய வானம், புதிய பூமி (21:1)

இப்புத்தகத்தின் நிகழ்ச்சிகள் வாிசைக் கிரமமாக எழுதப்படாமல், விரைவில் ஓடும் படக்காட்சி போல் நடப்பது, முன்பு நடந்தது, நடக்கப் போகிறது என்ற நிலையில் மாறிமாறி “ Flash Back ” முறையில் எழுதப்பட்டுள்ளதை கவனிக்க வேண்டும்.


தொடரும்...


Last edited by சார்லஸ் mc on Thu Nov 08, 2012 9:42 pm; edited 1 time in total

சார்லஸ் mc
கல்வியாளர்


பதிவுகள்: 4343
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 1721

View user profile

Back to top Go down

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 13

Post by சார்லஸ் mc on Mon Jun 18, 2012 8:32 am

வெளிப்படுத்தின விசேஷம் - தொடர்ச்சி...



இப்புத்தகத்தில் நாம் காணும் முக்கிய உண்மைகள்:


1. தேவன் சர்வ வல்லவர் (4:8; 15:3; 19:6; 11:7)
பரிசுத்தர் (4:8; 15:4)
ஆராதனைக்குப் பாத்திரர் (4:11; 5:12)
நீதி செய்பவர் (19:6)

2. தேவன் ராஜ்யபாரம் பண்ணுபவர் - யாவும் அவருடைய ஆளுகைக்கு உட்பட்டது (19:6; 17:14)

3. அநீதி, அநியாயத்திற்கு தேவன் தீர்ப்பளிப்பார் - சாத்தானுக்கு முடிவு உண்டு.

4. தேவன் ஒருவரே, ஆராதனைக்கு உரியவர்; தேவனால் பயன்படுபவர்கள் அல்ல (22:8,9)

5. தேவன் தம்முடையவர்களைப் பாதுகாப்பவர் (அதிகாரம்: 7, 12)

6. தேவன் நம்மிலுள்ள நற்காரியங்களை பாராட்டுபவர்; குறைகளை சுட்டிக் காண்பிக்கிறவர் (அதிகாரம்: 2, 3)

7. மனந்திரும்ப வாய்ப்பளிப்பவர் (அதிகாரம்: 2, 3, 11)

8. தேவனுடைய கிருபையை அவமாக்கினால் தண்டனைக்கு தப்ப இயலாது (அதிகாரம்: 6, 9)

9. அவரவரின் கிரியைக்கு நிச்சயம் பிரதி பலன் உண்டு (22:12)

10. நியாயத்தீர்ப்பு உண்டு; நரகம் உண்மையானது. நரகத்தில் இடம் பெறுபவர் (20:15: 21:8)

11. நித்திய மகிமை, பரலோகம், நித்திய வாழ்வு உண்மையானவை.

12. தேவன் நம்மிடம் எதிர்பார்ப்பது:


- அவர் சொல்லுவதை கவனமாக கேட்பது, ஜாக்கிரதையாகக் கைக்கொள்ளுவது, ஜெயிக்கும் வாழ்க்கை (12:10).

- உண்மையுள்ள வாழ்க்கை (17:14)

- மேலும், பரிசுத்தமாகுதல் (22:11)

- வசனத்தின்படி வாழ்தல் (1:3)

- முடிவு பரியந்தம் நிலைத்திருத்தல்.


தொடரும்...


Last edited by சார்லஸ் mc on Thu Nov 08, 2012 9:44 pm; edited 1 time in total

சார்லஸ் mc
கல்வியாளர்


பதிவுகள்: 4343
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 1721

View user profile

Back to top Go down

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 13

Post by சார்லஸ் mc on Mon Jun 18, 2012 10:55 pm

இது வரை நாம்...

பரிசுத்த வேதாகமத்தின் மகத்துவங்களை அறிந்து கொள்ள த‌ேவன் நம் அனைவருக்கும் உதவி செய்தார். பரிசுத்த வேதாகமத்தின் 66 ஆகமங்களையும் சரியான விதத்தில் விளங்கிக்கொள்ளும் வகையில் கர்த்தர் நம்மை வழி நடத்தி வந்திருக்கிறார் என விசுவாசிக்கிறேன். இந்த முதல் பாகத்தை முடிக்க கிருபை ‌தந்த தேவாதி தேவனுக்கு கோடி நன்றிகள்.

இப்பகுதியை வெளியிட வாய்ப்பு அமைத்துக் கொடுத்த, கொடுத்து வருகின்ற நமது தளத்தின் நிறுவனர் உயர் திரு.சிவா அவர்களுக்கும் மற்றும் நிர்வாக குழுவினருக்கும், ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் முதற்கண் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதை தொடர்ந்து வாசித்து வந்த நமது உறவுகளுக்கும், பின்னூட்டமிட்ட சகோதர, சகோதரிகளுக்கும், உற்சாகப்படுத்திய நண்பர்களுக்கும், மதிப்பீடுகள் வழங்கிய மறைவான நண்பர்களுக்கும், இனி தொடர்ந்து வாசிக்கப்போகும் அன்பர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

வேதத்தை தொடர்ந்து வாசிக்கவும், வாசிக்கும்போது அதன் பின்னணியை அறிந்து சரியான பொருளோடு வாசித்தறியும் விதத்தில் இது உங்களுக்கு உதவி செய்யும். சத்தியத்தை சரியான விதத்தில் கலப்பின்றி, தவறின்றி விளங்கிட உதவி செய்யும். தொடர்ந்து வேதத்தை வாசியுங்கள். தேவ பெலனடைந்து சாட்சிகளாயிருப்பீர்கள்.


“கர்த்தருடைய வேதம் குறைவற்றதும் ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது ” (சங்கீதம்: 19:7).


“நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திரு வசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்.” ((1பேதுரு: 2:2).




சார்லஸ் mc
கல்வியாளர்


பதிவுகள்: 4343
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 1721

View user profile

Back to top Go down

Page 13 of 13 Previous  1, 2, 3 ... 11, 12, 13

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum