|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» வசந்தமாய் அன்று வந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி!by DERAR BABU Today at 4:53 pm
» “கர்ப்பம்”
by thilaga Today at 4:24 pm
» முருகனின் பிறந்த நாள்!
by சாமி Today at 4:15 pm
» வாழ்வு...
by பார்த்திபன் Today at 4:11 pm
» காதல் ...காதல் ...
by பூவன் Today at 4:08 pm
» ஊமையாக அழுகிறது என் உள்ளம்...
by Pakee Today at 3:45 pm
» நேசிப்போம்...
by Pakee Today at 3:42 pm
» துயரோடு வாடி நின்றே !!
by பூவன் Today at 3:31 pm
» புன்னகை புன்னகைக்கும் தருணங்கள் ......
by பூவன் Today at 3:31 pm
» மழலை
by Pakee Today at 3:27 pm
» என் நினைவு மட்டும் கனவாக...
by Pakee Today at 3:21 pm
» நீ என் உலக அழகியடி...
by Pakee Today at 3:21 pm
» காதல்...
by Pakee Today at 3:20 pm
» ஆறாம் அறிவு.
by Pakee Today at 3:18 pm
» என்னுள் உன் நினைவுகள்...!
by Pakee Today at 3:15 pm
» அகலின் குறுங்கவிதைகளில் சில... பாகம் 15
by Pakee Today at 3:14 pm
» மகனாக வந்தவன்!
by Pakee Today at 3:12 pm
» நட்பால் இணைந்த உறவு , (படித்ததில் பிடித்த கதை )
by Pakee Today at 3:10 pm
» குழந்தைகளுக்கான சிறந்த மசாஜ் எண்ணெய்கள்!!!
by யினியவன் Today at 3:09 pm
» இனியவை நாற்பது - பூதஞ்சேந்தனார்
by சிவா Today at 2:40 pm
» இன்னா நாற்பது - கபிலர் இயற்றியது
by சிவா Today at 2:34 pm
» முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
by Muthumohamed Today at 2:31 pm
» சிரிப்பு + புன்னகை = சிறப்பு
by Muthumohamed Today at 2:27 pm
» வார்த்தைகள் தீர்ந்த வரிக்கவிதை ....
by பூவன் Today at 2:24 pm
» கல்யாணப் பாடல்கள் !
by krishnaamma Today at 2:14 pm
» இன்று நரசிம்ஹ ஜெயந்தி ! 24-5-2013
by யினியவன் Today at 2:06 pm
» திருமண வீட்டில் டான்ஸ் ஆட ரூ.8 கோடி வாங்கிய நடிகர் !
by யினியவன் Today at 2:02 pm
» பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை
by Muthumohamed Today at 12:19 pm
» ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்
by கா.ந.கல்யாணசுந்தரம் Today at 12:06 pm
» விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்!
by Muthumohamed Today at 12:02 pm
» தனியாக பயணிக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்...
by பூவன் Today at 11:23 am
» முகநூலில் ரசித்தவை-2
by MADHUMITHA Today at 11:23 am
» எல்லாவற்றுக்கும் ஒரு காரணம்!
by யினியவன் Today at 11:12 am
» கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள்.
by சிவா Today at 10:41 am
» சிதம்பர இரகசியம் என்றால் என்ன?
by MADHUMITHA Today at 10:32 am
» தமிழகத்தில் 34 எஸ்.பிக்கள் அதிரடி மாற்றம்
by யினியவன் Today at 10:20 am
» தற்கொலை செய்து கொண்ட காதல் மனைவி: வெப்கேமிராவில் பார்த்து கணவன் அதிர்ச்சி
by krishnaamma Today at 10:12 am
» மருந்து சாப்பிடும்போது மறக்கக்கூடாதவை..!
by krishnaamma Today at 10:04 am
» பரிதாபம்
by பூவன் Today at 9:37 am
» சீனாவிலிருந்து தேன் இறக்குமதி: தேனீ வளர்ப்போர் சங்கம் அச்சம்
by சிவா Today at 9:17 am
Top posting users this week
| MADHUMITHA | ||||
| பூவன் | ||||
| யினியவன் | ||||
| Muthumohamed | ||||
| balakarthik | ||||
| ஜாஹீதாபானு | ||||
| சிவா | ||||
| ராஜு சரவணன் | ||||
| krishnaamma | ||||
| பாலாஜி |
உள்நுழைய இங்கு அழுத்தவும்
டிஸ்னி வழிகாட்டுகிறது...
Page 1 of 1 • Share •
டிஸ்னி வழிகாட்டுகிறது...
சிறார்களுக்கான பொழுதுபோக்கு டிவி சேனல்களை நடத்திவரும் டிஸ்னி நிறுவனம் 2015 ஆம் ஆண்டு முதல் சிறார்களை மையப்படுத்தும் உடனடி உணவுகள் (ஜங்க் புட்) தொடர்பான விளம்பரங்களை ஒளிபரப்பப் போவதில்லை என்று தனது முடிவை அறிவித்திருக்கிறது. இந்த முடிவை உடனடியாக அமல்படுத்த முடியாததற்குக் காரணம் அவர்களுக்கு 2015 ஆம் ஆண்டு வரை விளம்பர ஒப்பந்தங்கள் இருப்பதுதான்.
இந்த முடிவின் மூலம் பல லட்சம் அமெரிக்க டாலர்களை இந்த நிறுவனம் இழக்க நேரிடலாம். 2011 ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தின் சேனல்களில் ஒளிபரப்பான உடனடி உணவுகள் தொடர்பான விளம்பரங்கள் மூலம் கிடைத்த வருவாய் 70 லட்சம் அமெரிக்க டாலர்கள் என்று மதிப்பிடப்படுகிறது. இந்த மதிப்பின் அளவு மேலும் உயரக்கூடும்.
அமெரிக்காவில் குழந்தைகளின் உடல்பருமன் தொடர்பான பிரச்னைகளும், இளைஞர்கள் சர்க்கரை நோய் வகை - 2 பிரச்னைக்கு ஆளாவதும் அண்மைக்காலமாக அதிகரித்து வருவதால் இத்தகைய நடவடிக்கையை சமூக நோக்குடன் டிஸ்னி எடுத்ததாகச் சொல்லப்படும் அதேவேளையில், பாதிப்பில்லாத உணவுகளை டிஸ்னி தனியாகச் சந்தைப்படுத்தத் திட்டமிட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
அமெரிக்காவில் ஆண்டுக்கு சுமார் 1,000 கோடி டாலர்களுக்கு விளம்பரங்கள் செய்யப்படுவதால், உடனடி உணவு விளம்பரங்களை மட்டும் நிறுத்துவதால் அதிக இழப்பு ஏற்பட்டுவிடாது என்ற கருத்தும் உள்ளது.
இப்படி ஓர் அதிரடி முடிவு எதற்காக என்றால், தொலைக்காட்சியில் காட்டப்படும் உடனடி உணவுகள்தான் சிறார்களைக் கவர்கின்றன, அதனால், விற்பனை அதிகரிக்கிறது என்பதால்தான். இந்த உண்மையைக் கருத்தில்கொண்டு பார்க்கும்போது, டிஸ்னி எடுத்துள்ள முடிவைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
இனி இந்தியாவின் நிலைமையைப் பற்றி சற்றுப் பார்ப்போம். உருளைக்கிழங்கு சிப்ஸ், காரவகைத் தின்பண்டங்கள், இனிப்புகள், பர்கர் போன்றவை, பானங்கள், பாட்டிலில் அடைக்கப்பட்ட பழச்சாறுகள், சாக்லெட், சத்துமாவுகள் என உடனடி உணவுக்கான விளம்பரங்கள் நிறைய தொலைக்காட்சிகளிலும் பத்திரிகைகளிலும் இடம்பெறுகின்றன. இந்த உணவுப் பொட்டலங்களில் அச்சிடப்பட்டுள்ள கலோரி, டிரான்ஸ்ஃபேட் (கரையாக் கொழுப்பு) ஆகியன குறித்து தரப்படும் புள்ளிவிவரங்கள் உண்மைக்கு மாறானவையாக உள்ளன.
அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் அண்மையில் நடத்திய ஆய்வுகளில் பல உடனடி உணவுகளில், கரையாக் கொழுப்பு அதிக அளவு இருப்பது கண்டறியபட்டது என்று அதன் இயக்குநர் சுனிதா நாராயண் குறிப்பிட்டிருக்கிறார். இருப்பினும் அரசின் நடவடிக்கை ஏதுமில்லை.
ஒரு நாளைக்கான திட்டமிட்ட உணவில், ஒரு சிறார் அல்லது இளம்பருவத்து நம்பி, நங்கையின் உணவில் இருக்க வேண்டிய உப்பு, சர்க்கரை, கொழுப்பு, கார்போஹைட்ரேட் அளவுக்கு அதிகமாக இந்த உடனடி உணவுகளில் இருக்கின்றன. இவை நாளடைவில் உடலுக்குப் பாதகமாக அமைகின்றன. உணவே நஞ்சாக மாறுகின்றது.
இந்த நிறுவனங்கள் ஒவ்வோர் உணவுப் பொருளையும் ஒருமுறை பரிமாறும் அளவு (ஒன் சர்வ்) எவ்வளவு என நிர்ணயிப்பதில் எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாததும் இத்தகைய உண்மைக்கு மாறான புள்ளிவிவரங்களைத் தருவதற்கு இடமாகிறது.
சிறார்கள் தங்கள் தின்பண்டங்கள், உடனடி உணவுகள், பொம்மைகள் எல்லாவற்றையும் விளம்பரங்கள் மூலமே தீர்மானிக்கின்றனர் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இதில் 60% தொலைக்காட்சிகளில் காணும் விளம்பரங்களால் ஏற்படும் தாக்கம்தான் என்று கூறப்படுகிறது.
சிறார்களால் விளம்பரத்தையும், விளம்பரக் காட்சியின் சம்பவத்தையும் பிரித்துப் பார்க்க முடிவதில்லை. உதாரணமாக, ஒரு கிரிக்கெட் வீரர் தனது ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் போட முடியாதபடி பேனா மக்கர் செய்யும்போது, ஒரு ரசிகர் நீட்டும் பேனா அவரது கையொப்பத்தை மிக அழகாக எழுதிச்செல்கிறது என்றால், அது அந்தப் பேனாவுக்கான விளம்பரம் என்று சிறார்கள் பார்ப்பதில்லை. அந்த கிரிக்கெட் வீரரின் மனதுக்கு உகந்த பேனா என்றுதான் பார்க்கிறார்கள். இதுதான் அனைத்து விளம்பரங்களின் விற்பனை உத்தியாக இருக்கிறது.
விளம்பர நிறுவனங்களின் அடுத்த உத்தி, சிறார்களின் "அன்புத்தொல்லை அதிக வணிகம்' என்கின்ற கோட்பாடுதான். குழந்தைகள் அடம்பிடித்தால், பொம்மை கார்கள் மட்டுமல்ல, நிஜக் கார்களையும்கூட பெற்றோர்களை வாங்க வைத்துவிடும் என்கிற மனோரீதியான தாக்குதல்தான் அது.
மேலும் இப்போதெல்லாம் குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் பாக்கெட் மணி, தந்தை தாய் வாங்கும் சம்பளத்தின் அளவைப் பொறுத்துள்ளது. ஆகவே குழந்தைகளும் வாங்குசக்தி கொண்டவர்களாக இருக்கிறார்கள். அதனால்தான் பாக்கெட்டில் அடைக்கப்பட்டுள்ள சிப்ஸ் மற்றும் பருப்பு வகைகளும் குளிர்பான வகைகளும் மிக அதிகம் விற்பனையாகின்றன.
சில தனியார் பள்ளிகளில் இத்தகைய உணவுகளுக்குத் தடை விதித்து, பாரம்பரியத் தின்பண்டங்களை விற்கச் செய்கிறார்கள். ஆனாலும் மாணவர்கள் வெளியே வாங்கிச் சாப்பிடுவதைத் தடுக்க யாரால் முடியும்?
இந்தியாவில் விளம்பரங்களின் அளவு 600 கோடி அமெரிக்க டாலர்கள் என்று மதிப்பிடப்படுகிறது. இது மேலும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மருத்துவம், ஆட்டோமொபைல், வீட்டுமனை, அடுக்குமனை என்று ஆயிரமாயிரம் விளம்பரங்களுக்கு வழி இருக்கும்போது குறைந்தபட்சம் குழந்தைகளுக்குக் கேடு விளைவிக்கும் உடனடி உணவுகள் தொடர்பான விளம்பரங்களை ஒளிபரப்பப்போவதில்லை என்று டிஸ்னி நிறுவனம் செய்திருப்பதுபோல இந்தியாவில் உள்ள தொலைக்காட்சி நிறுவனங்கள் எவையேனும் முடிவு மேற்கொள்ளுமா?
உடனடி உணவு உறைகளில் அச்சிடப்பட்டுள்ள தகவல்களை அரசு சரிபார்த்து, நடவடிக்கை எடுக்குமா?
வியாபாரத்திற்கும்கூட சில அடிப்படை விதிகள், தர்மங்கள் இருந்த காலம் போய், அவை நுகர்வோர் கலாசார உலகில் காலாவதியாகிப்போன தத்துவங்களாகிவிட்டன. வருங்கால சந்ததியரையும், நமக்குப் பின்னும் வாழ வேண்டிய உலகத்தையும் பற்றிய அடிப்படைச் சிந்தனைகூட இல்லாமல் நாமும், நம்மால் தேர்ந்தெடுக்கப்படும் அரசும், அந்த அரசின்கீழ் இயங்கும் நிர்வாக இயந்திரமும் இருந்தால் எப்படி?
(நன்றி தினமணி தலையங்கம்)
இந்த முடிவின் மூலம் பல லட்சம் அமெரிக்க டாலர்களை இந்த நிறுவனம் இழக்க நேரிடலாம். 2011 ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தின் சேனல்களில் ஒளிபரப்பான உடனடி உணவுகள் தொடர்பான விளம்பரங்கள் மூலம் கிடைத்த வருவாய் 70 லட்சம் அமெரிக்க டாலர்கள் என்று மதிப்பிடப்படுகிறது. இந்த மதிப்பின் அளவு மேலும் உயரக்கூடும்.
அமெரிக்காவில் குழந்தைகளின் உடல்பருமன் தொடர்பான பிரச்னைகளும், இளைஞர்கள் சர்க்கரை நோய் வகை - 2 பிரச்னைக்கு ஆளாவதும் அண்மைக்காலமாக அதிகரித்து வருவதால் இத்தகைய நடவடிக்கையை சமூக நோக்குடன் டிஸ்னி எடுத்ததாகச் சொல்லப்படும் அதேவேளையில், பாதிப்பில்லாத உணவுகளை டிஸ்னி தனியாகச் சந்தைப்படுத்தத் திட்டமிட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
அமெரிக்காவில் ஆண்டுக்கு சுமார் 1,000 கோடி டாலர்களுக்கு விளம்பரங்கள் செய்யப்படுவதால், உடனடி உணவு விளம்பரங்களை மட்டும் நிறுத்துவதால் அதிக இழப்பு ஏற்பட்டுவிடாது என்ற கருத்தும் உள்ளது.
இப்படி ஓர் அதிரடி முடிவு எதற்காக என்றால், தொலைக்காட்சியில் காட்டப்படும் உடனடி உணவுகள்தான் சிறார்களைக் கவர்கின்றன, அதனால், விற்பனை அதிகரிக்கிறது என்பதால்தான். இந்த உண்மையைக் கருத்தில்கொண்டு பார்க்கும்போது, டிஸ்னி எடுத்துள்ள முடிவைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
இனி இந்தியாவின் நிலைமையைப் பற்றி சற்றுப் பார்ப்போம். உருளைக்கிழங்கு சிப்ஸ், காரவகைத் தின்பண்டங்கள், இனிப்புகள், பர்கர் போன்றவை, பானங்கள், பாட்டிலில் அடைக்கப்பட்ட பழச்சாறுகள், சாக்லெட், சத்துமாவுகள் என உடனடி உணவுக்கான விளம்பரங்கள் நிறைய தொலைக்காட்சிகளிலும் பத்திரிகைகளிலும் இடம்பெறுகின்றன. இந்த உணவுப் பொட்டலங்களில் அச்சிடப்பட்டுள்ள கலோரி, டிரான்ஸ்ஃபேட் (கரையாக் கொழுப்பு) ஆகியன குறித்து தரப்படும் புள்ளிவிவரங்கள் உண்மைக்கு மாறானவையாக உள்ளன.
அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் அண்மையில் நடத்திய ஆய்வுகளில் பல உடனடி உணவுகளில், கரையாக் கொழுப்பு அதிக அளவு இருப்பது கண்டறியபட்டது என்று அதன் இயக்குநர் சுனிதா நாராயண் குறிப்பிட்டிருக்கிறார். இருப்பினும் அரசின் நடவடிக்கை ஏதுமில்லை.
ஒரு நாளைக்கான திட்டமிட்ட உணவில், ஒரு சிறார் அல்லது இளம்பருவத்து நம்பி, நங்கையின் உணவில் இருக்க வேண்டிய உப்பு, சர்க்கரை, கொழுப்பு, கார்போஹைட்ரேட் அளவுக்கு அதிகமாக இந்த உடனடி உணவுகளில் இருக்கின்றன. இவை நாளடைவில் உடலுக்குப் பாதகமாக அமைகின்றன. உணவே நஞ்சாக மாறுகின்றது.
இந்த நிறுவனங்கள் ஒவ்வோர் உணவுப் பொருளையும் ஒருமுறை பரிமாறும் அளவு (ஒன் சர்வ்) எவ்வளவு என நிர்ணயிப்பதில் எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாததும் இத்தகைய உண்மைக்கு மாறான புள்ளிவிவரங்களைத் தருவதற்கு இடமாகிறது.
சிறார்கள் தங்கள் தின்பண்டங்கள், உடனடி உணவுகள், பொம்மைகள் எல்லாவற்றையும் விளம்பரங்கள் மூலமே தீர்மானிக்கின்றனர் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இதில் 60% தொலைக்காட்சிகளில் காணும் விளம்பரங்களால் ஏற்படும் தாக்கம்தான் என்று கூறப்படுகிறது.
சிறார்களால் விளம்பரத்தையும், விளம்பரக் காட்சியின் சம்பவத்தையும் பிரித்துப் பார்க்க முடிவதில்லை. உதாரணமாக, ஒரு கிரிக்கெட் வீரர் தனது ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் போட முடியாதபடி பேனா மக்கர் செய்யும்போது, ஒரு ரசிகர் நீட்டும் பேனா அவரது கையொப்பத்தை மிக அழகாக எழுதிச்செல்கிறது என்றால், அது அந்தப் பேனாவுக்கான விளம்பரம் என்று சிறார்கள் பார்ப்பதில்லை. அந்த கிரிக்கெட் வீரரின் மனதுக்கு உகந்த பேனா என்றுதான் பார்க்கிறார்கள். இதுதான் அனைத்து விளம்பரங்களின் விற்பனை உத்தியாக இருக்கிறது.
விளம்பர நிறுவனங்களின் அடுத்த உத்தி, சிறார்களின் "அன்புத்தொல்லை அதிக வணிகம்' என்கின்ற கோட்பாடுதான். குழந்தைகள் அடம்பிடித்தால், பொம்மை கார்கள் மட்டுமல்ல, நிஜக் கார்களையும்கூட பெற்றோர்களை வாங்க வைத்துவிடும் என்கிற மனோரீதியான தாக்குதல்தான் அது.
மேலும் இப்போதெல்லாம் குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் பாக்கெட் மணி, தந்தை தாய் வாங்கும் சம்பளத்தின் அளவைப் பொறுத்துள்ளது. ஆகவே குழந்தைகளும் வாங்குசக்தி கொண்டவர்களாக இருக்கிறார்கள். அதனால்தான் பாக்கெட்டில் அடைக்கப்பட்டுள்ள சிப்ஸ் மற்றும் பருப்பு வகைகளும் குளிர்பான வகைகளும் மிக அதிகம் விற்பனையாகின்றன.
சில தனியார் பள்ளிகளில் இத்தகைய உணவுகளுக்குத் தடை விதித்து, பாரம்பரியத் தின்பண்டங்களை விற்கச் செய்கிறார்கள். ஆனாலும் மாணவர்கள் வெளியே வாங்கிச் சாப்பிடுவதைத் தடுக்க யாரால் முடியும்?
இந்தியாவில் விளம்பரங்களின் அளவு 600 கோடி அமெரிக்க டாலர்கள் என்று மதிப்பிடப்படுகிறது. இது மேலும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மருத்துவம், ஆட்டோமொபைல், வீட்டுமனை, அடுக்குமனை என்று ஆயிரமாயிரம் விளம்பரங்களுக்கு வழி இருக்கும்போது குறைந்தபட்சம் குழந்தைகளுக்குக் கேடு விளைவிக்கும் உடனடி உணவுகள் தொடர்பான விளம்பரங்களை ஒளிபரப்பப்போவதில்லை என்று டிஸ்னி நிறுவனம் செய்திருப்பதுபோல இந்தியாவில் உள்ள தொலைக்காட்சி நிறுவனங்கள் எவையேனும் முடிவு மேற்கொள்ளுமா?
உடனடி உணவு உறைகளில் அச்சிடப்பட்டுள்ள தகவல்களை அரசு சரிபார்த்து, நடவடிக்கை எடுக்குமா?
வியாபாரத்திற்கும்கூட சில அடிப்படை விதிகள், தர்மங்கள் இருந்த காலம் போய், அவை நுகர்வோர் கலாசார உலகில் காலாவதியாகிப்போன தத்துவங்களாகிவிட்டன. வருங்கால சந்ததியரையும், நமக்குப் பின்னும் வாழ வேண்டிய உலகத்தையும் பற்றிய அடிப்படைச் சிந்தனைகூட இல்லாமல் நாமும், நம்மால் தேர்ந்தெடுக்கப்படும் அரசும், அந்த அரசின்கீழ் இயங்கும் நிர்வாக இயந்திரமும் இருந்தால் எப்படி?
(நன்றி தினமணி தலையங்கம்)
சாமி- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள்: 802
சேர்ந்தது: 08/08/2011
மதிப்பீடு: 641

Re: டிஸ்னி வழிகாட்டுகிறது...
நல்ல விழிப்புணர்வு பதிவுக்கு மிக்க நன்றி

பாலாஜி- தலைமை நடத்துனர்
- பதிவுகள்: 14075
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 2318
Re: டிஸ்னி வழிகாட்டுகிறது...
டிஸ்னி நிர்வாகத்திற்கு பாராட்டுகள்.
நம்ம ஊரில் எந்த சானல்கள் இதைப் பின்பற்ற போகிறது பார்க்கலாம்.
பகிர்வுக்கு நன்றி சாமி.
நம்ம ஊரில் எந்த சானல்கள் இதைப் பின்பற்ற போகிறது பார்க்கலாம்.
பகிர்வுக்கு நன்றி சாமி.

யினியவன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்: 20614
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 4325
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum














