புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:59 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 2:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:05 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:59 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரம்ம லிங்கேஸ்வரர் Poll_c10பிரம்ம லிங்கேஸ்வரர் Poll_m10பிரம்ம லிங்கேஸ்வரர் Poll_c10 
78 Posts - 52%
heezulia
பிரம்ம லிங்கேஸ்வரர் Poll_c10பிரம்ம லிங்கேஸ்வரர் Poll_m10பிரம்ம லிங்கேஸ்வரர் Poll_c10 
60 Posts - 40%
mohamed nizamudeen
பிரம்ம லிங்கேஸ்வரர் Poll_c10பிரம்ம லிங்கேஸ்வரர் Poll_m10பிரம்ம லிங்கேஸ்வரர் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
பிரம்ம லிங்கேஸ்வரர் Poll_c10பிரம்ம லிங்கேஸ்வரர் Poll_m10பிரம்ம லிங்கேஸ்வரர் Poll_c10 
5 Posts - 3%
Srinivasan23
பிரம்ம லிங்கேஸ்வரர் Poll_c10பிரம்ம லிங்கேஸ்வரர் Poll_m10பிரம்ம லிங்கேஸ்வரர் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பிரம்ம லிங்கேஸ்வரர் Poll_c10பிரம்ம லிங்கேஸ்வரர் Poll_m10பிரம்ம லிங்கேஸ்வரர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரம்ம லிங்கேஸ்வரர் Poll_c10பிரம்ம லிங்கேஸ்வரர் Poll_m10பிரம்ம லிங்கேஸ்வரர் Poll_c10 
120 Posts - 55%
heezulia
பிரம்ம லிங்கேஸ்வரர் Poll_c10பிரம்ம லிங்கேஸ்வரர் Poll_m10பிரம்ம லிங்கேஸ்வரர் Poll_c10 
81 Posts - 37%
T.N.Balasubramanian
பிரம்ம லிங்கேஸ்வரர் Poll_c10பிரம்ம லிங்கேஸ்வரர் Poll_m10பிரம்ம லிங்கேஸ்வரர் Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
பிரம்ம லிங்கேஸ்வரர் Poll_c10பிரம்ம லிங்கேஸ்வரர் Poll_m10பிரம்ம லிங்கேஸ்வரர் Poll_c10 
7 Posts - 3%
Srinivasan23
பிரம்ம லிங்கேஸ்வரர் Poll_c10பிரம்ம லிங்கேஸ்வரர் Poll_m10பிரம்ம லிங்கேஸ்வரர் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பிரம்ம லிங்கேஸ்வரர் Poll_c10பிரம்ம லிங்கேஸ்வரர் Poll_m10பிரம்ம லிங்கேஸ்வரர் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரம்ம லிங்கேஸ்வரர்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 19, 2012 12:04 pm


பிரம்ம லிங்கேஸ்வரர் E_1342538344

எல்லோருடைய தலை எழுத்தையும் எழுதும் பிரம்மாவுக்கு அவர் தலையில் யார் என்ன எழுதினார்களோ சாபத்துக்கு மேல் சாபம் வந்து சேர்ந்தது அவருக்கு.

அதுவும் பட்டகாலிலேயே படும் என்பதுபோல, ஒரே மாதிரியான சாபம். முதலில் சாபமிட்டவர் பிருகு முனிவர்.

ஒருசமயம் ரிஷிகள் எல்லோரும் சேர்ந்து, சரஸ்வதி நதிக்கரையில் ஒரு யாகம் நடத்தத் தீர்மானித்தார்கள்.

அந்த யாகத்தில் யாருக்கு முதல் மரியாதை தருவது என்ற கேள்வி எழுந்தது. அதற்காக மும்மூர்த்தியரையும் பரீட்சிக்கத் தீர்மானித்த ரிஷிகள், அந்தப் பணியைச் செய்திட பிருகு முனிவரை அனுப்பினர்.

பிருகு முனிவர் முதலில் சென்ற இடம் சத்யலோகம். அதாவது பிரம்மாவின் இருப்பிடம். அங்கே முனிவருக்கு சரியான வரவேற்போ மரியாதையோ கிடைக்காததால் முனிவர் சினத்தோடு பிரம்மாவுக்கு சாபம் விட்டார்.

“பூவுலகில் உனக்கு கோயிலே இல்லாமல் போகட்டும்..!’

முனிவரின் ராசியோ என்னவோ பிரம்மாவுக்குக் கிடைத்த இரண்டாவது சாபமும் “பூலோகத்தில் பூஜையோ கோயிலோ உனக்கு இல்லாமல் போகட்டும்’ என்றே விடப்பட்டது.

இரண்டாவது சாபத்தை விட்டவர், சிவபெருமான்.

திருமாலும், நான்முகனும் தங்களின் யார் பெரியவர் என்று சண்டைபோட்டது, அப்போது ஜோதிவடிவாக சிவபிரான் அங்கே தோன்றி தனது திருவடி திருமுடி காணச் சொன்னது, அந்த சமயத்தில் பிரம்மா பொய் சொல்லி சாபத்துக்கு ஆளானது எல்லாம் உங்களுக்கே தெரியும்தானே!

மூன்றாவதாக சாபம் விட்டவர், சரஸ்வதி. தான் படைத்தவளைத் தானே மணந்துகொண்டதால் பிரம்மாவுக்கு வந்த சாபம் அது. அதுவும்... வேறே என்ன “மண்ணுலகில் உமக்கு கோயில் எழுப்ப மாட்டார்கள்...!’ என்ற அதே சாபம்தான்.

இப்படி சாபத்துக்கு மேல் சாபம் வாங்கியதாலோ என்னவோ, மற்ற எல்லோருடைய சாபத்துக்கும் விமோசனம் கிடைப்பதுபோல் நான்முகனின் சாபத்துக்கு மட்டும் விமோசனமே இல்லாமல் போய்விட்டது. ஆனாலும் ஆறுதலளிப்பதுபோல் மிக அபூர்வமாக ஓரிரு கோயில்கள் பிரம்மாவுக்கு இருக்கின்றன.

அப்படி அமைந்த கோயில்களுள் பிரபலமானது. புஷ்கர் பிரம்மா கோயில். பலருக்கும் தெரியாத ஒரு பிரம்மா ஆலயத்தைத்தான் நாம் இப்போது தரிசிக்கப் போகிறோம்.

இந்த ஆலயம் இருப்பது, ஆந்திராவில் குண்டூரில் இருந்து சுமார் பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள செபரோலு என்ற கிராமத்தில் கோயிலின் பெயர், சதுர்முக பிரம்ம லிங்கேஸ்வரசுவாமி திருக்கோயில்.

பிரம்மாவின் இருப்பிடம் தாமரைமலர் என்கின்றன புராணங்கள். அதனாலோ என்னவோ இந்தக் கோயிலும் ஒரு தாமரைப் பூவைப்போல குளத்தின் நடுவில் அமைந்துள்ளது.

நான்கு புறமும் படிகள் அமைந்து அழகான குளம். அதன் நடுவே இருக்கும் கோயிலுக்குச் செல்ல நீளமான பாதை சுற்றிலும் தணீர் நிறைந்து நிற்க, ஜில் காற்று நம்மைத் தழுவ, இயற்கையின் பசுமை கண்களைக் குளிர்வித்து மனதிற்கு இதமளிக்க, அமைதியான சூழலில் அமைந்திருக்கிறது கோயில்!

ஒரே ஒரு கர்ப்பகிரகம் மட்டுமே இருக்கிறது. வலம் வர விசாலமான பிரதட்சணப் பாதை. கர்ப்பகிரகத்தின் எதிரே உள்ள துவஜஸ்தம்பத்தின் உச்சியில் ஒரு சூலம் காணப்படுகிறது. சூலத்திலும் துவஜஸ்தம்பத்திலும் ஏராளமான மணிகள் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கின்றன.

கருவறையில் உயரமான தாமரை மலர் போன்ற பீடத்தில் பிரம்ம லிங்கேஸ்வரரின் தரிசனம் கிடைக்கிறது. அந்த லிங்கத் திருமேனியின் நான்கு புறமும் பிரம்மாவின் உருவம் செதுக்கப் பட்டு உள்ளது. ஒரு காலை மடக்கி அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார் நான்முகன். நான்கு புறமும் தரிசனம் செய்வதற்கு வசதியாக நான்கு ஜன்னல்கள் அமைந்திருக்கிறார்கள். அபிஷேக, அர்ச்சனை, பூஜைகள் தினமும் நடைபெறுகின்றன.

இந்தக் கோயிலுக்குப் பக்கத்திலேயே ஒரு சிவன், ரங்கநாதர் வேணு கோபாலசுவாமி கோயில்கள் அமைந்திருப்பது ஆச்சரியமான விஷயம். அருகில் ஒரே கல்லால் ஆன பெரிய நந்திதேவர் தரிசனமும் கிடைக்கிறது.

பேரரசர்கள் பலர் ஆண்ட பெருமைக்கும் பழமைக்கும் உரிய தலம் இது. வெவ்வேறு வம்சத்து அரசர்கள் ஆட்சி செய்ததால் அவரவர் காலத்தில் கோயில்கள் அமைக்கப்பட்டதில், இந்த ஊரில் நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்கள் இருந்தனவாம். காலப்போக்கில் பல அழிந்துவிட இப்பொழுது ஒரு சில கோயில்கள் மட்டுமே இருப்பதாகச் சொல்கிறார்கள்.

எப்படியோ, பிரம்மாவுக்கு கோயில்கள் இருப்பதே அபூர்வம். அதிலும் பக்கத்தில் இருந்த பல கோயில்கள் சிதைந்து சீரழிந்து காலப்போக்கில் மறைந்தும்விட்ட நிலையில் இந்த பிரம்மன் கோயில் நிலைத்திருப்பது அதிசயம்! பழமையான பக்தி அதிர்வுகள் நிறைந்த கோயில். கிராமிய மணத்தைத் தொலைக்காத வித்தியாசமான சூழல். வேண்டிக்கொள்ள வேண்டிய அவசியமே இல்லாமல், தரிசனம் செய்தாலே தேவைகள் எல்லாம் ஈடேறச் செய்யும் பிரம்ம லிங்கேஸ்வரர். இன்னும் வேறு என்ன வேண்டும் நீங்கள் இந்தக் கோயிலுக்குச் சென்றுவர...!

- சமாத்மிகா, பெங்களூரு.



பிரம்ம லிங்கேஸ்வரர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jul 19, 2012 12:36 pm

எப்படியோ, பிரம்மாவுக்கு கோயில்கள் இருப்பதே அபூர்வம். அதிலும் பக்கத்தில் இருந்த பல கோயில்கள் சிதைந்து சீரழிந்து காலப்போக்கில் மறைந்தும்விட்ட நிலையில் இந்த பிரம்மன் கோயில் நிலைத்திருப்பது அதிசயம்! பழமையான பக்தி அதிர்வுகள் நிறைந்த கோயில். கிராமிய மணத்தைத் தொலைக்காத வித்தியாசமான சூழல். வேண்டிக்கொள்ள வேண்டிய அவசியமே இல்லாமல், தரிசனம் செய்தாலே தேவைகள் எல்லாம் ஈடேறச் செய்யும் பிரம்ம லிங்கேஸ்வரர். இன்னும் வேறு என்ன வேண்டும் நீங்கள் இந்தக் கோயிலுக்குச் சென்றுவர...!
:வணக்கம்: நன்றி
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக