புதிய இடுகைகள்
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?heezulia
காங்., பேரணியில் பாலியல் தொல்லை
M.Jagadeesan
ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
M.Jagadeesan
கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
M.Jagadeesan
ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
ayyasamy ram
ஐ.பி.எல் -2018 !!
ayyasamy ram
கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
ayyasamy ram
பசு மாடு கற்பழிப்பு
அம்புலிமாமா
இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
அம்புலிமாமா
மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
அம்புலிமாமா
வணக்கம் நண்பர்களே
அம்புலிமாமா
தலைவருக்கு ஓவர் மறதி...!!
ayyasamy ram
ட்விட்டரில் ரசித்தவை
ayyasamy ram
மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
ayyasamy ram
தலைவர் தத்துவமா பேசறார்....!!
ayyasamy ram
பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
ayyasamy ram
சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
சிவனாசான்
நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
ayyasamy ram
ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
ayyasamy ram
கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
SK
பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
SK
பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
SK
சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
SK
தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
ayyasamy ram
என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
ஜாஹீதாபானு
சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
SK
அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
SK
முகநூல் நகைச்சுவை படங்கள்
SK
என்ன படம், யார் யார் நடிச்சது
SK
வெறுப்பா இருக்கு!
SK
கருத்து சித்திரம் - தொடர் பதிவு
SK
38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
SK
சிந்திக்க சில நொடிகள்
SK
எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
SK
100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
SK
பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
ayyasamy ram
மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
ayyasamy ram
‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
M.Jagadeesan
கீரையின் பயன்கள்
danadjeane
மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
பழ.முத்துராமலிங்கம்
அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
பழ.முத்துராமலிங்கம்
மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
பழ.முத்துராமலிங்கம்
கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
பழ.முத்துராமலிங்கம்
அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
T.N.Balasubramanian
ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
SK
வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
SK
நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
SK
ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
ஜாஹீதாபானு
அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
SK
தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
SK
மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
SK
உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
SK
அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
SK
நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
SK
திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
SK
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
SK
ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
SK
பயனுள்ள மருத்துவ நூல்கள்
மாணிக்கம் நடேசன்
அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
krishnaamma
முருங்கைக்கீரை கூட்டு
krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்
Top posting users this week
SK |
| |||
ayyasamy ram |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
heezulia |
| |||
ஜாஹீதாபானு |
| |||
ராஜா |
| |||
M.Jagadeesan |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
SK |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
ராஜா |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
M.Jagadeesan |
| |||
மூர்த்தி |
| |||
heezulia |
|
Admins Online
பனித்துளி - சினிமா விமர்சனம்
பனித்துளி - சினிமா விமர்சனம்
முடிவே கட்டிவிட்டார்கள் போலிருக்கிறது..! பணம் இருந்தால் நாம நினைக்குறதையெல்லாம் படமாக்கி வெளியிட்டுவிடலாம். நம் படத்தை எதிர்பார்த்து சோறு, தண்ணியில்லாமல் பல பேர் தமிழ்நாட்டில் தவியாய் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று பலருக்கும் நினைப்பு.. நட்டிகுமார், டாக்டர் ஜெய் என்ற இரட்டை இயக்குநர்கள் இப்படித்தான் யோசித்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

ஷார்ட் மெமரி லாஸ் அல்லது செலக்டிவ் அம்னீஷியா என்று இரு டைப்புகளில் சொல்லிக் கொள்ளலாம்.. அந்த நோய் வந்து தனது காதலியை மறந்தவன் திரும்பவும் எப்படி தனது காதலியை அடைகிறான் என்பதைத்தான் நமக்கே ஷார்ட் மெமரி லாஸ் ஏற்படும் அளவுக்கு மூளையை கிறங்கடித்து சொல்லி முடித்திருக்கிறார்கள்..
ஹீரோ கணேஷ் வெங்கட்ராமன், டாக்டருக்கு படிக்கும் கல்பனா பண்டிட்டை காதலிக்கிறார். கல்பனாவின் படிப்பு முடிவதற்குள்ளாகவே கணேஷுக்கு அமெரிக்காவில் வேலை கிடைக்க ஒரு வருஷம்தானே போயிட்டு வா.. அதுக்குள்ள நான் படிப்பை முடிச்சர்றேன் என்கிறாள் காதலி. காதலியின் தாதா அப்பாவோ தனது மகளை ஒரு வருடம் பார்க்காமல் இருக்க வேண்டும். அதன் பின்பும் இருவரும் காதலிப்பதாகச் சொன்னால் தான் திருமணம் செய்து வைப்பதாகச் சொல்கிறார். இதை நம்பி அமெரிக்கா செல்லும் ஹீரோவை அங்கேயே கொலை செய்யும் முயற்சி நடக்கிறது. இதில் சிக்கி தலையில் அடிபட்டு கடைசி 4 வருட நினைவுகளை இழக்கிறார் ஹீரோ. ஹீரோயினையும் சேர்த்துதான்..!
இதன் பின்பு தனது அலுவலக கொலீக்குடன் தொடர்பு ஏற்பட்டு அந்த நட்பு படுக்கைவரையிலும் பாய்ந்தோடி சென்று கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் மலையாள கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் படத்தில் வருவதைப் போல சான்பிரான்சிஸ்கோ காட்டுக்குள் ஒரு நாள் இவர்கள் தங்கியிருக்கும்போது அங்கேயிருந்த பழங்குடி மக்கள் கொடுத்த ஒரு பானத்தைக் குடித்துத் தொலைகிறார் ஹீரோ. உடனேயே பழைய கதையெல்லாம் ஞாபகத்துக்கு வந்து விடுகிறது.. ஆனாலும் ஒரு ஸ்டெடி மைண்டாய் இல்லை என்பதால் மீண்டும் ஹாஸ்பிட்டல், ட்ரீட்மெண்ட்..
இடையில் திடீரென்று தனது காதலியை அமெரிக்காவிலேயே மருத்துவராகப் பார்த்து விடுகிறார். அறுந்து போன காதல் நூலை காதலியிடம் நீட்டிக் கொண்டிருக்க. அவளோ அதைப் பற்றிக் கொள்ளாமல் இருக்கிறார். இப்போது ஹீரோ எப்படி அவளை கைப்பிடிக்கிறார் என்பதை தைரியம் இருந்தால் தியேட்டருக்கு போய் படத்தைப் பார்த்து தெரிஞ்சுக்குங்க..!
கலகலப்பு, மிரட்டல் போன்ற படங்களில் லாஜிக் பார்க்க தேவையே இல்லை.. அது நகைச்சுவை.. ச்சும்மா டைம்பாஸ் என்று சொல்லித்தான் அழைக்கிறார்கள். ஆனால் இதில் அப்படியில்லையே..? முதல் காட்சியில் இருந்து கிளைமாக்ஸ்வரையிலும் ஓட்டையான லாஜிக் திரைக்கதையை வைத்துக் கொண்டு முடிந்த அளவுக்கு எடுத்துத் தந்திருக்கிறார்கள் இயக்குநர்கள்..!
அமெரிக்காவில் இப்படி நட்ட நடு ரோட்டில் துப்பாக்கியுடன் எவனாவது ஓட முடியுமா..? ஓடியவன் அடுத்த நாள் வெளியில் இருக்க முடியுமா..? ம்ஹூம்.. சான்பிரான்சிஸ்கோவில் பழங்குடியினரின் கதை.. ஹீரோவை கொலை செய்ய நடக்கும் முயற்சிகள்.. மருத்துவர் அருணின் “தமிழா.. தமிழ் தெரியுமா..? தமிழ்ல பேசுறீங்க..” என்ற கேணத்தனமான கேள்வி..! ஹீரோ அமெரிக்கா வந்து 2 வருஷமாகியும் அவரோட வீட்டுக்காரங்க அவரைப் பத்தி கவலையே படலையா..? காதலியோட அப்பன் நம்ம ஊர்ல பட்டப் பகல்ல ஒருத்தனை பெட்ரோல் ஊத்திக் கொளுத்துறான்.. “அதை உன் பொண்ணுகிட்ட போட்டுக் கொடுத்திருவேன்.. நான் நடிக்கிறதை நீ கண்டுக்காத.. கல்யாணத்தை செஞ்சு வைன்னு..” கிளைமாக்ஸ்ல ஹீரோ உருகுறதுல சாமி சத்தியமா ஒரு பீலிங்ஸும் வரலை..! “எந்தக் காட்சி இப்போது நடப்பது.. எது முன்பு நடந்தது..? எது ரீலு.. எது அந்து போன ரீலு..?” என்று மாற்றி, மாற்றிக் காட்டியதில் சினிமா பார்ப்பதையே தொழிலாக வைத்திருக்கும் என்னைப் போன்றவர்களுக்கே கொஞ்சம் கஷ்டமாகியிருக்க.. கொட்டாம்பட்டியில் இந்தப் படத்தைப் பார்க்கும் ரசிகன் என்ன ஆவானோ..? பாவம்.
கணேஷ் வெங்கட்ராமன் அர்னால்டு மாதிரி உடம்பை சிக்கென்று வைத்திருக்கிறார். அடிக்கடி சட்டையைக் கழட்டி தனது சிக்ஸ் பேக் உடம்பைக் காட்டி தனது ரசிகைகளை சந்தோஷப்படுத்தியிருக்கிறார். அவருக்கான காட்சிகளில் அழுத்தமோ, இம்ப்ரஸ்ஸிவ்வோ இல்லாததால் ஜஸ்ட் பாஸ் ஹீரோவாகி தப்பித்துச் செல்கிறார்.
2 ஹீரோயின்களில் கல்பனா பண்டிட்டின் பிலிமோகிராபி பல படங்களைக் காட்டுது.. அம்மணியும் நல்லாவே காட்டியிருக்கு. இன்னொரு புதுமுகம் ஷோபனா.. நேரில் பார்ப்பதைவிட ஸ்கிரீனில் அழகாகத் தெரிகிறார். ஆனாலும் பிரிண்ட்டின் நிறப்பிரிகையினால் அதுவும் தெளிவில்லாமல் இருக்கிறது..! காதல் காட்சிகளில் அழகாய் மிளிர்கிறார்.. பாடல் காட்சிகளில் ஜொலிக்கிறார்.. மற்றவைகளில் அதிகம் அவருக்கு வேலையில்லை என்பதால் கவனிப்பாரற்று கிடக்கிறது ஹீரோயின் போர்ஷன்..!
இதுவே இப்படியென்றால் இசை, பாடல்கள் பற்றியெல்லாம் நமக்கென்ன கவலை..? Agnel Roman & Faizan Hussain அப்படீன்னு ரெண்டு பேர் இசையமைப்பு செஞ்சிருக்காங்களாம்.. ஒளிப்பதிவை மட்டும் முடிந்த அளவுக்கு சிறப்பாக கொடுக்க வேண்டும் என்று மெனக்கெட்டிருக்கிறார்கள் என்பது மட்டும் புரிகிறது..! அதற்கு மட்டும் எனது வாழ்த்துகள்..!
இந்த டிஜிட்டல் யுகம் வந்தாலும் வந்துச்சு.. ஆளாளுக்கு கேமிராவைத் தூக்கிட்டு நாங்களும் ரவுடிதான்னு கிளம்பிர்றாங்க.. அமெரிக்கா போயி இவ்வளவு நல்லா காசு செலவு பண்றவங்க கதை, திரைக்கதைக்கு கொஞ்சம் மெனக்கெட்டு மெரீனா பீச்லயாவது உக்காந்து பேசிட்டு கிளம்பினாத்தான் என்ன..? கணேஷ் வெங்கட்ராமனுக்கு இப்போ என்ன மார்க்கெட் இருக்கா..? அவரை ஹீரோவா போட்டா விநியோகஸ்தர்கள் வாங்குவாங்களா..? தியேட்டராவது வாடகைக்குக் கிடைக்குமா..? போஸ்டர் அடிக்கிற காசாவது திரும்ப வருமா..? இதையெல்லாம் யோசித்தார்களோ இல்லையோ.. படம் பார்க்குற நமக்கு பக், பக்குன்னு அடிச்சுக்குது.. தயாரிப்பாளர் பாவமாச்சேன்னு..! ஆனாலும் தயாரிப்பு பார்ட்டி பெரிய ஆளுகதான்.. இதுனால சேதாரத்தைப் பத்தி அவுங்க கவலைப்படப் போறதில்லை.. தமிழ், ஹிந்தில ஒரே நேரத்துல இதை எடுத்திருக்காங்கன்னா பார்த்துக்குங்களேன்..!
கணேஷின் நோய் தொடர்பான காட்சிக் குழப்பங்களை மட்டும் நேர்ப்படுத்தியிருந்தால், இடைவேளைக்கு முன்பிருந்தே படத்தை ரசித்திருக்க முடியும் என்று நினைக்கிறேன்.. இறுதிக் காட்சியில் இது அத்தனையும் டூப்பு என்று ஒரு வரி டயலாக்கில் சொல்லி கணேஷ் தப்பிக்கப் பார்ப்பதும், துப்பாக்கியோடு வந்த மாமனார் மனசிரங்கி மகளை தாரை வார்க்க சம்மதிப்பதும் அக்மார்க் பூவை காதில் சுற்றும் வேலை.. இதற்குள் மக்கள் போதுமடா சாமின்ற லெவலுக்கு போயிட்டாங்க..! கணேஷுக்கு இப்போது உடனடி தேவை.. நல்லதொரு கதை.. நல்லதொரு இயக்குநர்..!
ம்ஹூம்.. வேற ஒண்ணும் சொல்றதுக்கில்லை..!
--
உண்மை தமிழன்
ஷார்ட் மெமரி லாஸ் அல்லது செலக்டிவ் அம்னீஷியா என்று இரு டைப்புகளில் சொல்லிக் கொள்ளலாம்.. அந்த நோய் வந்து தனது காதலியை மறந்தவன் திரும்பவும் எப்படி தனது காதலியை அடைகிறான் என்பதைத்தான் நமக்கே ஷார்ட் மெமரி லாஸ் ஏற்படும் அளவுக்கு மூளையை கிறங்கடித்து சொல்லி முடித்திருக்கிறார்கள்..
ஹீரோ கணேஷ் வெங்கட்ராமன், டாக்டருக்கு படிக்கும் கல்பனா பண்டிட்டை காதலிக்கிறார். கல்பனாவின் படிப்பு முடிவதற்குள்ளாகவே கணேஷுக்கு அமெரிக்காவில் வேலை கிடைக்க ஒரு வருஷம்தானே போயிட்டு வா.. அதுக்குள்ள நான் படிப்பை முடிச்சர்றேன் என்கிறாள் காதலி. காதலியின் தாதா அப்பாவோ தனது மகளை ஒரு வருடம் பார்க்காமல் இருக்க வேண்டும். அதன் பின்பும் இருவரும் காதலிப்பதாகச் சொன்னால் தான் திருமணம் செய்து வைப்பதாகச் சொல்கிறார். இதை நம்பி அமெரிக்கா செல்லும் ஹீரோவை அங்கேயே கொலை செய்யும் முயற்சி நடக்கிறது. இதில் சிக்கி தலையில் அடிபட்டு கடைசி 4 வருட நினைவுகளை இழக்கிறார் ஹீரோ. ஹீரோயினையும் சேர்த்துதான்..!
இதன் பின்பு தனது அலுவலக கொலீக்குடன் தொடர்பு ஏற்பட்டு அந்த நட்பு படுக்கைவரையிலும் பாய்ந்தோடி சென்று கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் மலையாள கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் படத்தில் வருவதைப் போல சான்பிரான்சிஸ்கோ காட்டுக்குள் ஒரு நாள் இவர்கள் தங்கியிருக்கும்போது அங்கேயிருந்த பழங்குடி மக்கள் கொடுத்த ஒரு பானத்தைக் குடித்துத் தொலைகிறார் ஹீரோ. உடனேயே பழைய கதையெல்லாம் ஞாபகத்துக்கு வந்து விடுகிறது.. ஆனாலும் ஒரு ஸ்டெடி மைண்டாய் இல்லை என்பதால் மீண்டும் ஹாஸ்பிட்டல், ட்ரீட்மெண்ட்..
இடையில் திடீரென்று தனது காதலியை அமெரிக்காவிலேயே மருத்துவராகப் பார்த்து விடுகிறார். அறுந்து போன காதல் நூலை காதலியிடம் நீட்டிக் கொண்டிருக்க. அவளோ அதைப் பற்றிக் கொள்ளாமல் இருக்கிறார். இப்போது ஹீரோ எப்படி அவளை கைப்பிடிக்கிறார் என்பதை தைரியம் இருந்தால் தியேட்டருக்கு போய் படத்தைப் பார்த்து தெரிஞ்சுக்குங்க..!
கலகலப்பு, மிரட்டல் போன்ற படங்களில் லாஜிக் பார்க்க தேவையே இல்லை.. அது நகைச்சுவை.. ச்சும்மா டைம்பாஸ் என்று சொல்லித்தான் அழைக்கிறார்கள். ஆனால் இதில் அப்படியில்லையே..? முதல் காட்சியில் இருந்து கிளைமாக்ஸ்வரையிலும் ஓட்டையான லாஜிக் திரைக்கதையை வைத்துக் கொண்டு முடிந்த அளவுக்கு எடுத்துத் தந்திருக்கிறார்கள் இயக்குநர்கள்..!
அமெரிக்காவில் இப்படி நட்ட நடு ரோட்டில் துப்பாக்கியுடன் எவனாவது ஓட முடியுமா..? ஓடியவன் அடுத்த நாள் வெளியில் இருக்க முடியுமா..? ம்ஹூம்.. சான்பிரான்சிஸ்கோவில் பழங்குடியினரின் கதை.. ஹீரோவை கொலை செய்ய நடக்கும் முயற்சிகள்.. மருத்துவர் அருணின் “தமிழா.. தமிழ் தெரியுமா..? தமிழ்ல பேசுறீங்க..” என்ற கேணத்தனமான கேள்வி..! ஹீரோ அமெரிக்கா வந்து 2 வருஷமாகியும் அவரோட வீட்டுக்காரங்க அவரைப் பத்தி கவலையே படலையா..? காதலியோட அப்பன் நம்ம ஊர்ல பட்டப் பகல்ல ஒருத்தனை பெட்ரோல் ஊத்திக் கொளுத்துறான்.. “அதை உன் பொண்ணுகிட்ட போட்டுக் கொடுத்திருவேன்.. நான் நடிக்கிறதை நீ கண்டுக்காத.. கல்யாணத்தை செஞ்சு வைன்னு..” கிளைமாக்ஸ்ல ஹீரோ உருகுறதுல சாமி சத்தியமா ஒரு பீலிங்ஸும் வரலை..! “எந்தக் காட்சி இப்போது நடப்பது.. எது முன்பு நடந்தது..? எது ரீலு.. எது அந்து போன ரீலு..?” என்று மாற்றி, மாற்றிக் காட்டியதில் சினிமா பார்ப்பதையே தொழிலாக வைத்திருக்கும் என்னைப் போன்றவர்களுக்கே கொஞ்சம் கஷ்டமாகியிருக்க.. கொட்டாம்பட்டியில் இந்தப் படத்தைப் பார்க்கும் ரசிகன் என்ன ஆவானோ..? பாவம்.
கணேஷ் வெங்கட்ராமன் அர்னால்டு மாதிரி உடம்பை சிக்கென்று வைத்திருக்கிறார். அடிக்கடி சட்டையைக் கழட்டி தனது சிக்ஸ் பேக் உடம்பைக் காட்டி தனது ரசிகைகளை சந்தோஷப்படுத்தியிருக்கிறார். அவருக்கான காட்சிகளில் அழுத்தமோ, இம்ப்ரஸ்ஸிவ்வோ இல்லாததால் ஜஸ்ட் பாஸ் ஹீரோவாகி தப்பித்துச் செல்கிறார்.
2 ஹீரோயின்களில் கல்பனா பண்டிட்டின் பிலிமோகிராபி பல படங்களைக் காட்டுது.. அம்மணியும் நல்லாவே காட்டியிருக்கு. இன்னொரு புதுமுகம் ஷோபனா.. நேரில் பார்ப்பதைவிட ஸ்கிரீனில் அழகாகத் தெரிகிறார். ஆனாலும் பிரிண்ட்டின் நிறப்பிரிகையினால் அதுவும் தெளிவில்லாமல் இருக்கிறது..! காதல் காட்சிகளில் அழகாய் மிளிர்கிறார்.. பாடல் காட்சிகளில் ஜொலிக்கிறார்.. மற்றவைகளில் அதிகம் அவருக்கு வேலையில்லை என்பதால் கவனிப்பாரற்று கிடக்கிறது ஹீரோயின் போர்ஷன்..!
இதுவே இப்படியென்றால் இசை, பாடல்கள் பற்றியெல்லாம் நமக்கென்ன கவலை..? Agnel Roman & Faizan Hussain அப்படீன்னு ரெண்டு பேர் இசையமைப்பு செஞ்சிருக்காங்களாம்.. ஒளிப்பதிவை மட்டும் முடிந்த அளவுக்கு சிறப்பாக கொடுக்க வேண்டும் என்று மெனக்கெட்டிருக்கிறார்கள் என்பது மட்டும் புரிகிறது..! அதற்கு மட்டும் எனது வாழ்த்துகள்..!
இந்த டிஜிட்டல் யுகம் வந்தாலும் வந்துச்சு.. ஆளாளுக்கு கேமிராவைத் தூக்கிட்டு நாங்களும் ரவுடிதான்னு கிளம்பிர்றாங்க.. அமெரிக்கா போயி இவ்வளவு நல்லா காசு செலவு பண்றவங்க கதை, திரைக்கதைக்கு கொஞ்சம் மெனக்கெட்டு மெரீனா பீச்லயாவது உக்காந்து பேசிட்டு கிளம்பினாத்தான் என்ன..? கணேஷ் வெங்கட்ராமனுக்கு இப்போ என்ன மார்க்கெட் இருக்கா..? அவரை ஹீரோவா போட்டா விநியோகஸ்தர்கள் வாங்குவாங்களா..? தியேட்டராவது வாடகைக்குக் கிடைக்குமா..? போஸ்டர் அடிக்கிற காசாவது திரும்ப வருமா..? இதையெல்லாம் யோசித்தார்களோ இல்லையோ.. படம் பார்க்குற நமக்கு பக், பக்குன்னு அடிச்சுக்குது.. தயாரிப்பாளர் பாவமாச்சேன்னு..! ஆனாலும் தயாரிப்பு பார்ட்டி பெரிய ஆளுகதான்.. இதுனால சேதாரத்தைப் பத்தி அவுங்க கவலைப்படப் போறதில்லை.. தமிழ், ஹிந்தில ஒரே நேரத்துல இதை எடுத்திருக்காங்கன்னா பார்த்துக்குங்களேன்..!
கணேஷின் நோய் தொடர்பான காட்சிக் குழப்பங்களை மட்டும் நேர்ப்படுத்தியிருந்தால், இடைவேளைக்கு முன்பிருந்தே படத்தை ரசித்திருக்க முடியும் என்று நினைக்கிறேன்.. இறுதிக் காட்சியில் இது அத்தனையும் டூப்பு என்று ஒரு வரி டயலாக்கில் சொல்லி கணேஷ் தப்பிக்கப் பார்ப்பதும், துப்பாக்கியோடு வந்த மாமனார் மனசிரங்கி மகளை தாரை வார்க்க சம்மதிப்பதும் அக்மார்க் பூவை காதில் சுற்றும் வேலை.. இதற்குள் மக்கள் போதுமடா சாமின்ற லெவலுக்கு போயிட்டாங்க..! கணேஷுக்கு இப்போது உடனடி தேவை.. நல்லதொரு கதை.. நல்லதொரு இயக்குநர்..!
ம்ஹூம்.. வேற ஒண்ணும் சொல்றதுக்கில்லை..!
--
உண்மை தமிழன்
Guest- Guest
நிகழ்நிலை இணையாநிலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum